5 Sept 2014

ஆசிரியர் தின சிந்தனைகள்!


ஆசிரியர்கள் என்றதும் ஒரு புறம் இறைவனுக்கு ஒப்பாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றிருந்தாலும் அதே  போன்று வெறுப்பையும் வாங்கி கொண்டவர்கள் தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு மனிதன் மனதிலும் நேற்மறையான அல்லது எதிர்மறையான நீங்காத இடம் பெற்ற மனிதர்கள் என்பவர்கள்  ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் இவ்விதம் அன்பிற்கும் பாசத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகுவது  அவர்கள் ஏதோ வகையில் மாணவர்களுக்கு பாதிப்பு உருவாக்குகின்றனர் என்பதால் தான்.


இன்றைய சூழலில் சமூகத்தில் வெறுக்கப்படும் இடத்தில் தள்ளப்படும் காரணம் சமூக அநீதிக்கு பல வகையில் துணை போகின்றனர் என்பதாலே. இன்றைய ஆசிரியர்கள் சமூகத்தில் பெரும் ஊதியம் பெற்று பணக்காரர்களால் வலம் வருவதால் அவர்கள் கூறும் அறம் புறம் போக்காக பல போதும் தெரிகிறது இச்சமூகத்திற்கு!. ஒரு காலத்தில் சமூகத்தில் எல்லா இன்ப துன்பங்களையும் சகித்து கல்வி என்பதை ஒரு சமூகப்பணியாக செய்த காலம் போய்; இன்று வெறும் ஊதியம் என்ற கண்ணோட்டத்தில் இத்துறைக்கு வருகை தரும் நபர்கள் பலர் உண்டு. 

ஆசிரியர் பணிக்கு ஒரு முறை தேற்வாகி விட்டால் பின்பு எந்த கவலையும் அற்று; வேலையில் இருந்து விடுதலை பெறும் வரை பல சலுகைகளை பெற்று குறைந்த நேரம் வேலை செய்து பெரிய அளவில் ஊதியம் பெறும் தொழிலாக மாறினதும் இன்னொரு காரணமே.

இன்று அரசு ஆசிரியர் என்றால் மாதம் 50 ஆயிரம் பெறும் பெரும் பணக்காரர்களாக சமூகத்தில் வாழ்கின்றனர். இதே வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் இவர்களை கொண்டு நோக்கும் போது பத்தில் ஒரு மடங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு என்ற நிலையில் தான் உள்ளது. இந்தியா போன்ற ஏழை சமூகத்தில் " போதும் எனக்கு கிடைத்த ஊதியம்"  என்று எந்த ஆசிரியனும் திருப்தி கொள்வதில்லை.  இரண்டு ஆசிரியர்கள் கூடும் இடத்தில் தனக்கு கிடைக்கும் ஊதியம், கிடைக்க வேண்டிய சலுகைகளை பற்றி மட்டும் பேசி கொண்டிருக்கின்றனர். ஆனால் தன்னை போன்ற தகுதியுள்ளவர்களுக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை பற்றி சிந்திப்பதே இல்லை. 

எவ்விதமேனும் ஒரு அரசு ஆசிரியராக வேண்டி பல லட்சம் கொடுக்க தயங்காத ஆசிரிய உலகம் பிடித்த ஊருக்கு இடம் மாற்றலாகி செல்ல அதை போன்று சில லட்சங்கள் கொடுக்க தயங்குவதில்லை. ஊழலுடன் வேலைக்கு புகிர்வதால் உண்மையாக வேலை செய்வதை விடுத்து கொடுத்த லஞ்சம் பணத்த மீட்க மறுபடியும் வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர்.  சமூகத்தில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரிய உலகம் பெரும் ஒழிங்கீனத்திற்கு துணை போகிறவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் என்று மட்டுமல்ல கல்லூரி ஆசிரியர்கள் நிலையும் இதுவே தான். பள்ளி ஆசிரியர்கள் மாநில அரசின் ஊழலுக்கு துணை போகும் போது கல்லூரி ஆசிரியர்கள் மத்திய அரசின் நல திட்டத்துடன் இணைந்து பல ஊழல்களில் ஏற்படுகின்ரனர்.

புதிதாக உருவாகும் திருவாரூர் பல்கலைகழகம் பற்றி அனைவரும் செய்திகள் ஊடாக அறிந்ததே. பல்கலைகழகம் சிறப்பாக இயங்க ஆரம்பிக்கும் முன் கல்வி வளர்ச்சிக்கு என ஒதுக்கிய பணத்தில் ஆடம்பரமான வசிப்பிடங்கள் கட்டுவதில் முனைப்பாக இருந்துள்ளனர். ஒரு பேராசிரியருக்கு 1500 சதுர அடி வீடு என்ற அளவை தங்களது வசதிக்கு என 3000 அடி என மாற்றி கட்டிடங்கள் கட்டியிருந்தனர்.

