31 Dec 2021

நினைவுகளின் உயரங்கள்(ഓർമ്മകളുടെ പടവുകൾ !)

 

நினைவுகளின் உயரங்கள்(ஓர்மயுடை படவுகள்) என்ற பெயரில் எங்கள் உயர் பள்ளி ஆசிரியர் டோமி சிரியக் எழுதிய ஒரு நினைவுத் தொகுப்பு ஆகும் இப்புத்தகம்.

கேரளா மலையோர பிரதேசம் ஆன இடுக்கி மாவட்ட மக்கள் கதை சொல்லிய புத்தகம்.  பெருவாரி மக்கள் குடியேறிகளாக இருந்தாலும் இயற்கையுடனும் வன விலங்குகளுடனுன் சமூக அமைப்புடனும் போராடி வாழும் மக்கள் உள்ளடங்கிய பகுதி ஆகும் கட்டப்பனை தொடங்கி,  பீர்மேடு மற்றும் வண்டிப்பெரியார், குமளி நிலைப்பகுதியை மக்கள் வாழ்க்கையை பற்றி அறிய தந்த புத்தகம் என்றால் மிகையாகாது.  கொஞ்சம் வரலாறு, எங்கள் ஆசிரியரின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு, அன்றைய சமூக சூழல், கல்வி நிலை , வறுமை, மக்களின் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கான பயணம்,  தமிழ் மலையாளம் இரு மொழி கலந்த மக்களின் வாழ்வியல் , எங்கள் ஊரில் பணியாற்றிய ஆசிரியர்கள் பற்றி  தகவல் கிடைத்த புத்தகம்.

 காலம் மறக்க வைத்த இடப்பெயர்கள், மனிதர்கள், பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றிய அறியா தகவல்கள் மற்றும் சில வரலாறுகள் பற்றியும் தெரிந்து கொள்ள இயன்றது. எங்கள் பள்ளியில் படித்து பிற்பாடு வாழ்க்கையின் பல நிலைகளில் பிரகாசித்த மாணவர்கள், அகாலத்தில் மரணித்த எங்கள் பள்ளி தோழர்கள், மறைந்த ஆசிரியர்கள் பற்றியும் நினைவு கோர வைத்த புத்தகம்.

எங்கள் ஆசிரியர் என்னையும் நினைவு கூர்ந்து கண்டு ஒரு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆசிரியர்களின் பாராட்டை ஊரை விட்டு வந்து 20 வருடங்கள் பின்பு பெறுதல் பெரும் பாக்கியம் அல்லவா! என் ஆசிரியரை நன்றியோடு வணங்குகிறேன்.

பொதுவாக எங்கள் ஆசிரியர் -டோமி சர் யாரையும் புறம் கூறாதவர், மிகவும் அன்பான, அமைதியான ஆசிரியர். அதனால் இப்புத்தகத்தில் அவருடைய மற்றவர்களை பற்றிய விசாலமான பார்வையும் அவர்களை பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளது.

அண்ணன்- தம்பி மரம், நாங்கள் பாடசாலைக்கு நடந்து சென்ற பாதைகள், அன்றைய கல்வி அமைப்பு எங்களுடைய  மலைக்கும், மழைக்கும் பனிக்கும் இடையே வாழ்ந்த எங்கள் வாழ்க்கையை பிரதிபலித்த சிறந்த படைப்பு இது.

எங்கள் ஆசிரியர் தன்னுடைய எழுத்து வழியாக தன்னுடைய வாழ்க்கையை மட்டுமல்ல அன்றைய காலம் வாழ்ந்த பல மனிதர்களின் கதையை சொல்லிய புத்தம் இது. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ഓർമ്മകളുടെ
പടവുകൾ (ഓർമ്മകളുടെ ഉയരങ്ങൾ) എന്ന പേരിൽ ഞങ്ങളുടെ ഹൈസ്കൂൾ അധ്യാപകൻ ടോമി സിറിയക് എഴുതിയ ഓർമ്മക്കുറിപ്പുകളുടെ ഒരു സമാഹാരമാണ് പുസ്തകം.

