28 Feb 2016

கண்ணீர் அஞ்சலி...








Sundara Vandhiya Tevan R's photo.




























சிவ மேனகை


விழிநீர் சுரந்து விடை இல்லா வினாக்களோடு
எழுதும் ஓர் கண்ணீர் அஞ்சலி ,,,,,,,
உறவுகளை தாண்டி எங்கள் உணர்வுகளுக்குள் வாழ்ந்தவர்
தொலை தூரத்தில் இருந்தும் உதவும் ஒரு உண்மை நட்பு
இன்று உணர்விழந்து எங்களை பிரிந்து சென்று விட்டார்
காலமும் காலனும் எங்கள் அன்பு ஜொசபீன் அக்காவுடன்
கதறி கதறி அழ எங்களை வைத்துவிட்டு - எங்கள்
பாபாவை பிரிந்தது என்றுமே தாங்க முடியாத துயரம்,,,,
உள்ளத்தில் இடியாய் விழுந்த ஒரு துயர செய்தி
கன்னத்தில் நீரை வழிந்தோட செய்த ஒரு வருந்தும் செய்தி
என்னென்று சொல்வது ஏங்கித்தவிக்கும் அக்காவுக்கு ஆறுதல்
பக்கத்தில் இருந்து பாசத்தை பொழிந்தவர் ,சட்டென்று
துக்கத்தில் விட்டுவிட்டு பிரிந்த துயரத்தை எப்படி தாங்குவா
பிள்ளைகள் கல்வியில் வளர்வில் முழுமூச்சாய் இருந்தவர்
இனி இல்லைஎன்று எண்ணும்பொழுது தாங்க முடியுமா துயரத்தை
துடியாய் துடித்து அழுகுரல் எழுப்பும் பாலன்களை இனி
வாழ்வில் சுமக்கும் தந்தை எப்போது வருவார் என்ற ஏக்கம்
நெஞ்சில் எழும் அத்தனை கேள்விகளுக்கும்
ஆழ்ந்துயில் கொண்ட பாபா அண்ணன் இனி வருவாரா ,,,
அவர் நினைவுகளே எங்களுடன் என்றென்றும் கூடவரும்
அவர் பசுமையான நினைவுகளே என்றென்றும் கூட வரும் ,,,,,
அவரது ஆத்மா இறைவன் திரு நிழலில் சாந்திபெற வேண்டும் என
வேண்டி பிரார்த்தித்து கண்ணீர் பூக்களை பாதத்தில் தூவி
மானசீகமாய் வணங்கி விடைபெறுகின்றோம் ,,,,,,
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ,,,,,,,
இங்கனம் கண்ணீர் பூக்களை தூவும்
பாபா அண்ணாவின் இழப்பினால் துயரில் தவிக்கும் சிவேமனகை குடுப்பமும் ஜொசபீன் அக்காவின் புலம்பெயர் முகநூல் உறவுகளும் ,,,,,,,

பாசமிகு.செல்வபாபா சவரிதாஸ் நெல்லையில் நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். பாபா கம்பீரமும்,கருணையும் ஒருங்கே பெற்ற சிறந்த மனிதர். நான் சில மாதங்களுக்கு முன்பு தூய சேவியர் கல்லூரியில் சிறப்புரையாற்றச் சென்றிருந்த பொழுது, நான் தங்கியிருந்த விடுதிக்கே வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் கலந்துரையாடினார்.[அந் நிகழ்ச்சிக்கு ஜோஸ்பின் தான் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது] 
''எவ்வளவு படித்திருந்தாலும் என் மனைவிக்கு ஒன்னும் தெரியாது,அவ மண்ணு' என்று சொல்லி மகிழும் ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியின் அறிவு விசாலமடையவும், அது சமூகத்திற்கு பயன்படவும் ஊன்றுகோலாக இருந்தவர். மனைவியை அழகுப்படுத்தி பார்க்கின்ற கணவர்கள் மத்தியில் மனைவியின் ஆளுமையை வளர்த்தெடுத்து அழகு பார்த்த அற்புத மனிதர்.அவரின் இழப்பு அவர் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல மனித நேயமிக்க எல்லோருக்குமான இழப்பாகும்.சகோதிரி ஜோஸ்பின் மீண்டெழுந்து பாபாவின் விருப்பப்படி மீண்டும் அதே கம்பீரத்தோடு பயணிப்பதே அவருக்குச் செலுத்துகின்ற ஒரே அஞ்சலி.நானும்,தம்பி நெல்லை அப்துல் ஜாபரும் அவரின் இல்லத்திற்கே சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம்.




