27 May 2020

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!
நேற்றைய பொழுதுகளை பலதும் மறந்திருப்பேன், இருந்தாலும் நான்கு வயது ட்யூஷன் வகுப்பு நினைவுகள் பலதும் அழியாதே என்னிடம் உண்டு.
அப்படியான பல நினைவுகளை தருவது தான் இந்த தெருவு குடிநீர் பைப்பும், அதன் பின் இருக்கும் கிளாடிஸ் டீச்சர் வீடும்.
மெலிந்து உயரமான எப்போதும் இருமிக்கொண்டிருக்கும் டீச்சருடைய கணவர், ஷேர்லிச் சேச்சி, ஷிபு அண்ணா, ஜெய்ம்ஸ் சார் , உயரமான அழகான எப்போதும் சிரித்த முகத்துடனுள்ள மேரி டீச்சர், துணி தைத்து கொண்டிருக்கும், குடை பிடித்து நடக்கும் டீச்சரின் தங்கை, அந்த வீட்டில் ஒரு வாகன விபத்தை தொடர்ந்து நெடு நாளாக படுக்கையில் கிடந்த தங்கச்சன் சேட்டன் , சட்டையும் முண்டும் அணிந்து கோழிகளை பராமரிக்கும் இவர்களுடைய அம்மா , வல்யம்மச்சி( பாட்டி).
எங்க ஊரில் அப்போதிருந்த ஒரே ஒரு ட்யூஷன் பள்ளி இது தான். சொல்லப்போனால் எங்கள் பள்ளியை விட கட்டுக்கோப்பாக வகுப்புகள் நடந்தது இங்கு தான். நான் என் வீட்டில் இருந்ததை விட இந்த வீட்டில் வளர்ந்ததுதான் நிறைய பொழுதுகள்.
மேக்கப் போட்டு, அழகான உடுப்புகள் உடுப்பித்து, கல் ஸ்லேட்டும்( பலகையும்), குச்சியுடன் காலை 10 மணிக்குள்ளாக கடையிலுள்ள உதவியாளர் பையன்களுடன் அனுப்பி விடுவார்கள்.
காலை தமிழ் படிக்க வேண்டும், மதியம் முதல் மாலை வரை மலையாளம். மாலை என்னை அழைத்து போக பையன்கள் வருவார்கள். அதற்குள் மதியமே நான், டீச்சர் தலை தப்பி வீடு வந்து சேர்ந்திடுவேன்.
வீட்டு கதவு அரைக்கதவு. அந்த கதவை திறக்கும் உயரவுமில்லை , வலுவுமில்லை.
அம்மா என்னை கண்டதும் எப்படி வந்தாய் , ஏன் தனியாய் வந்தாய்,என திட்ட ஆரம்பிப்பார்கள்.
கதவை திறக்காதே.... கடை பசங்களிடம் இவளை வகுப்பில் கொண்டு விடு என்று கட்டளை பிறக்கும்.
நானும் போக விருப்பமில்லை, தூக்கம் வருது,வயிற்று வலி என்ற சகல வித்தைகளையும் துணைக்கு அழைத்து போராடினாலும் அம்மாவின் மனம் இறங்காது.
சோம்பேரி, பொய் பேசாதே, வீட்டில் இருந்து என்ன செய்ய போறாய், இந்த சின்னப் பிள்ளைகளுடன் வம்பு சண்டை பிடிக்க தானே? போய் படி என்பார்.
கண்ணீர் மாலை மாலையாக விழும். கடைசி ஆயுதத்தை எடுப்பேன். 'போண்டா' வாங்கி தந்தால் பள்ளிக்கு போறேன்.
உடனே போண்டாய் வாங்கி தந்து , கையில் மிட்டாயும் சொருகி அனுப்பி விடுவார்கள்.
நாலு மணி எப்போது வரும் என காத்திருப்பேன். வீடு போய் சேர.
என் வீட்டில் பொறுப்பான மூத்த பிள்ளை,ட்யூஷன் வீட்டில் தான் நான் செல்லப்பிள்ளை !. டீச்சர் வீட்டில் உப்பிலிட்ட நெல்லிக்காய், மாங்காய் தின்ற ஞாபகம் உண்டு.
ஒருக்கா மாங்காய் பங்கு தருகையில் எனக்கு குறைத்து தந்தார்கள் என்று கையிலிருந்த ஸ்லேட்டை வைத்து அடுத்தவன் மண்டையில் ஒரு அடி. ஏன் அடித்தாய்? என விசாரித்து தண்டனையாக கூட்டத்தில் இருந்து தனித்து இருத்தி வைக்கப்பட்டேன். அங்கிருந்து அழுததும் நினைவிலுள்ளது.
தமிழ் குட்டி என்பதால் சத்ததில் தான் சண்டை இடுவதும் ஏன் கதைப்பதும் கூட. உள் அறையில் இருந்து தங்கச்சன் சேட்டன் என் பெயரை அழைத்தும் கப்- சிப் ஆகிடுவது வழமை.....
இந்த படி வழியே ஏறிச் சென்றால் என் துவக்கப் பள்ளியை அடைந்து விடலாம்.
