30 Apr 2015

பாலி 9 ! Bali Nine!


Image result for myuran sukumaran painting
பாலி 8 குற்றவாளிகளுக்கு இந்தோநேஷியா அரசு நிறைவேற்றிய தண்டனை உலக மனசாட்சியை  உலுக்கிய கொடும் துயர் நிகழ்வாகும். மரணம் என்பது உலகில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவானது என்ற உண்மை ஒரு புறம் இருக்க அம்மரணத்தை சில மனிதர்களுக்கு தண்டனையாக கொடுத்து தங்கள் அதிகாரத்தை நியாயத்தை நிறுவியது ஏற்று கொள்ள தகுந்தது அல்ல. தன் இள,ம் வயதில் புரிந்த குற்றத்திற்காக 10 வருடம் சிறைத்தணடனை பெற்ற பின்பும்;  குற்ற மனநிலையை விட்டு விலகி, தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் ஆன மிகவும் ஆக்கபூர்வமான செயல்கள் ஆற்றி  திருந்தி வாழ முடிவெடுத்த  நபர்களுக்கு தண்டனை கொடுத்தது மிகவும் கண்டிக்க தக்கது.

அதில் ஒருவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழர் என்பதால் அவருடைய உடல் மொழியில் இருந்து புரிந்து கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தான் எதிர் கொள்ள வேண்டிய மரணத்தை மிகவும் மனம் நொறுங்கிய நிலையில்  ஏற்றுகொண்டு தன் நண்பர்களுக்கும் தாயார், உற்றார் உறவினர்களுக்கும் விடை கொடுத்து கொடிய மரண வேதனையுடன் மரணதண்டனையை ஏற்று கொண்ட நிகழ்வு 2000  வருடங்களுக்கு முன் சிலுவை மரத்தில் கொல்லப்பட்ட யேசுவில் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவுப்படுத்தியது. மனிதன் அடிப்படையில் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை. சக மனிதனை கொன்று இன்பம் காணும் மனநிலையில் தான் இருபதாம் நூண்டாண்டிலும் உள்ளான்.( மயக்கு மருந்து கடத்தினவர்களை யேசுவுடன் ஒப்பிடுவதா என்ற விவாதம் இங்கு தேவையில்லை. மனிதம் ஏதோ ஒரு வகையில் காலாகாலாமாக கொல்லப்படுகின்றது என்றே சொல்ல வந்துள்ளேன்). குற்றவாளிகளை அல்ல குற்றத்தை வெறுப்பதே மனிதநேயம் , அனைத்து மதங்கள் போதிப்பதும். .
Bali Nineஇந்த இளைஞர்கள்  மற்றொரு மனிதனின் உயிரை எடுக்கவில்லை. இன்னொருவன் சொத்தை அபகரிக்கவில்லை.  விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற அளவுக்கதிகமான பேராசையால் இவர்கள் தேர்ந்தெடுத்தது மோசமான வழிக்கு கிடைத்த தணடனையோ அதையும் விட மனித மனசாட்சியை வெட்கப்படவைத்த தண்டனை முறை ஆகும்.
மயூரன் சுகுமார் என்பர்  ஒரு சிறந்த உழைப்பாளி, தலைமை பண்பு கொண்டவர் என்பதை அவருடைய  கடந்த 10 வருட சிறைச்சாலை வாழ்க்கை அனைவருக்கும் எடுத்து காட்டியது. சிறைச்சாலையிலும் வியாபாரம், கலை, கல்வி சார்ந்த சேவைகள் புரிந்து  சக மனிதர்களுக்கு உதவும் பண்பிலே இருந்துள்ளார். பொதுவாக குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்பு கொள்வதில்லை. இவரோ தன் குற்றத்தை ஏற்று தன் வாழ்க்கையை திருத்தி வாழ்ந்த  ஈர இதயம் கொண்ட மனிதராக தான் வாழ்ந்து வந்துள்ளார்.. “நான் என்னை பற்றி மட்டுமே நினைத்திருந்தேன். இப்போது அப்படியல்ல, என்னை வாழ அனுமதியுங்கள் எனக்கு இன்னும் நிறைய விடையங்கள் சிறைவாசிகளுக்காக செய்து முடிக்க வேண்டியுள்ளது என்று தன் உயிருக்காக கெஞ்சியும் எந்த காதுகளும் கேட்டு கொள்ளவில்லை.. தன் மன போராட்டத்தை தன் ஓவியங்கள் ஊடாகவே வெளிப்படுத்தியிருந்தார். கொலைக்களத்திற்கு கொண்டு போகும் முன் அவரின் கடைசி பார்வை ஒவ்வொரு இதயத்தையும் ஊடுருவி தாக்க செய்வது.  சட்டம் என்ற பெயரில் உன்னதமாக வாழ முடிவு செய்த ஒரு மனிதனை கொன்று போட்டது. அவர் தாயார் சகோதரி சகோதரன் துயர் சொல்லி மாளாதது. 
Image result for mayur sugumaran painting workசீன வம்சாவளியை சேர்ந்த சான் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து கொண்டவர். இறை சேவையில் தன்னை இணைத்து கொண்டு தன் வாழ்க்கை மிகவும் மோசமான முன்னுதாரணம் என தன் வாழ்க்கையை பள்ளி குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் ஆவணப்படமாக எடுக்க அனுமதித்தார். தான் வந்த வழியில் இளம் தலைமுறை வரக்கூட்டாது என்று எண்ணினவர். இப்படியாக ஒவ்வொருவரும் இளம் மனிதர்கள். ஏதோ வகையில் திருந்தி வாழ முடிவு செய்தவர்கள்.
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்வதை போன்றே அவனை காப்பாற வேண்டிய அரசே  திட்டமிட்டு மிகவும் கொடூரமாக மனிதர்களை படுகொலை செய்ததை எந்த வகையிலும் நியாயபடுத்த இயலாது. இந்த 8 மனிதர்களை படுகொலை செய்ததால் மயக்கு மருந்து விற்பனை அழியாது என அரசுக்கு தெரியும்.

