19 May 2012

முகத்திரை கிழிந்த ஷாருக்கான்!

அமெரிக்கா விமான நிலையததில் அமெரிக்க காவல் அதிகாரிகள்   2 மணி நேரம் காக்க வைத்து பரிசோதனை செய்தனர் என்று அமெரிக்காவிற்க்கு எதிராக இந்திய பத்திரிகை உலகம் மட்டுமல்ல பல அரசியல் வாதிகளும் குரல் கொடுத்தனர்.  ஏழைகளுக்கு உணவு உத்திரவாதம் அளிக்க மறுத்த சரத் பவார் கூட ஷாருக்கானுக்காக குரல் கொடுத்தார்.




 
இந்தியாவில் சாதாரண  மக்கள் ரேஷன் கடை வாசலிலும் அரசு அலுவலங்கள் முன்னும் பெண்கள் குடி தண்ணீருக்கு என  குழா அடியில்  நாள் கணக்காக  காத்து கிடக்கும் அவலம் நாம் கண்கூடா காண்கின்றோம். இவர்கள் மேல் சாதாரண மக்கள் என்ற காரணத்தால் கரிசனை கொள்ளாத இந்திய சமூகம் அமெரிக்காவின் பாரபட்சமற்ற காவல் முறையை குறை கூறினர்.   அமெரிக்க வெளியுறவு தூதரை அழைத்து தங்கள் வருத்ததை தெரிவித்தது. இந்தியாவின் ஒட்டு மொத்த முகமே ஷாருக்கான் போன்று காட்டி கொண்டனர்.

ஆனால் ஷாருக்கான் பற்றிய சமீபத்திய செய்திகள்  இவரின் பொய் முகத் திரையை    தெளிவுப்படுத்தி கொண்டே இருக்கின்றது.  விருந்து வேளையில் நண்பரை அடித்தது மட்டுமல்ல, விளையாட்டு மைதானத்தில் புகைபிடித்து நீதிமற்றம் ஏறினவர் இவர். தற்போது குடித்து விட்டு ஆடுகளத்தில் புகுந்து ரகளையில் ஏற்படுத்தியது மட்டுமல்லாது  காவலர்களையும் தரக்குறைவாக  திட்டி ரகளையில் ஏற்பட்டுள்ளார். இவரை தண்டித்திருப்பதையும் குறை கூறியுள்ளனர் அதிகார ஜீவிகள். இதில் மமதா பானர்ஜி "ஜனநாயக தன்மையற்ற தண்டனை" என்று கூறியிருப்பது நகைப்பை தான் வரவழைக்கின்றது. தன்னை கேலி சித்திரம் வரைந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக தன் ஆதரவாளர்களை கொண்டு  வரைந்த பல்கலைகழக பேராசிரியரை விரட்டி விரட்டியடித்தவர் இந்த மமதா பானார்ஜி. மக்களின் கருத்து சுதந்திரத்தை மறந்து பல அறிக்கைகள் வெளியிட்டவர்.

ஷாருக்கான் ஒரு நடிகர், மக்கள் ஆதரவு பெற்ற நடிகர், கொல்கத்தாவின் அதிகார பூர்வமான மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து கொண்டு கேவலம் தெரு பொறுக்கி போல் நடந்து கொண்டது சரியா? குடித்து விட்டு பொதுவிடத்தில் வந்ததே தவறு மேலும்  அரசு அதிகாரிகளை கேவலமாக திட்டியுள்ளார். இவர்களை போன்ற கெட்ட உதாரணங்களான நடிகர்களுக்கு  கடினமான தண்டனை வழங்குவதே சரியாக இருக்கும்.  பணவும் புகழும் இருந்தால் எதையும் செல்லாம் என்ற அகங்காரமே இதன் விளைநிலம்.

சட்டம் என்பது எல்லோர்ருக்கும் பொதுவாக இல்லாது ஆளாளுக்கு மாறுவதும், நியாயங்கள் நியாயமற்றவர்கள் உரைக்கும் போதும் சட்டம் வெறும் பறக்கும் பட்டமாக மாறுகின்றது என்றால அதுவே உண்மை.

15 May 2012

ஜாதி கணக்கெடுப்பு என்ற அரசியல் படையெடுப்பு!!


ஜாதி கணக்கெடுப்புக் குழு இன்று எங்கள் வீடு வந்து சேன்றனர். ஒரு சீனியர் 3 ஜூனியர்கள் என ஒரு கூட்டமாக வந்து தகவல் பெற்று செல்கின்றனர்.  கடந்த வருடங்களிலும் இதே போன்றே ஜாதி தகவல்கள் திரட்டி சென்றிருந்தனர். நான் என் ஜாதி சொல்ல விரும்பவில்லை என்றது "எந்த ஜாதியிலும் சேராதவர்கள் பட்டியலில்"  சேர்த்து விடுவார்களாம்.  ஜாதி சொல்ல விருப்பம் இல்லாதவர்கள் என்ற பட்டியல் இல்லையாம்.  என்னிடம் தகவல்கள் பெற்று விட்டனர் என்று  சிறு ஸ்டிக்கரை அடையாளமாக ஒட்டி சென்றனர். 

கடந்த வருடம் கேட்ட அதே  கேள்விகள் ஜாதி என்ன? டிவி, கார், கம்யூட்டர், துணி துவைக்கும் இயந்திரம் இருக்கின்றதா என்ற கேள்விகள் இருந்தனை.  ஒன்றும் இல்லை என்று சொல்லி உள்ளேன். இரு சக்கர வாகனம் மிதிவண்டி பற்றி கேள்விகள் இல்லை! இந்த கேள்விகளில் ஒன்றிலும் மனித நலனோ அக்கரையோ குறைந்த பட்சம் தன்மான உணர்வோ உள்ளதாக தெரியவில்லை. கார் வைத்திருப்பதை வைத்து நம் வசதியை அளக்க இயலுமா? பலர் வீடுகளில் இன்று கார் உண்டு   சிலர் வீட்டில் ஐயா அலுவலகம் செல்ல ஒரு கார்  அம்மா காய்கறி மார்கெட்டு செல்ல இன்னும் ஒன்று, இளம் மகன் ஊர் சுற்ற மற்றொரு கார் என்றிருக்கும். அந்தஸ்தை கருதி பல வீடுகளில் மாதத் தவணைக்கும் வாங்கி வைத்துள்ளனர். எங்கள் பக்கத்து வீட்டில் சாப்பாட்டு செலவையும் விட கார் -தவணை (மாதம் 15 ஆயிரம்)கட்டுகின்றனர். தொழில் நிமித்தமாக அலங்காரம் என்பதை விட அவர்கள் அவசிய தேவை ஆகின்றது கார்.

துணி துவைக்கும் இயந்திரம் கூட வசதியை நிர்ணயிக்குமா என்பது தான் நகைப்பிற்க்குறிய இன்னொரு கேள்வி! இன்று தவணை முறையில் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பொருட்களுக்கு அளவே இல்லை பல வீடுகளில். வீடு சுத்தம் செய்ய மின் துடப்பம் கூட வாங்கி வைத்துள்ளனர். ஒரு  வீட்டில் குளிர் சாதன பெட்டியை தண்ணீர் ஊற்றி துடப்பம் வைத்து அடித்து சுத்தப்படுத்தியது நினைவுக்கு வருகின்றது. அடுத்த கேள்விக்கு வருவோம்: வீடு கட்டி 20 வருடம் வரை  வீட்டு பத்திரம் வங்கியில் இருப்பதால், சொந்த வீடா என்ற கேள்விக்கு எளிதாக பதில் பதில் சொல்லவே இயலாது.

சரி இதெல்லாம் இருக்கு என்றால் அரசின் சாதனையா அல்லது இல்லை என்றால்  மக்களுக்கு உடன் பெற்று தந்து  விடுவார்களா? சமூக நலன் சார்ந்த கேள்வி என்றால் வீட்டு வாடகை, வீட்டில் சாராயம்/பிராந்தி குடிக்கும் நபர்கள், நோயாளிகள், படிக்கும் நபர்கள், இருக்கும் கடன்,  வரவு செலவு இவை பற்றி வினவ வேண்டாமா? தமிழகத்தை பொறுத்த வரை அவனவன் புத்திக்கு தகுந்து உழைத்து பிழைக்கின்றனர் சிலர் அடுத்தவர்களை ஏமாற்றி வாழ்கின்றனர்.