இப்போதும்; அன்றைய என் நண்பர்கள் சபீர் ,
Abbas Abbas
, ராஜன், பஃமீஜா, பிந்து, லதா, ஜெயா நினைவிற்கு வருகின்றனர்.
ഗ്ലാഡിസ് ട്യൂഷൻ ടീച്ചർ വീട് !
ഞാൻ ഇന്നലെത്തെ കാര്യം പലതു മറക്കും, പക്ഷേ നാല് വയസുള്ളപ്പോലുള്ള ട്യൂഷൻ ക്ലാസിന്റെ നിരവധി ഓർമ്മകളുണ്ട് എനിക്ക്.
തെരുവ് കുടിവെള്ള പൈപ്പും പിന് ഭാഗത്തുള്ള ഗ്ലാഡിസ് ടീച്ചറുടെ വീടും ആണ്.
മെലിഞ്ഞതും എപ്പോഴും ചുമക്കുന്നതുമായ ടീച്ചറുടെ ഭർത്താവ്, ഷേർളി ചേച്ചി , ഷിബു ചേട്ടൻ , ജെയിംസ് സർ, ഉയരവും സുന്ദരവുമായ പുഞ്ചിരിക്കുന്ന മുഖംമുള്ള മേരി ടീച്ചർ, വസ്ത്രം തുന്നുന്ന , കുടയുമായി നടക്കുന്ന ടീച്ചറുടെ സഹോദരി, വീട്ടിൽ ഒരു വാഹനാപകടത്തെ തുടർന്ന് കിടക്കയിൽ കിടക്കുന്നു തങ്കച്ചൻ ചേട്ടൻ, കോഴികളെ വളർത്തുന്ന ആ വീട്ടിലെ , അമ്മ, വാല്യമ്മച്ചി (മുത്തശ്ശി).
ഞങ്ങളുടെ പട്ടണത്തിലെ ഏക ട്യൂഷൻ സ്കൂൾ ഇതാണ്. വാസ്തവത്തിൽ, ഞങ്ങളുടെ സ്കൂളിനേക്കാൾ കൂടുതൽ അച്ചടക്കമുള്ള ക്ലാസുകൾ ഇവിടെയുണ്ടായിരുന്നു . എന്റെ വീട്ടിലേക്കാൾ കൂടുതൽ സമയം ഞാൻ ഈ വീട്ടിൽ വളർന്നു.
ഒരുങ്ങി കെട്ടി , മനോഹരമായ വസ്ത്രം ധരിച്ചു , കല്ല് സ്ലേറ്റ് (ബോർഡ്) എം കല്ല് പെന്സിലുമായ് കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടന്മാരോടൊത്തു രാവിലെ 10 ന് മുൻപേ ക്ലാസിൽ എത്തും .
രാവിലെ തമിഴ്, ഉച്ച മുതൽ വൈകുന്നേരം വരെ മലയാളം പഠിക്കുകയായിരുന്നു പതിവ് . കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടൻ വൈകുന്നേരം എന്നെ വിളിച്ചു കൊണ്ടു പോകാൻ വരും. ഉച്ചകഴിഞ്ഞ് ഞാൻ ടീച്ചറുടെ കണ്ണും വെട്ടിച്ചു വീട്ടിലെത്തും.
വീട്ടു വാതിൽ അരക്കതവ് ആണ് . ആ വാതിൽ തുറകാനുള്ള ഉയരമോ ശേഷിയോ ഇല്ലാ. അമ്മ എന്നെ കാണുപ്പോൾ തന്നെ , നീ എങ്ങനെ വന്നു, എന്തിനാണ് ഒറ്റയ്ക്ക് വന്നത്, ഇന്നിങ്ക്നേ വഴക്കു പറയാൻ തുടങ്ങും, വാതിൽ തുറക്കാതെ തന്നേ കട ചേട്ടൻമാറോടു 'ഇവളെ കൊണ്ടു വിടൂ' എന്ന് ആവശ്യയപ്പടും.
ഞാൻ പോകില്ലാ, ഉറക്കാം വരുന്നു, വയറു വേദന എന്ന പല പല നുണ കഥകളുടെ അകമ്പടിയാണ് പിന്നീട് . പക്ഷേ അമ്മ സമ്മതിക്കില്ലാ.
മടിച്ചി, നുണ പറയരുത്, നീ വീട്ടിൽ നിന്ന് എന്തുചെയ്യും?
കണ്ണുനീർ ധാര ധാരയായി വീഴുന്നു. ഞാൻ അവസാന ആയുധം എടുക്കും. നിങ്ങൾ 'പോണ്ട' വാങ്ങി തരുമെങ്കിൽ , സ്കൂളിൽ പോകാം .
ഉടൻ പോണ്ടാ വാങ്കി തന്നു, മിഠായി കൈയിൽ വച്ച് അയക്കും.
.
ഞാൻ പിന്നീട് ആ നാല് മണികായ് കാത്തിരിപ്പാണ് . വീട്ടിൽ ചുമതലയുള്ള മൂത്ത കുട്ടി, ഞാൻ ട്യൂഷൻ സ്‌കൂളിൽ ഇഷ്ട മകളാണ്
ട്യൂഷൻ വീട്ടിൽ ഉപ്പിട്ട നെല്ലിക്കയും മാങ്ങയും ടീച്ചരിൽ നിന്ന് വാങ്ങിച്ചു കഴിച്ചത് ഓർമ്മിക്കുന്നു.
