16 Sept 2011

Tirunelveli Kudankulam- கூடங்குளம் அணு உலை!





பாசமிகு என் சகோதர சகோதரிகளே அணு உலையை பற்றி எனக்கு கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகின்றேன். இதில் மனித நலம் அல்லாது எந்த சுயநலமோ அரசியல் சார்போ இல்லை. நான் பகிரும் தகவல்களை குறித்து கருத்துரையாட, விருப்பம் தெரிவிக்க  மட்டுமல்ல  தகவலில் தவறுகள் உண்டு எனிலும் தெரிவிக்க எல்லா உரிமையும்,பதிவை வாசிக்கும், புரிந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை மிகவும் அன்புடன் கேட்டு கொள்கின்றேன். http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html

















































































11 Sept 2011

பூவே பொலி பூவே பொலி பூவே..........ஓணம்!!!




நம் பக்கத்து மாநிலம் கேரளா சகோதர்கள்  நேற்று ஓணம் கொண்டாடி முடித்துள்ளனர்.  20-22 வருட முன்புள்ள என் ஓணம் நினைவுகளும் இன்று என்ற போல் என் இதயத்தில்   உள்ளது.  ஓணம் என்பது எங்களுக்கு காலாண்டு விடுமுறை நாட்களாக  இருப்பதே கூடுதல் மகிழ்ச்சி.  ஓணத்தை சிறப்பாக எல்லா கேரளத்தவர்களும் இந்து, கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என் பாகு பாடு இல்லாது கொண்டாடுவதில் காத்திரமான முனைப்பில் இருப்பார்கள்.  எங்கள் வண்டிபெரியார்  பஞ்சாயத்தில் கைபந்து, நாட்டுப் புற பாடல்கள் பேச்சு போட்டி என  பல கலை-விளையாட்டு போட்டிகள்கள் நடைபெறுவது உண்டு.  அதில் சாப்பாட்டு போட்டி தான் மறக்க இயலாதது.

 http://www.youtube.com/watch?v=37JH7aAp6csஎங்கள் கொண்டாட்டங்கள் நாங்கள் செல்லும் ஆலயத்தை தழுவியே இருந்துள்ளது.   எங்கள் ஆலய பாதிரியார் ஒரு ஆங்கில இந்தியரான ஜோசப் டி அல்மெய்டா குழைந்தைகளின் விளையாட்டை உற்சாகப்படுத்துபவராக இருந்தார்.  ஆலயத்தில் பாடல் குழு இளைஞர்களே விழாவை நடத்தி செல்வர்.  எங்களை கவர்ந்த உயரமான ஊஞ்சலில் ஆடுவதற்க்கே ஓணம் வருகைக்காக காத்திருப்போம்.  எங்கள் மடம் கன்னியாஸ்திரிகள் வருவது வரை  நியாயமான மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடினோம்.  பின்பு கன்னியாஸ்திரிகள் கொண்டு வந்த மலையாளம்- தமிழ் பாகு பாடு ஓணம் மகிழ்ச்சியை கெடுத்தது என்பது மட்டுமல்ல விழாக்கள் மேல் ஈடுபாடு அற்றதாக்கியது.  

ஓணம் நாள் திருவாதிரக்களி http://www.youtube.com/watch?v=hQJaePC5w0I&feature=related என்ற கேரளா நடன போட்டி வைப்பது உண்டு.  நாங்களே பாட்டு அமைத்து நடனம் ஆடும் நிகழ்வுகள் சுவாரசியமானது.   யாரும் பயன்படுத்தாத பாடல் வேண்டுமென்று மலையாள கதை புத்தகங்களிலுள்ள  வரிகள்  சேர்த்து கலவை-மறுகலவை பாடல்களுடன் நடனத்தில் பங்கு பெற்றால் மார்க்கு இடுபவர்கள் ஆள் பார்த்து மார்க்கு போட்டனர் என்று பெரிய சண்டையும் நிகழ்வது உண்டு.   ஒரு முறை என் தம்பியார் மகாபலியாக நடித்த நிகழ்வுகள் மனதில் மறையாது உள்ளது. 

