26 May 2012

நெல்லையை மிரட்டும் டெங்கு!

பெண் கொசுவில் இருந்து பரவும் ஆடெஸ் ஆஜிபிற்றி (aedes aegypti) என்ற  வைரசால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது.  அதிகாலை மற்றும் சூரிய அஸ்ட்தமனம் முன்னுமே இக்கொசுக்கள் மகக்களை கடிக்கின்றது.   இந்த வைரஸ் ஒரு மனிதனில்  2-7 நாட்களுக்குள் மனிதனை தாக்கி விடுகின்றது. பின்பு இந்நோய் தாக்கிய மனிதன்  டங்கு காய்ச்சல் பரவும் ஒரு கருவியாகி விடுகின்றான். இந்த காய்ச்சலை பற்றிய அறிவு 1907 வாக்கில் வந்திருந்தாலும் இதுவரையிலும் தடுப்பு ஊசியோ தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மருத்துவ  வரலாற்றில் கறுப்பு பக்கக்களே.. இது ஒரு பெரும் உலகலாவிய பிரச்சனையாக இரண்டாம் உலகப்போருக்கு பின் கண்டு பிடிக்கப்பட்டது. நகரமயமாக்கல், மக்கள் பெருக்கம், பூமி வெப்பமயமாகுதலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ காரணமாகின்றது. 1960-2010 காலயளவுக்குள் 30 மடங்கு டெங்கு காய்ச்சல் பரவியதாக சொல்லப்படுகின்றது.

டெங்கு என்ற வார்த்தை ஸ்பானிஷ் என்ற மொழியில் இருந்து வந்திருந்தாலும் உலகம் முழுதும் உள்ள  40 % மக்கள்  இந்நோயின் அச்சுறுத்தலில் வாழ்கின்றனர்.   வருடம் 2.5% குழந்தைகள் இறந்து போகின்றனர்.

தற்போது தமிழகம் டெங்கு காய்ச்சல் பிடியில் மாட்டியுள்ளது. டெங்கு காய்ச்சலால் 1466 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 க்கு மேற்ப்பட்டோர் இந்நோயால் இறந்தும் போய் விட்டனர் என்பது துயரே. ஆனால் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் சட்டசபை மேஜையில் கொட்டுவதையும் தட்டுவதையும் விட்டு விட்டு ஆக்கபூர்வமான செயலாக்கத்தில் இறங்கியது போல் தெரியவில்லை. மத்திய குழுவை வரவழைத்துள்ளனர். மாநில சுகாதார நல அமைச்சர்கள் எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை.

நெல்லையில் தெருவெங்கும் வீட்டுமுன் கானுகள் அமைத்து அங்கு துர்நீர் கட்டி கிடக்கும் சூழலே உள்ளது. மேலைப்பாளயன் , பேட்டை பக்கம் செல்ல  இயலாதளவு துர் நாற்றம், அசுத்தம். நயினார் வேய்ந்தான் குளங்கள் திறந்த வெளி கழிப்பிடம் ஆகி விட்டது. நகராட்சி என்ற ஒன்று உயிருடன் உண்டா என்று தெரிந்து கொள்வதே தெருவுக்கு தெரு குழுவாக் நின்று புகைப்படம் எடுப்பதை கண்டு தான். வீட்டு சுற்று புறத்தை தூய்மையாக பேண கற்ரு கொடுக்கும் அரசு அலுவலங்கள் பின்பக்கம் சுற்றுப்புறம் பன்றிகள் இருப்பிடமாக் உள்ளது.  நகரத்தை போர்கால அடிப்படையில் சுத்தப்படுத்தாது புகைப்படம் எடுப்பது எதற்க்க்கு என்றுதான் தெரியவில்லை.

 தண்ணீரை தேங்கமலும் கொசுக்கடி படாமலும் இருப்பது ஒன்று மட்டுமே டெங்குகாச்சலில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி. காச்சல் வந்தத்ம் நேரம்  தாமதியாது இரத்தம் பரசோதனை மூலம் கண்டறிந்து மருத்துவ சேவை பெற வேண்டும். கவனிக்காது விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.ஆரஞ்சுப்பழச்சாறு, இளநீர் குடிப்பது வழியாக நீர் சத்தை தக்கவைத்து கொள்ள முடியும்.  முக்கியமாக மக்கள் கொசுக்கடி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

நெல்லை மதுரை என்று தமிழகம் முழுதும் பரவும் முன் அரசு விழித்தெழுந்து மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும் . அரசியல்வாதிகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தால் இன்னும் விழிப்புணர்வு கிட்டுமோ?.

2 comments:

  1. I wish that Politician & their family should be affected first in any disease outbreak or natural disasters. Then remedial measures & action oriented approach will be faster. The common people may also get benefited out of this ...........

    ReplyDelete
  2. ஆக்க பூர்வமான தகவல்கள்!

    விருது ஓன்று பகிர்ந்துள்ளேன்!
    எல்லா புகழும் இறைவனுக்கே'(மூன்று)
    பார்க்கவும்!
    வலைதளத்துக்கு வரவும்!

    ReplyDelete