20 Jul 2012

பெண்கள் முன்னேற்றம் எவ்வழியில்...........





எல்லா போராட்டங்கள் போல பெண்கள் விடுதலையும் ஒரு வியாபார நிலையை அடைந்து விட்டது. ஒரு நடிகையை கேலி செய்து விட்டார்கள் என்றால் எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் சங்கம்; கடந்த வாரம் ஒரு சட்டமன்ற உறுப்பினரால் கொலைச்செய்யப்பட்ட 15 வயது பெண் குழந்தைக்காக போராட முன்வரவில்லை.  உரிமைக்குரல் கொடுக்க கூட் ஒரு அரசியில் உள்ள நிலையில் பெண் விடுதலை, ஆண் ஆதிக்கம் என்பதின் உண்மை அர்த்தம் விளங்கவில்லை.

ஆண் ஆதிக்கம் என்பது  ஆண்களால் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமை என்பதை விட இருபாலரும் ஒருவருக்கு எதிராக நிகழ்த்தும் ஒரு ஆதிக்கமான நிலையை குறிப்பதாகவே எண்ணுகின்றேன். ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செலுத்துவதை விட ஒரு பெண் வாழ்வில் அவள் அம்மா வடிவில், ஆசிரியை வடிவில், உடன் வேலை செய்பவள் வடிவில் பெண்ணுக்கு பெண்ணே ஆதிக்கம் செலுத்தும் நிலையே நிரம்பியுள்ளது. பல பெண்கள் தன்மானம் கருதி வெளியில் சொல்வதில்லை. ஆனால் அடாவடியான பெண்களில் குரல் மாற்றொலியாக பல ரூபத்தில் ஒலிக்கின்றது.

பல வேளைகளில்  பெண்கள் தங்கள் உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சாலும் , புலம்பல்,கோள்மூட்டாலும் தப்பித்து கொள்கின்றனர். தங்களை வலிமையற்றவர்களாக காட்டி கொள்கின்றனர்.  ஆனால் இது ஒரு தந்திரம் மட்டுமே. பெண்களை போன்று நெளிவு சுளிவாக சிந்திக்கும் திறன் ஆண்களுக்கு இல்லை. ஆண்கள் நேராக சிந்திப்பவர்கள் என்பதால் பெண்களை நேர்கொள்ள முடியாத  நிலையில் தன் ஆயுதமான உடல் வலிமையை கையிலெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். அல்லது பின்னால் நின்று அவளை கெட்டபேச்சால் திட்ட துணிகின்றனர். ஆனால் திட்டம் போட்டு மற்றவர்களை கெடுக்க அழிக்க பெண்களுக்கு நிகர் பெண்கள் மட்டுமே என்றால் அதுவே உண்மை. அடுத்தவர்களை ஆதிக்க செலுத்துவதை ஒரு வெறியாக கைகொண்டு வாழ்கின்றனர்.

பொறாமைக்கு ஈடும் அவர்களை தவிற வேறுயாராலும் இயலாது. 

அடுத்தவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாது தாங்கள் நினைப்பது மட்டுமே சரி என்றும் தான் மட்டுமே நல்லவள் வல்லவள் என்ற மேட்டிமையில் வாழ்கின்றனர்.

இன்று நான் சந்தித்த, பள்ளி முதல்வரான என் தோழி, தன் அனுபவத்தை இப்படி தான் சொல்கின்றார். ஒரு முதல்வரிடம் பணிவாக நடந்து கொள்ள விரும்பாத ஆசிரியைகள், அந்த பள்ளியின் தாளாரை சந்தித்து தனி இடத்தை பிடித்து விட தயங்குவதில்லை. ஒரு முதல்வர் என்ற பதவியை ஒரு கேலிக்குறிய இடத்தில் நிறுத்திவிட்டு தங்கள் சுயமான ஆசைகளை நோக்கங்களை நிறைவேற்றி கொள்கின்றனர். இதிலுள்ள தார்மீக கேள்விகளோ, ஒழுக்கமோ அவர்களை அலட்டுவதில்லை. அந்த நேர தேவையை மட்டும் மனதில் கொள்கின்றனர்.

பெண்கள் அதிகமாக பணிபுரியும் துறை என்ற நிலையில் கல்வி நிலையங்கள் போர் தளங்களாகவே மாறியுள்ளது. ஒரு பெண் மன அமைதியுடன் பணிசெய்யும் சூழல் அங்கு இல்லை. பல ஆசிரியைகள் இதனால் மன உளைச்சல் அதை தொடர்ந்த உடல் உபாதைகளால் துன்புறுகின்றனர். கேன்டீன், பெண்கள் கூடும் இடமெங்கும் பெருமூச்சுகள் கொண்டு நிறைந்து உள்ளது. இதற்க்கு பெண்கள் மனநிலையை காரணம். அவர்களால் அடுத்தவர்களை சகித்து கொள்ளவது என்பது இயலாத காரியம். பொது நிகழ்ச்சிகளில் கூட, ஆண் ஆசிரியர்கள் ஒரு குழுவாக நின்று அரட்டையில் நேரம் செலவிடும் போது பெண் ஆசிரியைகள் இரண்டும் மூன்று பேராக நின்று குசுகுசுத்து கொண்டு நிற்பார்கள். இவர்கள் பேசும் விடயங்கள் கூட மாணவர்கள் முன்னேற்றம் பற்றியோ, சமூகத்தில் நிகழும் வறுமையை பற்றியோ, தண்ணீர் தட்டுபாடு  பற்றியோ இருப்பதில்லை; தான் வாங்கியிருக்கும் சேலையை பற்றியும் தன் மகன் வீரச்செயல் அல்லது கணவனுடன் உள்ள செல்ல-ஊடல்கூடல் பற்றியதாக தான் இருக்கும்.

பெண்கள் படித்தால் எல்லா சிக்கலும் ஓய்ந்து நாடு விழிப்புணர்வை நோக்கி செல்கின்றது என்றனர். ஆனால் தான் பெற்ற கல்வியை வைத்து சமூக மதிப்பீடுகளுக்கு புது அர்த்தம் கற்பிக்கின்றனர், அதை வைத்தே அடுத்தவர்களுக்கு குழி பறிக்க நினைக்கின்றனர்.

யதார்த்தமான, வெகுளியான பெண்கள் உலகம்; வஞ்சனைக்கும் கோபதாபங்களுக்கும் தூபம் இடம்படியாக மாறி வருகின்றது. இன்று பல இளைஞர்கள்  படித்த பெண்கள் தங்கள் மனைவியாக வருவதையே ஆபத்தாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அரசியலிலும் சம பங்கு தர போராடும் பெண்கள் அந்நிலையை எட்டி விட்டால் விடுதலை பிறக்குமா அல்லது விடிவே இல்லாது போகுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.



1 comment: