மலையாளம் மொழியில் என்ற ஆணுங்கள் என்ற பெயரில் கேரளாவில் வெளியான புத்தகம், எனது ஆண்கள் என்ற பெயரில், தமிழில் முனைவர் பா. விமலாவால் மொழிபெயர்க்கபட்டு சாகித்திய அக்காதமி விருதும் பெற்றுள்ளது.
இது ஒரு சுயவரலாறு என்பதால்
இன்னொருவரின் வாழ்க்கையை விமர்சிக்கவோ
அதைபற்றி விவாதிக்கவோ இங்கு இடம் இல்லை. இருப்பினும் தமிழ் வெளிக்கு விருதுடன் வருகை தரும்
போது எவ்விதமான புத்தகங்கள் தமிழுக்கு வருகிறது என்பதை அவதானிக்க பகிர்கிறேன்.
பொருளடக்கம்
- முன்னுரை: கேரளத்தில் ஆண்கள்
- மொழி பெயர்ப்பாளர் முன்னுரை
- ரவுடிக் கட்டும் வரப்பு முத்தமும்
- தட்டான் தொட்டால்...
- சிறிலங்குச்சீ கதை
- மசாலா தோசையும் கூரைப்பேனும்
- இடைச்சந்துகளில் காதல்
- சாராயமும் ஆணும் மங்களூரும்
- விஜயா லாட்ஜில் மூன்று காதலர்கள்
- பாரிஜாதம் பூத்துக் குலுங்கிய...
- காதலுக்கு பயதில்லை!
- உண்மையான காதலன்
இப்படியான தலைப்பில் தமிழில் இப்புத்தகம் வெளிவந்து உள்ளது.
இதன் மலையாளப்பதிப்பு டிசி பதிப்பகத்தால் எட்டாவது பதிப்பு கண்டுள்ளது. பக்கம் 118 ரூபாய் 125 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே புத்தகம் தமிழில் 159 பக்கத்துடன் 200 ரூபாய்க்கு காலச்சுவடு வெளியிடுகிறது. 2020 ல் முதல் பதிப்பு வந்துள்ளது
என்டே ஆணுங்கள் என்ற தனது புத்தகத்தின் மூலம், ஜமீலா மீண்டும் ஒருமுறை மலையாளிகளின் ஆண்-பெண் உறவுகளுக்கான அணுகுமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்த வெளிப்பாடுகள் நிச்சயமாக சமூகத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று பின் அட்டையில் சூளுரைக்கப்பட்டுள்ளது
ஜெமிலாவின் தனி மனித வாழ்க்கை சார்ந்த மற்றும் பார்வைகள் உள்ளடங்கிய இப்புத்தகம் மலையாளி ஆண் பெண் உறவு நிலை பற்றி அறிய எவ்விதம் உதவும் என்ற கேள்வியுடன் புத்தகத்தை அணுகினால் ஜெமீலாவின் தொழில் சார்ந்த வெளிப்பாடுகளை காணலாம்
தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இவ்வாறாக குறிப்பிட்டு உள்ளனர், கேரளா பண்பாட்டு உலகை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார், மேலும் பெண்கள் மீதான ஆண்கள்
கண்ணோட்த்தை அணுகுமுறைகளை தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் எடுத்துக்
காட்டுகிறார்.
தனது சொந்த அனுபவம் என்கிற போது தான் நளினி யார் என்ற கேள்வி எழுகிறது. அந்த சொந்த அனுபவம் பெருவாரி பெண்களுக்கான அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் பெருவாரி மக்கள் அடங்கிய சமூகத்தை பற்றிய ஜெமீலாவின் பார்வை எவ்விதம் இருந்தது என அறியலாம்.
வீட்டு வறுமையால் தனது 17 வயதில் மண் அள்ள போன இடத்தில் இருந்து துவங்கிய பதின்ம வயது விளையாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது வரலாறு. (இவருடைய முதல் புத்தகத்தில் ஒன்பது வயது துவங்கி வேலைக்கு போனதாக குறிப்பிட்டு உள்ளார். நளினியை, லாறியில் மண் அள்ள வந்த ஜோணி ஜொள்ளு விட்டது, அதன் பின்பு முத்தம் தந்தது என நகரும் கதையில், நளினியின் ஒரு சுய விளம்பரத்துடன் துவங்குகிறது “நான் எதற்குமே வளைந்து கொடுக்காதவள், நான் தான் சரி, நான் பெரிய வீட்டு பெண் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்தது ஜோணிடம் தோன்றின காதல் யாரிடமும் பின்பு தோன்றவில்லை என தன் வரலாற்றை ஆரம்பிக்கிறார்.