கணக்கெடுப்பு என்று எத்தனை முறை தான் வருவார்கள். தேர்தல் நேரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, மலிவுக்கடை, ஆதார், பான் கார்டு, வாகன லைசன்ஸ் என எத்தனை கணக்கெடுப்புகள். ஒரு தலைக்கு இத்தனை ரூபாய் என்று பெறப்படுவதால் கணக்கு எடுக்க ஆள் பஞ்சம் இருக்காது. கடந்த முறை கணக்கெடுக்க சமூக சேவை போல் ஒரு பெண் வந்து சென்றார்.

அரசு நியமிக்கும் பணியாளர்களே ஜாதி கேட்பது அசிங்கமாக உள்ளது. நீங்க என்ன ஆளு என்ற கேள்வி, பொது ஜன மத்தியில் மலிவு கேள்வி ஆகி விட்டது. எங்க தெருவில் கூட ஜாதி பார்த்து நட்பு வைத்திருப்பார்கள். சில ஜாதி நபர்கள் நம்மிடம் நேரில் வந்து "எங்க ஆளுங்க ரொம்ப பொல்லாதவங்க" என்று சொல்லி விட்டு செல்வார்கள். ஆத்திர அவசரத்திற்க்கு சொந்த ஜாதி ஜனங்கள் விட மனித நேயமுள்ள மனிதர்கள் தான் உதவுவார்கள். ஜாதி கொண்டு ஒரு மனிதனையும் பெரியவன் என்றோ சிறியவன் என்றோ அளக்க முடியாது, செயல் மட்டுமே ஒருவனை யார் என்று நிர்ணயிக்கும் ஆதாரம்.

கேரளாவில் ஸ்ரீ நாரயண குருவின் வாழ்க்கை போராட்டமே "ஜாதி கேட்காதே ஜாதி சொல்லாதே, ஜாதி எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக இருந்தால் போதும் என்பதாகவே இருந்தது. ஜாதி சொல்வதால் என்ன பலன். நம் அரசு ஜாதி நிர்ணயித்திருக்கும்  முறை கூட கேலிக்குறியது. கலப்பு திருமணம் செய்தவர்கள் தங்களுக்கு பிடித்த- தேவையான ஒரு ஜாதியை தங்கள் பிள்ளைகளுக்கு என பதிந்து கொள்ளலாம். எங்கள் ஆசிரியர் ஒருவர் கலப்பு திருமணம் செய்தவர். ஆசிரியர், சமூகம் சொல்லி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவரும் அவர் காதல் மனைவி நடுநிலை ஜாதியை சேர்ந்தவரும் ஆவார்.  பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையிலும்  தாழ்ந்த ஜாதி என பதிவிட்டு அரசு நலன்களை பெற்ற பின்பு பிள்ளைகள் படித்து ஒரு நிலைக்கு வந்ததும் தங்கள் ஜாதியையே ம்றுதலித்து விட்டனர்.  சமூக அந்தஸ்தை கருதி நட்பு வைப்பதோ இன்னொரு ஜாதி நபர்களூடன்.


 ஒரு வீட்டில் ஒரு முதியவருக்கு 3 ஜாதியில்  மனைவி, துணைவிகள் என்றிருந்தால் முதியவர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஜாதியாக தான் இருக்கும். இது எல்லாம் எப்படி கணக்கெடுப்பில் பதிகின்றார்கள் என்பதே புதிர்! ஜாதி மனிதனை பிரித்து ஆளுகின்றது என்பதை காண்கின்றோம். நான் படித்த கல்வி நிலையத்தில் பொது மின் நூலகம் போக  ஆதிதிராவிட மாணவர்களுக்கு என்றே தனியாக  இன்னொரு நூலகம் இருந்தது. இது மாணவர்களை மாணவப்பருவத்திலே பிரித்து கலவரம் பொறாமை வன்மத்தை வளர்க்கின்றது.

சமீபத்தில் எனக்கு ஒரு கட்டுரை அனுப்பபட்டிருந்தது. அந்த நபர் குறிப்பிட்ட ஜாதியின் வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் மற்று ஜாதிகளை பற்றி குறிப்பிடும் போது காழ்புணர்ச்சியுடன் சில வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார். நம் ஜாதி வரலாறு  பற்றி தெரிவது நம் தன் நம்பிக்கையை வளர்க்கும் செயலே.  அதுவே மற்று ஜாதி மனிதர்களையும் மதிக்கும் நேசிக்கும் உபாதியாக இருக்க வேண்டும்.

   ஜாதி என்ற கூடாரத்தில் மனிதர்களை சிறைப்படுத்த நினைக்கும் அரசியல் மறைய வேண்டும்.  தன் ஜாதி நலன் என கொடி பிடிப்பவர்கள் கூட கலங்கிய நீரில் மீன் பிடித்து விட்டு மறைந்து விடுகின்றனர். இது ஒரு சமூக அவலம் என்று விழிப்புணர்வு வர வேண்டும். ஜாதி என்ற பெயரில் கிடைக்கும் நலன்களை  விட நமக்கு மகிழ்ச்சி அளிப்பது நம் உழைப்பால் கிடைக்கும் வெகுமதியில் தான்.

12 May 2012

பூஞார்/பூவார்(Poovar) - இயற்கை சுற்றுலா


நாகர்கோயில் சென்ற நாங்கள் திடீர் பயணமாக  பூழியூர்(பூவார்) சென்றிருந்தோம்.   நாகர்கோயில் வழியாக கேரளா எல்கை களியாக்காவிளை தாண்டியதும் திருவனந்தபுரம் செல்லும் வழியில்  பூவார்(Poovar) வந்து விடுகின்றது.  ரோட்டில் இருந்து இறங்கி காயலை நோக்கி நடந்து செல்ல வேண்டும்  56 கிமீ நீளமுள்ள  நெய்யூர் நதி காயலுடன் கை கோர்த்து அரபிக்கடலில் கலக்கும் அழகிய இடம்  இது.

 மர வியாபாரத்திற்கு புகழ் பெற்ற இடமாகும். வழியெங்கும்  மரச்சாமான்கள் செய்யும் கடைகள் காணலாம். 1500 வருடம் முன்பு  இஸ்லாமியர்கள் குடியேறி வசிக்கும் பகுதி என்பது இன்னொரு சிறப்பாகும்.  திருவனந்தபுரத்தின் இருந்து 30 கிமீ தள்ளி தெக்கு மூலையில் அமைந்துள்ள பூவாரில் , கண்ணில் இடம் எல்லாம்  சிறிதும்  பெரிதுமாக கேரளா தேசிய மரமான தென்னை  மர அணிவகுப்பு தான். இந்த நீர் நிலை உள்ளிலும் தென்னை மரமாகத் தான் உள்ளது.   சுற்றுலா தேவைக்கு என பல ஆயிரம் தென்னை மரங்கள் வெட்டியுள்ளனர்.

செல்லும் வழியெங்கும் வீடு இருப்பதால் மக்கள் குளித்து கொண்டும் சிறுவர்கள் தண்ணீரில் பந்து   விளையாடிக் கொண்டும் நேரம் போக்குவதை  காணலாம்.  இன்னும் சில வயதான மனிதர்கள் நம்மூரில் மரத்தடியில் தூங்குவது போல் வள்ளத்தில் தூங்குகின்றனர்.  ஒரு மனிதர்  பாக்கை  கையால் உடைத்து மென்று கொண்டிருந்தார். இன்னும் சிலர் பொழுது போக்காக மீன் பிடித்து கொண்டிருந்தன்ர்.

மழைக்காடுகள் என்று அழைக்கும் மரங்கள் கூட்டத்திற்க்குள்ளாக அழைத்து சென்றார். வீடுகள் கரையில் உள்ளதால் வீட்டு கழிவு மீன் கழுவும் நீர் என சில இடங்களில் துர்நாற்றமாக தான் உள்ளது. ஆனால் நம் தலையை தொடும் செடி கொடிகள் ஊடாக படகில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவமே. வழியெங்கும் பெரிய பழ மரங்களில் காணப்ட்டது. என்ன வகை காய் என்ற போது இது விஷக்காய் சாப்பிட்டால் இறந்து விடுவோம் என்ற போது இது தான் இயற்கையின் சோதனையோ என்று தோன்றியது. கைக்கு எட்டியது  வாய்க்கு எட்வில்லை என்று சொல்வார்களே அது போல! 


படகு மெதுவாக நெய்யார் ஆறு வழியாக கடலை செற்றடைந்தது. அருமையான அழகு சொக்கவைக்கும் கடல். உணவு விடுதிகள், அருகில் இல்லை என்பதால் சுத்தமாக காணப்பட்டது. நாங்கள் சென்ற  தினம் அங்கு படம் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.  மலையாளம் அல்லது தமிழ்ப்படம் அல்ல என்று மட்டும் தெரிந்தது. காதலர்கள் ஓடி வந்து கட்டிபிடிக்கும் காட்சியை எடுத்து கொண்டிருந்தனர். நடிப்பை சொல்லி கொடுக்கும் பெண் ரொம்ப ஆவேசமாக நடித்து காட்டி கொண்டிருந்தார். நாயகி அறுக்க கொண்டு போன ஆடு போல் நடித்து கொண்டிருந்தார். எங்கள் மகன்கள்  படகில் இருந்து இறங்கி சென்று கடல் அருகை சென்று அழகை ரசித்து வந்தனர்.  ஒரு பக்கம் நதியின் கொஞ்சும் நெருக்கத்தை உள் வாங்கும் கரை மறுபக்கம் கடல் அலையின் ஆக்கோராஷமான அடியை ஏற்று  வாங்கும்  காட்சி ஆச்சரியவும் அழகும் சேர்ந்து இருந்து.  இது  வாழ்க்கை தத்துவவும் கற்று தருகின்றது.  கரையில் இறங்கலாம் என்ற போது ஜட்டி மட்டும் அணிந்து குடிவெறியுடன் ஆட்டம் போடும்  இளம் கெட்ட கேரளா காளைகளை கண்டதும் அங்கு நிறைய நேரம் நிற்க மனம் இல்லாது படகை திருப்ப சொல்லி விட்டார் என்னவர். 

மறுபடியும் மழைக்காடுகள் ஆறு காயல் வழியாக வந்து கொண்டிருந்தோம். கேரளாவின் பக்தியும் கலை உணர்வும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து நம்மை மெய் மறக்க செய்தது.  அழகாக காட்சி தரும் சிற்பங்கள், மிதக்கும் உணவகம், மிதக்கும் வீடு அழகிய சுற்றலா மாளிகைகள் காணும் இடமெல்லாம் தண்ணீர், தண்ணீருக்கு சுவர் என்பது போல் தென்னை மரம் என அழகை வர்ணிக்க கவிஞராக தான் பிறக்க வேண்டும். 20-30 அடி ஆழம் உள்ளதாக படகோட்டி கூறினார். ஒரு உயிர் கவசம் மட்டும்தான் தந்திருந்தனர்.  தேக்கடி நிகழ்வுகள் தெரிந்த படியால் பயமாக தான் இருந்தது. இருப்பினும் மக்கள் சுற்றுமுற்றும் இருப்பதை கண்ட போது தைரியத்தை வரவழைத்து கொண்டேன். எங்கள் இளைய மகன் அந்த உயிர் கவசத்தை அணிந்து கொண்டு தண்ணீரில் நீந்தி வரவா என்று எங்களை சோதனைக்கு உள்ளாக்கி கொண்டிருந்தான்.

திரும்பி வருகையில் இரும்பு, மரப் பாலங்களை அழகாக கட்டி கொண்டிருப்பதை கண்டோம்.  அதுவும்  ஒரு அழகாக தான் உள்ளது.

.இந்த காயலை சுற்றி வீடுகளாக உள்ளது. சிலர் சுற்றுலா பயணிகளை கண் வைத்து பெரிய பெரிய மாளிகைகள் கட்டி விட்டுள்ளனர். கேரளா ஆயுர்வேத மாளிகைகள் உள்ளது. பயணிகள் தங்க என மிதக்கும் குடிலுகள் அழகிய வீடுகள் உள்ளன.  நாங்கள் இவை எல்லாம் படகில் செல்லும்  போது   படகோட்டியிடம் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். அங்கு சென்று தங்கவேண்டும் என்றால் "பல்லுள்ளவன் தான் பட்டாணி சாப்பிட இயலும்" என்ற பழமொழியை எண்ணி சிரித்து கொள்ள வேண்டியது தான் .  6 பேர் பயணிக்கும் படகு சவாரிக்கு நம்மிடம் 750 ரூபாய் வசூலிக்கின்றனர்.  நாங்கள் பயனித்த படகு கைரளி என்ற நிறுவனத்தினுடையது. இதே போல் இந்த காயலோரமெங்கும் பல படகு நிறுவனங்கள் உண்டு. படகு ஓட்டும் நபர்கள் ஏழைகளாக தான் காட்சி தருகின்றனர். ஊதியம் கிடைப்பதாக சொன்னாலும் எவ்வளவு என்று சொல்ல எங்கள் படகோட்டியின் தன்மானம் விட்டு தரவில்லை. சிறந்த பன்பான, அமைதியான பழக்கவழக்கத்துடன்   நம் முகம் கோணாது சிறு புன்சிரிப்புடன் மென்மையான குரலில் நாம் கேட்கும் சந்தேகத்திற்க்கு பதில் தருகின்றார் படகோட்டி!.



ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. இறங்கும் நேரம் வந்து விட்டது. படகோட்டிக்கு அன்பளிப்பாக 25 ரூபாய் கொடுத்தால் வேண்டாம் என்று வாங்க மறுத்து விட்டார் நாங்கள் வற்புறுத்தவே வாங்கி கொண்டார்.  பாஞ்சாலக்குறிச்சியில் 10 ரூபாய் கேட்டு வாங்குவது தான் அப்போது நினைவிற்கு வந்தது. நம் எல்கைக்கு அருகிலுள்ள இந்த காயலில்  மாலை வரை செலவழித்து விட்டு திருவனந்த புரம் திரும்பினோம்.

எங்கள் இளைய மகன் தன்னை தண்ணீரில் விளையாட அனுமதிக்கவில்லை என்று கொதிக்கும் எண்ணையில் இட்ட வடை  போல் கோப கனலுடன் வந்து கொண்டிருந்தான்! உணவு வாங்கி கொடுத்து ஒரு சமரசம் செய்து விடலாம் என எத்தனித்து ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றோம். மகனிடம் கோபம் தனிக்க மலையாள மொழியில் இனிமையாக பேசி கொண்டிருந்தார் உணவக பணியாளர். அப்போது உணவகத்தில் 'கோ' படத்திலுள்ள "என்னமோ ஏதோ என்ற"........தமிழ் சினிமா பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தது. ஒரு ஆப்பம் கடலைக் குழம்புடன்  6 ரூபாய்க்கு கிடைக்கின்றது. மகன்களுக்கு நம்ம ஊர் கொத்து பிரோட்டா தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். 75 ரூபாயாக இருந்தாலும் சுவையாகத்தான் இருந்தது. ஆனால் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு கைகழுகும் சில  நபர்கள் கக்குவது போல் துப்புவது தான் நாம் உண்டதும் வெளியில் வரும் போல் அருவருப்பாக இருந்தது.

மழையும் வந்து விட்டது. இனி நம் நெல்லையை நோக்கி பயணிக்க வேண்டியது தான்.   இப்படியாக இந்த வருடவும் கேரளா தலைநகரிடம் விடைபெற்று நெல்லை சீமை வந்தடைந்தோம் நடுநிசியில்!

9 May 2012

பல்கலைகழக வீழ்ச்சியும் மாணவ சமூகவும்!

நாம் படித்த, வேலை செய்யும் பள்ளி, கல்லூரி, பல்கலைகழங்கள் மேல்  உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு நமக்கு எப்போதும் உண்டு. பயணங்களில் நாம் செல்லும்  போது நாம் படித்த பள்ளி கல்லூரியை ஒரு முறையேனும் திரும்பி பார்க்காது இருப்பது இல்லை, பெருமையாக மற்றவர்களிடம் சொல்லுவது மட்டுமல்ல நமக்கு ஒரு மதிப்பு தரக்கூடியதும் நம் தன்நம்பிக்கைக்கு உறுதுணையாக இருப்பதும் ஆகும். நம் குடும்ப உறவினர்கள் போல் நம் சொந்த வீடு போல் நம் நண்பர்கள் போல் நாம் படித்த கல்வி நிலையங்களுடன் ஒரு அழியாத உணர்வு பூர்வமான பந்தம் நம்மை ஆட் கொள்கின்றது. 

