5 Nov 2014

முத்தப் போராட்டம்………!

சமீபத்தில் பெரும் முத்தப் பிரச்சனை கேரளாவில் எழுந்தது. அந்த செய்தி கட்டு தீ போன்று உலக ஊடகத்தையே திரும்பி பார்க்க செய்தது!  உணவகத்தில் ஒரு ஜோடி முத்தம் கொடுத்தன்  காரணம் கொண்டு உணவகத்தை அடித்து உடைத்த பண்பாட்டு காவலர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், இளைஞர்கள் ஒன்று கூடி முத்தம் பகிர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கூட்டதிற்கு தடை விதிக வேண்டும் என இன்னும் பல இயக்கங்கள் முன் வந்தன. (உணவு எடுக்க போன பொது இடத்தின் முத்த மழை பொழிந்தது எதற்காக என்றும் தெரியவில்லை).

 இருப்பினும் தென்னிந்திய சமுதாயத்தில் முத்தத்தை பற்றி தவறான கருத்தை களைய வேண்டி உள்ளது சமூக மன உள வளர்ச்சிக்கு தேவையாகும். பல குழந்தைகள் பெற்றோருக்கு கூட முத்தம் தர தயங்குகின்றனர்ஆனால் பல தமிழ் படங்கள் இயங்குவதே வன்முறையான தவறான புரிதல் கொண்ட முத்த மழையால் தான்ஒரு மரண வீட்டிற்கு சென்ற போது தன் கணவர் இறந்த துயரில் ஒரு வயோதிகத்  தாய் மனம் உடைந்து நிலையில் இருந்தை கண்டேன். அவரை அணைத்து முத்தமிட அவர் குழந்தைகள் முன் வரவில்லைஆனால் கணவர் இறந்த அதே துக்கத்தில்  அவர் மரித்து போன போது முத்தமிட்டு அழுதனர்.

சென்னையில் பொது பார்க்குகளிலும் மற்றும் மெரினா பிச் போன்ற பொது இடங்களில்  தன்னை மறந்த நிலையில் முத்தம் பரிமாறிகொண்டு இருக்கும்  ஜோடிகளை கண்டு சமூக ஆவலரான தோழியிடம் பகிர்ந்த போது; முத்தமிட்டு கொள்ள கணவன் மனைவிக்கே வீட்டில் இடமில்லை என்ற சூழலையும் எடுத்துரைத்தார்கள். சமூக நல்லொழுக்கத்தில் நம் உணர்வுகளை பங்கிட இடமும் வேண்டும் என்ற அக்கறையுடன் ஜோடிகளுக்கு தனி இடம் ஒதுக்கி (பறவைகளுக்கு சரணாலயம் என்பது போல்) கொடுக்கலாம்நம் நாட்டில் தலைவர்கள் சமாதிக்கு தான் பல நூறு ஏக்கர் இடங்களை பாழ்படுத்துகின்றனர். யானைகளுக்கு கூட புத்துணர்வு முகாம் அமைத்து கொடுக்கப்படுகின்றது. ஆனால் சாதாரண மனிதர்கள் உணர்வுகளை பரிமாறி கொள்ள இடம் இல்லாது தத்தளிக்கின்றனர்.  வரும் தலைமுறை இதை கண்டு கெட்டு விடுமோ என  பண்பாட்டு காவலர்கள் பயப்பட  தேவையில்லையேஆனால் இதே பண்பாட்டு காவலர்களால் மேடையில் நடிகர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் பரிமாறிகொள்ளும் தறிகெட்ட செயலை சகித்து கொள்ள இயல்கின்றது. ஆனால் சமூகம் ஏதோ ஒரு மன கொந்தளிப்பில் தத்தளிப்பது தான் இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்ந்தும் செய்தி.

முத்ததின் வரலாறை தேடி சென்றால் அதன் துவக்கவும் முத்த கொடுக்க கற்று கொடுத்தவர்களே இந்தியர்கள் தான் என்ற தகவல் கிட்டியது. உலகிற்கே பாலிய பாடம் புகட்டிய முத்தத்தின் வகைகளை பகுந்தளித்த காமசூத்திரா போன்ற நூல்கள் உருவாகிய நாடு அல்லவா நம்முடையது. உதடோடு உதடு கொடுக்கும் முத்தத்தை பிரஞ்சு முத்தம் என்றே அழைக்கப்படுகின்றது. ஆனால் அம்முத்ததை பற்றி மகாபாரதத்தில் கூறியுள்ளதாக சொல்லப்படுகின்றது.  கி.பி 326 ல் அலக்ஸாண்டர் இந்தியாவை கீழ்ப்படுத்திய போது தான் இந்தியாவில் இருந்து முத்தம் உலகிற்கு பரவியது என்று சொல்லப்படுகின்றது. வேதகாலம் மறைந்து ஆரியகாலம் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்திய போது தான் பெண்களை தகப்பன் மற்றும் அவர்கள் சகோதரர்களின் உடமை போன்று மாற்றப்பட்டு சில பொருட்களுக்காக தங்கள் வீட்டு பெண்களை திருமணம்-சிரீதனம் என்ற பெயரில் விற்கும் வழக்கம் நிலவில் வந்துள்ளது.

