3 Jan 2024

எழுத்தாளர் புதிய மகாதேவியின் எழுத்துக்கள்-ரசூலின் மனைவியாகிய நான், மக்ஃபி, ஐவருமாய் - சிறுகதைகள்

”ரசூலின் மனைவியாகிய நான்" என்ற 88 பக்கம் நூல் நமக்கு தரும் அதிர்வு பெரியது. காவ்யா பதிப்பகம் ஊடாக இப்புத்தகம் வெளி வந்துள்ளது.

1993 ல் மும்பை குண்டு வெடிப்பு
மரணம் 459 காயப்பட்டோர் 1400
2008 நடந்த குண்டு வெடிப்பில் மரணம் 164, காயமடைந்தவர்கள் 308

இது போன்ற ஒரு குண்டு வெடிப்பு விபத்தில் சிக்கிய இஸ்லாமியரான ரசூல், ரசூலின் காதல் மனைவி கவுரி, குண்டு வெடிப்புகளில் இறந்த நபரின் மனைவி புஷ்பா, அவர் மகள் தன்வி , கவுரியின் இழந்த வாழ்க்கையை எண்ணி கவலையில் மறைந்த கவுரியின் தகப்பனார், பாட்டி தற்போது மரணத்தோடு மல்லிடும் கவுரியின் தாய். இப்படியாக சர்வதேச தீவிரவாதத்தின் பாதிப்பு எவ்விதம் சாதாரண எளிய மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என விறுவிறுப்பான நடையில் எழுதப் பட்ட புத்தகம் இது.
தேவையற்ற விவரிப்பு இல்லை, விண்ணாரம் இல்லை, தேவையற்ற ஒரு பக்கம் கூட, ஒரு வார்த்தை கூட கண்டு பிடிக்க இயலாது. அத்தனை நுணுக்கமான நுட்பமான எழுத்து. கதாபாத்திரங்களை ஒரு காட்சி சட்டகமாக நகத்தும் நல்லதொரு உக்தியை கையாண்டுள்ளார். வாசகர்களை கதையை சொல்வதை கடந்து சம்வங்கள் ஊடாக அந்த களத்தில் , அந்த அந்த உணர்வில் கொண்டு சேர்க்க இயல்கிறது. கதையை வாசகர்கள் மனக் கண்ணில் காட்சிகளாக கொண்டு வந்துள்ளார்.
மனித உணர்வுகள், உணர்விற்குக்கும் உடலுக்குமான போராட்டம், நேசித்தவர்களை வாழ்க்கையின் இடைவழியில் இழக்கவியலாத மனப் போராட்டம் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் காத்திரமாக நகர்கிறது.
ஒரு பக்கம் உடல் இயக்கம் அற்று கிடக்கும் காதல் கணவன் ரசூல், அவனுடன் இருந்த காதல் அன்பை கடந்து செல்ல இயலாத கவுரி, அவளை போன்றே அதே துயரில் வாழும் ராமசந்திர புச்சுடன் உருவான ஒரு நேசம் , அதன் முடிவு, அதே போல் ரசூல் பெயரை ஒத்த ராகுல் உடன் ஆன ஒரு சந்திப்பு. பெண்களின் மன வெளி, ஏற்கனவே போராட்டங்கள் வழி கடந்து செல்லும் பெண்களை எதிர் நோக்கி இருக்கும் பள்ளங்களையும் அவதானிக்க சொல்லி எழுதப்பட்ட புத்தகம்.


ரயில் கூட்ட நெரிசலில் பயணம் செய்து போகும் கவுரி என்ற கதாப்பாத்திரம் மனதில் இருந்து அத்தனை எளிதாக கடந்து போகக் கூடியவர் அல்ல. உடல் இயக்கம் அற்று மருத்துவமனையில் இருக்கும் ரசூலும் வாசகர்களில் தங்கி விடுகிறார்.
வெடிகுண்டு தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு ஆணித்தரமான எழுத்து புதியமாதவியிடையது.