ஆனால் சமீபத்திய பத்திரிக்கை செய்தி வழியாக தினம் ஒரு கெட்ட  செய்தி என கல்வி நிலையங்கள் பற்றி  வருகின்றது. பாலியல் துன்புறவு என மனோன்மணியம் பல்கலைகழகம் வந்தால், மாணவர் தற்கொலை என அண்ணா பல்கலைகழகம் இடம் பிடித்துள்ளது.  எல்லாம் போதாது என்று இன்று வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் மேல் ஊழல் புகார்!

இது எல்லாம் பொய் புகார் என்றால் ஏன் மெத்தை படித்தவர்களால் சட்ட உதவி கொண்டு நேர் கொள்ள இயலவில்லை.   படித்தவர்கள் எல்லா வித அடிமைத்தனத்தில் இருந்தும் கல்வியால்  விடுதலை பெற்றவர்கள் என்றால் சமீப காலமாக பதவிக்கும் பணத்திற்க்கும் அடிபணிந்து கிடப்பதாலே இந்த விதமான சிக்கலுக்கு உள்ளாகுகின்றனர் என்றே தோன்றுகின்றது.  துணைவேந்தர் தேர்வில் இருந்து பட்டம் கொடுக்கும் விழா என எல்லா நிலைகளிலும் அரசியல் விளையாடுவதால் கல்வியின் தரவும் கல்வியாளர்களின் தரவும் குறைந்து விட்டது.  சமூகத்திற்க்கு எது சரிஅல்லது தவறு என்று எடுத்து கூற வேண்டிய பேராசிரிய பெருமக்கள் ஊழலில் முட்டி மோதி அல்லாடுவது கண்டு வேதனையும் வெட்கமாகவும் உள்ளது.  அடிப்படை தகுதியான நேர்மை கூட கல்வி  தரவில்லை என்றால் படித்து பதவியில் வந்து என்ன பிரயோசனம்?

மனோன்மணியம் பல்கலைகழகத்தில் சமீபத்தில் பாலியல் வழக்கில் ஒரு பேராசிரியரை  வெளியேற்ற வேண்டும் என மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. இதன் உண்மை தன்மை பற்றி பின் வந்த செய்திகளில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் மட்டும் தவறு என்று எடுக்காது பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் முதுகலைபட்டம் பெறும் மாணவர்கள் என்பதால் இவர்கள் பங்கும் எடுத்து கொள்ள வேண்டி வருகின்றது.  மதிபெண் பெறவேண்டும் என்ற நோக்குடன் பேராசிரியர்களிடம்; உடன் படிக்கும் மாணவர்களை கோள் மூட்டி ஒட்டி உறவாடும் பல மாணவர்களை காண இயலும்.  இந்த விடயங்களில் மாணவர்களுக்கும் தன்மானம் தன் நம்பிக்கை இருப்பது அவசியம்.

இன்னும் ஒரு பேராசிரியர் பல அவமானங்களுக்கு உள்ளாகினார். அவர் காலை வந்து தன் பையை தன் இருக்கையில் வைத்து விட்டு வெளியில் சென்றதும் சிலர் அறையை பூட்டியிட்டு அவரை 2 மணி நேரம் வெளியில் காத்து  நிற்க வைத்தனர்.  அப்பேராசிரியர் படமுடன் செய்தியும் வந்தது அடுத்த நாள் பத்திரிக்கையில். இப்பேராசிரியர் ஆங்கிலத்துறையிலே ஆங்கிலத்தை மிகவும் எளிதாக கற்று கொடுக்க வல்லவர்.  இவர் வகுப்பில் ஒரு பருவம் இருந்துள்ளேன் என்பதால் இவரின் வேலையின் மேலுள்ள ஈடுபாடு சுறுசுறுப்பை கண்டுள்ளோம்.    பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே ஏதோ லண்டனில் இருந்து குடியேறியது போல் நடந்து கொள்ளும் சூழலிலும் மாணவர்கள் மன நிலையை புரிந்து எளிமையாக பாடம் எடுப்பவர்.  ஆனால் பல்கலைகழக ஆட்சிக்குழு இவரை போன்ற  கல்வி கற்று கொடுக்கும் திறைமையான பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவிகளை கொடுத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நேரத்தை திருடி விடுகின்றனர்.  இந்த பேராசிரியரோ முதுகலைப்பட்டம் தங்க பதக்கத்துடன் வென்றவர் என்று மட்டுமல்ல  முனைவர் பட்டத்தில் உலக அளவிலுள்ள தரவரிசையில் இடம் பிடித்து தேர்வாகியவர் எபதும் கூடுதல் தகவல்.  ஆனால் பதவி போட்டியில் மாட்டி இவர்களின் வாழ்கை மட்டுமல்ல இவரால் சிறப்பாக கல்வி கற்க கூடிய பல மாணவர்களின் உரிமையும் பறிக்கப்படுகின்றது. தேற்வில் ஜெயித்தவர்களால் வாழ்க்கை என்று வரும் போது சிறப்பாக  முன்மாதிரியாக வர இயலவில்லை என்பது நம் சமூக சீரழிவா, கல்வி நிலைகளில் இழிவு நிலையா அல்லது தனி மனித சறுக்கலா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஊடகவும் தீர விசாரித்து கல்வி செய்தியை தர முன் வரவேண்டும். கல்வி சம்பந்தமாக பொதுவான மக்கள் துன்புறும்  பல பிரச்சைகள் ஊடகம் வாயிலாக வெளி வராது சில பிரச்சனைகள் மட்டும் வெளிவருவதில் அரசில் உள்ளது என்று தான் கவலையாக உள்ளது  இச்செய்திகளால் இந்த பல்கலைகழகங்களில் பயிலும் பயின்ற  பெரும் வாரியான படித்த மக்களை வெட்க கேட்டுக்குக்கு மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர்  என்று கல்வி நிலையங்கள் புரிந்து கொண்டால் சரி! சாமியார் மடங்களுக்கு கோடிகள் புரண்ட போது கேடிகள் ஆகி விட்டது போல் கல்வி, வியாபாரம் ஆனதால் வீழ்ந்துள்ளதை வருத்தத்துடன் நாம் கண்கூடா காண்கின்றோம்!

8 May 2012

மாணவர்கள்- குரங்கு கையில் கிடைத்த பூமாலை!


10 ஆம் வகுப்பு தேற்வுத் தாள் திருத்த  பழனி தேற்வு மையத்திற்க்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள், பூட்டியிட்ட நுழைவு வாசலை கண்டதும் ஆர்பாட்டம் செய்துள்ளனர்.   நேரத்திற்க்கு வகுப்பிற்க்கு வராத மாணவர்களுக்கு விதவிதமான தண்டனை கொடுத்து மகிழும் ஆசிரியர்கள் தங்களுக்கு தண்டனை கிடைத்த போது தாங்கி கொள்ள இயலவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  இருப்பினும் ஆசிரியர்கள் தங்கள் மன சாட்சிக்கு எந்த விதம் மதிப்பு கொடுக்கின்றனர் என்று புரிய வைக்கின்றனர். 

அரசு பள்ளியில் நேரத்திற்க்கு வரும் ஆசிரியரை காண்பதே அரிது என்றாகி விட்டது. வந்ததும் இவர்களுக்கு என்றே திறந்து வைத்துள்ள திண்-பண்ட கடையை நோக்கி படை எடுத்து விடுவார்கள்.  வடை காப்பி என கடையில் பேசி பேசி சாப்பிட்டு முடிக்கவே பெரும் வாரியான நேரம் விரையப்படுத்துகின்றனர். ஊதியம் வாங்கும் அளவிற்க்கு வேலையில் முனைப்புடன் ஊக்கத்துடன் செயல் படுகின்றார்களா என்றால் அது கேள்விக் குறி மட்டுமே. சமீபத்தில் ஒரு ஆசிரியர் என்னிடம் கூறினார்  75 % ஆசிரியர்கள் தெம்மாடிகளும் புறம்போக்குகளுமாக தான் உள்ளனர் என்று. இதை கேட்டவுடன் எந்த ஆசிரியரும்; அரசியல்வாதிகள் பாபா ராம்தேவிடம் கோபம் கொண்டது போல் என்னை திட்ட வேண்டாம்.  இது உண்மையும் தான்!

