3 Apr 2016

நம் மகன்கள் வேதனை!

பாபா அத்தான் சில எச்சில் கணக்குகளை மனதில் வைப்பதே தவறு. இருப்பினும் நம்மை பெரிதும் சங்கடத்திற்குள்ளாக்கியது உங்களை பண்ணையார் என்று கேலி செய்ய வைத்தது என்பதால் இதை பதியுகின்றேன். மேலும் நீங்கள் இறந்த போது உங்களை பற்றி பேச்சு எழுந்த போது உங்கள் வீட்டிற்கு என நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. எப்போதாவது 500 ரூபாய் தந்துள்ளான் என்றார் உங்கள் அம்மா!?


  உங்கள் அப்பா மருத்துவமனையில் இறந்த பின்பு தான் உங்களுக்கு செய்தி அனுப்பினார் உங்கள் அம்மா! நாம் நாசரேத் வந்தடையும் முன்னே உங்கள் அப்பா  உடலை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டார் உங்கள் தாயார். அன்றைய தினம்  ஜூன் 5  2015. அன்றே உங்கள் மரண தினவும் குறிக்கப்பட்டது என நினைக்கின்றேன். உங்கள் தம்பிக்கு செய்தி அனுப்பியும் அவன் வருகிறான், வரலாம்,வரவில்லை போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருந்தன.  உங்கள் அப்பா இறந்து விட்டார் என்று அறிந்ததும் நீங்கள் செய்த முதல் வேலை ”ஜோஸ் என்னுடன் வருவாயா” என்று என்னிடம் கேட்டு விட்டு பணம் புரட்டி கொண்டிருந்தீர்கள். பல ஆயிரங்கள் கைகளில் சேர்ந்த உடன் நாசரேத் புறப்பட்டோம். உங்க அம்மா சோகத்தில் கதைத்து கொண்டு நின்றார். நீங்க உங்கள் பையில் இருந்து பணத்தையும் காசையும் அள்ளி எறிந்து கொண்டு இருந்தீர்கள். எனக்கோ ஆச்சரியம் அத்தானிடன் எப்படி இவ்வளவு பணம் என்று. இருந்தும் நான் காதில் கூறினேன் பணத்தை கவனமாக கையாளுங்கள்.உங்கள் அம்மா தன் வங்கி கணக்கை திறக்கவே இல்லை. சோகமாக இருப்பது போல் இருந்து கொண்டார்.  நம் இருவரிடமும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. நீங்கள் கடமையில் கண்ணாக இருந்தீர்கள். நான் உங்களுக்கு உதவியாக நின்று கொண்டிருந்தேன். உங்கள் சகோதரன் காலையில் வந்து சேர்ந்ததும் உங்கள் தாயார் மகன்- மருமகளை கட்டி பிடித்து ‘ஆமோஸ் தாத்தா “ போயிட்டாருடா என்று அழுது கொண்டார். ஏழு மணிக்கு அடக்கம். பெட்டியை வீட்டை விட்டு எடுக்கும் முன் சொந்த பந்தங்கள் கேட்கும் படி உங்க அம்மா உங்க அப்பாவின் உதவியாளரை பார்த்து ”சாத்திராக் சார் போயிட்டாருடா, சார் கேட்டது மாதிரியை எல்லாம் செய்து விட்டாய்  நன்றிப்பா என உருகி கொண்டு இருந்தார். எனக்கோ நேற்றைய காலை முதல் இன்று காலை இந்நேரம் வரை நீங்கள் தான் கை திறந்து பணம் கொடுத்து கொண்டிருந்தீர்கள் என உள் நெஞ்சில் குத்தியது.

மூன்றாம் நாள் ஜெபக்கூட்டம். அப்பா விரும்பி சாப்பிடும் ஆட்டு இறச்சி தான் வேண்டும் என்றான் உங்கள் தம்பி. நீங்களும் சரி என்றீர்கள். ஆட்டிறச்சி ஏற்பாடானது. பணத்தை உங்களிடம் இருந்து வாங்கி அடுத்த நாள் பணம் வாங்க வந்த கடைக்காரனிடம் பட்டுவாட மட்டும் செய்து கொண்டான். மாலை நான்  உங்க அம்மாவிடம் இனி மாமா இல்லை. இருக்கும் வரை நாங்கள் ஒன்றும் கேட்டதில்லை. உங்களை நம்பி பணம் உண்டா, எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா என்றதும் நான் என் வீட்டில் தான் இருப்பேன். செலவுக்கு தரவேண்டும் என்றார். உங்கள் சகோதரனோ ஏன் இதை எல்லாம் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டு கொண்டான். அடுத்து செலவு கணக்கை உங்கள் அம்மாவிடம் காண்பித்த போது எழுதி கொடுத்த லிஸ்டை அப்படியே உங்களிடமே கொடுத்தார். உங்க தம்பி வீடு தனக்கு வேண்டும் என்றும் தன் பிறந்தது இறந்த  குழந்தையை புதைத்துள்ளதால்  தனக்கு தான் வீடு என்றான். உங்க அப்பா வாங்கி போட்டிருக்கும் நாலு பிளாட்டு தனக்கு கிடைக்கலாம் என்ற நோக்கில் உங்க அம்மாவிடம் கேட்ட போது அந்த இடம் வாங்கி போட்டதை அப்பா கூறினர்களோ? எனக்கு மருத்துவ செலவுக்கு வேண்டும் என்றார். நீங்க அமைதியாக என் முகத்தை பார்த்தீர்கள். திரும்பி காரில் வரும் போது நான் கூறினேன் விரும்பி தராத சொத்து நிலைக்காது அத்தான் நீங்க அதற்காக சச்சரவுக்கு போக வேண்டாம். நீங்கள் இப்போது செலவழித்த பணத்தின் ஒரு பங்கை மட்டும் தரக்கூறுங்கள் என்றேன். உங்க தம்பி இங்கு இருக்கும் வரை சென்னையில் சென்றதும் அனுப்பி தருகிறேன் என்றவன் சென்னையில் இருந்து கதைக்கும் போது என்னிடம் பணம் இல்லை நான் கொடுக்கவும் தேவை இல்லை என ஒதுங்கி கொண்டான்.





நான் நீங்கள் ஏமாற்றபட்டதாக குற்றம் சாட்டினேன் . நீங்களோ பெற்ற அப்பனுக்கு செய்வது என் கடமை. அவன் செய்கிறானா என்று நான் பார்க்க தேவையில்லை என்றீர்கள்.  மேலும் என் அப்பா என்னை ஒதுக்கி தள்ளினார் இப்போது பார்த்தாயா நான் தான் அடக்கம் செய்துள்ளேன் என்று தற்பெருமையாக சொல்லி கொண்டீர்கள்



ஜாதி சாற்றிதழ் உங்க அம்மா பென்ஷன், வாரிசு சாற்றிதழ் என எல்லாம் நடையாய் நடந்து பெற்று கொடுத்தீர்கள். உங்க அம்மா இதற்கு பதிலாக அவர்கள் ஜோடியாக நிற்கும் படத்தை கொடுத்துள்ளனர். இந்த படத்தை பர்சில் வைத்து கொண்டீர்கள்., உங்க அம்மாவிற்கு உங்க அப்பா இறந்து 40 நாட்களுக்குள் இதய நோய் வந்து விட்டது. நீங்க கார் பிடித்து உங்க மடியில் கிடத்தி வந்து சி எஸ் ஐ மிஷன் மருத்துவ மனையில் சேர்த்தீர்கள். ராவும் பகலும் நீங்கள் இருந்து கவனித்து வந்தீர்கள். நான் பகல் பொழுதில் உணவுடன் வந்து உடன் இருந்தேன். அவரை இரவில் கவனிக்க என ஒரு பெண்  மணிக்கு தினம் 250 கொடுத்து அமர்த்தினீர்கள். 
அந்த அம்மா உங்கள் அம்மாவுடன் தங்கி இருக்கும் போது நிகழ்ந்த சம்பவங்களை உங்களிடன் கூறினது. போகும் போக்கில் சார்”உங்க தாயாரை பெற்ற கடமைக்கு பார்த்து கொள்ளுங்கள்”வேலைக்கு தான் நீங்க இரண்டு பேரும் என்றார். அவர் மணிக்கணக்காக பேசுவது அந்த மகன்-மருமகளுடன் தான் என்று கூறி சென்றார்.

என்னிடமும் கூறியிருந்தார் ”சாரை அந்த கிழவியிடம் அனுப்பாதீர்கள் சூனியக்காரக்கிழவி”. அந்த பெண்மணி ஏன் அப்படி கூறினார் என நான் சிந்திக்க போகவில்லை. எனக்கு பதிலாக இரவில் என் மாமியாரை  கவனித்தார் என்பதால் தான் அந்த பெண்ணின் மகன் திருமணத்திற்கு இரண்டாயிரம் கேட்ட போது கொடுத்தேன். மரண சாற்றிதழ், சாகும் முன் உங்க அப்பா கோர்ட்டில் வைத்திருந்த வீட்டு பத்திரம் மீட்க. வாரிசு சாற்றிதழ் வாங்கி கொடுக்க என அலைந்து உங்கள் அலுவலகம் வேலையாட்கள் கவனிக்கப்படியான சூழல் உருவானது. 

இப்படியான சூழலில் தான் உங்க தம்பிக்கு வேலை கிடைக்க முன் பணம் கட்ட உங்களிடம் பணம் கேட்க; கையிலிருந்த இரு லட்சத்திற்கு மேல் வங்கியில் இருந்தும் கடனாக எடுத்து கொடுத்துள்ளீர்கள். இதனிடையில் கத்தார் என்ற ஆசையை உங்களில் புகுத்திய உங்க  தம்பி  ஆபீஸ் மேல் இருந்த முழு அக்கறையும்  போக்க செய்து மார்ச் 1 கத்தாரில்; பணியில் சேரப்போகிறேன் என்று கூறியிருந்த நீங்கள் மேலுலகமே சென்று விட்டீர்கள்.   நீங்கள் இருக்கும் போது 10 லட்சம் தாரேன் விடுதலை பத்திரத்தில் கை எழுத்து போடுகின்றாயா என கேட்டு கொண்டிருந்தனர்.   