பெண் எழுத்தாளர் என்ற வகையில் இன்னும் அங்கீகாரமும் பெயரும் கிடைக்க வேண்டிய ஆளுமை ஆகும் எழுத்தாளர் புதியமாதவி. புதியமாதவி மகாராட்டிர மாநிலத் தலைநகர் மும்பையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.

மக்ஃபி

இருவாச்சி பதிப்பகம் வழியாக நவம்பர் 2023 ல் வெளியான புத்தகம் மக்ஃபி.,பக்கம் 88,விலை ரூ 100, அலைபேசி 9444640986
சைபுன்னிஷா என்ற மக்ஃபி ஒரு சூபிஃ கவிஞர். 1639-1702 காலம் வாழ்ந்து மறைந்தவர். இந்திய அரசியலில் ஸ்தரபதி சிவாஜிக்கு ஆன அதே இடம் மக்ஃபியின் கனவுகளுக்கும் உண்டு என்று கதையாசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.
தனது தந்தையின் அதிகார செயல்பாடுகளுக்கு எதிராக போராடி 20 வருடம் அரண்மனை சிறையில் இருந்தவள்.
இவருடைய கவிதைகள் இவரின் மரணத்திற்கு பின் சூபி கவிதைகளாக, கடவுளை நினைத்து உருகுவதாக அர்த்தம் கொண்டு பிரசுரிக்கபட்டுள்ளது .
எழுத்தாளர் புதிய மகாதேவி, மக்ஃபியின் ஆன்மாவாக மாறி எழுதிய classic எழுத்து வகை இது . 64 வயது வரை திருமணம் செய்யாது வாழ்ந்தார் என்றாலும் பல காதலர்கள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜியை மனதார காதலித்து வந்தவள் என்ற வரலாறும் உண்டு.
மாக்ஃபி என்றால் ரகசியம்.
இந்த புத்தகம் வெறுமனே கதையாக சொல்ல கூடியது அல்ல, வாசித்து உணரக் கூடியது. ஒரு வித்தியாசமான உணர்வை மனச்சலனத்தை மனவெளி ஊடாக எல்லையற்று பயணிக்க செய்கிறது. வார்த்தைகள் ஜாலம் செய்கின்றன
*******
"ஓ மாக்ஃபி
காதல் பாதையில்
நீ தனித்தே தான்
பயணித்தாக வேண்டும்
உனக்கு பொருத்தமானவர்கள்
யாருமில்லை
அது கடவுளாக இருந்தாலும்."
***********
"உன் வசந்தம் எப்போதும் இங்கே இருக்கும். இந்த வெறுமை, இந்த சூனியம் இந்த பூஜியம் எல்லாம் நீயே வரைந்து கொண்ட கற்பனை உலகம். அது நிஜமல்ல. நிஜத்தில் உன் பாவா உனக்காக காத்திருக்கிறார் சைபூன்"
*********
எதெற்காகவெல்லாம் கொண்டாடி தீர்த்தாரோ, அதுவே அவருக்கு எதிராக மெல்ல மெல்ல விசுவரூபம் எடுத்து விட்டதை பாதுஷா கவனிக்க தவறவில்லை.
************
மொகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப்பின் மூத்த மகள். போர் செய்து ஓய்ந்து போய் விட்டார் அவுரங்கசீப் .தனது முதல் மகள் தன்னிடம் இருந்து பிரிந்து இருப்பதை எண்ணி கவலை கொள்கிறார். ஜீனத் என்ற மகளை அனுப்பி விட்டு தன்னிடம் அழைத்து வர முயல்கிறார். ஆனால் தானே சிறை படுத்திக் கொண்ட மகள், சிறையில் இருந்து வெளிவர மறுக்கிறாள்.
ஒரே நேரம் மக்களிடம் பரிவும், இளவரசியாக இருப்பதும் இயலாத விடயம் என தங்கை ஜீனத் புரியவைக்க முயல்கிறார்.