சமீபத்தில் ஒரு அரசு பள்ளிக்கு சமீபம் நிற்க வேண்டிய சூழல். காலை 10 மணி ஆகிய போது ஒவ்வொரு ஆசிரியையாக கணவர் வாகனத்தில் வந்த அரக்க பறக்க வந்து இறங்குகின்றனர்.  தாமதித்து தான் வந்தது வந்தாகி விட்டது என்றால் கையிலுள்ள தூக்கு சட்டி , தோள் பையை கீழை வைக்க மறந்து கதைத்து கொண்டிருக்கின்றனர்!  எப்போது  வகுப்பறைக்கு சென்றனர் என்று எனக்கு தெரியவில்லை என் புலனாய்வை முடித்து நான் செல்லும் இடத்திற்க்கு நேரத்திற்க்கு செல்ல வேண்டியதாயிற்று.
போட்டி பொறாமைக்கு புகலிடம் என்றால் அது ஆசிரியர் சமூகமே என்றால் மிகை அல்ல. உடுத்தும் உடையிலிருந்து கிடைக்கும் பதவிக்கு வரை கழுத்தறுக்கும் போட்டி நடந்து கொண்டே இருக்கும்.  கல்லூரி ஆசிரியர்கள் எப்படியோ  கெட்ட வார்த்தையில் மாணவர்களை திட்டுவதில் பள்ளி ஆசியர்கள் போலிஸையும் முந்தி விடுவர்.  இவர்கள் பேச்சுக்கும் நடை முறை வாழ்கையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருப்பதாகவே இல்லை.  ஆசிரியர்களுக்கு தாங்கள் எழுத வேண்டிய தகுதி தேற்வு செய்தியை கூட தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தெரியாது நுட்பமாக மறைத்து விடுவார்கள்.  புதியதாக தெரிந்து கொள்ளும் ஆசை அற்று; அரைகல் ஆட்டுகல் போல் வாழ்கின்றனர் என்றால் அது ஆசிரியர் பெருமக்கள் மட்டுமே ஆகும். அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது என்றால் தங்கள் சொந்த பிள்ளைகள் சாதனைகள் மட்டுமாகவே இருக்கும். ஆசிரியர்கள் சில கலை நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்வதே கண்டுள்ளேன்.  அப்படியே இருந்த இடத்தில் இருந்து தூங்குவார்கள். அடுத்தவர் சொல்லும் அறிவுரையை கேட்க பொறுமை, மனம் இருப்பதில்லை; ஆனால் தங்கள் மாணவர்கள் தான் சொல்வதை கேட்க வேண்டும் என பேராவல் கொள்வதை காணலாம்.

இந்த ஆசிரியர்கள் திருந்த போவதே இல்லையா என்றால், மாணவர் சமுதாயத்தையே தங்கள் செயல்பாடுகளால் கெடுத்து கொண்டு  தான் இருக்கின்றனர்.  மாணவர்களுடன் மது அருந்தும் ஆசிரியர்கள் பிடித்தவர்களுக்கு மதிப்பெண் இடுவது பிடிக்காதவர்களை பள்ளிக்கே வரவிடாது செய்வதில் இருந்து  இவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை எற்று ஆகி விட்டது.  தற்கால மாணவர்களுக்கு நல்ல வழி காட்டுதல் இல்லை என்பது பெரும் குறையே. உண்மையான ஆக்கபூர்வமான எண்ணங்களுடன் ஆசிரியர் பணியை நோக்குபவர்கள் மிகவும் குறைவாகி விட்டனர்.
ஒழிங்கீனமாக தாமதித்து வந்து விட்டு பேப்பர் திருத்த எங்களுக்கு நல்ல மன நிலை இல்லை, தண்ணீர் இல்லை இப்படி பல குற்ற சாட்டுகள் பொழிபவர்களால் தன் வகுப்பறைக்கு தாமதித்து வரும் மாணவனே எப்படி கண்டிக்க இயலும்? 10 ஆம் வகுப்பு என்று தேவைக்கு அதிகமான பயம் காட்டி உளைவியலாக பயம்முறுத்தி படிக்க வைத்து தேற்க்கு அனுப்பும் நம் குழந்தைகளின் தேற்வு தாளை திருத்திகின்றேன் என்று  எத்தனை மாணவர்கள் வாழ்கையை பாழ்கிணறுகளில் தள்ளுகின்றார்கள் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆசிரியர் தேற்வுகள் பணம் ஆள்பலம் பேசுவது போல் இவர்கள் தனி தன்மை, தகுதி கணக்கில் எடுப்பதில்லை.  பல ஆசிரியர்கள் சமூக அக்கரை உள்ளவர்களோ பன்பாக பேச தெரிந்தவர்களோ மாணவர்களை சிந்திக்க தூண்டுபவர்களோ அல்ல.  குறைந்த பட்சம் மனித நலம் பேனுபவர்கள் மனித நலம் விரும்புவர்கள் கூட இல்லை என்பதே மிகவும் வருந்த தக்க நிலை! கடந்த ஆட்சியில் சீனியோரிட்டி பிரகாரம் எடுக்கப் பட்ட பல நபர்கள் ரிட்டயர்மென்று வயதை எட்டியவர்கள்.  இப்படியாக அரசியல் ஞானத்தையும் ஆள நினைக்க, வரும் தலைமுறை குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக தான் இருக்க போகின்றது.


  

2 May 2012

"நண்பன்" திரைப்படம்!

நாம் படித்த, வேலை செய்யும் பள்ளி, கல்லூரி, பல்கலைகழங்கள் மேல்  உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு நமக்கு எப்போதும் உண்டு. பயணங்களில் நாம் செல்லும்  போது நாம் படித்த பள்ளி கல்லூரியை ஒரு முறையேனும் திரும்பி பார்க்காது இருப்பது இல்லை, பெருமையாக மற்றவர்களிடம் சொல்லுவது மட்டுமல்ல நமக்கு ஒரு மதிப்பு தரக்கூடியது. நம் குடும்ப உறவினர்கள் போல் நம் சொந்த வீடு போல் நம் நண்பர்கள் போல் நாம் படித்த கல்வி நிலையங்களுடன் ஒரு அழியாத பந்தம் நம்மை ஆட்கொள்கின்றது. 
ஆனால் சமீபத்திய பத்திரிக்கை செய்தி வழியாக தினம் ஒரு கெட்ட  செய்தி என கல்வி நிலையங்கள் பற்றி  வருகின்றது. பாலியல் துன்புறவு என மனோன்மணியம் பல்கலைகழகம் வந்தால், மாணவர் தற்கொலை என அண்ணா பல்கலைகழகம் இடம் பிடித்துள்ளது. இன்று இது எல்லாம் போதாது என்று வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் மேல் ஊழல் புகார்!

இது எல்லாம் பொய் புகார் என்றால் ஏன் மெத்தை படித்தவர்களால் சட்ட உதவி கொண்டு நேர் கொள்ள இயலவில்லை.   படித்தவர்கள் எல்லா வித அடிமைத்தனத்தில் இருந்தும் கல்வியால்  விடுதலை பெற்றவர்கள் என்றால் சமீப காலமாக பதவிக்கும் பணத்திற்க்கும் அடிபணிந்து கிடப்பதாலே இந்த விதமான சிக்கலுகளில் உள்ளாகுகின்றனர் என்றே தோன்றுகின்றது.  துணைவேந்தர் தேர்வில் இருந்து பட்டம் கொடுக்கும் விழா என எல்லா நிலைகளிலும் அரசியல் விளையாடுவதால்  எளிதாக எல்லா சிக்கலுகளிலும் மாட்டிகொள்கின்றனர்.  சமூகத்திற்க்கு எது சரிஅல்லது தவறு என்று எடுத்து கூற வேண்டிய பேராசிரிய பெருமக்கள் ஊழலில் முட்டி மோதி அல்லாடுவது கண்டு வேதனையும் வெட்கமாகவும் உள்ளது.  அடிப்படை தகுதியான நேர்மை கூட கல்வி  தரவில்லை என்றால் படித்து பதவியில் வந்து என்ன பிரயோசனம்?

மனோன்மணியம் பல்கலைகழகத்தில் சமீபத்தில் பாலியல் வழக்கில் ஒரு பேராசிரியரை உடன் வெளியேற்ற வேண்டும் என மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. இதன் உண்மை தன்மை பற்றி பின் வந்த செய்திகளில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் மட்டும் தவறு என்று எடுக்காது பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் முதுகலைபட்டம் பெறும் மாணவர்கள் என்பதால் இவர்கள் பங்கும் எடுத்து கொள்ள வேண்டி வருகின்றது.  மதிபெண் பெறவேண்டும் என்ற நோக்குடன் பேராசிரியர்களிடம்; உடன் படிக்கும் மாணவர்களை கோள் மூட்டி ஒட்டி உறவாடும் மாணவர்களை காண இயலும்.  இந்த விடயங்களில் மாணவர்களுக்கும் தன்மானம் தன்நம்பிக்கை இருப்பது அவசியம்.

