4 Oct 2010

திருட்டு முதலாளிகள்.....

                                                                                                                                                     நாடு வளம்பெற மக்களுக்கு தொழில் வாய்ப்பு பெருகும் என ஒரு கூற்றுண்டு. ஆனால் போல் சமீப காலமாக தமிழகத்தில் எங்கு நோக்கினும் உழவர் சந்தை என்பது போல் வேலை வாய்ப்பு சந்தை என ஒன்று நடத்துகின்றனர்.  அரசியல்வாதிகள் வேறு வந்து,  வேலை தருவதை சும்மா த்ர்மத்திற்க்கு பிச்சை போடுவது போல் பேசி செல்கின்றனர். ஆனால் இதன் உண்மை நிலைவரம் கண்டால் பரிதாபமே.                                                                                                                              எங்கள் பகுதியில் ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ஒரு கழிவறைஐ சுத்தம் செய்ய 300 ரூபாய் தர வேண்டும். அதே போல் தோட்டம் சுத்தப்படுத்த 250 ரூபாய், ஒரு கொத்தனாருக்கு 300-500 ரூபாய், ஒரு வீட்டு பணிபெண்ணுக்கு ஒரு வாளி துணி துவக்க 50 ரூபாய், ஆனால் ஒரு  பட்டதாரி ஒரு மாதத்திற்க்கு 3-4 ஆயிரம் ரூபாய்க்கு அடிமையாக எளிதாக கிடைப்பான். அவனை வைத்து மேலாளருக்கு காப்பி வாழ்கி வர வைக்கலாம்; முதலாளி அம்மா  துணி இஸ்திரி கொடுத்ததை கூட வாங்கி வர வைக்கலாம்.                                                                                                                 ஆறு மாதம் முன்பு நடந்த வேலை வாய்ப்பு சந்தையின் மறு நாள் தொடங்கி இளம் பெண்கள் 3- 4 பேராக திருநெல்வேலி கார்ப்பரேஷன் எல்லையோரமுள்ள எங்கள் பகுதிக்கும் படயெடுத்தனர் பம்பு செட்டு, மின் துடைப்பம் போன்றவை விற்பதற்க்காக. வீணாபோன வெயிலில் பேசக்கூட திராணியற்று மேடம்,மேடம் என கூவி அழைத்து நிற்பதை பார்க்க எங்கள் ஊர் கீரக்கார அக்காவை விட பரிதாபமாக இருந்தது.                                                                                                                      
                                                                                                                                       முதுகலை பட்டம் பெற்ற என்னுடைய நண்பர்கள் 4 ஆயிரம் ரூபாய்க்கு 2 வருடமாக ஊடகத்துறையில் வேலை செய்து வருகின்றனர்.  அவர்கள் கூறுவது என்னவெற்றால் நாங்கள் படித்த படிப்புற்க்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லை. எங்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை ஊதியம் பெறும் அடிமைகளாகவே பார்க்கின்றனர் என்பதே.                                                                                                                                                                        ஒரு முறை எங்கள் பல்கலைகழகத்திற்க்கு வேலை  தருவதாக வந்தவர்கள் ஒரே வேலைக்கு சென்னை என்றால் ஒரு ஊதியமாம், திருநெல்வேலியென்றால் அதன் அரைப்பகுதி ஊதியமாம்.  உண்மையில் சென்னையை விட பொருட்கள் இங்கு விலை அதிகமாகவே உள்ளது. இங்குள்ள ஆசிரியர்களுக்காகவே விலைஐ அதிகமாக வசூலிக்குகின்றனர்.  மேலும் தமிழகத்திற்க்குள்ளே சென்னை தமிழர்களுக்கு ஒரு நியாயம் மற்ற தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்றால் என்ன சொல்ல?                                                                                                                                                                                      எனது கணவர் 3 வருடம் முன்பு ஒரு கனேடிய கணக்கு நிறுவனத்தில் தணிக்கையாளராக (internal auditor)பணிபுரிந்தார்.  இங்குள்ள அலுவலகமும்  கனடாவிலுள்ள அலுவலகவும் இணைந்து வேலை செய்யும். அங்குள்ள ஒரு நபருக்கும் தரும் 2000 டாளர் வைத்து இங்கு 10 பேருக்கு ஊதியம் தந்தனர்.  தென் தமிழக முதலூர் என்ற கிராமத்தை  சேர்ந்த முதலாளி ஒவ்வொரு முறை வரும் போதும் ஊதியம் உயரலாம் என எதிர்பார்த்திருப்பார்கள். அந்த முதலாளியோ வாய்க்கு கனடா நாட்டு மிட்டாய் , தலைக்கு போட தொப்பி, போட்டு தூங்க டீ ஷர்ட் கொண்டு கொடுப்பார். போவதற்க்கு முன்பு ஊழியர்களை அழைத்து ஒரு உயர்ரக உணவகத்தில் உணவு வாங்கி தருவார்.  பின்பு விடைபெரும் வேளையில்  தற்போது உலகளவில் நிதிநிலை மோசமாக உள்ளது.  கடவுள் அனுமதித்தால் அடுத்த முறை ஊதியம் உயர்த்தபடும் என கூறி செல்வார்.அவ்வாறே மூன்று வருடம் ஓடியது.  வேலை நேரவும் மாலை 5 தொடங்கி காலை 2 வரை, பின்பு காலை 9 முதல் மதியம் 2 வரை. போதாதற்க்கு கண்காணிக்கும் காமரா, உளவு சொல்வதற்க்கு என்றே முதுகெலும்பில்லா சில அலுவலர்கள் மேல்ப் படியாக முதலாளியின் இந்திய உறவு கண்காணிகள் என பட்டயை தீட்டுவார்.  இந்தியா  உறவின- முதலாளிகளின் கொட்டகம் தாங்காது.  அவர்கள் வீட்டு கைப்பிள்ளை கூட உதவி இயக்குனர், நிறுவன அதிகாரி என பதவி பெற்றிருக்கும்.  இங்குள்ள விடுமுறை கிடையாது, பஞ்சபடி,போனசு என கேட்பதே பெரும் குற்றம்!.     அதற்க்கு எங்கள் ஏழை!! இந்திய முதலாளிகள் எவ்வளவோ மேல் தாத்தா, பாட்டி செத்தால் விடுமுறையுண்டு, காதுகுத்து,கோயில் கொடைக்கெல்லாம் அனுமதியுடன் செல்லலாம், தீவாளிக்கு கொஞ்சம் பணவும் தருவர்.   சில இரக்க குணமுள்ளோர் குழந்தைகள் கல்வி கட்டனத்தைக்கூட ஏற்று கொள்வர்.(எல்லோருக்கும் பொருந்தாது,உயர் நிலை அலுவலகர்களுக்கு மட்டும், முதலாளி விருப்பினாலும் இந்த விசுவாசமான அதிகாரிகள் கீழ் நிலை வேலையாட்களுக்கு தர அனுமதிக்க மாட்டார்கள்)                                                                                                                       தற்போது இந்திய பத்திரிக்கையை எடுத்தால்  தனியார் ஊழியர்கள் கோடிகள் வாங்குவது போலவும் கலாச்சாரத்தை அளிப்பது போலவும் நம்ம ஊர் கலக்டரை விட ஊதியம் வாங்குவதாகவும் கதை எழுதுகின்றனர்.  சென்னையில் கூட தனியார் நிறுவனங்களில் 30 ஆயிரம் என எழுதிகொடுக்க பட்டிருக்கும் ஆனால் பெறுவதோ 15 ஆயிரம் மட்டுமே. பெரும் சம்பளம் பெறுவது மிக சொற்ப்ப தமிழர்களே. தமிழ் பேச தெரியாதா மலையாளம்,வட மாநிலத்தவர்க்கே மவுசு. சென்னையில் கூட வணிகத்தில் பட்டம் பெற்ற பெண்கள் 3 ஆயிரம் ரூபாய்க்கே வேலை செய்கின்றனர்.                                                                                                                                                   காற்றோட்டம் அற்ற குளிரூற்ற பட்டஅறைகளில் வேலை செய்து ஆரோக்கியமான வாழ்வை இழப்பது மட்டுமே மிச்சம்!!.

3 Oct 2010

சமரசம்

சமரசம் பற்றி விசரன் அண்ணா அவருடைய பதிவில் கதைத்திருந்தார். 




நான் மேற்கொண்ட சில சமரசத்தை பற்றி அப்போழுது ஞாபகம் வந்தது. சமரசம் செய்து கொள்வது அவ்வளவு எளிதோ மகிழ்ச்சியானதோ ஆன  செயல் அல்ல என்பதே உண்மை. துன்பத்திலும் துன்பமாக இருப்பினும் சூழல்,  கலவரம் அற்று வாழும் ஆசை, என பல காரணங்கள் நாம் சமரசப்படுத்தி கொண்டு வாழகொள்ள நிற்பந்திக்கபடுகின்றோம்.


 3 வயதிலே தம்பி தங்கையிடம் சமரசத்துடன் வாழு வேண்டிய கட்டாயத்தில் என் அம்மாவின் மடியை அவர்களுக்கு விட்டு கொடுத்தேன். வளர வளர சமரசமே வாழ்க்கையாகி போனது. அம்மாவிடம் சமரசத்துடன் வாழ வேண்டுமென்றால் அம்மா விரும்புவதுபோல் உடையணிய வேண்டும், அம்மா ஆசைப்படுவது போல் சடை கட்ட வேண்டும், அம்மா அனுமதிப்பவர்களிடம் பேச வேண்டும், அம்மா சொல்லும் போது தூங்க வேண்டும் அம்மா எழுப்பும் முன் எழும்பவேண்டும் என ஆகியது.
“வீட்டு சூழலே பார் தம்பி தங்கை வாழ்க்கையும் பார் “ என கூறியபோது கனவு காண துவங்கும் முன்னே திருமணத்திற்கும் சம்மதித்தேன்.                            
பின்பு புகுந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மாமியார் விருப்படி பூ வைக்க வேண்டும் நகையணியவேண்டும், அவர் சொல்வது போலவே  எண்ணவேண்டும் , ஏன் சாப்பிட கூட வேண்டும் என கற்று கொண்டேன்.
இப்போழுது கூட என் மகன்களிடம் சமரசம் கொள்ள வேண்டுமென்றால்  ஒருவனுக்கு என் கணிணியை தர வேண்டும் அடுத்தவனுக்கு என் அலை பேசியை தரவேண்டும்.
எங்கெல்லாம் சமரசமாக போக மனம் ஒத்துழைக்கவில்லயோ அங்கெல்லாம் பெரும் சண்டை வெடித்தது, எங்கெல்லாம் சமரசத்துடன் வாழ வேண்டுமென முடிவெடுத்தேனோ அங்கெல்லாம் வெடித்தது என் இதயமே!!!.  சமரசபட்டு வாழ்ந்ததில் வருத்தவுமில்லை, சமரசம் கொள்ளாது இருந்ததால் தனிமைப்படுத்த பட்டதில் துயரவுமில்லை.


சமரசப்படாது வாழத்துடிக்கும் மனிதர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் மட்டுமல்ல வாழும் சமூகம் மட்டுமல்லாது சில வேளைகளில் நாடுகள் கூட சேர்ந்து  ஒடுக்குவதை கண்டு என் மனம் கலவரம் கொள்கின்றது.

27 Sept 2010

பார்வை பலவிதம்........

காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுத்தம் இல்லை என வெளிநாட்டு பிரநிதிகளின் 
புகாருக்கு பதிலளிக்கும் வகையில் போட்டி ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர்லலித்
 பனோட் அளித்த பேட்டியில் “ தூய்மை தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு.


 எங்களை பொருத்தவரை சுத்தமாக இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களின்
 பார்வைக்கு அது சுத்தமற்றதாக தெரிகிறது என்றார்”. அதிகாரிகளின்  மெத்தனபோக்கு 
 மனநிலைக்கு  மிக துல்லியமான எடுத்து காட்டான வார்த்தையாக இது உள்ளது. 
 நாம்  நம் நீர் நிலைகள் , அரசு ஆஸ்பத்திரி, அரசு பள்ளியின் தூய்மையை பற்றி கதைக்கும் போதும் இவ்விதம் தான் அதிகாரிகளின்  நிலைபாடாக இருக்கும் போலும்.