கல்யாணம் ஆகி இரு குழந்தைகளுக்கு தாய் ஆன நிலையில், தனது 27 வது வயதில் பாலியல் குழுவில் வேலைக்கு சேர்கிறார். இவர்கள் இது போன்ற குழுவில் நிலைத்து நிற்க சிலருடன் சில உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதற்கு காதல் என்கின்றனர். அந்நிலையில் மானிக்கா மேலும் அதே காலபகுதியில் இன்னொருவருடனும் உறவு என்கிறார். இந்த உறவு என்பதை தனி உறவு தொழில் முறை உறவு என்று பயன்படுத்தி கொள்கின்றனர்.
இவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து சாராயம் மது, சிகரட் போன்றவை பரிசாக கிடைப்பதாக குறிப்பிடுகிறார். 1979 காலப்பகுதியில் வாரம் கடைசி நாட்களில் ஒரு தையல் டீச்சர் பாலியல் வேலைக்கு வந்தாகவும் சொல்கிறார். அவ்வகையில் டீச்சரை பார்க்க வரும் தங்க ஆசாரி இவருக்கும் வாடிக்கையாளர் ஆகிறார். அவர் தனக்கு விருப்பமான ஒருவர் என்கிறார். ஒன்றைரை வருடம் நீடித்த உறவை குட்டநாட்டை விட்டு வெளியேறியதால் தொடர இயலாது முறிந்தது என்றாலும், அவன் நினைப்பு கனக்காலம் இருந்து என நினைவு கூற்கிறாள் ஜெமீலா.
அந்த பாலியல் குழுவில் இருந்து சண்டையிட்டு வெளியேறின ஜெமீலா திருச்சூர் தெருவை வந்தடைகிறாள். அங்கு தெருவில் நின்று வாடிக்கையாளர்களை பிடிக்கும் லைலாவுடன் கூட்டு கிடைக்க அவள் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு இவர்களுக்கு வாடிக்கையாளர்களை,இவர்கள் பக்கம் வருவித்து கொடுக்கும் பாலன் போன்ற எடுபிடிகள் சகவாசம், பணத்திற்காக கூட்டிகொடுக்கும் தொழில் செய்யும் ஆண்களை கண்டு கொள்ளவும் தங்கள் இணைப்பை விரிவாக்கவும் இயல்கிறது.
இவர்கள் வாழ்க்கையில் சாராயம் சாதாரணமாக உள்ளது. பெண்களே சாராயக்கடை சென்று மது அருந்துகின்றனர். அப்போதைய திருப்தி, அப்போதைக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்கள் என்பதை தவிர்த்து , சமூக அக்கறை என எதுவும் இருப்பதாக இல்லை. கள்ளு வாங்கி கொடுத்த பாலண்ணா, அவன் மனைவியை அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜெமீலாவை தேடி வருகிறான். எவன் வந்தாலும் ஜெமீலா கண் பணத்தில் தான். எவனிடம் பணம் எவ்வளவு இருக்கும் எதற்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. அவ்வகையில் பணத்தை வாங்கி விட்டு வேலை பார்க்கும் ஆளாகவே உள்ளாள்.உணர்வால் ஏமாற்றப்படும் போது கடந்து போகும் ஜெமீலா பணத்தால் ஏமாறாது இருக்க மிகவும் கவனமாக உள்ளாள். அதை தனக்கு இழுக்கு என்றும் நினைத்துக் கொள்கிறாள்.