. முதம் நெற்றியில்  கன்னத்தில் உதட்டில் என கொடுக்கும் இடம் பொறுத்து அதன் அர்த்தவும் வகையும் மாறுபடுகின்றது. இருப்பினும் அன்பை வெளிப்படுத்த மனிதன் இயல்பாக தேர்ந்த ஒரு குறியீடு தான் முத்தம் என்பதில் சந்தேகம் இல்லை. மனிதனின் மெல்லிய உணர்வை வெளிப்படுத்த பயண்படுத்த வேண்டிய முத்தம் பொது போராட்டத்தில் முன் வைத்த போது அதன் அர்த்தவும் மாண்பும் தவறுதலாகி விடுமோ என்று அச்சம் உள்ளது.  சமூக அக்கறை கொண்டு முத்தம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் தேவை. முத்தம் என்பது இளைஞர்களுக்கான மட்டுமான  ஆயுதமல்ல இது உலகலாவிய சகல மனிதனின் ஆயுதமே. ஒரே முத்தம் தான் அன்பையும், காமத்தையும், காட்டி கொடுப்பையும் உணர்த்துகின்றது.  யேசுவின் வரலாற்றை படித்தால் முப்பது காசுக்காக முத்ததால் காட்டி கொடுத்த யூதாசை காண்கின்றோம். யேசுவின் காலடியில் இருந்து தன் பாபத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுது முத்தமிட்ட ஏழை பெண்ணை காண்கின்றோம். கேரளாவில் பக்தர்களுக்கு முத்தமிட்டு அணைக்கும் சுவாமினி அமிர்தானந்தாவையும் காண்கின்றோம். 

முத்தம் கொடுப்பது யாருக்கு, எந்த சூழல் கால நில, தேவை என்ன என்பதும் பகுத்தறிவுள்ள மனிதன் தெரிந்திருக்க வேண்டியுள்ளது. கணவன் மனைவியை பல பொழுதும் பாசத்தால் இணைப்பதும் பிரிக்காமல் ஒட்டி வாழ உதவுவதும் முத்தம் தான். பல பொழுதும் சண்டையில் தீர்வாகுவதும் கட்டி அணைக்கும் ஒரு முத்தம் தான்.  பிறந்த குழந்தைக்கு தன் அன்பை வெளிப்படுத்துவதும் முத்தம் தான்.  வாழ்க்கையின் விழிம்பில்  காத்திருக்கும் வயதான பெற்றோருக்கு நம் அன்பை வெளிப்படுத்துவதும் முத்தம் தான்.  நாட்டு தலைவர்களை அரசியலாக இணைப்பது முத்தம் தான். இந்திய பாலிவுட், காலிவுட் நடிகர்கள் வாழ்வாதாரமே முத்ததை நம்பி போய் கொண்டிருக்கின்றது. பல தமிழ் கவிஞர்கல் கூட முத்த மழையில் தான் இலக்கிய பயணம் மேற்கொள்ளுகின்றனர்.

 சரியான முத்தம் சரியான நேரம் சரியான நபர்க்கு கொடுப்பது தான் மனித நேயம்.. மருத்துவ நீதியாக நோக்கினால் முத்தம் மன அழுத்தம் மனச்சோர்வு, போன்ற பல நோய்களுக்கு மருந்தாகுகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முத்தம் பற்றிய சரியான விழிப்புணர்வு தேவை. விழிப்புணர்வு தேவை என்ற காரணத்தால் தான் நம் முன்னோர்கள் மக்கள் செல்லும் ஆலய முகப்பில் சில படங்கள் மூலமாக பல மெல்லிய உணர்வுகளை பற்றி வடித்து வைத்திருந்தனர். வல்லுறவுக்காக மற்றவர் விரும்பாத நேரம்போக்கான விளம்பர நோக்கம் கொண்ட  முத்தம்(ஹாலிவுட் நடிகர் சில்பா ரெட்டிக்கு கொடுத்த முத்தம்) பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.http://www.youtube.com/watch?v=rfw0vhoAkwE