இந்திய பொருளாதார நிலை அகோர பாதாளத்தில் விழுந்த நேரம் தான் 6ஆவது திட்ட கமிஷன் வழியாக ஒவ்வொரு பேராசிரியரும் 40ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் மாதம் வருமானம் பெரும் நபர்களாக மாறினார். ஒரு  பல்கலைகழக ஆசிரியர் பணி கிடைக்க 30 லட்சம் கைலஞ்சமாக கொடுக்க  தயங்காத பேராசிரியர் உலகம் தான் இயங்குகின்றது. \

ஆகையால் ஆசிரியர்களுக்கு வேலை பெறும் போட்டியில் சமூக அக்கறை, அறம், உண்மை நேர்மை எல்லாம் விலைக்கு விற்று வேலை பெறுவதால் உண்மையாக வேலை செய்யும் மனபாங்கையும் இழந்து விடுகின்றனர்.

அரசு விதித்த தகுதி தேற்வில் தேர்வாக தைரியம் இல்லாது மூப்பு அடிப்படையில் வேலை கேட்பது ஆசிரியரின் நேர்மையை எடுத்துரைக்க வில்லை. ஆசிரியர் பேராசிரியர் தேர்வையும் 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தினால் தகுதியற்ற ஆசிரியர்கள் வெளியேறவும் தகுதியுள்ளோர் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் ஒரு முறை தேர்வு எழுதி ஜெயித்து வேலை பெற்று வாழ் நாள் முழுக்க அதன் சலுகைகளை பெற அநியாய வழியில் நுழைவதும் சலுகையை மட்டும் நம்பி தேர்ந்தெடுத்த பணியை ஒழுங்காக செய்யாது இருப்பதிலும் ஆச்சரியமில்லை!  ஆனால் இசூழல்களுக்கு ஆசிரியர்கள் மட்டும் தான் காரணமா ?//////////////////////////////////////////////////////

30 Aug 2014

எழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் என் புத்தகம் பற்றிய கருத்துரை!

ஒரு புத்தகம் வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை உண்மையாக மாற்றினது முகநூல் நண்பர்களூம் என் வலைப்பதிவு நண்பர்களுமே. வெளியிடும் பொறுப்பை லண்டனில் உள்ள உடன்பிறவா சகோதரி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆலோசனைகள் ஶ்ரீ அண்ணா வழங்கியிருந்தார்கள். பத்மர் அண்ணா வெளியிடும் நாளை விழாவாக மாற்றினார். இப்படியாக இந்த புத்தகம் ஒரு கூட்டு முயற்ச்சியாக வெளிவந்தது.

எழுத்தாளர் சகோதரர் கூறினது போல் விற்பனை தளத்தில் என்னால் வெற்றி பெற இயலவில்லை. பதிப்பாசிரியர் சில நிபந்தனைகளுடன் தன் கடமையை முடித்து கொண்டார்.


இருப்பினும் ஒரு காலத்தை இட சூழலை அதில் வாழ்ந்த சில மனிதர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறினது. மறையும் காலவும் மனிதர்களும் தடுக்க இயலாததது. இருப்பினும் ஒரு புத்தகத்தின் ஊடாக பதிந்துள்ளேன் என்ற மன ஆறுதல் உண்டு.

பிறப்பால் தமிழர்கள் என்றாலும் உள்நாட்டு அகதிகளாக  வெளிமாநிலைங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். வலிந்து மாற்று மொழி கலாச்சாரம் என சமூக சூழலில் சிக்கி கொண்ட பல லட்சம் மக்களில் உள்ள நெருடல்கள் ஏக்கங்கள் பதிய நினைத்தேன். ஒரு வகையில் எனக்கான அடையாளத்தை உருவாக்கினாலும் அடிப்படைவாதிகளால் பல சிக்கல்கள் சந்திக்க வேண்டி வந்தது.






கதாசிரியர் முத்தாலக்குறிச்சி காமராசுவின் பாளை சமீந்தார்களின் வரலாறு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கின புத்தகம். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர் தரவுகள் சேகரித்து எழுதினதை கண்டு ஆச்சரியம் கொண்டுள்ளேன். என்னுடைய முதலாம் ஆண்டு மாணவரின் தந்தை என்று தற்செயலாக அறிந்த போது என் புத்தகம் ஒன்றை கொடுத்து அனுப்பியிருந்தேன்.

தன் வேலை மத்தியிலும் என் புத்தகத்தை வாசித்து  விளாவரியான யதார்த்தமான ஒரு விமர்சனம் பெற்றதல் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன்.இனியும் புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற உந்துதலை கதாசிரியரின் விமர்சனம் தருகிறது. கதாசிரிய  சகோதருக்கும் என் நெஞ்சர்ந்த நன்றி வணக்கங்கள்.  உங்களை போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தான் எங்களை போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு வெளிச்சமாக வருகின்றீர்கள்.