ഒരിക്കേ എനിക്ക് ഉപ്പിലിട്ട മാങ്ങ തരാൻ കളിപ്പിച്ചതിനാൽ സ്ലേറ്റ്ട്ടു കൊണ്ട് ഒറ്റ അടി. . നീ എന്തിനാണ് അടിച്ചത്? എന്ന് ചോദിച്ചു ശിക്ഷയായി എന്നെ കൂട്ടത്തിൽ നിന്ന് മാറ്റി നിർത്തി. അവിടെ നിന്ന് കരഞ്ഞതും ഞാൻ ഓർക്കുന്നു.
ശബ്ദത്തിൽ സംസാരിക്കുകയും വഴക്കു കൂടുകയും ചെയ്യുന്നതിന് . അകത്തെ മുറിയിൽ നിന്ന് തങ്കച്ചൻ ചേട്ടൻ എന്റെ പേര് വിളിക്കുന്നതും
പിന്നെ പേടിച്ചു മിണ്ടാതിരിക്കും.
ഈ പടികളിലൂടെ കയറി ചെന്നാൽ എന്റെ പ്രാഥമിക വിദ്യാലയത്തിൽ എത്താൻ കഴിയും.ഇപ്പോൾ; അന്നത്തെ എന്റെ സുഹൃത്തുക്കൾ സഫീർ, അബ്ബാസ് അബ്ബാസ്, രാജൻ, ഫാമിജ, ബിന്ദു, ലത, ജയ എന്നിവരെ ഓർക്കുകയാണ്. .

ஜார் அரச குடும்பம்

If I die or you desert me, you will lose your son and your crown within six months.- Rasputin.
ரஷியாவிற்கு சைபீரியாவில் இருந்து ரஸ்புடின் வராதிருந்தால் மன்னரின் மகனுக்கு ஹீமோபீலியா என்ற நோய் இல்லாதிருந்தால் 300 வருட ஜார் மன்னரை போல்ஷிவிக் படைகள் கொன்றிருக்க இயலுமா? முதல் கம்யூனிஸ்ட் தேசமாக மாறியிருக்கத் தான் செய்யுமா?
ஜார் அரச குடும்ப கொலையில் லெனினுடைய நேரடி தொடர்பு கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் குடும்பத்துடன் கொல்ல அனுமதித்திருக்க மாட்டார் என்ற ஊகவும் உண்டு‌ இருந்தாலும் லெனின் பற்றிய ரஷிய அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு அவர் பயங்கரவாதத்தை பயண்படுத்தினவர் , பொய் சொல்ல மிகவும் திறமையானவர், பெரும்பான்மை மனநிலையை உருவாக்க தெரிந்தவர், அவருக்கான ஒரு நன்றியுள்ள குழுவை கட்டமைக்க தெரிந்திருந்தார்.
உண்மையில் ரஷியாவில் ஒரு மக்கள் போர் ( civil war) மூண்டதை விரும்பாதவர். ஒரு கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் அதன் மூலம் ஒரு அச்சத்தை ராஜ பரம்பரைக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே ஸ்டாலினுக்கு இருந்தது.
எதற்கு கிளர்ச்சியை ஏற்படுத்த
வேண்டும்? 300 வருஜார் ராஜ குடும்பத்திற்கும் அவருக்குமான பகை தான் என்ன?
தற்போதைய ஜார் மன்னரின் தாத்தாவின் கொலை வழக்கில் கைதாகி 1881 ல் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட Ulyanove குடும்பத்தை சேர்ந்த லெனினுடைய சகோதரன் அலெக்ஸ்சாண்டரில் இருந்து வர வேண்டும் வரலாறு.
ஜார் மன்னர் இறந்ததும் அவர் மகன் நிக்காளோஸ் III பதவிக்கு வந்தார். தனது 49 வது வயதில் சிறுநீரகப் பிரச்சினையால் இறந்து விட்டார். அடுத்து தந்தை வழி பதவி நிக்கோளஸ் II க்கு கிடைக்கிறது. அவர் அரசியல் அறிவில் பூஜ்ஜியமாக இருந்துள்ளார். ஜப்பானிடம் தோல்வியுற்றது மக்களின் நம்பிக்கையை இழக்க காரணமாகிறது.
நாலு மகள்கள் இருக்க ஐந்தாவதாக பிறந்த மகன் அலெக்ஸி ஹீமோபீலியா என்ற நோயுடன் மல்லிடுகிறார். இந்த காலயளவில் தான் ரஸ்புடின் அரண்மனை குடும்பத்திற்கு அறிமுகம் ஆகிறார். எப்படி என்று தெரியாது சிறுவனை குணப்படுத்தினார் அதுவே உண்மை.
தாயாரான மகாராணிக்கு மகன் சுகம் பெற்றதால் ரஸ்புடின் மேல் அளவு கடந்த மரியாதை அன்பு வருகிறது. இது மற்றைய ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு கண்டபடி பேச வழிவைக்கிறது.