நவீன யுகத்தில் குடும்பம் என்ற அமைப்பு உடைந்து கொண்டிருக்கும் இந்த காலயளவில், எப்போதும் ஏதோ ஒரு தொழில்நுட்பத்தோடு உரையாடி கொண்டிருக்கும் நம் இளைஞர்களுக்கு முத்தம் பற்றிய புரிதல் வெறும் காமத்தோடு  முடிந்து விடக்கூடாது. ஒரு பாலியல் தொழிலாளியான ஜமீலா தன் புத்தகத்தில் கூறி இருப்பது “பழம் கால ஆண்களை போன்று தற்கால ஆண்களுக்கு பெண்களை பண்பாக கண்ணியமாக நடத்த தெரியவில்லை” என்பதாகும். மனிதன் விவாசாயியாக இருந்த போது மண்ணோடு மல்லிட்டு மனிதனாக இருந்தான் ஆனால் இன்று தொழிநுட்பங்களோடு வாழும் மனிதன் அடிப்படை மனிதத்தை இழந்து மிருகமாக மாறி கொண்டிருக்கின்றான் என்ற உண்மையும் உணர வேண்டியுள்ளது. இந்தியாவின் தொழிநுட்ப பூங்கக்களின் சொர்கபுரியான பெங்களூருவில் தான் நாலு வயது குழந்தையை பாலியல் வல்லுறவு கொள்ளும் அரக்கத்தனவும் அரங்கேறுகின்றது.  கல்வி கண் திறக்க வேண்டிய இடத்தில் காமகண் கொண்ட முத்ததை பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.


தற்கால அரசியல் சமூக நெருக்கடியால் கல்வியாலும் வேலை வாய்ப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்படுவது இளைஞர்கள் தான். நமது சமீப கால செய்தியில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ளும்  சமூகவும் இதுவே. விலைவாசி உயர்வு, கல்வி கொள்ளை, வேலைக்கு லஞ்சம், வேலை இல்லா திண்டாட்டம், குழந்தைகள் மனித உரிமைகள் மீறப்பட்டது, விவாசாய விளை நிலங்கள் கார்ப்பரேட் முதலாக மாறியது இப்படியே அடுக்கி கொண்டு போகலாம்தீவைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு  முத்தம் கொடுத்து போராடின இளைஞர்கள் மனநிலை எதை நோக்கி செல்கின்றது. கலாச்சாரம், கல்வி என வாழ்ந்தாலும் அவன் அடிப்படையான  உணர்வை தேடிய ஓட்டம் தானோ? அல்லது மனிதனின் மெல்லிய உணர்வை பற்றிய  புரிதல் இன்மையா? உங்கள் பதில் தான் இனி தேவை……………

5 Sept 2014

ஆசிரியர் தின சிந்தனைகள்!


ஆசிரியர்கள் என்றதும் ஒரு புறம் இறைவனுக்கு ஒப்பாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றிருந்தாலும் அதே  போன்று வெறுப்பையும் வாங்கி கொண்டவர்கள் தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு மனிதன் மனதிலும் நேற்மறையான அல்லது எதிர்மறையான நீங்காத இடம் பெற்ற மனிதர்கள் என்பவர்கள்  ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் இவ்விதம் அன்பிற்கும் பாசத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகுவது  அவர்கள் ஏதோ வகையில் மாணவர்களுக்கு பாதிப்பு உருவாக்குகின்றனர் என்பதால் தான்.


இன்றைய சூழலில் சமூகத்தில் வெறுக்கப்படும் இடத்தில் தள்ளப்படும் காரணம் சமூக அநீதிக்கு பல வகையில் துணை போகின்றனர் என்பதாலே. இன்றைய ஆசிரியர்கள் சமூகத்தில் பெரும் ஊதியம் பெற்று பணக்காரர்களால் வலம் வருவதால் அவர்கள் கூறும் அறம் புறம் போக்காக பல போதும் தெரிகிறது இச்சமூகத்திற்கு!. ஒரு காலத்தில் சமூகத்தில் எல்லா இன்ப துன்பங்களையும் சகித்து கல்வி என்பதை ஒரு சமூகப்பணியாக செய்த காலம் போய்; இன்று வெறும் ஊதியம் என்ற கண்ணோட்டத்தில் இத்துறைக்கு வருகை தரும் நபர்கள் பலர் உண்டு. 