27 Jul 2014

ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை-நளினி ஜமீலா

நேற்றைய தினம் புத்தகக் கண்காட்சியில் வாங்கி வாசித்து முடித்த புத்தகம். தன் வாழ்க்கை சரிதையை ஒரு பாலியல் தொழிலாளி எந்த கற்பனை இல்லாது உண்மையான வார்த்தையில் பதிந்துள்ளார்.  அவர் பாலியல் தொழிலாளியானதற்கு முதல் காரணம் வரட்டு கவுரவம் பிடித்த வேலைக்கு போகாத அவள் தகப்பன் மற்றும் கொடுமைக்காரியான பெரியம்மா தன்னலம் கொண்ட அண்ணன் எதையும் தாங்குவதாக அழுது கொண்டிருக்கும் அம்மா அடங்கிய  வசதியான குடும்பவும் தான். 
தனது ஒன்பது வயதிலே மண் சுமக்க போக வேண்டி வந்தவள். 18 வயதில் வீட்டை விட்டு வந்து ஒரு கயவனின் மனைவியாக வாய்க்கப்பட்டு இரு குழந்தைகளுக்கு தாய் ஆன சூழலில் அவன் இறந்து போக பாலியலை தொழிலாக ஏற்ற பெண்.  பின்பு ஒரு இடை வேளை என்பது போல் நாகர்கோயிலை சேர்ந்த சாகுல் என்பவருக்கு மனைவியாக 12 வருடம் வாழ்ந்த பின்பு கணவனின் போக்கால் மறுபடியும் தன் வாழ்வாதாரமான பாலியல் தொழிலையே வரிந்து கொள்கின்றார்.

கணவனின் இரு குழந்தைகளை பிரிந்து விட்ட நிலையில் இரண்டாம் கணவனின் சீனத் என்ற மகளை வளர்த்து நல்ல நிலையில் திருமணம் முடித்து கொடுத்துள்ளார். ஒரு பாலியல் தொழிலாளியாக தன்னை சமூகம் நோக்கியதையும் தன்னுடைய சமூக பார்வையும், சிறப்பாக  பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார். இதுவரை இரண்டு ஆவணப்படம், இரண்டு புத்தகம் பல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதை பதிவு செய்துள்ளார்.

என்னை கவர்ந்த விடையம் அவரின் பாலியல் தொழில் பற்றிய ஆழமான அறிவும் ஆண்களை பற்றிய அவதானிப்பும் ஆகும். பல வகையான பாலியல் தேவைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். அறை எடுத்து தங்குவதை விட உடன் பயணிப்பது, பேசி கொண்டிருப்பது என ஆண்கள் பல விதமான விருப்பத்துடன்  அணுகுவதை பற்றி குறிப்பிட்டுள்ளார். சில ஆண்களோ திருமண உறவில் காணும் பிரச்சினைக்கு அறிவுரைகள் பெற அணுகுவதாகவும்  குறிப்பிடுகின்றார்.  கூலி வேலைக்கு மேல் தட்டு மக்கள் போக விரும்புவது இல்லை, ஆனால் அம்மச்சி வீடுகள் போன்றவை மேல் விட்டு பெண்களால் நடத்தப்படும் பாலியல் தொழில் இடமாக குறிப்பிடுகின்றார்.
ஒரு இரவில் நல்லவனான பண்பாளனாக இருந்த போலிஸ் அதிகாரி அடுத்த பகல் எந்த விதம் கொடூரனாக மாறினான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது 13 ஆம் வயதில் வீட்டு வேலைக்கு போன இடத்தில் தந்தை வயது கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர் எவ்விதம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்றும் விவரிக்கின்றார்.
சமூகத்தால் புரக்கணிக்கப்பட்ட பெண்களில் இருந்து ஒரு வரலாறு எழுத பட்டது சமூக-மக்கள் ஆய்வாளர்களுக்கு இப்புத்தகம் ஒரு பெரும் வரப்பிரசாதமாகத்தான் இருக்கும்.  எவ்விதம் ஏனும் தன் வீட்டிற்கு 3 அணா கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில்  ஒன்பது வயதில் தள்ளப்பட்ட ஜமீலா பிற்காலத்தில் பணத்தை சேகரிக்க மெனக்கெட்டதாக  தெரிய இல்லை. சொந்த ஊரில் 4 அணா பணம் பத்தாது என்ற நிலையில் நாளுக்கு 50 ரூபாய் கிடைக்கும் என்ற நோக்கில் பாலியல் தொழில் புரிய நகர் நோக்கி நகர்கின்றார். ஒவ்வொரு சூழலிலும் உடுக்கும் உடைக்கு கூட மற்றவர்களை கையேந்துவராகவே உள்ளார்.
 பின்பு சில வருடம் சாகுல் என்ற கணவர் குடும்பத்தில் மிகவும் செல்வாக்காக இருந்ததும், அவரால் புரக்கணிக்கப்பட்ட போது ஜமாத்தில் பிச்சை எடுத்து உண்ணும்  நிலைக்கு  தள்ளப்படுகின்றார். சுய மரியாதை இரண்டாவதாக இருக்க விரும்பவில்லை என பல காரணங்கள் கூறி உறவுகளை துடைத்து எறியும் போதும் பல அச்சுறுத்தல் சவால்கள், ஆபத்துகள் கொண்ட பாலியல் தொழிலில் ஈடுபாட்டுடன் தான் பங்கு பெறுகின்றார்.