இன்னும் ஒரு பேராசிரியர் பல அவமானங்களுக்கு உள்ளாகினார். அவர் காலை வந்து தன் பையை தன் இருக்கையில் வைத்து விட்டு வெளியில் சென்றதும் சிலர் அறையை பூட்டியிட்டு அவரை 2 மணி நேரம் வெளியில் காத்து  நிற்க வைத்தனர்.  அப்பேராசிரியர் படமுடன் செய்தியும் வந்தது அடுத்த நாள் பத்திரிக்கையில். இப்பேராசிரியர் ஆங்கிலத்துறையிலே ஆங்கிலத்தை மிகவும் எளிதாக கற்று கொடுக்க வல்லவர். இவர் வகுப்பில் ஒரு பருவம் இருந்துள்ளேன் என்பதால் இவரின் வேலையின் மேலுள்ள ஈடுபாடு சுறுசுறுப்பை கண்டுள்ளோம்.    பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே ஏதோ லண்டனில் இருந்து குடியேறியது போல் நடந்து கொள்ளும் சூழலிலும் மாணவர்கள் மன நிலையை புரிந்து துன்புறுத்தாது பாடம் எடுப்பவர்.  ஆனால் பல்கலைகழக ஆட்சிக்குழு இவரை போன்ற  கல்வி கற்று கொடுக்கும் திறைமையான பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவிகளை கொடுத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நேரத்தை திருடி விடுகின்றனர்.  இந்த பேராசிரியரோ முதுகலைப்பட்டம் தங்க பதக்கத்துடன் வெற்றவர் என்று மட்டுமலல  முனைவர் பட்டத்தில் உலக அளவிலுள்ள தரவரிசையில் இடம் பிடித்து தேர்வாகியவர்.  ஆனால் பதவி போட்டியில் மாட்டி இவர்களின் வாழ்கை மட்டுமல்ல இவரால் சிறப்பாக கல்வி கற்க கூடிய பல மாணவர்களின் உரிமையும் பறிக்கப்படுகின்றது. தேற்வில் ஜெயித்தவர்களால் வாழ்க்கை என்று வரும் போது சிறப்பாக  முன்மாதிரியாக வர இயலவில்லை என்பது நம் சமூக சீரழிவா, கல்வி நிலைகளில் இழிவு நிலையா அல்லது தனி மனித சறுக்கலா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஊடகவும் தீர விசாரித்து கல்வி செய்தியை தர முன் வரவேண்டும். கல்வி சம்பந்தமாக பொதுவான மக்கள் துன்புறும்  பல பிரச்சைகள் ஊடகம் வாயிலாக வெளி வராது சில பிரச்சனைகள் மட்டும் வெளிவருவதில் அரசில் உள்ளது என்று தான் கவலையாக உள்ளது  ஒரு பெரும் வாரியான படித்த மக்களை வெட்கத்திற்க்கு உள்ளாக்குகின்றனர் இச்செய்திகளால் என்று கல்வி நிலையங்கள் புரிந்து கொண்டால் சரி. சாமியார் மடங்களுக்கு கோடிகள் புரண் போது என்ன வீழ்சி அடைந்ததோ அதே மாபெரும் வீழ்சி கல்வி வியாபாரம் ஆன போது நாமும் கண்கூடா காண்கின்றோம்!

30 Apr 2012

மே- தினம்!

நாளை உலக தொழிலாளர்களால் மே-தினம் கொண்டாடப்படுகின்றது. உலக தலைவர்கள், பாட்டாளி, கம்யூனிஸ்டு தலைவர்கள், அரசியல் கட்சிகள் என வாழ்த்து மழையாக தான் இருக்கும்!. ஆனால் உண்மையில் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது கவனிக்கதக்கது.


ரஷியாவில் சார் மன்னர்களில் கொடுமைக்கு விடிவாக தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடுதலையான நாளை, மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அதை உழைப்பாளிகள் உள்ள எல்லா நாட்டு மக்களின் விடுதலையாக எண்ணி கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் 80% தொழிலாளர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவே உள்ளனர். தொழிலாளிகளுக்கு என குரல் கொடுப்பவர்களும் இந்த 20% தொழிலாளர்களை மட்டுமே தொழிலாளர்களாக எண்ணி போராடி வருகின்றனர்.

1957 ல்  தொழிலாளர் நல அமைச்சரகம், இந்தியாவில் மேற்கொள்ளும் 45 தொழில்களை மட்டும் அட்டவணைப்படுத்தி ஒரு ஊதியம் நிர்ணயித்தது .  ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான 2700 கலோரி உணவு, உடுத்த 72 கஜம் துணி, வசிக்கும் வீட்டிற்கான வாடகை செலவை உட்ப்படுத்தி ஒரு மனிதனுக்கான  தினம் கூலியாக  நிர்ணயம் செய்தது. 1997 ல்  குழந்தைகள் கல்வி கட்டணம், மருத்துவ செலவையும் சேர்த்து 35 ரூபா ஆகவும், 2011 ல்  115ரூ-222.35 ரூபாய் என உயர்த்தியது. இவை அனைத்தும் நிரந்தர அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரித்தானது மட்டுமே. ஆனால் இந்த அமைப்பில் இல்லாத நிரந்தரமற்ற வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை யாரும்  கணக்கில் கொள்ளாத  தள்ளப்பட்டுள்ளது.


அரசியல் அமைப்பு சட்டம் 14, 19, 21, 23, 24 (பாகம் 111) கொடுக்கப்பட்டுள்ள எந்த சட்ட பாதுகாப்பும் பெறாது பெரும்வாரியான தொழிலாளிகள் உள்ளனர். ஒரே வேலைக்கு ஒரே ஊதியம், தரமான வாழ்க்கை, வலுக்கட்டாயமாக வேலை வாங்காதிருப்பல், என எல்லா சட்டவும் சட்ட புத்தகத்தின் பக்கங்கள் தவிற உழைப்பவர்கள் வாழ்க்கையை தொட்டு பார்க்காத வெத்து சட்டங்கள் ஆகவே நிலை கொள்கின்றது. 


தமிழகத்திலுள்ள 1685 நூல் தொழில்சாலைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை எடுத்து கொண்டால் 80% பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர்.  இவர்கள் வேலையில் சேர தரகர்களுகு 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. இவர்களுக்கு என உருவாக்கப்பட்ட சுமங்கலி திட்டங்களிலும் பெண்கள் நலனை விட ஊழலை மலிந்து கிடக்கின்றது என்று நாம் அறிந்ததே. 

வரும் வைப்பு கால நிதி, பணி நிரந்தரம், தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பாதுகாப்பு என எந்த தொழிலாளி நல திட்டங்களும் இவர்களுக்கு வாய்ப்பதில்லை. தொழில் இடங்களில் சுகாதாரமான குடி தண்ணீர், உணவு, கழிவறை வசதி அற்று தினம் 12 மணிநேரத்திற்க்கு மேல் வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

குழந்தைகள் நிலை இன்னும் பரிதாபத்திற்க்குறியது. 11.28 மிலியன் குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர். வேலை இடத்தில் 21 % பேர் பாலியலாக துன்புறுகின்றனர், 50 % பேர் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்ய தள்ளபடுகின்றனர் என கணக்குகள் தெளிவாக்குகின்றது.

ஊர்விட்டு ஊர்  வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் பல வித அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். சமூக விரோதிகளால் மனைவி குழந்தைகளை இழக்கின்றனர். குறைந்த பட்சம் மனிதராக கூட மதிக்காது அவர்கள் வாழ்க்கை மிகவும் வருந்த தக்க நிலையில் உள்ளது.

