12 May 2015

கேரளா- மலையக தமிழர்கள் வரலாறு!

12 ஆம் நூற்றாண்டில் ஓர் இரவு, பாண்டிய மன்னர்  மாணவிக்ரமா தன் மக்ககளும்  சோள மன்னனை துரத்தி அடித்து விரட்டிய மகிழ்ச்சியில் விருந்துண்டு அயந்து தூங்கி கொண்டிருக்கின்றனர்.   சோள மன்னரிடம் பெரும் தொகையை லஞ்சமாக  பெற்ற  படை அதிகாரி விஸ்வராத நாயக்கன்,  நடு இரவில் கோட்டையின் கதவை திறந்து விடுகின்றான். கோட்டைக்குள் புகுந்த சோள படை கண்ணில் கண்ட பாண்டிய மக்களை கொன்று வீழ்ந்த்துகின்றனர்.  விழித்து கொண்ட மந்திரி தன் மன்னரையும் குடும்பத்தாரையும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை வழியாக  மேற்கு தொடர்ச்சி மலை ஊடாக அவருடைய தாய் வழி உறவினர்களான சேரநாட்டுக்கு தப்பித்து செல்ல உதவுகின்றார். அரசன் கொடும்- காடு மலைகள் வழியாக பயணித்து இடுக்கி அங்கமாலி(அகமலையை) வந்தடைகின்றார்.   அங்கிந்தவர் தன் குடும்பம் பரிவாரங்களுடன் கேரளாவிலுள்ள திருச்சூர் அருகிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் ( வன்னேரியில்) தங்கி இருக்கும் போது  பாண்டிய நாட்டை சேர்ந்த கம்பம்,  உத்தம பாளையம், கூடலூரை சேர்ந்த குறும் மன்னர்கள்  தங்கள் மன்னன் சேரநாட்டில் தஞ்சம் புரிந்ததை அறிந்து  பாண்டிய நாட்டிற்கு வருகை தரக் கூறுகின்றனர்.  மனம் உடைந்த நிலையில் இருந்த மன்னன் அங்கு இறந்து போகின்றார்.                                                                              


 மன்னர் பாண்டிய நாட்டிற்கு வர மறுத்து விட்டாலும் விருந்தினர் நாட்டில் இருக்க மனம் இல்லாத  மூத்த மகனான குலசேகரன் பாண்டிய நாட்டின் பகுதியான கூடலூற்றில் வசித்து வருகின்றார்அந்நேரம் சேர நாட்டு மன்னர் பூஞ்சார் (பூனையார்) பகுதியை விற்க போவதாக தகவல் கிடைக்கின்றது.  பூஞ்சார் என்பது கூடலூருக்கு எதிரையுள்ள  நிலப்பரப்பான  கம்பம்உத்தமபாளையம் உள்ளிட்ட  தமிழக பகுதிகள்  தற்போது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதியான தேவிகுளம்பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஆகும்.  தன்னிடமிருந்த பொன் மற்றும் மதிப்புமிக்க கற்களை விலையாக கொடுத்து பூஞ்சார் பகுதியை வாங்குகின்றார்கூடலூருக்கு அருகில் உள்ள குமுளி சேரர்களின் தலைநகரமாக சங்க காலத்தில்  இருந்துள்ளது.அது குழுமூர் என்று  அழைக்கப்பட்டது . 



