31 Jul 2021

தலை சாய்க்க இடமற்றோர்!

 
கேரளா சுதந்திரம் அடைந்ததும், நிலப்பிரபுத்துவத்துவத்தை  அழிக்கும் நோக்கில் 1959ல் நிலச் சீர்திருத்த மசோதா   அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன்படி ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் அல்லது ஒரு நபருக்கு ஒரு ஏக்கர் என்ற கணக்கில் ஒரு குடும்பம் 25 ஏக்கருக்கு மேல் கைவசம் வைத்து இருக்க  தடை வந்தது. 

அதை நடைபடுத்தும் முன் ஈ. எம். எஸ் அமைச்சரகம் கலைக்கப்பட்டது. அடுத்த  காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் ஆர் சங்கர் தலைமையில், நில சீர்திருத்தங்களுக்கான அடுத்த சட்டம் 1963 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அது நிலப்பிரபுக்களுக்கு சேதாராம் ஆகாதவிதம் வரையப்பட்டது. இதன் மூலம் நிலத்தை பயிரிட்டுக் கொண்டிருந்த குத்தகைதாரர்களுக்கு நிலத்தின் உரிமை கிடைத்தது. ஆனால் நிலங்களில் தொழிலாளிகளாக இருந்த பட்டியல் இனத்தவர்களோ பழங்குடி மக்களோ எந்த நலனையும் பெறவில்லை.

1970 களின் முற்பகுதியில் அச்சுத மேனன் அமைச்சகத்தால்  இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அத்தனை வருடங்கள் கடந்த நிலையில் கவுரியம்மா வரைந்த சட்டத்தின் பல சரத்துக்களை மாற்றி ’பல்லு போன கிழவி போல்’ இருந்தது சட்டம்.  இதன் படி பல சலுகைகளை நிலபிரபுக்களுக்கு வழங்கும் படியாகவே இருந்தது. இருந்தாலும் இந்த சட்டத்தால் நிலமற்ற 26 லட்சம் மக்கள் நில உடையவர்களாக மாறினார்கள்.

 நிலத்தை கையகப்படுத்த இயலாத வண்ணம் சட்டத்தில் ஓட்டை போட்டனர். அதாவது நிலத்தை கிருஷி பூமி என்றும் தோட்ட பூமி என்றும் பிரித்தனர். சட்டப்படி, கிருஷி பூமியை மட்டுமே அரசால் கையகப்படுத்த இயலும்.  நிலதாரர்கள் தங்கள் விவசாய( கிருஷி) நிலத்தை அவசர அவசரமாக தேயிலை, காப்பி, குருமிளகு போன்றவை பயறிட்டு தோட்டமாக மாற்றி தன்னகப்படுத்தி கொண்டனர்.

அடுத்து தங்கள் விவாசாய இடத்தை தோட்டமாக மாற்றப்போகிறோம் என்று அரசு கெசட்டில் ஒரு விளம்ரம் கொடுத்து தங்கள் நிலத்தை காப்பாற்ற வழி செய்தது.

அடுத்து இன்னொரு சூழ்ச்சியை செய்து கொடுத்தது அரசு!  ஆராதனை ஆலயங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் இருக்கும் நிலத்தை அரசு கையகப்படுத்த இயலாது.

பண்ணையாருக்கு பல மனைவிகள் அதில் பல மக்கள் இருந்தால் அவர்கள் எல்லோரும் பங்கிட்ட பின் மீதத்தை அரசிற்கு கொடுக்கலாம்.

நிலதாரருக்கு இன்னும் ஒரு சலுகையை வழங்கி இருந்த்து அரசு , அதாவது தங்கள் நிலத்தில் அளவிற்கு மீறினதை அரசிற்கு என்றில்லை,  தான் விரும்பிய நபர்களுக்கும் விருப்ப தானமாகவும் கொடுக்கலாம்

அடுத்து தங்கள் சொத்துக்களை அரசுசாரா நிறுவங்கள் கட்டுபாட்டில் மாற்றி தனி நபர் சொத்து என்ற நிலையில் இருந்து மாற்றி காப்பாற்றிக் கொள்ளலாம். இப்படியாக வலுவான சட்டத்தை பல சரத்துக்கள் இடச்சேர்க்கையாக சேர்த்து நீர்ந்து போகச்செய்தனர்.