பாபு அத்தான் நான் இப்போது கேட்பது உங்கள் தம்பிக்காக எடுத்து  கொடுத்த கடனை திருப்பி அடைக்க கூறுங்கள். தாய் , தம்பி பாசத்திற்கு என ஏங்கிய நீங்கள் பணத்தை கொடுத்தாவது  உங்கள் அன்பை மீட்க பார்த்தீர்களோ?  நீங்கள் கத்தார் சென்றால் உங்கள் அலுவலகத்தில் இருந்து 10 ஆயிரம் வரும் என்றீர்கள். பத்து பைசா உங்க உதவியாளர்களால் எனக்கு தர இயலவில்லை. அலுவலகத்தை இழுத்து பூட்டி விட்டனர். அத்தான் விபத்து நம் வாழ்க்கையை மாற்றி மறித்து போய் விட்டது. நான் கலங்குவது: உங்கள் பிரிவு இன்னொன்று உங்க சிந்தனையற்ற செயல்கள் அதை தொடர்ந்து நான் பொறுப்பு ஏற்க வேண்டி வந்த உங்க கடன்கள். எனக்கு உங்களிடம் கோபம் இல்லை வருத்தமும் இல்லை  ஐந்து  லட்சத்தை கொடுத்து தாய் பாசத்தை வாங்கி விட்டு எனக்கும் உங்கள் மகன்களுக்கும் உங்கள் நினைவுகளை தந்து கிளம்பி  விட்டீர்கள். சாம் இன்று விடுமுறை ஆரம்பமாகி விட்டது. உங்கள் நினைவால் மிகவும் சோற்வுற்று  அவன் காலையில் இருந்து மாலை வரை ஒன்றும் சாப்பிடவில்லை. உங்கள் மகன்கள் இனி வளர வேண்டுமென்றால் உங்களை நினைத்து அழுது புரள்வதை நான் நிறுத்த வேண்டும். உங்கள் வசம் தான் நல்ல யுக்திகள் வைத்திருப்பீர்களே. எங்களுக்கு வாழ வழி காட்டுங்கள். 

பெண்களை அதும் மனைவிகளை குறை கூறவே இந்த சமூகம் துணியும். அன்பின் பெயராலும் நேசத்தின் பெயராலும் ஏமாற்றப்படுவது பெண்களே. உங்க  அம்மா கூட உங்க சித்தியிடம் சொல்லி விட்டுள்ளார். பொம்மை மாதிரி இருந்து கொண்டு நல்ல ஊர் சுற்றியுள்ளாள். இனி நல்ல அனுபவிக்கட்டும் என்று. நான் எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் தற்போது இல்லை. எனக்கு கிடைத்த பல அறிவுரைகள் தான் என்னை அழ வைத்தது. நான் நானாக இருப்பேன். உங்கள் ஆசை போல் உங்கள் எண்ணம் போல் வாழுவேன்.   காதல் குருடு என்பது போல் நாம் மற்றவர்களிடம் வைக்கும் நம்பிக்கையும் ஓர் வகை குருட்டு போக்கு தான் பெற்றோர்கள் மேல் பெற்ற தாய் மேல் வைத்த உங்கள் நம்பிக்கை  உங்களுக்கு சொர்க வாசலை திறந்து விட்டுள்ளது என நினைக்கின்றேன். யார் யாருக்கோ என்ன என்னமோ செய்தீகள். உங்க பிள்ளைகள் உங்களை நினைத்து ஏங்குவது தான் என்னால் சகித்து கொள்ள இயலவில்லை. உங்கள் மேலுள்ள நம்பிக்கை  வீணாகாத வண்ணம் நான் வளர்க்க வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமாக இருக்கும் அத்தான் உங்க சக்தியை உங்க அன்பை உங்க கரிசனையை எங்களிடம் திருப்புங்கள். இனி உங்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை நம் மகன்களுக்காக வாழ உள்ளேன். சாம் நொடிந்து விட்டான். கனவிலாவாது வந்து அவனிடம் கதையுங்கள். 

31 Mar 2016

மயங்கினேன் உங்களில் அத்தான்.- 41 வது தின நினைவு நாள்!

அத்தான் நம் உலக பிரகாரமான பிரிவின் 41 வது நாள்! திருமணம் நமக்கு நிச்சயம் ஆகியதுமே உங்களிடம் கேட்டேன்  எனக்கு சமைக்க தெரியாது, நீங்க சொன்னீங்க நான் பார்த்து கொள்ளுகின்றேன் என்று. உங்கள் அப்பா ஒரு நாள் கேட்டார் இந்த கல்யாணத்தால் எனக்கு என்ன லாபம்?  உனக்கு நகை கிடைத்து விட்டது, என் மகனுக்கு உன்னை கிடைத்துள்ளது. எனக்கு ஆயிரங்கள் செலவாகியுள்ளது. அன்று தான் நான் இந்த திருமணத்தால் என்ன லாபம் என்று சிந்திக்க துவங்கினேன். என் பாசமான குடும்பத்தை, வீட்டை பிரிந்தேன், மகள் என்ற உரிமையை இழந்தேன், ஆனால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், என் சொந்தம் என் வரம் எல்லாம் நீங்க தான். நீங்க விளையாட்டாக கூறுவீர்கள் உனக்கு விளையாட உங்க அப்பா என்னை வாங்கி கொடுத்துள்ளார் என. ஆம் அத்தான் நம் வாழ்க்கையே விளையாட்டாகத் தான் இருந்தது. அது எதிர்பாராத விளையாட்டில் முடிந்து விட்டது. 


இன்று உங்க கல்லறைக்கு சென்றேன். சில மெழுவத்திகள் பற்ற வைத்து அந்த தீபத்தில் உங்க அணையாத அன்பை நினைத்து கொண்டு இருந்தேன்.  நம் மகன்களிடம் கடைசி சில மாதங்களில் நீங்க அதீதமாக கோபப்பட்டீர்கள். என்னிடம் நீங்கள் குறை  கூறும் போது நான் கூறுவேன்  அப்பாவை என்னிடம் குறை  கூ வேண்டாம். அவர் அப்படி தான். அவர் கோபப்படும் போது நீ கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடு அவர் சாந்தமாகி விடுவார். அதே போன்று தான் நீங்கள் நம் பிள்ளைகளை குறை கூறும் போதும் நான் கூறியுள்ளேன். அத்தான் உங்களுக்கு உங்க பெற்றோர்களிடம் கிடைத்த அடி, வேதனையின் கால் பங்கை நம்ம  பிள்ளைகளுக்கு கொடுக்காதீர்கள். அவர்களை உங்க நெஞ்சோடு அணைத்து முத்தமிடுங்கள். அப்படி தான் நம் நான்கு பேரின் வாழ்க்கையும் ஓடியது. நாம் மாறி  மாறி அரவணைத்து கொண்டோம். இரண்டு நாள் முன்பு நான் தூக்கத்தில் இருந்து எழுந்து அவர் எங்கே எங்கே என தேடியுள்ளேன். அம்மா தான் தூங்க கூறியுள்ளார்கள். நினைத்தால் மறைந்து போன தெளிவற்ற  கனவு போல் தான் உள்ளது. நீங்கள் போனதாக என்னால் நம்ப இயலவில்லை அத்தான். 

மாலை 4.30 க்கு உங்க ஆப்பிள் போன் என்னிடம் கதைக்க ஆரம்பித்து விடும். சுபி அக்கா நரேன் அண்ணாவை நாங்கள் அழைத்து வர கிம்பி கொண்டு இருந்த போது நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தீர்கள். ஆப்பிள் போன் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது. 

அத்தான் உங்களூக்கு  நாம் தனிக்குடித்தனம் சென்ற போது  சாதத்தை  கஞ்சாக வைத்து தந்தது முதல் கடைசியாக வெள்ளி இரவு தக்காளி சாதம்- துவையல் வைத்து தந்தது வரை ஞாபகம் வருகின்றது.  பொதுவாக நான் அரைத்து வைத்திருக்கும் துவையலை மறுபடியும் அரைக்க கூறும் நீங்கள் அன்று சாப்பாடு, துவையல் எல்லாம் நன்றாக உள்ளது என்று என்னிடம் கூறினீர்கள். பொதுவாக தேங்காய் துருவித்தரும் நீங்கள் இடியாப்பம் பிழிந்து தரும் நீங்கள் சனிக்கிழமை நான் கைவலி என்று கூறியும் எனக்கு எந்த உதவியும் செய்து தரவில்லை. அன்று நீங்கள் பாட்டும் கேட்கவில்லை. நீங்கள் வீட்டில் இருந்து கிம்பும் போது வலது தோள்ட்டை கடினமாக வலித்து கொண்டிருந்தது. அதனால் தான் வெளியே வராது வாசலில் நின்றே உங்களை பார்த்து கொண்டு நின்றேன். அன்றை விபத்தில் என்னை எப்போதும் தாங்கும் துங்க, தலை வைக்க தரும் உங்க தோள் பட்டை உடைந்து விட்டதாம் அத்தான்.