நான் இந்த செய்தியை பார்த்து அதிர்ந்தே போனேன்.
வார்த்தைகள் வரவில்லை.
நான் சகோதரி ஜோசப்பினுடன் தொலைபேசியில் அதிகம் பேசியிருக்கிறேன். ஒருமுறை அவர் கணவருடனும் பேசியிருக்கிறேன். இந்தியா வரும் போது ஒருமுறை வாருங்கள் என்று கூட சொன்னார். நினைத்து பார்த்தால் கடினமாக இருக்கிறது. குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் ஒருவனாக இணைந்து கொள்கிறேன். பாபாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.வார்த்தைகள் வரவில்லை.


Subi Narendran 




 சொல்ல முடியாத அளவு சோகத்தோடு இதனைத் தெரிவிக்கிறேன். அன்பு மனைவி ஜோவையும், சாம், ஜெரி என்ற இரண்டு மகன்களையும் தவிக்க விட்டு மறைந்து விட்டார். மிகவும் அன்பான கணவனும் தகப்பனும் ஆவார். பாபாவின் அன்பை வார்த்தையால் சொல்ல முடியாது. மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று சொல்லும் குரல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பாபாவின் ஆன்ம சாந்திக் காகப் பிராத்திக்கிறேன். ஜோவுக்கும் குழந்தைகளுக்கும் இந்தக் கஷ்ட வேளையில் கடவுள் துணை இருக்க வேண்டும்.





Our family friend Baba (Selvababa) from Thirunelveli, South India passed away today morning in an accident. My heart felt condolences to their family & friends. May his soul rest in peace. He will be in my thought & heart always


Muthalankurichi Kamarasu 

எனது அன்பு சகோதரிக்கு நடந்த சோகத்தினால்இரண்டு நாள் வேறு வேலையே செய்ய முடியவில்லை
அன்பு சகோதரி ஜோஸ்பின் பாபா. சேவியர்கல்லூரி பேராசிரியர். எனது மகன் அபிஷ்விக்னேஷ்க்கு முதலாமாண்டு பொறுப்பாளர். ஒரு நாள் நான் எழுதிய நெல்லை ஜமீன்கள் நூலுடன் கல்லூரி வகுப்புக்குள் நுழைய, அதன் நூலாசிரியர் நான் தான் என்று என் மகன் மூலம் தெரிய, என்னை சந்திக்க தனது கணவர் பாபாவுடன்செய்துங்கநல்லூரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
வந்தவர்கள் எனது குடும்ப நண்பர்களாவே மாறிவிட்டார்கள்.
ஏதோ என்னுடன் பிறந்து வளர்ந்தவர் போலவே எங்கள் குடும்ப உறவினராகி விட்டார்கள்.
பாபாவும் நல்ல சுறுசுறுப்பானவர். ஆடிட்டர். எனது புத்தகங்களை படித்து கருத்து சொல்லும் வாசகர். கடந்த 20.11.2015 அன்று நெல்லை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்னுடைய புத்தக வெளியிட்டு விழாவிற்கு தனது அலுவல் இடையில் வந்து வாழ்த்து கூறி. என்னை கௌரவ படுத்தினார்.
பாபா தனது மனைவி ஜோஸ்பின் உயர்வுக்காக பாடுபடுபவர். சகோதரி ஜோஸ்பின் போட்டோ கிராபிக் ஆசைக்காக அவர் நெல்லை வீக்லி கிளப்புடன் மனைவினை அழைத்துக்கொண்டு அனைத்து இடங்களிலும் சென்று சுற்றி வந்தவர். சொல்லப்போனால் அந்த கிளப்பை எனக்கு அறிமுகம் செய்ததே பாபா தான்.
சகோதரி தனது சிறுகதை தொகுப்பு நூலில் அடிக்கடி அத்தான் என்றவொரு கதாபத்திரத்தில் பாபாவை சித்தரிப்பார். அந்த அத்தான் அவரது கணவர்தான் என்பதை படித்து முடிந்தவுடன் அறிந்து விடலாம். முக நூல் மூலமாக மிகப்பெரிய எழுத்தாளர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவர் சகோதரி. அவருக்கு பக்கபலனாக இருந்து உதவி புரிந்தவர் அவரது கணபர் பாபா. இருவரும் இணைப்பிரியாத தோழர்கள்.
நம்பவே முடியவில்லை. நேற்று காலை 8 மணிக்கு கே.டி.சி.நகர் விபத்தில் பாபா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்ற செய்தியை நான் பத்திரிக்கை நண்பர்கள் வாயிலாக கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. நானும், நண்பர் பரமசிவனும் பாளை மேட்டுதிடல் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு அவரின் உறவினர்களை விட நண்பர்கள் அதிகம் பேரை கண்டேன். என் குடும்பத்தில் பழகியது போலவே நண்பர்கள் பல குடும்பங்களில் குடும்பநண்பராகவே பழகி இருக்கிறார் பாபா.
வழக்கு பதிவு செய்ய நெல்லை சந்திப்பு டிராபிக் காவல் நிலையத்தில் மகன் உள்ளார் என்று தகவல் கிடைத்தது. அங்கு சென்றோம். பாபா£வின் மனைவி சகோதரி கணவரும் தூத்துக்குடி துணை தாசில்தாருமான பிரபாகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அவர்களின் மூத்த மகன் பிளஸ் டூ மாணவன் அவரோடு இருந்தான்.
அவனும் தகப்பனார் போல நல்ல நண்பர்கள் வைத்திருந்தான். அவனின் பள்ளி மாணவ தோழர்கள் அனைவரும் அவனின் தோளோடு தோளாகவே நின்று அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அனைத்து பணிகளையும் முடித்து மாலை 3 மணிஅளவில் போஸ்ட் மார்ட்டம் முடித்து அனுப்பினார்கள். பிரபாகரன் சாருக்கு உதவியாக அது வரை கூடவே இருந்தேன்.