இந்த மயக்கு மருந்து வியாபாரம் பல நாடுகளின் உதவியுடன் தான் நடைபெறுகின்றது. .மயக்கு மருந்து என்பது அவரவர் தேர்வு. தனிநபர்களால் குடும்பங்களால் தீர்க்க வேண்டிய உலகலாவிய பிரச்சினை இது.  இந்த சமூக அமைப்பில் நிலவும் பணம் பற்றிய மனிதனின் மனநிலை மாற வேண்டும்,  அந்த வியாபார கண்ணிக்குள் நுழைவது மனிதனின் மனநிலை தான்

வருடம் தோறும் 30 ஆயிரம் பேர் மயக்கு மருந்து கடத்தல் விற்பனை என்ற குற்ற செயல் புரிவதாக கைது செய்யப்படுகின்றனர். இதில் 32% குற்றவாளிகள் அமெரிக்கா தேசத்தை சார்ந்தவர்கள். அமெரிக்கா அரசாங்கம் மயக்கு மருந்து கடத்தலை தடுக்க வேண்டும் என 1970 துவங்கியே திட்டம் தீட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் உளவாளி அமைப்பு மயக்கு மருந்து வியாபாரத்தில் உள்ளது என அந்நாட்டு எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பொதுவாக பல நாடுகளில் தங்கள் இளைஞர்கள் கேள்வி கேட்கா மடைமை குடிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்களே மறைமுகமாக மயக்கு மருந்து போன்ற போதை பொருட்கள் பயண்படுத்த மறைமுகமாக உதவது உண்டு என பல சமூக ஆவலர்கள் குற்றசாட்டியுள்ளனர். இந்தியாவில் சீக்கிய இன இளைஞர்களுக்கு மயக்கு மருந்து தடை இல்லாது கிடைக்க அரசு உதவுகின்றது என எழுத்தாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே போல் மிசோராம் போன்ற மாநில இளைஞர்களும் திட்டமிட்டு மயக்க நிலையில் வைத்துள்னர் என்ற குற்ற சாட்டும் உள்ளது. இது இந்தியாவின் நிலை!



மயக்கு மருந்து பயன்பாட்டாளர்கள், வியாபாரிகள் அவர்களுக்கு உதவும் கடத்தல்காரர்கள் மற்றும் உற்பத்தி செய்கின்றவர்கள் என மூன்று நிலைகள் சேர்ந்து ஒன்றாக இயங்குவது தான் மயக்கு மருந்து உலகம். உற்பத்தியை தடை செய்தால் தான் அதன் வியாபாரிகளும் /ஏஜன்றுகளும், பயன்பாட்டாளார்களும் மறைய வழியுண்டு. உற்பத்தியாளர்களை விட்டு விட்டு கடத்தலுக்கு உதவும் குருவி போன்றோரை தண்டிப்பது ஒரு வகையில் அநீதி தான்.
மயக்கு மருந்து கடத்தலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடாகும் மெக்ஸிக்கோ. இங்கு 2006 முதலுள்ள  காலயளவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மயக்கு மருந்து சார்ந்த வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர்..
பெரு நாட்டில் 60, ஆயிரத்தி 400 ஹெக்டர் நிலைத்தில் கொகா பயறிடுகின்றனர்  கொளம்பியாவில் ஆகட்டும் 1,63,000 ஹெக்டர் நிலத்திற்கு மேல் மயக்கு மருந்து பயிறிடுகின்றனர்,  99% கஞ்சா போன்ற மயக்கு மருந்து ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தியாகின்றது. அமெரிக்காவின் கட்டுபாட்டிலும் உற்பத்தியில் எந்த குறைவும் இல்லை என்பது தீவிரவாத ஒழிப்பு என்பது கூட மயக்கு மருந்து வியாபாரத்தை மறைக்கும் முகமூடியோ என சந்தேகிக்க உள்ளது. கொக்கய்ன் பயிறுடுவதில்  போல்வியா  உலக அளவில் முன் நிலையில் உள்ளது. பர்மாவிலும் மயக்கு மருந்து பயறிடப்படுகின்றது. நாட்டின் வருமானத்தை வளப்படுத்துவதால் இதன் உற்பத்தியை நிறுத்த எந்த நாடுகளும் முன் வருவதில்லை.  இப்படியாக சில நாடுகள் உற்பத்தியை நம்பி இருக்கும் போது இந்தியா மெக்ஸிக்கோ, க்யூபா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடத்தல் பொருள் விற்பனை தளங்களாகவும் விளங்குகின்றது.




நம்ம ஊரில் அரசே டாச்மார்க் கடை வைத்து விட்டு நாடு முழுக்க கிட்னி மருத்துவ மனைகள் மற்றும் காப்பீடுகள் தந்து ஏழைகளுக்கு உதவுவது  போல் நாடகமாடுவதை கண்டு வருகின்றோம். அதே போல் பிளாடிக் விற்கும் கடைக்காரர்களை தண்டித்து விட்டு உற்பத்தியாளர்களை விட்டு வைத்திருக்கும் அரசியலும் நாம் கண்டதே. உற்பத்தியை நிறுத்தாது விற்பனையை அழிக்க இயலாது. விற்பனை இருக்கும் மட்டும் பயணாளர்கள் இருக்க தான் செய்வார்கள். விற்க ஏஜன்றுகளும் இனியும் வரத்தான் போகின்றனர்.


Ben Quilty greets Myuran Sukumaran's family at the I Stand For Mercy concert and vigil for Bali Nine death row inmates Myuran Sukumaran and Andrew Chan, at Martin Place in Sydney, on January 29உலக மக்களின் பார்வையை திசை திருப்ப அல்லது நாடுகளின் பணப்பேராசையை மறைக்க இது போன்ற தனி நபர்களூக்கு தண்டனை வழங்கி சட்டம் விழித்திருப்பது போல் காட்டி கொள்ளலாம்.  எளிதில் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தில் இருந்து இளம் தலைமுறையை திசை திருப்புவது வழியாக தான் இந்த குற்ற செயலில் ஏற்படுவதை தடுக்க இயலும். இது போன்ற கொடிய மரணம் மேலும் நடக்காது இருக்கட்டும் தண்டனை என்பது மனிதனை திருத்த அல்லாது அழிக்க அல்ல என்று அதிகாரம் படைத்தோர் உணரும் காலம் மட்டும் இது போன்ற சோகங்களுக்கு சாட்சியாகத்தான் நாம் இருக்க உள்ளோம். இந்த வ்வொரு குற்றவாளிகளை மட்டுமல்ல அவர்கள் பெற்றோர்கள் நண்பர்கள் என பல மக்களை கொலை செய்துள்ளது இந்தாநேஷ்யா அரசு. மரண தண்டனை ஒழிய வேண்டும் என மனித நேயர்கள் குரல் மறுபடியும் உயர்ந்துள்ளது.  மொழி இனம் கடந்து  மரண தண்டனை என்பது ஒழிக்க வேண்டியது இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என நாம் நிச்சயமாக கூறலாம். பல இன்னல்கள் வருத்தங்கள் சோகங்கள் மத்தியிஉம் அவர்களுக்கு என குரல் உலகின் நாலாப்பக்கம் இருந்து எழுப்பபட்டது. பாலி 9 குற்றவாளிகளின் ஆத்ம சாந்தியை நாடி கனத்த மனதுடன் நம் அஞ்சலியை செலுத்த கடமைப்பட்டுள்ளோம். 