நிரந்தர தொழிலாளர்களும் தங்கள் நலனில் அக்கறை எடுத்து கொள்வது போல் தங்கள் சமூகமான ஒப்பந்த தொழிலாளர்களை பற்றி அக்கரை எடுத்து கொள்வதில்லை. தொழில்சாலை உணவகங்களில் கூட நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் குறைந்த விலை உணவு கிடைக்காது பட்டிணியாகவே வேலை செய்கின்றனர் ஒப்பந்த தொழிலாளர்கள்.
தொழிலாளர்கள் பிரட்சனை என்ற உடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களை பற்றி வரிந்து கட்டி எழுதும் ஊடகவும் பெட்ரோல் பங்கில், கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களே வசதியாக மறந்து விடுகின்றனர். கொத்தனரார் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சுமடு தூக்கும் தொழிலாளரகள் என இவர்கள் துயரை அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் விடை காணாது இன்றும்  மோசமான நிலையிலே உள்ளனர் என்பதே கசக்கும் உணமை.

இவர்கள் கல்வியறிவு அற்றிருப்பதாலே இவ்வகையான வாழ்க்கை சூழலில் மாட்டி கொண்டார்கள் என்றால் படித்த மனிதர்களும் உலகபொருளாதார சந்தையில் வெள்ளை காலர் அணிந்த ஏமாற்றப்படும் தொழிலாளர் சமூகமாகவே வளர்ந்து வருகின்றது. பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்களாகவே பணியில் அமர்ந்த்துகின்றனர்.  வேலை நிரந்தரம் அல்ல என்று மட்டுமல்ல  உற்பத்தி பொருளாகவே மட்டும் கண் நோக்கி மனிதர்கள் என்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகின்றது. நூல் ஆலை பெண்களுக்கு என்பது போல் இளம் பெண்கள் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.  கிடைக்கும் ஊதியத்திற்க்கும் ஒப்பந்தம் ஆகும் தொகைக்கும் வேற்பட்டதாகவே உள்ளது.
 

 நிலை இப்படியாக,  தங்கள் உரிமையை கூட எண்ண நேரமில்லாது மனிதன் எதையோ தேடி விரட்டப்பட்டு கொண்டிருக்கின்றான். ஆனால் இவர்கள் பெயரை சொல்லி சில கட்சிகள், இயக்கங்கள் பிழைத்து கொண்டும் இருக்கின்றது. இப்படியாக மே தினம் என்பது பெருமையாக நினைத்து பார்க்க இல்லாத, மக்களாட்சியில் ஒரு சடங்காக மாறி கொண்டிருக்கின்றது.

24 Apr 2012

புத்தக கண்காட்சி!

நெல்லையில் புத்தக கண்காட்சி என பத்திரிக்கையில் கண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகின்றது என்றதும் சென்று காண வசதி என எண்ணி கொண்டேன். நேற்று எங்கள் இளைய மகனுடன் சென்றால் புத்தக் கண்காட்சி என்ற விளம்பரமோ, வழிகாட்டும் படியான் ஒரு போஸ்டரோ காண இயலாது திரும்பி வர வேண்டியதாகி போனது.


என் மகன் தான் புலம்பி கொண்டே வந்தான். அரசு  வளாகம் சுத்தமாகவே இல்லை, நான் அரசு பணிக்கு போகப்போவது இல்லை தனியார் அலுவலங்கள் தான் சுத்தமாக உள்ளது..... உங்களுடன் வந்ததால் நடக்க வேண்டியாதாகி போனது. எனக்கு பசிக்கின்றது... என அவனுடைய குற்றப்படுத்தலுகள் நீண்டு கொண்டே போனது. நடந்து வரும் வழியில் உணவகம் கண்டதும் மகிழ்ச்சியுடன் "அம்மா எனக்கு காப்பி வேண்டும்" என அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டான். வேறு வழி இல்லை என்பதால் நானும் உணவகம் சென்று ஒரு காப்பிக்கான 8 ரூபாய் டோக்கன் பெற்று வாங்கி ஆற்றி கொடுத்தேன். நீங்களும் குடியுங்கள் என பாசமழை பொழிந்து  கொண்டிருந்தான்.  கடைசி மடக்கு மட்டும் வாங்கி தொண்டையை நனைத்து கொண்டு என்னவர் வந்ததும் வீட்டுக்கு பயணம் ஆனோம்.



திருநெல்வேலியில் எல்லா விடயங்களிலும் இப்படி தான். பிரமாண்டமாக விளம்பரப்படுத்தியிருப்பார்கள் ஆனால் நாம் எதிர்பார்த்து செல்லும் நேர்த்தி கண்டதில்லை. கடந்த வாரம் இது போன்றே அரசு அருட்காட்சியகத்தில்  ஓவிய கண்காட்சி என்று செய்தித்தாள் வழியாக தகவல் கொடுத்திருந்தனர். நெல்லையின் புகழ்பெற்ற மறைந்த ஓவியர் இசக்கியின் படம் கூட காட்சிக்கு வைக்கப் படவில்லை. 5 ஓவியர்களின் படங்களை அடுக்கி வைத்து கொண்டு ஓவிய கண்காட்சி நடத்தியதாக் ஆறுதல் பட்டு கொள்கின்றனர். உண்மையான உழைப்பு ஆத்மார்த்தமான செயலாக்கம் என்பதை காண்பது அரிதிலும் அரிது என எங்கள் ஊரில் ஆகி விட்டது.  ஒரு இலக்கிய கூட்டம் 6 மணிக்கு என்றால் 7.30 க்கு தான் வருவார்கள்,  இப்படியாக அல்வா ஊரில் எல்லா நிகழ்வுகளும் அல்வா கொடுக்கும் நிகழ்வாகவே மாறுகின்றது.

ஒரு பக்கம் கோபமாக இருந்தது! புத்தக கண்காட்சி என்று ஆசையாக சென்றும் புத்தகம் வாங்க இயலவில்லையே என்று. இன்றைய செய்தித்தாளில் பிஎஸ்னல் வளாகத்தில் நடப்பதாக செய்தி வந்திருந்தது. இன்றும் தவற விடக்கூடாது என எண்ணி காலையில் சென்று விட்டோம். அலுவலகம் வாசல் சமீபம் காணும் படியாக புத்த்கங்கள் அடுக்கி வைத்திருந்தனர்.

இருவர் மேற்பார்வையில்  4 பெஞ்சுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் விருது கிடைத்த புத்த்கங்கள் ஒன்றும் காணக் கிடைக்கவில்லை. சிறப்பாக வழக்கறிஞர் செல்வ ராஜின் "தோல்" என்ற புத்தகம் தேடிய போது கிடைக்கவில்லை.

தேடியது கிடைக்காவிடிலும் என் ஆசிரியை பணிக்கு உதவும் விதமாக திரைப்படம் தொலைகாட்சி பற்றிய புத்தகம் வாங்கிய போது  ச. மாடசாமியின் 'எனக்குரிய இடம் எங்கே? என்ற புத்தகம் கண்ணில் பட்டது. சிறு பள்ளி குழந்தையின் படம் அட்டைப்படமாக கண்ட போது குழைந்தைகள் பற்றி சொல்லியிருப்பாரோ என எண்ணி கொண்டு  ஆர்வமாக வாங்கி வந்தேன்.

ஒரு கல்லூரி ஆசிரியரின் மாணவர்களுடன் உள்ள  அனுபவக்குறிப்பாக இருந்தது. இன்றைய காலம் ஒவ்வொரு ஆசிரியரும் வாசித்து தங்கள் வகுப்பறையில் செயல் ஆற்ற வேண்டிய பல சிறந்த வழி முறைகள் பகிர்ந்திருந்தார். ஆசிரியரின் பார்வை என்று மட்டுமல்லாது ஒரு மாணவ்னின் கண்ணோட்டத்திலும் ஆசிரியப்பணியின் நோக்கம் தாக்கம் அதன் சிறப்பு சவால்களை பற்றி சுவாரசியமாக விவரித்திருந்தார். ஆசிரியர்கள் களைய வேண்டிய தலைக்கணம், அடக்குமுறை பற்றி ஆசிரியர்கள் மனம் நோகாதுவாறு சிறப்பாக எழுதியிருந்தார்.


  தினிப்பதல்ல கல்வி; 
  வசப்படுத்துவது அல்ல கல்வி.
  பங்கேற்க வைப்பது கல்வி.
  உருவாக்குவது கல்வி.


128 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் "ஒருஆசிரியனுக்கு நூறு முகம் வேண்டும். வகுப்பறைக்கு நூற்றுக்கணக்காய்க் கண்கள் வேண்டும். எதற்க்கு? ஒவ்வொரு மாணவனையையும் பார்ப்பதற்க்கு! கண்டுபிடிப்பதற்க்கும்! இப்படியாக பல கருத்துக்கள் குவிந்து கிடைக்கின்றன.ஒரு சிறந்த புத்தகம் கிட்டியுள்ளது என்ற மனநிறைவில் இன்றைய அக்ஷ்ய திருதி கொண்டாடி விட்டேன்!

