7 Sept 2025

வகுப்பறை dirty அரசியல்!

 கல்விக்கூட சூழலில் ஆசிரியர்களுக்குள் பதவி அதிகாரத்திற்கான போட்டி அரசியலில் மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் இழிய நிலை தொடர்கிறது. .

ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரை எதிர்க்க நேரடியாக எதுவும் செய்ய மாட்டார். வெகிளி மாணவர்களை தூுண்டி விடுவார்கள்.
அம்மாணவர்கள் நமக்கு எதிராக ஒரு மன்றத்தில் புகார் எழுதி கொடுக்க வைப்பார்கள்.
நமது ஜாதியை அம்மாணவர்களுக்கு குறிப்பிட்டு
உசுபேத்தி விடுவார்கள்.
நாம் வகுப்பு எடுக்கும் போது எழுந்து நின்று பாடத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுதி கொடுத்து மாணவர்களை வைத்து கேட்க வைப்பார்கள்.
நாம் ரொம்ப பணிவாக இளித்து பதில் சொல்ல நமது பதவி , வயது, கல்வி அனுமதிக்காது. ஆனால்.கோபத்தில் உரைத்தால் கைபேசியில் ஒலி, காணொளியாக பதிந்து இன்னொரு பேராசிரியருக்கு அனுப்பி விட்டால் அவர் யார் யாரிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டுமோ போய் வேலையை முடித்து விடுவார்கள்.
அல்லது நண்பன் போல இருந்து கொண்டே மாணவர்களுக்கு பணம் கொடுத்து வக்கீலை கொண்டு வந்து கெட்ட வார்த்தை பேச வைப்பார்கள்.
ஆண் ஆசிரியர்கள் என்றால் மாணவிகளை வைத்து பாலியல் ரீதியாக பெண் ஆசிரியர் என்றால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படைய
வைத்ததாக புகார் கொடுக்க வைப்பார்கள்.
மாணவர்கள் ஆசிரியர்கள் சம்பந்தமான பாலியல் வழக்குக்களுக்கு பெருவாரி பின்னில் இருப்பது உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் தான்.
இத்தனையும் மீறி நாம் தப்பித்து போக வேண்டும் என்றால் 75 degree@ க்கு மேல் உயர்அதிகாரி முன் வளைந்து நெளிந்து நிற்க வேண்டும்.
எனக்கு எவ்வளவு முயன்றாலும் 5 degree க்கு மேல் வளைய இயலாது.
ஆனால் பணியிடத்தில் 25 degree வளைந்தால் தான் வேலைையை தக்க
வைக்க இயலும் என்பது காலத்தின் கட்டாயம்.
மறுபடியும் பண்ணையார் அடிமை நிலையை கொண்டு வந்து விட்டனர் கல்வி கூடங்களில்..

மாணவர்களிடம் நான் சொல்வது Media Law, Journalism ,பாடம் எடுக்கும் போது சில கருத்துக்கள் சொல்லி இருப்பேன். அதுவே public figures conspirancy என குற்றத்தில் வந்துள்ளது.
என் உழைப்பை நேர்மையை நீங்கள் பின்பற்றலாம் ஆனால் 25 degree வளைவு என்பது காலத்தின் கட்டாயம்.
நேர்மை உழைப்பு என்பது எல்லாம் நானே என்னை பீற்றி கொள்ளலாம். ஆனால். நடைமுறைக்கு உதவாது.
வேலையிடத்தில் எவனுக்கும் குழி பறிக்காதீர்கள் ஆனால். குழியில் விழவும் செய்யாதீர்கள் .
மேலும் கல்வி கூடத்தில் கற்றது போல சொந்த ஆசிரியரை அவமதிக்க ஜாதி, மதம் , ரீதியாக கற்றுக் கொண்டதை வேலையிடத்தில் பயன்படுத்தாதீர்கள். அது உதவாது.
ஆசிரியர் களம் என்பது ஒரு சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது.
கல்வியாளர் என்ற நிலையில் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய எந்த அறவும் இல்லை. அதுவும் ஒரு வேலை பெறும் சந்தைக்காடாக மாறிவிட்டது.

0 Comments:

Post a Comment