ரெட்டியார் பட்டி அரசு பள்ளியை கடந்தே எனது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. 
 பள்ளியை சுற்றி சுற்று மதிலுக்கு பதிலாக பற்றிகள் மேயும் சாக்கடையை உள்ளது.  
மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் ஆசிரியர்களும், படிக்கும் புத்தகம் மட்டுமல்ல  ஆரோக்கியமான மனதிற்க்கும் உடல் நலத்திற்க்கும்  காற்றோட்டமான  சுற்று சூழலும் அவசியம் என  பள்ளி அதிகாரிகளோ  ஆசிரியரோ புரிந்து கொள்ளும் நாட்கள் அருகில் இல்லை என்பது மட்டும் தெளிவாகின்றது.


அதே போன்றே அரசு ஆஸ்பத்திரிக்கைகளின் நிலையும். ஆஸ்பத்திரிக்குள்ளும் சுற்றியுள்ள பகுதிகள்   துர்நாற்றம் நிறைந்ததாகவே காணபடுகின்றது. நோயை தீர்க்கும் இடம் என்பதை விட நோயை பெற்று கொள்ளும் இடமாகவே காணபடுகின்றது. சமீபத்தில் என் கணவருக்கு தெரிந்த ஒரு நபர் வாகன விபத்தில் சிக்கி  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளார் என கேள்வி பட்டு காண செல்ல வேண்டியது ஆயிற்று. ஆஸ்பத்திரியில் எந்த அறையில் உள்ளார் என தெரியாததால் ஆஸ்பத்திரியின் பல அறைகளை கடந்து காண செல்ல வேண்டி வந்தது. எந்த ஒரு அறையும் துளியும் சுத்தம் இல்லாது இருந்தது . மூச்சடக்கியே  நாங்கள் காண சென்ற நபரின் அறையின் அருகில் செல்ல முடிந்தது.  வெத்தலை எச்சில், காயித துண்டுகள்,இரத்த கறை என நோயாளிகளின் அறைகள் காண- சொல்ல முடியாத வண்ணம் அசுத்தமாகவும் 
நாற்றம் கொண்டதாகவும் இருந்தது.


திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரரிஐ  கணக்கிடும் போது நாகர்கோயில் அரசு ஆஸ்பத்திரி 
சுத்தத்தில் நல்ல நிலையில் உள்ளது என சிகித்சை மேற்கொண்ட மக்களிடம் இருந்து 
கேள்விபட்டுள்ளேன். திருநெல்வேலி கார்ப்பரேஷன் சேர்ந்த பகுதியுள்ள ‘டவுண்’  பகுதியை கடந்து பேருந்தில் கூட பயணிக்க முடியாத சூழல்.  பெரும் வியாபாரிகள் மற்றும் மக்கள் கூடும் இடமே அது. இருப்பினும் மூக்கை பொத்தாது கடந்து செல்ல இயலாது இயலாத சூழல். அரசின் கடமை வரிகள் வசூலிப்பது மட்டும் தானோ.  ஒருவேளை சுத்ததை பற்றி இவர்களின் பார்வை எப்படி இருக்குமோ. எல்லாம் பராபரனுக்கு மட்டுமே வெளிச்சம்! 

26 Sept 2010

“ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு”.


கடந்த ஓராண்டு காலமாக இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கென ஈழம் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு பேராசிரியர் முனைவர் பே.கோவிந்தராஜ் அவர்களின் வழிகாட்டுதலில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்க்கு சமர்ப்பித்துள்ளேன்.   
                                         பேராசிரியர் முனைவர் கோ. ரவிந்தரன் அவர்களால் மூன்று வருடம் முன்பு அறிமுகமான வலைப்பதிவுகள் எனது வாழ்வில் ஒரு பெரும் வாசிப்பு தளமாக அமைந்தது. தமிழ் ஊடகங்களால்  ஈழ செய்திகள்  தர இயலாத சூழலில் தமிழ்மணம் வழி உண்மையான செய்தி அறியமுடிந்தது என பேராசிரியரின் வலைப்பதிவில் வாசித்திருந்தேன். இந்த மைய்ய கருத்தை தேடும் பணியாகவே இவ் ஆராய்ச்சி  என்னை  இட்டு சென்றது.
வலைப்பதிவுகள் முதல் முதலாக பாட பகுதியின் பாகமாகவே எங்களுக்கு அறிமுகமாகியது.  வகுப்பு-தேற்வுக்கென வாசிப்பாளராகிய நான் பின்பு வலைப்பதிவுகளுக்கு என என் நேரத்தை நிறையவே செலவிட்டேன். சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது நாம் பத்திரிக்கைகளில்  இருந்து பெறும் செய்தியை விட ஆழவும் சாரமுள்ளதாக இருந்தது. மேலும் தனி மனிதர்களின் பார்வை  நம்மை வாசிப்பின்  மற்றொரு தளத்திற்க்கு இட்டு செற்றதை காணமுடிந்தது.                                                                                                                                                                                                           ஈழப்போர் செய்திகளை பத்திரிக்கையின் வாசித்த போது நான் கண்டது  ஈழ செய்தி பத்திரிக்கைக்கு பத்திரிக்கை அதன் அர்த்தம் கொள்ளுதல் மாறுபட்டு கொண்டே  இருந்தது.  அத்தருணத்தில் என்னுடைய பார்வை வலைப்பதிவுகளை நோக்கி சென்றது.  பத்திரிக்கைகள் ஈழத்தை  பற்றி கதைப்பதை தவிர்த்து, வலைப்பதிவர்களான சாதாரண மக்கள், என்ன கூறுகின்றனர் என்ற அறியும் நோக்குடன் ஈழ வலைப்பதிவுகளை தேடி சென்றேன்.  தனி  மனிதர்களின், சிறப்பாக அம்மண்ணின் மக்களான ஈழ மக்களின் கருத்து எண்ணங்கள் ஆசைகள், விருப்பங்கள், அரசியல் பார்வை,  அறிய முடிந்தது.  அவர்களுடைய கலாசாரம், ஆசைகள், உரிமை எவ்வாறு புரக்கணிக்கபடுகின்றது,  அரசியல் மற்றும் அதிகார மோகத்தால் ஒரு இனமக்கள் எவ்வாறு நசுக்க படுகின்றனர் என காண இயன்றது. ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என அறியப்படும் ஊடகங்களால் அரசியல் மற்றும் சில காரணங்களுக்காக உண்மை மறைக்கபட்டு  திரிக்க பட்ட செய்திகள் தரப்படும் சூழலில் தனி மனிதர்களால் எழுதப்படும் வலைப்பதிவின் தேவை, தாக்கம் அதிகமாகின்றது என கண்டுகொண்டேன்.
எனது பாடப்பிரிவும் ஊடகத்துறை சார்ந்து இருந்ததால் இக்கருத்தை தேடும் விதமாகவே எனது ஆராய்ச்சியை அமைத்துகொள்ள முடிவெடுத்தேன். மிகவும் விருவிருப்பான நாட்களாக இருந்தது. எனது   ஆராய்ச்சிக்கு என  6 வலைப்பதிவுகளை தேர்ந்து  எடுத்துள்ளேன்.   இவ்வலைபதிவுகள் தனி மனிதர்களின் எண்ணங்களாக இருக்க வேண்டும் மேலும் ஈழசெய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும்  எச்சரிக்கையாக இருந்தேன்.  உள்ளடக்க பகுந்தாய்வு முறையில் பண்பார்ந்த மற்றும் அளவுசார்ந்த மதிப்பீடுகள் கொண்டு ஆராய்ச்சி முடிவுக்கு எட்டியுள்ளேன்.
தலைப்பை  தேர்ந்தெடுக்கும் உரிமை தந்தது, மேலும் ஆராய்ச்சியை நடத்த வழிகாட்டி  உற்சாகப்படுத்திய   எங்களது துறைத் தலைவர்
பெ. கோவிந்தராஜு அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  தனி மனித சுதந்திரத்தை என்றும் மதிப்பவர் எங்கள் துறைத்தலைவர்.
இவ்வாராய்ச்சிக்கு என 517 பதிவுகளை மிகவும் ஆழமாக வாசிக்க பட்டாலும் இதன் பொருட்டால்  பல உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பல ஈழ தமிழர்களின்  வலைத்தளங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றேன்.  மிகவும் அருமையான  அறிவுசார்ந்த மக்களிடன் கலந்துரையாடல் மிக்க மகிழ்ச்சியை தந்தது.  எனது ஆராய்ச்சிக்கென நான் சில விளக்கங்களை இணையம் வழியாக வலைப்பதிவர்களிடம் ஆராயும் போது, எவ்வித தயக்கவும் இன்றி மிக சிறிய கால அளவுக்குள் சில வேளைகளில் 2 அல்லது 3 மணி நேரத்திற்க்குள்ளாக  எனக்கு  பதில் தந்து உதவியுள்ளனர்.  மேலும் சில நல்ல வலைப்பதிவுகளை  எனக்கு அறிமுகபடுத்தியுள்ளனர். அவர்களுடய பண்பார்ந்த எழுத்து,சிந்தனை எனக்கு உற்சாகமூட்டியுள்ளது.  நண்பர்களாகவும் சகோதர்களாகவும் என் வாழ்வில் வந்து சென்ற என் ஈழ சகோதர்களை வணக்குகின்றேன். அவர்களின் சிந்தனை வளம், சுதந்திர தாகம், தனிமனித ஆளுமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. சிறப்பாக நான் தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகளின் ஆசிரியர்களாம் -வலைப்பதிவர்கள் கானா பிரபா, தமிழ் சசி, தீபச்செல்வன், தமிழ் நதி, ரிஷான் ஷாரீப் போன்ற என் இனிய வலைப்பதிவர்களுக்கு என் நன்றிஐ காணிக்கையாக்குகின்றேன்.
மேலும் ஆக்கபூர்வமான சொல்களால் என்னை உற்சாகப்  படுத்திய பேராசிரியர் முனைவர் கோ. ரவீந்திரன், பேராசிரியர் முனைவர் வெ நடராஜன், பேராசிரியர் நடராஜன் பொன்னம்பலம், சவேரியார் கல்லூரி ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ஜேசன் பிர்ஸ்லி ராஜ் நண்பர் ராம்ஜி, தூபாயில் பணிபுரியும் நண்பர் சய்யப்துள்ளா, சஞ்சயன் மாணிக்க ராஜ், முனைவர் மு இளங்கோ,  தோழி கிருஸ்டி சில்வெஸ்டர், போன்ற சான்றோரையும் இத்தருணத்தில் நினைவு கூறுகின்றேன்.
மேலும் எனது எழுத்தை சரிபார்த்து தந்த   சிவந்தி ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் சேவியர் பெஸ்கி க்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.                                                                                                                                                எனது துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், என் வகுப்பு தோழர்கள், என் பெற்றோர், என் தங்கை, தம்பி, என் கணவரின் சகோதரிகள், கணவரின் நண்பர்கள், இவர்களின் நல் எண்ணமே என்னை முன் நடத்தியது.
இவ்ஆராய்ச்சியின் தாக்கத்தால், பூவுடன் சேரும் நாரும் மணம் பெறும் என்பது போல்  நானும் ‘ஜோசபின் கதைக்கிறேன்’  என ஒரு வலைப்பதிவை உருவாக்கி எனது சிந்தனையும் பதிவுசெய்து கொண்டு வருகின்றேன். மேலும் எனது ஆராய்ச்சிக்கு என வலைப்ப்திவர்களை எழுத தூண்டும் காரணிகள் மற்றும் மனமகிழ்ச்சி ஏது என அறிய முற்பட்டேன். மறுஇடுக்கைகள் வழியாக வலைபதிவர்கள் எழுத உந்தபடுவதை என் வலைபதிவுக்கு நான் பெறும் மறு இடுகை வழியாக  அனுபவ பூர்வமாக உணரமுடிந்தது.
மேலும் எனது அன்பு கணவரை நினைத்து பார்க்கின்றேன். அவருடைய இக்கட்டான சூழல் மத்தியிலும்  வெறும் ஆசை என நான் கண்ட கனவை நனைவாக்கியவர்.  முதுகலை பட்ட படிப்பு மேலும் இளம் ஆராய்ச்சி பட்ட படிப்பு ,  என  என்னையும்  இரு பிள்ளைகளுடன் சேர்த்து மூன்றாவது பிள்ளையாக நினைத்து படிக்க வைத்தார்.   என்னவரின் அன்புக்கும் தியாகத்திற்க்கும்  எனது ஆரய்ச்சியை சமர்ப்பிக்கின்றேன்.                                        என் குழந்தைகளுக்கும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளேன்.  பல வேளைகளில் அவர்களுடன் விளையாடும் நேரம் வலைப்பதிவுகளில் ஆழ்ந்து அவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளேன்.  பல வேளைகளில் கணிணிக்கென எங்களுக்குள் சமரசம் ஏற்ப்படாது  பெரும் வழக்கிட்டு, என்னவர் வந்து பஞ்சாயத்து செய்து வைக்கும் அளவுக்கு எங்கள் சண்டையை கொண்டுசென்றுள்ளோம். இருப்பினும் என்னை உருவாக்கும் என் சிற்பிகள்-என் குழந்தைகளையும் நினைத்து கொண்டு எனது ஆராய்ச்சி கட்டுரையை முன்னுரை, முன்நிகழ்ந்த புனராய்வு(Review of Literature), ஆராய்ச்சி,  ஆராய்ச்சி முடிவு, முடிவுரை, நான் சென்ற பாதைகள் என பிரித்து பல  பதிவுகளாக பதிந்துள்ளேன். 
தங்களின் கருத்தையும்  அறிய  ஆவலுடன் அன்பு தோழி,
சகோதரி ஜோசபின் பாபா.