எப்போதும் அத்தான், அத்தான் என்று அவரோடு நின்று புன்சிரிப்போடு வரும் சகோதரி ஜோஸ்மின், இன்று தனியாக பாபா உடலை பார்த்து கதறி அழும் காட்சியை பார்க்க வேண்டுமா...? என்னால் முடியவில்லை. எனவே அவர் வீட்டுக்-கு செல்ல எனக்கு மனம் வரவில்லை.
நானும் சராசரி மனிதன் தானே. 25 வருடமாக பகுதி நேர நிருபராக பல விபத்துகளையும் உடலையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு மனதுக்கு பிடித்து, என்னோடு வாழ்ந்த பாபாவின் உடலை என்னாலே பார்க்க முடியவில்லை. என் அன்பு சகோதரி எப்படி பார்க்க போகிறாரோ...
அப்படியே வீட்டுக்கு வந்து விட்டேன். "ஆண்டவனே.. என் சகோதரிக்கு ஆறுதல் தா... ஆதரவு தா.."
இரண்டு பையனும், இந்த மண்ணுலகில் சிறந்தவர்களாக விளங்க அருள் புரிவாயாக.. அவர்களுக்கு நல்ல கல்வி வேண்டும்.
ஆண்டவனிடம் பிராத்தனை செய்வோம்
கண்ணீர் அஞ்சலி...
Srikandarajah கங்கைமகன்'s photo.
































திரு பாபா அவர்களது அகால மரணச் செய்தி கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம் பிறப்பும் இறப்பும் நிட்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அகால மரணம் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கின்றது. மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இடையில் விட்டு இறையடி சேர்ந்தது அவரது குடும்பத்திற்குப் பேரிழப்பாகும். திருமதி பாபா அவர்களுக்கும், அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆண்டவன் வாழ்க்கையில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து நிறைவாக வாழவைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.




இன்று நண்பர் பாபா மரணித்துவிட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ந்துபோனோம். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. 
ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.



இன்று பாபா இறந்தது கேள்விப்பட்டு அழுகை வந்தது ... ஜோசெப்பின் இலங்கைத் தமிழர்கள் பலரை அண்ணாமார்களாகக் கொண்டு மிக அன்பாக பழகுவார் . அவரின் கணவரின் அன்பால் உபசரிப்பால் உச்சி குளிர்ந்தவர் பலர் .. இன்று அவரின் கணவர் பாபா இறந்தது மிகவும் கவலையும் அழுகையும் தருகிறது ..முகப்புத்த நட்பில் மிகவும் பிடித்தவர் ... அவர்கள் இருவருடனும் சில தடவைகள் தான் இணையங்களுடாகக் கதைத்தேன் ..எப்பொழுதும் குடுமபத்துடன் இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுவார்கல் ..இந்தக் கோடை விடுமுறை செல்லலாம் என்றும் எண்ணினேன் .... இப்படிநடந்து விட்டதே அவரின் இழப்பால் துயருரும் மனைவி பிள்ளைகளுக்கும் , உறவுகளுக்கும், என்போன்ற நட்புகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.








Kumar Sankaralingam Really unfortunate to hear this bad news,such a wonderful person, My heartfelt condolences to the family, may God give courage to come-out of this sudden lose. May his soul RIP.

ூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.

17 Feb 2016

நெருங்கிய மரணம் தரும் நெருக்கடி!