இனி ஓணம் கதைக்குள் சென்று விடுவோம்……ஓணம் சார்ந்து ஒரு அழகான சுவாரசியமான கதை உண்டு. 10 ஆயிரம் வருடம் முன்பு பிரக்லாதனின் பேரன் மஹாபலி என்ற ஒரு திராவிட(அசுரன்)அரசர் கேரளா நாட்டை ஆட்சி செய்துள்ளார்.  அவர் நல்லாட்சியில் மக்களுக்கு துன்பம் இல்லை, துக்கம் இல்லை நோய்-தரித்திரம் இல்லாது; மக்கள் பணக்காரன் ஏழை என்ற  இல்லாது ஜாதி மதம் பேதமில்லாது எல்லோரும் சுகமாக வாழ்ந்துள்ளனர். http://www.youtube.com/watch?v=QzR3DfNvA24&feature=related சுகமாய் வாழும் மக்கள் தம்மை நினைப்பது இல்லையே என்று தேவர்களின் தலைவர் இந்திரனுக்கும் அவர் கைப்படிகளுக்கும் பொறாமை வந்து விட்டது .  ஒரு முடிவுடன் மேலுலகத்தில் சென்று விஷ்ணுவை சந்தித்தனர்.  நீங்கல் தான் தீர்வு தர வேண்டும் மகாபலி எங்களுக்கு நிகராக வர்ந்து விட்டதால் மக்கள் எங்களை மதிப்பதில்லை என்று கதறினர். 

மனம் உருகிய விஷ்ணு குள்ளையான பிராமணன் (வாமனன்) வேடம் தரித்து பூமிக்கு வருகை புரிந்துள்ளார் .  மகாபலியை கண்டு  3 மிதியடி மண் வேண்டும் என்று கேட்க மகாபலியும் சூழ்ச்சி புரியாது எடுத்து கொள்ள அனுமதிப்பார்.  வாமனன் ஆகாயம் முட்டும் வளர்ந்து ஒரே மிதியால்  பூமியும் அடுத்த மிதியில் வானவும் கைய்யகப்படுத்தி விட்டு மூன்றாவது கால் மிதிப்பது எங்கே என்று கேட்பார் மகாபலியும் மனமுகர்ந்து பணிவுடன் தன் தலையை காட்டுவார்.  விஷ்ணுவும் மூன்றாவது மிதியில் மஹாபலியில் தலையில் கால் வைத்து பூமிக்கு அடியில் தள்ளி விடுவார். மகாபலி தன் கடைசி ஆசையாக உங்கள் திருவுருவம் காட்ட வேண்டும் என்று கேட்க வாமன்னும் தன் அருமை பக்தனுக்கு  தான் விஷ்ணு என்பதை வெளிப்படுத்துவார்.   மகாபலி தான் தன் மண்ணையும் மக்களையும்  நாட்டையும் விட்டு போகும் சூழலுக்கு தள்ளப்பட்டாலும் விஷ்ணுவை பழிக்காது தன் மக்களை சந்திக்க ஒரு நாள்  அனுமதி கேட்பார்.  பாதாகவாடத்தின்  காவல்காரனாக பதவி பெற்ற மகாபலி தன் மக்களை சந்திக்க வரும் நாளே ந்த பொன்னாளான ஓணம் திருநாள்.  பலவித உணவு, விளையாட்டுகளுடன் கேரளா மக்கள் ங்கள் மன்னரே வரவேற்ப்பதாகும் ஓணம் பண்டிகை! 

ஓணம் 10 நாட்களாக கொண்டாடுகின்றனர்.  கற்கடகம் முடிந்து செழிப்பான சிங்ம்(ஆடி , ஆவணி) மாதத்தில் வரும் திருவிழா என்பதால் விளைவெடுப்பின் நாளாகவும் கொண்டாடுகின்றனர்.  ஓணம் நாட்கள் பூக்களின் காலம் ஆகும் என்பதும் மற்றொரு சிறப்பே.

