6 Aug 2011

அம்மாவுக்கு ஓர் கடிதம்!


அன்புள்ள அம்மா, உன் பாச மகள் எழுதி கொள்ளும் கடிதம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                      அம்மா இன்றும் கொடும் துர்-கனவு கண்டு எழுந்து விட்டேன்.  என் இதயம் ஈட்டியால் குத்தியது போல் வலிக்கின்றது.  நான் என்ன தவறு செய்தேன்.  உன்னை மறக்க நினைக்கும் தோறும் நினைவுகளில் தினம் வந்து என்னை கொல்லுகின்றாய்.    அதன் காரணம் தான் என்னால் உணர இயலவில்லை .  2 வயதில் 4 வயது குழந்தையாக வளர்க்கப்பட்டேன். 14 வயது வந்த போது நீ என்னை 20 வயது மங்கை ஆக்கினாய், திருமணம் வழியாக ஒவ்வொரு தாயும் சுகமாக வாழ அனுப்பும் போது நீயோ என்னை போரிட அனுப்பினாய். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உன் கண் அசைவில் தானே நான் சிந்தித்தேன், இருந்தேன், நடந்தேன், வளர்ந்தேன்.  உன் முன் கோபத்தால் தேவையற்று தண்டித்து விட்டு தேவைக் கதிகமான பாசத்தால் நீ அருகில் வரும் போது நான் எல்லாம் மறந்தேன். ஆனால் அதுவெல்லாம் இன்று என்னை இப்படி வதைத்து சாம்பலாக்கவா ?
                                                                                                                                                                   நீ சுந்தரம் டெய்லரிடம் ஒரு மாபெரும் டிசைனர் போல் எனக்கென துன்னிய சிவப்பு நிற கவுண் இட்டு   முதலாம் வகுப்புக்கிற்க்கு சென்றது நினைவு வருகின்றது.   உன் பிரிவை தாங்காது பள்ளி திரும்பி வீடு வந்து நீ பூட்டி இட்ட அரை வாசல் கதவில் பிடித்து தொங்கி அழுததும் நினைவு வருகின்றது.   பின்பு நீ வாங்கி கொடுத்த எனக்கு பிடித்த தின் பண்டம் போண்டாவை அல்லது பண் ரொட்டியை வாங்கி தின்று விட்டு நீ எனக்கு முகம் கழுகி பவுடர் இட்டு, பொட்டு,பூ வைத்து முத்தம் இட்டு அனுப்பும் பள்ளி நாட்கள் மட்டுமல்ல;  10ஆம் வகுப்பு வரையிலும் இரட்டை சடை பிண்ணி,  சோற்றை வாயில் ஊட்டி விடும்  நாட்களும் தான் நினைவில் வந்து மறைகின்றதுதேவை இல்லாத இடத்தில் சிரித்தேன், பேசினேன் என்று உன்னிடம் திட்டு வாங்கி அழுத்ததும் நினைவில் உள்ளது.
                                                                                                                                                               முதல் முதலாக  உயர்நிலை- பள்ளி படிப்புக்கு என உன்னை பிரிந்த நாட்கள் ஓடி வருகின்றது என் நினைவில். வாரம் 7 நாட்களும் உனக்கு நான் கடிதம் எழுதினேனே, அந்த கடித எழுத்து என் மகன் பிறக்கும் மட்டும் என்னை தொடர்ந்த்து வந்தது. நீயும் நானும் தாய்- சேயா, தோழிகளா என்று நம் உறவுகள் பொறாமைப் படும் மட்டும் நீ அன்பை பொழிந்து வளர்த்தாய்.  ஆனால் விடுதியில் இருக்கும் போது ஒரு கடிதம் வழியாக  “உனக்கு மாப்பிள்ளை முடிவெடுத்துள்ளோம் தட்டும் மாற்றி விட்டோம்  இனி எங்கள் வாக்கை காப்பாற்றுவது  உன் விருப்பம்என்று நீ கொடுத்த சுதந்திரவும் நினைவில் இருக்கின்றது.   
                       கல்யாண பந்தலில் அனுப்பும்போது கூட நீ என்னை வேட்டைக்கு என்பது போல் உன் பணம் நகை பறி போகின்றது என்று அழுது சாபம் இட்டு அனுப்பி விட்டாய்.  நான் ஏதும் மறுபேச்சு கேட்டேனா?  "என்னை மறந்தால் நீ விளங்க மாட்டாய்" என்று உன் அன்பு மிகுதியால் நீ ஆசிர்வதித்த வார்த்தைகள் தான் என் நெஞ்சில் இப்போது மிதக்கின்றது .  அந்த சாபத்திற்க்கு ஆளாகும் நாள் என் வாழ்வில் ஒரு போதும் வராது என்று நான் நினைத்தது இன்று பொய்யாகி விட்டதே என்று தான் இன்று பரிதபிக்கின்றேன்.
                    எனக்கு கிடைத்த வாழ்க்கையில் சிறப்பாக ஓட நான் துடித்து கொண்டிருக்கின்றேன். இன்றும் உன்னை கட்டி பிடித்து அம்மா என்று உன் அருகில் வர ஆசிக்கின்றேன் நீயும் மக்களே என்று அழைத்து முத்தமிடுவாய் என்று நினைப்பது உண்டு.  ஆனால் நீ என்னை காணும் போது உன் கணவருக்கு இப்போது வருமானம் எவ்வளவு, உனக்கு வேலை கிடைத்து விட்டதா என்ற கேள்வி மட்டும் தான் வரும் என்பதும் எனக்கு தெரியும்

                           தம்பி வெளியூரில்  சென்று படிக்க மாட்டேன் என்ற போது என் படிப்பையையும் சேர்த்து மட்டுப்படுத்தியதும், நம் குடும்ப சொத்தை காப்பாற்ற என்னை அடி மாடு போல் விற்றதும் கூட இப்போது தான் புரிந்து வருகின்றது. இனி உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கலாம் என்றாலும் என்ன தவறு நான் செய்தேன் என்று நான் கேட்டு கொண்டே இருக்கின்றேன் தற்போது.

திருமணம் என்ற பெயரில் கடலுக்கும் பேய்க்கும் நடுவில் கொண்டு விட்டு விட்டு நீயும் சேர்ந்து வேடிக்கை பார்க்கின்றாய்.   என்னை வைத்து தாய் பாலில் விஷம் கலந்து விட்டது என்று சொல்ல வைத்தாய்.  தாய் பாசத்திலும் வேஷம் உண்டு என்று என்னை நம்ப வைத்தாய்.  எனக்கு என்று ஒரு உலகம் தந்தாயா? உன் கையிலும், கண்ணிலும் வளர்ந்த என்னால் யாரிடமும்  நட்பு பேணி பழகவும் தெரியவில்லைஎனக்கு சுற்றும் உன்னை தவிற வேறு உலகம் ஏன் தரவில்லை நீஇன்றும் சுற்றும் முற்றும் யாரும் இல்லாத உலகில் நான் என்னுடன் கதைத்து கொண்டே இருக்கின்றேன், தூக்கத்திலும் எனக்கு நிம்மதி தருகின்றாயா? அழுது விழிக்கின்றேன் என் கனவில் கூட எனக்கு நீ விடுதலை  தரவில்லை! 300 கி.மீ உன்னை விட்டு பிரிந்து வரும் போது தனிமையில் அழுது புலன்பினேன் இன்றோ 3000 கி.மீ உன்னை விட்டு போய் விட மாட்டேனா என்று துடிக்கின்றேன்.

அப்பா சொன்னார்கள் உனக்கு பிடிக்காத அத்தை வீட்டிற்க்கு சென்றது தான் கோபம் என்று நான் வந்ததோ  3 வருடம் கடந்து உனக்கு ஒவ்வொரு முறை நான் வரும் போதும் ஒவ்வொரு அத்தையுடன் ஊடலில் இருப்பாய். நான் என்ன பிழை செய்தேன் அவர்களிடம் பேசக் கூடாது என்று. அடுத்த முறை நான் வரும் போது நீ இந்த அத்தையிடம் கூடலிலும் இன்னொரு அத்தையிடம் ஊடலிலும் இருப்பாய் என்றும் எனக்கு தெரியும். எனக்கு யாரும் சத்திருவுமில்லை உற்றவர்களும் இல்லை என்றும் தெரியும். இதற்க்கு என அப்பாவையும் என்னிடம் கதைக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் உண்டு.  அல்லது இந்த காரணம் சொல்லி உன் மகனுக்கு அப்பா சொத்தை முழுதுமாக சேர்க்கும் வேலையின் இதுவும் ஒரு சதி வேலையா?

                 இன்றும் உன் பெருமைக்காகவும் உன் ஆசைக்குமாக தான் வாழ்கின்றேன்நீ ஆசைப்படுவது போல் கழுத்து, காது, கை நிறைய நகை அணிந்து என் பங்களாவில் இருந்து என் காரில் உன்னை பார்க்க வருகின்றேன், என் மக்களே என்று ஓடி வருவாயா என்று  நான் பார்க்க வேண்டும்.   அன்றாவது நம் உறவினர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்வாயா, நம் கோயில் திருவிழா சப்பரம் காண தான் அழைத்து செல்வாயா?


                  இது எல்லாம் காலம் செய்த கோலமா அல்லது என் ஜென்ம பாபமா ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. உனக்கு புரிந்தால் என்னை போல் ஒரு கடைசி கடிதாசு எழுதி தெருவித்து விடு அம்மாஇதை விட நான் பிறந்த போதே அழகு இல்லை என்று கம்பிளிக்குள் ஒளித்து வைத்திருந்த போதே  கொன்றிருக்கலாம் தானே.

ஒரு துளி கூட நிம்மதியான தூக்கம் இல்லை எனக்கு!  நீ வளர்த்த உன் மகிமையா அல்லது என் எல்லா இழப்பிலும் நான் உன்னை தேடுகின்றேனாஎன் மனசாட்சிக்கு ஒரே ஒரு கவலை நீ என்னை விட்டு முன்னே போய் நான் உன் சாபத்தில் வாழ்வதை விட,  நீ  வந்து மக்களே என்று விடும் ஒரு சொட்டு கண்ணீரில் என்  ஆன்ம சாந்தி அடைய வேண்டும் என்பது தான்.

(என்னிடம் தன் கவலையை பகிர்ந்த என் உயிர் தோழிக்கும் அவர் அம்மாவுக்கும் இந்த கடிதம் சமர்ப்பணம்!!! )

3 Aug 2011

உறுமும் "உறுமி"! மலையாளத் திரைப்படம்




உறுமி என்பது போரில் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் ஆகும்.       சந்தோஷ் சிவம் இயக்கத்தில் பிரத்வி ராஜ், பிரபு தேவா, ஜெனிலியா  நடிப்பில் கேரளக் கரையில் இருந்து மார்ச் 2011 மலையாளம் மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும் றுமி .
வாஸ் கோ டா காமா என்ற மேல்நாட்டு பயணி லிஸ்பனில் இருந்து 15ஆம் நூற்றாண்டில் ஒரு குழுவாக ஆப்பிரிக்கா கண்டம் வழி கேரளா கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.  கேரளாவிலுள்ள அளவில்லா வளங்கள் கண்டு சிறப்பாக குருமிளகு வியாபரம் செய்யும் நோக்குடன் அடுத்தடுத்து  இரு முறை ஆயுதங்களுன் வந்து  கொச்சின் நாட்டு மன்னரை கைப் பாவையாக வைத்து கொண்டு குறும்நில மன்னர்களான சாமூதிரிகளை அடக்கி கேரளா நாட்டு மக்களை கொன்றும் துன்புறுத்தியும் கேரளா மண்ணை எவ்வாறாக கையகப்படுத்தினர் என்பதே கதைத் தளம்.  அதையும் தற்கால பன்னாடு நிறுவன்ங்களின் ஊருடவலையும் அழகாக ஒப்பிட்டு காட்டியுள்ளனர்.


சாதாரண திரைப்படம் போன்று அல்லாது நிழலையும் நிஜத்தையும் பின்னி கதைசொல்லியுள்ள பாணி வித்தியாசமாக உள்ளது.  காட்சி அமைப்புகள்  சில இடங்களில் நெருடலாக இருப்பினும் கூட சிவம் சந்தோஷின் கேமரா அழகாக படம் பிடிக்கின்றது .  பின்னிசையும்  நன்றாகவே உள்ளது ஆனால் மனதில் நினைக்கும் படி இல்லை என்பது ஒரு குறையே!  திரைக்கதையும் மெச்சும்படி இல்லை தமிழும் அல்லாது மலையாளமும் அல்லாது கதைப்பது ரசிக்கும்படியாக இல்லை தான்.

கதை இப்படியாக தொடங்குகின்றது கேரளாவை சேர்ந்த கோவாவில் வேலை செய்யும் இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு கோட்பாடும், கட்டுபாடும் இன்றி கிடைக்கும் பணத்தை செலவழித்து போதாதற்க்கு கடனும் வாங்கி செலவழித்து  டிஸ்கோத்தை ஆட்டவும் போட்டு நாட்களை கடத்தி செல்கின்றனர்அவரில் ஒருவர் ராஜ குடும்பத்தை சேர்ந்த பிரித்வி ராஜும் மற்றொருவர் அவர் நண்பரும் இஸ்லாம் இளைஞருமான பிரபு தேவாவும்.

ஒரு நாள் கேரளாவில் இருந்து ஒரு கட்டிடக் கலை பன்னாட்டு நிறுவனத்தின் ஆட்கள் வந்து பிரத்வி ராஜிடம் உங்கள் அம்மா வழி சொத்து  உங்கள் பெயரில் உள்ளது ஒரு கையெழுத்து மட்டும் இட்டு தந்தால் பணத்தை பெற்று கொள்ளலாம் என்கிறது.  பிரத்வி ராஜும் தான் வசிக்கும் நகரத்தில் இருந்து தன் மூத்த குடிகள் வசித்த கிராமத்திற்க்கு வருகின்றார்.  அங்கு அம்மாவின் நிலத்தில் ஒரு பள்ளி இயங்குகின்றது.  பள்ளி நடத்துபவர் வித்தியா பாலன் பிருத்வியிடம் சில உண்மைகள் புரிய வைக்கின்றார் மேலும் தெரிந்து கொள்ள அந்த மண்ணின் மக்களாம் பழம்குடி மக்களிடம் செல்ல பணிகின்றார்.  அங்கு ஆரியா சில கேள்விகள் வைக்கின்றார் உன் அப்பா யார் உன் அப்பாவின் அப்பா அவரின் முன்னோர்கள் யார் என  தெரியுமா என்று! சிறப்பாக இளைஞனின் முன்னோரான கேளு நாயனாரும் அவர் அப்பாவும் வாஸ்கோடி காமாவிடமும் அவன் மகனிடவும் போராடி உயிர் தியாகம் செய்ததை சொல்கின்றார்.  இளைஞரும் தன் சுயநலனுக்காக தன் பூமியை விற்பது இல்லை என உறுதி எடுக்கின்றார்.  விரும்பிய பணம் அல்ல; தன்  சொந்த நாட்டு மக்கள் வளமாக வாழவேண்டும் தன் முன்னோர்கள் ஆசைப்பட்டது நடக்க வேண்டும் என்று நினைத்து, கிடைக்க போகும் பணத்தை புரக்கணித்து விட்டு செல்கின்றார்.

 கதைக் கரு அழகானது தான்.  தற்காலைய அரசியல் வாதிகளையும் அக்கால மன்னர்களின் மந்திரியையும் சரியாக பொருத்தி பார்த்துள்ளனர்.  அதே போல் நாட்டுக்கு வெறும் பயணி போல் வந்து நாட்டை பிடித்த அயல்நாட்டவருடன் தற்காலைய பன்னாட்டு நிறுவங்களின் செயல்பாட்டையும் தராதரபடுத்தியுள்ளார்.    

பிருத்துவியின் நடிப்பு குறை சொல்லும் படி இல்லை பழைய காலத்து ஆண்களின் வலிமையை உடல் மொழியில் நடை, பார்வை வழியாக சிறப்பாக வெளிப்படுத்துகின்றார்ஆனால் இஸ்லாமிய தமிழ் நண்பனாக வரும் பிரபு தேவாவின் நடிப்பு தான் 'காமடி பீஸ்' போல் உள்ளது; நம் தமிழகப் படங்களில் வரும் விவேக் போன்று!   வீர- சூரத்திற்க்கு பெயர் போன தமிழர்கள் 15 நூற்றாண்டில் இப்படியாகவா இருந்திருப்பார்கள் என்று கேள்வி கேட்க வைக்கின்றது பல இடங்களில் அல்லது மலையாளிகளின் மேட்டுக்குடி பார்வையா என்றும் தெரியவில்லை?

 சொல்லும் கதை-கருத்துக்கு என சரித்திர உண்மைகளை பல இடங்களில் உடைத்து நெளித்துள்ளனர் என்று விமர்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   குதிரைகள் அக்காலத்தில் இல்லை என்றும் சில சம்பவங்களை வரலாறையும் மீறி பொய்யாக கதைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.  மேலும் ராஜ குடும்பம் என்று பிரத்வி ராஜை அடையாளப்படுத்துவதிலும் பிழை உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்நாளைய பெண்களின் பார்வை நடை உடை தான் சகிக்கவில்லை!  தற்காலைய  உலக அழகிகளில் பூனை நடை நடக்கின்றனர். இயக்குனர் சந்தோஷ் சிவன் ஒளிபதிவாளராகவும் இருந்துள்ளதால் காமரா கண் வழியாக அழகாக படம் பிடித்திருந்தாலும் இயக்குனர் என்ற நிலையில் பல இடங்களிலும் சறுக்கி விழுந்துள்ளார். சர்க்கரை பொங்கள் ருசியானது என்று சர்க்கரை அளவுக்கு அதிகம் சேர்த்து சாப்பிட்டு திகட்டி மக்கு பிடித்தது போலவே   உள்ளது பல இடங்களில் காட்சிகள்.  பல காட்சிகளும் கலை நயம் என இருட்டில் படம் பிடித்துள்ளது படம் பார்த்து கொண்டிருக்கும் நம் நிலையை மறக்க செய்து ஓவிய அருங்காட்சியகம் உள் நுழந்தது போன்ற ஒரு உணர்வு.

                                                                                                                                                                    
பாடல் காட்சிகள்http://www.youtube.com/watch?v=7LsDvcAcV88 கதைக்கு ஒட்டாது நிற்கின்றது என்று மட்டுமல்ல தபு, விந்தியா பாலன், புது நடிகை ரம்யா நாயர், ஜெனிலிசா போன்றவர்களை அழகான காவியமாக என்பதற்க்கு பதிலாக வாழைப் பழத்தை உரிப்பது போல் காட்டப் பட்டுள்ளனர்.   பட்டு போன்ற பெண்களை இப்படி அடித்து துவைத்து கிழித்து காயப் போட்டுள்ளதை ரசிக்க இயலாது   என்று இயக்குனர்கள் வரும் காலங்களிலாவது உணர வேண்டும்.  பெண்ணின் மார்பு அழகை படம் பிடித்து காட்டியே தீர்வேன் என்று பல இடங்களில் கவர்ச்சி தான் புகுந்துள்ளது.  ஜெனிலியா ஆயிஷா பீகம் என்ற இஸ்லாமிய அரண்மனை வாரிசாக வருகின்றார் அவர் மூடிய உடையுடன் வருவதும் திடீர் என எல்லாம் களைந்து வருவதும் உண்மையும் மீறி படம் பார்க்க தூண்டில் போட்டு மக்களை பிடிக்க உதவும் தந்திரம் மட்டுமே. ஆர்யா சில காட்சிகளில் வந்து போவார் நான் கடவுள்-பிதாமகன் சேர்ந்த கலைவையாக வருவது எரிச்சல் தான் தரவைக்கின்றது.
                                                                                                                                                                          
 இந்த படம் 200 மில்லியன் செலவில் தெலுங்கு ஹிந்தி தமிழ் ஆங்கிலம் மொழிகளிலும் எடுத்துள்ளனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். படம் பார்த்து முடித்த போது ஏதோ ஒரு மனநிறைவு இன்மை!  இயக்குனர் நல்ல கதை சொல்லியாக இன்னும் உருவாகவில்லையோ?

30 Jul 2011

பெண்களுக்கு மன அழுத்தம்!


உலகில் மன அழுத்தத்தால்  அதிகம் துண்புறும் பெண்கள் கொண்ட நாடு இந்தியா என்பது சற்று வருத்தம் தரும் தகவலாகவே உள்ளது.   பெருவாரியான பெண்கள்; வேலைக்கு செல்லும் நாடான அமெரிக்காவில்,   53% பெண்கள் மனழுத்த நோயால் பாதிக்கப்படும் போது;   பெண்ணை தேவி என்றும்,  தாயென்றும்  பூஜிக்கும் இந்தியாவில் 87% பெண்கள் மன அழுத்த நோயால் துன்புறுகின்றனர்.     பெண்ணை  ஜனாதிபதியாகவும், பிரதமராகவும்,  மாநிலங்களில் முதல்வர்களாகவும்   கொண்ட இந்தியாவில்,  ஆணாதிக்க சமூக சூழல், அரசியல், வீட்டு சூழல் என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதிக்கப் படும் பெண்களின் மனநிலையும்  இந்நிலைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க இயலாத உண்மை.

சுற்றார் விருப்பத்தோடு,   தங்கள் விருப்பங்களை பேணவும் பெண்கள் முன் வரவேண்டும்.  உலகத்திற்காக வாழும்  தியாக பாத்திரமாக வெளிக்காட்டி கொண்டு மனதில் கலங்கி தவிக்கும் பெண்கள் பலர் உண்டு.   தன்னை ஒரு  தனி  நபராக,  ஏர்மையாக  வெளிப்படுத்தவும், முகமூடியற்று   தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவும் முன் வர வேண்டும்.

பல பொழுது, ஒரு பெண்ணை இன்னொரு பெண் அடிமைப்படுத்துவதில் சுகம் காணும் வக்கிர மனோபாவம் தான்    காணப்படுகின்றது.   ஒரு தோழி தன் அனுபவத்தை வருத்ததுடன் குறிப்பிட்டார்; அவர் சிரித்து  கணவரிடம் பேசுவது கூட மகளுக்கு பிடிக்காதாம்.  இன்னும் சில வீடுகளில்   அம்மா தன்னை போல் பொலிவாக உடை, நகை அணிவதை மகள்கள் ஏற்று கொள்வது இல்லை.  அம்மாக்களும் பாசம் அன்பு என்ற பெயரில் மனதில் பாரத்தை சுமந்து இந்த சூழலுக்கு அடிமையாக வாழவே துணிவார்கள்! 

இதனால்  தலைவலி போன்ற விட்டு மாறாத நோய் நிலையில் பெண்கள் உழலும் காரணவும் இது ஆகின்றது. படிக்காத பெண்களை விட படித்த பெண்களை இந்நிலைக்கு எளிதில் தள்ளப்படுகின்றனர்.


எந்த பெண்ணின் வாழ்விலும்  ஒரு வெற்றிடம் ஒரு காலையளவில் பிடிகூடுவது தவிற்க இயலாததாக உள்ளது.  வீட்டில் செல்ல மகளாக, எல்லா கவனமும் பெற்று வளர்க்கப்பட்ட பெண், திருமண வாழ்க்கையில் பிரவேசிக்கையில்; வீடு, நிலம், வாகனம் போன்று  இன்னொரு பொருளாக கருதக் கூடும்  சூழல்கள்  ஒரு சில வீடுகளில் உண்டுதான்.   ஆசையாய் கொஞ்சி மகிழ்ந்து வளர்த்த  குழந்தை கூட  கண்டு கொள்ளாத நாட்களும் எழும். காதலில் உருகி நேசித்த கணவர் கூட கண்டு கொள்ளாது  புரக்கணிக்கும் நிலையும் சந்திக்கலாம்.   இவ்வேளைகளில் பெண்கள் சண்டைக் கோழி களாக மாறி,  மேலும் மனக் குழப்பத்திற்குள் விழாது தன் மனதிற்கு  பிடித்த, ஆக்க பூர்வமான செயலில் மனதை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.  

 அந்ஒட்த ஆக்கபூர்வமான செயல்மாற்றம் என்பது   படிப்பாக இருக்கலாம் அல்லது புத்தக வாசிப்பாக இருக்கலாம், கலை சார்ந்த  செயலாக இருக்கலாம், அல்லது பூந்தோட்டம்  பராமரித்து இல்லை எனில் சமூக சேவையில் மனதை செலுத்தலாம்.  ஆனால் பலபோதும், பெண்கள் தங்கள்   சோம்பலால் ஆக்கபூர்வமான செயலை விடுத்து சீரியல் கண்டு கற்பனையில் இருப்பதும் அதில் வரும் பெண் கதா பாத்திரம் போல் கோபப்படுவது, அழுவது என தங்களை மேலும் மனச் சிதைவுக்கு ஆளாகி விடுகின்றனர்.  

பெண்கள் மூளை,  ஆண்களை விட பதின் மடங்கு சிந்தனை செயலாக்கத்தில் பன்முகத்தன்மை கொண்டது . சோம்பலில் இருந்து, ஒரு போதும் அதை ஒரு குட்டி சாத்தானின் பண்டக சாலையாக மாற்றி விடக்கூடாது!  


அடுத்தவர்களை ஒப்பிட்டு பார்த்து எப்போதும் கவலையாக இருக்கும் பெண்களின் எண்ணம் கொடியது.  சில பெண்களுக்கு,  தன் கணவர், தன் வீட்டாரை தவிர்த்து மற்று எல்லோரும் நல்லவர்களாக தெரிவார்கள் !  அடுத்தவர்கள் உடுத்தும் நகை, உடை, ஆடம்பரம் கண்டு தனக்கு இல்லை என்று நிராசையில் தவிப்பது; நேற்றைய பொழிந்த நாட்களை நினைத்து கொண்டு  இன்றைய  மகிழ்ச்சியில் வாழத்தெரியாதும் நாளைய கனவுகளுடன் வாழ்வது வழியாக மனநோய்க்கு ஆளாகின்றனர்

 மன நிறைவு நாம் வெளியில் இருந்து பெறுவது  இயலாது. அதை  நம்முள்ளில் இருந்து வெளிக்கொண்டு வர வேண்டும்.  சிலர் அடுத்தவர்களை குறைக்கூறி கொண்டே தங்கள் நிலையை மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.சில பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்தி செல்ல வலுவற்றவர்களாக இருப்பர்.  ஆனால்  அடுத்தவர்களை நோக்கி கொண்டே தன் நிலையை மறந்து  எப்போதும்  குறை கூறும் கண்ணுடன்,   எள்ளாலுடனே தங்கள் வாழ்க்கையை நகத்தி செல்கின்றனர். 


  பெண்களுக்கான பிரத்தியேக ஒரு நோய் என்பது,  தன்னை சேர்ந்தவர்களை ஆள நினைப்பது தான்.  கணவர்,  குழந்தைகள் , அவ்வீட்டு பெரியவர்கள் என தன்னை சார்ந்த உறவுகளை அதீதமாக  ஆளுமை செய்வதில் குறியாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களுடன்  வாழ்வதே சலிப்பாக உணரும் போது     எழும் பிரச்சனையால் பாதிக்கப்படுவது இவர்களுடன் வாழும் மனிதர்கள் மட்டுமல்ல  இப்பெண்களும் மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர்

   

பல பெண்கள் திருமண வாழ்க்கையை தங்கள் பிடிவாத செயல்பாடால்    தடவறையாக மாற்றி விடுகின்றனர்.    கணவரை தோழராக கருதாது , காவலாளி வேலை பார்த்தே ஓய்ந்து விடுகின்றனர். திருமண வாழ்க்கையில் சுவாரசியங்களை கெடுத்து விரைவில் முதுமையின் நிழல்களை தன்னகதாக்கி கொள்கின்றனர்.

பெண்மையின் இலக்கான மெல்லிய நுன்னுணர்வுகளை பேணாது இருப்பதும் மன உளச்சலையே கொடுக்கும்.   சிரிப்பது, எளிமையாக பேசுவது, இயல்புடன் வாழ்வது என  தன்னையும் கடந்த ஒரு உலகத்தையும் உள் வாங்க தெரிந்திருப்பது மிகவும்  அவசியம்.  சில வரட்டுத்தனமான  பெண்கள் பேசுவது கேட்டு கொண்டிருந்தால் நம் காதில் இரத்தம் வர வைத்து விடுவார்கள்.   

சில பெண்களுக்கு புறம் கூறுவது என்பது திண்பண்டம் சாப்பிடுவது மாதிரி.  தன் பார்வையிலே அவர்கள் சுற்றியுள்ள உலகை அவதானித்து கொண்டிருப்பார்கள்.  இதில் பொறுபற்ற பெண்களை விட எல்லா விடயங்களிலும் தாங்கள் பொறுப்பானவர்கள், கன்னியமானவர்கள் என்று நம்பும் பெண்கள் மிகவும் சிக்கலான மனநோயில் வாழ்கின்றனர்.

தன்  வேலைகளை நிதானமாக பகிர்ந்து செய்யவும் முன் வர வேண்டும்.  சில பெண்கள் காலை விடிந்ததில் இருந்து இரவு படுக்க போகும் மட்டும் வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.  வேலை செய்யும் சோர்வில்  கணவருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் அர்ச்சனை விழுந்து கொண்டே இருக்கும். இந்த உலகமே இவர்கள் தலையில் தூக்கி சுமப்பது போல் ஒரு நினைப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.  மனதை சாதாரணமாக வைத்து கொண்டாலே பல பிரட்சனைகளை  களைந்து விடலாம். இயல்பாக வாழ்ந்து வேட்டையாடப்படாதும், வேட்டையாடாதும் நம் வாழ்வை மகிழ்ச்சியாக சுகமாக சோர்வற்று வாழ்ந்து தீர்ப்பது ஒவ்வொரு பெண்ணின் லச்சியமாக  இருக்க வேண்டும்.  வாழ்க்கை அழகானது. பெண்கள் வாழ்க்கை இன்னும் மேன்மையானது. அர்த்தச்செறிவானது.  பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது அவர்கள் வீடுகளுக்கு மட்டுமல்ல வளர்ந்து வரும் தலைமுறைக்கும் மிகவும் அவசியமாகும்.

21 Jul 2011

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள்............................



காலையில் அவசரமாக ஒரு பயணத்திற்க்கு தயாராகி கொண்டிருக்க  எங்கள் வீட்டு நுழைவு வாயில் பக்கம் இருந்து அக்கா என்று ஒரு விளி !  எட்டி பார்த்தேன் ஒரு பெண், உண்மையிலே என் அக்கா வயதுள்ளவர் ஒரு மிதி வண்டியில் மகனின் உதவியுடன் ஒரு பெரிய கட்டு துணி பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தார்.  நானும் என்னவென்று விசாரித்து கொண்டே வாசல் பக்கம் வந்தேன். 


பெண்கள், குழந்தைகளுக்கு   இரவு உடுப்பு விற்கின்றாராம்.   துணியை வாங்கி பார்க்க ஆவல் தான். வீட்டினுள்ளில் இருந்து ‘ லொள்’ என்ற எச்சரிக்கை ஒலி எந்த நேரவும் வந்து தாக்கலாம்  என்பதால்   “ அக்கா பின்பு காணலாம்  நான் தற்போது அவசர வேலையில் உள்ளேன்” என்றேன் அவரிடம்.  அவர் வீடும், என் வீடு தள்ளி 10-15 வீடு தள்ளி இருப்பதாக அடையாளம் கூறினார்.   ‘புரிந்தது இடம்’, உங்களுடைய வீட்டில் வந்து நோக்கி கொள்கின்றேன் என்றேன்.  அவரை எதிர் வீட்டு பெண்கள் 10 மணிக்கு மறுபடியும் வர சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு கை குட்டை வாங்க கூட 8 மைல் தூரம் பயணிக்க தயங்காதவர்கள் பக்கத்து தெரு பெண்ணிடம் ஒரு பொருள் வாங்க இந்த வெட்டி பந்தா தேவை தானா? என்று மட்டும் நினைத்து கொண்டேன் .  எங்கள் தெருவில் மண் காலில் படாத அரச பரம்பரையை சேர்ந்த  பெண்கள் யாரும் இல்லை.  வெட்டியாக தொலைகாட்சி பார்த்து கொண்டு இருப்பவர்கள் தான் பலரும்.  நடைபயணம் செல்லும் போது கூட வாங்கலாம்.  இருப்பினும் பொருட்கள் விற்க வருபவர்களிடம் ஒருமேட்டிமை காட்டி கொள்வது வழியாக தங்களை பெரிய ஆட்களாக காட்டி கொள்ள தயங்குவது இல்லை இவரை போன்றவர்கள்.


என்னுடைய அனுபவம் கூட இப்படியாகத் தான் இருந்தது சுயமாக ஒரு தொழிலில் கால் ஊற்ற வேண்டும் என்று முடிவெடுத்த போது!  எங்கள் வீடு கட்டி முடித்த வேளையில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் இருந்து விடுபட்டு வெட்டியாக வீட்டிலிருந்தேன்.  வீட்டை சுற்றி போதிய இடம் இருந்ததால் வீட்டிலிருந்தே செடிகள் வளர்ப்பதுடன் விற்றும் கொஞ்சம் காசும்  பார்த்து விட ஆசை வந்தது.


உடனே ஒரு வாகனத்துடன்  நாகர்கோயிலில் ஒரு பெரிய பூந்த தோட்டதை வந்து அடைந்தோம். அது ஒரு பூந்தோட்டம் அல்ல ஏதேன் தோட்டம் என்று சொல்ல வைத்தது அதன் அழகு!  ஒவ்வொரு செடியும் அதிலுள்ள பூவும் ஒவ்வொரு நிறம், அதன் வடிவு, தன்மை என திக்கு முக்கு ஆட வைத்தது.  விலை விசாரித்த போது ஒரு செடிக்கு 10 ரூபாய் என்றால் 20 செடியாக சேர்த்து வாங்கினால் ஒரு செடிக்கு 2 ரூபாய் என்றும் அறிந்த போது எங்கள் பரம்பரை தொழிலான வியாபாரத்தில் இணைந்து ஒரு பெரும் தொழில் முனைவர் ஆகிவிடலாம் என்று ஆசை கொளுந்துவிட்டு எரிந்தது.    ஒவ்வொன்றிலும் 10-20 என்று வாங்கி வந்தேன். 




பராமரிப்பு வேலை, தண்ணீர், மின்சாரம், செம்மண், இத்தியாதி செலவு தான் ‘புலி வாலை பிடித்து விட்டேனோ’ என்று எண்ணம் கொள்ள செய்தது.   திருநெல்வேலி சுடும், கொடும் வெயில் சில செடிகளுக்கு அதன் உயிரையை பறிப்பதாக இருந்தது.  சில செடியின் தோற்றம் பூந்தோட்டத்தில் கண்ட அழகு இங்குள்ள கால-சூழலுக்கு இருந்ததாக தெரியவில்லை.   சில செடிகளுக்கு குளிர்மையான சூழலுக்கு என தென்னை ஓலையில் கூரையும்  வேண்டி வந்தது.