மாக்ஃபி தனது தந்தையின் இறப்பிற்கு 5 வருடம் முன் இறந்து, பாசமான தந்தைக்கு தண்டனையும் கொடுத்தார் என்பது நியதி ஆனது. மக்ஃபி கதை 17 ஆம் நூற்றாண்டின் காலவெளியை சொல்லியது. அத்துடன் இந்த நூற்றாண்டு தற்கால அரசியல் கொலை கதையையும் பின்னி கதையை முடித்த விதம் அருமை.

தகப்பன் மகனை கொன்றது, மகள் தகப்பனை தண்டித்தது என வரலாற்றில் கடந்து போன போது தற்கால அரசியலில் கணவனே மனைவியை கொலை செய்து விட்டு வெற்றிகரமாக அரசியல் செய்யும் இந்திய அரசியல் தளத்தையும் வெளிப்படுத்தும் விதம் அருமை!.
எப்படி மக்ஃபி தந்தையின் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நின்றதால் கொல்லப்பட்டாரோ அதே போல் அரசியல்வாதியான கணவனுக்கு எதிராக நிலைகொண்ட பேராசிரியர் மனைவி கொல்லப்படுகிறாள். மக்ஃபி கதையை மொழியாக்கம் செய்தது கொலைக்கான காரணமாகிறது. தற்கால தகவல் காலமும் கொல்லப்பட்ட விதம், கொலை ஒரு சான்று இல்லாதே நடைபெறுகிறது.
--------+++++++++---------
மக்ஃபி கவிதைகள் சூஃபிக் கவிதைகளாக இருப்பதால் யாருக்கும் பிரச்சினை இல்லை. மக்ஃபி கவிதைகளில் இருக்கும் காதலும், ஏக்கமும், வலியும், வேதனையும் தத்துவ உலகில் பிறவிக்பெருங்கடலை நீந்திக் கரையேறத் துடிக்கும் ஆத்மாவின் வலியாகவும் வேதனையாகவும் தாகமாகவும் தவிப்பாகவும் இருப்பதாக இலக்கிய உலகம் கொண்டாடியது.
''''********""""""""""****""**
ஆனால் ஆலம்கீரின் மகளாக இருப்பதோ அவுரங்கசீப் வாழ்ந்த காலத்தின் மனசாட்சியாக மக்ஃபி இருந்ததையோ கொண்டாடவில்லை. அப்படி வரலாற்று நெடுக கேள்வி கேட்கும் சிந்திக்கும் பெண்களை விட துயருற்று இருக்கும் பெண்களை வரலாற்றுக்கும் பிடித்து போயுள்ளது என்பது முரண் தான்.
அன்று மக்ஃபி
நேற்று கவிதா
இன்று அபி என மக்ஃபி மரிப்பது இல்லை என முடித்து உள்ளார் ஆசிரியை.
Power depends upon ceremony and state, as much as upon abilities and strength of mind.
I was born as a prince, said he, and I know not how to act the part of a slave!
Daughter of aurangzeb saw from behind a curtain the behaviour of Shivaji. She was struck with the handsomeness of his person and she admired his pride and haughty deportment. எல்லா கதாப் பாத்திரங்களையும் மனதிற்கு இதமாக படைத்து இருக்கிறார். எல்லா கதாப் பாத்திரங்களும் அத்தனை எளிதாக மனதை விட்டு போகாது இருப்பது இக்கñதைபின்னலின் சிறப்பு ஆகும்.