 அத்தப்பூவால்  (நம்ம ஊர் கோலம் அல்லது ரங்கோலிக்கு பல வித வர்ணங்களில் பொடி பயன்படுத்துவதற்க்கு பதில் பல வண்ணம் பூக்களால்)  வீட்டின் முற்றத்தை அலங்கரிப்பதுடன் தங்கள் அன்பான மன்னரை வரவேற்க்க மக்கள் தயாராகிவிடுகின்றனர்.  வீட்டின் முன்பு விஷ்ணு-மாவேலியின் உருவ பொம்மையை( திருக்காரயப்பான் ) வைக்கின்றனர்.   அத்தப்பூவில் முதல் நாள் மஞ்சள் வர்ண பூக்கள் மட்டுமே பயண்படுத்துகின்றனர்.  இரண்டாவது நாள் சித்திரை அன்று தான் மன்னர் வருகின்றார். அன்று வீடு சுத்தப்படுத்தி மன்னரை வரவேற்க்க காத்திருக்கின்றனர், ஆலய தரிசனவும் செய்கின்றனர் இன்னும் 2 வர்ணங்களிலுள்ள  பூக்களும் சேர்த்து கொள்கின்னர்.   மூன்றாவது நாள் சோதி அன்று 4-5 வர்ணங்களில் பூக்கள் இடுவதுடன் அத்தப்பூ பெரிதாகி கொண்டே போகின்றது.  அன்று சந்தைக்கு சென்று புது பொருடகள் வாங்குவதில் மகிழ்ச்சி காண்கின்றனர். 4 வது நாள் விசாகம் அன்று தங்கள் விளை பொருட்களை சந்தைய்ப்படுத்துகின்னர்.  http://www.youtube.com/watch?v=rj9ftDKxUU0&feature=relmfu 5 வது நாளில் வள்ளம் களி என்ற படகு போட்டி நடைபெறுகின்றது. 6 வது நாள் தங்கள் வீடு விட்டு வெளிநாடுகளில் மற்றும் வசிப்பவர்களும் தங்கள் சொந்த வீடு வந்து சேர்கின்னர்.   

7-வது மற்றும் 9-வது நாள் ஓண சத்யா என்றழைக்கப்படும் விருந்து கொடுக்கப்படுகின்து அன்று புலிக்களி/கடுவாகளி விளையாட்டும் நடைபெறுகின்து.  ஓணம் அன்று கொடுக்கப்படும் விருந்து அலாதி ருசியான சைவ சாப்பாடு ஆகும். மலையாளிகளிடையில் ஒரு பழமொழி உண்டு காணம் விற்றும் ஓணம் உண்ணனம்அதாவது நிலைத்தை விற்றாவது ஓணம் அன்று சாப்பிட வேண்டியது அவசியம் என்பதே.  அந்தளவு ஓணம் விருந்துக்கு பிரதம இடம் கொடுக்கின்றனர்.  ஓணம் சாப்பாட்டிற்க்கு கேரளா அரிசி சாப்பாடு என்பது மாறின போது ஆந்திராவில் இருந்துள்ள பொன்னி அரிசியும் சாப்பாட்டிற்க்கு சேர்க்க ஆரம்பித்து  விட்டனர்.  முதல் சுற்றில் சாம்பார், ருப்பு கூட்டு, நெய்யுடன் பப்படவும்(அப்பளம்) சேர்த்து விருந்து ஆரம்பமாகின்றது.  கேரளா சாம்பார் தேங்காய் சேர்த்து நிறைய காய்கறிகள் பயன்படுத்தி செய்வதாகும்.  அத்துடன் எல்லா காய்கறிகளும் சேர்த்த அவியல், அதற்க்கு துணை சேர்ப்பது போல் கூட்டு கறி இதில் பயறு வகைகள் சேர்த்திருப்பார்கள்.  அத்துடன் புடலங்கா போன்ற காய்கறியில் செய்யும் ஓலன்,   புளிக்காத தைரும் தடியங்காயும்(கும்பளங்க) சேர்த்து வைக்கும் காலன், கடைசியாக ரசம் வந்து சேருகின்றது. அருகில் கூட்டாக 4 உப்பேரி வகைகள் நேந்திராக்காயில் செய்வது அத்துடன் நாட்டு  வாழைக்காயால் செய்யும் வெல்லம் சேர்த்த இனிப்பு  சிப்ஸ்,  இஞ்சி புளி தீயல், ஊறுகாயுடன் கேரள மண்ணின் தனி தன்மையுடன் ருசியான  விருந்து படைக்கின்றனர். புதுகோடியுடன் வாழை இலையில் உண்ண வேண்டும் என்பதே ஆசாரம்!