ஆசிரியர் பணிக்கு ஒரு முறை தேற்வாகி விட்டால் பின்பு எந்த கவலையும் அற்று; வேலையில் இருந்து விடுதலை பெறும் வரை பல சலுகைகளை பெற்று குறைந்த நேரம் வேலை செய்து பெரிய அளவில் ஊதியம் பெறும் தொழிலாக மாறினதும் இன்னொரு காரணமே.

இன்று அரசு ஆசிரியர் என்றால் மாதம் 50 ஆயிரம் பெறும் பெரும் பணக்காரர்களாக சமூகத்தில் வாழ்கின்றனர். இதே வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் இவர்களை கொண்டு நோக்கும் போது பத்தில் ஒரு மடங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு என்ற நிலையில் தான் உள்ளது. இந்தியா போன்ற ஏழை சமூகத்தில் " போதும் எனக்கு கிடைத்த ஊதியம்"  என்று எந்த ஆசிரியனும் திருப்தி கொள்வதில்லை.  இரண்டு ஆசிரியர்கள் கூடும் இடத்தில் தனக்கு கிடைக்கும் ஊதியம், கிடைக்க வேண்டிய சலுகைகளை பற்றி மட்டும் பேசி கொண்டிருக்கின்றனர். ஆனால் தன்னை போன்ற தகுதியுள்ளவர்களுக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை பற்றி சிந்திப்பதே இல்லை. 

எவ்விதமேனும் ஒரு அரசு ஆசிரியராக வேண்டி பல லட்சம் கொடுக்க தயங்காத ஆசிரிய உலகம் பிடித்த ஊருக்கு இடம் மாற்றலாகி செல்ல அதை போன்று சில லட்சங்கள் கொடுக்க தயங்குவதில்லை. ஊழலுடன் வேலைக்கு புகிர்வதால் உண்மையாக வேலை செய்வதை விடுத்து கொடுத்த லஞ்சம் பணத்த மீட்க மறுபடியும் வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர்.  சமூகத்தில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரிய உலகம் பெரும் ஒழிங்கீனத்திற்கு துணை போகிறவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் என்று மட்டுமல்ல கல்லூரி ஆசிரியர்கள் நிலையும் இதுவே தான். பள்ளி ஆசிரியர்கள் மாநில அரசின் ஊழலுக்கு துணை போகும் போது கல்லூரி ஆசிரியர்கள் மத்திய அரசின் நல திட்டத்துடன் இணைந்து பல ஊழல்களில் ஏற்படுகின்ரனர்.

புதிதாக உருவாகும் திருவாரூர் பல்கலைகழகம் பற்றி அனைவரும் செய்திகள் ஊடாக அறிந்ததே. பல்கலைகழகம் சிறப்பாக இயங்க ஆரம்பிக்கும் முன் கல்வி வளர்ச்சிக்கு என ஒதுக்கிய பணத்தில் ஆடம்பரமான வசிப்பிடங்கள் கட்டுவதில் முனைப்பாக இருந்துள்ளனர். ஒரு பேராசிரியருக்கு 1500 சதுர அடி வீடு என்ற அளவை தங்களது வசதிக்கு என 3000 அடி என மாற்றி கட்டிடங்கள் கட்டியிருந்தனர்.

இந்திய பொருளாதார நிலை அகோர பாதாளத்தில் விழுந்த நேரம் தான் 6ஆவது திட்ட கமிஷன் வழியாக ஒவ்வொரு பேராசிரியரும் 40ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் மாதம் வருமானம் பெரும் நபர்களாக மாறினார். ஒரு  பல்கலைகழக ஆசிரியர் பணி கிடைக்க 30 லட்சம் கைலஞ்சமாக கொடுக்க  தயங்காத பேராசிரியர் உலகம் தான் இயங்குகின்றது. \

ஆகையால் ஆசிரியர்களுக்கு வேலை பெறும் போட்டியில் சமூக அக்கறை, அறம், உண்மை நேர்மை எல்லாம் விலைக்கு விற்று வேலை பெறுவதால் உண்மையாக வேலை செய்யும் மனபாங்கையும் இழந்து விடுகின்றனர்.