27 Apr 2015

விடலைப்பருவ குழந்தைகளும் பெற்றோர்களும்!

சமீபத்தில் வாசித்த புத்தகம் பதின்பருவ குடும்ப பக்கங்கள்! Adolescent Psychology நெல்லையிலுள்ள மாக்தலின் பள்ளி மாணவர்களின் கருத்துக்களை  பாளை தூய சவேரியார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை  தலைவர்  அருட் தந்தை சேவியர் ஆண்டணி மற்றும் பள்ளி தாயாளர் முனைவர் க செல்வராஜ்  அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட புத்தகம் இது.   மாணவர்களை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பார்வையில்  உருவாக்கப்பட்ட புத்தகம். இப்புத்தகம் மாணவர்கள் மனநிலையை அவர்கள் சந்திக்கும் சவால்களை பிரதிபலிக்கின்றது.     தாங்கள் ஆசைப்படுவது எல்லாம் கிடைக்க வேண்டும் என குழந்தைகள் ஆசைப்படுகின்றனர். தங்களை படிக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது என விரும்பும் சிறுவர்கள் தங்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். சில இடங்களில் குழந்தைகள் அதீத சுயநல உலகில் பயணிக்கின்றனரா என எண்ணும்  போது நம் குழந்தைப்பருவத்தை நினைத்து பார்க்கும் போது அதுவே இயல்பு எனும் விளங்குகின்றது.                                                                                                                      பெற்றோரின் மனநிலை தான் சில இடங்களில் நம்மை நிலைகுலைய செய்கின்றது. குழந்தைகளில் ஆளுமையை புரிந்து கொள்ளவில்லை.  அவர்களும்  தங்களை போன்று ஒரு தனித்துவமான மனிதர்களாக பார்க்க தவறுகின்றனர். தங்கள்  பிள்ளைகள் என்ற ஒரே காரணம் கொண்டு அவர்களை அடிமை என எண்ணுகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேற்ற கிடைத்த ஆயுதமாக நினைக்கின்றனர்.  தவறும் செய்யும் குழந்தைகளை மிகவும் வன்மையாக தண்டிக்கின்றனர்.   தன் தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளை அடிக்கின்றனர் பல மணி நேரம் திட்டுகின்றனர் ஏன் பல நாட்கள் கூட பேசாது இருந்து அவர்களை அடி பணிய வைக்கின்றனர்.                                                                                  குழந்தைகளை படிக்க வைப்பது மட்டுமே தங்கள் தலையான பணி என நம்புகின்றனர். குழந்தைகளும் தூங்கும் நேரம் தவிர்த்து  படித்து கொண்டு இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இன்னும் சில வீடுகளில் பெண் குழந்தைகளிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்றனர்.                                                                                                                                                                                                                    இந்த புத்தகம் வாசித்து முடித்த போது குழந்தைகளிடம் காணும் வன்முறை குணத்தின் அடிவேர் பெற்றோரின் செயல்பாடு தான் என கண்டு கொள்ள இயல்கின்றது. இதே நிலையில் பெற்றோர்கள் தொடர்ந்தார்கள் என்றால்  குழந்தைகள் பெற்றோர் இடவெளி  மேலும் விரிவடையும் என்று மட்டுமல்ல தமிழகத்தில் மேலும் பல முதியோர் இல்லம்  வரவே அதிகம் வாய்ப்பு உள்ளது.                                                                                           பல இடங்களில் குழந்தைகளை  அவர்கள் செய்த தவறை உணரவைக்காது பணிய வைக்கின்றனர். ஒரு சிறுவன் கூறுகின்றார் "நான் ரூபாய் கேட்காமல் இருந்திருக்க வேண்டும் கொடுத்தால் மட்டும் வாங்கியிருக்க வேண்டும்".  இந்த வார்த்தைகள் என்னை மிகவும் துயர் வர செய்தது.               மற்றொரு சிறுவனின் வாக்குமூலம்   "மன்னிச்சுட்டாங்க அப்படி இல்லன்னா கால்ல விழுந்திருவேன்' .   தனது பெற்றோரை பற்றி,,, அக்காவிடம் அம்மா இன்னும் பேசவில்லை ஏனெனில் அவள் மன்னிப்பு கேட்கவில்லை   .....தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய குழந்தையும் கண்டிக்கின்றனர்  கிடைக்காத மதிப்பெண்ணை  எடுத்து கூறி.  இந்த மாதிரியான குடும்ப சூழலுகள் அன்புக்கு இடம் இல்லாது பிடிவாதம் அதிகாரம் சார்ந்து இயங்குவதாகவே பட்டது.  இந்த நவீன யுகத்தில் மாணவர்கள் இணையத்தை பயண்படுத்துவதை ஏதோ குற்ற செயல் போன்றே பார்க்கப்படுகின்றது. இவையும் தேவையற்ற மனகுழப்பத்தில் சிறுவர்களை தள்ளுகின்றது. பள்ளிக்கு பென்டிரவ்  கொண்டு வந்தனர் என்ற காரணத்தால் பள்ளியில் தண்டிப்பது பெற்றோரை வரவழைப்பது என  அவர்கள் இயல்பான வாழ்க்கையை இழந்து கண்காணிப்பில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர்.   புத்தகத்தின் கடைசி பகுதியில் சிறுவர்களின் ஆசை விருப்பம் நோக்கம் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த உலகை பரிவுடன் அக்கறையுடன் நேசமுடன் நோக்குகின்றனர். இங்கு காணும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் வறுமை மாற வேண்டும் மனித இனத்திற்கு சேவையாற்ற வேண்டும் என நல்ல கனவுகளில் வாழ்கின்றனர்.                                                                    

புத்தகம் வாசித்து முடியும் போது நாம் அவர்களை சுதந்திரமாக சிந்திக்க அவர்கள் வழியில் வாழ அனுமதிக்க மட்டுமே செய்ய வேண்டியது. ஒரு வழி நடத்துதல் அனுசரணை அரவணைப்பு மட்டுமே கொடுக்க கடமைபட்டுள்ளோம்.  நம் வழியாக இந்த உலகிற்கு வந்தனர் என்ற ஒரே காரணம் கொண்டு குழந்தைகளை செயல் வார்த்தைகளால் தண்டிக்க நமக்கு உரிமை இல்லை என்று உணர வேண்டும் என்றே இப்புத்தகம் மேலும் மேலும் எடுத்த்து கூறுகின்றது. 