 8வது நாள் ஓணத்தப்பன் என்ற சிலையை அத்தப்பூவில் நடுவில் நிறுவுகின்னர்.  9 வது நாள் தான் படு ஆற்ப்பாட்டமாக ஓணம் விருந்துடன் பண்டிகை ஆசரிக்கப்படுகின்து.  10 வது நாள் அதாவது இரண்டாம் ஓணம் அன்று  வாமனன் உருவத்தில் வந்த விஷ்ணு மகாபலியை பூமிக்கடியில் தாழ்த்திய நாள். அன்றே மகாபலி மக்களிடம் விடை பெற்று செல்கின்றார். அன்று ஆலயங்களில் வழிப்பாடு நடைபெறுகின்து.  கேரளாவில் கொச்சின் பக்கம் ஒரு ஆலயவும், வாமன்மூர்த்திக்கு என தமிழகத்தில் கன்னியாகுமாரி சுசீந்தரத்தில் மற்றொரு ஆலயவும் உண்டு.  சென்னையில் மஹாபலிபுரவும் மாவேலி என்ற இம்மன்னம் பேர் கொண்டே உள்ளது என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.   4வது ஓணம் அன்று இன்று மகாபலியின் உருவ பொம்மையை சமீப நீர் நிலைகளில் கரைக்கின்றனர்.  இன்றே புலி வேடத்தில் ஆடும் நடனம் சிரப்புற நடை பெறுகின்றது.  ஓணம் நாட்களில் கலாச்சார நிகழ்வுகள்  திருவாதிரைக்களி, மோகினியாட்டம், கதைகளி போன்ற கேரளா நடனங்களும், விளையாட்டுகள் முழு வீச்சில் நடை பெறும் காலமாகும்.

(நேற்றைய முன் தினம் ஓணம் நாள் பதிவிட திட்டமிட்டிருந்த பதிவு சில மென்பொருள் பிரச்சனையால் பதிய இயலவில்லை.  இன்று நார்வேயிலுள்ள பத்மன் அண்ணாவின் உதவி கொண்டு பதிவை பதிய இயன்றதில் மகிழ்கின்றேன். அண்ணனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!)

7 Sept 2011

உங்கள் உயிர் யாரிடம்?


கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது நாகரிக உலகத்தில் மனிதநேயம் அற்ற செயல், பண்பற்ற காட்டு மிராண்டிதனம் என்ற வாதத்தின் அடிப்படையில் உலகில் 3ல் 2 பகுதி  இங்கிலாந்து ஆஸ்த்ரேலியா , ஜெர்மெனி போன்ற நாடுகள் உட்படும் http://blog.amnestyusa.org/deathpenalty/business-as-usual-for-death-penalty-outliers/ 139 நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்த போது; தற்போதும்  58 நாடுகளில் மட்டுமே நிலுவையில் உள்ளது.  இந்த கொடிய செயலை பின் தாங்கும் நாடுகளில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது சீனா அடுத்தது ஐந்தாவது இடத்தில் உள்ள உலக போலிஸ் என்று போட்டி போட்டு அநியாயம் புரியும் அமெரிக்க, அத்துடன் பாகிஸ்தான், இரான் போன்ற சில இஸ்லாமிய நாடுகளும், ஆத்மீயத்தின் ஊற்றாம் கருணையின் பிறப்பிடமாம் இந்தியாவும் ஆகும்.

1987 ஐக்கிய நாட்டு சபையில் மரண  தண்டையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்திற்க்கு வாக்கு எடுப்பு நடத்தி தோல்வி கண்ட போது மரண தண்டனை வேண்டும் என்று குரல் கொடுத்ததில் மகாத்மாவின் அஹிம்சை கொள்கை கொண்ட நம் இந்தியாவும் உண்டு என்பதே கசக்கும் உண்மை.   2000 ஆண்டில், மனித நேயர்களான 146 நாடுகளில் இருந்துள்ள 3.2 மிலியன் மக்கள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்து இட்ட மனு ஒன்றை ஐக்கிய நாட்டு சபை அன்றைய செயலாளர் கோபி அண்ணனிடம் சமர்ப்பித்துள்ளனர்.

1767 ல் Ceare Beccaria என்பவர் எழுதிய "குற்றங்களும் தண்டனைகளும்" என்ற கட்டுரை அமெரிக்க அறிவாளி வர்கத்தின் சிந்தனையை புரட்டி போட்டது.  இக்கருத்தாக்கத்தில் தாக்கம் கொண்ட  அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன்வெர்ஜீனியா மரண தண்டனைஎன்ற சட்டத்தையை மாற்ற  துணிந்தார்.  ஆனால் ஒரே ஒரு வாக்கால் இச்சட்ட மாற்றம் தோற்க்கடிக்கப்பட்டது.  19 நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்கர்களால் மரண தண்டனை ஒழிக்கப்பட்டாலும் ரஷ்யன் புட்சியில் பின் 1920 ல் மறுபடியும் மரண தண்டனையை  சட்டமாக்கியது துரதிஷ்டமே.   அமெரிக்காவில் சில மாகாணங்களில் மரண தண்டனை நிர்த்தி வைக்கப்பட்டுள்ளது, சில மாகாணங்களில் விஷ அறை, மின்சாரம், அல்லது மீதேல் ஊசியின் துணை கொண்டு மரண தண்டனை கொடுக்கின்றனர்.

சீனாவில் 17 ஆயிரம் நபர்களுக்கு மரண தண்டனை கொடுக்கபட்டுள்ளது. ஒவ்வொரு வருடவும் 100 மனிதர்களை தண்டனை என்ற பெயரில் அரசே கொலை செய்து வருகின்றதுஆள் கடத்தல், அரசுக்கு எதிராக கலகம் புரிதல், வருமான வரி ஏய்ப்பு செய்தல் ,மோசமான படம் தயாரிப்பது , இணைய குற்றங்களுக்கும்,  ஓரின சேர்க்கையளர்களுக்கும்  மரண தண்டனை உண்டு சீனாவில்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   இன்னும் பல இஸ்லாமிய நாடுகளில் ஆட்கள் கூடும் இடத்தில் கல்லெறிந்து கொல்வது துப்பக்கியால் சுட்டு கொல்வது போன்ற கொடூர முறைகளையும் கைய்யாளுகின்றனர்.                                                                                               
                                                                                                            மரண தண்டனை தேவை தான் என்று சொல்பவர்கள் சொல்லும் காரணங்கள் குற்றம் செய்தவர்கள் பெறும் தண்டனையால் மற்றுள்ளவர்களை பயமுறுத்துவதுடன், சட்டத்தை மீறும் மனிதர்களை சமூகத்தில் இருந்தே நிர்மூலப்படுத்துவது வழியாக மேலும் குற்றம் நடைபெறாது தடுப்பது, மனிதர்களை ஜெயிலில் அடைத்து காப்பதை விட செலவு குறைந்ததே  மரண தண்டனை போன்ற காரணங்கள் ஆகும்.