இந்த சட்டம் ஊடாக கையடக்கப்பட்ட அரசின் நிலங்கள் என கண்டு பிடிக்கப்பட்டது 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆகும். அரசு கையகப்படுத்த அணுகிய நிலையில் பல பிரச்சினைகள் நில உடைமையாளர்களால் வரத் துவங்கியது. மேலும் சட்டத்தில் கொடுத்துள்ள சலுகைகளால் விளைந்த மாற்றத்தால்  17 லட்சம் என்பதில் இருந்து 7 அரை லட்சம் நிலம் மட்டுமே புறம்போக்கு நிலம் கணக்கிற்குள் எடுக்க முடிந்தது.  இருந்தும் ஆனால் அரசால் கையகப்படுத்த பட்டது வெறும் 64 ஆயிரம் ஏக்கர் நிலம்  மட்டுமே.

இந்த சூழலில், நிலமற்ற  அடிமட்ட மக்களை திருப்தி படுத்தும் விதம் 25 அரிஜன் காலனி, 4167 பழங்குடி மக்கள் குடியிருப்பு, தேயிலை தொழிலாளர்களூக்காக 10 ஆயிரம் லயின் வீடுகள் , மீன் பிடி தொழிலாளிகளுக்காக 520 குடியிருப்பு உருவானது. இவர்கள் இப்போது தாங்கள் வசிக்கும் நிலத்தின் சொந்தக்காரர்கள் அல்ல.  வசிக்கலாம், நிலத்தை விற்கவோ சொந்தம் கொண்டாடவோ இயலாது.


 இப்போது அரசு தங்களிடம் மக்களுக்கு கொடுக்க புறம்போக்கு நிலம் இல்லை என்கின்றனர். சமீபத்தில் எடுத்த ஆராய்ச்சியில் டாட்டா மற்றும் மலையாளம் ஹாரிஷ் நிறுவங்களிடம் மட்டுமே  கணக்குக்கு மீறின 70 ஏக்கர் நிலம் உண்டு என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களூக்கு முன் நேர்மையான தமிழகத்தை சேர்ந்த கேரளா ஆட்சியாளர் 38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயன்று கொண்டு இருக்கும் வேளையில் தற்போதைய  தொழிலாளர்கள் அரசு அதிகாரத்தில் வந்தது.

இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எஸ்டேட்  முதலாளிகள் கார்ப்பரேட்டுகளுக்கே உதவி வருகின்றனர். நேர்மை என்று பெயர் எடுத்த ராஜமாணிக்கத்தில் அதிகாரத்தை மட்டுப்படுத்தி ஒடுக்கி விட்டனர். நிலம் கையகப்படுத்தலி அரசிடம் மல்லுக்கட்டி வந்த, கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற நேர்மையான ஆட்சியாளரையும் ’ஹணி ட்ராப்’ ஊடாக முற்றும் முடக்கி விட்டனர். 


கடந்த வருடம் நிலம்கையகப்படுத்தும் வேளையில் ஒரு தம்பதி தீயிட்டு தங்களை மாய்க்கும் துயர் நிலையும் உருவானது. 

அப்படியாக கவுரியம்மா வரைந்த சட்ட மசோதாவின் பலனை இன்னும் எளிய மக்கள் அனுபவிக்கவில்லை. ஒரு பிடி இடம் கூட சொந்தமாக இல்லாது உள்ளூரிலே அகதிகளாக மாற்றப்பட்ட பல்லாயிரம் மக்கள் அல்லாடுகின்றனர்.  இதே நிலையை தான் சென்னை பூர்வகுடி மக்களும்  நிலமற்று நதிக்கரையில் ஒதுங்கி, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். 

arumbakkam

 


0 Comments:

Post a Comment