27 May 2020

திரைப்படம் Escape from Sobibor


போலந்தில் இருந்து யூதர்களை சோபிபோர் என்ற இடத்திற்கு கொண்டு வருவதுடன் திரைப்படம் Escape from Sobibor ஆரம்பிக்கிறது. 1987 ல் வெளிவந்த திரைப்படம்.
குடும்பம் குடும்பமாக வந்திறங்கிய யூதர்களில் இருந்து தொழில் தெரிந்த திறமையான (சிறுவர்களையும் முதியவர்களையும் தவிர்த்து) நல்ல வேலை செய்ய திராணியுள்ள பெண்களும் ஆண்களுமாக 600 பேரை தேர்ந்தெடுத்து நாசிகளின் வதைமுகாமில் அடைத்து வேலை வாங்குகின்றனர்.
மீதமுள்ள குழந்தைகள், பெண்கள் முதியவர்களை கொன்று எரிப்பதை தூரத்தில் இருக்கும் தங்கள் முகாமில் இருந்து பார்த்து நொறுங்குகின்றனர். இந்த வதை முகாமில் ( Auschwitz-Birkenau and Treblinka ) மட்டுமே 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
அப்படியான கொடும் வதை முகாமில் இருந்து ஒரு முறை 2 பேர் தப்பித்து செல்கின்றனர். பிடிபட்ட 13 பேரை உன்னுடன் ஜோடியாக சாவதற்கு ஆட்களை நீயாகவே தேர்ந்து கொள் என கொடுமையான நாசி அதிகாரி கட்டளை இடுவான். வேறு வழியற்று அவர்கள் தங்களுக்குள்ளே தேர்ந்தெடுத்து 26 பேர் கொல்லப்படுவார்கள். இந்த நிகழ்வு அவர்களுக்குள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லியோன் தலைமையில் தப்பித்து போக ஆலோசித்து கொண்டிருப்பார்கள். அந்த காலயளவில் ரஷியாவில் இருந்து யூதர்களை கொண்டு வந்திருப்பார்கள். அந்த கூட்டத்தில் இருந்த சாஷி என்ற ராணுவ வீரனின் வழிகாட்டுதலில் 11 நாசி அதிகாரிகளை கொலை செய்து விட்டு 600 பேர் தப்பிக்க முயன்று 300 பேர் தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைவார்கள்.
இந்த திரைப்படம் ஜாக் கோல்டால் இயக்கப்பட்டது. படம்பிடிப்பு யுகோஸ்லாவியாவில் அவலாவில் நடந்துள்ளது. ரிச்சார்டு றாஷ்கீயின் புத்தகத்தை(Richard Rashke's 1983) ஆதாரமாக கொண்டு இதன் திரைக்கதை ரெஜினாட்டு ரோஸால் எழுதப்பட்டது.
இந்தப்படத்தில் சிறந்த நடிப்பிற்கு என க்ளோபன் கோல்டு விருது Hauer க்கு கிடைத்துள்ளது. இந்த வதை முகாமில் இருந்து தப்பித்த Esther Raab இக்கதை வடிவமைப்பிற்கு பெரிதும் உதவியுள்ளார்.
தப்பித்த வரலாறு முதலும் கடைசியுமாக இருந்ததால் ஜெர்மென் அதிகாரிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தலைமை அதிகாரியாக இருந்த Heinrich Himmler கட்டளைப்படி வதை முகாமை உடைத்து தறைமட்டமாக்கி, மண்ணிட்டு மூடி அதன் மேல் மரங்களை நட்டு வளர்த்தி, கைதிகள் தப்பித்து போன நிகழ்வை மறக்க முயன்றனர் ஜெர்மன் அதிகாரிகள்.
இந்த வதை முகாமில் தான் மிகவும் கொடூர குணம் கொண்ட சென்னாய் என்று அழைக்கப்பட்ட Wagner பணியாற்றி வந்துள்ளான்.போருக்கு பின்னால் வாக்னர் ஆயுள் தண்டனை பெறப்பட்டாலும், பெல்ஜியம் தப்பித்து போய் ஒரு பணக்காரர்கள் வீட்டில் வேலைக்காரனாகவும் , பின்பு பைத்தியக்காரனாகவும் தலைமறைவாக தெருவில் வாழ்ந்து வந்த இவன் தனது 60 வது வயதில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் உண்டு.
இந்த படத்தின் தேவையும் முக்கியவும் யூத மக்களின் ஆக்கபூர்வமான நம்பிக்கையான மனநிலையாகும்.
மரணத்தின் பிடியிலும் உழைப்பாளிகளாக சிந்தனை தெளிவுள்ளவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் ஒற்றுமையை பேணும் படி இருப்பார்கள். தங்களுக்குள்ளான மகிழ்ச்சிக்கும் பாடலுக்கும் நடனத்திற்கும் இடம் கொடுத்திருப்பார்கள்.
ஒருவருடைய மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட்டு விடுவார்கள். தான் தப்பிப்பதே எதிராளிக்கு செய்யும் பகைமீட்டல் எனக்கூறி தங்கள் உயிரை தற்காத்து கொள்ள தன் குடும்பம் குழந்தைகள் கணவரை இழந்த பெண் நம்பிக்கை கொடுத்து உணவை உண்ண நிர்பந்திப்பாள்.
ஒரு இடத்தில் தானே தன்னுடன் கொல்லப்பட ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழல் வரும். முதலில் மறுப்பார்கள். மரணத்தின் பிடியில் கூட அடுத்த குடும்பங்களை ஈடாக்காது தங்கள் குடும்பத்தினரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு முக்கிய பெண் பாத்திரம். தப்பிக்கும் திட்டத்தில் சாஷிக்கு காதலியாக நடிக்க வேண்டும். உண்மையாகவே காதலில் ஆட்பட்டு விடுவார். ஆனால் சாஷியோ தனக்கு மனைவி, மகள் உண்டு எனக்கூறி அக்காதலை ஏற்க இயலாதவராக இருப்பார்.
அப்பெண் அவருக்கு பரிசளித்த சட்டை தற்போதும் வதைமுகாம் நினைவாக ம்யூசியத்தில் உண்டாம்.
வதை முகாமிலுள்ள தையல் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண் தன் கைக்குழந்தையை காப்பாற்ற பெரும்பாடு படுவார். அக்குழந்தையும் தாயும் கண்டுபிடிக்கப்பட்டு வாகனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
வதைமுகாம் கைதிகள தப்பிக்க தலைமை தாங்கிய லியோன் பெஃட்ஹென்லெரின் சாதுரியம் இப்படத்தில் லியோனாக நடித்த நடிகர் அலனின் நடிப்பும் இயல்பானது.
அலன் தப்பித்து போலண்டு சென்று, மறைவு வாழ்க்கையின் போது இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு முன்பே தன் நாட்டு எதிர் அரசியல்வாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தி துயரை தருகிறது.
இப்படியாக பெற்றோரை இழந்து காதலர்களை இழந்து தன் குழந்தை, குடும்பம் மனைவியை இழந்த துயர்களை சந்தித்து மீளாத்துயரிலும் மீண்டு எழுந்த யூதர்களை நினைத்து பார்ப்பது நமது வாழ்க்கைக்கும் அர்த்தம் தருவதே.
படத்தின் சிறப்பே அதை எடுத்த விதம் தான். இயல்பு மாறாது இரண்டாம் உலகப்போர் வதைமுகாமுக்குள் நம்மை சென்று விட்டனர். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். சிறப்பாக, போர் மேல் தீராத மோகம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். பல அறன்களை போதிக்கும் படவும் கூட.
https://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGIhttps://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGI



ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா

தமிழகத்தில் கடைசியாக பட்டம் கட்டப்பட்டு 21 நூற்றாண்டில் வாழ்ந்து வந்த கடைசி ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா இன்று காலம் சென்றார்.
முதலாமது பட்டம் கட்டப்பட்டவர் ஆபோதாரணத்தேவர், 31 ஆவது பட்டம் திருமிகு டி என் எஸ் முருகதாஸ் தீர்த்தபதிக்கு அருளப்பட்டது. சங்கர தீர்த்தபதி மகாராஜா, இராணி வள்ளிமயில் நாச்சியாருக்கும் மகனாய் 29-09-31 ல் பிறந்தார்.
இவருடைய தந்தையை சிறுவயதில் இழந்ததால் ஆங்கிலேய அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சிறுவர் காப்பாளர் நீதிமன்றத்தின் பராமரிப்பில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பு பாளையம்கோட்டை புனித இன்னாசியார் பள்ளியிலும், உயர் கல்வி சேலம் ஏற்காடு மான்பாட் பள்ளியிலும், மேற்படிப்பு இலங்கை கண்டியிலுள்ள டிரினிட்டி கல்லூரியிலும் முடித்துள்ளார்.
கி. பி1100 வருடங்களுக்கு பின்பு ஆயிரம் வருடம் குறுநில மன்னர்களாகவும், (சிற்றரசர்களாக), பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் வாழ்ந்து வந்தவர்கள் சிங்கம்பட்டி ஜமீன்கள்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சியை வீழ்த்திய நாகநாயக்கர்கள், நிலத்தை 72 பாளையங்களாக பிரித்தனர். அதில் ஒன்று தான் சிங்கம்பட்டி ஜமீன்.
இவர்கள் வீரபராக்கிரமங்களை கண்ட மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தென்னாட்டு புலி என பட்டம் சூட்டி மகிழ்ந்தார். சேரநாட்டு மார்த்தாண்ட வர்மாவிற்கு ஆட்சியை பிடிக்க உதவி புரிந்ததால் சிங்கம்பட்டியாரின் மகன் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்தால் நன்றி கடனாக சேரநாட்டு உமையம்மை ராணி கொடுத்த பட்டம் தான் 'நல்ல குட்டி'.
சேரநாட்டு மன்னர் எங்களுக்காக உங்கள் இளவரசர் வீரமரணம் அடைந்து விட்டார். ஒரு காட்டை தருகிறேன் என்று மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியும், 5 கிராமங்களும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளடங்கிய 8 கோயில்கள், 5000 ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் அடங்கிய பகுதியும் கொடுத்துள்ளார்.
ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை சிங்ஙம்பட்டி ஜமீன் இதை அனுபவித்து வந்துள்ளது. இவர்களுக்கு கிடைத்த 80 ஏக்கர் நிலப்பரப்பில் தாமிரபரணி நதி, துணை நதிகளான மணிமுத்தாறு, பச்சையாறு, பாணதீர்த்தம் கல்யாணதீர்த்தம் அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்றவைக்கு அதிபதியான சிங்கம்பட்டி ஜமீனை தீர்த்தபதி என்றும் அழைத்து வந்தனர்.
30 வது ஜமீன் திருமிகு சங்கர சிவ சுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா; சென்னையில் கல்வி கற்கும் வேளையில் ஒரு கொலைக்குற்றத்தில் மாட்டுப்பட்டார். இந்த வழக்கில் ஏற்பட்ட பணவிரயம் ஜமீனை ஆடச்செய்தது . 8000 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடேஸ் கம்பனிக்கு குத்தகைக்கு கொடுத்தனர் அதுவே மாஞ்சோலை எஸ்டேட்.
குத்தகை காலம் முடிந்தாலும் ஆங்கிலேய அரசிற்கு கட்ட பணம் இல்லாததால் எஸ்டேட்டை ஆங்கிலேயர்களிடம் கொடுத்து விட்டார், தற்போது காலம் சென்ற ஜமீன்தார்.
இவர் 50 ஆண்டு காலமாக ஆன்மீக பணியில் இருந்தவர். எல்லா மக்களோடும் அன்பாகவும் கருணையோடும் பழகத் தெரிந்தவர்.
இவருக்கு தென்பொதிகை சித்தர், இந்து ஆலய பாதுகாவலர், சிவஞானச் சித்தர், சித்தாந்த சிகாமணி, சித்தாந்த சிந்தாமணி, மூதறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
முகவை மன்னரும், தாய் மாமாவுமான அப்போதைய காமராசர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து திரு சண்முக இராஜேஸ்வர சேதுபதியின் மகள் இராணி சேதுபர்வதவர்த்தினி இவர் மனைவி ஆவார். இரு ஆண் 3 பெண் பிள்ளைகள்.
எளிமையின் உருவாக வாழ்நது வந்த மன்னர் மக்களின் நேசத்திற்கு உரியவராக 'வாழும் சித்தர்' என அறியப்பட்டு இருந்தார். தமிழும் சைவவும் இரு கண்களாக இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் மிகவும் சரளமாக கதைப்பார்.
ஒரு முறை, திருநெல்வேலி புகைப்பட குழுமம்
Nellai Weekend
தலைமையில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர்களுடன் சிங்கம்பட்டி அரண்மனையின் ராஜாவை சந்தித்திருந்தோம்.
எங்களின் ஆவலான பல கேள்விகளுக்கு, சிலரின் ஆர்வக்கோளாறான கேள்விகளுக்கு கூட பொறுமையாக பதிலளித்தார்.
அதில் ஒரு கேள்வி இப்போது நினைவில் உண்டு. எதனால் மன்னராட்சி வீட்சியடைந்தது எனக்கேட்ட போது பெண்களுககு செய்த தீங்கிற்கும் துரோகங்களுக்கும் என பதிலளித்தார். எங்களுக்கு பிஸ்கட் காப்பி வழங்கினார்.
அடுத்த முறை சொறிமுத்து ஐய்யனார் கோயிலுக்கு மாணவர்களுடன் சென்ற போது தன் தனிச்செயலரை அனுப்பி எங்களுக்கான எல்லா வசதிகளையும் வழங்கினார்.
12 புத்தக ஆசிரியர்களில் ஒருவரான என்னுடைய இரண்டாவது புத்தகத்தையும் வெளியிட்டது, ஜமீன் என்பது எனக்கு பெருமை.
கண்ணில் குடிகொள்ளும் நேசவும், கருணையும், நடவடிக்கையில் உள்ள எளிமையும் மேன்மையும் நினைவில் உள்ளது.
தன்னுடைய வாழ்நாளில் மன்னராகவும் பின்பு ஜமீனாகவும், பின்பு அதையும் இழந்து சாதாரண பிரஜையாகவும், ஆனால் மக்கள் மனதில் எப்போதும் மன்னராக வாழ்ந்து மறைந்த ராஜாவிற்கு வணக்கங்களும் அஞ்சலிகளும்.
Photo courtesy: Nellai weekend clickers members,
Madhan Sundhar
,
Muthu Kumar
,
Monsoon Monk
,
Bless Boss
Naren K Narendran, Madhan Sundhar and 130 others
25 comments
37 shares
Like
Comment
Share

