12 Apr 2012

கற்பனைகள் கலந்த நிஜவாழ்க்கை!

1999 Nov.1, முஸ்லிம் லீக் மலபார் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான  38 வயதுடைய சாதிக் அலி என்ற வாலிபன் 65 வயதை கடந்த ஒரு மூதாட்டியை சந்திக்க அனுமதி கோருகின்றார்.  இவர் கேரளா இலக்கிய உலகில் கதை, மற்றும் கவிதை எழுத்தால் தன் பக்கம் ஈர்த்த புரட்சி கவிஞ்சி!  தன்னை சந்திக்க வெறும் 2 மணி நேரம் அனுமதிக்கின்றார்!  கொச்சியில் ஒரு கிராமத்தில் இருந்து தன்னுடைய காரில் 4 மணி நேரம் பயணப்பட்டு பெண் எழுத்தாளர் வீட்டை அடைந்து விடுகின்றார் அந்த வாலிபர்.  கவிஞ்சியின் பணிப்பெண் கதகை திறக்க, ஓடி வந்து பெண் கவிஞரின் கால் பக்கம் வந்து அமர்ந்து கதைக்க ஆரம்பிக்கின்றார்.  கதைக்கின்றனர்…. கதைக்கின்றனர்…. கண்டு செல்ல வந்தவனுக்கு மதிய உணவும்  தயாராகி விட்டது.  மூதாட்டியிடம் ஆசையுடன் கேட்கின்றான் நீங்கள் எனக்கு வாயில் உணவை ஊட்டி விடுவீர்களா? அவரோ “ஐயோ எங்கள் பாட்டி சொல்லியுள்ளார் நீங்கள் செத்த மாட்டை உண்பவர்கள் உன் உதட்டில் என் கை பட்டால் தீட்டாகி விடும்”. வந்த இளைஞனும்  விட்ட பாடில்லை அப்படி என்றால் நான் ஊட்டி விடவா உங்களுக்கு!  

imageசந்திப்பு இப்படியாக துவங்கியது என்றாலும் காதல் கவிதை எழுதும் கவிஞரின் இளமையை; கற்பனையை தூண்டி விடும் படியாக இந்த சந்திப்பு அமைந்து விட்டது.   பின்பு பல நாட்கள் தூக்கமற்று அதிகாலை வரை தொலைபேசியில் பேசும் படி அவர்கள் உறவு வளர்ந்தது.   கவிஞ்சி தன் பணிப்பெண்ணுடன் 3 நாள் அந்த இளைஞனின் வீட்டில் தங்குகின்றார்.  திரும்பும் வழியில் சூரியன் ஒளியை நோக்கி கொண்டே வருகின்றார் காலை சூரிய ஒளி சிவப்பாகி தூய வெள்ளையாக மாறிய போது அல்லா தனக்கு இஸ்லாம் மதம் மாற அழைக்கின்றார் என்று தெரிந்து கொண்டார்.  இனி தன் வாழ்க்கை தன் 37 வயது காதலனுடன் தான் என்று தீர்க்கமான முடிவு எடுத்து விடுகின்றார்!

imageஇந்த மூதாட்டி தான் மாதவிகுட்டி என்று மலையாள கதை உலகிலும், கமலா தாஸ் என்ற பெயரில்  ஆங்கில கவிதைகைளால் நோபல்பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்!  வெறும் பள்ளிப்படிப்பு முடித்த இவருடைய ஆங்கில கவிதைகள், பல உலக பல்கலைகழங்களில் பாட புத்தகமாகின. பாடம் நடத்தும் கவிஞ்சி! கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள கல்லூரி வகுப்புகளில் பாடம்  எடுத்துள்ளார்.  ஒரு முறை சொல்லியிருந்தார் எனக்கு கணக்கு பாடம் என்பது மிகவும் கடினமாக இருந்தது.  ஆகையால் படிக்கும் ஆர்வம் இழந்து 15 வயதில் திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் கொல்கத்தாவில் குடியேறி விட்டேன்.  கணவருடைய ஊக்கப்படுத்தினதாலே எழுத்துலகில் கால் பதிக்க இயன்றது.   நான் என்ன எழுதுகின்றேன் என்று ஒரு போதும் கேள்வி கேட்காதவர் என் கணவர்;  ஒரு போதும் தன்னிடம் காள்புணர்ச்சி கொள்ளாதவர் எனக்கு கணவர் மட்டுமல்ல நண்பர் பாதுகாவலர்,  தந்தை, சகோதரர் என எல்லாம் அவர் தான்! 