19 Sept 2010

சில ஆண்கள்..........

நேற்று   எனது கணவரும் நானும் ஒரு மடிக்கணிணியின் தரத்தை சோதனை செய்து கொண்டிருந்தோம்.  புகைப்படங்கள், காணொளிகள்., பாட்டுக்கள் என கணிணி முழுக்க ஒரே கலவரமாக இருந்தது.  சில ஆலயங்களின் படங்கள் அருமையாக இருந்ததால்  எங்களுக்கு தேவயானவயே சுருட்டி கொண்டிருந்தோம்.  முதல் சில ஆல்பங்களில் அவர் ஆசை மனைவி, குழந்தை என குடும்பபடங்களாக ஓடி கொண்டிருந்தது. நான் சொல்ல வரும் நபர் கோட் சூட்டுடம் மிகவும் பவ்வியமாக  மனைவி,குடும்பத்துடுடன் காட்சி கொடுத்து கொண்டிருந்தார்.  போக  போக சாயம் வெளுப்பது போல அவருடைய பணியிடத்திலுள்ள சில புகைப்படங்கள் அவரே புடமிட்டு காட்டியது.  அப்படியே அம்பியாக காட்சியளித்தவர் ரோமியோ-வாக மாறிகொண்டிருந்தார். 

 அவரும் அவருடைய நண்பருகளும் கப்பலில் வேலை செய்வார்கள் போலும். கப்பலில் உள் அமைப்பை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தவர் அப்படியே சாப்பாடு  ,பிராந்தி பார் என கேமரவே வைத்து சிவதாண்டம் ஆடி கொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் பார் பெண்ணெயும் சுத்தி சுத்தி படம் எடுக்க ஆரம்ப்பித்து விட்டனர்.  அப்பெண்ணை  ஒவ்வொரு ஒருவராக சர்க்கசில் போன்று தூக்கி போட்டு விளையாடுகின்றனர்.  என் பார்வை அவர், அவரின் மனைவியுடன் நிற்க்கும் படங்கள் பக்கம் சென்றது.  மனைவி பூச்சூடி நகையணிந்து பட்டு சேலையணிந்து, பார்க்க துடிக்கும் ஆண் மனம் ஏன் அடுத்த பெண்களை இவ்வாறாக காண தோன்றுகின்றது .  இன்னும் வெறு விதமாக நினைக்க தோன்றியது. அவருடைய மனைவியும் கணவர் தான் மிகவும்  தாராளமாக மனதுடன் நடந்து கொள்கின்றாரே  நாமும்  மற்று ஆண்களுடன் தாராளமாக  நடந்து கொள்ளலாம் என எண்ணினால் விட்டு தான் வைப்பார்களா?

சமீபத்தில் ஒரு பெண் அலைபேசியில் அதிக நேரம் கதைத்து கொண்டிருந்தாள் என்ற காரணத்திற்க்காக மிகவும் கொடூரமாக எரித்து கொல்லபட்டார்.  அதிலும் பெரும் சோகம் இச்செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை தர்மமான எழுத்தாகும்.  அப்பெண் அலைபேசியில் பேசுவதை நிற்த்தும்  படி அவளுடைய கணவர் பணிந்ததாகவும் அவள் பணியாததால் தன் குடும்பத்தில் மானம் கப்பல் ஏறிவிடுமோ என நினைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாராம்.  ஒரு வேளை இவருடைய நேரத்தை இன்னும்  அதிகமாக மனைவிக்காக  செலவிட்டிருந்தால் அலைபேசியில் கதைப்பதை குறைத்து குடும்பத்துடன் ஐக்கியமாகி இருப்பாள்.  அதிலும் ஒத்து வரவில்லை என்றால் அவளின் விருப்படி அவளின் வாழ்க்கையை அமைத்து கொடுத்து இவரும் நலமாக வாழ்ந்திருக்கலாம். ஓர் கொலை  ஒரு பிரச்சைனக்கு தீர்வாகுமா. ?அதுவும் இரு குழந்தயின் தாய் அப்பெண்?


அதே போன்று சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு பெரும்  மதிப்பிற்க்குரியவரின் வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அவர் சமீபகாலமாக அவர் வீட்டிற்க்கு  போவதில்லை. விசாரித்தபோது சின்ன அம்மை வந்துவிட்டதாகவும் அவர்கள் வீட்டில் வர வேண்டாம் என சொல்லி விட்டதாகவும் கூறினார். நான் அவரிடம் பணம் உதவி கிடத்திருக்கும் அல்லவா என விசாரித்தேன்.  அந்த நபர் அரை லட்சத்திற்க்கும் மேல் சம்பளம்  வாங்கும் நபர், அப்பெண் ஒரு இளம் விதவை, மேலும் 1,3 வகுப்பில் படிக்கும் குழைந்தைகளும்  உள்ளனர். அக்குழந்தைகளும் சின்னம்மையால் பாதிக்க பட்டிருந்தனர் அச்சமயம். அப்பெண்  கூறிய சில விஷயங்கள் மிகவும் கொடியதாக இருந்தது. அப்பெரியவரின் மனைவிக்கு இவரின் நடைவடிக்கையை கண்காணித்து  கொண்டுயிருப்பதாம் வேலை.  இப்பெண்  தமது எண்ணமாக இருக்கலாம் என வெளிக்காட்டாமல் வேலை பார்த்து வந்தாராம்.  அப்பெரும்  மனிதர் ஒரு நாள் இப்பணிப்பெண்ணை அழைத்து, என் மனைவி  சந்தேகபடுகின்றாள்; உன்னை ஒன்றும் கூறமாட்டாள், நீ போன பின்பு என்னை திட்டுவாள்.  ஆகயால் என்னை கண்டாலும் காணாதது போல் நடந்து கொள் என அறிவுரை கூறினாராம்.  என்ன கொடுமை பாருங்கள்.  தன் தாலி கட்டின மனைவியிடம் உரையாடி தன் நிலையை வெளிப்படுத்த தைரியம் இல்லாது அவ் ஏழை பெண்ணை மேலும் மன உளச்சலுக்குள் உள்ளாக்கியுள்ளார்.  தன் மனைவி செய்வது தப்பு என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கி மனைவியிடம் காட்டும் கரிசனை மற்று பெண்கள் என்பதால் இளக்காரமா? மேலும் கணவனை சந்தேக கண்ணோடு பார்க்கும் பெண்களுக்கு தன் வேலைசெய்ய பணிபெண்கள் தான் அமர்த்த வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.


இவ்விதமாக குடும்ப சூழல், ஏழ்மை என பல காரணங்களுக்காக வீட்டு படி தாண்டி பணிக்கும் வரும் பெண்கள் இவ்விதமான கொடியவர்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.


நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்ந்தபோதும் இச்சூழலே உணந்தேன். பெண்களை மேலாளர் அந்தஸ்த்தில் உள்ள ஆண்கள் படுத்தும் பாடு சொல்லி ஆகாது.  நான் ஒரு போதும் பசி கொடுமை என்ற காரணத்திற்க்காக பணிக்கு செல்லும் சூழல் இல்லாததால் மேலாளகர்களிடம் பல முறை சண்டையிடுள்ளேன்.  மேலாளர்கள் பேச்சு மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கும்.  தன் மனைவியிடம் கை கட்டி பணிந்து போகும் பல ஆண்கள், அவர்கள் வேலையிடங்களில் அபலை பெண்களை இவர்கள் அடிமை போன்று நடந்துகின்றனர்.


  வேலையிடங்களில் என்று மட்டுமல்ல கல்வி கற்க்கும் இடங்களில் கூட இச்சூழலே!  ஒரு இளம் விரிவுரையாளர் எங்கள் துறையில் இருந்தார். நான் 10 வருடம் கடந்து கல்வி கற்க்கும் நோக்கத்துடன் சென்றதால் இளம்பேராசிரியர்கள் என்னை விட இளையவர்களாகவே இருந்தனர். அதில் ஒருவர் என்னை எங்கு கண்டாலும் கேலி பண்ணுவதையே பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.  திருமணத்திற்கு  பின்பு உங்களை போன்றோர்  படிப்பதால் எங்கள் பாட ப்பிரிவுக்கை மதிப்பு குறைவு என அலுத்துகொள்வார்.  துறை சார்ந்த மாணவர் கூடுகை நடைபெறும் போதும் என்னை வம்புக்கு இழுக்காது இருப்பது கிடையாது. நம் மத்தியில் இருக்கும் ஜோசபின் நம்மில் வயதில் மூத்தவர் அவரின் அறிவுரையை நாம் கேட்போம்...... என ஆரம்பிப்பார்! ஒரு முறை இச்செயலை பற்றி என் பேராசிரியரிடம் முறையிட்ட போது சில ஆசிரியர்களுக்கு சில மாணவர்களை சகித்து கொள்ள முடியாது ஆகயால் நீ படிப்பு என உன் லட்சியத்தை நோக்கி செல் தேவையற்ற கூட்டத்திற்க்கு பங்கு பெற  வேண்டாம் என கட்டளையிட்டார். அதன் பின் அவ்விளம் விரிவுறையாளரின் பேச்சிலிருந்து தப்பித்து கொண்டோம் என எண்ணிகொண்டேன்.  ஆனால் அந்த ஆசிரியரோ ஒரு நிகழ்ச்சிக்கு பணம் முழுவதுமாக கொடுக்க வில்லை என கூறி எனது தேர்வு சீட்டை வைத்துகொண்டு, தேற்வு எழுதும் கால் மணிநேரத்திற்க்கு முன்பு அந்த ஆள் என்னை என்னவெல்லாம் பேசவேண்டுமென்று நினைத்தாரோ அவ்வாறாக திட்டினார்.  அதில் ஒரு வார்த்தை “நீ என்ன பெரிய இவ்வளோ”,  கேட்டதும் நான் எதிர் பார்க்காதளவு என் பெண்மை சினம் கொண்டு  எழுந்தது.  நானும் பதில் அதே நாணயத்தில் கொடுத்திருந்தும்  ஒரு மாத காலம் மன உளர்ச்சலுக்கு ஆளானேன்.
 இவ்விதம்மாக பெண்கள் பலவிதத்தில் பலரால் சூரையாரைப்படுகின்றனர்.  அவ்விதம் மனபோங்குள்ள  ஆண்களை திருத்தவே முடியாது.  பெண்கள் தான் வளர்க்கும் மகன்களை செம்மையாக, மற்றவர்களை பெண் -ஆண் பேதமின்றி மதிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்.  அது கூட சாத்தியமா என தெரியவில்லை. தாய்மார்கள் கூட தன் மகன் அடாவடியாய் பேசுவதை ரசிக்கும் சூழல் இன்று காணப்படுகின்றது.  