13 May 2020

'இரண்டு போப்கள்'- The Two Popes

உண்மை சம்பவங்களை பின்புலனாக எடுக்கப்பட்ட திரைப்படம் 'இரண்டு போப்புகள்' ( The Two Popes)எனச் சொல்லப்பட்டது.  சபை மேலுள்ள மக்கள் நம்பிக்கை, இரு மனிதர்களின் முரண்களையும் மீறிய நட்பு, சபைத் தலைமையின் அதிகாரம் இப்படியாக மூன்று அடுக்கு கதையை கொண்டது இத்திரைப்படம்.

 

போப் பெனடிக்ட் ஜெர்மனியை சேர்ந்தவர், ஆழமான அறிவாற்றல் உள்ளவர், பேராசிரியர். பாரப்மபரிய கலாச்சார கருத்தக்களால் ஆளப்பட்டவர்.  அர்ஜென்றீனா கர்தினலான( பிஷப்பிற்கும் மேலுள்ள அதிகார நிலை) பிரான்ஸ்,   போப் பெனடிக்டை சந்திக்க வந்திருக்கிறார்.  அவர் ஒரு யேசு துறவியும் கூட.  அவர் போப்பை சந்திக்க வந்திருப்பதின் காரணம் தனக்கு கர்தினால் பதவி வேண்டாம், தன்னை ஒரு சாதாரண பாதிரியாராக பணியாற்ற அனுமதி தர வேண்டும் என்பதே.இருவரும் வெவ்வேறு கருத்தாக்கம் கொண்டோர் iருந்தாலும்  தங்களால் ஏற்று கொள்ள இயலாததையும்,  தங்களுடைய புரிந்துணர்வால் மதித்து புரிந்து கொள்கிறார்கள்.  இரு வித்தியாச ஆளுமைகளான கர்தினால் பிரான்ஸ் மற்றும்  போப் பெனடிக்டுக்கு இருவரும் தங்களுடைய கருத்தில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்..

 

அர்ஜென்டீனாவில் இருந்து வந்த கர்தினால் பிரான்சிசுக்கு கிறிஸ்தவ நெறிகள் அனுமதிக்காத ஓரினச்சேர்க்கை , பாதிரிகள் திருமணம் , கடவுள் பற்றிய கருத்தாக்கத்தில்   என தன் அனுபவம் சார்ந்த சுதந்திரமான பல கருத்துகள் வைத்துள்ளார், இத்துடன் கிறிஸ்தவத்தின் அடிப்படையான விவிலிய கருத்துக்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக  இருக்கிறார். இருவருடைய நீண்ட உரையாடல்கள், படமாக்கியிருக்கும் விதம், பார்ப்பவர்களை விரசப்படுத்தாது அறிவான தளத்திற்கு நகத்தியிருக்கிறது.
 
கர்தினலாக இருக்க விரும்பவில்லை என்றவரை, போப்பாக இருக்க கேட்டு கொள்வார் பழைய போப் பெனடிக்ட். கத்தோலிக்க கிறிஸ்தவம் வழக்கப்படி, நம்பிக்கைப்படி போப் என்பவர் பீட்டரின் மறுபதிப்பு. சபையின் அதிகாரம் என்பது உலகின் வல்லரசுகக்களையும் தாக்கம் கொடுப்பது . தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு,  அந்த அதிகாரம் தனக்கு வேண்டாம் பதவி துறக்கிறேன் ஒன்று முடிவெடுக்கிறார் போப் பெனடிக்ட்.
பொதுவாக சபையின் சட்டப்படி போப்பாக இருப்பாவர் தானாக  பதவி துறப்பது சாத்தியமானது அல்ல.   இருந்தாலும்  பதவியே துறக்க முடிவு எடுத்திருந்திருப்பார்.  இது போன்று உயிருடன் இருக்கையில் தன்னுடைய பதவியை துறந்த நிகழ்வு  700 வருடங்களுக்கு முன்பு நடந்தது.
அர்ஜன்றீனா கர்தினால் பிரான்சிஸ் பதவி ஏற்பதற்கு மிகவும் தயங்குவார்.  தன்னுடைய அரசியல் தன்னுடைய நிலைபாடு, அர்ஜன்றீனாவின் போராட்ட தளத்தில் தான் எடுத்த தந்திரமான முடிவுகள்,  இவைக்கும் மத்தியில் தனக்கு போப் ஆகும் தகுதி உண்டா என அச்சப்படுவார . பாவ மன்னிப்பு வழி இருவரும் தங்களின் மறுபக்கத்தை பற்றி நேர்மையாக விவாதித்துக் கொள்வது மிகவும் சுவாரசியம், மட்டுமால்ல ரசிக்க தகுந்ததாகவும் இருந்தது.             ” தகுதியற்ற இடத்தில் கடவுள் தன் தகுதியை அருளுவார்” எனக்கூறிய போப் பெனடிக்ட், கர்தினால் பிரான்சிஸுக்கு  போப்பாக பதவி பிரமாணம் செய்து வைப்பதுடன் கதை முடிகிறது.