கடந்த நாலு மாதங்களில் என் மூன்று மாணவர்களின் பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டும், எதிர்பாராத விதமாகவும் இறந்து விட்டனர்.  குழந்தைகள் எல்லாவகையிலும் தன் பெற்றோரை சார்ந்து இருக்கும் வேளையில் அவர்கள் பெற்றோரை இழப்பது மாபெரும் துயரே



ஒரு மாணவியின் தகப்பனாரே கவனித்துள்ளேன். தினம் தனது இருசக்கர வாகனத்தில் வந்து தன் மகளை கல்லூரியில்  விட்டு சென்று அழைத்து செல்பவர்.   மதிப்பெண் சாற்றிதழ் பெற்று செல்வதுடன்  மகள் விடையத்தில் மிகவும் அக்கறையுள்ள பொறுப்புள்ள தகப்பனார். மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி நம்பவே இயலவில்லை. அவளை சந்திக்க சென்ற போது  நண்பர்கள் உறவினர்கள் சூழ பாதுகாப்பான சூழலில் இருந்தால் கூட அவள் கண்ணில் இருந்து மாலை மாலையாக வீழ்ந்த கண்ணீர் என்னை வதைத்தது. அதன் பாதிப்பில் இருந்து அவர் குடும்பம் மீண்டு வர ஒரு மாதம் பிடித்தது.  

ஒரு மாணவர் மிகவும் அமைதியானவர், கொடுக்கும் வீட்டு பாடங்களை மறக்காது செய்து வருபவர் சரியாக கல்லூரி நேரம் வந்து பாடங்களை காத்திரமாக கவனித்து குறிப்புகள் எழுதி வைத்து படித்து சரியாக தேர்விலும் கலந்து கொள்பவர்.  புகைப்படகலையில் வேறு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றாலும் அதை இயல்பாக எடுத்து கொள்ளும் அமைதியான சுபாவம். இப்படியான இயல்பாகவே பொறுப்பான மாணவர்கள் ஆசிரியர்களுக்கு என்றும் மறக்காத,  விருப்பத்திற்குரிய மாணவர்களாகவே இருபார்.  பகுதி நேரமாக பணி செய்து வரும் மாணவன் என்று அறிந்த போது அவர் பொறுப்புணர்ச்சியில் மேலும்  மதிப்பு சேர்ந்து உருவானது

அவர் தகப்பனார் கான்சரினால் நோய் வாய்பட்டு இறந்த செய்தி அறிந்து அவர் வீடு தேடி சென்றேன்.  வீட்டின் மூலையில் நெற்றியில் ஒன்றைய் ரூபாய் நாணயத்துடன்  ஓர் கதிரையில் உட்காரும் நிலையில் வைத்திருந்தனர்.  அவர் அம்மா என் கையை பிடித்து கொண்டு கடைசி நேரம் மகனை பார்க்க தான் விரும்பினார். பார்க்காது போய் விட்டார் என்று அழுது புலம்பி கொண்டிருந்தார். என் தம்பி ரொம்ப வருத்தப்படுவான் அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கள் அவன் அக்கா அழுகின்றார்.  மாணவரை நோக்கினேன் அவனுக்கு ஆறுதல் கொள்ள கூட நேரமில்லை அரசு அலுவலகம் அனுப்புகின்றனர், கடைசி கிரியைக்கான துணிகளை வாங்கி வர கூறுகின்றனர். அவன் அப்போதும் தன் நிலை தவறாது எல்லா கவலைகளையும் மனதில் வைத்து கொண்டு சலனமற்று செல்வதை கேட்டு செய்து முடிக்க தயாராக நிற்கின்றார்.  

வேலை, சூழல் காரணமாக நகரங்களை நோக்கி நகரும் போது இது போன்ற துன்ப சூழலில் தனித்து விடப்படும் சூழலே நகர சமூகத்தில் நிலவுகின்றது. யாரையும் கருதலுடன் நோக்கும் மனநிலை இன்று அரிதாகி வருகின்றது என்ற நினைப்பில் நானும் என் பணிக்கு செல்லும் நேரமானதால் உடன் விடை பெற்று வந்தேன்!


இரண்டு வாரம் கூட கடக்கவில்லை எங்கள் மாணவியின் தாயார் நீரழிவு நோயால் இறந்து போனார். ஏற்கனவே தகப்பானார் மூன்று வருடம் முன்பே மரித்து விட்ட நிலையில் ஒரு சகோதரி வேலைக்கு போக, இளையவர் எங்கள் துறையில் படித்து வந்துள்ளார். செய்தி கேள்விப்பட்டதும் காலை 7 மணிக்கு கிளம்பி அவர் ஊர் 8.30 மணிக்கு சென்று சேர்ந்தோம். நான் பயணித்தது எங்கள் வீட்டு காரில் அதுவே ஓர் நெடிய பயணமாக பட்டது. நம் மாணவர்கள் கல்வி கற்க என இவ்வளவு தொலைவில் இருந்து நெடிய பயணம் மேற்கொண்டு வருகின்றனரே என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது. அவர்கள் வகுப்பறையில் சிரிப்பதும் சேட்டைகள் செய்வதையும் கடந்து ஓர் கடினமான சூழலில் இருந்தே வருகின்றனர் என்பது வருந்த செய்தது