”பாலண்ணா, பணத்தை பார்த்தால் தான் இதில் எல்லாம் எனக்கு விருப்பம் வரும் என்கிறாள்”. அவன் கன நாட்களாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து இருந்த ஐந்து ரூபாயை கொடுக்கிறான். அப்படி தனது மனைவி லக்ஷ்மிக்கு தெரியாம பாலா தன்னுடன் வந்ததில் ஜெமீலாவிற்கு அப்படி ஒரு பெருமை. ஜெமீலாவில் இந்த பெருமை எங்கும் குறைவில்லை. வாழ்வது பிழைப்பது எல்லாம் ஈன வழியாக இருந்தாலும் தன் அழகை பற்றிய ஒரு மேம்பட்ட பிம்பம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது. தன் அழகை, முடியை, கண்னை பார்த்தால் எந்த கொம்பனும் விழுந்து விடுவான் என பலபோதும் பெருமை கொள்கிறாள். அதே போல் தலைக்கனமாக தெரிகிறவனை தனக்கு பின்னால் வரவைப்பதில் ஒரு வன்மம் பிடித்த இன்பத்தை தொடர்ந்து பேணுகிறாள். இதே பாலன் பின்பு ஜெமீலாவிற்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் ஆளாக வலம் வருகிறான். பாலன் என்பவனை கூட்டி கொடுப்பவன் என்று அல்ல அறிமுகப்டுத்தி கொடுப்பவன் என்று சொல்ல வேண்டும் என சொல்கிறாள். நளினி வாழ்க்கை முழுக்க மற்றவர்களை தனக்கு கீழ் வைக்கும் ஒரு தந்திரம் உள்ளது. அதை திட்டமிட்டே செய்கிறாள்.
ஜெமீலா கண், மனம் முழுக்க 20, 30 50 ரூபாய் என்று தான் உள்ளதே தவிற அவளுக்கு யாரிடமும் ஒரு பரிவும் இல்லை. இங்கே நிறைய ஆண்களை தனக்கு சுற்றும் சேர்த்து இடியப்ப சிக்கலாகும் வாழ்க்கையில் இருந்து விடுபட கேரளா திருச்சூர் செல்கிறாள் நளினி. அங்கு கண்ணாடி விற்கும் பாபு அறிமுகம் ஆகிறான். அவன் மனைவியை போன்றே உடன் அழைத்து செல்கிறான். இவர்கள் தொடர்பை அறிந்த பாபுவின் காதலி பிரியாவும் பிரிந்து போய் விடுகிறாள்.
அக்காலத்தில் இருந்து நான்
அழகானவள் என்ற எண்ணம் தனக்கு உண்டு எனவும் உடல்முழுக்க சீலப்பேன் பிடித்த பாபு, இவளை கல்யாணம் செய்ய எண்ணினாலும் தன்னுடைய மற்ற
விஷயங்கள் எல்லாம் நின்று விடுமே என்று நினைத்த ஜெமீலா, விருப்பம் அது இதுன்னு
தன்னுடைய பணத்தை கொடுக்காது போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். அதே
போல பாபுவை தேவை முடிந்ததும் களட்டி விடுவதிலும் உன்னிப்பாக இருக்கிறாள்.
அடுத்து சுனில் என்ற பிராமணன் உடன் சுற்றுகிறாள். இரவில் ஒரு பள்ளிக்கூட அறையை தாங்கள் பயன்படுத்தியதாக சொல்கிறாள் ஜெமீலா. பாடசாலை அறையை பள்ளியறையாக மாற்றினதில் ஜெமீலாவிற்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அப்படி இரவில் கிடைக்கும் பணத்தை வைத்து பகலில் சுற்றித்திரிந்து வாழ்வதாக சொல்கிறாள். ஆனால் பிராமணன் 50 ரூபாய் கொடுத்து தன்னுடன் மட்டுமே வரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறான். அவனுடன் சேர்ந்து வீட்டு மாடிகளில் ஏணி வைத்து செல்வது என உற்சாகமாக திரிலிங்காக இருப்பதாக சொல்கிறாள். பணம் கொடுப்பவன் நிர்ணயிக்கும் இடங்களுக்கு செல்வது அவர்கள் கட்டுபாட்டில் பயணிப்பது என இவர்கள் கட்டற்ற கட்டுப்பாடு 50 ரூபாய் கொடுப்பவனில் அடிமையாக மாறுகிற போது ஜெமீலா பணத்திற்காக சகித்தும் கொள்கிறாள்.
ஜெமீலா பாலியல் தொழிலாளியான பின்பு சுனிலிடம் முதல் காதல் வந்ததாம். 5-6 மாதங்கள் கடந்த நிலையில் சுனிலின் வீட்டில் மாட்டி கொள்கிறார்கள். அங்கு அவன் அண்ணன் கருணன் இவளை தனக்கு அமைத்து தர சுனிலிடம் கேட்டதாக எழுதி வைத்து உள்ளாள். பின்பு திரில் போய் சுனில் மறைய, தோட்டிக்காரன் தங்கப்பனுடன் செல்கிறாள். தோட்டியுடன் தான் செல்வதால் பிராமணன் சுனில் தன்னில் விரும்பவில்லை என்ற சமூக ஜாதி புரட்சி பொய்யையும் எழுதி வைத்துள்ளார்.அப்படி எழுத்துக் கலையையும் தன் நலம் சார்ந்து உருவாக்க மெனெக்கெட்டுள்ளார்.