ஆனால் ஒரு குற்றத்திற்க்கு பதிலாக இன்னொரு குற்ற செயலா?, நிரபராதிகளும் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் உண்டு, எந்த சட்டமோ நீதியோ சக மனிதனை கொல்லுவதை ஏற்று கொள்ள இயலாது, மேலும் குற்றம் என்பது சமூகம் மற்றும் மரபணு மாற்றங்களாலும் நிகழ்வதால் குற்றவாளியை மட்டும் குற்றத்தின் காரணமாக கற்ப்பிக்க இயலாது என்ற காரணங்களால் மரண தண்டனை தேவையில்லை என்று பெரும் பகுதி மக்கள் குரல் கொடுக்கின்றனர்.

நாம் காத்திரமாக சிந்திப்போமானால் ஒரு அரசியல் தலைவனை கொல்லும் போது காட்டும் அக்கறை,  அரசியல் அமைப்பு சட்டத்தால் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் கொல்லப்படும் போது எடுத்து கொள்ளப்படுவது உண்டா என்பதே!  போபால் விஷவாயு விபத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட போதும், கேரளாவில் ஒரு முழு கிராமமே பூச்சி கொல்லி மருந்து பயண்பாட்டால் உடல்- உபாதைகளால் மரணத்தை தழுவ க காரணமான அதிகார வர்கத்திற்க்கு தண்டனை கொடுக்க முன் வருமா அரசியல் சட்டம்?;அல்லது சொந்த நாட்டு மலைவாழ் மக்களை ராணுவம் உதவி கொண்டு அழிக்கும் அதற்க்கு பக்கபலமாக இருக்கும் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளை தண்டித்துள்ளதா நம் சட்டம்? மேலும் ஊழலால் நாட்டில் மக்கள் வறுமைக்கும் சமூகத்திற்க்கு எதிரான குற்றங்களுக்கு திரும்பும் அவல நிலைக்கு காரணமாகும் ஆளும் வர்கத்திற்க்கு சட்டத்தால் தண்டனை உண்டா?

அரசியல் அமைப்பு சட்டம் 21  ன் படி வாழும் உரிமை கொடுத்துள்ள அரசு தண்டனை என்ற பெயரில் உயிரை பறிப்பது எவ்விதத்தில் நியாயமாகும் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.   இப்படியாக ஒரு கொலைக்கு பதில் இன்னொரு கொலையான மரணதண்டனை என்று ஒரு நாடு முன் மாதிரி காட்டி விட்டால் கிராமங்களிலும் பட்டி தொட்டிகளிலும்  நடக்கும் பழிவாங்கும் கொலைகள் பற்றி என்ன சொல்வது?

இதில் மற்றொரு சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால் 3 பேரும் தமிழர்கள் என்ற போது வந்த உணர்வு 2005 ல் கொல்கத்தாகாரர் சாட்டார்ஜியை தூக்கிலிட பட்ட போதே வந்திருந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்திருக்கலாம்.  நம் தமிழர்களின் இந்த குறுகிய மனம் தான் பல நல்ல செயல் ஆக்கத்தை தடுக்கின்றது. தமிழன் என்று அல்லாது எந்த ஒரு மனிதனும் இந்த மாதிரி இழிய சாவை தர கூடாது என்பதில் ஆற்வம் கொண்டிருக்க வேண்டும். சாட்டார்ஜி கூட தன் மரண வாக்கு மூலத்தில் "அடுத்த ஜென்மத்தில் நான் பணக்காரனாக பிறக்க வேண்டும். நான் ஏழை என்பதால் தான் என் நியாயம் கேட்கப்படவில்லை" என்று கூறி விட்டு 14 வருடம் கடும் தண்டனை அனுபவித்த பின்பு அவரின் மனைவி வயதான தாயின் வேண்டுகோளையும் கணக்கிலெடுக்காது உயிரை பறித்தனர்.
 