ஐவருமாய் - சிறுகதைகள்



பதிப்பகம் அன்னை ராஜேஸ்வரி , சென்னை, தொடர்புக்கு 9444640986
பக்கங்கள் 168, செப் 2023 ல் வெளியான இப்புத்தகம் 190 ரூபாய் விலையில் பெறலாம். bookudaya@gmail.com
குடிகார தந்தைக்கு பிறந்த மகள்கள் தனக்கு ஒரு துணையை தேடும் போது அதே போன்ற குடிகாரங்களை தேர்ந்து எடுத்து தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்வார்கள். அதே போன்று கணவன் காதலன் நண்பன் என ஏதோ ஒரு காரணம் கொண்டு பிடித்து போகும். எவனில் எதை விரும்பவில்லையோ அடுத்து தங்கள் வாழ்க்கையில் தேர்ந்து எடுக்கும் நபர்களும் அதே பலவீனம் கொண்டவர்களாக தேர்ந்து எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.
ஆண் பெண் உறவின் சிக்கல்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பெருகுவதும் கொலையிலும் தற்கொலையில் முடிவதிலும் நேர்மையற்ற உறவு சிக்கல்களே ஆணி வேராக உள்ளது.
ஒரு ஆணால் எத்தனை வயது ஆனாலும் தன் பேச்சால் பெண்களை தன் வசப்படுத்துவதும் , தன் தேவைக்கு தீனி போட வைத்து கொள்வதும் அடுத்த நகர்வில் அந்த புறக்கணிப்பு ஆண்களுக்கு தங்கள் ஆண்மையின் மேன்மையாகவும், அதே நேரம் பாதிக்கப்படும் பெண்களை குற்ற உணர்ச்சிக்கு கொண்டு வந்து, அவர்களை தாழ்வு மனப்பான்மைகுள் வைத்து, மறுபடியும் தனக்கு சாதகமாக இரையாக்கும் போக்கு இணைய கருவிகள் வேகத்தை கூட்டுகிறது.
யாரும் யார் அனுபவத்திலும் கற்றுக் கொள்ள போவது இல்லை. இது ஒரு உணர்வு போராட்டம் என்ற நிலையில் நேர்மையான துணிவான ஆட்கள், தண்டிக்கப் படுவதும் தாழ்வு மனப் பான்மை கொண்ட நேர்மையற்ற ஆண்கள் தங்களை மேலும் மேலும் நிறுவி கொள்ள இந்த சமூக கட்டமைப்பும் சாதகமாக உள்ளது. ஆண்களால் பெண்களை வேசி, தரங்கெட்டவள் என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் உணர்வு நிலையில் தங்களை மேம்படுத்தி வைத்து கொள்வதும் பெண்கள் நொறுங்கி இல்லாதாகி போகும் அவலம் கொண்ட சமூகம் இது.
அந்த நுண் உணர்வு, உறவு சிக்கல்களை இப்புத்தகம் தெளிவாக புரிய வைக்கிறது.
எளிய பெண்கள் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க மட்டுமல்ல, உறவு என்ற ரீதியில் புதைக் குழியின் ஆழத்தை விளக்கும் புத்தகம்.

பரசாற்றலோ நல்வழிப்படுத்தல் என்ற பாங்கில் இல்லாது போகிற போக்கில் வாழ்க்கை இவ்வளவு தான் பெண்களை சுற்றி பல பல பெயர்களில் ஈக்கள் போல வரும் ஆண்களை கையாளும் ஒரு உக்தி , ஆறுதல் தரும் எல்லாம் இயல்பு என்ற புரிதல் தரும் புத்தகம்.
எளிதாக. வாசித்து கடந்து போகலாம். ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்த ஆழமான கருத்துக்கள் பிற்பாடு அசை போடவைக்கும் புத்தகம் இது. பெண்கள் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் துணை செய்கிறது.
டாக்டர் ,இது என்ன ஊசி?
இந்த ஊசிப் போட்டா எனக்கு தூக்கம் வந்திடுமா... தூங்கிடுவேனா
நான் தூங்கும் போது போன் வந்துச்சுனா
"கூப்பிடுறேன்.....கூப்பிடுறேன் டா"
மெல்ல மெல்ல
அவள் கண்கள் மூடின அந்த நள்ளிரவில் அவள் போனிலிருந்து
வைப்ரீஷன்ன்ன்ன்
கூப்பிடுறேன்.....கூப்பிடுதேம்மா......
அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.......



0 Comments:

Post a Comment