நளினியின் 12 வருட கணவர் சாகுல் பற்றி குறிப்பிட வேண்டும். பாலியல் தொழிலாளி என்று அறிந்தும் தன் மனைவியாக்கி கொண்டவர்.நளினியின் மகளையும் தன் மகளாக பாவித்து தன் உறவினர்களுக்கு தன் மகள் என்றே அடையாளப்படுத்தியுள்ளார். நளினிக்கும் மரியாதயும் கண்ணியமான உறவை கொடுத்துள்ளார். நளினிக்கு இவர் வழியாக மதினி, இத்தா போன்ற உண்மையான, அன்பான உறவுகள் தந்தவர். இருந்தும் அவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டார் என்று அறிந்ததும் நளினியால் அவரை மன்னிக்க இயலவில்லை. இவருடன் வாழ்வதை விட பைத்தியக்காரியாயும் பிச்சைக்காரியாகவும் பல பள்ளி வாசல்களில் வாழ்கின்றார்.  சாகுல் பல தடவை வந்து சந்திக்கின்றார். தன் மகள் திருமணத்திற்கு தந்தை வேண்டும் என்ற சூழலில் அவசரமாக சல்லடை போட்டு  தேடி கொண்டு வரும் போதும் தன் கடமையும் செய்கின்றார். நளினியின் வாழ்க்கையில் வந்து போன ஆண்களின் எண்ணிக்கை பலர். இரு பொழுது தன் விருப்பம் இல்லாதே இரண்டு ரவுடிகளுக்கு தன்னை கொடுக்க வேண்டிய சூழல் வந்தது. ஒரு பொழுது ஒருவனுடன் இருந்து விட்டு இன்னொருவனுடன் தூங்கினேன் என்று குறிப்பிடுகின்றார். ஒரே நேரம் இரு மனிதர்களுடன் கணவர், சகோதரர் என்ற பெயரில் வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இருப்பினும் தன்னை மீறி இன்னொரு பெண் நபர் தொடர்பு என்பதை தாங்கி கொள்ள இயலவில்லை என்பது புதிராகவே உள்ளது. ஒரு குழந்தையின் குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமானது. பெற்றோர்களால் சுரண்டப்பட்ட நளினி தன் வாழ் நாள் முழுதும் குறிக்கோள் அற்ற மனித உறவுகளுடனே போராட்ட உணர்வுடனே வாழ்கின்றார் என்று தான் குறிப்பிட இயலும். இவர்கள் போன்றவர்களை நம் இடத்தில் இருந்து நோக்காது அவர்கள் இடத்தில் இருந்து நோக்கி சக மனிதராக பாவிப்பதில் தான் நம் மனிதம் உள்ளது.  