14 Sept 2010

கேரள கரையில் அல்லோலப்படும் எங்கள் வாழ்க்கை

எங்கள் பகுதி இடுக்கி மாவட்டத்தை சார்ந்ததால் கல்வி, வசதி வேலை வாய்ப்பு என எல்லா விதத்திலும் பின் தங்கியிருந்தோம். கேரளாவில்  மற்ற மாவட்டகாரர்கள் கூட இடுக்கியா என காட்டுவாசி மக்களை பார்ப்பதை போன்று எங்களை நோக்கினர்.  நாங்கள் 10 வகுப்பு பரீட்ச்சையை எதிர் கொள்ளும் விதமே அலாதியானது. மாதிரி தேற்வு ,சோதனை தேற்வு என எல்லாமே எங்களுக்கு பொது பரீட்சை தான்.  எங்கள் பள்ளியில் 40% தான் மிக சிறந்த வெற்றி விகிதம். தேற்வில் முதலாவது வருவது, குத்தகைக்கு என்பது போல் ஆசிரியர் பிள்ளைகளே!  அவர்கள் குழந்தைகளை 7 ம் வகுப்பு வரை தரமுள்ள பள்ளியில் அனுப்பி படிப்பித்து விட்டு, 8 வகுப்பு முதல்  எங்கள் அரசு பள்ளிக்கு கொண்டு வருவின். தேற்வுக்கு என அவர்களுக்கு மட்டும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல்  என மிக சிறந்த  பயிற்ச்சி நடைபெறும். எங்களை போன்ற மாணவர்கள் அனுமதி பெறுவதும் அவ்வளவு எளிது அல்ல.
எங்கள் பள்ளி முதல்வர் கூட ஒரு நாயர் சமுதாயத்தை சேர்ந்த  ஒரு பெண்மணியாவார். அவருக்கு தமிழர்கள் என்றாலே  ஒரு அருவருப்பு, பூச்சி புழு போல நோக்குவார்.  நான் மலையாள  வழி கல்வி கற்பினும் 'அவள் தமிழரா?' என என்னை மட்டம் தட்டாது இருந்தது இல்லை.  எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவும் களையவும் இயலாமல் நாங்கள் படும் துன்பம் எண்ணிவிடல் ஆகாது.
 அவருடைய தங்கைதான் கணக்கு  பாடம் எடுத்தார்.  அவர் ஒரு நோட்டு புத்தகத்தில்  விடைகளை செய்து வைத்திருப்பார்.  அப்படியே அதை பார்த்து பலகையில்  எழுதியிடுவார்.   எனக்கு கணக்கு விருப்ப பாடம்!    7ஆம் வகுப்பில் ஹரிகரன் என்ற ஆசிரியர் சரியான  வழிமுறையுடன் கணக்கு நடத்தியிருந்தார்.    மேலும் டூஷன் செல்வதால் கணக்கு அத்து படியாக இருந்த்து.   அதனால் பலமுறை கரும்பலைகயில் நான்  கணக்கு பாடம் செய்துள்ளேன்.   என்னை பாராட்டுவதை கூட “தமிழச்சி கூட நன்றாக கணக்கு செய்கின்றாள் உனக்கு முடியாதா என என் மலையாளி தோழிகளை கிண்டல் செய்வார்”.   எனக்கு மிகவும் அவமானமாக தோன்றும்.   என் தோழிகளும் தமிழர் என்றாலே  முட்டாள் எனவும்   உன்  வழி சொந்தம் மலையாளிகளோ என்ற தோரணையில் வினவுவர்.  ,  ராமானுஜர்   தமிழ் மேதை தானை என பல அறிஞர்களை என் இன துணைக்கு  தேட வேண்டி வரும்.   3 வருடப்படிப்பும் எனக்கு மிகவும் கொடியதாக இருந்த்து.   விளையாட்டாக மலையாள வழி கல்வியை தேர்ந்து எடுத்ததின் பலனை அனுபவித்து  கொண்டிருந்தேன்.   பல வேளைகளில்  ஒரு சில ஆசிரியைகளால் தனிமையாக்கபட்டேன்.   ஆலிஸ் என்ற ஆசிரியைக்கு என்னிடம் குற்றம் கண்டு பிடிக்க முடிய வில்லை என்பதால் என் தம்பியை குறை கூறி என்னை மட்டம் தட்டுவார்.  எனது ஆளுமையை வளர்க்க  வேண்டிய வயதில் ஒரு வித பய-காழ்ப்புணற்ச்சியால் எனக்குள் ஒளிந்துகொள்ள பழகி கொண்டேன்.   சில விளையாட்டான பேச்சு கூட இன மொழி வெறியாக மாறுவதை கண்டு தோழிகளிடம் பேசுவதை தவிர்த்து எனக்குள்  பேசிகொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கு  மிகவும் பிடித்த  மோன்சி என்ற  ஒரு தோழி இருந்தாள் . அவளுடைய அப்பா  எங்களுக்கு கணக்கு பாடம் நடத்துவார்.  மோன்சி மற்று எல்லா பாடத்திலும் முதலாவது வந்து விடுவாள்.  ஒவ்வொரு பாடவும் பாடலாக படித்து வைத்திருப்பாள்.  ஆனால் கணக்கு மட்டும் மக்கப் செய்ய இயலாததால்  மிகவும் கஷ்டபடுவாள் .  அவளுடைய அப்பா வரிசையாக கேள்வி கேட்டு கொண்டே வருவார், நான் சொல்லி அவள் சொல்லாவிடில் கை மொழியில் அடிப்பார், கடுமையான வார்த்தைகளால்  அவளை திட்டுவார்.  போக போக இச்செயல் என்னிடம் பொறாமை கொள்ளும் சூழலுக்கு அவளை தள்ளியது.   பின்பு எனக்கு மிகவும் பெரும் எதிரியாக மாறினாள்.   அவளுடைய அப்பா கம்னியீஸ்டு  என்பதால்  தர்க்கம் பேசுவதயே மூலதனமாக வைத்து என்னை மடக்குவதில் குறியாக இருந்தாள்.    ஒரு முறை அவளுடைய அம்மா ,என் அம்மாவிடம்  உங்க மகளை வகுப்பு தலைவியாக இருக்க அனுமதிக்காதீர்கள்.    என் மகளுக்கு மன உளச்சலை கொடுக்கின்றது என கூறியுள்ளார்.    எனது அம்மாவும்   "தலைவி ஆகி மலையாளிகள் கிட்டை வம்பு இழுக்காதே பேசாம பாடத்தை  மட்டும் படித்துவிட்டு வா" என  எனக்கு அறிவுரை கூறினார்.   இது என்னை மன அளவில் பெரும் ஊனம் ஆக்கியது.  இவ்வாறாக ஒவ்வொரு தமிழ் மாணவனுக்கும் ஒரு கதையிருக்கும்.
எனது  பெரியப்பா மகன்,அவன் மட்டும்  10 வகுப்பு வரை படித்து வந்திருந்தான்.  அவனுடைய இரு அண்ணாக்களும் 5 வகுப்பிற்க்கு மேல் மழைக்கு கூட பள்ளி வாசல் செல்ல தயங்கினர்.   அவன் சூழல் மிகவும் மோசமானதாக இருந்தது.   அவன் 10 வகுப்புக்கு வருவதென்றால்  அது ஒரு பெரும் சாதனையே.  எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.  மிக சொற்பமான  வருமானம், நிறைய பிள்ளைகள். 
தேயிலை தோட்டங்களில்  வேலை நேரம் காலை  7  மணி என்பதால் பிள்ளைகள் துயில் எழுவதற்க்குள் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவர்.  பிள்ளைகள் முதல் நாள் மாலையிலுள்ள சாப்பாட்டை எடுத்து கொண்டு 8 மணிக்கு நடக்க ஆரம்பித்து விடுவர்.   பள்ளி வந்து சேரும் போது 9.30 மணி.  பள்ளி முடிந்தவுடன் நடக்க ஆரம்பித்தால் இருட்டும் முன் வீடு சேருவார்கள்.   6 மாதம் மழை, பெரும்வாரியான நாட்களில்  மின்சாரம் இருப்பதில்லை, சாப்பாடு கூட!   விடுமுறை நாட்களில் சிலர் வேலைக்கு செல்வர் சிலர்  விறகு  பெறுக்குவார்கள் அந்த வாரம் முழுவதும் பயண்படுத்த.  இப்படியான சூழலிலும் எனது சகோதரன் பள்ளிக்கு வந்தான்.    எங்களுடைய அரசியல் பள்ளியில் ஆரம்பித்துவிடும்.   அவன்  கம்முனிச்ஸ்ட் இயக்கத்தை சேர்ந்த SFI ல் இருந்தான்.   நான் நேரு ரசிகை என்பதால்  கை பக்கம்!(இப்போழுது எந்த பக்கவுமில்லை).   மேலும் கம்மினிஸ்ட் கூட்டத்தில் நிறைய கெட்ட பேச்சுக்களாகவே இருக்கும்.   அப்போழுது கேரளா மாநில கவர்னராக ராம் துலாரி என்ற பெண் இருந்தார். அவர் கையில்லாத சட்டை அணிந்தார் என கூட்டம் போடுவார்கள்.
என்னுடைய பெரியப்பா மகன் அரசியல் நன்றாக கதைப்பான்.   ஒரு முறை எங்கள் பள்ளி முதல்வரை கண்டபோது வேட்டியை மடக்கி கெட்டியிருந்தான் என்ற காரணத்தை கூறி 10 வகுப்பு தேற்வு எழுத விடாது தடுத்துவிட்டார்கள். அவனுடைய வாழ்க்கையும் திசை மாறி மாறி எப்படியோ ஆகிவிட்டான்.
பள்ளியில் என மட்டுமல்ல  கல்லைறைகளில் கூட சில பாரபட்சம் காணலாம். எங்கள் ஆலையங்களில்  ஜெபம் தமிழ், மலையாளம் என இரு மொழியில் நடைபெரும் . சில பாதிரியார்கள் தமிழில் ஜெபம் செய்தால் நான் மோட்சம் சேர மாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.   இன்னும் சிலரோ தமிழில் ஜெபிக்கின்றேன் என வார்த்தைகளை தப்பு தப்பாக கதைத்து மலையாளமே போதும் சாமி என சொல்ல வைத்து விடுவார்கள்.   சில மான ரோஷமுள்ள தமிழ் பக்தர்கள் நீ மலையாளத்தில் ஜெபி நான் தமிழில் தான் பாட்டு பாடுவேன் என்று அடம் பிடிக்கும் போது உங்க வால் குமளிக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.   ஒரு முறை எங்கள் ஆலயதிற்க்கு  ஒரு தமிழ் பாதிரியாரை நியமித்தனர். அவரோ உப்பும்சப்பும் அத்த பிரச்சனைக்கெல்லாம் ஜாதியை தூக்கி போட்டு இருந்த கொஞ்சம் தமிழர்களையும் பல பிரிவாக்கினார். 
6 மாதம் முன்பு எனது அம்மாவுடன் எனது ஊரிலுள்ள வங்கிக்கு சென்றபோது வங்கி அதிகாரி ,’மங்கி’ மாதிரி  மூக்கு கண்ணாடியூடை நோக்கினார்.  எனது அம்மா கொஞ்சம்  பணத்தை சேமிப்பு நிதியில் செலுத்த சென்றிருந்தார்.   வங்கி அதிகாரியோ நாளை வா….. என கத்திகொண்டிருந்தார். எனக்கு வீட்டிற்க்கு போக வேண்டாமா   ங்,ங்கி.,ங்ஊ என  திட்டுகின்றார்.   அம்மா கூறுகின்றார் 3 வது தடவையாக வருகின்றார்களாம்.   என் சிந்தனை எங்கள்  பல்கலைகழக வங்கிக்கு  சென்றது………..
மேலாளரின் அரியணையை நோக்கினேன்.   அவரோ   மலையாளி சேச்சிமாரிடம் சிரித்து சிரித்து கதைத்து கொண்டிருந்தார்.  ஒரு தமிழ் அம்மா அவர் மகன் ,மருமகள் மேல்அதிகாரியை காண கருணைவிழிகளுடன்  காத்து நின்று கொண்டிருந்தனர். அதிகாரி சேச்சிமாரை வழியனுப்பி விட்டு  கைய்யாலே  நாளை வா என உத்தரவிட்டான்.  அந்த இளம் பெண் பாரதி கண்ட புதுமை பெண் போல் அறை கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்று வாகனம் வாங்க  வங்கி கடம்  வேண்டுமென்று பணிந்தாள் .  அதிகாரியோ  அவருடைய அலுவலக கோப்புகளில் நின்று கண் எடுக்காது ஏதோ பதில் கூறி கொண்டிருந்தார்.   அப்பெண் அறைக்கு வெளியில் வந்து அவரை(னை) திட்டுவது கேட்டது.   காலம் மாறினாலும் கோலம் மாறாததை கண்டு  என் மனம் கலங்கியது.