 செடி கொண்டு வந்த மறு நாள் காலையில் என் வீட்டிலிருந்து 5 வீடு தள்ளி இருக்கும் 'ஏரியா- தாதா' பெண் வந்து “ நீங்கள் நர்சரி ஆரம்பிப்பதை பற்றி ஒன்றும் என்னிடம் சொல்ல வில்லை, எல்லோரையும் அனுசரித்து போக கற்று கொள்ளுங்கள்” என்று  எச்சரித்து  விட்டு அவர் தயவில் செம்பரத்தியில் 2 செடி,  இட்லி பூவில்  1 செடி என்று வாங்கி விட்டு, அடுத்த மாதம் மாமாவுக்கு(கணவர்) சம்பளம் போட்டவுடன் இன்னும் செடி வாங்கி விட்டு காசு தருகின்றேன் என்று சொல்லி வைத்தார்.   விடைபெறும் முன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தாங்கும் தெய்வ்ம் போல் கரிசனையுடன் “ நான் தான் கூழ்வத்தல் விற்க என வெயிலோடு மல்லடிக்கின்றேன் உங்களுக்கு என்ன நோக்காடு இந்த வீணா போன வெயிலில் மண்ணுடன்... என்று பாச மழை பொழிந்து விட்டு இந்த செடி கொடி எல்லாம் உங்களுக்கு பெருத்த நஷ்டத்தை தான் தரவுள்ளது என்று தன் ஆசிர்வாதத்தை இட்டு சென்றார்.  பின்பு நான் அறிந்தேன் அவர் தன் நட்பு வட்டத்தில் என் செடி வியாபரத்தை தடுக்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார்  என்று!                                                                                                                                                                                                                        
                                                                                                                                                                                                       சில பெண்கள் என் தோட்டததை காண ஏதோ கண்காட்சிக்கு வருவது போல் வந்து சென்றனர்.  சும்மா நடைபயணம் வந்தேன்  என்ன செடி வைத்திருக்கின்றீர்கள் என்று பார்க்க வந்தோம் ஊட்டி ரோஜா இருந்தா தான் வேண்டும் இப்படியாக என்னிடம் இல்லாத செடியின் முகவரியை கேட்டு கடுப்பு ஏற்றி சென்றனர் .
                                                                                                                                                                                                                                                       
 சில பெண்களோ இந்த பூஞ்செடி வைத்து என்ன பலன்? மின்சாரம் தண்ணீருக்கு தன் வந்த கேடா என சமூக உணர்வோடு கேள்வி கேட்டனர்? காய்கறி, பழம் செடி இருந்தால் வாங்கி கொள்வோம் என்றனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க செவ்விழனி, மாங்கனி, நெல்லி,  நாரத்தம் போன்ற  செடிகள் வருவித்தேன்.   கேட்டவர்கள் பின்பு அந்த வழி காணவில்லை.   ஆனால் செடியை பற்றிய சாஸ்த்திரங்கள் கற்று கொண்டேன்.  செவ்விழனி கோயிலில் மட்டும் தான் வளர வேண்டுமாம்,  வீட்டில் வளர்த்தால் வீடை கட்டமண்ணாகி விடுமாம்.   எலுமிச்சை, நெல்லி , முருங்கை போன்ற செடிகள் வீட்டு முன் பக்கம் வைக்க கூடாது என்ற அறிய கேட்டேன்.  மல்லிகை பூ செடியை வேண்டவே வேண்டாம் நல்ல பாம்பு வந்து இனாமாக  சட்டையை கழற்றி போட்டு படம் பிடிக்குமாம் என பல வித கதைகள் கதைத்தனர். இன்னும் சில பெண்களுக்கு செடி பிடிக்குமாம் ஆனால் அவர்கள் கையில் மண் பட்டால் அலர்ஜி எனபதால் நான் மண்ணுடன் சாணி எல்லாம் சேர்த்து செடியை நட்டு கொடுத்து செடியை பராமரித்தும் தந்தால் வாங்கி கொள்வதாக  சொன்னார்கள்.  நொந்து நூடில்ஸ் ஆகுவது எப்படி என்பதை அனுபவத்தால் புரிந்தது.  ஆனாலும் துன்பம் வரும் போது சிங்கம் போல தனி தனியாகவா வரும்  கூட்டத்தோடு அல்லவா வந்தது.  

சில பெண்கள் வந்து தங்கள் சோகக்கதையை கதைத்தனர்; அவர்களுக்கு செடி என்றால் உயிராம் ஆனால் மண் பட்டு அவர்கள் டைல்ஸ் தரை எல்லாம் அழுக்கு ஆகுவதால் பூந்தொட்டிகள் வாங்கி தந்தால் நலமாயிருக்கும் என்றனர். எனக்கு தான் வலது கரமாக  அத்தான் உள்ளாரே; செடிகளையும் விற்க வேண்டும் என்ற நோக்கவும் இருந்தது. என்னவரையும் அழைத்து நெல்லை அருகிலுள்ள கூனியூர் போய் குட்டியானையில் (அது ஒரு சிறிய ரக லாரி) பூந்தொட்டிகள் மட்டுமல்ல குடி தண்ணீர் வைக்கும்  அழகான பானைகளும் வாங்கி வந்து வீட்டு மாடியில் அடுக்கி வைத்தேன். பூந்தொட்டி வாங்க வந்தவர்கள் துணிக்கடையில் பெண்கள் முந்தானைக்கு டிசைன் பார்ப்பதை விட காத்திரமாக உற்று நோக்கினர் அந்த மண் பூந்தொட்டிகளை!  இது ரொம்ப குண்டு, இந்த கரைப் பக்கம் இப்படி இருந்தால் இன்னும் நல்லது, இதன் வாய் கொஞ்சம் சிறிதாக இருந்திருக்கணும் என்று ஆளாளுக்கு பெண் பார்க்க வந்து விட்டு சொல்லி விட்டு செல்லுவது போல் சென்றனர்.  இன்னும் ஒரு அறிவான அம்மா வந்தார் 10 தொட்டி வாங்கினால் 3 இனாமாக தரலாம் அல்லவா என்று நச்சரித்து கேட்டு கொண்டிருந்தார்.  தொட்டி விற்றதோ இல்லையோ அது மாடியில் ஆடி மாச காற்றில் ஆட ஆட  எத்தனை தொட்டி உடைந்ததோ என்று என் இதயம் தான் நிதம் நிதம் உடைந்து கொண்டே இருந்தது.                                                      
சுகமாக பகல் நித்திரை கொண்டு நிம்மதியாக இருந்த எனக்கு இரவு உறக்கவும் கெட்டு குட்டி சுவரானது.  விடியும் முன் மாடியில் போய் பூந்தொட்டிகளின் நலம் விசாரிக்க உந்த பட்டேன்.
                                                                                                                                                                                                              சில பக்கத்து வீட்டு பெண்கள் தங்கள் ஆறுதலை தந்து விட்டு  இனாமா கொடுத்தா கூட மண் தொட்டிகள் எங்களுக்கு வேண்டாம் ‘சிமின்று தொட்டின்னா எங்கள் பேர குழந்தைகள் காலம் வரை இருக்கும்’ என்று கூறி சென்றனர்.  ஒரு நாள் அழகான இளம் பெண் கழுத்து கையில்  25 சவரன் நகையுடன் பூந்தொட்டி செடிகள்  வாங்க வந்திருந்தார். 100 ரூபாய்க்கு வாங்கிய பூந்தொட்டிக்கு பதில்  85 ரூபாய் மட்டும் தந்து விட்டு  பையன் வரும் வழியில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டான். பையனிடம் பின்பு  கொடுத்து விடுகின்றேன்  என்று கூறி சென்றார். அந்த பையனோ, என் குட்டி பையனுடன் இன்றும் வீட்டிற்க்கு  விளையாட வந்து தான் செல்கின்றான் ஆனால் பணம் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை.

 மக்களை காக்கும் உயிர் நண்பனாம் காவல் அதிகாரி  எங்கள் பகுதிக்கு; ரோந்துக்கு வருபவர் என் பூந்தோட்டத்திற்க்கு வந்தார்.  செடியை கண்டு  பூரிப்படைந்து  ஒரு விருது தான் எனக்கு வாங்கி தரவில்லை ஆனால் புகழ்ந்தார் புகழ்ந்தார்  வான எல்லைமட்டும் புகழ்ந்தார்!   அப்படியே சொன்னார், சகோதரி செடி வளர்ப்பது என்பது பணம் ஈட்டும் தொழிலாக நாம் ஒரு போதும் பார்க்க கூடாது இதில் ஒரு மன மகிழ்ச்சி ஆன்ம திருப்தி உண்டு!  காக்கி யூனிபார்முக்கு உள்ளும் இப்படி ஒரு கலை இதையமா என்று நான் நினைக்கும் முன் தன் கால்ப்படி, கைப்படி  போலிஸுகளை அழைத்து, உரமிட்டு கொழு கொழு என்று வளர்த்து வைத்த பல செடிகளை எடுத்து தன் வாகனத்திற்க்குள் வைக்க சொன்னார்.  இனாமாகவா என்று கலங்கி நிற்கையில், பையில் கைவைத்து கொண்டு எவ்வளவு தர வேண்டும் என்றார் நானும் 850 ரூபாய் என்றேன். ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு “மனைவிக்கு பூஞ்செடினா ரொம்ப பிடிக்கும்” என்று தன் மனைவிக்கு செடியால் மரியாதை செலுத்த போவதாக தெரிவித்து கொண்டு மீதம் தொகையை மறுபடி வரும் போது தருவதாக கூறி விடை பெற்று சென்றார்.  சமீபத்தில் D.I.G  ஆகி மாற்றலாகி போயுள்ளார் என்று பத்திரிக்கை செய்தி வழியாக அறிந்து கொண்டேன்.  போலிஸ் நிலையம் போய் கேட்கவும் பயம் மறுத்து விட்டது பின்பு நானே ஒரு பெட்டி கேஸ் ஆகிவிட்டால்!