இவருடைய கோரிக்கை விபசாரம் அரசு சட்டத்தால் ஏற்று கொள்ளப்பட வேண்டும் என்பதே. என்றால் இரண்டு நபர்கள் உடன் பட்டு செய்யும் போது பெண்கள் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார்.. அதே போன்று பாலியலை ஒரு குற்றமாக பார்க்காது ஒரு தொழிலாக பார்க்கும் படி கூறுகின்றார். தேவையுள்ளவன் பணம் கொடுத்து பெறும் போது இதில் சம்பந்தம் இல்லாதவர்கள் கருத்து தெரிவிப்பது அபத்தமகவே குறிப்பிடுகின்றார். பாலியல் தொழில் புரிகின்றவர்களை மூன்று நிலையாக பிரிக்கின்றார் முதலாவது வகை மேல்தட்டு மக்கள், இவர்களை சமூகத்தை நேரடியாக எதிர் கொள்ள வேண்டி வருவதில்லை. அடுத்த இடநிலையில் உள்ளவர்கள் தங்கள் தொழில் நலனுக்காவும் குறிப்பிட்ட லாபத்திற்காகவும் சில நோக்கங்கள் பூர்த்தி செய்யவும் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறிகின்றார். ஆனால் இந்த கடைசி வகை விளிம்பு நிலை மக்களே அரசு சட்டத்தாலும் காவல்த்துறை அதிகாரிகளாலும் இந்த சமூகத்தின் பார்வையாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகுவதாக குறிப்பிடுகின்றார்.
 "எந்த அதிகாரத்தையும் அடக்குமுறையும் சொந்தம் கொண்டாடுதல்களையும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது " என்று குறிப்பிடும் ஜமீலாவின் மனபான்மை தன் சிறுவயதில் சந்தித்த கொடும் துயர்களும் தன் தாய் எதிர்க்க வலுவற்று தன் கணவனின் பிடியில் அடங்கி போனதின் எதிர் மனபாவமாகவே தெரிகின்றது. ஏதோ ஒரு வகையில் தன் சொந்த தகப்பன், உடன் பிறந்த சகோதரன், கணவர்கள், உடன் பணிபுரிந்த சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகும் ஜெமிலாவுக்கு ஆண்கள் பற்றிய உயர்ந்த எண்னம் இருப்பதாக தெரியவில்லை. பயத்துடன் நோக்கியவர் பின்பு கேலியாகவும் வண்மாகவும் பார்ப்பதை காணலாம். தன் வீட்டில் கிடைக்காத அங்கீகாரம் அனுசரனை, பெரியம்மாவின்  அடிமைப்படுத்தல் தன் வாழ் நாள் முழுக்க வதைக்கும் நினைவுகளாகவே உள்ளது. தன் தகப்பன் பெரியம்மாவுக்கு அடங்கி போனதும் தன் மனைவியை அடிமையாக நடத்தினதும் தன் மகளை ஒரு போதும் பாச உணர்வில் நோக்காததும் அவர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தன் தகப்பனுக்கும் பெரியம்மாவுக்கும் தகாத உறவு இருந்திருக்காலாம் என்றும் சந்தேகிக்கின்றார். 
பாலியலை அழிப்பது அல்ல பாலியலை பாதுக்காக்க வேண்டும் என்ற தன் கருத்துக்கு பல காரிய காரணங்களை முன்வைக்கின்றார். விபசாரம், பெண் வன்கொடுமை, பெண் வியாபாரம்  போன்றவற்றில் இருந்து வேறுபட்டது என்று குறிப்பிடுகின்றார். 
தற்போதைய ஆண்களின் மனநிலையை விட  பழைய கால ஆண்கள் பெண்களிடன் பரிவுடனும் மரியாதையுடனும் நடந்தனர் என்று குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் 40 வயதுக்கு மேல் பெண்கள் வயதானவர்கள் என்ற பார்வையில் ஆண் கொடூரர்களிடம் தப்பித்தது வந்தனர்.  தற்போது 55 வயது பெண்ணும் ஆண்களின் அச்சுறுத்தல் பார்வையில் வாழ்வதாகவும் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் பாலியல் தேவைக்கு பெண்களை தேடிவரும் வாடிக்கையாளர்களான ஆண்கள் தன்னை விட சிறிய வயது பெண் என ஆசைப்பட்டது போல் தற்கால இளைஞர்கள் வயதான பெண்களை விரும்புகின்றனர் என்கிறார். பாலியல் தேவை என்பது ஆணுக்கு மட்டுமானது அல்ல அதில் பெண் தேவையும் உள்ளடங்கியது என்று கூறும் நளினி ஜமீலா கேரளாவில் பெண் பாலியல் தொழிலாளர்கள் விட ஆண் பாலியல் தொழிலாளர்கள் தான் அதிகம் உண்டு என கூறியுள்ளார். 

தன் குடும்ப சூழலில் இளமையில் ஒரு தொழிலும் கைவசம் இல்லாத நிலையில் விபசாரத்தை தேர்ந்தெடுத்த நளினி; சாகுல் என்ற கணவருடன் வாழும் போதும் தொழில் செய்து கவுரவமாக வாழ்த்துள்ளார். கணவரால் புரக்கணிக்கப்பட்ட நிலையில் மறுபடியும் விபசாரத்தை தேர்ந்தெடுத்ததில் அவர் குழந்தைப் பருவ அவர் மனநிலையும் காரணமாக இருக்குமோ என்று வினா எழுகின்றது.  இருப்பினும் தன் மகள் தன்னை போல் ஒரு தொழிலை ஏற்க கூடாது என்பதில் காத்திரமாக இருக்கின்றார்.

நமது இந்திய பாரம்பரிய அடித்தளமான  குடும்பம் என்ற கட்டமைப்பு எவ்வளவு ஏமாற்று கொண்டது,  அங்கு பெண்கள் நிராதரர்களாக விடப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வசதியான வீட்டிலும் கவுரவம் பெண்கள் கைவிடப்படுவதும் மனம் குமுறச் செய்கின்றது. 
வசதியான குடும்பத்திலுள்ள ஆசை மகள், குழந்தை தொழிலாளி, பாலியல் தொழிலாளி, கவுரவமான குடும்பத்தலைவி பாசமுள்ள தாய், பைத்தியக்காரி, நோயாளி தற்போது பாலியல் தொழிலாளி , போராளி என பல நிலைகளில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் கண்டு உணர்ந்த ஜெமிலாவின் மாயம் சேராத வார்த்தைகள் மனிதகுலத்திற்கு நல்லதே பயிர்க்கும் என நம்பலாம்.