27 Aug 2010

அவனும் நானும்!

பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த தனது கல்லூரி தோழியை, குடிபோதை  லாரி ஓட்டுனரால் கொல்லபட்ட சோக நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையளித்தது. ஆர்வ மிகுதியால் நட்பா, அல்லது காதலா என வினைவினேன். அது நட்பையும் கடந்தது.  ஆனால் காதல் அல்ல  என்றார்.!!!!  உண்மையில் இந்த விதமான உறவு நம் வாழ்க்கையிலும் கடந்து செல்வது உண்டு. நெருக்கமான நட்பு, தன்னலமற்ற அன்பு, காமமற்ற அன்பு என கூறி கொண்டே போகலாம். இவ்விதமான நட்பு பற்றி எண்ணி கொண்டிருக்கையில் எனது மனம் சர்ர்ர்ர்…. என 30 வருடத்தை பின்னோக்கி சென்றது.

 சபீர், என்ற என் தோழன் என்னுடன் டுயூஷனில் படித்தான். அவனும் நானும் போட்டி போட்டு படிப்போம். அவன் கணக்கு பாடத்தில் திணறி படித்தான்.  நான் பல முறை வீட்டு பாடம் முடிக்க உதவியுள்ளேன்.   அவனுக்கு என தின் பண்டங்கள் எடுத்து சென்றுள்ளேன்.  அவனுக்கு  கவலை என்றால் அன்று எனக்கு அந்த நாள் மகிழ்ச்சியாக இருக்காது.  அவன் ஒரு நாள் வரவில்லை என்றால் அவன் வீட்டுக்கு போய்  அவன் அம்மாவிடம் விசாரிக்காது மனம் அமைதி கொள்ளாது.  விடுமுறை நாட்களில் அவனை பார்க்க அவனுடைய வீட்டுக்கு சென்று வருவோம். அவனுடைய அப்பா கண் சிவப்பாக கோழிமுட்டை மாதிரி இருக்கும்.  சிரிக்கவோ, முறைக்கவோ மாட்டார். அவர் எங்கள் பகுதியிலுள்ள பெரும் தொழில் அதிபராக இருந்தார்.

சபீரின் அத்தை மகன் இந்த அடத்தில் உள்ளான்
பள்ளியில் யாராவது அடித்துவிட்டால் அவனுடைய தோழர்களிடம் சொன்னால் என் எதிராளிகளை கவனித்து விடுவார்கள். அம்மா என்னை 4 வயதில் டுயூஷன் அனுப்பி விட்டார்கள்.அப்போழுது எங்கள் ஊரில் பாலவாடி அல்லது ஆங்கில L.K.G,U.K.G வகுப்புக்கள் இருந்ததில்லை. கிளாடிஸ் டீச்சர் வீடு தான் எங்கள் பள்ளி! எங்கள் கிளாடிஸ் டீச்சர் அழகாக இருந்தார். ஆனால்  அவருடைய முகம்  அவர் வாழ்கை  போராட்டம் பற்றி சொல்லி கொண்டிருந்தது.


டீச்சரின் கணவர் காச நோயால் பாதிக்க பட்டிருந்தார். மகனும் முரடணாக இருந்தான்.  டீச்சரின் வீட்டில் விறகு அடுப்பு என்பதால் விறகு சரியில்லை என்றால் நாங்கள் புகை மூட்டத்திற்க்குள் தான் இருக்க வேண்டும்.  டீச்சரின் மகள் தனக்கு இருக்கும் காட்டத்தை கடுகு தாளிக்கும் போது வெளிப்படுத்துவார்.  ஒருவர் ஒருவராக நாங்கள் இரும ஆரம்பிப்போம். அது போகப் போக ஒரு பொழுது போக்காகவே மாறியது.  டீச்சர் மகள் எப்போழுது கடுகு தாளிப்பார் என காத்திருக்க தொடங்கினோம்.... தும்முவதற்க்காய்! டீச்சரின் அம்மா மிகவும் அழகான உயரமான  சற்று மனநலம் பாதிக்க பட்டிருந்தார்.   அவருடைய வேலையெல்லாம் கோழியையும்  குஞ்சுக்களையும் பராமரிப்பதே. அம்மா கோழிகளுடன் குஞ்சு கோழிகள் செல்வதே பார்த்து கொண்டு இருப்பது என் பொழுது போக்காக இருந்தது.

டீச்சருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர் ஒருவர் அப்போழுதுதான் திருமணம் ஆகியிருந்தார். இளைய தங்கை துணி தைத்து கொண்டே இருப்பார். யாரிடமும் அவ்வளவு பேசுவது   இல்லை. அவர் எப்போழுதாவது  கடைக்கு   செல்வார்.  அவர் சேலை கட்டி முடிக்க  ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும்.  குட்டி-கூறா பவுடர் இடுவது தான்  புல் ஸ்டாப்!,  மேக்கப் முடித்து விட்டார், இனி விடைபெற போகின்றார் என்ற குறியீடாக இருந்தது. மேலும் பவுடர் மணம் இதமான மணமுள்ள காற்றை தந்தது எங்களுக்கு.                                                                                                                      
                                                                                                                                                                                ரீச்சருக்கு 3 சகோதரர்கள் உண்டு .  ஒருவர் பள்ளி ஆசிரியர் பயிற்சி பெற்றுகொண்டிருந்தார்   நான்  சேட்டை செய்தேன் என்று   அவரிடம் நிறைய அடி வாங்கியுள்ளேன்.   இனி ஒரு சகோதரர்; வீட்டுக்குள் காலெடுத்து  வைத்தவுடனே அவர்கள் வீட்டில் மகாபாரத போர் ஆரம்பித்து விடும் . சட்டி பானை எல்லாம் எடுத்து எறிவது உடைப்பது போன்ற சத்தம் கேட்கலாம் . முதல் சகோதரர் ஒரு வாகன ஓட்டியாக இருந்துள்ளார். விபத்தில் சிக்கி நடு முதுகு தண்டவடம் ஒடிந்து படுக்கையில் இருந்தார்.  அவர் தான் அங்கு அரசர் மாதிரி.   தண்ணீர், சாப்பாடு என அவரை  நல் முறையில் கவனித்து கொள்வார்கள்.  அவரிடம் அவர்கள் வீட்டில் அனைவரும் நடுங்கி நிற்பார்கள். சிலவேளைகளில் அக்குடும்ப சண்டையின் தீர்ப்பு வழங்கி கொண்டிருப்பார், சில வேளைகளில் அவர் நண்பர்களுடன் அரசியல் கதைத்து கொண்டிருப்பார். அவருடைய சத்தம் மட்டுமே எங்களுக்கு பரிசயமாக இருந்தது, . அவருடைய உருவம் சத்தம் எல்லாம் எனக்கு ஒரு வித பயத்தை கொடுத்துள்ளது. கிட்ட போய் பார்ப்பது கிடையாது. 



எனது குழந்தை பருவத்தில் , அதிக நேரம் எனது வீட்டை விட அங்கு இருந்தது போல் தான் உணருகின்றேன்  .எனது வீட்டில் எனது சகோதரனும் சகோதரியும் சிறு பிள்ளைகளாய் இருந்ததால் எனக்கு கிடைக்க வேண்டிய நிறைய சலுகைகள் மறுதலிக்கப்பட்டது. பல வேளைகளில் விட்டு கொடுக்கும் சூழலுக்கும் தள்ள பட்டேன்.  அதனால் டுயூஷன் வீட்டில் நான் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தேன்.

அங்கு காலை தமிழும், மதியானத்திற்கு மேல் மலையாள மொழியும் கற்று கொண்டேன்.  பள்ளியில்  சேர்த்த போது அம்மா, தாய் வழி கல்வி என்ற நோக்குடன் தமிழ் வகுப்பில் சேர்த்து விட்டார்கள்.  எங்கள் ஆசிரியை ‘குழந்தை டீச்சர்'(பெயர்).  முகம் எப்போழுதும் போர்களத்தில் நிற்பது போன்றே இருக்கும். மேலும் தமிழ் ஆசிரியர்கள், வித விதமாக அடித்தார்கள். சிலர் கை மொழியில் அடிப்பின் , சிலரோ தொடையில் கிள்ளுவர், சிலர் கட்டிபிடித்து கவுகூட்டு பக்கம் தேடி நுள்ளி வைப்பர். இலங்கயில் தமிழ் மக்களுக்கு ஆர்மிகாரர்கள் தெரிந்தது போலவே எனக்கு தமிழ் ஆசிரியர்கள் தோன்றினர். மேலும் எனது தோழன் சபீர், பமீஜா,போன்றவர்கள் மலையாளம் வகுப்பில்  இருந்ததால், அம்மாவிடம் சண்டை பிடித்து மலையாளம் வகுப்பில் சேர்ந்து கொண்டேன். அஸீஸ் சார், அயிஷா பீபி டீச்சர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தனர்.  பேபி டீச்சருக்கு நான் மலையாளம் பள்ளிக்கு சென்றதில்  துளியும் விருப்பம் இல்லை, கோபவும் கொண்டார்.

நானும் அவனுடைய வகுப்பில் கிட்ட கிட்ட உட்கார்ந்து கொள்வோம்.  எங்கள் நட்பு நன்றாக சென்றது. அவனுடைய கூட்டாளிகள் அப்பாஸ், ராஜன், ஜெயன் போன்றோர் எனக்கும் கூட்டாளிகள் ஆகினர். அதில் ராஜன் 2 வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு சென்று விட்டான் இருந்தாலும் கடிதம் எழுதி கொள்வோம்.  ஒரு முறை அவனுடைய அப்பாவுடன்  எங்கள் வீட்டிற்கு என்னை பார்ப்பதற்கு  வந்திருந்ருந்தான் .  பின்பு அவனை கண்டதே இல்லை.

 பிந்து, மோன்சி, ஜெயா, ரமலத்து, ரஷீதா, லதா, போன்றவர்கள் வகுப்பு  தோழிகள் ஆகினர். சவுதாம்மா என்ற ஒருத்தி எங்கள் வகுப்பில் இருந்தாள் அவள் என்னை அடிப்பாள். அவளுடைய முகம் அம்மை வந்த தழும்புக்களால் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. இவளை சரிகட்ட ஜெயாவின் உதவி தேவை பட்டது. ஒரு முறை சவுதாவை ஜெயா விரட்டி விரட்டி எனக்காக அடித்து விட்டாள்.  பின்பு என்னை பார்த்தால் பயந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தாள்  அதன் பின் நாங்கள் உற்ற  தோழிகள் ஆகினோம். (ஜெயா தனது 21 வது வயதில் தன் மூன்று சகோதரிகளுடன்  குளத்தில் விழுந்து  தற்கொலை செய்து கொண்டாள்.)

வெள்ளி கிழமைகளில் எங்களுக்கு மதியம் மாணவர் கூட்டமைப்பு சம்மேளனம் நடக்கும்.  மாணவர்களே சேர்ந்து பாட்டு ,நடனம், பேச்சு என தொகுத்து வழங்குவோம்.எ ல்லோரிடம் காசு சேர்த்து; மிட்டாய், சந்தனம் வாங்கி பகிர்ந்து அளித்து வெள்ளி கிழமை என்பது எங்களுக்கு பெரும் விழா போன்றே இருக்கும்.  எங்கள் பகுதியில் கிடைக்கும் உண்ணி பூக்கள் கொண்டு மேசையை அலங்கரிப்போம்.

