கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் என்ற சிறிய கிராமம் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த வேணாடு இராச்சியத்தின் செழிப்பான தலைநகராக இருந்தது. பின்னர் இது திருவாங்கூர் சுதேச மாநிலமாக பிரபலமானது. புலியூர்குறிச்சி (உதயகிரி), அரண்மனைகள், பழைய கோட்டைகள் மற்றும் முக்கிய கோயில்களின் எச்சங்கள் இன்னும் உள்ளன. மதுரையின் நாயக்கர்களிடம் தங்களை பாதுகாக்க வேணாடு ஆட்சியாளர்கள், இப்பகுதியைப் 10,000 வீரர்களைக் கொண்டு பாதுகாத்திருந்தனர்.

கல்குளம் ஒரு மிகப் பெரிய நகரம் ஆகும்... அரண்மனைகிழக்கில் இயற்கையான பாதுகாப்பை வழங்கிய மேற்குத் தொடர்ச்சி மலையின் கரடுமுரடான மலைத் தொடர்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது, மறுபுறம் பெரும்பகுதி 24 அடி உயரத்தில் கல் மற்றும் செங்கல் சுவரால் சூழப்பட்டுள்ளது. கல்குலம் மற்றும் அருகிலுள்ள உதயகிரியில் உள்ள கோட்டைகள் கி.பி 1600 க்கு முன்னர், ரவி வர்மா குலசேகரனின் ஆட்சியில்(1592-1609) கட்டப்பட்டது.
குடியேற்றங்களுக்கு அருகாமையில் இருப்பதால் அரண்மனையை நிர்மாணிப்பதற்கான பொருத்தமான இடமாக கல்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. வளமான விவசாய நிலங்கள் மற்றும் ஏராளமான நீர் நிலைகள் இருந்தது குடியேற்றவாசிகளை வரவேற்றது.

கோட்டைக்கும் நடுவில் பத்மநாபுரம் அரண்மனை அமைந்துள்ளது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த அரண்மனை ஆசியாவிலுள்ள மிகப்பெரிய மர அரண்மனையாக கருதப்படுகிறது. 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தின் 15 க்கும் மேற்பட்ட அற்புதமான மாளிகைகள் கொண்டது இது. மார்த்தண்டா வர்மாவின் உத்தரவின் பேரில், கல்குலத்தில் அரண்மனைகள் புதுப்பிக்கப்பட்டு வலுவான கல் கோட்டையால் பாதுகாக்கப்பட்டன. அரண்மனை வளாகத்தில் இன்று நாம் காணும் பல கட்டமைப்புகள் வாஸ்துசாஸ்திரத்தைக் கையாளும் பண்டைய நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட நெறிகளை பின்பற்றி மார்தாண்டா வர்மாவால் புதுப்பிக்கப்பட்டன .பணிகள் முடிந்ததும், மார்த்தாண்ட வர்மா அரண்மனையை அரச குடும்பத்தின் தெய்வமான ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்தார். பண்டைய கல்குளத்து கொய்கல் 'பத்மநாபுரம் கொட்டாரம்' என்று அறியப்பட்டது.