6 Apr 2014

பில்லை போட்டு மிரட்டும் பல் மருத்துவ மனை

எங்க ஊரில் இப்போது பல நவீன மருத்துவ மனைகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றது. அதிலும் அரசு அலுவலக அல்லாதோர் தெருவில் நல்ல நல்ல புது மருத்துவ மனைகள் வந்துள்ளது. மகாராஜர் மருத்துவ மனை மிகவும் அழகு வாய்ந்தது. அங்கு போனால் பல் வலியுடன் கன்னத்தில் கைவைத்து கொண்டே கண்கவரும் சுவர் மேல்க்கூரை அலங்காரத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். ஒரு ஒலிப்பேழை கேட்டு கொண்டே இருக்கும். மருத்துவரும் கருணையுடன் பல்லை பரிசோதிப்பார் ஒட்டுவார், பிடுங்குவார். ஆனாலும் சில காலமாக அந்த மருத்துவ மனை ஒன்றாம் வகுப்பு  பணக்காரர்களுக்காக மாறிப்போனது தான் உண்மை.

இன்று வந்த மருத்துவ மனை வாசல்ப்படியில் ஒரு காவலாளி அப்பிராணியாக உட்காந்து இருந்தார். வரவேற்பு பெண் விமானப்பணிப் பெண் போல் கொண்டைபோட்டு சாரி கட்டியிருந்தார். அழகாகவும் இருந்தார். பேரைக்கேட்டு எழுத தான் கொஞ்சம் சிரம்ப்பட்டார். பேரிலுள்ள சிக்கலைக்கருதி நானே எழுதி கொடுத்து விட்டேன். என் பெயரை ஜோஸ்ஃபின் என்று எத்தனை முறை கூறினாலும் பலருக்கும் ஜோஸ்லில், ஜோஸ்வின்,ரோஸ்லின் என்று தான் கேட்கும்!

மருத்துவர் இன்னும் வரவில்லை என்றும் சில நேரம் காத்திருக்க கூறினர்.  ஆதித்திய சானல் ஓடிக்கொண்டிருந்தது. பல் அடைக்கும் வலியுடன் வந்தால் சிரிக்க பிரச்சினை வரவில்லை.ஆனால் ஆதித்தியாவில் நம்மை சிரிக்க வைக்க வேண்டும் என்ற  நோக்குடன் வேஷம் போட்டு  பேசிய, பெண் மொக்கை மொக்பேசிகொண்டு இருந்தார். உடை ரசனை  நல்லாவே இல்லை. மீடியா  படித்து வெளியேறும் மீடியா மாணவிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ இதுவா இவர்கள் பணி என  அங்கலாய்த்த வண்ணம் பார்த்து கொண்டு இருந்தேன்.

என்ன தான் மகிழ்ச்சியாக பல் மருத்துவ மனைக்கு அழைத்து வந்தாலும் பணத்தை எவ்வளவு சுரண்டனுமோ என்று அத்தான் முகத்தில் பயம் நிழலாடியது தெரிந்தது. மருத்துவர் வந்து விட்டார்! மனிதர் கோட் சூட் போட்டு ஒல்லியாக சிரித்து கொண்டே நடக்கும் இளம் மருத்துவர். நெல்லை கொளுத்தும் வெயிலிலும் கோட்டா என்ற சிந்தனையில் இருக்க முன் இருக்கையில் இருந்த வயதான அம்மாவை அவர் கணவர் அன்பாக அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அடுத்து வடிவேலு ஜோக்கு ஓடி கொண்டிருந்தது.  பிரம்மா படத்திலுள்ள சசிகுமார் ஜோக்கும் வந்து விட்டது. சசிக்குமார்  படத்துக்கு படம் ”உங்க  நேர்மை பிடித்திருக்கு” என்று கழுத்தை அறுக்கின்றார் என்று எண்ணும் வேளையில் என் வரிசை வந்து விட்டது.

கல்லூரி படிப்பு நேர்முகம் போல் இருக்க வைத்து சில கேள்விகள் கேட்டார் மருத்துவர். என்ன பிரச்சினை,  இடது பக்கம் பல்லில் சொத்தை அடைக்க வேண்டும். வலது பக்கம் ரூட் கனால் செய்திருக்கும் பல் பக்கமுள்ள பல்லை பிடுங்க வேண்டும். மருத்துவர் தீர்கமாக என் முகத்தை நோக்கினார். சேவையும் மிஞ்சி சில வணிக நுணுக்கவும் அவர் முகத்தில் தெரிந்தது.  பரிந்துரைக்கும் முன் முதலில் பரிசோதிக்க வேண்டும் என்றார். பல்லை லைட்டு அடித்து பார்த்து விட்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் தான் சிகித்சையை முன் நடத்த இயலும் என்று ஒரு போருக்கு தயார் ஆகும் வண்ணம் ஆழமாக கதைத்தார்.