4  வது வகுப்பு வந்த போது ஆண்,பெண் என்ற பெரும் சண்டையில் உடைந்தது சபீறுடன் ஆன எனது தோழமையுமே.  அவனுடன் பேசினால் எங்கள் பெண்கள் சங்கத்தை அவமதித்தது போன்று ஆகி விடும் என்பதால் அவனை பார்த்தால் பேசுவதே இல்லை, 5-ம் வகுப்புக்கு பின்பு இரு பாலருக்கும் தனி தனி வகுப்பறை என்பதால் அவனை பார்க்கும் சூழலே அற்று போனது.  7 ம் வகுப்பு வந்த போது பள்ளி மாணவர் தலைவர் பதவிக்கு  எனக்கு ஓட்டு போட அவனிடம் கேட்டிருந்தேன்.  அவன் எனக்கு தான் ஓட்டு போட்டிருப்பான்/

பின்பு 10 வகுப்பு வந்த போது ஒரே வகுப்பில் டியூஷனில் கற்றோம்.  சிறு சிரிப்பை தவிற பேசி கொள்ளும் வாய்ப்பே உருவாக்கி கொள்ளவே இல்லை.   எங்கள் தோழமை அவன் மனதிலும் மாறாது இருந்துள்ளது என பின்பு அறிந்தேன் இன்னொரு பள்ளி நண்பன் வழியாக.  நான் மேற் கல்வி என வேறு பிரதேசம் சென்ற போது அவன் வியாபாரத்தில் வந்து விட்டான் அவனது தந்தையை போன்று.

திருமணத்திற்கு பின்பு எனது கணவருடன் அவன் கடைக்கு சென்ற போது கதைத்திருந்தேன்.  அவனுக்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறினான். அவனுடைய குழந்தைகள், மனைவியை காண என்னை அழைப்பான் என நினைத்தேன் ஆனால் அவனுடைய மன நிலை எவ்வாறாக இருந்தது என தெரியவில்லை.  ஆகினும் நட்பு, அதையும் தாண்டி புனிதமான அன்பு அழியாதது என்று மட்டும் என் மனம் சொல்லியது!




23 Aug 2010

நல்ல கற்பனைகளும் கனவுகளும்





பதில் இடுகை வழியாக ஒரு பதிவரின் வலைப்பதிவை வாசிக்க பெற்றேன். 2035ல் ராஜபக்சே, பிராபகரன், சீமான் போன்றோரின் நிலையை பற்றி கற்பனையில் ஒரு பதிவு எழுதியிருந்தார். சில பகுதி ரொம்ப வன்மம் கொண்டதாக இருந்தது. இருப்பினும் ஈழப்போர் விடுத்த கடுமையான மனபோராட்டத்தை எண்ணியபோது அவர் எதிர் கொண்ட போரின் தாக்கத்தை வேறுவிதமாக கொட்டியுள்ளார் என எண்ணிகொண்டேன். அந்த பதிவிற்க்கு பதில் இடுகைதான் என்னை அதிற்ச்சி பெற செய்தது.  மறுஇடுகையில் ஒருவர் எழுதியுள்ளார் தென்தமிழகத்தில் பூமி அதிற்வு வந்து 3 லட்சம் பேர் மாண்டு போவார்ளாம் 2035! என்ன ஒரு கற்பனை வளம் என பாருங்கள் (26 -வருட ஈழ இன படுகொலையில் மாண்டுபோன மக்கள் 1 லட்சம் பேர்! )நம் மக்கள்,எதிற்மறையான கனவுகள் கற்பனைகளை விட நல்ல கனவுகள் காணலாம்.  யஹூத மக்கள் தங்கள் தேசம் ஒரு நாள் கிடைக்குமென தீர்க்கமாக கடவுளின் பெயரால் நம்பினர், எடுத்து காட்டாக ‘ஷிண்டேஸ் லிச்ட்டு’ ஸ்டிவன் ஸ்பீல் பெர்கின் திரைபடத்தில் அவர்களுடைய நிலையை சரியாக சித்தரித்திருப்பார்.  http://www.newsandentertainment.com/zMschindler.html.  இவ்வளவுத்துக்கும் தன் உடல் பலத்தைவிட மன பலத்தையே நம்பினர், அதே போல் தங்களுக்கு என ஒரு தேசத்தையும் பெற்று விட்டனர். சமீபத்தில் எனது பேருந்து தோழியிடன் ஈழ செய்தியை பற்றி கதைத்து கொண்டிருந்தபோது இவ்வாறே கூறினார், வாழ்க்கை ஒரு சுழற்சி ஆகையால் தோல்வியும், ஜெயவும் நிரந்தரமல்லை என;  இன்று தோற்றவன் நாளை ஜெயிப்பான் என நம்பிக்கை கொண்டோம்.




ஒரு வயதான பாட்டியும் நானும் நேரம் கொல்வதற்க்காய் கதைத்துகொண்டிருப்பது உண்டு. பாட்டி முழு பொழுதும் தொலைகாட்சி பெட்டி செய்தி பார்ப்பவர். பாட்டி வழி செய்திகளின் நேரடி ஒளிபரப்பு  எனக்கும் வந்தடையும். எனக்கும் க்ரயம்(crime) செய்தி மேல் நாட்டம் இருப்பதால் ஆற்வமுடன் கேட்பேன். வர வர பாட்டி க்ரயம் செய்தி மட்டுமே தரவேண்டும் என்ற பிடிவாதத்துடன் மகா மோசமான கொலை, கொள்ளை,தகாத உறவு,கற்பழிப்பு என எனக்கென்றே தணிக்கை செய்தது, செய்தி தர ஆரப்பித்துவிட்டார்.




சில வேளைகளில் இப்பாட்டியுடன் எங்கள் பகுதியில் உள்ள குன்றை நோக்கி நடைபயிற்ச்சி செல்வதுண்டு.  ஒரு முறை பாட்டி தன் கற்ப்பனை கதையை கட்டவழ்த்து விடுகிறார், பூமி மட்டும் குலுங்கிச்சு, இந்த பாறைகள் உருண்டு வந்து இங்கு இருக்கும் வீடுகள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாக்கி விடும்.(முதல் வீடு எங்களுடையது?),அதும் தீர்க்கமாக செல்கின்றார் 2012 ல் பெரியொரு அழிவு திருநெல்வேலிக்கு உள்ளதாம். அதிலும் பாட்டிக்கொரு மகிழ்ச்சி சொந்த வீடு வைத்துருப்பவர்களும் தெருவுக்கு வந்திடுவாங்களாம் அப்போழுது வாடகை வீடு, சொந்த வீடு என எல்லோரும் ஒரே மாதிரி ஆகிடுவாங்களாம். பாட்டியின் கம்னியூசம் இப்படியும் போகுதே என எண்ணி நொந்து கொண்டு இருந்துவிட்டேன்.




சமீபத்தில் குடிசை மாற்று வாரியம் 302 வீடு எங்கள் பகுதியில் கட்டியுள்ளது. பேருந்து ,கடைவசதிகள் பெருகும் என நான் நினைத்து கொண்டேன். மேலும் எங்கள் ஏரியா தலைவர் அசைவ சாப்பாட்டு சாப்பிடுவது இல்லை என்பதால் அசைவ கடைகள்(ஆடு,கோழி,மீன்) வருவதற்க்கும் தடை விதித்துள்ளார் . அவருடைய அதிகார மையம் செயல் இழக்கும் என்பதில் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பாட்டியின் கூற்று படி தெருவின் அமைதி பறிபோயிடும்,மேலும் பூமி தண்ணீர் குறைந்து விடுமாம்.சுகாதாரம் கெட்டுவிடுமாம்.






இப்போழுது ஒரு தண்ணீர் தொட்டி கட்டி கொண்டுருக்கின்றனர். பாட்டி என்னை அழைத்து சொல்கின்றார், டாங்கு கட்ட நல்ல ஆழமாக தோண்டுகின்றார்கள். ஆஹா பாட்டியும் ஆக்க பூர்வ்மான சிந்தனை ஓட்டத்திற்க்கு வந்து விட்டார்களா என நிமிர்ந்து பார்த்தால், அடுத்த வார்தை தான் தூக்கி வாரி போட்டது; பயன்படுத்தும் கம்பி சரியில்லையாம்,கட்டி முடிக்கும் போது டாங்கு தலை குப்புற விழுமாம்,விழுவது மட்டுமல்ல எதிர்புறத்திலுள்ள வீட்டை அடித்து கொண்டு போய் விடுமாம். இப்போழுது பாட்டி என்னை பார்ப்பதற்க்குள்ளாகவே ஒளிந்துவிடுவேன். இதும் ஒரு போபியாவே.




சிறு வகுப்பில் படிக்கும் போது( 8-12 வயதுக்குள்)சண்டையிட்டு கொண்டால் உன் கண்ணை காக்கா கொத்தும், என வழக்கடித்து கொள்வதே நினைவு வந்தது. எங்கள் நெல்லை செய்தியும் இதற்க்கு ஒத்திருப்பது உண்டு சில வேளைகளின்,தன் குடும்பத்தில் இரண்டு கொலை விழுந்தது என்றால் அவன் குடும்பத்தில் குறைந்தது நாலாவது விழ வேண்டும் என அரிவாளோடு வாழ்பவர்களை பத்திரிக்கை மூலம் படித்துள்ளேன். எல்லாம் மனித மனம் நாம் பழக்க படுத்திகொள்வதே!.




எனது வாழ்க்கையில் இருந்து நான் கற்றது நல்ல கனவு(தூக்கத்தில் அல்ல) காண வேண்டும் என்பதே, நம்மை பற்றி மட்டும் அல்லாது மற்றவர்களை பற்றியும் அவ்வாறே. வெறும் கனவு கைக்கூட எள்ளளவும் சாத்தியமல்ல என்று அறிந்தும் கனவு கண்டேன்,ஆனால் கனவுப்படியே நடந்தது. குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காகவே நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ‘கல்லூரி ஆசிரியை’ என்ற கல்லூரி நாட்கள் கனவு ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருந்தது அப்போழுது வெறும் பட்டதாரி!. ஒரு நாள் என் கணவர் என்னிடம் வினைவினார் கல்லூரியில் முழு நேர பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டால் படிக்கின்றாயா என. என்னவர் கேலி செய்கின்றார் எனவே எண்ணினேன். அப்போழுது பட்டபடிப்பு முடித்து சரியாக 10 வருடம். ஆனால் இப்போழுது நான் ஒரு இளம் ஆராய்ச்சியாளர்!


வாடகை வீட்டில் வாழ முடிவதில்லை வசிக்கவே முடியும் என வந்த போது நானும் எங்களது மகன்களும் பொழுது போக்காக துண்டு தாளுகளில் வீட்டின் வரைபடம் வரைந்து எங்கள் கனவே வளர்த்தோம். பின்பு கனவு நனவாகி சொந்த வீட்டிலும் குடி புகுந்தோம்.




தமிழ் படங்களின் தாக்கத்தால் கணவர் என்றாலே ஒரு பயம் இருந்தது. எங்கள் கேரளாவில் கல்லூரியிலும் மற்றும் எங்களுடன் படிக்கும், சந்திக்கும் ஆண் நபர்கள்(நண்பர்கள்) சிவப்பாக, தாடி வைத்து,பார்க்க மென்மையாக காட்சி தருவர். நாங்கள் கண்ட மலையாள திரைப்பட ஹீரோக்களும் மோகன் லால்,மம்மூட்டி போன்றவர்களே.திருமணம் என வந்தபோது பச்ச தமிழன்தான் வேண்டும் என விரும்பிய போது ஒரு பயம் உள் மனதில் இல்லாதில்லை.ஆனாலும் நல்ல கனவே கண்டேன்.நான் கண்ட கனவு போலவே ஆருயிர் தோழராகவே எனது கணவர் கிடைத்தார்.




இப்போழுது சில மகன்களின் அம்மாக்களிடம் கதைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் போது நான் கண்டது அவர்களின் கனவே மருமகள் வருவாள்,வந்தவுடன் இவர்களிடம் சண்டையிடுவாள், மகனை பிரித்து விடுவாள்,அதற்க்கு முன்பு அவளை தனியாக குடிபுகுத்த வேண்டும் அவளிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.ஒரு முன் கருதல் தேவையே,அதற்க்கு என எதிர்மறையான கனவுகள் அல்ல தீர்வு,ஏன் அம்மாக்கள் மருமக்களை பற்றி நல்ல கனவு காண கூடாது?நான் எனது மருமகளை பற்றியும் அழகான கனவு காண ஆரம்பித்துவிட்டேன்.(என் மகன்கள் படிப்பது 7,3 வகுப்புக்களில்.)சிறுகுறிப்பு, என்னவரிடன் என் கனவை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், பாபா- அத்தான் "என் மருமகள் நீல கண்ணுடன், வேற்று மொழி பெண்ணாக இருந்தால் எப்படி இருக்கும்" என  அவரிடம் கேட்ட போது, அவர் சொல்கின்றார் நல்லது தான் நீங்க இரண்டு பேரும் சண்டை போடது எங்களுக்கு புரியாது இருக்கும் என, அவருடைய கனவை பாத்தீங்களா?