22 Mar 2015

மனிதம் மரிக்கின்றது!

பாடசாலையின் முதல்வரான 72 வயது அருட் சகோதரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கொடூரமான நிகழ்வு. பாலியல் வல்லுறவு என்பது எந்த பெண்ணாலும் ஏற்று கொள்ள இயலாதது. ஆனால் முதி வயதில் இருக்கும் ஒரு பெண்ணை அவரின் அடையாளத்தை மதிப்பை சிதைக்கும் நோக்குடன் நடந்தேறியுள்ளது. 
 இந்தியாவில்  இச்சம்பவம் நடைபெற்றதை பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லைஉலகில் மிகவும் ஆபத்தான   டெல்லி நகரை தலைநகரமாக  கொண்டவர்கள்.  தென் ஆப்பிரிக்கா அமெரிக்காவிற்கு அடுத்த படியாக பாலியல் வல்லுறவு நடக்கும் மிகவும் மோசமான நாடுகளில் மூன்றாவது இடத்தை  சேர்ந்தவர்கள். நிமிடத்திற்கு 20 பேர் பாதிப்பிற்கு உள்ளாகுவதாக தரவுகள் தெரிவிக்கின்றது.

 ஆனால் பொதுவாக பெண்கள் தாக்கப்படும்  காரணமாக சொல்லப்பட்டது பெண்கள் அறைகுறை ஆடையுடன் நடந்து தங்கள் இச்சயை தூண்டி விடுவதால் தான், வீட்டில் இருக்க வேண்டிய பெண்கள்  இரவில் தெருவில் நடைமாடுவதால் என பல கருத்துக்களை மழை போல் சொரியும் வேளையில் துறவி உடையில் இருந்த வயதான பெண்மணியை தாக்குவதற்கு எந்த உணர்வு இவர்களை தூண்டியது என நாம் அறிய வேண்டியுள்ளது.

 இளம் வயது கல்லூரி மாணவியை தாக்கியவர்கள் இந்தியாவின் உலகமயமாக்கலின் விளைவாக உருவான புரக்கணிக்கப்பட்ட சேரி போன்ற இடங்களில் குடி இருந்தவர்கள், கல்வியறிவு அற்றவர்கள், குடிகாரர்கள் வேலைக்க்காரணங்களுக்காக குடும்பத்தை விட்டு , சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்து அடையாளமற்ற  உள்ளூர் அகதிகள் என பல அடையாளங்கள் இருந்தன.

 ஒரு சம்பவம் நடைபெற்றவுடன் கூப்பாடு போட்டு அடங்கி விடாது இந்த சமூகத்தை பிடித்துள்ள நோயை பற்றி ஆழமாக துருவ வேண்டியுள்ளது.   துறவி சகோதரி, ஒரு ஆசிரியையாக பணியாற்றுபவர் முதிய வயதில் இருந்தவர் என எந்த காரணவும் குற்றவாளிகளை பின் செல்ல வைக்கவில்லை. ஏற்கனவே உடன் படித்த மாணவிகளிடம்  தவறாக நடந்த மாணவருக்கு தண்டனை கொடுத்த காரணம் கொண்டு இவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது . பள்ளிக்கு வெளியில் வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டியிருந்துள்ளனர்.  இவர் காவல்நிலையத்திற்கும் புகார் அளித்துள்ளார். மேலும் அங்கு வேலை பார்த்த காவலாளிகளை வேலையை விட்டு நிறுத்தியதிலும் பிரச்சினை இருந்துள்ளது.

பெண்களை தண்டிக்க பாலியல் வல்லுறவு என்ற ஆயுதம் இந்திய கலாச்சாரத்தில்  புதிது அல்ல. சமீபத்தில் சார்கண்டு மாநிலத்தில் திருமணமான பெண்ணிடம் தவறான நடந்த ஆணின் தங்கையை; அப்பெண்ணின் கணவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளக்கப்படும் தண்டனை கிராம தலைமையயால் கொடுக்கப்பட்டது  நாம் தெரிந்ததே.  பழம் காலங்களிலும் போரில் தோற்ற அல்லது நாட்டில் கிளர்ச்சி செய்து தோற்றவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை வேற்று இனத்தவர்களுக்கு கொடுத்து  அந்த பெண்களின் தந்தை சகோதரர்கள், கணவனை அவமதிக்கும் வழக்கம் இருந்துள்ளதை வரலாற்றில் படித்துள்ளோம். ஆனால் இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண் என்பவர் இந்த சமூக வளர்ச்சிக்காக பொது நலனுக்காக தன் குடும்பத்தை தனக்கான உறவுகளை துறந்து துறவியாக வாழ்ந்து வந்தவர். குற்றவாளிகள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்றாலும் எந்த இனத்தை சேர்ந்தவர் என்றாலும் ஒரு முதிர் வயது பெண்ணிடம்  நடந்து கொண்ட இக்கொடும் செயல்  . வருந்ததக்கது.

தொடர்ந்து சம்பவிக்கும் நிகழ்ச்சிகளை அவதானிக்கும் போது  இந்திய ஆண்களுக்கு ஏதோ ஒரு மரபணு மாற்றம் நிகழ்ந்து வருவதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மாறி வரும் சமூக அமைப்பா அல்லது புரக்கணிக்கப்படும் மக்களின் எதிர் வினையா அல்லது உணவு பழக்க முறையால் ஏற்படும் ஆண்மைக்குறை சிக்கலா என்றும் நோக்க வேண்டியுள்ளது.

ஒரு காட்டமான கருத்தை பகிர்வதாலோ தண்டனை கொடுப்பதாலோ இது போன்ற நிகழ்ச்சிகளை தடுக்க இயலுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற குற்றவாளிகளில் குடும்ப பிண்ணனி மன உளவியல் நிலையை பற்றி ஆராய்ந்து தகுந்த முன் எச்சரிக்கையில் இறங்காவிடில் பெறும் ஆபத்தை தடுக்க இயலாது.