1756-ம் ஆண்டு     வேணாடு   அரசன்   பல சிறு அரசுகளை ஒன்று சேர்த்து திருவிதாங்கூர் அரசினை  உருவாக்குகிறான்அதன்பிறகு 1866ம் ஆண்டு  திருவிதாங்கூர் அரசு 2000 மூட்டைகள் நெல்லினை தொடர்ந்து நிரந்தரமாக ஆண்டுதோறும் பூஞ்சார் அரசுக்கு  கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி  தனது ஆளுகைக்குட் பட்டிருந்த ஏலமலைகள்    என்று அறியப்பட்ட பகுதியை திருவிதாங்கூர் அரசிற்கு கொடுத்துவிட்டது..இக்காலத்தில்தான்திருவிதாங்கூர் அரசில் வழக்குரைஞராக பணியாற்றிய ஜான் டேனியல் மன்றோ என்பவன் பூஞ்சார் நிலப்பரப்பினை பார்வையிட்டுஅவை தேயிலைதோட்டங்கள் அமைக்க வாய்ப்பான இடம் என்று தெரிந்து கொண்டு பூஞ்சார் அரசுடன்   1877ல்ஒரு ஒப்பந்தம் செய்து  ரூ. 5000மறுபயனாக கொடுத்தும் ஆண்டு குத்தகைத் தொகை ரூ. 3000 கொடுக்க சம்மதித்தும் அஞ்சுநாடு என்று அறியப்பட்ட பகுதியை  குத்தகைக்குப் பெறுகிறான்.   ஆங்கிலேய அதிகாரி குத்தகைக்கு பெற்ற நிலத்தில் தோட்டங்களை அமைப்பதற்கு பூஞ்சார் அரசுக்கு கட்டுப்பட்ட அஞ்சுநாட்டின் பழங்குடி தமிழ் குறுநில மன்னன் கண்ணன்தேவர்  உதவிகின்றார்.  தங்களுக்கு தோட்டங்கள் அமைக்க உதவிய அந்த குறுநில மன்னனை நினைவு கூர்ந்து அவனது பெயரினை தங்களது நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர்.மேற்சொன்ன நிலத்தினை ஜேம்ஸ் பின்லே  கம்பெனி லிட் என்ற நிறுவனம் விலைக்கு வாங்குகிறது  1983 முதல் டாடா நிறுவனம் பின்லே நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கி டாடா தேயிலை நிறுவனம் என்ற பெயரில் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது
    இங்கு பளியர்புலையர்மன்னன்முத்துவான்ஊராளிமலை அரையன்,                  உள்ளாடன் முத்துவான்(பூஞ்சார் மன்னருடன் மதுரையை விட்டு வெளியேறும் போது மீனாட்சியம்மன்சுந்தரேசுவரர் சிலைகளை தூக்கி  சுமந்தவர்கள்)என்ற பழங்குடி மக்கள் தொன்மை காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர் தங்கள் பாண்டியர் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மன்னர்   என்ற பழங்குடியினர்இன்றும் தங்களுக்குள் ஒரு மன்னரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர்   


அடுத்துகம்பம்உத்தமபாளையம் மற்றும் போடி வட்டங்கள் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சென்று அப்பகுதியில் குடியேற்றங்கள்   அமைத்து வாழ்ந்து வரும் தமிழர்கள் மற்றொரு பிரிவினர்  உண்டு.  அவர்கள்தான் அங்கு ஏலம்மிளகு போன்ற பயிர்களை சாகுபடி   செய்வதற்கான தோட்டங்களை உருவாக்கியவர்கள்.























அடுத்தபிரிவினர்  ஆங்கிலேய தேயிலை நிறுவனங்கள் தேயிலைத் தோட்டங்களைஅமைப்பதற்குதிருநெல்வேலிசெங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட தேயிலைத் தோட்டத் தமிழர்கள் ஆவர். இவர்களுடன் வியாபார காரணங்கள் மற்றும் தேயிலை தோட்ட அதிகாரிகள் கட்டிட பணியாளர்கள் என்ற தமிழக மக்களும் சேர்ந்துள்ளனர்.

திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த 9 வட்டங்களில் தோவாலைஅகஸ்திஸ்வரம்கல்குளம்விளவங்கோடுநெய்யாற்றின்கரை தென்பகுதிநெடுவங்காடு கீழ்பகுதிசெங்கோட்டைஉள்ளிட்ட வட்டங்களுடன் பூஞ்சார் அரசின் பகுதியாக இருந்த தேவிகுளம்பீர்மேடு ஆகிய இரு வட்டங்களும் அடங்கும்.

சுதந்திர இந்தியா மொழிவாரியாக மாநில எல்லைகளை பிரித்த போதுஅங்கு வசித்த தேயிலைத் தோட்ட தமிழர் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் வந்துசெல்லும் மக்கள் என்று கூறி அமைக்கப்படவிருந்த கேரள மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் அந்த அரசின் வருமானத்திற்கு பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய பகுதிகளாக தேவிகுளம்- பீர்மேடு பகுதி இருந்ததால்அவை கேரள அரசிற்கு வருமானம் அளிப்பதற்கு தேவைப்படுவதாக கருதி கேராளாவுடன் இணைத்தது. தற்போதைய அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகி இருக்கும்  தமிழர்களும் ஆவர் இவர். 
http://keetru.com/index.php/component/content/article?id=18048..http://en.wikipedia.org/wiki/Poonjar#cite_note-2

9 May 2015

புரக்கணிக்கப்பட்ட குருசடியின் வேதனை!