ஒரு கட்டத்தில் ராணிக்கும் மாந்திரீக சாமியாருக்கும் உறவு என்ற பரப்புதல் ராஜகுடும்பம் மேல் மக்களுக்கு இருந்த மரியாதையை இழக்க செய்கிறது. ( இந்தியாவில் நேரு குடும்பத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சி அவமதிப்பது அவதூறு பரப்புவது போல).
சாமியார் ஜெர்மனி தரகர் என்பது வர செய்திகள் பரவுகிறது. 1916 ல் சாமியார் அரச குடும்ப ஆட்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
மக்கள் புரட்சியில் ஆளும் தற்காலிக அதிகார அரசும் மன்னரும் ஒரு பக்கம், படையும் மக்களும் எதிர்பக்கம்.
வெளிநாட்டு பயணத்தில் இருந்த ஸ்டாலின் ஓடோடி வருகிறார்.
மன்னர் குடும்பத்தை பாதுகாப்பதாக கூறியே ஆறு மாதங்களுக்கு மேலாக மாஸ்கோவில் இருந்து பல மைல்கள் பயணிக்க வைத்து பல வீடுகளிலாக தங்க வைக்கின்றனர்.
கடைசி நாள் 1917 வருகிறது. உங்களுக்கு பாதுகாப்பு என்று கூறி, மேல் மாடியில் இருந்தும் கீழ் மாடிக்கு வர வைத்து வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொல்கின்றனர்.
மன்னரின் உறவினர்கள் இங்கிலாந்து , ஜெர்மெனி ராஜகுடும்பத்தில் இருந்தனர்.
பல வருடங்கள் அவர் கொல்லப்பட்டதையே பலரும் நம்பவில்லை . பின்பு அவர்கள் உடலை புதைத்திருந்த சுரங்கத்தில் இருந்து எடுத்து மரியாதையாக புதைக்கின்றனர். அதிலும் மன்னரின் மகன், மரியா என்ற மகளுடைய உடல் கிடைத்ததாக தகவல்கள் இல்லை.
அப்படியாக ஒரு conspiracy theory இந்த ஆட்சி மாற்றத்தில் பெரிதும் பங்கு பெற்றது. இத்துடன் 300 வருட ஜார் மன்னராட்சி முடிவிற்கு வந்தது. உலகின் முதல் கம்யூனிஸ்ட் தேசம் உருவாகிறது.
1917 ல் ஆட்சியை பிடித்த ஸ்டாலினும் 1924 ல் நோய்வாய்பட்டு இறந்து விட்டார். அடுத்து தான் கொடும் கோலன் ஜோசப் ஸ்டாலின் ஆட்சி மலருகிறது.
இந்த நூற்றாண்டில் மக்கள் உயிரை பறித்த, பல மில்லியன் மரணங்களுக்கு காரணமான மாவோ, ஹிட்லர், ஜோசஃப் ஸ்டாலின் பற்றி பின்னொரு பதிவில் காண்போம்.

ஆண்- பெண் குடிகாரர்கள்

கொரோனா காலத்தில் மக்களுக்கு அரிசி கிடைக்கிறதா இல்லையா என்பதை விட டாஸ்மாக் திறப்பார்களா இல்லையா என்பதை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.
டாஸ்மாக்கை அடைக்க வேண்டும் என்பது குடிகாரர்கள் செத்து போய் விடக்கூடாது என்பதை விட கொரோனா இடரில் அரசை முடக்கும் ஒரு வார்த்தையாகவும் முன்வைக்கப்பட்டது. ஒரு நாள் வியாபாரம் 180 கோடி என்பது அதன் மார்க்கட் நிலையும் கண்டு உணர்ந்தோம்.
குழந்தைகள் பிறந்த நாள் துவங்கி கல்யாணம், தேர்வில் வெற்றி , வேலை உயர்வு என எல்லா நிகழச்சிகளிலும்
மதுவும் விருந்தாக ஊற்றப்படுகிறது .
இதன் பயண்பாடு என்பதை உடல் பராமரிப்பு, ஆரோக்கியம், மனிதனின் தோற்றப் பொலிவையும் முன்நிறுத்தி விழிப்புணர்வு கொடுத்தால் இளம் தலைமுறையாவது தப்பிக்கும்.
இன்றைய தினம் , 10 ஆம் வகுப்பு மாணவன் துவங்கி பல்லு போன கிழவன் வரை குடிக்கிறார்கள் என்பதே உண்மை.
மதமோ,கலையோ, கலாச்சாரமோ, கல்வியோ எதுவும் கட்டுப்படுத்த இயலா வண்ணம் மது பழக்கம் பெருகி விட்டது.
மதுபானங்களால் என்ன தீமை என்னவென்று தெரியாதவர்களா? குடிக்கிறார்கள் அதுவுமில்லை.
மதுவால் உடல் நீர் சத்து குறைந்து
கிட்னி,
லிவர்,
ஈரல்,
பான்கிரியாஸ்,
நரம்பு மண்டலம்,
செமிப்பு தன்மை
உடல் இயக்கம்,
உளவியல்
என எல்லா வகையிலும் பாதிக்கப்படுவார்கள். மேலும் உடலுக்கும் மூளைக்குமான தொடர்பாடல் தடை , பல வகை கேன்சருக்கு காரணம் என தெரிந்தே குடிக்கிறார்கள்.