மகாத்மாவின் “பாவியை வெறுக்காதே பாவத்தை வெறு” என்ற கூற்றுக்கு எதிராக  குற்றவாளியை நாம் வெறுப்பதால் என்ன பலன் கிடைக்க போகின்றது.  வெறும் 18 வயது 6 மாதம் நிரம்பிய வயதில் ஜெயிலின் படிகள் கண்ட பேரறிவாளன் போன்றோருக்கு 20 வருடம் தனிமை சிறையிலில் உடலாலும் மனதாலும் தண்டனை அனுபவித்த பின்பு மறுபடியும் தூக்கு தண்டனை வழியாக உயிரை பறிப்பதில் அரசியல் பழி வாங்கள் தவிற எந்த நியாயவும் இருக்கபோவதில்லை.

ராஜிவ் காந்தியின் கொலை அரசியல் காரணங்களுக்காக நிகழத்தப்பட்டது. இன்றளவும் யாரால் நிகழ்த்தப்பட்ட்து என்று ஒரு முடிவுக்கு வர இயலாத சூழலில்  மூன்று உயிர்கள் அதுவும் பண, அரசியல் பலம் அற்ற ஏழை கூலிகளை கொலை செய்வதால் குற்றம் மறைந்து விடுமா?  ஆட்டோ சங்கர் தண்டனையிலும் இதுவே நிகழ்ந்த்து பெண்ணை கற்பழித்து கொலை செய்தது சமூகத்தில் பண-அரசியல் பலமுள்ள நபர் என்று தெரிவித்த பின்பும் பெண் ஏஜென்றாக செயல்பட்ட ஆட்டோ சங்கர் மட்டுமே தூக்கிலேற்றப்பட்டார். ஆனால் அந்த கொலைகளுக்கு மூல காரணமாயிருந்த அதிகாரிகளோ அரசியல்வாதியோ தண்டிக்கப்படவில்லை.  இப்படியாக சமூகத்தில் குரலற்ற ஏழைகளையும் பின்பலன் அற்றவர்களையும் மட்டுமே தண்டிக்க நம் சட்ட்திட்டங்கள் என்றால் அதை புரக்கணிக்கும் காலம் நெருங்கி விட்ட்து என்பதை மட்டுமே தீர்வு.

 இத் தண்டனைகள் வழியாக சமூகத்தில் இருந்து குற்றவாளிகளின் அடையாளத்தை ஒழித்து விடலாம் என்றால் அது தப்பு கணக்கு என்பதே வரலாறு படிப்பிக்கின்றது. தன் கடைசி மரண வாக்கு மூலமாக 90 பக்கம் எழுதி படித்து விட்டு சென்ற காந்தியின் கொலையாளி நாதூராம் கோத்சே இன்றும் ஒரு ஹீரோவாக வணங்கப்படுகின்றார். அதே போல் முன் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையாளிகள் பியாந் சிங், கேயார் சிங், மற்றும் சுகதேவ் சிங் இன்றும் பஞ்சாபில் சிக்கு இனத்தின் இரத்த சாட்சிகளாக போற்றப்படுகின்றனர். அவர்கள் தங்கள் மரண வேளையில் தங்கள் செய்கைகளுக்கு வருந்தாது தங்கள் லட்சியம் நிறைவேறியுள்ளதாக கதைத்து விட்டே உயிரைவிட்டுள்ளனர்.                                                                                                                                                            ஒவ்வொரு கொலையாளியையும் திருத்தவே ஜெயிலுகள் இருக்க வேண்டும் ஒழிய உயிரை பறிக்க அல்ல. இங்கு உயிரை காப்பது என்பது நம் உரிமையே, அதற்க்கு பதில் கருணை என்று ஜனாதிபதியிடமும் கொல்லப்பட்ட நபரின் மனைவியிடமும் கேட்பதில் அர்த்தம் இல்லை. அப்படியாகில் சட்டவும் அதன் செயலாக்கவும் அர்த்தமில்லாது மாறுகின்றது என்பது தானே பொருள்!  ஒரு  உயிரை நம்மால் கொடுக்க இயலாத மட்டும் உயிரை எடுக்கவும் தமக்கு உரிமை இல்லை என்பதை தனி நபர்கள் மட்டுமல்ல அரசு இயந்திரமும் புரிந்து முடிவெடுக்க வேண்டும்.