பல நினைப்பது போல பெண்- ஆண்கள் கல்வி பெறுவதாலோ விழிப்புணர்வு பெறுவதாலோ எந்த முன்னேற்றவும் ஏற்பட போவதில்லை. அடிப்படையாக சமூக அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை புரிதல் வர வேண்டியுள்ளது. மேலும் குற்றத்தை சில குற்றவாளிகளில் மட்டும் ஒதுக்காது இந்த மனநிலைக்கான காரணம் என்ன என்ற ஆராய்ந்து அறிவது மூலம் உணவு முறையில், வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவது மூலம் மடுமே தீர்வு காண இயலும். பெண்ணியம் சார்ந்த பெண்ணியல் கருத்தியல் போன்றவை இது போன்ற சிக்கலான ஆண்களை தடுத்த நிறுத்த உதவாது.

குடும்பம் என்ற அடிப்படை சமூகம் மேம்படுத்த வேண்டும். குடும்பம் என்ற அமைப்பில் வன்முறை, நம்பிக்கை இன்மை, தன்நலம்,  மலிந்து கிடக்கின்றது.  அன்பு என்ற உயரிய நிலை குடுமபத்தில் கூட இல்லாத  சூழல் தான் உள்ளது. இவையும் கயவர்கள் உருவாக காரணமாகின்றது.  அடிப்படையில் வன்முறையை அனுபவித்த, வன்முறையால் வளர்க்கப்பட்ட  நபர்களால் திரும்ப இச்சமூகம் இதே வன்முறையால் பாதிக்கப்படும் போது அது ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருமாறுகின்றது. இந்தியாவில் விவசாயத்தின் அழிவு குடும்பம் என்ற அமைப்பின் உடைவுக்கு காரணமாகினது. குடும்பம் என்ற அமைப்பு சிதறியது பல தனி நபர்களின் மனம் உடைய காரணமாகியுள்ளது. தனி நபர்களின் நிலை இது போன்ற சம்பவங்களில் பிரதிபலிக்கும் போது அது சமூகத்திற்கு  ஒரு பெரும் பாதிப்பாக உருவாகின்றது.                                                இனியும் குற்றவாளிகள் நீதிபீடத்தின் முன் கொண்டு செல்லவில்லை. இந்த மாநிலத்தை ஆட்சி புரிவது ஒரு பெண் தான். இச்சூழலில் இந்த சம்பவத்தை கிருஸ்தவ கன்னியக மடம் மன்னிப்பு, பிரார்த்தனை என்று மட்டும் பார்க்காது தங்கள் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் வேண்டியுள்ளது. உலகின் மாற்றத்தை இன்னும் புரிந்து கொள்ளாது 30 வருட காலசக்கிரத்தின் பின் நின்று நோக்காது தங்கள் சேவையை பாதுகாப்புடன் முன் நடத்த முன்வர வேண்டும். . இச்சம்பவம் அரசியலாக, உரிம மீறலாக ஒரு மதத்திற்கு நேரான தாக்குதல் என்பதையும் மீறி மனிதம் மரிக்கின்றதா என சீர் தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

21 Mar 2015

Beatiful-அழகானது

சமீபத்தில் கண்டு ரசித்த மலையாளப்படம் பியூட்டிபுஃல்.

அனூப் மேனோன், ஜெயசூரியா மேஹ்னா ராஜ் போன்றவர்கள் நடித்த கவித்துவமான அழகியல் சார்ந்து எடுக்கப்பட்டப்  படமிது.    

  சினிமா என்ற ஊடகத்தை ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டுமல்லாது ஒரு மாற்றத்தின், சராசரி மனிதனின் சிந்தனையை உலுக்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது.

 ஸ்டீபன் (ஜெயசூரியா)  ஒரு கோடிஸ்வரன் ஆனால் கழுத்திற்கு கீழ் எந்த இயக்கவும் அற்றவர். இவர் வாழ்க்கையை அலுப்பாக நோக்காது அதன் நல்ல பக்கங்களை மட்டும் உள்கொண்டு வாழ்ந்து வருகின்றார்.       இந்நிலையில் பாடகரான ஜோனை(அனூப் மேனோனை)       சந்திக்கின்றார்.  அவரை தான் கேட்க விருப்பும்  பாடல்கள்  பாடும் வேலைக்கு அமர்த்துகின்றார்.

ஜோன்  பணத்தின் பற்றாக்குறையுடம் மல்லிட்டு வாழ்பவர். ஆனால் தன் நட்பை பயண்படுத்தி ஸ்டீபனிடம் இருந்து  பண உதவி பெற விரும்பாதவர். இந்நிலையில் ஸ்டீபனை கவனிக்க ஒரு பெண் வருகின்றார். இவர் தன்னுடைய எளிமையான பாசமான அணுகு முறையால் இந்த இரு ஆண்ளள்ளையும் தன்  காதல் பார்வைக்குள்  உள்ளாக்குகின்றார்.  இவர்களில் யாரை உண்மையாக காதலிக்கின்றார், யாரை திருமணம் முடிக்கப்போகின்றார் என காண்பவர்கள் குழம்பும் வேளையில் இந்த பெண்  இன்னொருவனின் கள்ளக்காதலி; மேலும் ஸ்டீபனை கொலை செய்ய அமர்த்தப்பட்ட கொலையாளி என தெரிய வருகின்றது.

மறுபடியும் இந்த நண்பர்கள் வாழ்க்கை எந்த எதிர்பார்ப்பும் அற்ற  பாச- நேச உணர்வு கொண்ட  நட்பில்  கலந்து செல்கின்றது.  அனூப் மேனோனின் திரைக்கதையை பாராட்டாது இருக்க இயலாது. அவ்வளவு கச்சிதமாக வடிவமைத்துள்ளார்.

 மனித வாழ்க்கையில்  நிகழும்   , பாலியல் சிந்தனை, வேட்கை,        குற்ற மனநிலை போன்ற இயல்பான விடையங்களை இணைத்து அருமையான திரைப்படமாக கொடுத்துள்ளனர்.

அலட்டாத நடிப்பு தேவையற்ற உணர்வு போராட்டத்திற்கு,  காண்பவர்களின் உணர்வு சுரண்டலுக்கு இடம் கொடுக்காது, வாழ்க்கையின் நல்ல பார்வையுடன் செல்லும்  இத்திரைப்படம் எல்லோரும் பார்க்க வேண்டியது.