அந்த ஆண்கள் இவளிடன் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்கள் அழகு, எதிர்பார்ப்பை பற்றி நளினியிடம் சொல்கிறது நளினிக்கு பொறாமையையும் இயலாமையும் உருவாக்குகிறது. நளினி தனது வாடிக்கையாளர்களில் தனது இதமான காதல் அனுபவத்தை, பரிவான கணவனை தெரிந்தோ தெரியாமலோ தேடுகிறாள் ஆனால் யாருக்கும் மனைவி ஆகி கட்டுக்குள் வாழவும் விரும்பவில்லை. ஆனால் நளினிக்கு நல்ல குடும்பம் கணவன் அமைய வில்லை என்பதை எங்கும் குறையாக வைத்துக் கொள்ளவும் இல்லை.
அடுத்து நளினியின் பயணம் மாங்களூர் பார்த்து செல்கிறது. அங்கு வேலாயுதன் என்ற ஒருவன் கணவன் பணிக்கு கிடைக்கிறான். அதில் மாத்தூஸ் என்ற ஒருவனுடன் சண்டையிடும் சூழல் வருகிறது. அதன் பின் கோயக்கா ரவுடி தொடர்பு கிடைத்த நளினிக்கு, தான் ஒரு பேட்டை ரவுடி என்ற நினைப்பை வரவைக்கிறது. தான் ரோட்டில் நடந்து செல்லும் போது வழியில் செல்பவர்கள் வணக்கம் சொல்வார்கள் என்பதில் பெருமை கொள்கிறாள். இவள் ரவுடி ஆனதால் ஹமீதுக்கு இவள் மேல் ஆராதனை என்றும் நினைத்துக் கொள்கிறாள். மாத்தூஸிடம் சண்டை என்றதும் மாத்தூஸுடன் வாழும் பெண்ணை குறை சொல்ல ஜெமீலா தயங்கவில்லை. அவள் தன் கணவனை விட்டு விட்டு மாத்தூஸுடன் சேர்ந்து வாழ்கிறாள் என்பது ஜெமீலாவிற்கு இகழ்ச்சியாக உள்ளது.
அடுத்து கேரளா வந்து லாட்ஜுகளில் பாலியல் தொழில் செய்து வருகிறதை விண்வெளிக்கு சென்றது மாதிரி கதை விடுகிறார். அங்கு வைத்து சாகுல் ஹமீதை சந்தித்தாகவும் அவனை கல்யாணம் செய்ததாகவும் அடுத்த வரலாற்று பொய் புரள்கிறது. சாகுல் ஜெயிலுக்கு போக வேண்டி வந்ததால் அவனை காப்பாற்ற மறுபடியும் பாலியல் தொழில் செய்தது போலவும் கதை விடுகிறார்.
இவருடைய முதல் புத்தகம் ஒரு பாலியல்தொழிலாளியில் சரித்திரத்தில் சொன்ன சாகுல் கதைக்கும் இங்கு சொல்லும் கதைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. https://josephinetalks.blogspot.com/2014/07/blog-post_27.html
அப்படி 5 ரூபாயில் ஆரம்பித்து, 2000 ஆண்டுகளில் 200 ரூபாய் கட்டணம் பெறும் தொழிலாளியாக மாறுகிறாள் நளினி. ஆனால் வழியே வந்தது வழியே போகும் என நளினி பணத்தை துரத்த, திட்டமிடாத செலவு வாழ்க்கையால் வறுமை நளினியை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நளினி இனி தன் சரிதை என எழுதாமல் புனைவு புதினம் என்றே எழுதி துவங்கலாம்.
இந்த கதை எப்படி கேரளா பண்பாட்டு தளத்தை கேள்விக்கு உள்ளாக்கும். அரசே மீட்பு பணி செய்து இவர்களுக்கு வேலைகள் அமைத்து கொடுத்தாலும் இவர்கள் விரும்பும் ’திரில் பாலியல்’ வாழ்க்கையை விட்டு வரப்போவது மாதிரி இல்லை.