மதுக்கடையை மூடுவது சாத்தியமா என்றால்; மது தயாரிப்பில் தரம் பேணுக , விற்பதில் ஐரோப்பிய நாடுகளில் என்பது போன்று வயது நோக்கி கொடுக்குக, அளவை குறைத்து, விலையை கூட்டுதல் மட்டுமே சாத்தியம்.
இன்று குடிப்பது என்பது கர்வத்தின், பணக்காரத்தனத்தின், சமூக அங்கீகாரத்தின் , நாகரிகத்தின், பாகமாக விளம்பரம் ஊடாக இளம் தலைமுறை தலையிலும் புகுத்தியுள்ளார்கள்.
இளம் தலைமுறைக்கு புரிதல் தருவது மட்டுமே தீர்வாகலாம்.
அவ்வகையில் அதன் அளவு சார்ந்து தெரிவிப்பது காலத்தின் அவசியமாகும்.
ஒரு ஆணின் ஒரு நாளைய குடி அளவாக " 1 ட்ரிங்( 1 drink) என்கிறார்கள்.
ஒரு ட்ரிங்
12 அவுன்ஸ் பீர்
5 அவுன்ஸ் வைன்
ஒன்றரை அவுன்ஸ் ஸ்பிரிட்( விஸ்கி, ஜின்)
ஒரு அவுன்ஸ் என்பது 14 மில்லி.
இன்றைய ஆண்கள் ஒரு நேரம் குறைந்தது 500 மிலி குடிப்பதாக அறிகிறோம். 21 மி.லிக்கும் 500 மி.லி க்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் போன்றதே.
குடியின் காரணமாக ஏதேதோ சொல்கிறார்கள். மனச்சோர்வாம், கெத்தாம், சமூக நிர்பந்தமாம், பலர் ஐரோப்பியா நாட்டை பின்பற்றுவதாக சொல்கிறார்கள். ஐரோப்பியா காலநிலை தான் என்ன? -மைனஸ் () டிகிரிக்கு மேல் இங்கு + 35 டிகிரிக்கு மேல்.
குடியை குடிகார்கள் தானாக நிறுத்த வேண்டும். கொரோனா நேரம் மிகவும் சிக்கலான நேரம் குடிகாரர்களை விடுத்து வாழ வேண்டிய குழந்தைகள், ஏழை தொழிலாளர்களை நினைத்து உதவுவோம்.


ஆண்கள் குடியை பற்றி எழுதிவிட்டு பெண்கள் குடியை பற்றி எழுதாவிடில் சமத்துவம் இல்லை என்றாகி விடும்.
பெண்கள் குடியை ஒழுக்க, நெறிகளுடன் பலர் பார்த்து தடுக்க பார்க்கையில் விற்பனையாளர்கள் கவரவத்தின், பெண் ஆளுமையின் , சுதந்திரத்தின்,ஆண் சமத்துவத்தின், துணிவின் தன்னம்பிக்கையின், அடையாளமாக பார்க்கிறோம் என க்கூறி மோமி டைம்ஔட், மாட் ஹவுஸ் வைஃப் போன்ற செல்ல பெயருகளில் லேபல் செய்து சந்தைப்படுத்துதலை பெருக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
18 வயதிற்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் குடிக்கும் படி இனிப்பு பீர், சிவப்பு வைன் போன்றவை சின்ன சின்ன பெட்டிக்கடையில் கூட வாங்கும் படி வசதி செய்து கொடுத்துள்ளனர்.
அதிக அளவு குடியால் ஆண்களுக்கு என்னன்ன பிரச்சினை வருமோ, அதே பிரச்சினைகள் ஒரு படி மேலே பெண்களை பாதிக்கும். காரணம் ஆண்களை விட தண்ணீர் சத்து குறைந்தது பெண்கள் உடல்வாகு. அதனால் குடிக்குகையில் ஆண்களை விட உடல் நீர் சத்து குறைந்து இருப்பதால் கறக்கம் மயக்கம் என பாதிப்பு அதிமாகவே பாதிக்கும் .
ஒவ்வொரு 96 நிமிடத்திற்கு ஒராள் குடியால் சாகிறதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தலைநகரம் தில்லியில் மட்டும் 15 லட்சம் பெண் குடிகாரிகள் உண்டாம். இதில் பெருவாரி பெண்கள் ஒரே நேரம் 5 டிரிங்ஸ் எடுப்பவர்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் 5000 வழக்கு பதிவாயுள்ளது.
20 சதவீதம் பெண்கள் சமூக நிர்பந்தம், 44 சதவீதம் தங்கள் விருப்பத்தால், 42 சதவீதம் தொழில் நிமித்தமாக,53 சதவீதம் தங்கள் உணர்வு தேவையால் எனக்கூறுகிறது சர்வே.
ஆக மொத்தம் தேசத்தில் 57 சதவீதம் ஆண் குடிகாரர்கள் ஒன்றால் 28 சதவீதம் பெண் குடிகாரிகள்.
குடியில் குடிக்கும் அளவு தான் பிரதானம். ஒரு நாள் ஒரு டிரிங்க் அதுவே கணக்கு எனக்கூறுகிறது ஆரோக்கிய த்துறை.
பெண்கள் குடிப்பதால் ஆண்களை போன்றே கேன்சர்,லிவர், கிட்னி , மூளை பாதிப்பபிற்கு ஆளாகுவார்கள்.