 

அந்தோணி ஹோப்கின் மற்றும் ஜோனாத்தன் ப்ரைஸ் நடிப்பு அபாரம். இரு போப்பை பார்த்து கொண்டு இருந்தது போலவே இருந்தது.  இயக்கியவர் பெர்னான்டோ ( Fernando Meirelles) காட்சி மொழியை அழகியலுடன் தந்திருப்பது அருமை.   திரைக்கதை அந்தோணி மாக்கார்டென் (Anthony McCarten) , "The Pope" என்ற புத்தகத்தில் இருந்து திரைக்கதைக்கான கருவை உருவாக்கியுள்ளார்.

 
வத்திக்கான் லீக்ஸ் , என சபையில் நடந்த எல்லா நல்ல, கெட்ட பக்கங்களையும் விவாதிப்பார்கள்.  இது போன்ற படங்களை ஏற்கும் மனப் பக்குவம் கத்தோலிக்க சபைக்கும் உள்ளது என்பதையும் பாராட்ட வேண்டும். பெண்கள்( பெண் துறவிகள்) வெறும் சமையல் காப்பி /தேத்தண்ணீர் பகிரும்  சேவகர்களாக உள்ளனர். ஆனால் அதிகாரக் கதிரையில் ஒரு பெண் கூட இல்லாது இருப்பது மிகவும் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளது.
 
ஆனால் திரைப்படத்திற்காக திணிக்கப்பட்ட பல பொய்மைகளும், பொய்களை அழுத்தி கூறி உண்மையாக மாற்றிய விதவும் அறிவோம்..
அந்த பிரதான பொய்மைகளை பார்ப்போம்.
 

1. போப் பெனடிக்ட் சிரிக்க மாட்டார்,தனியாகவே இருந்து உணவு அருந்துவார், ஒரு ஹக்( hug) கூட ஏற்க இயலாத அளவிற்கு பழமைவாதி.  தன்முகத்தன்மை ( introvert) கொண்டவர், லத்தீன் மொழியை மட்டுமே விரும்புகிறவர் , கோபக்காரர் நடனம் ஆட தெரியாதவர்.

 

உண்மையில் தூய பீட்டர் அரங்கில் தற்போதைய போப் பிரின்சிஸை விட அதிகம் மக்களை சந்தித்தவர் போப் பெனடிக்ட்.  பல மொழி விற்பன்னர், இசைக்கருவி மீட்டுவதில் வல்லுனர்.

அடுத்து தான் ரிசைன் செய்ய போவதை முன் கூட்டியை தெரிவித்திருந்தார் , பிரான்சிஸை போப் ஆக அழைத்தார் என்றதும் புனைவு.  2012 ல் பிரான்ஸிஸ் தன்னுடைய பணி குறைத்தல் நிமித்தமாக ரோம் வந்திருக்கவுமில்லை, போப்பை சந்தித்திக்கவும் இல்லை.
 
Change and comprising பற்றிய உரையாடல்கள்:
பிரான்சிஸ்: சுவருகள் உடைக்கப்பட வேண்டும்

போப் பெனடிக்ட் : சுவரில்லாது எப்படி வீடு உருவாகும்

பிரான்சிஸ்: தீமையின் சுவர்கள் பாலமாக மாற வேண்டும்...

 

இதில் பிரான்ஸிஸ் போப்பை நவநாகரீக மாற்றம் காண்பவராகவும், சுதந்திர மனிதனாகவும் , தெருவு கடையில் உணவருந்தி, சோசர் விளையாட்டு பார்த்து கொண்டு இருக்கும் நவீன மனிதனாகவும் , போப்பின் சிவப்பு ஷூவை புரக்கணிக்கும் புரட்சிவாதியாகவும் பிரகடனப்படுத்துகின்றனர்.  இப்படியாக இத்திரைப்படம் போப் பிரான்ஸிஸ் பக்கசார்பாக இருப்பதாக உள்ளது திரைப்படம்.

முக்கியமாக,  பிரான்ஸிஸ் போப்புக்கு இளம் பாதிரியாராக இருக்கையில் அமல்யா டெமோனி என்ற காதலி இருந்ததாக காட்டுவார்கள்.  அது போப்பின் 12 வது வயதில் உடன் படித்த அதே வயது பள்ளித் தோழி,  12 வயது பள்ளி பாலர் காதல் கதையை ஒரு பாதிரியின் காதலியாக காட்டியிருப்பது கத்தோலிக்க பாதிரியார்கள் மேற்கொள்ளும் பிரம்மச்சரியத்திற்கு( celibacy) மிகவும் எதிரானது.  இந்த பொய்மையை சேர்க்க தேவையே இல்லை.

 

அடுத்து 1200 வருடங்களுக்கு பின்பு கிடைத்த ஐரோப்பியர் அல்லாத போப், போன்றவைகள் எல்லாம் ஒரு வகை 'சிவப்பாக இருக்கிறவன் பொய் பேச மாட்டான், கறுப்பானவன் ஏழை' என்பது போன்ற வரட்டு பிரசார உக்தி.

20 Apr 2020

வரத்தன்-இடுக்கி மாவட்டம்

நேற்று பார்த்த திரைப்படம் வரத்தன்.
கேரளாவில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை நாட்டுக்கு போவது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. இப்போது அந்த நிலையில் ஒரு மாற்றம் ; ஒரு தம்பதிகள் கேரளாவிற்கு திரும்பி வருகின்றனர். கொஞ்ச நாட்கள் அமைதியாக வாழ வேண்டும் சொந்த நாட்டில். பெண் பணக்கார வீடு; பையனுக்கு பெற்றோர் இல்லை நல்ல வேலை என்ற நிலையில் கல்யாணம் நடந்துள்ளது போல்.
வெளிநாட்டை விட்டு திரும்பவும் பிடிக்கவில்லை, ஆனால் அக்கா அம்மா , ஊர் என வாழ வேண்டும் என்ற அதி ஆசை.