நண்பர்களுடன் எங்கள் ஊருக்கு போகவேண்டும் என ஆலோசனை கொள்ளும்  வேளையில்  எங்கள் ஊரின் நினைவுகள் ஆழ்ந்து விட்டேன். கடந்த 80 வருடமாக பெரியாரின் அடையாளமாக பலரின் ஆறுதலாக  இருந்த குருசடி இனி அங்கு இல்லை என்று நினைக்கும் போதே கவலை தொண்டையை அடைக்கின்றது . இந்த குருசடி ஒரு கிருஸ்தவ தேவாலைய வளாகத்தில் இருந்திருந்தாலும் மதங்கள் கடந்து பல மனிதர்களை தேற்றிய இடம். பல கலாச்சார, மத மக்களை ஒன்று கூட வைத்த இடம். அந்த பீடத்தில் மெழுதுவத்தி பத்த வைக்காத ஒருவர் கூட எங்க ஊரில் இருக்கமாட்டார்கள்.  குருசடியை திரும்பி பார்க்காது எந்த மனிதனும் அந்த பகுதியை கடந்து போயிருக்க மாட்டான். .  குருசடி உடைக்கப்படும் போது பொது  மக்கள் கண்ணீர் வடித்துள்ளனர் சிலர் தங்கள் மனதிலே ஏங்கி அழுதுள்ளனர். ஆனால் ஊடகத்தில் வந்த செய்தி ஆகட்டும் மக்கள் நாட்டின் வளர்ச்சியை கருதி     குருசடியை தானாக முன் வந்து உடைத்து ரோடு விரிவடைய உதவினர் என்று கூறியுள்ளது. குருசடியை ஏன் உடைத்தனர்? ஒரு இனத்தை அதன் இருட் நாட்களில் உழைத்த ஒரு இனத்தை வேருடன்  அழிக்கும் விரட்டும் நிகழ்வுக்கு முன்னோடியாக இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டுள்ளது.   
                                                      வண்டிப்பெரியார்  என்ற ஊர் கரைபுரண்டோடும் ஒரு நதியின் இரு கரையும் இணைக்கும் சிற்றூர் ஆகும். இக்கரை தமிழக மக்களும் அக்கரை பக்கம் மலையாள தேசவும் வியாபார தொடர்பாடல் பேணும் ஒரு வியாபார தலமாக இருந்திருக்க வேண்டும். இக்கரை அடையும் வண்டியிலுள்ள பொருளை ஒரு தோணியில் ஏற்றி பெரியார் நதியின் ஊடாக கரை கடந்தால் அந்த பொருட்கள் எளிதாக கேரளா தேசம் நோக்கி செல்ல இயலும். ஆதலால் வண்டிப்பெரியார் கரை ஓரம் எங்கும் தமிழ் வியாபாரிகளையை நீங்கள் இன்றும் காண இயலும். இந்த நதியில் எப்படி ஒரு பாலம் வந்தது என்றால் அது ஆங்கிலேயரின் திறமைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்து காட்டாகும். முல்லைப்பெரியார் டாம் கட்டின காலயளவில் உருவாகினது தான் இந்த பாலவும். புனலூர் பாலம் போன்றே கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் பாலம். ஆங்கிலேயர்களின் உழைப்பை எடுத்து காட்டும் வண்ணம் 100 வருடம் கடந்த பின்பும்  கனரக வாகனம் கடந்து போகும் போது ஏற்படும் ஒரு சிறு நடக்கத்துடன் நிலைகொள்கின்றது. இந்த பாலம் ஒரு குருவிக்கு எப்படி மரமோ அது போன்றே பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க அமரும் இடமாக இருந்தது . எந்த கஞ்சனும் பிச்சைக்காரர்களை ஏமாற்றி தப்பிக்க இயலாது. தேனம்மா அங்கு கண்டுள்ளேன். இரு கால்களும் முடமான ஒரு பெண் அங்கு இருப்பார். காளை கிறுக்கன் ஓயாது நடக்கும் வழியும் இதுவே. ஏன் என்றால் வண்டிப்பெரியாற்றில் ஒரு முறை நடப்பது என்றால் பாலத்தை கடந்து நடப்பது ஆகும்.                                                                                                                                                                                                                                        இந்த பாலத்தின் ஒரு கரையில் அழகான கிருஸ்தவ ஆலயம் உள்ளது. பாலத்தின் வயது ஆலயத்திற்கும் இருக்க வேண்டும். அதன் தோற்றம் ஒரு கப்பல் போன்று இருக்கும்.  வெளிப்புற சுவரில்  பரலோக அன்னை உயிர்ப்பது போன்ற ஒரு சித்திரம் தீட்டியிருக்கும். அந்த கோயிலின் ஒரு ஓரத்தில் இருந்து நோக்கினால் பாலத்தில் நடந்து செல்லும் மனிதர்களை காணலாம். பாலத்தின் அடியில் நடமாடும் மக்களையும் காணலாம்.  வெள்ளப்பெருக்கு வேளையில் அடித்து செல்லப்படும் வீடுகள் மிருகங்கள் ஏன் மனிதர்கள் கூட காணலாம்.                                                                                                                                                                         