இன்று நம் மகன் சாமிடம் புலம்பி கொண்டு இருந்தேன் தம்பி, அப்பா உயிர் மட்டும் இருந்தால் நாம் சந்தோஷமாக வைத்து கவனித்திருக்கலாம். கடவுள்  அவர் உயிரை நமக்கு தந்திருக்கலாம். அவர் முகத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது. அவன் கூறினான் இல்லை அம்மா அப்பா கம்பீரமாக் இருக்க வேண்டும். ஒரு கால், கை இல்லாது இருந்தால் வருத்ததால் நொறூங்கி இருப்பார்.  இல்லை அத்தான் உங்க  முகத்தை பார்த்து கொண்டே  மயக்கித்திலே வாழ்ந்திருப்போம் தானே/

உங்களுக்கு விபத்து என்துமே என் உடன் பணிசெய்யும் பேராசிரியர்களுக்கு தெரிவித்தேன். டவ்லஸ்  மற்றும் விஜய் சார் உங்களுடன் மருத்துவ மனையிலும் சந்தோஷ் சார் நம் வீட்டிலும்  வந்து உதவினர். என்னவர் தலைக்கவசம் அணிந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்; இல்லை மேம் இன்னும் 10  நாள் இருந்து வேதனைப்பட்டு போயிருப்பார் என்றார். நீங்க உடனே அந்த கடவுளிடம் போய் விட்டீர்கள். நாம் எப்போதும் பற்றி நடக்கும் உங்கள் கையை தொடத்தான் ஆசை கொண்டேன். யாரும் அனுமதிக்கவில்லை. கடைசியாக என் கண்ணை மூடி கொண்டாவது உங்கள் கையை மட்டும் தொடவேன்டும் அந்த விரல்களில் என் விரல்களை ஊடுரவ  வேண்டும் என்றது.  அதற்கும் அனுமதிக்கவில்லை. உங்களை வீட்டில் கொண்டு வந்த போதும் உங்க கைவிரல்களை துணீயால் மூடியிருந்தனர். பார்க்ககூட இயலவில்லை அத்தான்.  உங்க கண் விழிகள் நீங்க வீட்டில் இருந்து கிம்பிய போது என்னை பார்த்தது போலவே இருந்தது.

அத்தான் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள் கொண்டதாக தான் இருந்தது.  உங்கள் அன்பு எங்களை பரவசப்படுத்தியது. எங்க மூன்று பேருக்கும் என்ன என்ன தேவையோ அதை வாங்கி தந்தீர்கள். எனக்கு என சில பலகாரங்களை கொண்டு அந்து தனியாக தந்தீர்கள். சமீபமாக நான் என் அப்பாவிடம் எதிர்பார்ப்பது போல் வாசலில் நின்றே எனக்கு என்ன கொண்டு வந்திருப்பீர்கள் என தேட துங்கினேன் . கடைசியாக நாகர்கோயிலில் இருந்து எனக்காக வாங்கி வந்த இனிப்பு பன் நினைவில் வருகிது. 
யார் உங்களை குறை கூறீனாலும் என் மனதிற்குள் செல்லவே இல்லை. எதோ ஒரு மயக்க நிலையில் தான் இருந்துள்ளோம். நீங்களும் வீட்டு வாசல் வரும் போதே நான் வாசலில் நின்று வரவேற்க வேண்டும், உங்க வாகனம் வர வாசல் திந்து விட வேன்டும் என எதிர்பார்த்தீர்கள் நானும் செய்து வந்தேன். வெள்ளி இரவு நீங்கள் வரும் வரை நான் வாசலில் தான் நின்று கொண்டு இருந்தேன். வந்ததும் குளித்து விட்டு சாப்பிட கூறியும் எனக்கு பசிக்குது என்று நேராக அடுக்களையை தேடி வந்தீர்கள். நீங்க முட்டை வாங்கி வருவீர்கள் என வெட்டி வைத்த வெங்காயத்துடன் இருந்தேன். மறுபடியும் வாங்கி வரவா என்தும் வேண்டாம் துவையல் உள்ளது என வெங்காயத்தை குளிர்சாதனைப்பெட்டியில்  வைத்தேன். 

அத்தான் அந்த மயக்கம் தான் நம்மை வாழ வைத்தது. நம் இருவர் குறையும் நம்மை காணாது மறைக்க வைத்தது. உங்களை பிரிந்து லயோலா அருகிலுள்ள செர்வெய்ர்ட் விடுதியில் சேர்த்து விட்டு நீங்கள் சென்ற  போது நான் அந்த கட்டிலில் இருந்து உங்களை நினைத்து அழுதது நினைவு வருகின்து. அத்தான் தற்போது அந்த அழுகையுடன் தான் நிதம் நிதம் புரளுகின்றேன். நீங்க உங்க ஜாதகத்தை பற்றி என்னிடம் கூறியதில் ஏதோ பிழை உள்ளது. ஆனால் 10 வருடம் முன்பு ஒரு வீட்டில் ஜெபிக்க செல்லுவோமே  உங்க மகனுக்கு 18 வயது ஆகும் போது பெரும் கவலையை சந்திப்பீர்கள் என்றதும் அந்த ஜெப கூட்டத்திற்கு போவதை நான் நிறுத்தி கொண்டது இப்போது தான் நினைவில் வந்தது. 

அத்தான் நம் மயக்கம் என்ன அழகானது. என்னை நீங்க அழவே அனுமதிக்க மாட்டிங்க. உங்களுக்கு தெரியாது உங்க கையில் கிடந்தே அழுதுள்ளேன். நீங்க என் கன்னத்தை தடவி பார்த்து ஏன் அழுகின்றாய் என்றதும் ஒரு கவலை என்தும் நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை  என  நீங்க அழ ஆரம்பிக்க மன்னித்து கொள்ளுங்கள் அத்தான் என நான் சிரிக்க நீங்களும் சிரிக்க என நம் பொழுதை கழித்துள்ளோம். அத்தான் இப்ப கொஞ்ச நாட்களாக நான் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை உங்க மாறாத ன்பைத் தவிர. இரவு எட்டு ஆகியும் நீங்கள் வரவில்லை என்றால் அத்தான் உங்கள் வீட்டில் உங்களுக்காய் காத்து  ஒரு பெண்டாட்டி வீட்டிலுள்ளாள் என்தும் பந்து வருவீர்களே. வீட்டில் வந்ததும் குளித்து சாப்பிட்டு விட்டு நான் எங்கு இருக்கின்றேனோ அங்கு நீங்களும் என்னை தேடி வருவீர்கள்.  நீங்க சாப்பிடும் போது நான் தான் உங்க அருகில் இருக்க வேண்டும் என்று   பிடிவாதம் பிடிப்பீர்ள். என் பெண்டாட்டிக்கு அருகில் இடம் போடுங்கடா இல்லை என்றால் நான் எழுந்து விடுவேன் என நம் பிள்ளை மிரட்டுவீர்களே. நம்ம பிள்ளைகளும் நமக்காக விட்டு தருவார்கள்.  அத்தான் இப்போது நான் தனியாக இருந்து சாப்பிடும் போது நீங்க அருகில் இருந்து பார்ப்பது போலவே தோன்றுகின்து.



.

30 Mar 2016

விபத்தும் அதை தொடரும் சிக்கல்களும்!

இன்றுடன் என்னவர் விடைபெற்று 40 நாட்கள்!இன்னும் மனம் ஆறுதல் அடையவில்லையே? சிலர் நியதி என்கின்றனர், சிலரோ அவரின் விதி முடிந்து விட்டது என்கின்றனர். சிலர் இந்த துயரில் இருந்து கரையேற அவர் வெளீ ஊருக்கு சென்றிருப்பதாக கருதக் கூறுகின்றனர். ஆறுதல் பட அறீவு  துணிந்தாலும் அவரை நினைத்து அழாத நாட்களில்லை. அவரை நினையாத கணங்கள் இல்லை. ஒரு குடும்பத்தை வழி நடத்தியவர்.  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பாதிக்கப்பட்டு கரையேற இயலாது துயருற்று கலங்குகின்றோம்.    18 வயதை எட்டாத பெரிய மகன்   சின்னவர் 14 வது வயது அவருடைய சோகத்தை அன்பான அப்பாவின் இழப்பை சரிகட்ட தெரியாது கலங்கும் வயது. என் நிலையோ இன்னும் நிஜத்தை ஏற்று கொள்ள இயலாது தவிக்கும்  மனநிலை.

எங்களையும் கடந்து அவருக்கு இன்னும் பல உறவுகள். என் பெற்றோர்கள் வயதான சூழலில் கதி கலங்கி விட்டனர்.  என் சகோதரி குடும்பத்தில் இன்னும் வருத்தம் ஓயவில்லை. ஹெல்மெட் அணீந்திருந்தால் தப்பித்திருப்பாரோ எல்லா வாரவும் கோயிலுக்கு சென்றீருந்தால் தப்பித்திருப்பாரோ எனறூ பரிதபிக்கும் நிலை  என் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க கடந்த முறை அத்தான் முதல் நபராக வந்திருந்ததை எண்ணி ஏங்குகின்றார். இன்னும் என் குடும்ப சித்தப்பா சித்தி அத்தைகள் என எல்லோரும் பழக இனிமையான மனிதருக்கு எவ்வாறு நிகழ்ந்தது என  புலம்புகின்ரானர்.. என்னவர் வீட்டிலும்  சூழல்.மிகவும் பரிதாபம். தன் தந்தைய் இராந்து  எட்டு மாதம் கடக்காத நிலையில் தன் தாய்க்கு தணலாக இருந்தவர்.  தன் தாயாருக்கு சுகவீனம் என்றால் யாரையும் எதிர்பார்க்காது மருத்துவ மனையில் இருந்து கவனிக்கும் மகனின் இழப்பு.  தேவை என்ற போது பனம் கொடுத்து மனபலன் கொடுத்து உதவின சகோதரனின் பிரிவு. இவர்களை எல்லாம் மிஞ்சி அவருடைய இழப்பை தாங்க இயலாது தவிக்கும் நண்பர்கள்.

நேற்று வரை கார், கணவர் நிறுவனம்,  என்றிருந்த நிலையில் இருந்து இன்று யாருமற்ற  யாதுமற்ற நிலை. இவை எல்லாம் விளங்க மறுக்கின்றது, ஏதேதோ காரணம் கூறி மனம் சமாதானம் அடைய துனீயும்  போது இடித்த கார் பற்றிய தகவல்கள் பல வேதனையான வருத்தப்படும் உண்மைகளை தருகின்றது.