அடுத்து எக்ஸ்ரே அறைக்கு அழைத்து சென்றனர். வாய்க்குள் ஒரு சதுரமான அட்டையை வைத்து படம் பிடித்தனர். பின்பு வந்து என்னவரையும் அழைத்து  விரிவுரை நிகழ்த்தினார். நாலு பல்லுக்கு ஒட்டு போட வேண்டும். பக்கத்தில் இருக்கும் பல்லை ரூட் கனால் செய்து பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே ரூட்கனால் அனுபவம் இருந்ததால் இப்போது தேற்வு பணியில் உள்ளேன். அடுத்த வாரம் வந்து சிகித்சை மேற்கொள்கின்றேன் என்றேன். மருத்துவர் முகத்தில் தெளிந்த பிரகாசம் இருட்டாக மாறி கொண்டிருந்ததை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தோம்.

ரூட் கனாலுக்கு  ஐந்து வருடம் முன்பு 3000 ரூபாய் செலவானது.  ஒரு பிடித்த பல்லை பாதுக்காக்க வேடும் என்ற ஆசையில் ரூட் கனாலுக்கு ஒத்து கொண்டாலும் அந்த பிடித்த பல்லை ஈவு இரக்கம் இன்றி வெட்டி எடுத்தார் மருத்துவர். அதற்க்கு மேல் ஒரு தொப்பி பல்லுக்குள் ஸ்கூரு போன்று முறுக்கி வைத்தனர். ஆனால் இன்றும் உணவு எடுக்கும் போது வலி தரியத்தான் செய்கின்றது. பல்லை வெட்டி மாற்றியதை தான் ஏற்று கொள்ளவே இயலவில்லை. வெட்டுப்பட பல்லுக்கு விதி இருப்பின் வெட்டுப்படாது பிடுங்கி போட்டிருக்கலாமே என்று இன்றும் வருத்தம் உண்டு.

இரண்டு பல்லுக்கு சிமின்று சாந்தும், ஒரு பல்லுக்கு விலையுயர்ந்த பசை ஒட்டினால் நல்லது என்றும் கூறினார். பல்லை ஒட்டும் முன் சுத்தப்படுத்த வேண்டும் என்றார். தேவையா என்று கணவர் முகத்தை நோக்கினேன். கணவர் சரி சரி என்று அனுமதி வழங்கியதும்வாகனத்தை அடித்து சுத்தம் செய்வது போல் சிறு இயந்திரம் மூலமாக பல்கள் சுத்தசெய்யப்பட்டது.  மருத்துவர் போன் சினுங்க ஆரம்பித்து விட்டது. பேசி முடித்து மறுபடி பல்லை ஒட்ட ஆரம்பித்தார். அதற்குள் வரவேற்ப்பில் இருக்கும் பெண் அவசரமாக மருத்துவரை அழைத்து சென்றார். மருத்துவர் வெளியில் சென்றதும் ஏதோ திட்டும் சத்தம் கேட்டது. எனக்கு முன் வந்த வயதான தம்பதிகள் பில்லை சொல்லி சண்டை போட்டு கொண்டு இருப்பதை ”டம்மி” செவிலியப்பெண்ணிடம்(+ 2 முடித்த பெண். செவிலியப் படிப்பு முடிக்க வில்லை) கேட்டு தெரிந்து கொண்டேன். அடுத்து மருத்துவர் வந்த போது அவர் முகத்தை மூடியிருக்கும் திரையை மீறி முகம் இருட்டு அடித்திருப்பது தெரிந்தது.  பெரியவர் ரொம்ப தான் திட்டி விட்டார் போலும்.....

எங்களுக்கும் பில் கிடைத்து விட்டது.
சாதாரண சாந்து ஒட்டு இரண்டு பல்    2 * 400= 800
                  ஸ்பெஷில் ஒரு பல் ஒட்டு    1* 600 = 600
                                           பல் சுத்தப்படுத்துதல்  = 600  
                                                      பல் ஒளிப்படம் = 450 மொத்தம் 2450 ரூபாயாம்.
பெரியவரைப்போல நம்மால் திட்டவும் இயலாது நம் அறிவுக்கு தெரியாதா? வாங்கி வைத்திருக்கும் இயந்திரம் , வரவேற்பறை பெண், உதவி செவிலியர், டம்மி செவிலியர், மருத்துவர் கோட் சூட், கட்டிட வாடகை,ஆதித்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சி, வடிவேல் காமடி, அழகிய வண்ண ஒளிகள் என நாம் கட்டணம் செலுத்த வேண்டாம். பல்லுள்ளவன் பட்டாணி சாப்பிடலாம், கைய்யில் காசிருந்தால் பல் மருத்துவ மனைக்கு செல்லாம். பல்லை பிடுங்க 300 ரூபாயாம்(உபரி தகவல்)
     

பயமுறுத்தும் பல் மருத்துவ மனை நினைவுகள்!