பொதுவாக நான் மாணவர்களிடம் ஓர் குறிப்பிட்ட இடைவெளி வேண்டும் என்றே ஏற்படுத்தி கொண்டே என் பணியை செய்து வருகின்றேன். என்னை கண்டதும் என் மாணவி என் மடியில் கிடந்து அழுதது மறக்க இயலவில்லை. இளம் மகள்களுக்கு இருந்த ஒரே உறவு அம்மாவையும் இழந்ததை அவர்களால் தாங்க கொள்ள இயலாது அந்த காலை வேளையில் அவர்கள் கதறி கதறி அழுதது என் நெஞ்சயை அடைப்பது போன்று உணர்ந்தேன். “அம்மா உன்னை விட மாட்டோம் … நீ உயிரோடு வா நீ சாகவில்லை” என அழுத போது அவர் அம்மா முகம் உறங்குவது போலவே தோன்றினது. ஆஸ்பத்திரியில் நோயாளி இறந்தார் என்று அறிந்ததும் முழு பணவும் கட்டிய பின்பே உடலை கொடுத்துள்ளனர். இது போன்ற அவசரத்தேவைகளுக்கு கடன் பெற நம் சமூக சூழலில் கந்து கட்டிகாரர்கள் தவிற யாரும் முன் வருவதில்லை என்பதும் காலக்கொடுமை. 


என் அம்மாவிடம் வந்து பேசின பின்பு தான் என் மனத்துயரம் ஓரளவு ஓய்ந்தது. இந்த வயதிலும் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் நினைவுகள் வராது இருப்பதில்லை. இந்த குழந்தைகளை எண்ணி துயர் பீறிட்டு எழுந்தது. ஒரு புறம் தாயை பல ஆஸ்பத்திரிகளில் வைத்து வைத்தியம் செய்த கடன், படிப்பு செலவு, எல்லாம் தானாக நோக்க வேண்டிய சூழல். எல்லாம் நினைக்க நினைக்க மலைக்க வைத்தது. இருப்பினும்  என் மாணவி விரைவில் கல்லூரி வந்து சேரவேண்டும் என  மன முகந்து இறைவனை வேண்டி கொண்டிருந்தேன்.

தேவையான மன உறுதியை, நம்பிக்கையை வார்த்தையால் கொடுக்க முயல்கின்றோம் ஆனால் செயல்வடிவத்தில் உதவ கையாலாகாத நிலையில் தான் என்னை போன்ற ஆசிரியர்கள் உள்ளனர் என்பது மனதை நெருடுகின்றது. வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறி ஓர் வகையில் நாம் ஏமாற்ற தான் செய்கின்றோம் என்ற எண்ணம் வதைக்கின்றது. ஆசிரியை பணி என்பது வெறும்  புத்தகங்களோடு மட்டுமான அறிவாற்றல் சார்ந்த பணி மட்டுமல்ல  உயிருள்ள மனிதர்களிடம் நம் மனித நேயத்தை செயல்வடிவத்தில் காட்ட வேண்டிய பணி. பல பொழுதும் ஏமாற்றமே  மிஞ்சுகின்றது

இளைஞசர்கள்  இந்த சமூகத்தை மிகவும் நேர்மறையுடன் மிகவும் நேசத்துடன் நோக்குகின்றனர். இந்த சமூகத்தை பற்றிய  உண்மையான பிரஞ்சை உண்டு.  சகமனிதன் மேல் அதீத அன்பு உண்டு என்று அவர்கள் முதல் பருவத்தில் வருப்புகள் எடுக்கும் போதே கண்டு நெகிழ்ந்துள்ளேன்.  ஆனால் சூழலின் நெருக்கடி இளம் மனிதர்களை மாற்றம் செய்து விடும் என்ற ஆதங்கமும் என்னை துன்புற செய்கின்றது. அவ்வகையில் தான் உதவி என்று நாடிய போது என் முதல் வருட மாணவர்கள் நாங்கள் உள்ளோம் என என்னுடன் சேர்ந்து   செயலாற்ற நினைத்தனர்.  அதுவெல்லாம் ஓர் கனவு என்றதும் நான் நொறுங்கி போய் விட்டேன். ஆனால் பெரியவர்கள் எவ்வளவும் வேதனைப்படலாம் நொறுங்கலாம் தளரலாம் ஆனால் இளம் தளிர்கள் வாடக்கூடாது என்று மட்டுமே என்னால் இப்போது நினைக்க முடிகிறது


12 Feb 2016

சுபி அக்காவும் நானும்

இணையத்தில் வாசிப்பினூடை எழுத்தினூடை அக்காவும் நானும் நண்பர்களாக இணைந்தோம். பின்பு எங்கள் நட்பு உடன் பிறவா சகோதரிகளாக பரிணமித்தது.  அக்கா இந்தியா வந்து செல்லும் போது எங்கள் சந்திப்பை பயணங்களாக மாற்றினோம். எங்கள் பாச நட்பு எங்கள் குடும்ப உறவுகளாக மாறின. 