அரசு விதித்த தகுதி தேற்வில் தேர்வாக தைரியம் இல்லாது மூப்பு அடிப்படையில் வேலை கேட்பது ஆசிரியரின் நேர்மையை எடுத்துரைக்க வில்லை. ஆசிரியர் பேராசிரியர் தேர்வையும் 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தினால் தகுதியற்ற ஆசிரியர்கள் வெளியேறவும் தகுதியுள்ளோர் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் ஒரு முறை தேர்வு எழுதி ஜெயித்து வேலை பெற்று வாழ் நாள் முழுக்க அதன் சலுகைகளை பெற அநியாய வழியில் நுழைவதும் சலுகையை மட்டும் நம்பி தேர்ந்தெடுத்த பணியை ஒழுங்காக செய்யாது இருப்பதிலும் ஆச்சரியமில்லை!  ஆனால் இசூழல்களுக்கு ஆசிரியர்கள் மட்டும் தான் காரணமா ?//////////////////////////////////////////////////////

30 Aug 2014

எழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் என் புத்தகம் பற்றிய கருத்துரை!

ஒரு புத்தகம் வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை உண்மையாக மாற்றினது முகநூல் நண்பர்களூம் என் வலைப்பதிவு நண்பர்களுமே. வெளியிடும் பொறுப்பை லண்டனில் உள்ள உடன்பிறவா சகோதரி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆலோசனைகள் ஶ்ரீ அண்ணா வழங்கியிருந்தார்கள். பத்மர் அண்ணா வெளியிடும் நாளை விழாவாக மாற்றினார். இப்படியாக இந்த புத்தகம் ஒரு கூட்டு முயற்ச்சியாக வெளிவந்தது.

எழுத்தாளர் சகோதரர் கூறினது போல் விற்பனை தளத்தில் என்னால் வெற்றி பெற இயலவில்லை. பதிப்பாசிரியர் சில நிபந்தனைகளுடன் தன் கடமையை முடித்து கொண்டார்.


இருப்பினும் ஒரு காலத்தை இட சூழலை அதில் வாழ்ந்த சில மனிதர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறினது. மறையும் காலவும் மனிதர்களும் தடுக்க இயலாததது. இருப்பினும் ஒரு புத்தகத்தின் ஊடாக பதிந்துள்ளேன் என்ற மன ஆறுதல் உண்டு.

பிறப்பால் தமிழர்கள் என்றாலும் உள்நாட்டு அகதிகளாக  வெளிமாநிலைங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். வலிந்து மாற்று மொழி கலாச்சாரம் என சமூக சூழலில் சிக்கி கொண்ட பல லட்சம் மக்களில் உள்ள நெருடல்கள் ஏக்கங்கள் பதிய நினைத்தேன். ஒரு வகையில் எனக்கான அடையாளத்தை உருவாக்கினாலும் அடிப்படைவாதிகளால் பல சிக்கல்கள் சந்திக்க வேண்டி வந்தது.






கதாசிரியர் முத்தாலக்குறிச்சி காமராசுவின் பாளை சமீந்தார்களின் வரலாறு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கின புத்தகம். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர் தரவுகள் சேகரித்து எழுதினதை கண்டு ஆச்சரியம் கொண்டுள்ளேன். என்னுடைய முதலாம் ஆண்டு மாணவரின் தந்தை என்று தற்செயலாக அறிந்த போது என் புத்தகம் ஒன்றை கொடுத்து அனுப்பியிருந்தேன்.

தன் வேலை மத்தியிலும் என் புத்தகத்தை வாசித்து  விளாவரியான யதார்த்தமான ஒரு விமர்சனம் பெற்றதல் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன்.இனியும் புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற உந்துதலை கதாசிரியரின் விமர்சனம் தருகிறது. கதாசிரிய  சகோதருக்கும் என் நெஞ்சர்ந்த நன்றி வணக்கங்கள்.  உங்களை போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தான் எங்களை போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு வெளிச்சமாக வருகின்றீர்கள்.



27 Jul 2014

ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை-நளினி ஜமீலா

நேற்றைய தினம் புத்தகக் கண்காட்சியில் வாங்கி வாசித்து முடித்த புத்தகம். தன் வாழ்க்கை சரிதையை ஒரு பாலியல் தொழிலாளி எந்த கற்பனை இல்லாது உண்மையான வார்த்தையில் பதிந்துள்ளார்.  அவர் பாலியல் தொழிலாளியானதற்கு முதல் காரணம் வரட்டு கவுரவம் பிடித்த வேலைக்கு போகாத அவள் தகப்பன் மற்றும் கொடுமைக்காரியான பெரியம்மா தன்னலம் கொண்ட அண்ணன் எதையும் தாங்குவதாக அழுது கொண்டிருக்கும் அம்மா அடங்கிய  வசதியான குடும்பவும் தான். 
தனது ஒன்பது வயதிலே மண் சுமக்க போக வேண்டி வந்தவள். 18 வயதில் வீட்டை விட்டு வந்து ஒரு கயவனின் மனைவியாக வாய்க்கப்பட்டு இரு குழந்தைகளுக்கு தாய் ஆன சூழலில் அவன் இறந்து போக பாலியலை தொழிலாக ஏற்ற பெண்.  பின்பு ஒரு இடை வேளை என்பது போல் நாகர்கோயிலை சேர்ந்த சாகுல் என்பவருக்கு மனைவியாக 12 வருடம் வாழ்ந்த பின்பு கணவனின் போக்கால் மறுபடியும் தன் வாழ்வாதாரமான பாலியல் தொழிலையே வரிந்து கொள்கின்றார்.

