தமிழ் அரசியல் பேச்சுகளில்( சபாநாயகர் உரையில் )அடிக்கடி குறிப்பிடப்படும் #மோர்தெகாய் யார்? #எஸ்தர் என்ற பெயரில் பரப்பப்படும் பரப்புரையின் தார்மீகம் பின்புலம் என்ன?
ஒரு வரலாற்று பார்வை!
மோர்தெகாய் ஒரு யூதன். வாழ்வாதாரம் இல்லாத காரணத்தால் தனது குடும்பத்துடன் அண்டை நாட்டிற்கு அகதியாகச் சென்று வாழ்ந்தவன் . அங்கு மன்னனின் அரண்மனைக்கு வெளியே அரசு அலுவலராகப் பணியாற்றினான்.. அதே நேரத்தில் ஹாமான் என்பவர் மன்னனுக்கு மிகவும் நெருக்கமான, அரண்மனைக்குள் உயர்பதவியில் இருந்த அதிகாரி.
ஹாமானுக்கு , மோர்தெகாய் தன்னைக் கண்டவுடன் வணங்கி மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மோர்தெகாய், "நான் யூதன்; யாருக்கும் தலைவணங்க மாட்டேன்" என்ற நிலைப்பாட்டில் இருகிறான் . இதனால் ஆத்திரமடைந்த ஹாமான், மோர்தெகாய் மட்டுமல்லாமல் அனைத்து யூதர்களையும் அழிக்கச் சதி திட்டமிடுகிறான்.
அதே காலகட்டத்தில், மன்னன் அகாஸ்வேரு (செர்க்சீஸ்) தனது ஆணவம் மற்றும் குடிவெறியின் காரணமாக, தனது மனைவி ராணி வஸ்தியை பதவியில் இருந்து நீக்கிவிடுகிறான். பின்னர் புதிய ராணியைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறான்.
இந்தச் சூழலை மோர்தெகாய் பயன்படுத்திக் கொண்டு, தனது வளர்ப்பு மகளான எஸ்தரை, தனது யூத அடையாளத்தை மறைத்து அரண்மனைக்கு அனுப்புகிறான். பின்னர் எஸ்தர் ராணியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள் .
அதன்பிறகு நிகழும் சம்பவங்கள் பைபிளின் எஸ்தர் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எஸ்தரின் வேண்டுகோளின் பேரில் மன்னன் ஹாமானைத் தூக்கிலிட ஆணையிடுகிறார். மேலும், யூதர்கள் தங்களைத் தாக்க வந்த எதிரிகளை எதிர்த்துப் போராட அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகிறார்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பின்னர் ஹாமான் வகித்த உயர்பதவி மோர்தெகாய்க்கு வழங்கப்படுகிறது.
சிலர் எஸ்தரை தமது மக்களை காப்பாற்றிய போராளியாக கருதுகின்றனர்; மற்றவர்கள் இந்த நிகழ்வுகளை அரசியல் தந்திரத்தின் வெற்றியாகப் பார்க்கின்றனர். பெண்ணை பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைக்கும் ஆணின் (மோர்தெகாயின்) இழி குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
எஸ்தர் ஆகட்டும், பெற்றோர் இல்லா நிலையில் வளரும் பெண்கள், பாதுக்காவலர்கள் என்ற நிலையில் உள்ள ஆண்களால் அச்ச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அவல நிலையும், அச்சவாலையும் பயத்துடன் தன் உடலால் எதிர்கொண்டு அதிகாரத்தை அடையும் பெண்களையும் நினைவுப்படுத்துகிறாள்
ராணி வஸ்தி குறித்து நவீன பெண்ணியக் கண்ணோட்டம் வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. மன்னனின் அவமானகரமான கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்ததால் பதவியை இழந்தாலும், தனது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காத்த பெண்ணாக அவர் இன்று பலரால் நினைவுகூரப்படுகிறார். அதனால் வஸ்தி பெண் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் நேர்மையின் அடையாளமாகவும் பேசப்படுகிறார்.
இந்த வரலாற்றை எவ்வாறு மதிப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் மதநம்பிக்கை, வரலாற்றுப் பார்வை மற்றும் மனசாட்சியைப் பொறுத்து மாறுபடுகிறது

0 Comments:
Post a Comment