இப்புத்தகம் ஒரு சராசரி பெண்ணுக்கு
என்ன கருத்தாக்கம் தருகிறது. திரில் காதல் போன்ற வார்த்தைகள் தேன் புரட்டின ரொட்டி இருப்பது போல இருந்தாலும், அதை சுற்றி ஈக்கள் மொய்த்தது போன்ற வாழ்க்கையை சராசரி
பெண்கள் விரும்புவார்களா? பெருவாரி நளினியின் வாடிக்கையாளர்களான ஆண்கள் ஒரு நாள், ஒரு முறை, ஒரு மாதம், கூடிப்போனால் ஒரு வருடத்துடன் இவளை விட்டு போய் விடுகின்றனர் அல்லது நளினி
இடம் பெயர்ந்து தப்பித்து போய் விடுகிறாள்.
முதல் புத்தகத்தில் இருந்த நேர்மையான எழுத்தை சவால் விடும் விதம் பொய்களில் மெனையப்பட்ட, கட்டற்ற கற்பனையின் தொகுப்பாக இப்புத்தகம் உள்ளது.
முன்னுரையில் தமிழ் ஆண்களுக்கு
மலையாளி பெண்கள் மேல் இருக்கும் மரியாதை மலையாளி ஆண்களுக்கு இல்லை என
குறைபடுகிறார். தமிழ் ஆண்கள், சாதாரண மலையாளிப் பெண்களை பற்றி கொண்டு இருக்கும் இளக்கார பார்வையை நாகர்கோயிலில் குடிபுகுந்து இருக்கும் நளினிக்கு யாராவது
சொல்லிக் கொடுத்தால் நல்லது.
கட்டற்ற பாலியல் தேவை, வெட்கம் மானம் அற்ற ஒரு பெண்ணின் பணத்திற்கான வேட்கையும், ஆண்கள் மேல் கொண்ட வன்மமும், தனது பிடிவாதங்களுக்காக எவ்வித சகதியிலும் உருள்வேன் என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணின் வாழ்க்கை சரிதையை தமிழ் வெளிக்கு கொண்டு வரும் நமது இலக்கிய அரசியல் உலகின் நோக்கம் என்னவாக இருக்கும்.
இப்படியான ஒரு சூழலில் எந்த தமிழ் பெண்ணும் வரக்கூடாது என்றா! என்று தெரியவில்லை. ஆனால் நளினிக்கு தான் வாழ்ந்த வாழ்க்கை மேல் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அவருக்கு ஆண்கள் மேலுள்ள எகத்தாளம் ஆள்மனதில் உள்ள வெறுப்பை ஆண்களை வெறும் பிண்டம் போல நினைத்து எழுதி வைத்து உள்ளார்.
இலக்கியவாதிகளுக்கும் பாலியல்தொழிலாளிகளுக்கும் நிறைய இலக்கிய உறவுகள் உண்டு, அதை மலையாள எழுத்தாளர்கள் பூனத்தில் குஞ்சப்துள்ள போன்றோர் சொல்வது மாதிரி எந்த தமிழ் எழுத்தாளனும் உண்மையை சொல்லப் போவது இல்லை.
இது பெண்ணியமா? பெண் விடுதலையா, பெண் பார்வையா, ஆண் விரோதமா என்றில்லாது இந்திய அரசியல் அமைப்பு தரவேண்டிய கவுரவமான வாழ்க்கைக்கு எதிரான வாழ்வியல் ஆக உள்ளது. இது போன்ற புத்தகங்கள் அரசின் கண்ணை திறக்க வேண்டும்.
ஒரு பாலியல் தொழிலாளியான பெண் ஆண்கள் மேல்
வைத்துள்ள நையாண்டியை வாசித்து தெரிந்து கொள்ளலாம். பாலியல் தொழிலாளி எழுதிய புத்தகம் என்பதால்
பாலியல் கல்வி சார்ந்து ஏதும் கற்க உண்டா என்று பார்த்தால் மொத்ததில் மனப்பிறழ்வு
பாலியல் இன்பத்தை எடுத்துரைப்பது போல தான் உள்ளது. தொட்டால் 10 ரூபாய், பார்த்தால் 20, பேசினால் 30, படுத்தால் 50 என ஜெமீலாவில் பணப்பாலியல் எண்ணங்களின் தொகுப்பாகவே உள்ளது.