பெண்ணின் தாத்தா , அப்பா அம்மா வாழ்ந்த வீட்டுக்கு வந்து சேருக்கிறார்கள். வெளிநாட்டில் தனிமையில் வேலை என பரபரப்பாக வாழ்ந்திருந்தாலும் ஒரு பாதுகாப்பு இருந்ததும், இங்கு எப்போதும் , யாரோ, மற்றவர்களின் கண் காணிப்பில் வாழ்வது போன்ற நிலை. அது எரிச்சலை கொடுக்குகிறது பின்பு அச்சமாக மாறுகிறது கடைசியில் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பல வருடம் வேலை விடயமாக அன்னிய நாட்டில் வாழ்ந்திருப்பார்கள் பின்பு சொந்த ஊரில் குடிபெயருகையில் இதே சூழலை எதிர் கொள்வார்கள். இந்த நிலையை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் கதாப்பாத்திர வடிவமைப்பு எரிச்சலப்படுத்துகிறது.

எப்போதும் கணவரை ஏதோ தனக்கு பாதுகாக்கவே பிறந்து உருவெடுத்தது மாதிரி நடத்துவது, ஒரு கணவரின் சுயத்தை கேலி செய்வது, கணவருக்கான வெளியை மதிக்காது இருப்பது. நீ ஆம்பளைன்னா சண்டை போட்டு, வான்னு எப்போதும் உசுபேத்தி விடுவது.
ஏதோ அணிவது மார்டேன் உடை, சாப்பிடுவது நவநாகரீக உணவு என்றாலும் செயல் நடவடிக்கை எல்லாம் சிறுபிள்ளைத்தனம். கடைசி சீனில் கணவர் அடிபட்டு சாகப்போக போவும் போது துப்பாக்கியை எடுத்து வருவார். இந்த மாதிரி கதை என்ன சமூகத்திற்கு சொல்ல வருகிறது என்பதை விட இதே போன்ற கதை சமூகத்திற்கு எந்த வித தாக்கத்தை தரப்போகிறது என சிந்திக்கிறேன்.
இந்த கதையின் தளம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு,(தேக்கடி) பருந்தன்பாறைக்கடுத்து ஒரு தோட்டம் வீடு.
25 வருடம் முன்பு கல்விக்கு என அந்த மலையை விட்டு கோட்டயம் வந்து அடைந்தோம். முதல் வகுப்பில் பேராசிரியர் கேட்பார்; ஊர் ஏது. இடுக்கி பீர்மேடு என்றதுமே அவர்கள் முகத்தின் மாற்றத்தை கவனிப்போம். ஏதோ காட்டுக்குள் இருந்து வந்த மனிதர்களை பிடித்து தின்னும் காட்டுவாசிகளை பார்த்தது போல பார்ப்பார்கள். அப்போது நாங்க கல்வி கற்க கோட்டயம் , அதை விட்டா திருவனந்தபுரம். ஒரு கல்லூரி கிடையாது , பல் பிடுங்க ஆஸ்பத்நிரி கூட கிடையாது. ஆனால் எப்போதும் கொடிபிடிக்கும் அரசியல் எங்களுடனே இருந்தது.

அங்கைய சில இளைஞர்களை பெண்கள் உள்ளாடையை வரை திருடும் மனப்பிளர்வு நோயாளிகளாக காட்டியுள்ளனர். Moral Policing செய்பவர்களாகவும் சொல்லப்படுகிறது. மலைப்பிரதேச மக்கள் உழைப்பாளிகள் அவர்களுக்கு இதற்கு நேரம் இல்லை. கொல்லம் , கொச்சி தான் பல போதும் செய்தியில் வந்துள்ளது. சொல்லப்போனால் 18 நூற்றாண்டில் காடு மலைக்குள் குடியேறி, காட்டு புலி யானைகளோடு போராடி அவர்களுக்கான இன்ப துன்பங்களில், மிகவும் எளிமையாக சொல்லப்போனால் அரசியல் அமைப்புகளால் மதவாதிகளால் நிராதரவாக மாற்றப்பட்ட மக்களை திரைத்துறையும் வேட்டையாடியுள்ளது.
பொதுவாகவே நாட்டு ஆட்கள் பெண் கொடுக்கக்கூட தயங்கும் இடங்கள் மலை தேயிலை சார்ந்த வாழ்விடங்கள். இனியும் அந்த பார்வை மாறப்போவது இல்லை.

இனி கொஞ்சநாட்களுக்கு தமிழ் , மலையாளம் பக்கம் இருந்து விடைவாங்கி ஆங்கிலம், ரஷியா மொழி படங்களில் சரணடைய போகிறேன்.
கலைப்படைப்பு என்பதை விட தமிழ் பார்முலாவில் பணம் ஈட்ட வேண்டும் என்றே படம் எடுக்க சில பல இயக்குனர்கள் மலையாளக்கரையிலும் பெருத்து விட்டனர்.
நடிகர் பகத் இது போன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் மட்டுமே.
இயக்குனர் அமல் நீரட்.

இசை , ஒளிப்பதிவு எதும் ஒரு வகைக்கும் ஆகாது. அதனால் அவர்கள் பெயரையும் அறியவில்லை.
மலைப்பிரதேச வாழ்க்கைக்கு ஒரு அழகு உண்டு. அப்படி ஒரு காட்சியும் இல்லை. பொறுப்பற்ற வெறும் மசாலப்படம்.