1750 ஆம் ஆண்டில் அனிழம் திருனால் மார்த்தாண்ட வர்மா அரண்மனையையும் கோட்டையையும் மீண்டும் கட்டியெழுப்பினார், அதன்பிறகு பழைய கல்குலம் அரண்மனை பத்மநாபுரம் என்று அழைக்கப்பட்டது. ஏ.டி 1839 பின் பத்மநாபுரம் அரண்மனையின் வீழ்ச்சி ஆரம்பித்தது. . வருடாந்திர நவராத்திரி ஊர்வலம், மற்றும் பிரமுகர்களின் அவ்வப்போதுள்ள வருகை தவிர அரண்மனை மூடப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு இந்த வளாகத்திற்குள் அணுமதி தடை செய்யப்பட்டு இருந்தது. உள்ளூர்வாசிகள் அரண்மனைகுள் பேய் என்று உண்டு என நம்பினர்! உள்ளூர் மக்கள் பெரும்பாலும் அசாதாரண சத்தங்களைக் கேட்பதாகவும் மற்றும் விசித்திரமான தோற்றங்களைக் கண்டதாகவும் கூறினர். இதனால் இரவு ஆனால் அரண்மனைக்குள் நுழையத் யாரும் துணியவில்லை "என்று ராஜா ரவி வர்மா எழுதியிருந்தார்.
இந்நிலையில் திருவிதாங்கூரின் கடைசி மகாராஜா ஸ்ரீ சித்திரா திருனால் பாலா ராம வர்மா, ராணி தாய் சேது பார்வதி பாய், , மற்றும் திவான் சார். சி. பி. ராமசாமி அய்யர், ஆகியோரால், 1934 ஆம் ஆண்டில், திருவாங்கூர் அரசாங்கத்தின் கலை ஆலோசகர் ஜே. எச். கசின்ஸ் மற்றும் தொல்பொருள் துறையின் தலைவரான ஆர். வாசுதேவாவை நியமித்தனர். . 1935 ஆம் ஆண்டில், ராஜகுடும்பத்தின் முழு ஆதரவுடன், அரண்மனை ஒரு அருங்காட்சியக வளாகமாக மாற்றப்பட்டது. மொழியை அடிப்படையாக கொண்டு மாநிலங்கள் உருவான போது கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவிலிருந்து துண்டிது தமிழநாட்டோடு இணைத்தனர். இருப்பினும், சரியான நேரத்தில் தலையிட்டும், பத்மநாபுரம் அரண்மனையும் அதன் பரந்த மைதானங்களும் கேரள மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இன்று, அரண்மனை வளாகத்தைக் காண பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களாக வருகிறார்கள்.



குழந்தைகள் இல்லாத சின்னு (மஞ்சு பிள்ளை) தனது அன்பான கணவருடன் மிகவும் திருப்திகரமான வாழ்ந்து வருகிறார். நீண்ட காலத்திற்கு முன்பே தமிழகத்திற்கு ஓடி போன நாராயண பிள்ளை, தமிழகத்தில் மனைவி மக்களுடன் வசதியாக வாழ்ந்து வருகிறவர். சொந்த ஊர் வந்த நாராயணன் தனது பள்ளி தோழி சின்னுவை அவள் வீட்டில் தனியாக இருக்கும் போது சந்திக்க வருகிறான். சின்னுவிற்கு குழந்தை இல்லை என அறிந்ததும்,தன்னால் சின்னுவிற்கு ஒரு குழந்தை தரும் என ஆசை வார்த்தை கூறுகிறான். குழந்தை இல்லை என்ற அத்தனை ஏக்கவும், வருத்தவும் இருந்தும் கணவருக்கு நம்பிக்கை துரோகம் செய்த தகாத உறவில் தனக்கு ஒரு குழந்தை தேவை இல்லை என்பதை முடிவெடுத்து மறுக்கிறார்.
கடைசியாக, ஒரு நடுத்தர வர்க்கப் பெண் (நந்திதா தாஸ்) பற்றியது. அவரது தாய் , ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் அடங்கிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். நந்திதாவை பெண் பார்க்க வரும் மணமகன் அவளது இளைய தங்கையை விரும்புவதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு போகிறார்.


























நாயை கொன்றவனை பழிவாங்குவது போல இத்திரைப்படத்தில் நாயை இழந்தவன், தன் நாயை கொன்ற முதன்மை கதாப்பாத்திரம் ஷாஜியை பழிவாங்குவதே கதையாகும். முதல்நாள் மாலை முதல் அடுத்த நாள் மாலை வரும் வரும் நடைபெறும் சம்பவங்கலை கோர்வையாக தொகுத்துள்ளர்.
பணக்கார வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும் நிம்மதி இல்லை. பிறந்த வீட்டுக்கு கூட போராடித்தான் போக வேண்டி வருகிறது. தன் மனைவியுடன் உரையாடும் போதும் சிகரட் புகையை அவள் முகத்தில் ஊதி தள்ளும் செயல்பாடு, அவளோ புகை பிடிக்க கணவனிடம் அனுமதி கேட்கும் மன நிலை, அவள் விரும்பாத போதும் காமத்தை கட்டுப்படுத்த இயலாது சயனிக்கும் ஷாஜி. இப்படி கதை நகர்கிறது.