கணவனின் இரு குழந்தைகளை பிரிந்து விட்ட நிலையில் இரண்டாம் கணவனின் சீனத் என்ற மகளை வளர்த்து நல்ல நிலையில் திருமணம் முடித்து கொடுத்துள்ளார். ஒரு பாலியல் தொழிலாளியாக தன்னை சமூகம் நோக்கியதையும் தன்னுடைய சமூக பார்வையும், சிறப்பாக  பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார். இதுவரை இரண்டு ஆவணப்படம், இரண்டு புத்தகம் பல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதை பதிவு செய்துள்ளார்.

என்னை கவர்ந்த விடையம் அவரின் பாலியல் தொழில் பற்றிய ஆழமான அறிவும் ஆண்களை பற்றிய அவதானிப்பும் ஆகும். பல வகையான பாலியல் தேவைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். அறை எடுத்து தங்குவதை விட உடன் பயணிப்பது, பேசி கொண்டிருப்பது என ஆண்கள் பல விதமான விருப்பத்துடன்  அணுகுவதை பற்றி குறிப்பிட்டுள்ளார். சில ஆண்களோ திருமண உறவில் காணும் பிரச்சினைக்கு அறிவுரைகள் பெற அணுகுவதாகவும்  குறிப்பிடுகின்றார்.  கூலி வேலைக்கு மேல் தட்டு மக்கள் போக விரும்புவது இல்லை, ஆனால் அம்மச்சி வீடுகள் போன்றவை மேல் விட்டு பெண்களால் நடத்தப்படும் பாலியல் தொழில் இடமாக குறிப்பிடுகின்றார்.
ஒரு இரவில் நல்லவனான பண்பாளனாக இருந்த போலிஸ் அதிகாரி அடுத்த பகல் எந்த விதம் கொடூரனாக மாறினான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது 13 ஆம் வயதில் வீட்டு வேலைக்கு போன இடத்தில் தந்தை வயது கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர் எவ்விதம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்றும் விவரிக்கின்றார்.
சமூகத்தால் புரக்கணிக்கப்பட்ட பெண்களில் இருந்து ஒரு வரலாறு எழுத பட்டது சமூக-மக்கள் ஆய்வாளர்களுக்கு இப்புத்தகம் ஒரு பெரும் வரப்பிரசாதமாகத்தான் இருக்கும்.  எவ்விதம் ஏனும் தன் வீட்டிற்கு 3 அணா கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில்  ஒன்பது வயதில் தள்ளப்பட்ட ஜமீலா பிற்காலத்தில் பணத்தை சேகரிக்க மெனக்கெட்டதாக  தெரிய இல்லை. சொந்த ஊரில் 4 அணா பணம் பத்தாது என்ற நிலையில் நாளுக்கு 50 ரூபாய் கிடைக்கும் என்ற நோக்கில் பாலியல் தொழில் புரிய நகர் நோக்கி நகர்கின்றார். ஒவ்வொரு சூழலிலும் உடுக்கும் உடைக்கு கூட மற்றவர்களை கையேந்துவராகவே உள்ளார்.
 பின்பு சில வருடம் சாகுல் என்ற கணவர் குடும்பத்தில் மிகவும் செல்வாக்காக இருந்ததும், அவரால் புரக்கணிக்கப்பட்ட போது ஜமாத்தில் பிச்சை எடுத்து உண்ணும்  நிலைக்கு  தள்ளப்படுகின்றார். சுய மரியாதை இரண்டாவதாக இருக்க விரும்பவில்லை என பல காரணங்கள் கூறி உறவுகளை துடைத்து எறியும் போதும் பல அச்சுறுத்தல் சவால்கள், ஆபத்துகள் கொண்ட பாலியல் தொழிலில் ஈடுபாட்டுடன் தான் பங்கு பெறுகின்றார்.