சங்கம்புழா சிருஷ்டிகள்

சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்துமே துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போல நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளில் தேற்றும் இசையாக வருகிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள், ஆதரவாக, ஸ்நேகமாக நம்மை பின் தொடர்கிறது.
சங்கம்புழாயின் கவிதைகளுக்கு பின்புலமாக ஒலிக்கும் இசை, கேரளா திருவாதிரைக்களிக்கு பாடப்படும் நாடடுப்புற இசையாகும். தொட்டிலில், என்னை பாட்டுபாடி உறக்கிய நல்லம்மா - என் பாட்டியில் இருந்து தான் கவிதை ஞானம் கிடைத்தது எனக்கூறுகிறார்.
இவருடைய குடும்பம் இடைப்பள்ளியில் பெயர் பெற்ற பணக்காரக் குடும்பம். பணம் போனதும், புகழும் பெருமையும் சேர்ந்தே போய் விட்டது. கடைசியில் மிஞ்சினது அப்பா நோக்கிய வக்கீல் குமஸ்தா வேலை மட்டுமே. சங்கம்புழையின் 10 வது வயதில் அப்பா இறந்ததும் இவருடைய வாழ்க்கை தனிமையில் தள்ளப்பட்டு விட்டது.
ஒரே வீட்டில் இரு பெண்கள் அம்மா , பாட்டி கண்காணிப்பில் வளர்ந்த ஒரே ஒரு குழந்தை இவர். இவர்களுடைய தலையிடல் பலபோதும் தனது இயல்பான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தது.ஒருக்கா இவர் பொது கூட்டத்திற்கு போகக்கூடாது என்று இவருடைய அம்மா இவருக்கு இருந்த ஒரே வெள்ளை வேட்டியை ஒளித்து வைத்து விட்டாராம். இவர் துண்டை உடுத்து கொண்டு கூட்டத்திற்கு போய் பங்கு பெற்றுள்ளார்.
கட்டுப்பாடுகள் தான் மீறவும் வைத்தது கவியை. சங்கம்புழா இயல்பாகவே கனவு ஜீவி. 10 வயதினிலே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்.
உள்ளூரில், இடைப்பள்ளி ராகவனும் சேர்ந்து இலக்கியப்பணி, பேச்சு என இலக்கியம் வளர்கின்றனர். உள்ளூர் ஷெல்லியும் கீட்ஸுமாக அறியப்பட்டவர்கள்.
கவியின் படிப்பு, கடினமான வறுமை மற்றும் இலக்கியப்பணியால் தடை பட்டது. வேலைக்கு போய் பணத்தை சேகரிப்பார். படிப்பை தொடர்வார், படிப்பை விடுவார் வேலைக்கு போய் பணம் ஈட்டுவார். இப்படி தான் கவியின் வாழ்க்கை போய் கொண்டிருந்தது.
காலம் ஓடுகிறது. துன்பங்கள் தனியா வருவது இல்லை தானே! காதல் உருவத்தில், பெண்களும் வந்து போய் கொண்டு இருக்கின்றனர். ஒரு பெண் உருகி நோக்கினால் நாலு வரியில் ஒரு கவிதையாவது எழுதிக்கொடுக்காது பின் வாங்குவதில்லை. பல பெண்கள் இவர் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியதாகவும் , இவருடைய கடிதம் பல பெண்கள் கைகளில் இன்றும் உண்டு என்கின்றனர்.
12 ஆம் வகுப்பு மகாராஜாஸ் கல்லூரியில் முடித்து விட்டு, கல்லூரி படிப்பிற்கு திருவனந்தபுரம் வந்து சேர்கிறார். கல்லூரியில் சேரும் போதே இவருக்கு 23 வயது ஆகி விட்டது. அந்நேரம் இரண்டு கவிதைத்தொகுப்பு வெளியிட்டு விட்டார். கல்லூரியில் முதல் வருடம் மலையாளம் மொழி பாடத்திற்கு இவருடைய கவிதைத்தொகுப்பும் இவருக்கு படிக்க இருந்துள்ளது‌.
கல்லூரியில் சேரும் போது ஒரு பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் சேர்ந்திருந்தாலும் அங்கும் இவரை ' உள்ளூர்' என்ற பேராசிரியர் வடிவில் துரத்தியது துன்பம். மற்று மாணவர்கள் இவர் கவிதையை படித்து 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் போது கவிக்கு 40 க்கு மேல் மதிப்பெண் கிடைக்காதாம். கவி மலையாள இலக்கண தேர்விலும் வெற்றியடையவில்லை.
அந்த நேரம் இவருக்கு ஒரு காதலும் இருந்துள்ளது. இது இவர் தாயாருக்கு பிடிக்கவில்லை. குடும்பப்பாங்கான ஸ்ரீ தேவியை கண்டு பிடித்து திருமணவும் முடித்து வைத்து விட்டனர்.
கவிக்கு, மறுபடியும் கல்லூரிக்கு போக இயலாத சூழல். கல்லூரிக்கு போவதை நிறுத்தி விட்டார். தனது 27 வது வயதில் மூன்றாம் தரத்தில் பட்டம் பெற்றாலும் "பேராசிரியர்" ஆகும் தகுதியை இழந்ததால்,பேராசிரியர் ஆகும் ஆசையை மூட்டை கட்டி வைக்க வேண்டியதாக போச்சு.
பிழைப்பிற்கு தனியார் டுயுட்டோரியல் கல்லூரியில் கற்பிக்கிறார், பின்பு ராணுவத்தில் கணக்கராக சேருகிறார்.

அப்போது இவருடைய கவிதையின் ரசிகை, ஒரு மருத்துவரின் மனைவியின் நட்பு கிடைக்கிறது. அந்த பெண்மணி இவரை சட்டம் படிக்க திருவனந்தபுரம் செல்லக் கூறுகிறார்.
இதற்குள் இரண்டு மகன் இரண்டு மகள் என நாலு குழந்தைகள்.
சில சூழலால் சட்டப்படிப்பையும் இடையில் நிறுத்தி சொந்த ஊர் வந்து சேருகிறார். முதலில் டைபாய்டு அதை தொடர்ந்து காசநோய் பிடித்து கொள்கிறது. 37 வது வயதில் விடை பெற்று விட்டார்.
இவருடைய பாதையை பின் தொடர்ந்து, மலையாள கவிதை உலகில் பாஸ்கரன், வயலார், வைலோப்பிள்ளி போன்றவர்கள் வந்தாலும், இன்னும் இவரை தாண்டி ஒரு கவிஞரும் கேரள மண்ணில் பிறக்கவில்லை.
நெஞ்சை உருக்கும் கவலை, பிரிவு, காதல் துயர் , வறுமை , இயற்கை, என இவர் எழுதின கவிதைகள் காலத்தை கடந்து வாசிப்பவர்களுக்கு இதமான உணர்வையும் ஆறுதலையும் தருகிறது.
ஒரு மயில் ஆடும் நடனம் போல, இதயத்தோடு அணைத்து சேர்த்து வைத்து பாடுவது போல உணர்வுகளை தந்து சங்கம்புழை கேரள மண்ணின் அடையாளமாக இப்போதும் எப்போதும் உள்ளார்.
ஒரு பெண்மையின் நளினம் கொண்ட மென்மையான வார்த்தைகளும் தாலாட்டு பாடும் பாட்டியின் குழைவும், பாசவும் கேரளாவின் நாட்டு பாடல்களின் மெட்டுகளுடன் கேட்பவர்களை மயக்கி தன்னகத்திற்குள் வைத்து கொள்கிறது இவருடைய கவிதைகள்.
தனது நண்பன் இடப்பள்ளி ராகவன் பிள்ளை , 27 வது வயதில் செய்து கொண்ட தற்கொலை ' ரமணன்' என்ற 'Master Piece' கவிதையை உருவாக்க வழி செய்தது.
நண்பனின் நினைவாக அன்றைய தினம் எழுதிய கவிதை இதுவே.