பெண் சுதந்திரம், விடுதலை என்ற நோக்கில் மலையாள பத்திரிக்கையில் எழுதி வந்த இவர் திருவனந்த புரம் ராஜா குடும்பத்தில் தனது முதல் மகனுக்கு பெண் எடுத்தவர். இவருடைய தந்தை மாத்திரு பூமி என்ற பத்திரிக்கையின் பத்திரிக்கையாளராகவும் ,  தாய் மாமா நாராயணன் நாலப்பாடு சிறந்த எழுத்தாளர்; மட்டுமல்ல இவருடைய தாயார் மலையாள எழுத்து உலகில்  பாட்டி ஸ்தானத்தில் இருக்கும் பாலாமணி என்பரே.  தீவிர  கிருஷ்ண-கடவுள் பக்தையான இவர் பல கவிதைகள் கிருஷ்ண பகவானின் நினைப்பில்  தான் ராதையாகவே கற்பனை கொண்டு எழுதியுள்ளார். 
 
1934 ல் பிறந்த இவர் தனது 15 வயதில் தன்னிலும் 15 வயது முதியவரான  வங்கி அதிகாரி மாதவ தாஸின் மனைவியாகி 3 ஆண் குழந்தைகள்  அம்மா, குடும்ப தலைவி என கொல்கத்தா நகரில் வசித்து வந்தவர்.  பெண்கள் உணர்வுகளை  இந்த சமூகம் புரக்கணிக்கின்றது  பெண்கள் தங்கள் உண்மையான விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த இயலாதவாறு முகமூடி அணிந்த வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதே மாதவியின் குற்றசாட்டாக இருந்தது.  இதற்க்கு ஒரு தீர்வு பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதும் இவர் எழுத்தின் நோக்கமாக  இருந்தது.

imageதனது 42 வயதில் ‘என்ற கதா’ (என்னுடைய கதை) என்ற வாழ்க்கை சரிதம் வெளியிட்டதுடன் இவர் மேல் பல மக்களுக்கு வெறுப்பு ஆரம்பம் ஆகி விட்டது. கொல்கத்தாவில் கணவருடன் வசித்த போது பல ஆண்களுடன் தனக்கு உண்டான  தொடர்பை பற்றி கதைத்திருந்ததால் ஒழுக்கம், கண்ணியம் என்று நோக்கப்பட்ட சமூகத்திற்க்கு இது ஒரு பேரிடியாக இருந்தது.  மீறல்களை வழக்கமாக கொண்ட பெண்ணாக நோக்க ஆரம்பித்தனர் இவரை.  உண்மையை எழுதினேன் என்றும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடப்பது தான், பெண்கள் தங்களை ரொம்ப நல்லவர்களாக காட்டி பொய்மையாக வாழ்கின்றனர் என்றெல்லாம் சொல்லி பார்த்தார்.  பின்பு புத்தகம் விற்க வேண்டும் என்ற நோக்குடன் சில நிகழ்வுகளை கற்பனை கலந்து  சேர்த்துள்ளேன் என்று கூறி தப்பித்து கொண்டார். சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்கும் ஆசாமி என்று 1980 களில் “உலகில் மிகவும் அழகானது நிர்வாணமான பெண்கள் தான் என்று கூறி கொண்டு பெண்கள் நிர்வாணப்படங்களை வரைந்தது புத்தகமாக பதிவிடவும் செய்த இவரை பலர் “கோட்டிகாரி” என  அழைக்கவும் ஆரம்பித்தனர்.

  இந்த நிகழ்வுகள் மறக்கப்பட்டு அவருடைய  கதைகள் திரைப்படங்களாக வர துவங்கிய காலகட்டத்தில் தான் 1999 Nov 1 மறுபடியும் அவரை விவாதங்களுக்கு இட்டு சென்றது. தனக்கு சுதந்திரம் பாரமாக உள்ளது இனி பாதுகாப்பு மட்டும் போதும் என்னை கட்டுப்படுத்த வேண்டும், பர்தா மட்டுமே பாதுகாப்பான உடை என்று புது பெண் சுதந்திர கதைகளை கதைக்க ஆரம்பிக்கின்றார் மட்டுமல்ல கேரளா ஹிந்து சமூகத்தின் எதிரியும் ஆக்கப்பட்டார்!........

1 comment:

  1. அடா டா!

    ஒரு எழுத்தாளர் இவரை-
    நான் கேள்வி பட்டுள்ளேன்!

    புதிய தகல்வல்-
    உங்கள் மூலமே தெரிந்து கொள்கிறேன்!

    ReplyDelete