முதல் முதலாக அக்காவை தூத்துக்குடி விமானநிலையத்தில் வைத்து சந்தித்த போது.  நெடுநாளாக  அயல்நாட்டில் இருந்து விட்டு  சொந்த வீட்டிற்கு வந்து சேரும் உடன் பிறந்த  சகோதரியாகவே தெரிந்தார். முதல் நாள் காணும் எந்த அன்னியவும் எங்களை அணுகவில்லை.  நரேன் அண்ணாவும் என்னவரும்  சில மணித்துளிகளுக்குள்ளில் எங்களை விட பாசமிகு சகோதரகளாக மாறிவிட்டனர். எங்கள் பிள்ளைகள் வருடம் ஒரு முறை அண்ணா-அக்கா  வருவதை எதிர் நோக்கி காத்திருக்க தொடங்கினர். 

உலகில் இரத்த  உறவுகளையும் கடந்து நல்ல பாசத்தின் அன்பின் நேசத்தின் உறவை பேண இயலும் என உணர்த்தியது.  இந்த முறை சூழல் சிக்கலால் நாங்கள் சிக்குண்டு இருந்த போது சுபி அக்கா இந்தியா வருகை   இருந்தது. நாங்கள் ஒரு மாற்றம் என கருதி சென்னையில் அக்காவுடன் நாட்களை கழித்தோம். 


அக்கா ஓர் சிறந்த வாசிப்பாளர் ஓர் பண்பான விமர்சகர். அவர் வாசிப்பதை மட்டுமெ விமர்சிப்பார். அதிலும் இசையில் மிகவும் ஈடுப்பாடு கொண்டவர். அக்கவிற்கு பழைய இளைய ராஜா பாடல்கள் என்றால் அதீத விருப்பம். எஙகள் பயணங்களில் அக்கா வருகையில் நேரம் அந்த பாடல்கள் தான் ஒலிக்க செய்வோம்.  அக்கா சிறந்த படகரும் கூட. திறமைகளை தன்னகை கொண்டு அதை வெளிக்காட்டாது வாழும் ஆழ்ந்த ஞானம் உடைய ஆளுமை. என் புத்தகமான " நன் தேடும் வெளிச்சங்கள்" அக்காவின் ஊன்றுதலில் தான் வெளி வந்தது. என் எழுத்தை என்னை நானாக நேசிக்கும் அக்காவாக சுபி அக்கா உள்ளார். 

எங்கள் பேச்சுக்கள் சமூகம், எழுத்து, பயணம் சார்ந்தே பல பொழுதும் அமையும். அக்காவின் அமைதி, நீடிய சாந்தத்தை அருகிலிருந்து கண்டு உணர்ந்து கற்று கொள்ள முயன்றுள்ளேன். வாழ்க்கையை அன்பு மயமாக, அழகியலாக நோக்கும் அக்காவை நான் எப்போதும் பின் தொடர முயல்வது உண்டு.   அக்காவிற்கு ஆலயம் தரிசனம் என்றால் விருப்பமானது. எங்கள் ஊருக்கு வந்த போது நெல்லையப்பர் கோவில், ஆழ்வாத்திருநகரி கோயில் , நாகர்கோவில் சுசீந்தரம் தாணுமாலயம் கோயில் சென்று வந்தது நல்ல நினைவுகள். 

இலங்கை போர் சூழலால் அக்கா இலண்டம் மாநகரில் குடியேறினாலும் அவர் உயிர் மூச்சு இலங்கை ஈழத்தில் நிலைபெற்றிருப்பதை காணலாம். அக்காவிற்கு பிடித்த பூஞ்செடி தோட்டம் காண நாகர்கோயில் செல்லும் போது நேரம் ஒதுக்குவது உண்டு. அக்கா வாங்கி தந்த செடியின் பூவில் அக்காவின் சிரிப்பை கண்டு நான் மகிழ்வது உண்டு.  


எவ்வித மனிதர்களையும் நேசிப்பதில் மதிப்பதில் நிகர் அக்காவிற்கு அக்கா மட்டுமே. சகமனிதனை மனித மாண்புடன் காணும் அவர் பார்வை அகலமானது.  நட்புகளை பேணுவதில் அக்கா எடுத்து கொள்ளும் சிரத்தை மனித அன்பால் நிறைந்தது. 


 செடி,  புத்தகம், பயணம் என எங்கள் பாச நட்பு அன்பு நிலைபெறுகின்றது. எங்கள் அன்பிற்கு உரு துணையாக எங்கள் குடும்பவுவும் உள்ளது.  எங்கள் வீட்டிலுலுள்ள ஒவ்வொரு பண்டிகையும் பிறந்த நாட்களும் அக்கா- அண்ணா வாழ்த்துதல் பெற்றே துவங்குகின்றது.  