 மழைப் பாடல் 

தன் வசம் உள்ளதை நினைக்காது இல்லாததை பற்றியே சிந்தித்து வாழ்க்கையை வீணாக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியின் இருப்பிடம் எது என உணர்த்தும் திரைப்படம் இது.  காதல் சமூகம் என பெரிய பெரிய கருத்துக்களுடன் வரும் படங்கள் மத்தியில் மனித உலகின் அடிப்படையான மனிதனின் நுண் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கை முழுதும் படுக்கையில் கிடக்க  நிர்பந்திக்கப்பட்டிருக்கும் கதாநாயகனின் கதையை நம்பி வெளிவந்த அழகான படம் தான் 'பியூட்டிபுஃல்'.     வாழ்க்கை அழகானது அழகான மனிதர்களின் மனதினால் என்று உணர்த்திய படமிது.                                        

7 Mar 2015

பெண் என்றால் என்ன பொருள் என்ன?

இந்தியாவின் மகள் என்ற தலைப்பில் துவங்கிய ஆவணப்படம் ஒவ்வொரு நிமிடம் 22 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகுவதாக கூறுகின்றது. இந்த ஆவணப்படம் இந்திய பொதுபுத்திக்கு பண்பாட்டு என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்தும் மனநிலைக்கு கொடுக்கும் சம்மட்டி அடி!                  
குற்றவாளி தன் நண்பர்களை இவ்வாறாக அறிமுகப்படுத்துகின்றார். ராம் சிங் தன் அண்ணான் குடிகாரன் அன்றும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தான். பள்ளி வாகனத்தில் பணிபுரியும் இவனுடைய பொழுது போக்கு மற்றவர்களிடம் வம்பு இழுப்பது, அடிதடியில் கலந்து கொள்வது அளவுக்கு அதிகமாக குடிப்பது தான்.                                                                                                                       அடுத்த குற்றவாளி வினய். இவன் ஒரு உடல் பயிற்சி மையத்தில் பணிபுரிகின்றான். அவன் தன் உடல் ஆற்றலை வலுப்படுத்த ஊசிகளை தொடர்ந்து எடுத்து கொள்கின்றவன். தினம் ஒரு ஊசி போட்டு கொள்கின்றவன் இரு ஊசிகள் போட்டு கொண்டால் அவனை அவனுக்கே கட்டுப்படுத்த இயலாது பெண்களை துரத்துவது அவர்களை கேலி செய்வதுமே தன் பொழுது போக்காக கொண்டு வாழ்கின்றான்.                                                                                                  பவன் ஒரு பழக்கடை வியாபாரி. இவனும் இவர்களுடன் அரட்டையடிக்க பல பொழுதுகளில் சேர்ந்து கொள்வது உண்டு. அடுத்த குற்றவாளி அக்ஷ்ய தாக்கூர். குழந்தையும் மனைவியும் உள்ள இவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன்.  அடுத்தது தந்திரமாக பயணிகளை பேருந்துக்குள் ஏற்றும்  18 வயது நிரம்பாத அந்த பொடியன். அவன் தான் ராம்குமாருடன் சேர்ந்த அந்த பெண்ணை மிகவும் கொடுமையாக நடத்தினவன். வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி "தான் குற்றத்தில் நேரடியாக தொடர்புடையவன் அல்ல பேருந்தை நிறுத்தாது ஓட்டியது மட்டுமே தன் பணியாக இருந்தது என தன் நிலைப்பாடை கூறுகின்றான். இந்த குற்றவாளியின் முகத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லை, பயவும்  இல்லை. இது என்ன பெரிய குற்றம்! பண்பான பெண்கள் இரவில் ரோட்டில் நடமாட மாட்டார்கள், இது போன்ற நிகழ்வுகளுக்கு பெண்களே ஆண்களை விட பொறுப்பாகுகின்றனர். ஆண்களும் பெண்களும் சமமல்ல, மோசமான உடையணிவதே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம். மேலும் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள் என தன்  மனநிலையை அடுக்கி கொண்டே போகின்றான்.  அந்த பெண் எதிர்க்காது இருந்திருந்தால் நாங்கள் இது போன்று கொடூரமாக நடந்திருக்க மாட்டோம். இது போன்ற நிலையில் பெண்கள் அமைதியாக தாங்கி கொள்வதே சிறந்தது என மிகவும் நிதானமாக கண்ணில் எந்த சலனவும் இல்லாது உபதேசிக்கின்றான். மேலும் தன்னை போன்ற குற்றவாளிகளை தண்டிப்பதால் குற்றம் குறையாது மேலும்  பாதிக்கப்படுபவர்கள் கொல்லப்படுவதற்கே வாய்ப்பு உண்டு என தன் சட்ட நியாயத்தையும் விளக்குகின்றான்.

இவன் இவனுடைய கூட்டாளிகளின் குடியிருப்பை காட்டுகின்றனர். மனிதர்கள் மாக்களை போன்று திங்கி வசிக்கும்  ஒரு அழுக்கு படிந்த காலனி.  சமூகத்தின் எந்த கட்டுப்பாடு மற்ற எதிர் நோக்கும் இல்லாது வாழும் சூழல். இந்தியாவின் குடிசை மாற்று கட்டிடங்கள் இது போன்ற காலனிகளை நகரமெங்கும் உருவாக்குகின்றது என்ற உண்மை ஒருபுறம் இருக்க  தூக்கு கயற்றில் இருந்து தப்பிக்க இவன் உளறுகின்றானா அல்லது ஜெயில் சாப்பாடு ஊக்கம் அளித்து விட்டதா என நாம் சிந்திக்கும் வேளையின் உண்மையான குற்றவாளிகள் அது தான் இந்த குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் காட்சிக்குள்  வருகின்றனர்.  

இவர்களை போன்றவர்கள் கல்வியறிவு பெற்று என்ன பலன் உண்மையான குற்றவாளிகள் அந்த 6 பேர் அல்ல இவர்களுக்கு விளக்கு பிடிக்கும் இந்த வழக்காளர்களே என்று நோக்கும் போது நம் உள்ளம் வருத்ததால் பிளர்கின்றது. இந்திய பண்பாடு, உடை, சமூகம் என என்னவெல்லாமோ ஆணித்தரமாக சொல்கின்றனர்.  குற்றவாளிகள் தாங்கள் செய்யும் குற்றத்தை உணராது புலம்பும் போது அந்த குற்றத்திற்கான மிகத் தெளிவான மிகவும் ஆணவமான சமூக அக்கறை அற்ற  பதில்களை இந்த வழக்காளர்களிடம் இருந்து பெறலாம்.