உள்ளடக்கம் யாருக்கானது என்பதே கேள்வி. பாலியல் தொழிலை எடுக்க போகும் பெண்களுக்கு என்றாலும் இப்புத்தகம் மிகவும் நுணுக்கமற்றது, அருவருப்பான வாழ்க்கை பார்வையை சொல்வது. பெண்களை பயன்படுத்தும் ஆண்கள், ஆண்களுக்காக சண்டையிடும் பெண்கள் என பெண்களை வெறும் சதை பிண்டமாக பார்க்கும் சமூகத்திற்கு தன்னை முழுமனதோடு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொடுத்த 'திரில்' நளினியுடையது மட்டுமே இதன் கருத்தாக்கம்.
பாலியல் தொழிலில் உள்ள நுட்பத்தை, எங்கே நிற்க வேண்டும் எவ்விதம் உடை அணிய வேண்டும், எப்படி பேசவேண்டும், யார் யாருடன் இருந்தார் போன்ற பெருமை தவிர்த்து இத்தொழிலால் உடல், உள்ள நிலையில் பாதிக்கப்பட்டதை பகிரவே இல்லை. இத்தொழிலில் இருக்கும் போது தன்னுடைய பெற்ற பிள்ளைகள் பாதிப்படைந்ததை பற்றியோ, ஊர் ஊராக இடம் பெயர்வதால் தங்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கையை இழப்பதை பற்றியோ குறிப்புகள் இல்லை.
இன்னொரு புறம் அரசு பெண்களுக்கான கன்னியமான வாழ்க்கை உரிமையை பெற்றுதரவேண்டும். அதை கண்டு கொள்ளாத விதம் பெண்களை மேலும் பாலியல் பொருளாக மாற்றும் பொதுமைப்படுத்தும் ஒரு தந்திரமும் இப்புத்தக குரலில் உள்ளது
பொதுவாக மலையாளப்புத்தகம் அதன் மூல மொழி மலையாளத்தில் வாசிக்க விரும்பும் நான், இப்புத்தகத்தின் மொழிப்பெயர்பாளரான என் தோழிக்காக வாங்கி வாசித்தேன். மொழி பெயர்ப்பு சிறப்பு எளிதாக வாசிக்க இயன்றது. புத்தக அட்டையும் ஆண்களை விழுங்கும் பெரும் பாம்பின் படத்துடன் சிறப்பாக வந்துள்ளது
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பல திரைப்படங்களில், விபச்சாரம் தவறில்லை என்றும், விபச்சாரிகள் அனுதாபம் தேடுபவர்களாகவும், சில சமயங்களில் மற்ற தொழில்களைப் போலவே இது ஒரு உன்னதமான தொழிலாகவும் காட்டப்படுகிறது. விபச்சாரம் உலகின் மிகப் பழமையான தொழில் என்று மக்கள் கூறுகிறார்கள். அது ஒரு தொழிலா? இது மனிதகுலத்திற்கு எதிராக செய்யப்பட்ட மிகப் பழமையான குற்றம் என்றும், அது நிறுத்தப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களை சமூகத்தின் மற்றவர்களுடன் ஒருங்கிணைப்பதில் அரசாங்கங்கள் கடுமையாக பாடுபட்டு அவர்களை இந்தக் கொடூரமான தொழிலில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி, பெண்களை விற்காமல் கண்ணியத்துடனும், பிரகாசமான எதிர்காலத்துடனும் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு .
பாலியல் தொழிலை கைவிடத் தயாராக இருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு அரசை கேட்க வேண்டும். அத்துடன் பாலியல் தொழிலாளிகளூக்கான லைசன்ஸ் கொடுக்கலாம். அதற்காக தான் நளினி போராடியும் வருகிறார்.
கண்டிப்பாக நாவலை படிக்க வேண்டும். உந்துதல் அல்ல....
ReplyDeleteஜமிலா... ஜிங்கிஸ் ஐத்மத்தாய் ரஷ்ய நாவலின் பெயர்.
ஒரு பெண் ராணுவத்தில்
சேர்ந்த தன் கணவன் திரும்ப மாட்டான்.. என
சூழலால் முடிவு செய்கிறாள். விவசாய கூலியாக.. வரும்.. ஒருவனோடு காதல் கொள்கிறாள்... எப்படியோ..திரும்பி கணவன் வந்து சேர்கிறான். இதன் மனப்போராட்டம். கனிவு,
காமம்.. ஊசலாட்டம், அன்பு. தனிமை என்பதான மனிதனைச் சுற்றிய, அவளானாலும்..