ரோடு மேல் ஏதோ சத்தம் கேட்கின்றது என ஓடி ரோடு மேல் வந்த சட்ட கல்லூரி மாணவர்கள் கண்டது தலை உடைந்து மூளை சிதறிய நிலையில் மரித்து கிடக்கும் என்னவர்!  முட்டிய கார் பின்னால்  உறவினர்கள் கார் என மிகவும் உல்லாசமாக தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர். காலை  எட்டு மணியாக இருந்தும் கூட கார் ஓட்டினவன் குடித்திருந்துள்ளான்.அதை மறக்க தூங்கி விட்டேன் என கூறீயுள்ளான். சிலர் அவனை அடிக்க பாய்ந்துள்ளனர். பின்னால் வந்தந்த காரில் எல்லோரும் தப்பித்து விட்டு கார் முன் சீட்டில் இருந்த முதியவர் மட்டுமே போலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  பின்பு சிலர் கூட திட்டமிட்டு என்னவர் வந்த  வழியை மாற்றீ கூற முயன்றூள்ளனர். அந்த விபத்து நடந்த இடத்தின் மிக அருகில் கரும்பு ஜூஸ் விற்கும் நபரை  கார்காரர்கள் சார்பாக கதைக்க வைத்துள்ளனர்.  இவரோ வீட்டின் அருகில் இருந்து நான்குவழி சாலைவழியாக  இடது ஓரத்தில் பயணித்தவர் சில நொடிகளில் சாந்தி நகர் பக்க ரோட்டில் இறங்க வேண்டியவர்.  தங்களுடைய கேளிக்கையின் விளைவாக தங்களூடைய சுயநலம் சார்ந்த நிதானமற்ற கார் ஓட்டுதலால் இருசக்கிர வாகனத்தில் பயணம் செய்த என்னவர் மரணத்திற்கு காரணமாகியுள்ளார். எப்படி விபத்தில் என்னவர் பலியாடு ஆகி கலங்க வைத்தாரோ அதே போன்று கார் என்ற வாகனத்தால் இன்னொரு நபரின் உயிரை பலிவாங்கி கொலைக்காரர்களாக மாறீயுள்ளனர். தனி நபர் கார்களால் பல விபத்துக்கள்.  விபத்துக்களை பொறுத்தவரை சட்டங்கள் கூட நபருக்கு நபர் மாறுகின்றது. பல சட்டங்களும் சாட்சியங்கள் என்ற பெயரில் பொய்களால் மூடப்படுகின்றது. அதே போன்று தான் இந்த விபத்தை நிகழ்த்திய ஓட்டுனரைக் கூட சட்டம் உடன் தண்டிக்கவில்லை. தூங்கி விட்டேன் என தப்பித்து கொண்டான். 

ஒரு விபத்தால் ஒரு நல்ல கணவர் , பாசமான தகப்பன் பாசமுள்ள மகன் மருமகன், நல்ல நண்அர் இழப்பு என பல இழப்புகள், ஒரு நாளும் என்னால் இதை நம்ப இயலவில்லை. படைத்த இறைவனிடம் தான் கோபித்து கொள்கின்றேன். . அத்தானிடம், அல்லது  என்னிடம் குறை கண்ட தெய்வமே ஒரு கை காலையாவது எடுத்து விட்டு அத்தானை தந்திருக்கக் கூடாதா?  அவர் ஓடி வரும் வீட்டுப்படி , அவருடைய அழகிய பார்வை, நடை அவர் செயல்கள் எல்லாம் நினைக்க நினைக்க முள்ளாக குத்துகின்றது. அவர் இனி இல்லை இனி அவர் வர மாட்டார் என்ற உண்மை என் வாழ்க்கையின் நம்பிக்கையை இருள் அடையச் செய்து விட்டது. இனி ஒவ்வொரு நாளும்  கடமையை முடிக்கும் பயணமாகவே என் வாழ்க்கை அமையபோகின்றது.  இனி மிஞ்சிய என் வாழ்க்கை உயிர்ப்பான ஒரு வாழ்க்கைக்கு ஒப்பாகாது.
 
 சாலை விபத்தில் இந்தியாவை போன்றூ மோசமான நாடு இருக்க போவதில்லை. நான்கு வழிச்சாலையில் சில குறீப்பிட்ட இடங்களீல் தொடர்ந்து விபத்து நடைபெறூவது ரோடுகள் தரத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான்குவழிச்சலையில் மக்களீடம் இருந்து பெறூம் சுங்க வரி நாட்களூக்கு நாள் அதிகமாகி கொண்டேபோகின்றது.  டிரவிங் சாற்றீதழ் முறயாக  யாரும் வேண்டுவதில்லை. ரோட்டிலுள்ள பயணத்தை உல்லாசமாக மாற்ற நினைக்கும் போது பலருடைய வாழ்க்கை அர்த்தமற்றூ அனாதமாக மாறூகின்றது.


கிடைத்த ஓர் தரவுப்படி வருடம் ஒரு லட்சத்திற்கு  மேல் மக்கள்  மரணீக்கின்றனர். இந்தியாவின் குற்றவியல் சட்டப்படி பிரிவு 304 ப்படி இந்திய சட்டத்தால் விபத்தால் பாதிப்படைந்தவர்களூக்கு 4600 டாலர் அபராதவும் ஏழு வருட சிறய் தண்டனை என்பதை  780 டாலர் அபராதம் ஒரு வருட சிறய் தண்டனை என குறத்து விதித்துள்ளனர்.  நமது நாட்டை பொறூத்த வரை சட்டம் ஆள் ஆளூக்கு மாறூபடுகின்றது.  காரில் வருபவர்கள் கவனமாக ஓட்டியிருந்தால் ஒரு குடும்பம் அனாதமாகியிருக்காது. நாங்கள் அத்தானின் நினைவுகளீல் இருந்து வெளீவர இன்னும் 5 வருடம் ஆகலாம்.

எங்கள் ஆதரவு, பாசம், தலைமையாக இருந்தவரின் பிரிவு எங்களய் உருக்குலைய செய்து விட்டது. மேலும் தேவையான   . சாற்றீதழ்கள் பெற  பல பல சிக்கல்கள். ; அரசு பக்கம் இருந்து மக்களூக்கு உதவும் வண்ணம் எந்த திட்ட செயல் பாடுகளூம் இல்லை. முழுமையான பிரேத பரிசோதனைக்கு கூட ஒரு  மாதம் மேல் ஆகும் என்கின்றனர். இப்படியாக எங்கள் வாழ்க்கை நாளூக்கு நாள் சுமையாக மாறூகின்றது

\

13 Mar 2016

பயணங்கள் நிறைவு பெறுவது இல்லை!

எங்கள் கடைசி செல்ஃபி ஃபெப் 14 2016.

அத்தான் ஞாயிறு வந்து விட்டது. நம் சந்தோஷ நாள் இந்த ஞாயிற்று கிழமைகள். அன்று தான் நாம் இருவரும் நம் வேலைகளில் இருந்து விடுதலை பெற்று நம் பிள்ளைகளுடன் பிரியாணி செய்து சாப்பிடுவோம் ஆலயம் செல்வோம், பிடித்த இடத்திற்கு பயணம் செல்வோம். நான்கு பேரும் கட்டிலில் படுத்து கொண்டே கதைகள் கதைத்து கொண்டிருப்போம். 


நீங்கள் பிப் 20 அன்று விடை தரும் முன்  அந்த 8 மற்றும் 14 அன்று  மணப்பாடு சிலுவைக்கோயில் சென்றோம். முதல் நாள் பயணம் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை  பார்க்க வேண்டும் என்றிருந்தது. நாம் சென்ற நேரம் திமிங்கலம் யாவும் புதைத்து விட்டனர்.  அப்போது மீன்சந்தை நடை பெற்றதால் மீன் வாங்கும் ஆர்வத்தில் நீங்கள் இருந்தீர்கள். அங்கு இருந்த ஒரு ஆளிடம் மீன் விலையை பற்றி வினவியதும் இந்த மீன்களை சில்லறையாக கொடுப்பதில்லை நீங்கள் தேவையான மட்டும் எடுத்து செல்லுங்கள் என்று பெரிய மனதுடன் கூறினார். நீங்களோ நீங்கள் கடலில் சென்று உழைத்து கொண்டு வந்ததை நான் எப்படி இனாமாக பெற இயலும் நீங்க சிறிய விலை போட்டு தாங்கள் என்றதும் 50 ரூபாய் கொடுத்து விட்டு  மகிழ்ச்சியாக மீனை பெற்று வருவது இன்றும் கண் முன் நிற்கின்றது . அத்தான். சில போது உங்கள் சில விருப்பங்களில் குழந்தைத்தனம் மேலோங்கி இருக்கும் குழந்தைகளை போல் கள்ளமில்லா  சிரிப்பீர்கள். அந்த மீனை நீங்கள் உண்டீர்களா என்று எனக்கு நினைவு இல்லை ஆனால் அதை வாங்கி வந்து கத்திரிக்கோலால் வெட்டி சுத்தம் செய்து  தந்தது பசுமை நினைவாக மனதில் உள்ளது. நான் மீன் வெட்ட படித்து விட்டேன் இனி எவ்வளவு மீன் வாங்கினாலும் கழுவி சுத்தம் செய்து விடலாம் என பெருமை கொண்டீர்கள்.


அன்று நான் வைத்த இரால் கூட்டு கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் ரசித்து உண்டீர்கள். மீதம் இருந்த இராலை வறுத்து பல்லாரியுடன் தர வேண்டும் என்றிருந்த நான் இராலை பல்லாரியுடன் சேர்த்ததும் நான் நினைத்தது மாதிரி வரவில்லை என கவலை கொண்டேன்.  நீங்களோ, நன்றாக உள்ளது என்று ரசித்து சாப்பிட்டீர்கள். 