 பெண் என்பவர்கள் பூ போன்று மென்மையானவர்கள் அவர்கள் தங்கள் ஆசைக்கானவர்கர்கள். ஆலயத்தில் இருக்கும் பூக்கள் மட்டுமே வணங்க தகுந்தது.  தெருவில் கிடந்தால் மிதிக்க தான் செய்வார்கள் . அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.  பெண்கள் வைரம் போன்றவர்களாம் பாதுக்காக்காது தெருவில் கிடந்தால் நாய்கள் எடுத்து கொள்வதாகவும் ஆண்களோ வலிமையானர்கள் அவர்கள் கல் போன்றவர்கள் பெண்கள் என்பவர்களை  செக்ஸ் சிந்தனையோடு தான் ஆண்கள் முதலில் பார்ப்பதாகவும், பெண்களுக்கு நமது சமூக அமைப்பில் இடம் இல்லை என்ற அரிய கருத்தை ஏ.பி சிங் என்ற சட்ட வல்லுனர் கூறுகின்றார்.                                                                                                                                      எம் எல் ஷர்மா என்ற வழக்கறிஞரோ மேலே ஒருபடி சென்று  இந்திய கலாச்சாரத்தை கைவிட்டதே இது போன்ற நிகழ்வுகளுகு காரணமாக சொல்கின்றார். இரவில் பொது வேதிக்கு ஒரு பெண் ஏன் அன்னிய ஆணுடன் வர வேண்டும் என கேள்வி எழுப்பும் அவர் தன் வீட்டில் இருக்கும் பெண்கள் வழி தவறினால் பெட்ரோல் ஊற்றி கொளுத்துவதாக சூளுரைக்கின்றார்.

 ஜோதி சிங் என்ற பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் துக்கத்தை தங்கள்  மகளின் கனவை பற்றி விவரிக்கின்றனர். அவர்கள் துக்கம் தாங்க இயலா மாபெரும் துயர். ஜோதியின் அம்மா கூறுகின்றார் என் மகள் எங்களுக்கு ஒளியாக வந்தவள் என்ற அர்த்ததில் ஜோதி என்ற பெயரை சூட்டினோம். அவர் அப்பா இப்படியாக முடிக்கின்றார் என் மகள் விழிப்புணர்வு கொடுத்து கொண்டு இந்த உலகை விட்டு ஜோதியாக சென்றுள்ளார். ஆனால் என் மகள் இந்த சமூகத்திடம் விட்டு செல்லும் கேள்வி பெண் என்பவளின் பொருள் என்ன என்பதாகும்.

ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த ஜோதிக்கு படிக்க வேண்டும் மருத்துவராக வேண்டும். தன் கிராம மக்களுக்கு  சேவை புரிய வேண்டும் என்ற ஆசை. தன் மகளின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டி தன் குடும்ப சொத்தை எல்லாம் விற்று தன் மகளின் கல்விக்கு என  செலவழித்து கல்வியால் தங்கள் வாழ்க்கை செழிக்கும் என்று எண்ணிய பெற்றோருக்கு; இந்த சமூகத்தின் பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு; கிடைத்த பதில் இந்த கொடிய முடிவு.                                                                 
ஜோதியின் ஆசிரியர் கூறுகின்றார் தன் கல்விச் செலவுக்கு என பகுதி நேரவேலை பார்த்து படித்து வந்த ஜோதி தினம்  4-5 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றார். பெண்களால் எல்லாம்  முடியும் என்று நம்பிய ஜோதி இனியும் 6 மாதம் பயிற்சிக்காலம் கடந்தால் ஒரு மருத்துவர். அந்த பெண் சமூக அக்கறையுள்ளவர். தன் பணப்பையை திருடிய சிறுவனுக்கும் அவன் விரும்பிய பொருட்கள் வாங்கி கொடுக்கும் நல்லுள்ளம் படித்த பெண்மணி.  

ஜோதியின் தவறென இந்த இந்திய சமூகம் சொல்லும் ஒரே குற்றம் ஆண் நண்பருடன் ஏன் சினிமாக்கு சென்றார் என்று தான். ஆனால் இன்றைய சூழலில் 8.0 என்பது நகர வாழ்க்கைக்கு இரவா?

சினிமா முடிந்து பேருந்துக்கான காத்து நிற்கின்றனர். ஆட்டொக்களை கைகாட்டியும் நிற்கவில்லை. அப்போது காலனை போன்று வெள்ளை நிறமான பேருந்து வந்து அருகில் நிற்கின்றது. சின்ன பொடியன் "வாங்க அக்கா" என கூறி பேருந்தில் ஏற்றுகின்றான். இருவரும் 20 ரூபாய் கொடுத்து தங்கள் பேருந்து கட்டணத்தை செலுத்து விட்டு இருக்கையில் அமரகின்றனர். குடி வெறியில் இருந்த ராம் என்பவன் இந்த நேரம் ஏன் இந்த பெண்ணுடன் பயணிக்கின்றாய் என கேள்வி கேட்கின்றார். ஆண் நண்பனோ ராமின் கன்னத்தில் அறைகின்றான். மேலும் இது உண்ணுடைய பணியல்ல என்று எச்சரிக்கின்றார்.  கோபத்தில் வெகுண்டு எழுந்த கும்பல் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நண்பனை அடித்து காலை ஒடித்து விட்டு பெண்ணை கூட்ட வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றனர். அக்கா என்று அழைத்த சிறுவன் தான் பின்பு அப்பெண்ணின் மரணத்திற்கும் காரணமாகின்றான்.

பேருந்தில் இருந்து இரும்பு கம்பியால் பெண்ணுறுப்புக்குள் குத்தியதில் சிறுகுடல் சிதந்து பெண் மரணப்பட்டாள் என்று பொலிஸ் கேஸ் இருக்க கை இட்டே குத்தினர் என்று வக்கீலும் குற்றவாளியும் கூறுகின்றனர். வக்கீல் மிகவும் சாதாரணமாக கையிட்டதை கூறியுள்ளான்.