########₹₹₹#######
ஆதரவற்ற உன் எரிந்த மனதுமாக நீ மறைந்தாய்
இனி கேட்க இயலாது மென்மையான மெல்லிய குரல்கள்
இன்றுவரை மலர்தோப்பில்
நாம் சேர்ந்து பறந்து பாடி
இப்படியென்னை
இங்குதனித்து விட்டுவிட்டு நீ
ஐயோ பறந்து ஒளிந்தாய்?
____----________________
നിരാശ്രയാം നിൻ നീറും മനസ്സുമായ് നീ മറഞ്ഞു
കേൾക്കുകയില്ലിനിമേൽ നിന്റെ നേർത്തുനേർത്തുള്ള കളകളങ്ങൾ
ഇന്നോളമീ മലർത്തോപ്പിൽ നമ്മളൊന്നിച്ചു ചേർന്ന് പറന്നു പാടി
ഇന്നിളമെന്നെ തനിച്ചുവിട്ടിട്ടെങ്ങുനീ അയ്യോ പറന്നൊളിച്ചു?
---------+_____----------------
O blessed nightingale You have vanished with your scourging despair
Your songs of melancholy sweetness Alas! will not be heard again
Were we not like two chirping little birds singing in tuneful harmony?
Where have you gone leaving me all alone?
#######₹₹#####

"ஏதோ தீவிரமான உறவின் தோய்ந்து போன ஏமாற்ற உணர்வுதானே சிருஷ்டி"... ......இல்லை என்றால் இப்படியெல்லாம் வர்ணஜாலமிக்க மென் சிறகுகளால் பறக்கவே முடியாது , நிச்சயமாக"....(தூவானம் ஆ . மாதவன்

16 Apr 2020

சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழி 'மகாகவி' !

சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழிக் கவிதை உலகில் 'மகாகவி' என்று அறியப்படுகிறவர். கானகந்தர்வன், மக்கள் கவிஞர், ஜனரஞ்சக கவிஞர்,காதல் கவிஞர் என பல பெயர்களில் அன்பாக அழைத்தனர் கேரள மக்கள்.
கேரளாவின் ஷெல்லி என அறியப்பட்ட கவிஞர் சங்கம்புழாவிற்கு இடைசசேரியில் ஒரு நூலகம் , பூங்கா அமைத்து இன்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றனர் .இன்று வாசிக்கையிலும் கவிஞரின் கவிதைகள் வீணையில் இதமாக மீட்கப்படும் குரலாக ஆறுதலாக, காதலாக, இயற்கையாக, பறைவையாக, பூக்களாக நம்முடன் பயணிக்கிறார்.

இன்றைய தினம் நோய்க்கு மருந்தற்று , 1 மீட்டர் இடவெளியில். பயத்தோடு தள்ளி நின்று நோக்கும் கொரோனா நோயின் இடத்தில் 1948 காலயளவில் காச நோய் இந்தியாவில் இருந்துள்ளது. அந்த கொடூர நோயின் பிடியில் சங்கம்புழா அன்று இருந்தார்.

பல பெண்களின் இதயத்தில் எந்த நிபந்தனையும் அற்று இடம் பிடித்திருந்த கவிக்கு தேய்ந்து மறைந்து கொண்டிருக்கும் உடலும் , வீங்கி போன தலையும் கவிதைகள் எழுதின நீண்ட கைவிரல்கள் மட்டுமே மிஞ்சியதாம்.

இனி மருத்துவம் இல்லை என்ற நிலையில் தனது பெரிய வீட்டின், தெக்கு மூலையில் ஒரு ஓலைக்குடில் அமைத்து தலைமாட்டில் சாராயக் குப்பியுடன், தன் குறை வயது ஜாதகத்தை நினைத்து பயந்து கொண்டு தனிமையாக கிடக்கிறார்.

மனைவிக்கு வருத்தம்; கவிஞர் தனித்து வீட்டிற்கு வெளியே இருப்பதில், நமது பிள்ளைகளுக்கு இந்த நோய் பிடித்து விடக்கூடாது, தனித்து இருந்து கொள்ளுகிறேன் என்கிறார். வெறும் 27 வயது தான் மனைவிக்கு .

அன்றைய மாத்ருபூமி பத்திரிக்கையில் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாது தனது கடைசி நாட்களை கழிக்கிறார் கவிஞர் என்ற செய்தி வருகிறது. வெளிநாட்டு மலையாளிகள் அன்றைய நாள் 1949 ல்1000 ரூபாய் அனுப்பி விடுகின்றனர். தபால்க்காரர் கொண்டு கொடுக்கையில் எனக்கு யாருடைய தயவும் வேண்டாம் என்றுக்கூறி திருப்பி கொடுத்து விட்டார்.

சங்கம்புழாவின் நண்பரை தேடி செல்கிறார் மனைவி. நீங்கள் உங்கள் நண்பரிடம் பணத்தை ஏற்று கொள்ள செல்லுங்கள், வீட்டில் மருந்து வாங்கக்கூட பணம் இல்லை என்று அழுகிறார். நண்பர் வந்து சங்கப்புழையை தேற்றுகிறார், வாழ்க்கையை விரளப்படுத்தி விட்டேன் எனக்கூறி , அடுத்த நாள் பணத்தை பெற்று கொள்கிறார்.
உடனே திருச்சூர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர், அடுத்த இரண்டு நாட்களில் இறந்து போகிறார்.
எத்தனை பேருக்கோ ஆறுதல் கொடுத்த அவருடைய கவிதை வார்த்தைகள் மனைவிக்கு ஆறுதல் கொடுக்கவில்லை.
கையில் அன்று மூன்று குழந்தைகள். மூத்த மகனுக்கு 10 வயது இளைய மகளுக்கு ஒரு வயது.