22 Aug 2010

பெண்கள் கல்லூரியே இது நியாயமா?

பெண்கள் கல்லூரி கடந்தே எங்களது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. சமீபமாக ஒரு ஏழை மனிதர் கல்லூரி முன்பாக அழகிய சிவப்பு நிற ஊட்டி  ரோஸ், மல்லிகை போன்ற மலர்கள்  வித்து கொண்டிருந்தார். சுனாமியில் பாதித்த பகுதி போன்றே காட்சியளிக்கும் பூச்சற்ற கல்லூரியின் தோற்றம்  பூக்களால் புதுப்பொலிவுடன் அழகிய இளம் மங்கை போல் காட்சி அளித்து. 

சமீபத்தில்  அவ்வழியாக சென்றபோது பூக்காரரை காணவில்லை, அக்கல்லூரியில்  படிக்கும் தோழி வழியாக அறியபட்ட செய்தி 'பெரும் துயர்' போன்றே எனக்கு தோன்றியது. மாணவிகள் பூ வாங்குவதற்க்காய் கூட்டமாக நிற்ப்பதால் பூ விற்ப்பவரை கல்லூரியின் முன்பு நிற்க்க கூடாது என தடுத்து விட்டார்களாம்.

பூ விற்ப்பவர் ஒரு பரம ஏழை.ஒரு ஏழை குடும்பம் பிழைத்திருக்கும். அவருடைய குழந்தைகளும் மூன்று வேளை உணவு அருந்தி பள்ளி செல்லும் வாய்ப்பை பெற்றிருப்பாகள்.
ஏன், கல்லூரி மாணவிகள் கணிணி மைய்யத்தில், பேருந்து நிலையத்தில், பேருந்தில், கூட்டம் கூடி நிற்ப்பது மட்டும் அல்லாது  பல விதத்தில்  அராஜகம் பண்ணி கொண்டு தான் இருக்கின்றனர், கல்லூரி நிறுவாகத்தால் இதை  தடுக்க முடியுமா?. நான் கல்லுரிக்கு பயணிக்கும் பேருந்தில் இம்மாண்விகளில் சிலர்  இரண்டு மூன்று பேர் வந்து தன் தோழிகள் பத்து பேருக்காவது தனது புத்தகம் ,புத்தக பை மூலம்  சீட் பிடித்து விடுவார்கள். வயதானவர்கள் வந்தால்  கூட இருக்கை கொடுப்பது கிடையாது.   சில வேளைகளில் சண்டையிட்டு இருக்கை-seat  பிடிக்கும் சூழலுக்கு தள்ள பட்டுள்ளேன்.

சமீப காலமாக இரக்கம், அன்பு எல்லாமே ஞாயிருகளில்,, சர்ச்சுகளில் கேட்க்கும் வெறும் நற்செய்தியாக மட்டுமே கிருஸ்தவர்கள் மத்தியில்  மாறி வருகின்றது போல் தெரிகின்றது. சிறப்பாக ஆசிரிய பெருமக்களுக்கென சில மன- தொற்று நோய்கள் சமீப காலமாக வளர்ந்து வருகின்றது.

சமூக அக்கரை,மனித நேயம் என்பதை விட ஒழுக்கம்,கட்டுபாடு என பெயரில் மற்றவர்களை துண்புறுத்துகின்றனர்.அவர்கள் கண்ணில் எகத்தாளம், அகங்காரம் களியாடுவதை பல இடங்களில் உணரலாம்.

இவர்களிடம் கல்வி கற்று வரும்  மாணவர்களும்  இம்மனபாதிப்பினால் தான் ராகிங் போன்ற ஈன செயலில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளபடுகின்றனர்.

மாணவிகள் கல்லூரி  பருவத்தில் தான் பூ போன்றவற்றை வளமாக வாங்கி பயண்படுத்தும்  நேரம் மற்றும் ஆசை உள்ளது. ஆசிரியைகளின் மனதை விசாலபடுத்தாது மாணவிகள் நல்லதொரு கல்லூரி வாழ்க்கையை காணுவது கடினமே.

இப்போழுதும் என் கல்லூரி நாட்களை நினைத்து பார்ப்பது உண்டு. எங்கள் கல்லூரி விடுதிக்கு பூக்காரக்கா வராவிட்டால் அற்றைய தினமே வெறுமையாய் தோன்றுபவர்களும்  உண்டு.
 இப்போழுது பூக்கள் தோட்டதில் இருந்தாலும் கூட பறித்து தொடுக்க நேரம் இல்லை. அத்தான் மதுரை சென்றால் மல்லிகை பூ வாங்கி வருவார். சில வேளைகளில் வேலை பழு மத்தியில் பூ வைப்பதற்கே மறந்து விடும்.
கல்லூரி நாட்களில் நாங்கள் தோழிகள் ஒரு பந்து பூ என வாங்கி பங்கிட்டு வைத்த காலங்கள் மனதில் பூக்களாய் பூக்கின்றது.

15 Aug 2010

நானும் பிச்சைகாரர்களும்

என்னுடைய ஊரில் ‘மினி மார்கெட்’ என அழைக்க படும் ஓர் பகுதி உள்ளது. முக்கிய சாலையோரம், பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில்,  மற்றும் எங்கள் ஊர் காவல் நிலையத்திற்க்கு மிக அருகில் அமைந்த ஒரு  பகுதியாகும்.  தமிழகத்திலுள்ள குடிசைப்பகுதி போன்றுள்ள பகுதி. சிறுவயதில் என்னுடைய கவனத்தை ஈர்த்த ஓர் பகுதி.  தினமும் நாங்கள் பள்ளி செல்லும் போது இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டியிருந்தது.  அங்குள்ள மக்கள் எல்லோரும் பிச்சைகாரர்களாகவும் இருப்பது இல்லை.  சிலர் வீட்டு வேலைக்கு செல்பவர்கள்,வீட்டு கட்டுமான பணிக்கு செல்பவர்கள், கஞ்சா போன்ற பொருட்களை (சிறு தோதில்)கடத்துபவர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள், பாலியல் தொழில் புரிபவர்கள் என பல தர மக்கள் இருந்தனர். இவர்கள் உரிய உடல் நலம் உள்ளோர் வேலைக்கு செல்லின், வழியற்றவர்கள் பிச்சை எடுக்க வருவர்.அவ்வாறு வரும் வேளைகளில்  எங்களுடைய  கடைகளுக்கு வெள்ளி கிழமைகளில் மட்டும்.குறைந்தது 25 காசுக்கு குறையாது கொடுக்க வேண்டும். இதிலும் குறைவாக 10-20 காசு கொடுத்தால் நம்மளிடமே தூக்கி எறிந்து விடுவார்கள்.இதற்க்கென ஆடையலங்காரம், ஒரு விதமான பாத்திரம், பை வைத்திருப்பார்கள். இந்த பிச்சகாரர்களில் ஒருவர் கூட மலையாளியாக பார்த்தது இல்லை .காரணம் பிச்சைக்கு என தொழிலை கையிலெடுக்கும் முன் தமிழ் பிச்சைக்காரன் அல்லது தமிழ் பிச்சைகாரியை மணம் முடித்து அக்மார்க்கு தமிழராக மாறிவிடுவர். இதனால் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களாகட்டும், பேராசிரியர்கள் ஆகட்டும் மாணவர்களுக்கு பிச்சைகாரர்களை பற்றி கூறும் போது பாண்டிகள் கண்டிடுண்டோ?அவரா தெண்டிகள் என விளக்கவுரை நடத்துவர்.(மலையாளம் வழி கல்வி கற்றதால் நேர் அனுபவம்)




இவர்களிடம் ரசிக்கும் படியான விஷயம் வாழ்க்கையை அணுவணுவாக ரசிச்சு வாழ்வதாக தோன்றும்.  நம் போன்ற மக்களுக்கு அவை அருவருப்பாகவும்(.அங்காடி தெருபடத்தில் காலை மிதித்து விளையாடுவதை நினைவுகூறவும்). பகல் முழுக்க அழுக்கு பிடித்த ஆடை, பரட்டை தலையுடன் அலையும் மக்கள் மாலை 4 மணிக்கு ஒரு கிலோ அரிசி வாங்கி சென்று கஞ்சியாக குடிப்பார்கள்.(கஞ்சி குடிப்பதை எப்படி அறிந்தேன் என கேட்க்கின்றீர்களோ.எங்க ஊரில் 6 மாதம் மழையாகதான் இருக்கும்,வாங்கும் பொருட்களை வைத்துள்ள அனுமானமே) 6 -7 மணிக்கு குளித்து,சுத்தமான ஆடை அலங்காரத்துடன் சினிமா தியேட்டருக்கு செல்வர். ஒரு குடும்பம் என அல்லாது 10 -15 குடும்பம் சேர்ந்து குட்டி குழந்தைகளுடன் குதூகுலமாக ஓடி செல்வார்கள் டிக்கெட் வாங்க. படம் முடிந்து செல்லும் போது ஆண்கள் குடித்து தள்ளாடி சிலர் கெட்டவார்த்தைகளுடன் சண்டையிட்டு செல்வர்,சில பெண்களும் தான்!


வாரத்துக்கு எல்லா நாட்களும் தியேட்டருக்கு வருவார்கள்.இந்த பகுதியில் ஒரு தொழுநோயால் ஒரு கை இல்லாதவனுக்கு இரண்டு மனைவி இருந்தனர். அவன் பிச்சை எடுக்கும் பணத்தை வட்டிக்கு கொடுப்பதாக கேள்விபட்டுள்ளேன்.அவனுடைய மனைவிகளை சாட்டையை வைத்து அடிப்பானாம். இரண்டாவது மனைவி அவனுடைய மகளுக்கு ஒத்த வயதில் இருந்தாள்.


அதே பகுதியில் தேனம்மா என்ற பிச்சைகாரி எனது பாட்டியை தேடி வந்து பேசி கொண்டிருப்பார். எனது அம்மா பாட்டியை திட்டுவார்கள் ஏன் பிச்சைகாரியிடம் மணிக்கணக்காக பேசி கொண்டிருக்கின்றீர்கள் என. அம்மாவுக்கு தேன்ம்மாவை பிடிக்காது ஏன் என்றால் எப்போழுதும் தன் பிச்சைக்கார கணவருக்கு பேன் பார்த்து கொண்டு இருப்பதால் தான்! ஆனால் பாட்டி தேனம்மாளை பற்றி கூறும் போது அவளுடைய விதி அவளை தெருவுக்கு கொண்டு வந்து விட்டது என கவலைபடுவார். எனது பாட்டி தேயிலை தோட்டதில் பணியாளராக வேலைபார்த்து கொண்டுருந்தபோது தேனம்மா அந்த எஸ்டேடில் புதிதாக மண்ம் முடித்து வந்துள்ளார். அவள் அணிந்த நகைகளை பெண்கள் அதிசயமாக பார்க்கும் அளவுக்கு இருந்துள்ளது. மூக்குத்தி, ஒட்டியாணம்,  வளையல்கள், என பார்க்கும் பெண்களுக்கு ஆச்சரியமாகவே இருந்துள்ளார். பார்ப்போரை பரிவுடன் பேசுவது, நலம் விசாரிப்பது என எல்லாருடனும் அன்பாக பழகி இருந்துள்ளார். இரண்டு குழந்தைகள் என ஆகிவிட வீட்டு வேலைக்கு உதவியாய் வந்த தன் தங்கை, பின்பு கணவருக்கு அன்பு மனைவி ஆகிவிட்டாள் என அறிந்ததும் புத்தி தடுமாறி வீட்டை விட்டு வெளியேறிய தேனம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்தது மினி மார்க்கெட் மட்டுமல்ல மினி மார்க்கெட்டில் குடியிருந்த பிச்சைகாரரும் தான். பிச்சைகார கணவர் இறந்த  பின்பு ஒரு மலையாளி வீட்டில் பணியாளராக இருக்கும் போது, ஆற்றில் துணிதுவைக்க சென்ற இடத்தில் ஆற்றிலே இறந்து போனார்.அவருடைய குழந்தைகளும் பிச்சைகாரர்களாய் மாறியது.