நளினியின் 12 வருட கணவர் சாகுல் பற்றி குறிப்பிட வேண்டும். பாலியல் தொழிலாளி என்று அறிந்தும் தன் மனைவியாக்கி கொண்டவர்.நளினியின் மகளையும் தன் மகளாக பாவித்து தன் உறவினர்களுக்கு தன் மகள் என்றே அடையாளப்படுத்தியுள்ளார். நளினிக்கும் மரியாதயும் கண்ணியமான உறவை கொடுத்துள்ளார். நளினிக்கு இவர் வழியாக மதினி, இத்தா போன்ற உண்மையான, அன்பான உறவுகள் தந்தவர். இருந்தும் அவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டார் என்று அறிந்ததும் நளினியால் அவரை மன்னிக்க இயலவில்லை. இவருடன் வாழ்வதை விட பைத்தியக்காரியாயும் பிச்சைக்காரியாகவும் பல பள்ளி வாசல்களில் வாழ்கின்றார்.  சாகுல் பல தடவை வந்து சந்திக்கின்றார். தன் மகள் திருமணத்திற்கு தந்தை வேண்டும் என்ற சூழலில் அவசரமாக சல்லடை போட்டு  தேடி கொண்டு வரும் போதும் தன் கடமையும் செய்கின்றார். நளினியின் வாழ்க்கையில் வந்து போன ஆண்களின் எண்ணிக்கை பலர். இரு பொழுது தன் விருப்பம் இல்லாதே இரண்டு ரவுடிகளுக்கு தன்னை கொடுக்க வேண்டிய சூழல் வந்தது. ஒரு பொழுது ஒருவனுடன் இருந்து விட்டு இன்னொருவனுடன் தூங்கினேன் என்று குறிப்பிடுகின்றார். ஒரே நேரம் இரு மனிதர்களுடன் கணவர், சகோதரர் என்ற பெயரில் வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இருப்பினும் தன்னை மீறி இன்னொரு பெண் நபர் தொடர்பு என்பதை தாங்கி கொள்ள இயலவில்லை என்பது புதிராகவே உள்ளது. ஒரு குழந்தையின் குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமானது. பெற்றோர்களால் சுரண்டப்பட்ட நளினி தன் வாழ் நாள் முழுதும் குறிக்கோள் அற்ற மனித உறவுகளுடனே போராட்ட உணர்வுடனே வாழ்கின்றார் என்று தான் குறிப்பிட இயலும். இவர்கள் போன்றவர்களை நம் இடத்தில் இருந்து நோக்காது அவர்கள் இடத்தில் இருந்து நோக்கி சக மனிதராக பாவிப்பதில் தான் நம் மனிதம் உள்ளது.  