அந்த ஆலயத்தின் உறுப்பினர்கள் என்பவர்கள் தோட்ட தொழிலாளர்கள் வியாபாரிகள்,  கொஞ்சம் மலையாள சகோதரர்கள்.  மலையாள மக்கள் லாட்டின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் வருவதை பெரிய பெருமையாக கருதுவதில்லை. அவர்கள் இன சிறப்பை, பரம்பரையை எடுத்து சொல்லும் ஆலயங்கள் நிச்சயமாக அது சிரியன் கத்தோலிக்க தேவாலயமோ அல்லது யாக்கபட் ஆலயமாகத்தான் இருக்க இயலும்.  வாரம் ஒரு ஞாயிறு தமிழ் திருப்பலி விழாக்களின் தமிழ் பாதிரியார்களின் செப வழிபாடு என்ற ஒரு சிறு சலுகைகளுடன் இந்த ஆலயத்தின்  கீழ் தமிழர்களும் கலந்து வந்தனர். அதிகாரத்தின் படிகளில் தமிழர்கள் வர முயல்வதில்லை. அப்படி வரும் ஒரு சில தமிழர்களும் ஜாதியின் பெயரால் வசதி வாய்ப்பின் பெயரால் தனித்து தனி தனி துருவமாகவே நிற்க கூடும்.                                        ரோட்டை வீதி கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்ததும் முதன் முதலாக எடுத்த முடிவு கடைகளை அப்புறப்படுத்துவது ஆகும். அப்படி கடைகளை அப்புறப்படுத்தினால் தேயிலத்தோட்ட தொழிலாளர்களை போன்றே பல மூன்று தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் வியாபாரிகளும் தங்கள் இடத்தை விட்டு நகர நிர்பந்திக்கப்படுவர்.  ஊர் உலக வாயை மூடும் நிகழ்வே குருசடியை இடிப்பது ஆகும். இந்த குரிசடியை இடித்தால் கொஞ்சம் பின்னால் தள்ளி இன்னொரு குருசடி கட்டுவது ஆலயத்திற்கு பெரிய பிரச்சினை ஆகாது. ஆனால் கடைகள் இடிக்கப்படும் போது கடை வியாபாரிகள் அங்கிருந்து குடிபெயர வேண்டும் தங்கள் வாழ்வாதாரத்தையை இழந்துள்ளனர்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களை புறம் தள்ளி ரோட்டை விரிவடைய வைப்பதிலா உள்ளது. கடந்த 30-40 வருடமாக அரசியல் நடத்திய கட்சிகள் எங்கள் ஊருக்கு என்ன செய்துள்ளது. வண்டிப்பெரியார் மக்கள் உதவியுடன்  சட்டமன்ற உறுப்பினாராக ஒருவர் 3 தடவை ஜெயித்து அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்னொரு கல்லூரி பேராசிரியரோ தமிழர்களின் ஓட்டு உதவியுடன் பார்லிமென்றின் சபாநாயகராக அலங்கரித்து வருகின்றார். வண்டிப்பெரியாரை சுற்றி சுற்றி வந்து அரசியல் நடத்தி இன்று கேரளா அரசியல் உச்ச வட்டத்தில் இடம் பிடித்து இருக்கும் மந்திரியும் உண்டு.                                                                                                                                                                                       

ஆனால் எங்கள் ஊரில் இன்னும் உருப்படியான ஒரு கல்லூரி இல்லை.  ஒரு கல்லூரி வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கு ஏக்கர் வைத்திருக்கும் எஸ்டேட் அதிபர்களிடம் கேட்காது, பொது மக்களிடம்  இடம் தாருங்கள் கல்லூரி தருகின்றோம் என்பர். கோட்டயம் போன்ற பகுதியில் கூட தமிழர்கள் ஓட்டை குறி வைத்து தமிழர்கள் நலம் பற்றி பேசிகிறவர்கள் தமிழர்களை மக்களாக கொண்ட ஊரைப்பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.  இலங்கையுள்ள மலையக தமிழர்களுக்கு உலக அளவில் ஓர் அடையாளம் உண்டு. ஆனால் தமிழ் கேரளா மலை தேசத்தவர் அடையாளமே அற்று அழிந்து கொண்டு இருக்கும் சூழலில் தான் உள்ளனர். மதம், அரசியல், பணம், இனம் சேர்ந்து ஒரு பக்கவும் வாழும் உரிமையே மோசம் போகும் மக்கள் இன்னொரு புறவுமாக எங்கள் ஊர் தலை விதி எழுதப்பட்டுள்ளது.