அதன் அடுத்த ஞாயிறு கடல் விளையாட்டுகளை கண்டு கழிக்க சென்றோம். நம் பிள்ளைகள் ஒருவர் டுயூஷன் போக வேண்டும் என்றும், இளையவன் ஆலயம் செல்ல வேண்டும் என கூறி நம்முடன் வர மறுத்து விட்டனர். நீங்களும் நானும் அன்றைய வாலன்றையன்(காதலர்) தினத்தை கடற்கரையில் கழித்தோம். நாம் எடுத்த கடைசி செல்ஃபி கூட அன்றையது தான். அன்றும் ஆலையத்தில் சென்று பிரார்த்தனை செய்தோம். வரும் போது உடன்குடியில் இறங்கி சில மளிகை சாமான்களும் வாங்கி வந்தோம். நாசரேத் கடக்கும் போது உங்க அம்மாவை பார்க்க போவோமா என்றதும் வேண்டாம் என சொல்லி விட்டீர்கள். 
அத்தான் இப்போது நான் நினைத்து பார்க்கின்றேன். நமது  பல ஆசைகள், பொழுது போக்குகள், விருப்பங்கள் ஒத்து போனது.  காரில் பயணிக்கும் போது கையை பற்றி கொள்ளுவது நம் இருவர் வழக்கமாக இருந்தது, பேசி கொண்டே அல்லது பாட்டு கேட்டே பயணிப்பது, புகைப்படம் எடுப்பது என எல்லாவற்றிலும் நம் விருப்பங்கள் கலந்திருந்தது. அத்தான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சி இது போன்ற நம் பயணங்களாக தான் இருந்தது. நான் பெரிய ஆடம்பரமான வீடு கேட்கவில்லை அணிய நகை கேட்கவில்லை, ஆனால் உங்களுடனான பயணங்களை பெரிதும் விரும்பினேன். கடந்த நான்கு வருடங்களில் நம் விடுமுறை நாட்கள்  பயணங்களுடன் தான் இணைந்து இருந்தது. 

எனக்கு பிடித்த புத்தகங்கள், வனிதா போன்ற மலையாள புத்தகங்கள் வாங்கி தந்து அசத்துவது என நீங்கள் எப்போதும்  உற்சாகமாக இருந்தீர்கள். சில போது நாம் பவுண்டர் மேடு வாழ்க்கையை பற்றி கேட்டால் பெண்கள் தான் நினைத்து கொண்டு இருப்பீர்கள் ஆண்களுக்கு நினைத்து கொண்டிருக்க நேரம் இல்லை என்பீர்கள்.  அத்தான் அந்த பயணங்கள் முடிவுற்றதோ? அது போன்ற நிமிடங்கள் இனி இல்லை தானே. கடக்கரையில் நீங்கள் என்னை அழகாக படம் பிடித்ததும்  ஏ ,,,,,,,,,,,,,,ஜோஸ் இங்க வா..  என கத்தி அழைத்ததும் நினைவு வருகிறது.

போட்டி நடக்கும் இடத்திற்கு போகும் போது நமது  கார் மாதா கோயில் அருகில் போடுங்கள் என்று நான் கூறினதை கண்டு கொள்ளாமல்  காரை மணலில் இறக்க, மணலில் கார் மாட்டினதும் நான் சிரிக்க உங்களுக்கு கோபம் வந்ததை பார்க்க வேண்டுமே. "நீ போ எனக்கு காரை கொண்டு வரத்தெரியும் என்னை கேலி செய்து சிரிக்கின்றாய்" என கோபப்பட்டு விரட்டி விட்டதும் நினைவில் வருகிறது. அங்கு சென்றதும் ஒரு சிறிய பாக்கட் மஸ்கோத் அல்வா, கடலை மிட்டாயுடன் வந்து சேர்ந்தீர்கள். நாம் கொஞ்சம் முன்பு ஊடல் கொண்டதை மறந்து, அல்வா கடலை, முட்டாய் தின்று கொண்டே கடல் விளையாட்டுகளை கண்டு ரசித்தோம்.  அடுத்த முறை நம் பிள்ளைகளையும் அழைத்து வர வேண்டும். இன்று நாம் அழைத்தும் வர வில்லையே என்று நீங்கள் வருந்தி கூறினதும் நினைவு வருகிறது. 






இது போன்ற நம் பயண நினைவுகள் இனிமையான பல பொழுதுகளை நினைவில் நிறுத்தினாலும் இனி இந்த பயணம் நம் சிரிப்பு பேச்சு இல்லையே என்பது வேதனை அளிக்கின்றது.



28 Feb 2016

இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்?

பாபா அத்தான்,  கனவு போன்று ஒன்பது  நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை!  அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்ததாக கூறினீர்கள். காலை உணவாக இடியப்பம் நாம் இருவரும் ஒன்றாகவே எடுத்து கொண்டோம்.. எப்போதும் போல நாம் நிறைய அன்று பேசவில்லை..  என்றும் போல்  மார்கெட் சென்று வந்து விட்ட பின்பு பேசலாம் என்றிருந்தேன். அன்று நீங்கள் வெளியே வரும் போது வீட்டு கெயிட் வரை வரும் நான்,  அன்று ஏன் வரவில்லை! வாசல் வரையே நின்று விட்டேனே. விடுமுறை நாட்களில் நானும் வருகிறேன் என்று பிடிவாதமாக உடன் வருவேனே? ஏன் அன்று அப்படி நான் உங்களுடன் வரவில்லை. நீங்க கூட சிறிய  புன்சிரிப்புடன் தான் என்னை லேசாக  ஆனால் ஆழமாக  பார்த்து  சென்றீர்கள். 

நீங்கள் இல்லாத நாட்களா?  நினைக்கவே இயலவில்லை! நான் லயோளா கல்லூரியிலும் நீங்கள் இங்குமாக   ஒரு வருடம் பிரிந்திருந்தது நம் நியதி என்றீர்கள். ஆனால் அதை பிரிவாக நான் காணவில்லை நாம் ஓர் அழகான நினைவுகளுடன் வாழ்ந்தோம் பேசினோம், சண்டையிட்டோம் பயணித்தோம். . 

என் கழுத்தை இறுக்க பற்றி கொண்டு நம் மகன்கள் கதறுகின்றனர். அத்தான் எங்களுக்கு தெரியாது எப்படி உங்கள் பிரிவை சரிகட்டுவோம் என்று, ஆனால் உங்கள் நினைவுகள் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் விருப்பங்கள் எங்களை வழி நடத்தும். 

அந்த பெப் 20 காலை 8 மணி ஏன் வந்தது? அந்த நாகர்கோயிலை சேர்ந்த கோயம்பத்தூரில் குடியிருக்கும் கார்க்காரன் ஏன் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டி வந்தான்? அவன் பெயர் அன்பாம்! , நீங்கள் ஏன் அந்த நேரம் பார்த்து அங்கு வந்து அடைந்தீர்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் தான் கூறுவீர்கள் நான் உன்னை,  சாகும் வரை பார்த்து கொள்வேன் நீ என் குழந்தை. ஆம் நம் வாழ்க்கை அப்படி தான் ஓடின. நீங்கள் என் அன்பு குழந்தையாக இருந்தீர்கள், நான் உங்கள் செல்ல குழந்தையாக இருந்தேன். ஒரு சிறந்த நண்பன் போல் என்னை வழி நடத்தினீர்கள் என்னை பலப்படுத்தினீர்கள் என் வெற்றியில் அகமகிழ்ந்தீர்கள். 

அத்தான் இது போன்ற சூழலை நான் தான் முதலில் சந்தித்தேன் என்று இல்லை.  ஆனாலும் உலகில் எனக்காக மட்டும் இருந்த உங்களை இழந்தது என் பூர்வ ஜென்ம பிழை தானே.  நான் ஓர் நல்ல பணியில் வர எவ்வளவு ஆசைப்பட்டீர்கள்.  அத்தான் ஒவ்வொரு நொடியும் உங்கள்  நினைவுகள் தான்.





என்னை நானாக நேசித்தீர்கள். என்னை நானாக வளர்த்தீர்கள். நான் விரும்பின புத்தகம், செடிகள் அளவிற்கும் அதிகமாகவே  வாங்கி தந்தீர்கள். நாம் பவுண்டர்மேட்டில் இருந்து கொண்டு வந்த மல்லிகைச்செடி  உங்கள் பிரிவை தாங்காது கரிந்து விட்டது. 

சாம் ஜோயலை உங்கள்  தோள் கொடுக்கும் உற்ற தோழனாக வளர்த்தீர்கள். அவனுக்கு கார் ஓட்ட கற்ற கொடுத்து கொண்டிருந்தீர்கள். ஜெரி எட்டாம் வகுப்பு போயும் அவனை சின்ன செல்ல குழந்தையாக நினைத்து சண்டையிட்டு கொண்டிருந்தீர்கள். பிள்ளை மெலிந்து விட்டான். இரவில் உங்களை எண்ணி அழுகின்றான். உங்கள்  உடல் தான் பிரிந்துள்ளது அப்பா ஆத்துமம், ஆவி நம்மிடமே உள்ளது என்று அவர்களை பலப்படுத்தி உள்ளேன். சாம் ஜோயல் மிகவும் கருத்துள்ளவனாக வெளியில் காட்டி கொண்டாலும் அழுது புலம்புகின்றான். அத்தான் ................அத்தான்...................பாபா அத்தான்.................உங்கள் தலையணை போன்ற வயிற்றில் கிடந்து என்று விளையாடுவோம்.