அழகா, அமைதியாக என்னவரிடம் மட்டும் வம்பு தும்பு செய்து கொண்டு  நிம்மதியா தூங்கி எழுந்த எனக்கு,  சுயமாக நானும் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய போது நான் கண்ட பாதைகள் மிகவும் கொடூரமானதாக இருந்தது. செடிகள் வாங்க வரும் பெண்- ஆண் மனநிலைகள் ஒரு ஆய்வு கட்டுரைக்கு என்ற வண்ணம் தெரிந்து கொண்டேன்.
                                                                                                         ஒரு கல்லூரியை ஒரே நாளில் அழகு படுத்த வேண்டிய சூழலில் ஒரு பூந்தோட்ட அமைப்பாளர் மொத்தமாக செடிகள், பூந்தொட்டிகள் எடுத்து செல்லும் வரை என் துயர் ஓயவில்லை ! 
                                                                              பேசாது தமிழக சுய உதவுக் குழுவில் சேர்ந்திருந்தால் கூட ஒன்றுக்கு இரண்டு குழுவில் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து ஒரு பெரும் தொழில் அதிபராக ஆகியிருப்பேன்.  அத்தானின் கொஞ்சம் பணத்தை குளத்தில் போட்டு குஞ்சு பொரிக்கும் என்று காத்திருந்தது தான் மிச்சம்!!! "பச்சை தாழ்வாரம்" (Green wally) என்ற என் பூந்தோட்ட பெயர் பலகையை எங்கள் ரிக்கி நாய் குட்டிக்கு கூரையாக்கி விட்டு என் கூரைக்குள் நிம்மதியாக இருந்து இப்போது வெட்டியாக என் மந்திர பெட்டியுடன்  என் பொழுதை போக்குகின்றேன் !

11 Jul 2011

சாதாரணமானவளின் அசாதாரணமான நாள்!!!

இந்த வருடம் சாதாரணமானவளின் இந்த  நாளை அசாதாரணமாக்கி  தந்தனர்  என் முகநூல் உறவுகள் சிறப்பாக உளவியல் மன நிபுணரும் கணிணி மென் பொருள் வடிவமைப்பாளருமான பத்மன் அண்ணா!  பத்மன் அண்ணாவின் நட்பு தாமதமாக கிடைத்தாலும் ஆழமாக என் வாழ்க்கையில் பதிந்தது.                                                                                      2 நாட்களுக்கு முன்பே அத்தான் அவரின் விருப்பமான மாடலில் சுடிதார் வாங்கி தந்து விட்டார். கலர் தான் தோற்ற கட்சி திமுகவின் கொடிக்கலர் கருப்பும் சிவப்புமாக இருந்தது. ஆனால் டிசைன் அரிதானதும் அருமையாகவும்  இருந்தது. மேலும் கடந்த மாதம் சென்ற போது எனக்கு பிடித்த கலர் அவருக்கு பிடிக்கவில்லை அவருக்கு பிடித்த மாடல் எனக்கு பிடிக்க வில்லை  ஒரு மணிநேர போராட்டத்திற்க்கு பின்பு எதற்க்கு வம்பு என்று ஒரு சேலையுடன் வந்து விட்டேன்.  இந்த முறை கடைக்குள் சென்ற போதே போன முறை எடுத்து தந்த ஆள் கண்ணில் படக் கூடாது என்று நினைத்து கொண்டேன்.
பெரிய துணிக் கடைகளில் இப்போது பெரிய சோபாக்கள் கணவர்கள் உட்கார்ந்து தூங்க, குழந்தைகளுக்கு விளையாட ஒரு பகுதியும்  அமைத்து விடுகின்றனர்.  என்னவர் கூட அம்மா மஹாராணி  நான் அங்கு சென்று இருந்து கொள்கின்றேன் நீ எடுத்த பின்பு தெரிவித்தால் போதும் பணம் கொடுத்து விடுகின்றேன் என்பார்! முதலில் வரிசை வரிசையா அடுக்கி வைக்கப்  பட்டிருக்கும் துணிகளை காணும் போது எதை எடுக்க என்ற அங்கலாயிப்பு பின்பு கிட்ட நெருங்கினால் நமக்கு பிடித்த மாடல் ஒரு மாதம் உணவு செலவாக இருக்கும் அல்லது சுடிதார் தலை பக்கம் டிசைன் நன்றாக இருந்தால் கால் பக்கம்  துணி  அந்தளவு நல்லதாக இருப்பதில்லை.  இது இரண்டும் நன்றாக அமைந்து விட்டால் இடும் ஷால் சொதப்பி விடும். எல்லாம் பரவாயில்லை என்று எடுக்க சென்றால் இதன் கலர் கண்டாங்கி கலராக உள்ளது இது எனக்கு பிடிக்கவில்லை என்ற எதிர்ப்பு குரல் நம் வலது பக்கம் இருந்து வரும்!  அவர் விரும்பாது  அல்லது துணி எடுப்பிலும் அவரை நோகடிக்க வேண்டுமா என்ற நல்ல மனதில் அவர் கை காட்டும் சுடியில் இருந்து இரண்டு தள்ளி ஏதாவது ஒன்றை எடுத்து நகழ வேண்டியது தான்.



அவருக்கு பெண்டாட்டி எந்த கூட்டத்தில் நின்றாலும் தகதகவென்று மின்னி தெரிய வேண்டும் என எண்ணும் போது எனக்கோ யாரும் விரும்பாத /யாரும் எடுக்காத மாடலாக நான் தேடுவேன்; அதுவே எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது என் கணக்கு!



சமீப நாட்களாக தோழிகளுடன் சென்று ஒரு முனிவரின் முகநூல் முற்றத்தில்  சென்று பஜனை பாடுவது  வழக்கமாக இருந்தது.  முனிவரும் பெரிய மனது கொண்டு பொறுத்து வந்ததால்; பஜனை பாட்டு, பின்பு கும்மியடியாக பரிமணித்து போனது. சுவாமிஜியும் தியானத்தில் இருந்து திடீரென விழித்தவராக அவருடைய சுவரில் ஒரு பாட்டை பதிய “அன்புள்ள காதலியே ஆசையில் ஓர் கடிதம்…” இதை கேட்டவுடன் இந்த குரங்குக்கு துள்ளி விளையாட ஆசை. சுவாமிஜி கடிதம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை என்று தன் குசும்பை ஆரம்பிக்க சுவாமிஜியும்  உனக்கு அந்த அருள் வாக்கு இல்லையம்மா என்று மறுவாக்கு தர அப்போ அந்த கடிதம் எங்கு சேர்ந்தது என்று எல்லா பெண் குரங்குகளும் ஒன்று சேர்ந்து கும்மியடிக்க கலியிளகிய முனிவர் ஆசிரமம் விட்டு கடற்கரை தேடி ஓடி போய் விடும் சூழல் உருவாக்கப்பட்டது.  முனிவரின் அன்பை கருணையை வேண்டுவதால்  சுவாமிஜி அடியேனின் பிழையை பொறுங்கள் என்று காலில் மண்டியிட்டு அவருக்கு மட்டும் ஒரு ரகசிய கடிதம் பிறப்பிக்கப்பட்டது. அடியேனுக்கு நாளை பிறந்த நாள் தங்களுடைய ஆசிர்வாதத்தை மறக்காமல் தந்து விடுங்கள் என்று.  மறு நாள் விடியும் முன்பே ஆசிர்வாதம் வருகின்றதா என்று காத்திருந்தாலும் சுவாமிஜி தியானத்தில் இருந்ததால் என்னமோ இன்னும் செய்தி வந்து சேரவில்லை.  அதற்க்குள் நோர்வேயிலுள்ள என் உடன்பிறவா சகோதரர் பத்மன் அண்ணா ஆளை அனுப்பி  பந்தல் கால் நட்டு பந்திக்கு ஏற்பாடு செய்து என் பிறந்த நாளுக்கான எல்லா  ஏற்பாடும் முடக்கி விட்டுள்ள  செய்தி வந்து சேர்ந்தது.