அதையும் கடந்து
குழந்தைகளை போன்று பாலியலாக துன்புறுத்தும் சூழலில் எதிர்க்க வலுவற்று போக வாய்ப்பு.
பெண்கள் மூளை ஆண்கள் மூளையை விட சென்சிட்டிவ் என்பதால் பாதிப்பும் அதிகம்.
பெண்கள் குடியையும் நோயாக கணக்கிலெடுத்து உளவியல் சிகித்சைக்கு, கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
கலாச்சாரம் நெறியோடு இணைத்து பார்ப்பது அறிவீனம்.
இதை உடல் ஆரோக்கியத்துடன் இணைத்து பார்ப்பதே அவசியம்..

திரைப்படம் Escape from Sobibor


போலந்தில் இருந்து யூதர்களை சோபிபோர் என்ற இடத்திற்கு கொண்டு வருவதுடன் திரைப்படம் Escape from Sobibor ஆரம்பிக்கிறது. 1987 ல் வெளிவந்த திரைப்படம்.
குடும்பம் குடும்பமாக வந்திறங்கிய யூதர்களில் இருந்து தொழில் தெரிந்த திறமையான (சிறுவர்களையும் முதியவர்களையும் தவிர்த்து) நல்ல வேலை செய்ய திராணியுள்ள பெண்களும் ஆண்களுமாக 600 பேரை தேர்ந்தெடுத்து நாசிகளின் வதைமுகாமில் அடைத்து வேலை வாங்குகின்றனர்.
மீதமுள்ள குழந்தைகள், பெண்கள் முதியவர்களை கொன்று எரிப்பதை தூரத்தில் இருக்கும் தங்கள் முகாமில் இருந்து பார்த்து நொறுங்குகின்றனர். இந்த வதை முகாமில் ( Auschwitz-Birkenau and Treblinka ) மட்டுமே 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
அப்படியான கொடும் வதை முகாமில் இருந்து ஒரு முறை 2 பேர் தப்பித்து செல்கின்றனர். பிடிபட்ட 13 பேரை உன்னுடன் ஜோடியாக சாவதற்கு ஆட்களை நீயாகவே தேர்ந்து கொள் என கொடுமையான நாசி அதிகாரி கட்டளை இடுவான். வேறு வழியற்று அவர்கள் தங்களுக்குள்ளே தேர்ந்தெடுத்து 26 பேர் கொல்லப்படுவார்கள். இந்த நிகழ்வு அவர்களுக்குள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லியோன் தலைமையில் தப்பித்து போக ஆலோசித்து கொண்டிருப்பார்கள். அந்த காலயளவில் ரஷியாவில் இருந்து யூதர்களை கொண்டு வந்திருப்பார்கள். அந்த கூட்டத்தில் இருந்த சாஷி என்ற ராணுவ வீரனின் வழிகாட்டுதலில் 11 நாசி அதிகாரிகளை கொலை செய்து விட்டு 600 பேர் தப்பிக்க முயன்று 300 பேர் தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைவார்கள்.
இந்த திரைப்படம் ஜாக் கோல்டால் இயக்கப்பட்டது. படம்பிடிப்பு யுகோஸ்லாவியாவில் அவலாவில் நடந்துள்ளது. ரிச்சார்டு றாஷ்கீயின் புத்தகத்தை(Richard Rashke's 1983) ஆதாரமாக கொண்டு இதன் திரைக்கதை ரெஜினாட்டு ரோஸால் எழுதப்பட்டது.
இந்தப்படத்தில் சிறந்த நடிப்பிற்கு என க்ளோபன் கோல்டு விருது Hauer க்கு கிடைத்துள்ளது. இந்த வதை முகாமில் இருந்து தப்பித்த Esther Raab இக்கதை வடிவமைப்பிற்கு பெரிதும் உதவியுள்ளார்.
தப்பித்த வரலாறு முதலும் கடைசியுமாக இருந்ததால் ஜெர்மென் அதிகாரிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தலைமை அதிகாரியாக இருந்த Heinrich Himmler கட்டளைப்படி வதை முகாமை உடைத்து தறைமட்டமாக்கி, மண்ணிட்டு மூடி அதன் மேல் மரங்களை நட்டு வளர்த்தி, கைதிகள் தப்பித்து போன நிகழ்வை மறக்க முயன்றனர் ஜெர்மன் அதிகாரிகள்.
இந்த வதை முகாமில் தான் மிகவும் கொடூர குணம் கொண்ட சென்னாய் என்று அழைக்கப்பட்ட Wagner பணியாற்றி வந்துள்ளான்.போருக்கு பின்னால் வாக்னர் ஆயுள் தண்டனை பெறப்பட்டாலும், பெல்ஜியம் தப்பித்து போய் ஒரு பணக்காரர்கள் வீட்டில் வேலைக்காரனாகவும் , பின்பு பைத்தியக்காரனாகவும் தலைமறைவாக தெருவில் வாழ்ந்து வந்த இவன் தனது 60 வது வயதில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் உண்டு.
இந்த படத்தின் தேவையும் முக்கியவும் யூத மக்களின் ஆக்கபூர்வமான நம்பிக்கையான மனநிலையாகும்.