കേരളത്തിലെ മലയോര മേഖലയായ ഇടുക്കി ജില്ലയിലെ ജനങ്ങളുടെ കഥയാണ് പുസ്തകം പറയുന്നത്. കുമളി പ്രദേശമായ പീരുമേട്, വണ്ടിപ്പെരിയാ    ഭൂരിഭാഗം ജനങ്ങളും കുടിയേറ്റക്കാരാണെങ്കിലും ജനജീവിതത്തിലേക്ക് ഒരു നേർക്കാഴ്ച്ച നൽകിയ പുസ്തകമാണ് എന്ന് പറഞ്ഞാൽ അതിശയോക്തിയില്ല. ചെറിയ ചരിത്രം, നമ്മുടെ അധ്യാപകൻ ടോമി സിറിയക് സാറിൻറെ സ്കൂൾ- കോളേജ് വിദ്യാഭ്യാസം, അന്നത്തെ സാമൂഹിക ചുറ്റുപാടുകൾ, വിദ്യാഭ്യാസ നിലവാരം, ദാരിദ്ര്യം, ഒരിടത്ത് നിന്ന് മറ്റൊരിടത്തേക്കുള്ള ആളുകളുടെ യാത്ര ഇവയൈ  കുറിചാണ്  പ്രതിപാദിച്ചു  ഇരിക്കുന്നത്.

കേരളത്തിലെ മലയോര മേഖലയായ ഇടുക്കി ജില്ലയിലെ ജനങ്ങളുടെ കഥയാണ് പുസ്തകം പറയുന്നത്. കാലം മറന്നുപോയ സ്ഥലനാമങ്ങൾ, ആളുകൾ, ജനിച്ചു വളർന്ന പട്ടണത്തെക്കുറിച്ചുള്ള വിവരങ്ങൾ, ചില ചരിത്രങ്ങൾ എന്നിവയെക്കുറിച്ചും അറിയാൻ കഴിയും. നമ്മുടെ സ്കൂളിൽ പഠിച്ച് ജീവിതത്തിന്റെ പല ഘട്ടങ്ങളിലും തിളങ്ങി നിന്ന വിദ്യാർത്ഥികളെയും, അകാലത്തിൽ മരണമടഞ്ഞ സഹപാഠികളെയും, അന്തരിച്ച അധ്യാപകരെയും ഓർമ്മിപ്പിക്കുന്ന പുസ്തകം.

നമ്മുടെ അധ്യാപകൻ ടോമി സിറിയക് സാർ  എന്നെയും ഓർത്തു, ഒരു പേജിൽ  ​​കണ്ടപ്പോൾ സന്തോഷത്തോടെ ആശ്ചര്യപ്പെട്ടു! ഞാൻ എന്റെ ഗുരുവിനെ നന്ദിയോടെ നമിക്കുന്നു.

സാധാരണയായി ഞങ്ങളുടെ അധ്യാപകൻ - ടോമി സാർ വളരെ സ്നേഹമുള്ള, ആരെയും കുറ്റം പറയാത്ത പ്രകൃതമാണ്, ശാന്തനായ അധ്യാപകനാണ്. അതിനാൽ പുസ്തകത്തിൽ അദ്ദേഹത്തിന് മറ്റുള്ളവരെക്കുറിച്ചുള്ള വിശാലമായ വീക്ഷണവും അവരെക്കുറിച്ചുള്ള നല്ല ഓർമ്മകളും മാത്രമേ ഉള്ളൂ.

 


ചേട്ടൻ - അനിയൻ മരം, ഞങ്ങൾ സ്കൂളിലേക്ക് നടന്ന വഴികൾ, അന്നത്തെ വിദ്യാഭ്യാസ സമ്പ്രദായം , മലകൾക്കും മഴയ്ക്കും മഞ്ഞിനും ഇടയിൽ ജീവിച്ച നമ്മുടെ ജീവിതത്തെ പ്രതിഫലിപ്പിക്കുന്ന ഒരു മാസ്റ്റർപീസ് ആണ്.

 

എഴുത്തിലൂടെ സ്വന്തം ജീവിതം മാത്രമല്ല, അവിടെ ജീവിച്ച അനേകം മനുഷ്യരുടെ കൂടെ കഥ  പറഞ്ഞ പുസ്തകം ആണ്.

0 Comments:

Post a Comment