சரணாலயத்தால் மீட்க்கபட்ட சிறார்.
எனக்கும் ஒரு பிச்சைக்கார சிறுவன் நண்பன் ஆகினான். நான் செல்லும் ஆலய வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருப்பான். அவனுடைய அக்கா அவனுக்கு பிச்சை எடுக்க பயிற்ச்சி கொடுப்பாள். சத்தமா கேளுடா என கிள்ளிவிடுவாள்.அவன், மேடம் பிச்சை தாங்க என கருணைகுரலில் பிச்சை கேட்பான்.அவனிடம் சில தருணங்களில் பேசுவது உண்டு. ஒரு முறை அவனுடைய  அக்கா மாரியம்மா எங்கே,  என விசாரித்த போது வயசுக்கு வந்ததால் பிச்சை எடுக்க வருவதில்லை என கூறினான். அவன் இப்போழுது தன் தங்கைக்கு, தம்பிகளுக்கு பயிற்ச்சி கொடுத்து கொண்டிருந்தான்.அவனுடைய தாய் மடியில் இப்போழுதும் புதிதாக பிறந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தது. ஒரு முறை திருநெல்வேலியில் உள்ள குழந்தை சரணாயலத்திற்க்கு சென்ற போது அவனை அங்கு பார்த்தேன். மேடம் என்னை நினைவு உள்ளதா நான் படிச்சு பெளேன் ஓட்ட போறேன் என கூறினான். அவனிடம் உரையாடிய போது கேரளாவில் பிச்சை எடுக்கும் போது எவ்வகையான மொழி பயண்படுத்த வேண்டும்,எப்படி பாட்டு பாடி பிச்சை எடுக்க வேண்டும்  என சில டிப்சு தந்து கொண்டிருந்தான். அங்கு இவனை போன்ற குழந்தைகளை கவனிக்கும் ஊழியர், “நல்லா பேசுவான் வேலை செய்யதான் உடம்பு வளையாது” என சொல்லிகொண்டிருந்தார். பின்பு அவன் தங்கி படிக்கும் பள்ளிக்கு சென்ற போது ரொம்பவே மன அளவில் குழப்பத்தில் இருந்தான்.அப்போழுது அவனுடைய மனநிலை படிப்பதிலும் தன் சகோதரன், பெற்றோரிடம் சேரும்  நோக்கில் இருந்தான். பிச்சைகார குழந்தைகளுக்கு ஒரு நிலையான வாழ்க்கை மிகவும் கஷ்டமானது என அறியபட்டேன்.குறுகிய நாட்களில் பள்ளியை விட்டு தப்பி சென்றதாக கேள்விபட்டேன். இந்த மாதிரியான குழந்தைகள் நமது இரக்கத்தை விட நாம் காட்டும் வஞ்சனை அற்ற அன்பை, அவர்கள் உணர்வுகளை மதிக்கும் பண்பை  பெரிதும் விரும்புகின்றனர்.அவர்கள் விரும்பும் அங்கிகாரம் நாம் கொடுக்க துணிவது கிடையாது.


இதை போன்ற 10 பிச்சைகார குழந்தைகளுக்கு பாதுகாவலர்களை(local guardian) உருவாக்க வேண்டும் என நோக்கில் சில வசதிபடைத்தவர்கள், பேராசிரியர்கள்,பேராசியைகளை நெருங்கினேன். இதிலும் சிறப்பாக நான் சார்ந்த கிருஸ்தவர்களையும் அணுகினேன். சிலர் அநியாயத்திற்க்கு பரிதாப பட்டார்கள் . ஆனால் யாரும் ஆக்க பூர்வமாக செயல் ஆற்ற முன் வரவில்லை. சிலருடைய நாவிலுள்ள இரக்கம் மனதில் இல்லை என தெரிந்த போது நொறுங்கி போனது என் மனம்.

1 Aug 2010

'South Oxford ' என அல்வா கொடுக்கும் திருநெல்வேலி பள்ளிகள்.

  தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகள்State Board, Matriculation,Central board ,International sylabus  என பல பெயர்களில் கால கரணபட்ட கல்வி திட்டத்தையே அளிக்கின்றது.குழந்தைகள் மன அளவில் முன்னேரியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாட திட்டம் நடைமுறையில் இல்லாதது பெரும் குறையே.  இதற்க்கு காரணம் மாற்று கருத்தற்ற பள்ளி சூழலே.  பள்ளி தாளாளர்க்கு பள்ளி முதல்வர் அடிமை என்றால்,  பள்ளி ஆசிரியர்கள்  முதல்வருக்கு அடிமை,  மாணவர்கள் ஆசிரியர்களுக்கும்!


தொடர்பியல் முறையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துள்ளது, பள்ளிகள்  பின் பற்றும் விதம்  பழமையாகவே உள்ளது.ஆசிரியர்கள் இந்த சீனகாரர்கள் மாதிரி. நன்மையை விட தீமைய்  பற்றி  தான் கணக்கிடுவர் நம் ஆசிரியர்கள் .மீடியா மோசம் மீடியா மாணவர்களை சீரளிக்கின்றது என எவ்வளவு நாட்களுக்களுக்கு தான் குப்பை கொட்டுவாங்க என்று தெரியவில்லை.காணொளி,படங்கள் என பல யுக்திகளை கைய்யாளலாம்.சிறப்பாக தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி போன்ற  மொழி பாடங்களுக்காவது.
பொதுவாக ஆசிரியர்கள் அவர்களை புதுமை(update)படுத்துவது கிடையாது. அவுங்க TTC ,BEd படித்த காலத்தில் தான் வாழ்வார்கள்.
பேருந்தில் பயணிக்கும் போது, மற்றும் பொது இடங்களில்  ஆசிரியர்களை காணும் போது அவதானிக்க முடிந்தது; அவர்களுக்கு ஒரு சமரசமுள்ள மனம் கிடையாது, தன்னலம்,வரட்டு கவரவம் என மூழ்கி கிடக்கின்றனர்.  பார்வையிலே ஒரு எகத்தாளம்! இவர்களால் எவ்வாறு ஒரு தலைமுறையே வழி நடத்த முடியும். இப்போழுது பரவாலாக காணும் அபாயம் ,ஆசிரியர்களும் தரம், ஜாதி என மாணவர்களை பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
 பள்ளி தலைமையும்  ஆசிரியர்களின் ஆளுமையைய் மதிப்பதும் கிடையாது, அவர்கள் ஒரு பொருள் மட்டுமே.




இன்று தோட்ட வேலை செய்யும் நபர் தின கூலியாக   4 முதல் 5 மணி நேரம் வேலைக்கு 150  முதல் 200 ரூபாய் வாங்குகின்றார். அதே போல் நமது கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டுமென்றால்  ஒரு நாட்களுக்கு 350 ரூபாய் கொடுக்காது ஆள் கிடைப்பது அரிது ஆனால் ஆசிரியர்கள் 2000-4000 ரூபாய்க்கு(பிரதி மாதம் )   கிடைக்க கூடும்.  தகுந்த ஊதியத்தை கூட்டு முயற்ச்சியாக வாங்க  வழி வகுப்பது கிடையாது, உதாரணத்திற்க்கு  துப்புறவு சங்கம் தெருவாரியாக வேலையாட்களை பிரித்து வைத்துள்ளது. ஆகயால் நமக்கு அடிமாட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது  சாத்தியமற்றது.  ஆனால் படித்தவர்களுக்கு ஒற்றுமை என ஒன்றில்லை.  போதாதற்க்கு இவர்கள் மத்தியில்  கழுத்தறுக்கும் போட்டி மட்டுமே நிலவுகின்றது. . சும்மா,  கிடைத்த சம்பளத்திற்க்கு வேலைக்கு சேருவது, ஆனால் கற்ப்பிப்பது மட்டும் அறைகுறையாக!  இந்த எல்லா பாதிப்பும் குழந்தைகள் படிப்பிலும்,வாழ்விலும் தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றது.

மதுரை,கோயம்பத்தூர் பள்ளி தரத்தை விட மிகவும் கீழ் மட்டமாகவே நெல்லை மாவட்டம் உள்ளது.பள்ளி குழந்தைகளுக்கு சரியாக வாசிக்க கூட கற்று கொடுப்ப்து இல்லை. தனியார் பள்ளியில்  3 ம் வகுப்பு  குழந்தைக்கு வருடத்திற்க்கு   20 ஆயிரத்திற்க்கும் மேல் செலவாகுகின்றது,ஆகினும் tution எனும் தனி பாடத்திற்க்கு அனுப்பினாலே சிறப்பாக படிக்க இயல்கின்றது.
தனியார் பள்ளியில் பெற்றோர் கூட்டம்(parents meeting) என ஒன்று கிடையாது. ஒருவேளை  இருப்பினும் ஆங்கிலத்தில் பேசி ஒரு  பிரம்மையை உண்டாக்க  முயல்வார்களை தவிர ஆக்க பூர்வமான கருத்து பரிமாற்றம் நடப்பதாக புலன்ப்படவில்லை. சில அம்மாக்கள் இவ்வகையான கூட்டத்தை தங்கள் பிள்ளைகள் குறையை கூறும் ஒரு வழக்காடும் மன்றம் (கோர்ட்) மாதிரி எடுத்து கொள்வார்கள்.தொலைகாட்சி பார்ப்பதாக குறைபடுவர்.குறைகள் நீண்டுகொண்டே போகும்.


தேற்வு தாள் கொடுக்கும் படலம் என ஒன்று உண்டு. சில வீடுகளில் குடும்பத்துடன் வந்திடுவாங்க. அன்று குழந்தை தூக்கிலிடும் கைதி போல் தான். கை கட்டி கூனி குறுகி நிற்க்கும்,ஆசிரியை குற்ற மொழியே ஆரம்பிப்பார் 'தங்கிலீஷ்' என்ற மொழியில்! ஒரு பக்கம் அப்பா  ஆமா மிஸ் அடிங்க, படிக்கவே மாட்டுங்குதா, உடனே அம்மா,குழந்தை I.A.S பரிட்சையில் கோட்டை விட்டது போல் அழுதுடுவாங்க.



நிஜம் என்ன நிறைய வீடுகளில் அம்மா வானொலியில் விளம்பரம் வருவது போல் படி, படி என்று ஒரு சத்தம்  மட்டும் கொடுத்து விட்டு தொலைகாட்சி தொடர் கதைகளில் முழுகி விடிகின்றனர் என்பதே நிஜம்.



சமீப காலமாக சில பெயர்களில், மிக பெரும் அளவில் விளம்பரம் கொடுத்து வெறும் 10-15 சென்டு இடங்களில்  சில பள்ளிகளை ஆரம்பித்தனர் .அரசியல் அமைப்பு சட்ட படி பள்ளிகளுக்கு என சில அளவுகள் நிர்ணயித்துள்ளனர், மேல் நிலை பள்ளி என்றால் 3 முதல் 5 ஏக்கர் இடம்,உயர் மேல் நிலை பள்ளி என்றால் 5 முதல் 8 ஏக்கர் இடம். இவை எல்லாம் ஏட்டு சுரக்காய் என்று மட்டுமே எனில் சட்டங்களால் யார் பயண் அடைவர்.

 மேலும் கணிணி மயமாக்கபட்ட,குளிருட்ட பட்ட என பல வசதிகளை கூறி பள்ளிகள் ஆரம்பிக்கின்றனர். அவ்வாறாக ஆரம்பிக்க பட்ட பள்ளியே நெல்லை பப்ளிக் பள்ளி. வகுப்பு அறைகள்  குறுகியதும் கழிப்பிடங்கள் சந்திலும் பொந்திலுமாக அமைத்திருந்தனர்.  smart room  கற்ப்பித்தல் எனவும்   அறிமுக படுத்தியிருந்தனர்.ஒரே வருடத்தில்  மூடு விழா நடத்தி விட்டார்கள்.இதில் இந்த பணக்கார பெற்றோரை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது.வீட்டில் தான் பாதுகாப்பு,அந்தஸ்த்து என கூறி வீட்டு வளாகத்தினுள்ளில் வளர்ப்பார்கள். பள்ளியாவது இயற்க்கை வளம் உள்ளதாக பார்த்து சேர்க்கலாம் இல்லையா?
இப்படி திருநெல்வேலி பள்ளி படிப்பு பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கின்றது. அடைமொழி south oxford யாவது தூக்கி எறிஞ்சுட்டு  அல்வா கொடுப்பதை நிறுத்தினால் யாவருக்கும் நல்லது.