பல் ஆஸ்பத்திரி என்றதும் அம்மாவுடன் செல்லும் எங்க ஊர் பல் மருத்துவமனை தான் நினைவிற்கு வருகின்றது. அந்த மருத்துவர் நாலடி உயரம் உள்ள ஒரு மலையாளி! நோயாளியை பார்க்கும் பார்வையிலும் கேட்கும் கேள்வியிலும் நக்கல் துள்ளி விளையாடும். மருத்துவரை பற்றி பல கதைகள் நடைமாடியது. அதில் ஒன்று மருத்துவர் ஏழையாம் பணக்கார வீட்டு பெண்னை காதலித்து மணம் முடித்தாராம். அவர் மனைவி குடும்பத்தார் மருத்துவருக்கு தன் மகளுடன், வீடு, மருத்துவ மனையும் சேர்த்து  கொடுத்தார்களாம். நம்பாமலும் இருக்க இயலவில்லை. மருத்துவரை விட அவர் மனைவி இரண்டு அடி அவரை விட உயரமாகவே இருந்தார். அந்த சீமாட்டி எங்கள் ஊரில் யாருடன் நட்பு கொண்டதோ பேசினதோ கண்டதில்லை. அனால் அமைதியான அம்மையார்.  ஆனால் மருத்துவரை சுற்றி எப்போது எங்கள் ஊர் ”மைனர் குஞ்சுகள்” பேசி கைதட்டி சிரித்து கொண்டு நிற்பார்கள். 


இன்னும் சிலர் மருத்துவரை பற்றி கூறினார்கள் அவர் கடைசி வருட தேற்வில் தோற்றவராம். ஆனால் இந்த கதையும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. எங்கள் ஊரில் அன்று இருந்த மருத்துவர்கள் கேரளா நாட்டு மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களே. சில மந்திரவாதி வைத்தயர்களும் உண்டு. ஆனால் ஆங்கில மருத்துவம் என்றால் தேற்வில் ஜெயிக்காதவர்கள் தான் மருத்துவமனை நடத்துவார்கள்.

ஒன்று கேள்வி கேட்க தகுந்த அறிவாளியாட்கள் இல்லை அல்லது வருவதில்லை. கொஞ்சம் காசுள்ள மலையாளிகள் குட்டிக்கானம் கடந்து காஞ்சிரபள்ளி போனால் தமிழர்கள் கம்பம் போய் விடுவார்கள்.
அம்மா கடைசி நேரம் வலி உயிர் போகும் நேரம் மருத்துவ மனை செல்வதால் எங்கள் வீட்டில் இருந்து ஒரு தெருவு தள்ளி இருக்கும் இந்த மருத்துவரை தேடி செல்வார். அம்மாவுக்கு துணைக்கு நானும் செல்வேன். அந்த கட்டிடம் மரத்தாலான ஒரு அழகான பழைய கட்டிடம்.மருத்துவர் குடும்பம் அருத்துவமனை அடித்தளத்தில் வசித்து வந்தது. அந்த ஆள் மலையாளத்தில் கேலியாக அம்மாவிடம் கேட்க பல்லை ஒரு கையால் அமத்தி கொண்டும் வரும் கோவத்தை காட்டாது பதில் சொல்வது நினைவில் உள்ளது. .



அந்தக்காலம் ரூட்கனால் போன்ற சிகித்சை முறை இல்லாததால் பல்லை ஒட்டி விடுவார்கள் அல்லது பிடுங்கி விடுவார்கள். ஒட்டுவதை விட பிடுங்குவது லாபம் என்பதால் எங்க ஊர் மருத்துவர் பல்லை பிடுங்கத்தான் விரும்புவார். மயக்க ஊசி போடுவது கூட பல நேரம்  அவருக்கு வழக்கம் இல்லை. முகத்தை கோரமாக வைத்து கொண்டு ”துறக்கு வாயே” என்று கட்டளை இடுவார். அடுத்து கட்டிங் பிளையர் போன்ற ஆயுதம் வைத்து கொண்டு ஒரே பிடுங்கு தான்….. 

இதனாலே பல் மருத்துவ மனை என்றாலே எனக்கு கொள்ளை பயம்!!!  ஆனால் நான் நேற்று சென்ற மருத்துவ மனை நெல்லையிலுள்ள நவீன பல் மருத்துவ மனையாம், ஆனால் தண்ணீர் தான் தானியங்கி இயந்திரம் வழியாக வர வில்லை. ஒரு சிறுபெண் தண்ணீரை தாள் கப்பில் எடுத்து ஊற்றி கொண்டிருந்தார்.