பண்பிலே சிறந்தவர் ..
படிப்பிலே உயர்ந்தவர்..
பாசத்திலே நிறைந்தவர் ..
இலங்கைத் தமிழரை ஆராய்ந்தார் ..
எமது வாழ்க்கையால் கவரப்பட்டார்…
எங்களை தனது சகோதரராக்கினார்..
அண்ணா என்னும் வார்த்தையால் அன்பூட்டும்
எங்கள் தமிழ்நாட்டுச் சகோதரிக்கு
யோசெபின் பாபாவுக்கு (J.P .Josephine Baba)
வாழ்வு மேலும் உயர்ந்திட ..
உங்கள் நற்சேவைகள் மேலும் பெருகிட
உங்கள் குடும்ப மகிழ்ச்சி மேலும் பெருகிட
அன்பான வாழ்த்துக்கள்…
ஆரவார வாழ்த்துக்கள் ..
மகிழ்வூட்டும் வாழ்த்துக்கள் ...
வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்..


கொஞ்சம் நேரம் கொண்டு மண்டபத்திற்க்கு நண்பர்கள் வர ஆரம்பித்தனர் வருபவர்களுக்கு நன்றி வணக்கம் மகிழ்ச்சி என்று நான் கதைத்து கொண்டு இருக்கும் போதே என் சகோதரர் பத்மன் அண்ணா அவர்களுக்கு காப்பி, ஜூஸ், கேக் என பரிமாறி கொண்டிருந்தார்.  சுவாமிஜியும் தன் ஆசிர்வாதத்தை இப்படியாக “அண்ணா என்ற சொல்லைத் தன் மூச்சிற்குள் செருகிவைத்திருக்கும் பாபாவின் வழிப்போக்கருள் நானும் ஒருவன். உலகப்பந்தின் பல புள்ளிகளில் இருக்கும் நட்புக்களுக்குள் இவர் ஒரு பெரிய புள்ளி. அதனால் இவரை அடிக்கடி காண்கின்றேன். வாழ்க வளமுடன்” பதிந்து விட்டார் சிஷியைக்கு மனம் பேரானந்தம் ஆகி விட்டது.



கருத்துக்கு மறுகருத்து விருப்பத்திற்க்கு நன்றி என அந்த நாள் சூடு பிடித்தது.  மாயப் பெட்டியுடனே முழு நேரவும் போயன! அக்காள் விம் சிவ் அவர்கள் அம்பாள் ஆலயம் முழுநாள்  பூசைக்கு திறந்துள்ளது என தன் பங்கு கருத்தை பகிர்ந்து குடும்பமாக வாழ்த்து அனுப்பியிருந்தார். எதிர்பாராத நட்பு வட்டங்கள் வந்தது ஆச்சரியவும் மகிழ்ச்சியுமாக இருந்தது. அதில் ரஞ்சனி ராஜா,  ரஞ்சனி ஸ்ரீ போன்றோர் அடங்குவர்!  தோழி ரஞ்சனி ஸ்ரீயை பல பொழுதும் நான் செல்லும் முற்றங்களில் சந்தித்தாலும் சிறு புன் சிரிப்புடன் விலகி கொண்டோம்  அவரிடம் இருந்த வாழ்த்து பெற்ற போதுதான்  என் பார்வை அவர் மேல் இருந்தது போல் அவரும் என்னை உற்று நோக்கியுள்ளார் என்று புரிந்து கொண்டேன்.



பெரும் மதிப்பிற்க்குரிய விம் சிவ் அக்கா, தோழி பிரமிளா சுகுமார், சந்திரவதனா அக்காள், என் ஆராய்ச்சிக்கு உதவிய தோழி  கானடாவில் இருந்து வந்துள்ள தமிழ்நதி அவர்கள், தமிழக தோழியும் அக்காவுமான ரேவதி போன்ற அக்கா தோழிகள் விருந்துக்கு வந்தது  இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


என் பாசத்திற்க்கும் நேசத்திற்க்கும் உரிய சகோதரர் பத்மன் அண்ணா, தன் எல்லா வேலைக்கும்  விடுப்பு கொடுத்து விருந்தின் எல்லா நடைவடிக்கையிலும் முழுவீச்சில் ஏற்பட்டிருந்தார்.




வாழ்க்கை போராட்டத்தில் வழி தெரியாது தவித்து நின்று அழுது கொண்டிருந்த போது, என்  கண்ணீரை துடைத்து விட்டு தன் அனுபவம் என்ற விளக்கை  தந்து வழி காட்டிய சஞ்சயன் அண்ணா மீன் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருந்ததால் விருந்துக்கு வராவிட்டாலும் அவர் வீட்டு சன்னல் பக்கம் இருந்தே ‘ஹாய் செல்லம்’ என்று கைகாட்டி அருள் பொழிந்ததும் மகிழ்ச்சியே!





மதியம் சாப்பாடை கையில் எடுத்த  வேளையில் பிரான்சில் இருந்து நண்பர் “தேவாதாசன் அவர்கள் 10 மணிக்கு(பிரான்ஸ் நேரம்) அவசர வேலையாக வெளியில் செல்ல வேண்டியுள்ளது. உங்கள் சுவரில்  தோரணத்தை கண்ட போது வந்தேன்” என்று கதைக்க ஆரம்பிக்க ½ மணி நேரம் போனதே தெரியவில்லை. பெண்களிடம் அரசியலா என்று இளக்காரமாக எண்ணும் சூழலில் பெண்கள் இன்னும் சம உரிமை பெற வேண்டியவர்கள்.  முகநூலில் தஞ்சம் அடையாது ஆக்க பூர்வமான செயலிலும் சிந்தனை செலுத்த வேண்டும் என்று என்னை எப்போதும் நினைவுறுத்துபவர் ஆண்களில் மாணிக்கம் போன்ற என் நண்பர் தேவாதாசன் அவர்கள்.





இதனிடயில் காலை  அவசரமாக கேரளாவில் இருந்து என் உடன் பிறந்த சகோதரர் ஜாண்சன் வந்து சென்றார். அவர் மனைவியும் கிளம்பியுள்ளதாகவும் வந்து சேருவார் என்றும் சொல்லி விட்டு சென்றார். தங்கை  தூத்துகுடியில் இருந்து மிகவும் அவசர அவசரமாக “அக்கா பிள்ளைகளை தூங்க வைத்து வந்துள்ளேன். எனக்கு ஐஸ்சிரீம் மட்டும் போதும்” என வந்த வேகத்தில் பறந்தார்.  என்னை பெற்ற என் பெற்றோர் பல வருடங்கள் ஆகியதால் மறந்து விட்டார்களோ அல்லது இனியும் இந்த கொண்டாட்டம் தேவையோ என்று எண்ணினார்களோ தெரியவில்லை, தம்பியிடம் கதைக்கும் போது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அம்மா பின்னால் நின்று வாழ்த்துவது மட்டும் கேட்டது!





நாகர்கோயில் சேர்ந்த அரசு அதிகாரியும் வலைப்பதிவர் சந்திப்பில் கண்டுகொண்ட நல்ல நண்பர் முருகன் தங்க சிவம், தம்பி பொன் பாண்டி, என் வகுப்பு தோழனாக இருந்த பிரகாஷ், என் ஆய்வு வழியாக சந்தித்த என் முதல் ஈழ சகோதர் கானா பிரபா அவர்கள், பாசமிகு சகோதரர் டோமினிக் சாவியோ, நண்பர் கண்ணன் சங்கர லிங்கம்,  நண்பர் குமார் குரு, நண்பர் கௌதம சின்னசாமி, என் வளர்ச்சியில் என்றும் அக்கரையுள்ள ஆனால் இதுவரையிலும் முகம் காணாத நெல்லை நண்பர் முனீஷ் குமார்,  சகோதரர் குருசாமி கனகராஜ், என் நண்பர் நடா சிவா தமிழ்க்கிறுக்கன், என் பாசத்திற்குரிய நண்பரும் சகோதருமான செல்வரஞ்சன் செல்லதம்பி அவர்கள் மனைவி குழந்தைகளுடன் வந்து சென்றது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் அனுப்பி தந்த சிவகாசியின் சொந்த மகளான ஜெயா வேல் அவர்கள், பத்திரிக்கையாளர் நண்பர் கன்னியப்பன் ஜெகதீஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஜா, கூல் ஜோய் போன்றோரும் வருகை தந்தனர். விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்த பாசமிகு  தமிழக சகோரர் சி.பி. செந்தில் குமார் 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்து அனுப்பியிருந்தார்.  தமிழ்வாசி முதல் பந்திக்கு வந்து தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
 


எனக்கு அரிய புத்தகங்கள் அனுப்பி தரும் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா அவர்கள் மனைவியார்  உமா அம்மாவுடன் வந்திருந்தார்.  என் வாசிப்பை எப்போதும் உற்சாகப் படுத்தும் மாற்று கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள்  என்னை சேர உதவும் குமரகுருபரன் அண்ணாவும் தன் வாழ்த்தை தந்து சென்றனர்.  