மரணத்தின் பிடியிலும் உழைப்பாளிகளாக சிந்தனை தெளிவுள்ளவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் ஒற்றுமையை பேணும் படி இருப்பார்கள். தங்களுக்குள்ளான மகிழ்ச்சிக்கும் பாடலுக்கும் நடனத்திற்கும் இடம் கொடுத்திருப்பார்கள்.
ஒருவருடைய மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட்டு விடுவார்கள். தான் தப்பிப்பதே எதிராளிக்கு செய்யும் பகைமீட்டல் எனக்கூறி தங்கள் உயிரை தற்காத்து கொள்ள தன் குடும்பம் குழந்தைகள் கணவரை இழந்த பெண் நம்பிக்கை கொடுத்து உணவை உண்ண நிர்பந்திப்பாள்.
ஒரு இடத்தில் தானே தன்னுடன் கொல்லப்பட ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழல் வரும். முதலில் மறுப்பார்கள். மரணத்தின் பிடியில் கூட அடுத்த குடும்பங்களை ஈடாக்காது தங்கள் குடும்பத்தினரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு முக்கிய பெண் பாத்திரம். தப்பிக்கும் திட்டத்தில் சாஷிக்கு காதலியாக நடிக்க வேண்டும். உண்மையாகவே காதலில் ஆட்பட்டு விடுவார். ஆனால் சாஷியோ தனக்கு மனைவி, மகள் உண்டு எனக்கூறி அக்காதலை ஏற்க இயலாதவராக இருப்பார்.
அப்பெண் அவருக்கு பரிசளித்த சட்டை தற்போதும் வதைமுகாம் நினைவாக ம்யூசியத்தில் உண்டாம்.
வதை முகாமிலுள்ள தையல் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண் தன் கைக்குழந்தையை காப்பாற்ற பெரும்பாடு படுவார். அக்குழந்தையும் தாயும் கண்டுபிடிக்கப்பட்டு வாகனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
வதைமுகாம் கைதிகள தப்பிக்க தலைமை தாங்கிய லியோன் பெஃட்ஹென்லெரின் சாதுரியம் இப்படத்தில் லியோனாக நடித்த நடிகர் அலனின் நடிப்பும் இயல்பானது.
அலன் தப்பித்து போலண்டு சென்று, மறைவு வாழ்க்கையின் போது இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு முன்பே தன் நாட்டு எதிர் அரசியல்வாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தி துயரை தருகிறது.
இப்படியாக பெற்றோரை இழந்து காதலர்களை இழந்து தன் குழந்தை, குடும்பம் மனைவியை இழந்த துயர்களை சந்தித்து மீளாத்துயரிலும் மீண்டு எழுந்த யூதர்களை நினைத்து பார்ப்பது நமது வாழ்க்கைக்கும் அர்த்தம் தருவதே.
படத்தின் சிறப்பே அதை எடுத்த விதம் தான். இயல்பு மாறாது இரண்டாம் உலகப்போர் வதைமுகாமுக்குள் நம்மை சென்று விட்டனர். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். சிறப்பாக, போர் மேல் தீராத மோகம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். பல அறன்களை போதிக்கும் படவும் கூட.
https://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGIhttps://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGI



ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா

தமிழகத்தில் கடைசியாக பட்டம் கட்டப்பட்டு 21 நூற்றாண்டில் வாழ்ந்து வந்த கடைசி ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா இன்று காலம் சென்றார்.
முதலாமது பட்டம் கட்டப்பட்டவர் ஆபோதாரணத்தேவர், 31 ஆவது பட்டம் திருமிகு டி என் எஸ் முருகதாஸ் தீர்த்தபதிக்கு அருளப்பட்டது. சங்கர தீர்த்தபதி மகாராஜா, இராணி வள்ளிமயில் நாச்சியாருக்கும் மகனாய் 29-09-31 ல் பிறந்தார்.
இவருடைய தந்தையை சிறுவயதில் இழந்ததால் ஆங்கிலேய அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சிறுவர் காப்பாளர் நீதிமன்றத்தின் பராமரிப்பில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பு பாளையம்கோட்டை புனித இன்னாசியார் பள்ளியிலும், உயர் கல்வி சேலம் ஏற்காடு மான்பாட் பள்ளியிலும், மேற்படிப்பு இலங்கை கண்டியிலுள்ள டிரினிட்டி கல்லூரியிலும் முடித்துள்ளார்.
கி. பி1100 வருடங்களுக்கு பின்பு ஆயிரம் வருடம் குறுநில மன்னர்களாகவும், (சிற்றரசர்களாக), பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் வாழ்ந்து வந்தவர்கள் சிங்கம்பட்டி ஜமீன்கள்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சியை வீழ்த்திய நாகநாயக்கர்கள், நிலத்தை 72 பாளையங்களாக பிரித்தனர். அதில் ஒன்று தான் சிங்கம்பட்டி ஜமீன்.
இவர்கள் வீரபராக்கிரமங்களை கண்ட மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தென்னாட்டு புலி என பட்டம் சூட்டி மகிழ்ந்தார். சேரநாட்டு மார்த்தாண்ட வர்மாவிற்கு ஆட்சியை பிடிக்க உதவி புரிந்ததால் சிங்கம்பட்டியாரின் மகன் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்தால் நன்றி கடனாக சேரநாட்டு உமையம்மை ராணி கொடுத்த பட்டம் தான் 'நல்ல குட்டி'.