அவனானாலும்... உரிமை..... சொத்து.. தனக்கே உரித்து என்பதாக அல்லாமல்.. மனப்போராட்டத்தின்.. வெளியே அதை பயணிக்கிறது... 30 வருடத்திற்கு முன் படித்த
என் மனதில் நிழலாடும்.கதா நாயகி..
இதே... ஜெமிலா.. அல்ல..
ஜமிலா.. நாவல்.
பாலியல் தொழிலாளி , ஆணோ., பெண்ணோ,
மூன்றாம் பாலினத்து
திருநங்கையோ, திருநரோ ... பெண்ணுடனான பெண்
ஈர்ப்பாளரோ .. இப்படியான ... மனித முறையான சட்டகத்திற் வைக்கப்பட்ட உறவுகளும்.
புராண, இதிகாச, உபநிடதங்கள். , சிற்பங்கள், ஓவியங்களில்.சந்தித்த கதாபாத்திரங்கள் உண்மையிலும் நேரடியாக ...பத்திரிக்கையாளன் என்ற முறையில் சந்தித்து பழகிய அனுபவங்களும் உண்டு.
இந்திய சமூகத்தில் ...
கிரேக்க நாகரீகத்திற்கு ஒப்பான ...மிருகங்களுடன் ஆன புணர்வாளர்களையும் ...
சந்தித்தும் பழகியதும் உண்டு.
அப்போதெல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பிரகாரத்தில் உள்ளபெண் மிருகங்களுடனான
பலியல் உறவோடு பரிட்சயமாக்கிக் கொண்டேன்
இதில்..எனக்கு எந்த ஆச்சரியமும் அதிர்ச்சியோ இல்லை ....
மெரினாவில் 5 ரூபாய்
10 ரூபாய்க்கு கைதட்டி
உறவு கொள்ளும்..
. திருநங்கைகளோடு.. பழகியும்.. அவர்களின்உணர்வுகளின் . ஆழம்... குறித்து..
மனித நோக்கில். 20
ஆண்டுகளுக்கு... முன்னர். சில கட்டுரை குறும்படம் எடுத்ததும்... எந்தவித ... குற்ற உணர்வின்றி சகமனிதன். , சக மனிதனின் சொந்த உடல் உழைப்பு. ( மற்றவர்கள் அரிப்பு என்ற தோரணையால் ..என்னை அணுக வைத்ததில்லை..
பல பாலியல் பெண்களின் ...தீராத காதலர்களும் எதார்த்தத்தில் உண்டு.
அரவாணிகளுக்கும் கூட
தனித்து இருக்கும் கணவர் என்ற உறவுகளும் ஒவ்வொரு திருநங்கைகள் மத்தியிலும் எதார்த்தம்.
இதை மலை ஆடுகளுக்கு உரிய பாலியல் இச்சைஎன்பதாக மட்டும்..
நோக்குதல்,சரியல்ல...
இந்தியாவில் அந்தப்புரத்திலேயே பல மன்னர்களுக்கும் ஒரு லட்சம் மனைவிகள் இருந்த எதார்த்தங்களும் உண்டு. பலயுகங்களுக்கு முன்பாக...ராமனும் தந்தை தசரதனுக்கும் பல்லாயிரக்கணக்கான மனைவிகள் இருந்ததான காதைகள் இருக்கத்தானே செய்கின்றன ...
பெண் உரிமை ...
என்ற பொருளாதார
மட்டத்திலான வியாக்கியானங்கள் கடந்து...இப்படியான பெண்களும் வித்தியாசமான உறவாளர்களும்..கூட களத்தில் ...போராளிகளாக ..
மன்னர்களாக..
அனைத்து..மத...
இலக்கியங்கள் வாயிலாக இவை ஒன்னும் வக்கிரமான கதையல்ல...
சாகித்திய அகடமிக்கான தேர்வு பற்றிய தரவுகளை பின்புலமாக ஆய்வதே சிறந்தது.
உங்களது எழுத்து இயல்பான நடையோடு இரவு 2 மணிக்கு ..படித்த கையோடு நாவலை படிக்கவில்லை என்றாலும் தூண்டிய எழுத்து
மிக்க நன்றி
Delete