அக்காவை ஒவ்வொரு நொடியும் தாங்கி அரவணைத்து நடத்தும் பாசமிகு அண்ணா நரேன் அண்ணாவையும் நினைத்துபார்க்கின்றேன் ஓர் கணவர் ஓர் மனைவிக்கு கொடுக்கும் அன்பு, மரியாதை, அளவிடக் கூடாதது இயலாதது.  ஓர் பெண் உண்மையாக மதிக்கப்படுவது நேசிக்கப்படுவது தன் குடும்பத்தில் அது துவங்குவது தன் கணவரில் இருந்து மட்டுமே. அவ்வகையில் நரேன் அண்ணா ஓர் எடுத்து காட்டு!  குழந்தைகள் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற நியதியே. ஆனால்  பெற்றோர் எவ்விதம் நம் குழந்தைகளை மதிக்க வேண்டும் கரிசனையாக நடத்த வேண்டும்  என  பிள்ளைகளாக வரம் பெற்ற அஷாந்த, ஆரணி  நடத்தும் விதத்தில் இருந்து அக்காவிடம் கற்று கொள்ளலாம். 
அக்காவை பற்றி எழுத நினைக்க நிறைய நிறைய உண்டு. அக்காவை இந்த பிறந்த நாள் அன்று என் ஓர் பதிவனூடாக வணங்குவதில் மகிழ்கின்றேன். இறைவன் எல்லா வளவும் நிறைவும் அக்கா- நரேன் அண்ணா குடும்பத்திற்கு வழங்க வேண்டும். வாழ்க வளமுடன். 

அன்பே சுபி அக்கா! 
அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. (கொரிந்தியர் 13:4-8),.அன்பு ஒருபோதும் ஒழியாது.  

11 Feb 2016

தாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்!

Image result for தாரை தப்பட்டைதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது.  ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கலாம். அல்லது அதன் அழகியலை கலாச்சாரத்தை பண்பாட்டை விளங்க பண்ணலாம். ஆனால் தாரை தப்பட்டை இயக்குனரின் கதைக்காக  அல்லது காலுக்கு செருப்பு என்று அல்லாது செருப்புக்கு என காலை ஒட்டி வெட்டி அணிவது போல் இப்படம் பல இடங்களில் பல நம்ப இயலத்தகாத கதை பின்னல் கொண்டு செல்கின்றது.  முதல் பகுதியில் கொடுத்த ஓர் ஆட்ட உணர்வு அடுத்த பகுதியில்  விபத்து போன்று முடிந்தது. படம் ஒரு வகை அருவருப்பு பகை உணர்வு அச்சம் அசிங்கத்தையை விட்டு வைத்துள்ளது.  மனதை பண்படுத்த வேண்டிய கலை மனதை புண்ணாக்கி சென்றது. 

ஓர் மகளை திருமணம் முடித்து கொடுத்த பின்பு தாய்  மகளை சந்திக்காமலை இருப்பாரா? மகளுக்கு என்னவானது என்று கூடவா பார்க்க்காது இருப்பார். அவன் பெயரை தவிர்த்து கூறினது எல்லாம் பொய் என்று தெரிந்த பின்பு மகளை மீட்டு வர முயலமாட்டாரா? ஒவ்வொரு கதாப்பாத்திர படைப்பிலும் முரண்கள் நம்பகமின்மை மலிந்து வலிந்து கிடக்கின்றது. . 

கரகாட்டக்காரர்கள் முதல் தலைமுறை சன்னாசியின் தந்தையும் முழுக்குடிகாரராக இருக்கிறார் கதாநாயகியும் போகிற வருகிற மக்களிடம் எல்லாம் கேட்டு வாங்கி குடிக்கும் முழுக்குடிகாரியாக இருக்கிறார். கதாநாயகி குடிப்பது என்பதை பாலாவாலால் சீரணிக்க இயலவில்லையா அல்லது பெண்கள் தான் முழுக்குடிகாரிகள் என சொல்லவருகிறாரா என்றும் விளங்கவில்லை. குடி என்பது சில குறிப்பிட்ட தொழில்கள் சமூக பிண்ணணியில் உள்ள பெண்களிடம் எப்போதும் உள்ளது தான் என்ற உலக உண்மை தெரியாதா?

சன்னாசி  தன் மேல் காதல் வைத்திருக்கும் சூறாவளியை பாசமாக காதலாக நோக்குகிறாரா என்றால் கொச்சையான வார்த்தையில் திட்டும் எதர்க்கெடுத்தாலும் அடிக்கும் மாஸ்டர் போன்றே நடந்து கொள்கின்றார்.  சன்னாசி ஏன் எப்போதும் பறி கொடுத்த பண்டாரம் போல் முகத்தை வைத்து கொள்ள வேண்டும் என இயக்குனர் நினைத்தார் என தெரியவில்லை. 
தான் விரும்பும் பெண்ணை  வேறு ஒருவனுக்கு மணம் முடித்து கொடுக்க ஒத்து கொள்ளும் சன்னாசி,  கட்ட போகும் நபரை பற்றி விசாரிக்காது  ஒதுங்கி கொள்ளும் சுயநலவாதிக்கு கடைசி காட்சியில் வரும் கடைமை உணர்ச்சி தான் புரிந்து கொள்ள இயலவில்லை. 