சேரநாட்டு மன்னர் எங்களுக்காக உங்கள் இளவரசர் வீரமரணம் அடைந்து விட்டார். ஒரு காட்டை தருகிறேன் என்று மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியும், 5 கிராமங்களும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளடங்கிய 8 கோயில்கள், 5000 ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் அடங்கிய பகுதியும் கொடுத்துள்ளார்.
ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை சிங்ஙம்பட்டி ஜமீன் இதை அனுபவித்து வந்துள்ளது. இவர்களுக்கு கிடைத்த 80 ஏக்கர் நிலப்பரப்பில் தாமிரபரணி நதி, துணை நதிகளான மணிமுத்தாறு, பச்சையாறு, பாணதீர்த்தம் கல்யாணதீர்த்தம் அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்றவைக்கு அதிபதியான சிங்கம்பட்டி ஜமீனை தீர்த்தபதி என்றும் அழைத்து வந்தனர்.
30 வது ஜமீன் திருமிகு சங்கர சிவ சுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா; சென்னையில் கல்வி கற்கும் வேளையில் ஒரு கொலைக்குற்றத்தில் மாட்டுப்பட்டார். இந்த வழக்கில் ஏற்பட்ட பணவிரயம் ஜமீனை ஆடச்செய்தது . 8000 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடேஸ் கம்பனிக்கு குத்தகைக்கு கொடுத்தனர் அதுவே மாஞ்சோலை எஸ்டேட்.
குத்தகை காலம் முடிந்தாலும் ஆங்கிலேய அரசிற்கு கட்ட பணம் இல்லாததால் எஸ்டேட்டை ஆங்கிலேயர்களிடம் கொடுத்து விட்டார், தற்போது காலம் சென்ற ஜமீன்தார்.
இவர் 50 ஆண்டு காலமாக ஆன்மீக பணியில் இருந்தவர். எல்லா மக்களோடும் அன்பாகவும் கருணையோடும் பழகத் தெரிந்தவர்.
இவருக்கு தென்பொதிகை சித்தர், இந்து ஆலய பாதுகாவலர், சிவஞானச் சித்தர், சித்தாந்த சிகாமணி, சித்தாந்த சிந்தாமணி, மூதறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
முகவை மன்னரும், தாய் மாமாவுமான அப்போதைய காமராசர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து திரு சண்முக இராஜேஸ்வர சேதுபதியின் மகள் இராணி சேதுபர்வதவர்த்தினி இவர் மனைவி ஆவார். இரு ஆண் 3 பெண் பிள்ளைகள்.
எளிமையின் உருவாக வாழ்நது வந்த மன்னர் மக்களின் நேசத்திற்கு உரியவராக 'வாழும் சித்தர்' என அறியப்பட்டு இருந்தார். தமிழும் சைவவும் இரு கண்களாக இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் மிகவும் சரளமாக கதைப்பார்.
ஒரு முறை, திருநெல்வேலி புகைப்பட குழுமம்
Nellai Weekend
தலைமையில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர்களுடன் சிங்கம்பட்டி அரண்மனையின் ராஜாவை சந்தித்திருந்தோம்.
எங்களின் ஆவலான பல கேள்விகளுக்கு, சிலரின் ஆர்வக்கோளாறான கேள்விகளுக்கு கூட பொறுமையாக பதிலளித்தார்.
அதில் ஒரு கேள்வி இப்போது நினைவில் உண்டு. எதனால் மன்னராட்சி வீட்சியடைந்தது எனக்கேட்ட போது பெண்களுககு செய்த தீங்கிற்கும் துரோகங்களுக்கும் என பதிலளித்தார். எங்களுக்கு பிஸ்கட் காப்பி வழங்கினார்.
அடுத்த முறை சொறிமுத்து ஐய்யனார் கோயிலுக்கு மாணவர்களுடன் சென்ற போது தன் தனிச்செயலரை அனுப்பி எங்களுக்கான எல்லா வசதிகளையும் வழங்கினார்.
12 புத்தக ஆசிரியர்களில் ஒருவரான என்னுடைய இரண்டாவது புத்தகத்தையும் வெளியிட்டது, ஜமீன் என்பது எனக்கு பெருமை.
கண்ணில் குடிகொள்ளும் நேசவும், கருணையும், நடவடிக்கையில் உள்ள எளிமையும் மேன்மையும் நினைவில் உள்ளது.
தன்னுடைய வாழ்நாளில் மன்னராகவும் பின்பு ஜமீனாகவும், பின்பு அதையும் இழந்து சாதாரண பிரஜையாகவும், ஆனால் மக்கள் மனதில் எப்போதும் மன்னராக வாழ்ந்து மறைந்த ராஜாவிற்கு வணக்கங்களும் அஞ்சலிகளும்.
Photo courtesy: Nellai weekend clickers members,
Madhan Sundhar
,
Muthu Kumar
,
Monsoon Monk
,
Bless Boss
Naren K Narendran, Madhan Sundhar and 130 others
25 comments
37 shares
Like
Comment
Share