அன்பு கவிஞ்சி தங்கைகள் கல்பனா,  சிவமேனகை பாசக்கார தங்கை அனு, தம்பி வலைப்பதிவர் ஜெயந்து, எங்கள் துறை மாணவர் தம்பி ராம் குமார் சகோதரர் முத்து குமார், நண்பர் பேராசிரியர் சக்தி வேல் அவர்கள், நண்பர் வந்திய தேவன் சோமசுந்தரம், பத்திரிக்கையாளர் ஐயா குமரேசன் ஆசாக் அவர்கள், தோழி கிருபா, சென்னை நண்பர் சூரிய சுரேஷ் , தமிழ்க திரைப்பட பாடல் காதலர் பவல் ராஜதுரை, கார்த்திகேயன் சரவணன், நபர் செம்மலர் செல்வன், கண்ணன் சுந்தரலிங்கம், சுரேஷ் நைட்ச்கை, பfஹாட் இப்ராஹிம், சென்னை சுரேஷ் , இலங்கையை சேர்ந்த பத்திரிக்கையாளரும் என் ஆய்வுக்கு உதவிய என் இனிய சகோதரர் எம் ரிஷான் ஷாரிfபின் வரவும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 



சகோதரர் ஸ்ரீதரன் கனகலிங்கம், சௌதியில் இருந்து அந்தோனி சேகர், மதுரை சிதம்பரம் காசிவிஸ்வநாதன் ஐயா, நெல்லையை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் எல்.வி பாலாஜி, நண்பர் பரணீதரன், நண்பர் சிங்கப்பூர் ராஜன், என் சொந்த தேசத்தில் இருந்து தற்போது டில்லியில் பத்திரிக்கையாளராக உள்ள பால் முருகன் அவர்கள் மலையாளத்தில் வாழ்த்து அனுப்பினார். மந்திரியின் அதிகாரி செல்வகுமார், சௌந்தர் பாண்டியன், தூத்துகுடி நண்பர் சாந்தகுமார், பிசாசு குட்டி, என் எழுத்தை எப்போதும் ஊக்கப் படுத்தும் நண்பர் ஜோசப் பொன்னுதுரை அவர்கள், புன்னகை அரசி சித்திரா சாலமன், என் நெடு நாளைய நண்பரும் நெல்லையின் மகனுமான ராம்ஜி யாஹூ அவர்கள் யாவரும் வந்து சென்றது வாழ்க்கையில் மறக்க இயலாத நெகிழ்ச்சியான சம்பவமாகின!




பத்மன் அண்ணா தோட்டம் வழியாக வந்த சகோதரர் பெண்களை மதிக்கும் சந்திரன் தர்மதேவி, தோழி வனஜா வேலாயுதம் பிள்ளை, ஐயா சுந்தர குமார் கனகசுந்தரம், மீரான் மொஹதீன், மாடசாமி சன்முகசாமி, நெல்லையை சேர்ந்த மலேசியாவில் வசிக்கும் என் சகோதரர் செந்தில் சுப்பு, மனோகரா மனோகர், நண்பர் ரவிசங்கர், பாடகர் ஹரிஹரனின் விசறி நண்பர் நாகா சிவா, ரஜி ரமா, நாகரத்தினம் போன்ற என் உயிரிலும் பெரும் உறவுகளான என் நண்பர்கள் வந்து சென்றனர்.


என் எழுத்தை எப்போதும்  உற்சாகப் படுத்துத்தும் இலங்கையின் பிரபல பதிவராம் பெரும் பாசத்திற்குரிய டொக்டர் சாப் M.K முருகானந்தம் அவர்கள்  என்னுடன் என்னவர் தன் மைத்துனரையும் வாழ்த்தி சென்றது மறக்க இயலாத மகிழ்வூட்டும் இன்பமகிழ்ச்சி!




ஜெயகுலராசா அவர் தோட்டத்திலுள்ள அழகிய பன்னீர் பூக்கள் அனுப்பினார். ஆசிரியர் சோ லிங்கம், நெல்லை வலைப்பதிவர் சங்கம் தலைவர் சங்கரலிங்கம் ராஜகோபால், என் பாசமிகு சகோதரர் என் ஆன்மீய வாழ்க்கையில் அக்கரையுள்ள சகோதரர் ஜெர்மெனியில் இருந்து தாவாவிஜய் அண்ணன், என் சமையல் குருவும் உலகின் பல முகங்களை பற்றி கதைக்கும்  தோழருமான பாடல் குறும்தட்டு அனுப்பி மகிழ்வித்த இங்கிலாந்திலுள்ள அன்பு நண்பர் பேட்ரிக் ஜூலியாஸ், மலேஷியாவில் இருந்து கேக்கு அனுப்பி மகிழ்வித்த தோழி ஜெயா நல்லப்பன், கவிஞர் ஐய்யப்ப மாதவன், நாகர்கோயில் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சிவராஜ மோகன், நண்பர் பத்திரிக்கையாளரும் உயர்நீதி மற்றம் வழக்கறிஞ்சருமான  சுந்தரராஜன், மலையாள கரயோர குமுதம் பத்திரிக்கையாளர் சிந்து




நல்ல நாளுமாக என் பேராசிரியர் முனைவர் கோவிந்த ராஜு அவர்கள் வீட்டுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்க சென்றிருந்தேன். அவர் அன்பு மனைவி கையால் இனிப்பு தேனீர் கிடைத்தது பாக்கியமாக இருந்தது.  கைகடிகாரம் பார்த்தால் 7.45 pm. ஆகா 8 மணிக்கு சுவிசில் இருந்து ஸ்ரீஅண்ணா 8 மணிக்கு வரவுள்ளாரே என்று பைக்கில் பறந்து வந்து வீடு சேர்ந்தோம். கடிகாரம் முள் தப்பலாம் நான் வாக்கு பாலிப்பவர் என்று அண்ணா 8.04 pm க்கு  காத்திரமாக வந்திருந்தார். "இவர் தான் மனித மனங்களின் உணர்வுகள் பற்றிய "ஆத்மலயம்" என்று நூலின் ஆசிரியர் Srikandarajah கங்கைமகன். என் மனதின் தோழனான ஆசானான  அண்ணாவின் கரிசனையான பாசமான அமைதியான இனிமையான வாழ்த்துக்கள் எனக்கு மட்டுமல்ல என் குழந்தைகள் அத்தானுக்கும் கிடைத்து.



மதிய உணவுடன் விருந்தை முடித்து கொள்ளலாம் என்று இருக்கும் தருவாயில் இனியும் நண்பர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வர இரவு டின்னரும் தயார் படுத்தி காத்திருந்தோம்.  ஜமுனாநதி நாகரத்தினம், ராணி  போன்ற தோழிகள் காலை 2.30 க்கு வந்திறங்கியவர்கள்  நடு நிசி 12மணி ஆகி விட்டது அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப. அவரை எங்கள் வீட்டில் தங்கி விட்டு செல்ல கூறினேன். அவர் குழந்தையை வீட்டில் விட்டு வந்து விட்டார் என்று விடைபெற்று சென்றுவிட்டார்!. 



பத்மன் அண்ணா, “போதும் அம்மா  விருந்து கொண்டாட்டங்கள் இனி நித்திரக்கு செல்லுங்கள் என உரிமையுடன் கொஞ்சம் கண்டிப்புடனே நினைவுப்படுத்தினார்”. பாசமிகு அண்ணா இன்றைய உதயம் முதல் உங்கள் தங்கையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கென நேரம், பொருள்,ஆவியும், செலவிட்டு பந்தியும் பரிமாறி விருந்துனர்களையும் வழி அனுப்பு மட்டும் என்னுடன் இவ்வளவும் நின்று நிகழ்ச்சிகளை சீறும் சிறப்புமாக நடத்திய என் பாசமிகு அண்ணா உங்களை வணங்குகின்றேன்.  அண்ணனின் அன்புக்கு அடுத்த ஜென்மத்திலாவது தங்கையாக பிறந்து கைமாறு செய்ய இயலும் என்றாக இருப்பினும் அவருக்காக ஒரு பாட்டு பாடி  தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே…………….!! http://www.youtube.com/watch?v=fsKk0g9P32Qபாடி நின்றேன்.





அம்மா தான் நான் சிறு குழந்தையாக இருக்கும் போது சொல்வார்கள் உன் உள்ளம் காலில் ஒரு மச்சம் உண்டு உலகு எல்லாம் சுற்றி வருவாய் என்று இந்த பிறந்த தினத்தில் உலகில் மிக முக்கிய நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தேன் என் உடன்பிறவா சகோதரர்கள் என் அன்பு நெஞ்சங்கள் நண்பர்கள் தோழிகள், சகோதர்கள் எல்லோரையும் கண்டு வர.    நானும் இன்றய பயணக்களைப்பு, ஆடல் பாடல் கொண்டாட்டங்களால் வந்த அசதியில்  கண் மூடும் முன்பே தூங்கி விட்டேன். என் அன்பு பாச நெஞ்சங்களை என் கனவிலும் நினைவிலும் நீங்கள் மட்டுமே!