கடவுளுக்கு பிடித்தவர்களை விரைவில் அழைத்து செல்வார் என்ற ஆறுதல் என்ன தேற்ற மறுக்கின்றது. ஆனாலும் அந்நியாத்திற்கு நீங்கள் நல்லவராக இருந்து விட்டீர்கள், யாரிடமும் எந்த கோபம், பகை இல்லை எல்லா உறவுகளும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற அதீத ஆசை, உங்கள் தாய் மாமாக்கள் இருவரும் வந்திருந்தனர். உங்கள் பெரியப்பா மக்கள் மூன்று பேரும் வந்திருந்தனர். உங்கள் அமெரிக்காவில் இருக்கும் சகோதரியும் அலைபேசியில் ஆறுதல் அளித்தார். உங்களுக்கு மிகவும் பிடித்த  ராஜசேகர் மாமா கையில் தான் கடைசியாக கிடந்துள்ளீர்கள். எல்லோரும் உங்களை காண வந்திருந்தனர்.   தாயின், சகோதரனின் அன்பிற்கான ஏக்கம் தீர்ந்து விட்டதா? எட்டாம் தியதி, 14 ஆம் தியதி அங்கு நாசரேத் போய் மட்டன் குழம்புடன் சாப்பிட்டீர்களாமே? .................அத்தான் நீங்களே சரணம் என்றிருந்த நாங்கள் மூன்று பேரும் இனி என்ன செய்வோம்.


உங்க அப்பாவின் கடைசி சடங்கு கிரியையை நீங்களே செலவழித்த போது நீங்கள் எமாற்றப்பட்டதாக  நான் குற்றம் சுமர்த்தினேன், உங்களை பண்ணையார் என்று கேலி செய்தேன். அத்தான் உங்கள் கிரியை மிகவும் அருமையாக எந்த குறைவும் இல்லாது உங்கள் சகலன், உங்கள் மச்சினன் உங்கள் உற்ற நண்பர்களால் நடத்தப்பட்டது.  பத்தர் அண்ணா கரிசனையாக உங்களை விசாரித்து உள்ளார்,  உங்களை பற்றி முத்தாலக்குறிச்ச்சி காமராசர், தமயந்தி சைமன், வந்தியத்தேவன் போன்ற நண்பர்கள்  பதிந்துள்ளனர்.  சிவமேனகை சிறந்த கவிதை ஒன்று பரிசளித்துள்ளார், நரேன் அண்ணா சுபி அக்காள் நொறுங்கி போய் விட்டனர். அண்ணன் வாய்விட்டு அழுது விட்டார். உங்களை காண இந்த முறை   வர உள்ளனர். 

உங்கள் நண்பர்- சகோதரன் ரீகனிடம் தான் உங்கள் நிறுவனத்தை ஒப்படைத்து உள்ளேன். உங்கள் நண்பர்கள் உடைந்து அழும் போது உங்கள் நட்பை அன்பை தான் உணர்கின்றேன், குரு இன்னும் அழுது கொண்டே இருந்தார். நான் தான் ஆறுதல் கூறினேன். நான் மருத்துவமனை வந்தடையும் முன்பே உங்கள் நண்பர்கள் வெங்கடேஷ், சத்யா, டேவிட் ராஜா, ஞானப்பிராகசம் ஜெராள்ட் சார் போன்றோர் வந்தடைந்தனர். 

என் வேண்டுதலை ஏற்று நம் நண்பர் நாறும்பூ நாதன் , நம் பக்கத்து தெரு நண்பர் தினமலர் செய்தியாளர் முப்புடாதி போன்றோர் அங்கு நின்றிருந்தனர்.  
உங்களுக்கு ஏதோ பலமாக அடிபட்டிருக்கலாம் என்று அழுது புலம்பின என்னை, "திடம் கொள்ளுங்கள் சார் போய் விட்டார்" என்றதும் உலகமே மொத்தமாக என் தலையில் விழுவது போல் இருந்தது. நமக்கு இரு குழந்தைகள் மட்டுமல்ல என் மாணவர்கள்,  நம் சாம் ஜோயேல் நண்பர்கள் என  நூற்றுக்கிற்கு மேல் குழந்தைகள் அன்று உங்களை சுற்றி இருந்தனர். உங்களை தூக்கினது எல்லாம் அவர்களே.  குழந்தை மனம் கொண்ட நீங்கள் குழந்தைகள் அரவணைப்பிலே இருந்துள்ளீர்கள்.

அத்தான் நீங்கள் அமைதியை தேடி விட்டீர்கள். என் மனம் தான் வெந்து உருகுகின்றது.; என் இதயம் நொறுங்குகின்றது, உங்கள் ஆயிசு முடிந்து விட்டது என ஆசுவாசம் கொள்கின்றேன். நீங்கள் விரும்பின மாதிரி வாழ்ந்தீர்கள், நீங்கள் விரும்பின மாதிரி உங்கள் நிறுவனத்தை வளர்த்தீர்கள், கார் ,  பயணம், காமிரா, உறவினர்கள் , நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருந்தீர்கள்.  ஒரு நேரம் வேலை இல்லா திண்டாடிய நீங்களும் உங்கள் நிறுவனத்தில் மூன்று பேரை வேலைக்கமர்த்தும் நிலையை எட்டினீர்கள்.  உங்கள் பயிற்சியில் கற்ற பல இளைஞசர்கள் வெளிநாட்டிலும் உள்ளூரிலும் சிறப்பாக வேலை செய்து வாழ்கின்றார்கள் என்று பெருமை கொண்டீர்கள்    எந்நேரமும் பாட்டு கேட்டு கொண்டே உழைத்து வாழ்ந்தீர்கள்.  தூங்கும் நேரம் தவிர்த்து எப்போதும் ஏதோ ஓர் பணியில் உங்களை ஈடுபடுத்தி இருந்தீர்கள், உங்கள் மனைவி பிள்ளைகளை மிகவும் அழகாக நடத்தினீர்கள். உங்கள் பெற்றோரை ஆற்றலை மிஞ்சி, கடன் எடுத்தும் கூட மருத்துவ செலவை நடத்தி கொடுத்தீர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனம் உடைந்து கிடந்த உங்கள் சகோதரனுக்கு பல லட்சம் புரட்டி கொடுத்துள்ளீர்கள். உங்களை பழித்தவர்கள் கேலி செய்தவர்களை நான் வெறுத்த போது,  நீங்கள் உங்கள் அன்பால் ஆதரவால் உதவினீர்கள்.  இந்த விபத்தால் நானும் பிள்ளைகளும் மட்டுமே உங்களை இழந்தோம் என்றால் இல்லை. பலர் அழுது புலம்பினர். "நான் தெருவில் சாக என்று என்று நின்ற போது பாபா தான் கை கொடுத்து உதவினார் என்றார் உங்கள் ஓர் நண்பர்.  

கடந்த ஏழு நாட்களாக உங்கள் நண்பர்கள் உங்கள் பிரிவை விசாரித்து சென்று கொண்டிருக்கின்றனர்.  உங்கள் அம்மாவும் தம்பியும்  தான் ஜெபம் முடிந்ததும் விரைந்து மறைந்து விட்டனர். அது நாம் இருவரும் எதிர்பார்த்தது தான். பிரசவத்திற்கு 300 ரூபாய் கட்டு செய்வது போல், உங்கள் இழப்பிற்கு ஒரு சேலையும், இரண்டு கிலோ அரிசியும், 100 மிலி தேங்காய் எண்ணையும் கொடுத்து சரிகட்டினர். இதுவும் நாம் எதிர் பார்த்தது தான்.

உங்க முகத்தையாவது காண வேண்டும் என நம் உறவினர்கள் நடு இரவு இரண்டு மணி வரை வந்து கொண்டிருந்தனர். வண்டிப்பெரியாரில் இருந்து எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் உங்களை அழகாக பார்க்க வேண்டும் அது தான் என்னுடைய ஆசை. ஆதலால் உங்கள் முகம் அழகாக இருந்த போதே நான் விடை தந்து விட்டேன்.  ஒரு வேளை  நீங்கள் அதிசயமாக எழுந்து விடுவீர்களோ என்று நினைத்து  உங்கள் கண்ணை திறந்து பார்த்தேன். ஒரு கணம் நீங்கள் மீண்டும் எழுந்து வருவீர்கள் என பேராசை கொண்டேன். உங்கள் காலில் தொட்டு கும்பிட்ட போது உங்களில் கண்ட சிறு காயங்கள் என்னை  வேதனைப்படுத்தியது. நீங்கள் நான்கு மணிநேரம் உதிரம் சிந்தி இறந்தீர்கள் என்றதும் என் உயிரே நின்று விடும் போல் இருந்தது. ஆனாலும் நீங்கள் கடைசி நேரம் எந்த சித்திரவதையும் அனுபவிக்கவில்லை. உடன் இறைவினடம் சென்று விட்டீர்கள் என்றதும் தேற்றி கொண்டேன்.

எங்களை நினைத்து கொண்டு தான் இருப்பீர்கள், ஜெரியால் தான் ஜீரணிக்க இயலவில்லை. உங்கள் சகலன் "அண்ணா  தான்  உங்கள் தங்கையை எனக்கு தேடி தந்தார்  நான் செலவு செய்வதை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் அவர் என் சொந்த அண்ணன் என்றார். அண்ணி உங்களையும் பிள்ளைகளையும் நான் ஆதரவுடன் கவனிப்பேன் என்றார்". 

நீங்கள் கடைசியாக அணிந்து கழற்றி போட்டிருந்தது சுபி அக்காள் வாங்கி கொடுத்த சட்டை, நீங்கள் மரண நேரத்தில் அணிந்திருந்ததும் சுபி அக்காள் கொடுத்த டீ-ஷர்ட், நீங்கள் ட்றைய் வாஷுக்கு எடுத்து சென்ற ஓர் சேலையும் சுபி அக்காள் எனக்கு எடுத்து தந்த சேலை. அக்கா அக்கா என்று தாய்மை பாசத்துடன் அழைத்து வந்த சுபி அக்கா ஆசிர்வாதத்துடன் சென்றுள்ளீர்கள். சுபி அக்காவை சந்தித்தது முதல் தான் உங்கள் அம்மாவை நினைத்து ஏங்காது மகிழ்ச்சியாக இருந்தீர்கள். நம் சிங்கப்பூர் அத்தை கூறியுள்ளார்கள் பெப் 20 என்பது இந்து சகோதர்களை பொறுத்து புண்ணியமான தினமாம் அன்று இறப்பவர்கள் நேரடியாக இறைவன் உலகம் அடைந்து விடுவார்களாம். 