இந்த ஆவணப்படத்தில் போலிஸ் வந்து பார்த்ததாகவும் உடன் மருத்துவ மனைக்கு சென்றதாகவும் கூறுகின்றனர். போலிஸ்காரர் கூட பிரசவமான பசுவின் கண் போல் பாதிக்கப்பட்ட பெண் பார்வை இருந்ததாக குறிப்பிடுகின்றார். அங்கு கூட ஒரு மிருகம் தான் துணையாகுகின்றது.


கல்வியறிவே தீர்வு என திருமதி சேத் கூறினாலும் வக்கீல்கள் பேச்சை வைத்து பார்க்கும் போது அதும் நம் நற்பாசை தான். படிக்காதவர் தவறா சரியா என தெளிவில்லாது பேசும் போது படித்தவன் தவறை சரி என காரணம் காட்டி வாதிடுவது கல்வி சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் எந்த பிரயோசனவும் இல்லை என்றே விளங்குகின்றது.  பாலியல் குற்றவாளி கூறும் அரிய செய்தி இந்தியாவின் பண்பாட்டுப்படி முத்தம் கொடுப்பது தவறாம் ..........                                                                                                                                                       இந்த வழக்கை பொறுத்த மட்டில் 17 நாட்களுக்குள் போலிஸ் தங்கள் வழக்கை விசாரித்து நீதிமன்றத்திடம் சமர்ப்பித்து விட்டனர். கடந்த இரு வருடமாக இந்த வழக்கை விசாரணக்கு உட்படுத்தாது நிலுவையில் வைத்துள்ளனராம். இது போன்ற நிகழ்வுகளுக்கு பெண் சிசுக்கொலை, கல்வி என பல காரணங்களை சமூக ஆவலர்கள் கூறுகின்றனர். ஆனால் சம்பவத்தை நிதானமாக அவதானிக்கும் போது நாட்டிலுள்ள ஏதோ ஒரு குடியிருப்பில் இருக்கும் கண்ணியமற்ற குடிகாரர்களான  4 ஆண்கள் நினைத்தால் ஒரு பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கான காரணத்தை வழக்காளர்கள் வாதிட்டு கொள்வர்கள்.                                                                                                                                                                                    பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த வேதனையை புரிந்து கொள்ள பெண்களால் மட்டுமே இயலும். ஆனால் குற்ற வாளிகளை ஏற்று கொள்ள பெற்றோர்கள் மனைவியர் காத்திருக்கின்றனர். மகளை இழந்த பெற்றோருக்கு எந்த நிம்மதியும் இல்லை நீதியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு புதுப்பெயர் சூட்டுவது  வழியாக அரசு தப்பிக்க பார்க்கின்றது.                                                                                                                                        இந்த வாக்குமூலத்தை மிகவும் ஆழமாக பரிசோதித்தால் இந்திய சமூகத்தின் ஏற்றதாழ்வுகள் மிகப்பெரிய ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது. 50% மேல் மக்கள் வறுமையில் வாழ்வது அவர்கள் தலைமுறையில் இது போன்ற தலை திரிவான பைத்திய மகன்கள் உருவாகத்தான் போகின்றார்கள். இன்னும் ஒரு ஆபத்தான ஆய்வு அறிக்கையை குறிப்பிடுகின்றனர் இந்திய பார்லிமென்றில் இது போன்ற குற்றவாளிகள் 250 பேர் இருப்பதாகவும் இவர்கள் போன்ற ஏழைகள் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு மட்டும் தான் தண்டனைக்கு உள்ளாகுவதாகவும் கேள்வி எழுப்புகின்றனர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 200 ல் 12 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை வழக்கியுள்ளனர்.     அரசியல் காரணங்களுக்கு என மக்களை பிரிக்க அவர்களை சேரிகள் என வேற்திரிவாக குறிப்பிட்ட இடங்களின் காலனி என்ற பெயாரில் தங்க வைக்க     அளவுக்கு அதிகமான சுதந்திரம் கூட்டு வாழ்க்கை வறும்சி இது போன்ற குற்றங்களூக்கு காரணமாகின்றது என்றால் மறுக்க இயலாது. பல கோடி மக்கள் வேலை வாழ்வாதாரம் என சொந்த ஊர்களை விட்டு நகரங்களில் குடிபெயர்வதும் அவர்கள் குடுபம் என்ற அமைப்பு சிதைவதும் ஒரு காரணம் தான்.                                                                                                                                                                       இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் லெஸ்லீ எட்வின் ஆனார். இவரும் தனது 19 வயதில் பாலிய வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளார். இந்த ஆவணப்படம் உலகம் ஒட்டுமுள்ள சில ஆண்கள் மனநிலையை புரிந்து கொள்ள பெண்களுக்கான வழிக்காட்டியாகும். பெண்கள் இன்னும் மன வலிமை பெற வேண்டியுள்ளது. இதை எழுதி முடிக்கும் போதும் என் மனதிலும் அதே கேள்வி தான் எழுகின்றது  ஆண்கள் பார்வையில். "பெண் என்றால் அதன் பொருள் என்ன ? பூ வைரம் என்ற பஞ்சாங்கத்தை பாடி ஏமாற்றாது பெண்ணை ஒரு மனிதையாக ஏற்றுகொண்டாலே போதும். இந்த ஆவணப்படம் ஒரு சராசரி  இந்திய ஆணின் மனநிலையை சரியாக வெளிச்சம் காட்டியுள்ளது.                                                                                     இந்த ஆவணப்படம் ஒரு உண்மை சம்பவத்தை நுணுக்கமாக ஆராய்ச்சியுடன்  மிகவும் நேர்த்தியாக தந்துள்ளது. இருப்பினும் ஜோதியின் ஆண் நண்பரின் தகவல்களையும் எதையும் சேர்க்க இயலவில்லை என்பது பெரும் குறையே. உத்தரபிரேதசத்தை சேர்ந்த மின்பொறியாளரான இளைஞர் இன்னும் அந்த அதிற்ச்சியில் இருந்து மீள இயலாமல் பெண்கள் விழிப்புணர்வு தொண்டு நிறுவனத்தை நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவருடைய வார்த்தைகள் மிகவும் தேவையும் பொருள் உள்ளதுமாக இருந்து இருக்க கூடியது. ஏன் புரக்கணிக்கப்பட்டார் என்று தான் தெரியவில்லை. அவர் கொடுத்த தகவல்படி பொதுமக்கள் கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தாலும் உதவ முன்வரவில்லை என்பதாகும். வெறி பிடித்த ஆண் மனம் மட்டுமல்ல இந்த சமூகத்தின் மனவும் தூய்மையாக வேண்டியுள்ளது.