21 Apr 2012

சுற்றுலாத் துறையே விழித்தெழு!

இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழகம் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக விளங்குகின்றது. பல்லாயிரம் வருடம் பழமையுள்ள தமிழகத்தை சுற்றி பார்க்க வருடத்திற்க்கு  5கோடி 62 லட்சத்திற்க்கும் மேலான உள் நாட்டினரும்,   50 லட்சத்திற்க்கு மேலான வெளி நாட்டினரும் வந்து செல்கின்றனர்.

இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலையாகி உலகை கண்டு ரசிக்கவும் நம்மையும் கடந்து மற்றவர்களின் வாழ்க்கை சூழலை நேரில் கண்டு உணரவும் சுற்றலா உதவுகின்றது.  வேலை வேலை என, ஒரே வீட்டில் வசித்தாலும் நிம்மதியாக சந்தித்து ஒன்றாக பேசி மகிழ  இயலாத சூழலில் சுற்றலா ஒன்று மட்டுமே குடும்பமாக மகிழ்ச்சியாக பயணிக்கும் வாய்ப்பை தருகின்றது.  மன அழுத்தம்  மற்றும் வெறுமையான  சூழலில் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி தருவதாக சுற்றுலா அமைகின்றது என்றால் மிகையல்ல. வெளிநாட்டினர் வருடத்திற்க்கு ஒரு மாதம் சுற்றுலா என செலவிடுவது போல் நம் சூழலில் சாத்தியம் இல்லாவிடிலும் சுற்றுலா எல்லா மக்களையும் கவரும் ஒரு பொழுது போக்காக மாறி வருகின்றது.

கடல், காடு, மலை, அருவிகள்  என எல்லா நிலப்பகுதிகளும் கொண்ட அழகிய பகுதி நம் தமிழகம். ஆனால்  பயணம் என புறப்படும் போது நாம் எதிர் கொள்ளும் பிரட்சனைகள் எண்ணில் அடங்காதவை! பராமரிக்காத நிலையிலும் சுத்தம் சுகாதாரம் அற்ற சூழலில் பொறுப்பற்ற அதிகாரிகளால் சுற்றுலா பயணம் நம்மை இன்பத்திற்க்கு பதில் துன்பத்திற்க்கு இட்டு செல்கின்றது.

தரமான உணவு நியாமான விலையில் கிடைப்பதில்லை, வழிப்பயணத்தில் சுகாதாரமான கழிப்பிட வசதி கிடையாது, முகம் கழுவ கூட தண்ணீர் கிடைப்பது இல்லை. இப்படியாக இல்லை இல்லை என்ற பல இல்லைகளை எதிர்கொள்ள வேண்டி வருகின்றது.   நாம் பயணிக்கும் வாகனம் பழுதானால் சரி செய்ய நம்மை வழி நடுத்த தகுந்த மேலான்மை இல்லாத நிலையிலே சுற்றுலாத்துறை தன் சேவையை வழங்குகின்றது. அரசு விடுமுறை நாட்கள் நாம் பயணம் மேற்கொள்ளும் போது பல சுற்றுலாத்துறை அதிகாரிகள் அன்று விடுமுறை என அறிவிப்பதால் பல பொழுதும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.


சிறப்பாக குற்றாலம் பாபநாசம் போன்ற நீர்நிலைகள் பாப-நோய் நிவாரணி என்பது போய் நோய்களை சுமந்து வரும் இடமாக காட்சி அளிக்கின்றது.  குளிப்பதற்க்கு என சோப்பு ஷாம்பு, எண்ணைக் குளியல் என இயற்கையை மாசுப்படுத்தும் சூழலே எங்கும் நிறைந்துள்ளது.. பலபொழுதும் மகிழ்ச்சியாக துவங்கும் சுற்றலா பயணம் சோர்வுடனே முடிகின்றதை காணலாம். 

பேருந்து நிலையங்கள் சாலை ஓரங்கள் எங்கும் சுகாதாரமற்று நாற்றம் கொண்டே காட்சி அளிக்கின்றது.  ஒருபுறம் சுற்றுலா தலங்களின் அருகிலுள்ள உணவகங்கள் வியாரக்கடைகள் அசுத்தப்படுத்தலுக்கு  காரணம் ஆகின்றது  என்றாலும்; சுற்றலா தலங்களுக்கு வரும் பல குடும்பங்கள் இயற்கையின் அழகை ரசிப்பதை விடுத்து உண்ணுவதற்க்கே பிறந்தது போல் தங்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை உண்ட பின்பு எங்கும் வீசி விட்டு செல்கின்றனர்.

சுற்றலா தலங்களுக்கு வருபவர்கள் அங்கு வரும் மற்று மனிதர்களின் உணர்வுகளை எண்ணி பார்க்காது உல்லாச பானியங்கள் அருந்திய நிலையில் கலங்கிய கண்களுடன்  மற்று மனிதர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்குபடியாக  நடமாடுகின்றனர்.  பெண்களும்   தன் நிலை மறைந்து திரைப்படங்களில் காணபது போன்று பொது இடங்களில் ஆடி பாடி உண்மையான பயண மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவிக்கின்றனர்.

சுற்றுலா என்பது ஒரு பயண அனுபவமாக நிகழ வேண்டும் என்றால் ஒருவர் உரிமையை மீறாது அமைதியாக மகிழ்ச்சியான அனுபவங்களை உணர முன் வர வேண்டும். சுற்றுலாத் துறையும் வெறும் பணம் ஈட்டும் துறையாக காணாது தன் மக்கள் மன மகிழ்ச்சிக்கும் உதவும் விதம் சுற்றுலா தலங்களை சிறப்பாக் பாதுகாக்கவும் முன் வர வேண்டும்.


கேரளா அரசின் மேற்பார்வையிலுள்ள பத்மநாப அரண்மனை பாதுகாப்பது போல் நம் சுற்றுலாத்துறை செயல் ஆற்றுகின்றதா என்றால் சந்தேகமே. கோவளம், வேளி போன்ற உலகத்தரம் வாய்ந்த கடலோர பிரதேசங்களை விட அழகான மணப்பாடு, உவரி போன்ற நம்மூர் கடலோர பிரதேசங்கள் கவனிப்பாரற்று கிடைப்பதை அரசு கண்டு உணர வேண்டும்.

அதே போல் அரண்மனைகள், தமிழர்களின் முதல் குடியிருப்பான ஆதிச்சநல்லூர், பாஞ்சாலக்குறிச்சி போன்ற சிறப்பு மிக்க வரலாற்று தலங்கள் நிர்வாக திறன் அற்று கிடப்பதும் வருத்தமே அளிக்கின்றது.  பக்தி சுற்றுலாதலங்களும் அந்த அந்த மத தலைமையின் கண்காணிப்புடன் காத்திரமாக பேண முன் வர வேண்டும். உலகச்சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி, திருச்செந்தூர் முருகன் கோயில், கிருஷ்ணன் கோயில் துவங்கி, மக்களிடம் பெறும் காணிக்கைக்கு தரும் பிரதானம் பக்தர்களின் நலனுக்கு  தர தவறி விடுகின்றனர் என்பதே நிதர்சமான உண்மை. மத நம்பிக்கையில் பெருமை கொள்பவர்கள் தங்கள் மதநம்பிக்கை சார்ந்த கோயில் குளங்கள், சுற்றுப்புறம் தூய்மையாக பாதுகாக்க தவறுகின்றனர்.

எழுத்தாளரும், மனித நேயரும் சிந்தனையாளரும் சிறந்த பேச்சாளருமான ஆட்சியாளர் இறை அன்புவின் தலைமையில் நிலைகொள்ளும் சுற்றுலாத்துறை அதன் முழுமையான அடையாளத்தை பெறவில்லையே என்பது இன்னும் நமக்கு வருத்தத்தை தான் தருகின்றது.   உலக அளவில் நம் கலாச்சாரம், பண்பு, உயர் வரலாற்றுக்கு சாற்றாக அமைய வேண்டிய  சுற்றலா தலங்கள்,  உலகம்  நம்மை தூற்றும் நிலைக்கு தள்ளாது இருக்க வேண்டும் என்பதே நம் ஆவல்!