கரகாட்ட காரர்களுக்கான உடை என்ற பெயரில் மிகவும் ஆபாசம் உணர்த்தும் உடைகளை அணிவித்து அனைத்து பாடல்களுக்கும் ஆட வைத்துள்ளார். 
கலையுடன் இயங்குபவர்கள் குழு மனநிலையில் இயங்குபவர்கள்; இவர்கள் வாழ்க்கை சூழல் மிகவும் தனி சார்பு கொண்டு விளங்குவதும், சராசரிக்கு மேலான மனமகிழ்ச்சி கொண்ட மக்களாகவே கண்டுள்ளோம்.  ஆனால் அனைவரையும்  எட்டி உதைக்கும் சூறாவளி கணவன் என்ற கயவனின் கையில் ஒரேடியாக ஒடுங்கி போவது நம்ப இயலவில்லை.


ஓர் கலையை முன்னெடுக்க அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த சில நல்ல தகவல்கள் இருந்திருந்தால் கூட இந்த படத்தை பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்கலாம்.  பெண்கள் ஏற்கனவே ஒடுங்க காரணிகளான பாலியல் வியாபாரம், குழந்தை பிறப்பு  என மிகவும் அச்சுறுத்தும் வகையில் புணைந்து கதையாக அமைத்து பெண் இனத்தையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். 

சூறாவளியை சந்திக்கும் சன்னாசி ரவுடி கும்பலிடம் இருந்து காப்பாற விளையாமல் எல்லா கதையும் கேட்டு கொண்டு  மறுபடியும் அடியும் வாங்கி  கடைசியில்  எல்லா கயவர்களையும் கொன்று விடுவாராம்!!!!

என்ன அபத்தமாக கதையாடல். இதற்கு பதிலாக பொல்லாதோரை சட்டத்தின் முன் கொண்டு வந்து விட்டு சூறாவளி கயவனால் கற்ப முற்றிருந்தாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் காப்பாற்றி அவளுக்கு ஓர் நல்ல வாழ்க்கையை கொடுத்து நல்ல படியாக வாழ்ந்ததாக காட்டியிருந்தால் பெண்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கலுகளுக்கு தீர்வு உண்டு என மனநிலை உருவாகியிருக்கும். 

தமிழக பெண்கள் அவ்வளவு கோழைகளா/ ஒரே ஓலம் அழுகை கொடூரத்தின் உச்சம் சில காட்சிப்படுத்தலுகள். ஒரு கயவனான கணவனை பழி வாங்க ஒரு பொட்டலம் விஷம் போதும் ஆனால் துள்ளி குதித்து நடந்த சூறாவளி கட்டிலின் விளிம்பில் அடித்து துவைக்கபட்டு  காயப்போட்டிருப்பது போன்று கட்டியிருப்பது பெண்களை மேலும் சிறுமைப்படுத்தும், அவல மனநிலையை வெளிகாட்டுவதாக  உள்ளது. சூறாவளியின் முடிவு கதையின் முடிவு எல்லாமே ரசிகனையும் மனப்பிளவு கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறவே உதவும். 



"தாரை தப்பட்டை"  கரகாட்ட கலைஞர்களில் உண்மை உலகத்தை விகாரப்படுத்தி விட்டது.  திரைக்கதையில் ஒரு சுவாரசியவும் இல்லை. எல்லா படங்களிலும் காணும் அதே காட்சி அமைப்பு அதே சண்டை.  விரசம் ஏற்படுத்தும் உரையாடல்கள் என பாலா "நல்ல ஓர் படத்தை கீழை போட்டு உடைத்து விட்டார்" என்ற வருத்தம் தாம் மேல் ஓங்குகின்றது. எதிர் மறையின் உச்சமாக தாரை தப்பட்டை உள்ளது. 

இளைய ராஜா பாடல்கள் மட்டும் தான் ஆறுதலாக அமைந்தது.     சூறாவளியாக நடித்த வரலட்சுமியின் நடிப்பு அபாரம்.  பாலாவின் பிரச்சினையே அதீத உணர்ச்சிக்கு உள்ளாகுதல் தான். இதே பிரச்சினை தான் பரதேசியிலும் கண்டோம். 
பாலா தயவாய்  ரொம்ப உணர்ச்சிவசப்படாம ஒரு படமாவது அடுத்து எடுங்க