எத்தனையோ பெண்கள் மனதில் ஆசைநாயகனாக, இன்னும் பல பெண்களின் காதலனாக இருந்த சங்கம்ப்புழா மனைவிக்கு எந்த நிறைவும் தரவில்லை.

தன்னுடைய முதல் பெண்ணுக்கு வரன் தேடிய போது "ராணுவ வீரனாக இருந்தாலும் பரவாயில்லை ஒருபோதும் ஒரு இலக்கியவாதியாக இருக்க கூடாது" என்ற நிபந்தனையில் இருந்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு மகா கவியின் 78 வது பிறந்த நாள் தினத்தை கொண்டாடும் அவசரத்தில் கேரள அரசு இருக்க தனது 45 ஆவது வயதில் 24 வயது மகன், 19 வயது மகள் மற்றும் 50 வயது கண்வருடன் சாப்பாட்டில் விஷம் கலந்து முதல் மகள் அஜிதா தற்கொலை செய்து கொண்டார்.
வறுமை அவரை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி , யாரும், உதவ இயலாத அளவிற்கு நொறுக்கி விட்டது. வீட்டில் இருந்த அண்டா, குண்டா பொருட்களையும் விற்று நாட்களை கடத்தியாச்சு.
கடக்காரர்கள் இனி பொருள் தர இயலாது என்று திருப்பி அனுப்புகின்றனர். வட்டிக்கு கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்ட ஆரம்பிகிறார்கள்.
யாரிடமாவது உதவி கிடைக்காதா என்று சொந்த வீட்டிற்கு போகிறார். அங்கும் கொடுத்து உதவும் நிலையில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டு பாட்டி 20 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த 20 ரூபாய்க்கு கடைசியாக விஷம் வாங்கி வருகிறார் தன் வீட்டிற்கு.
அஜிதா, பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும், சாந்தமான எளிமையான, அன்பான பெண்மணி. அந்த வீட்டில் அவர் எழுதி பிரசுரிக்காத இரண்டு நாவல் கிடந்ததாம்.
யாருடனும் வருத்தம் இல்லை. என்னால் என் வறுமையை தாங்க இயலவில்லை. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட என் மகன் நினைவில் இருந்து என்னால் மீளவும் இயலவில்லை. என் மகன் நினைவாக வளர்த்த நாய் செத்ததும் என்னை வேட்டையாடுகிறது. இனி நாங்கள் வாழ தகுதியற்றவள்.
கணவருக்கு ஒரு கடிதம்! உங்களுடைய குடியால், வறுமையும் அவமானவும் என்னை பின் தொடர்கிறது. நாங்கள் விஷம் கலந்த சோறுண்டு, எங்கள் மகனிடம் போகிறோம். உங்களுக்கு விருப்பம் எனில் எங்களுடன் வரலாம் என்று எழுதி வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்.
இரவு முழுக்குடியுடன் வந்து சேர்ந்த 50 வயது கணவர், எல்லோரும் செத்துக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவரும் மீதம் இருந்து சோற்றை உண்டு மரித்து போனார்.
சங்கம்புழையின் மாஸ்டர் பீஸ் 'ரமணன்' என்ற கவிதை! அந்த கவிதையை இப்போது வாசித்தாலும் வார்த்தைகளால் வருடும் கவிதை.
தன்னுடைய உயிர் நண்பன், இடப்பள்ளி ராகவன்  காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட போது விலாப காவியமாக எழுதினது . அதில் தானும் தன் நண்பனும் ஆடு மேய்க்க போவது போல் புனைவு செய்து அக்கவிதையை எழுதியிருப்பார். மரணத்தை அக்குவேர் ஆணிவேராக ஆழ்ந்து ஆராய்ந்து, அழுது, தத்துவார்த்தமாக எழுதின அழகியலான படைப்பு. அதில் நட்பு, காதல், மோகம், ஏமாற்றம் என எல்லாம் கலந்து; நண்பா ஒரு பெண்ணுக்காக உன் உயிரை விட்டு விட்டயே என்று வருந்தியிருப்பார். இந்த கவிதை 1930 ல் வெளிவந்தது. ஒரு லட்சம் பிரதிகள் விற்றழிக்கப்பட்டுள்ளது.இதை வாசித்த கல்லூரி மாணவிகள் , பெண்கள் நாங்கள் ஒரு போதும் காதலித்து ஏமாற்ற மாட்டோம் என கடிதம் எழுதியிருந்தார்களாம். அப்படியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின கவிதை.
இவருடைய கவிதையின் சிறப்பே சம்ஸ்கிருதம் மற்றும் மணிப்பிரவாள மலையாள வார்த்தைகள் கலராத; திராவிட மலையாளச் சொற்கள் தாங்கிய கவிதைகள். அவருடைய கவிதைகளை உருவிடாத ஒரு மலையாளி கூட இருக்க மாட்டார்கள்.
மரணத்தை வெறுத்தவர், அதிலும் தற்கொலை மரணத்தை அறவே வெறுத்தவர். ஆனால் அவரை மரணம் பின் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. தனது 10 வது வயதில் தன் தகப்பனார், பின்பு தான் முதன்முதலில் ஆசைப்பட்ட முறைப்பெண் அவளுடைய 10 வது வயதில் மரித்தது. கவியுமே தனது மரணத்தை வலுக்கட்டாயமாக ஏற்று கொண்டவர். விதி யாரை விட்டது.
பிற்பாடு கவிஞரின் மனைவி ஸ்ரீதேவி வயதாகி 2002லும் 2004 ல் மகன் வாகன விபத்திலும் மரித்து விட மிஞ்சினது இளைய மகள் மட்டுமே. இளைய மகள் குறிப்பிடுகிறார்; தனது அம்மா எந்த பிள்ளையும் எழுத்துலகிற்கு வருவதை விரும்பவில்லை. இருந்தும் சங்கப்புழா மகன் இரு புத்தகம் வெளியிட்டுள்ளாராம்.
கவிஞரின் மனைவி .......இனியாவது
"திருமணம் என்பது ஒரு சூதாட்டம், அதில் மனிதர்கள் வெறும் பகடைக்காய்கள் என நம்புவாரா?
வாழ்க்கையே ஒரு நாடகம் என்கிற போது திருமணம் சூதாட்டமாக இருப்பது தானே இயல்பு ?