 அத்தான் நீங்கள் ஆசைப்பட்டது மாதிரியே  உங்கள் சபை கல்லறை தோட்டத்தில் வைத்துள்ளோம். இந்த முடிவை நான் தான் எடுத்தேன். எனக்காக நீங்கள் கல்லறையில் கூட தோற்க கூடாது. என் பாபா அத்தான் என்றும் கம்பீரமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அழகாக ஓர் இடம் கிடைத்துள்ளது. நீங்கள் விரும்பும் மார்கட் அந்தோணியார் ஆலயம் முன்புள்ள  சீவலப்பேரி ரோட்டில் செடிகள் அருகாமையில் உங்களுக்கு இடம் தேர்ந்துள்ளனர் உங்கள் நண்பர்கள்.  ஒரு வேளை நாசரேத் என்று உங்கள் தாய்க்கு விருப்பம்  இருக்குமோ என்று வினவினேன். அவர்கள். திருநெல்வேலி நோக்கி விரைந்து வந்து விட்டனர்.  உங்கள் மகன் சாம் ஜோயல் மிகவும் உறுதியாக , அப்பா நண்பர்கள் இருக்கும், அப்பா 12 வருடம் வாழ்ந்த திருநெல்வேலி மண்ணில் தான் இருக்க வேண்டும் என்றான். நாசரேத் கல்லறை தோட்டத்தை விட அழகான இடம் இது தான். நானும் உங்களை எந்நேரவும் சந்திக்கலாம். நீங்களும் நாசரேத்தை விரும்ப மாட்டீர்கள் எனத்தெரியும். வீட்டில் கத்தோலிக்க சபைப்படி தான் ஜெபம் நடந்தது.சகாயமாத ஆலய தந்தை எங்கள் கல்லூரி தந்தையர்கள் உங்களூக்காக ஜெபித்தனர். பின்பு ஆலயத்தில் சி. எஸ்.ஐ சபைப்படி ஜெபம் நடந்தது. 



அத்தான் உங்கள் ஓர் அக்காள் சொல்கிறார் "நான் முகநூலிலில் இட்ட படங்களை கண்டு கண் வீழ்ந்ததால் தான் போய் விட்டிர்களாம்" அப்போது தான் நினைவு வந்தது உங்கள் தகப்பானார் இறந்ததை நாம் அறிவித்த போது, "உங்கள் அப்பா என் அப்பா மரண கிரியைக்கு வராததால் நான் வருவதை என் தாயார் விரும்ப மாட்டார், உங்கள் வீட்டில் ஏதும் நிகழ்வு என்றால் பங்கு எடுத்து கொள்கின்றேன் என்றார். உங்கள் சகோதரன் நீங்கள் பெட்டியில் இருப்பதை பார்க்க விரும்பவில்லையாம் அதனால் அடுத்த  நாள் காலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார். உங்கள் குடும்ப சொத்து பங்கை கருணை அடிப்படையில் கொடுப்பாராம், நான் கூறினேன் அது என்னவருக்கு இழுக்கு சட்டப்படி சமபங்கை உங்க மகன்களுக்கு  கொடுக்க கூறினேன்.  எனக்கு நீங்கள் விட்டு சென்றது போதும்.

பாபா அத்தான் சொத்து, பணம் எல்லாம் ஒன்றுமில்லை. நாம் வாழ்ந்த வாழ்க்கை அழியாதது அந்த நினைவுகளுடனே நான் வாழ்ந்து விடுகின்றேன். நீங்கள் என்னை காணாது பரிதபிக்க வேண்டாம். உங்கள் கண்ணை திறந்து பார்த்தேன், அந்த விழியில்,  உங்கள் ஆன்மாவில் நான் தான் குடியிருக்கின்றேன் என்றது.  மிகவும் போராட்டம் கொண்டு நடத்தி சென்ற  அழகிய காதல் நம் வாழ்க்கை,!   கடந்த 19 வருடங்களில் ஒரு நாள் கூட பேசாது இருக்கவில்லை. நம் சண்டை அரை நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.  அப்படி தான் பெல்ஸ் அத்தையும் கூறினார்கள் "காதல் பறவைகள் போல் சுற்றி வந்தீர்கள்" என்று. நீங்கள் உங்கள் மகன்களை குறித்து கொடுத்த வேலைகளை முடித்து விட்டு விரைவில் நான் உங்களிடன் வருவேன். நாம் பயணிக்க, கதைக்க , சண்டை போட நிறைய உள்ளது.  நீங்கள் உங்கள் நண்பனிடம் கூறினீர்களாமே " என் ஜோஸ் சண்டை போடாது இருப்பதே பயமாக உள்ளது என்று". உங்கள் பயம் தான் கொடியது. அதற்கு நீங்கள் காரணம் இல்லை என தெரியும்,  கடைசி நான்கு மாதம் நீங்கள் என் அறிவு இல்லாதே பல விடையங்கள் செய்து வைத்துள்ளீர்கள். நான் அதற்காக உங்களிடம் கோபப்படப்போவது இல்லை. அது நம் கர்ம வினை!  நீங்கள் இட்டு சென்ற செருப்பு உங்கள் லுங்கி, சட்டை எல்லாம் பொக்கிஷமாக எடுத்து வைத்துள்ளேன். அத்தான் கதைத்து கொண்டிருந்தால் நிறைய உள்ளது. தினம் உங்களிடம் பேசவேண்டும். நாம் கதைப்போம்.

http://avargal-unmaigal.blogspot.com/2016/02/baba.html
http://www.dinamalarnellai.com/web/districtnews/2412
http://www.dinamalar.com/news_detail.asp?id=1461507&Print=1
http://www.maalaimalar.com/2016/02/20130117/killed-by-a-car-collided-near.html
http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/02/20192527/In-PlayankottaiCar-crash-Auditor-death.vpf



கண்ணீர் அஞ்சலி...








Sundara Vandhiya Tevan R's photo.




























சிவ மேனகை


விழிநீர் சுரந்து விடை இல்லா வினாக்களோடு
எழுதும் ஓர் கண்ணீர் அஞ்சலி ,,,,,,,
உறவுகளை தாண்டி எங்கள் உணர்வுகளுக்குள் வாழ்ந்தவர்
தொலை தூரத்தில் இருந்தும் உதவும் ஒரு உண்மை நட்பு
இன்று உணர்விழந்து எங்களை பிரிந்து சென்று விட்டார்
காலமும் காலனும் எங்கள் அன்பு ஜொசபீன் அக்காவுடன்
கதறி கதறி அழ எங்களை வைத்துவிட்டு - எங்கள்
பாபாவை பிரிந்தது என்றுமே தாங்க முடியாத துயரம்,,,,
உள்ளத்தில் இடியாய் விழுந்த ஒரு துயர செய்தி
கன்னத்தில் நீரை வழிந்தோட செய்த ஒரு வருந்தும் செய்தி
என்னென்று சொல்வது ஏங்கித்தவிக்கும் அக்காவுக்கு ஆறுதல்
பக்கத்தில் இருந்து பாசத்தை பொழிந்தவர் ,சட்டென்று
துக்கத்தில் விட்டுவிட்டு பிரிந்த துயரத்தை எப்படி தாங்குவா
பிள்ளைகள் கல்வியில் வளர்வில் முழுமூச்சாய் இருந்தவர்
இனி இல்லைஎன்று எண்ணும்பொழுது தாங்க முடியுமா துயரத்தை
துடியாய் துடித்து அழுகுரல் எழுப்பும் பாலன்களை இனி
வாழ்வில் சுமக்கும் தந்தை எப்போது வருவார் என்ற ஏக்கம்
நெஞ்சில் எழும் அத்தனை கேள்விகளுக்கும்
ஆழ்ந்துயில் கொண்ட பாபா அண்ணன் இனி வருவாரா ,,,
அவர் நினைவுகளே எங்களுடன் என்றென்றும் கூடவரும்
அவர் பசுமையான நினைவுகளே என்றென்றும் கூட வரும் ,,,,,
அவரது ஆத்மா இறைவன் திரு நிழலில் சாந்திபெற வேண்டும் என
வேண்டி பிரார்த்தித்து கண்ணீர் பூக்களை பாதத்தில் தூவி
மானசீகமாய் வணங்கி விடைபெறுகின்றோம் ,,,,,,
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ,,,,,,,
இங்கனம் கண்ணீர் பூக்களை தூவும்
பாபா அண்ணாவின் இழப்பினால் துயரில் தவிக்கும் சிவேமனகை குடுப்பமும் ஜொசபீன் அக்காவின் புலம்பெயர் முகநூல் உறவுகளும் ,,,,,,,

பாசமிகு.செல்வபாபா சவரிதாஸ் நெல்லையில் நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். பாபா கம்பீரமும்,கருணையும் ஒருங்கே பெற்ற சிறந்த மனிதர். நான் சில மாதங்களுக்கு முன்பு தூய சேவியர் கல்லூரியில் சிறப்புரையாற்றச் சென்றிருந்த பொழுது, நான் தங்கியிருந்த விடுதிக்கே வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் கலந்துரையாடினார்.[அந் நிகழ்ச்சிக்கு ஜோஸ்பின் தான் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது] 
''எவ்வளவு படித்திருந்தாலும் என் மனைவிக்கு ஒன்னும் தெரியாது,அவ மண்ணு' என்று சொல்லி மகிழும் ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியின் அறிவு விசாலமடையவும், அது சமூகத்திற்கு பயன்படவும் ஊன்றுகோலாக இருந்தவர். மனைவியை அழகுப்படுத்தி பார்க்கின்ற கணவர்கள் மத்தியில் மனைவியின் ஆளுமையை வளர்த்தெடுத்து அழகு பார்த்த அற்புத மனிதர்.அவரின் இழப்பு அவர் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல மனித நேயமிக்க எல்லோருக்குமான இழப்பாகும்.சகோதிரி ஜோஸ்பின் மீண்டெழுந்து பாபாவின் விருப்பப்படி மீண்டும் அதே கம்பீரத்தோடு பயணிப்பதே அவருக்குச் செலுத்துகின்ற ஒரே அஞ்சலி.நானும்,தம்பி நெல்லை அப்துல் ஜாபரும் அவரின் இல்லத்திற்கே சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம்.