இவருடைய கோரிக்கை விபசாரம் அரசு சட்டத்தால் ஏற்று கொள்ளப்பட வேண்டும் என்பதே. என்றால் இரண்டு நபர்கள் உடன் பட்டு செய்யும் போது பெண்கள் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார்.. அதே போன்று பாலியலை ஒரு குற்றமாக பார்க்காது ஒரு தொழிலாக பார்க்கும் படி கூறுகின்றார். தேவையுள்ளவன் பணம் கொடுத்து பெறும் போது இதில் சம்பந்தம் இல்லாதவர்கள் கருத்து தெரிவிப்பது அபத்தமகவே குறிப்பிடுகின்றார். பாலியல் தொழில் புரிகின்றவர்களை மூன்று நிலையாக பிரிக்கின்றார் முதலாவது வகை மேல்தட்டு மக்கள், இவர்களை சமூகத்தை நேரடியாக எதிர் கொள்ள வேண்டி வருவதில்லை. அடுத்த இடநிலையில் உள்ளவர்கள் தங்கள் தொழில் நலனுக்காவும் குறிப்பிட்ட லாபத்திற்காகவும் சில நோக்கங்கள் பூர்த்தி செய்யவும் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறிகின்றார். ஆனால் இந்த கடைசி வகை விளிம்பு நிலை மக்களே அரசு சட்டத்தாலும் காவல்த்துறை அதிகாரிகளாலும் இந்த சமூகத்தின் பார்வையாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகுவதாக குறிப்பிடுகின்றார்.
 "எந்த அதிகாரத்தையும் அடக்குமுறையும் சொந்தம் கொண்டாடுதல்களையும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது " என்று குறிப்பிடும் ஜமீலாவின் மனபான்மை தன் சிறுவயதில் சந்தித்த கொடும் துயர்களும் தன் தாய் எதிர்க்க வலுவற்று தன் கணவனின் பிடியில் அடங்கி போனதின் எதிர் மனபாவமாகவே தெரிகின்றது. ஏதோ ஒரு வகையில் தன் சொந்த தகப்பன், உடன் பிறந்த சகோதரன், கணவர்கள், உடன் பணிபுரிந்த சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகும் ஜெமிலாவுக்கு ஆண்கள் பற்றிய உயர்ந்த எண்னம் இருப்பதாக தெரியவில்லை. பயத்துடன் நோக்கியவர் பின்பு கேலியாகவும் வண்மாகவும் பார்ப்பதை காணலாம். தன் வீட்டில் கிடைக்காத அங்கீகாரம் அனுசரனை, பெரியம்மாவின்  அடிமைப்படுத்தல் தன் வாழ் நாள் முழுக்க வதைக்கும் நினைவுகளாகவே உள்ளது. தன் தகப்பன் பெரியம்மாவுக்கு அடங்கி போனதும் தன் மனைவியை அடிமையாக நடத்தினதும் தன் மகளை ஒரு போதும் பாச உணர்வில் நோக்காததும் அவர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தன் தகப்பனுக்கும் பெரியம்மாவுக்கும் தகாத உறவு இருந்திருக்காலாம் என்றும் சந்தேகிக்கின்றார். 
பாலியலை அழிப்பது அல்ல பாலியலை பாதுக்காக்க வேண்டும் என்ற தன் கருத்துக்கு பல காரிய காரணங்களை முன்வைக்கின்றார். விபசாரம், பெண் வன்கொடுமை, பெண் வியாபாரம்  போன்றவற்றில் இருந்து வேறுபட்டது என்று குறிப்பிடுகின்றார். 
தற்போதைய ஆண்களின் மனநிலையை விட  பழைய கால ஆண்கள் பெண்களிடன் பரிவுடனும் மரியாதையுடனும் நடந்தனர் என்று குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் 40 வயதுக்கு மேல் பெண்கள் வயதானவர்கள் என்ற பார்வையில் ஆண் கொடூரர்களிடம் தப்பித்தது வந்தனர்.  தற்போது 55 வயது பெண்ணும் ஆண்களின் அச்சுறுத்தல் பார்வையில் வாழ்வதாகவும் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் பாலியல் தேவைக்கு பெண்களை தேடிவரும் வாடிக்கையாளர்களான ஆண்கள் தன்னை விட சிறிய வயது பெண் என ஆசைப்பட்டது போல் தற்கால இளைஞர்கள் வயதான பெண்களை விரும்புகின்றனர் என்கிறார். பாலியல் தேவை என்பது ஆணுக்கு மட்டுமானது அல்ல அதில் பெண் தேவையும் உள்ளடங்கியது என்று கூறும் நளினி ஜமீலா கேரளாவில் பெண் பாலியல் தொழிலாளர்கள் விட ஆண் பாலியல் தொழிலாளர்கள் தான் அதிகம் உண்டு என கூறியுள்ளார். 

தன் குடும்ப சூழலில் இளமையில் ஒரு தொழிலும் கைவசம் இல்லாத நிலையில் விபசாரத்தை தேர்ந்தெடுத்த நளினி; சாகுல் என்ற கணவருடன் வாழும் போதும் தொழில் செய்து கவுரவமாக வாழ்த்துள்ளார். கணவரால் புரக்கணிக்கப்பட்ட நிலையில் மறுபடியும் விபசாரத்தை தேர்ந்தெடுத்ததில் அவர் குழந்தைப் பருவ அவர் மனநிலையும் காரணமாக இருக்குமோ என்று வினா எழுகின்றது.  இருப்பினும் தன் மகள் தன்னை போல் ஒரு தொழிலை ஏற்க கூடாது என்பதில் காத்திரமாக இருக்கின்றார்.

நமது இந்திய பாரம்பரிய அடித்தளமான  குடும்பம் என்ற கட்டமைப்பு எவ்வளவு ஏமாற்று கொண்டது,  அங்கு பெண்கள் நிராதரர்களாக விடப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வசதியான வீட்டிலும் கவுரவம் பெண்கள் கைவிடப்படுவதும் மனம் குமுறச் செய்கின்றது. 
வசதியான குடும்பத்திலுள்ள ஆசை மகள், குழந்தை தொழிலாளி, பாலியல் தொழிலாளி, கவுரவமான குடும்பத்தலைவி பாசமுள்ள தாய், பைத்தியக்காரி, நோயாளி தற்போது பாலியல் தொழிலாளி , போராளி என பல நிலைகளில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் கண்டு உணர்ந்த ஜெமிலாவின் மாயம் சேராத வார்த்தைகள் மனிதகுலத்திற்கு நல்லதே பயிர்க்கும் என நம்பலாம்.