நான் இந்த செய்தியை பார்த்து அதிர்ந்தே போனேன்.
வார்த்தைகள் வரவில்லை.
நான் சகோதரி ஜோசப்பினுடன் தொலைபேசியில் அதிகம் பேசியிருக்கிறேன். ஒருமுறை அவர் கணவருடனும் பேசியிருக்கிறேன். இந்தியா வரும் போது ஒருமுறை வாருங்கள் என்று கூட சொன்னார். நினைத்து பார்த்தால் கடினமாக இருக்கிறது. குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் ஒருவனாக இணைந்து கொள்கிறேன். பாபாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.வார்த்தைகள் வரவில்லை.


Subi Narendran 




 சொல்ல முடியாத அளவு சோகத்தோடு இதனைத் தெரிவிக்கிறேன். அன்பு மனைவி ஜோவையும், சாம், ஜெரி என்ற இரண்டு மகன்களையும் தவிக்க விட்டு மறைந்து விட்டார். மிகவும் அன்பான கணவனும் தகப்பனும் ஆவார். பாபாவின் அன்பை வார்த்தையால் சொல்ல முடியாது. மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று சொல்லும் குரல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பாபாவின் ஆன்ம சாந்திக் காகப் பிராத்திக்கிறேன். ஜோவுக்கும் குழந்தைகளுக்கும் இந்தக் கஷ்ட வேளையில் கடவுள் துணை இருக்க வேண்டும்.





Our family friend Baba (Selvababa) from Thirunelveli, South India passed away today morning in an accident. My heart felt condolences to their family & friends. May his soul rest in peace. He will be in my thought & heart always


Muthalankurichi Kamarasu 

எனது அன்பு சகோதரிக்கு நடந்த சோகத்தினால்இரண்டு நாள் வேறு வேலையே செய்ய முடியவில்லை
அன்பு சகோதரி ஜோஸ்பின் பாபா. சேவியர்கல்லூரி பேராசிரியர். எனது மகன் அபிஷ்விக்னேஷ்க்கு முதலாமாண்டு பொறுப்பாளர். ஒரு நாள் நான் எழுதிய நெல்லை ஜமீன்கள் நூலுடன் கல்லூரி வகுப்புக்குள் நுழைய, அதன் நூலாசிரியர் நான் தான் என்று என் மகன் மூலம் தெரிய, என்னை சந்திக்க தனது கணவர் பாபாவுடன்செய்துங்கநல்லூரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
வந்தவர்கள் எனது குடும்ப நண்பர்களாவே மாறிவிட்டார்கள்.
ஏதோ என்னுடன் பிறந்து வளர்ந்தவர் போலவே எங்கள் குடும்ப உறவினராகி விட்டார்கள்.
பாபாவும் நல்ல சுறுசுறுப்பானவர். ஆடிட்டர். எனது புத்தகங்களை படித்து கருத்து சொல்லும் வாசகர். கடந்த 20.11.2015 அன்று நெல்லை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்னுடைய புத்தக வெளியிட்டு விழாவிற்கு தனது அலுவல் இடையில் வந்து வாழ்த்து கூறி. என்னை கௌரவ படுத்தினார்.
பாபா தனது மனைவி ஜோஸ்பின் உயர்வுக்காக பாடுபடுபவர். சகோதரி ஜோஸ்பின் போட்டோ கிராபிக் ஆசைக்காக அவர் நெல்லை வீக்லி கிளப்புடன் மனைவினை அழைத்துக்கொண்டு அனைத்து இடங்களிலும் சென்று சுற்றி வந்தவர். சொல்லப்போனால் அந்த கிளப்பை எனக்கு அறிமுகம் செய்ததே பாபா தான்.
சகோதரி தனது சிறுகதை தொகுப்பு நூலில் அடிக்கடி அத்தான் என்றவொரு கதாபத்திரத்தில் பாபாவை சித்தரிப்பார். அந்த அத்தான் அவரது கணவர்தான் என்பதை படித்து முடிந்தவுடன் அறிந்து விடலாம். முக நூல் மூலமாக மிகப்பெரிய எழுத்தாளர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவர் சகோதரி. அவருக்கு பக்கபலனாக இருந்து உதவி புரிந்தவர் அவரது கணபர் பாபா. இருவரும் இணைப்பிரியாத தோழர்கள்.
நம்பவே முடியவில்லை. நேற்று காலை 8 மணிக்கு கே.டி.சி.நகர் விபத்தில் பாபா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்ற செய்தியை நான் பத்திரிக்கை நண்பர்கள் வாயிலாக கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. நானும், நண்பர் பரமசிவனும் பாளை மேட்டுதிடல் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு அவரின் உறவினர்களை விட நண்பர்கள் அதிகம் பேரை கண்டேன். என் குடும்பத்தில் பழகியது போலவே நண்பர்கள் பல குடும்பங்களில் குடும்பநண்பராகவே பழகி இருக்கிறார் பாபா.
வழக்கு பதிவு செய்ய நெல்லை சந்திப்பு டிராபிக் காவல் நிலையத்தில் மகன் உள்ளார் என்று தகவல் கிடைத்தது. அங்கு சென்றோம். பாபா£வின் மனைவி சகோதரி கணவரும் தூத்துக்குடி துணை தாசில்தாருமான பிரபாகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அவர்களின் மூத்த மகன் பிளஸ் டூ மாணவன் அவரோடு இருந்தான்.
அவனும் தகப்பனார் போல நல்ல நண்பர்கள் வைத்திருந்தான். அவனின் பள்ளி மாணவ தோழர்கள் அனைவரும் அவனின் தோளோடு தோளாகவே நின்று அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அனைத்து பணிகளையும் முடித்து மாலை 3 மணிஅளவில் போஸ்ட் மார்ட்டம் முடித்து அனுப்பினார்கள். பிரபாகரன் சாருக்கு உதவியாக அது வரை கூடவே இருந்தேன்.


எப்போதும் அத்தான், அத்தான் என்று அவரோடு நின்று புன்சிரிப்போடு வரும் சகோதரி ஜோஸ்மின், இன்று தனியாக பாபா உடலை பார்த்து கதறி அழும் காட்சியை பார்க்க வேண்டுமா...? என்னால் முடியவில்லை. எனவே அவர் வீட்டுக்-கு செல்ல எனக்கு மனம் வரவில்லை.
நானும் சராசரி மனிதன் தானே. 25 வருடமாக பகுதி நேர நிருபராக பல விபத்துகளையும் உடலையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு மனதுக்கு பிடித்து, என்னோடு வாழ்ந்த பாபாவின் உடலை என்னாலே பார்க்க முடியவில்லை. என் அன்பு சகோதரி எப்படி பார்க்க போகிறாரோ...
அப்படியே வீட்டுக்கு வந்து விட்டேன். "ஆண்டவனே.. என் சகோதரிக்கு ஆறுதல் தா... ஆதரவு தா.."
இரண்டு பையனும், இந்த மண்ணுலகில் சிறந்தவர்களாக விளங்க அருள் புரிவாயாக.. அவர்களுக்கு நல்ல கல்வி வேண்டும்.
ஆண்டவனிடம் பிராத்தனை செய்வோம்
கண்ணீர் அஞ்சலி...
Srikandarajah கங்கைமகன்'s photo.
































திரு பாபா அவர்களது அகால மரணச் செய்தி கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம் பிறப்பும் இறப்பும் நிட்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அகால மரணம் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கின்றது. மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இடையில் விட்டு இறையடி சேர்ந்தது அவரது குடும்பத்திற்குப் பேரிழப்பாகும். திருமதி பாபா அவர்களுக்கும், அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆண்டவன் வாழ்க்கையில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து நிறைவாக வாழவைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.




இன்று நண்பர் பாபா மரணித்துவிட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ந்துபோனோம். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. 
ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.



இன்று பாபா இறந்தது கேள்விப்பட்டு அழுகை வந்தது ... ஜோசெப்பின் இலங்கைத் தமிழர்கள் பலரை அண்ணாமார்களாகக் கொண்டு மிக அன்பாக பழகுவார் . அவரின் கணவரின் அன்பால் உபசரிப்பால் உச்சி குளிர்ந்தவர் பலர் .. இன்று அவரின் கணவர் பாபா இறந்தது மிகவும் கவலையும் அழுகையும் தருகிறது ..முகப்புத்த நட்பில் மிகவும் பிடித்தவர் ... அவர்கள் இருவருடனும் சில தடவைகள் தான் இணையங்களுடாகக் கதைத்தேன் ..எப்பொழுதும் குடுமபத்துடன் இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுவார்கல் ..இந்தக் கோடை விடுமுறை செல்லலாம் என்றும் எண்ணினேன் .... இப்படிநடந்து விட்டதே அவரின் இழப்பால் துயருரும் மனைவி பிள்ளைகளுக்கும் , உறவுகளுக்கும், என்போன்ற நட்புகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.








Kumar Sankaralingam Really unfortunate to hear this bad news,such a wonderful person, My heartfelt condolences to the family, may God give courage to come-out of this sudden lose. May his soul RIP.

ூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.