22 Mar 2020

செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள். 1920- 2016


தனது தாயாரின் நினைவை பேண, மகள் காலச்சுவடு பதிப்பகம் ஊடாக வெளியிட்ட புத்தகம் இது. பதிப்பாசிரியர் அம்பை. 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கதை ஆசிரியை அமைதியான ஒதுங்கிய குணம் படைத்தவர். ஆதலால் தங்களுக்கு அவர் உள்ளக்கிடக்கையை புரிந்து கொள்ளவில்லை இன்னும் அங்கீகரித்து இருந்திருக்கவாம் என நாலாவது மகள் குறிப்பிட்டுள்ளார்

ஒரு பெண் தனது 16 வது வயதில் கொஞ்சம் வசதி வாய்ப்பு குறைந்த நாகர்கோயிலில் ( கரமனை) வீட்டில்  இருந்து  வசதியான வழக்கறிஞர் வீட்டில் திருமணமாகி திருவனந்தபுரம் வந்து சேர்கிறார். நாலு குழந்தைகளுக்கு தாயார் பொறுப்பான அம்மா , மனைவியாக வாழ்ந்தவர் தன்னுடைய மணவாழ்க்கையை பற்றி தான் எதிர் கொண்ட பிரச்சினைகளை எழுதி வைத்துள்ளார்.

இப்புத்தகம் ஊடாக நாம் அறிவது பிராமணர்களின் வாழ்க்கை சூழல் , கூட்டு ஜீவிதம், அவர்கள் பண்பாட்டு தள ஆசாரங்கள் , உறவு முறைகள் , குடும்ப அமைப்பின் மேல் சாதாரண பெண்கள் எழுப்பும் கேள்விகள், குடும்ப அமைப்பு, உற்றார் உறவினர் உறவுகளால்  பெண்கள் பாதிக்கும் விதம்.

சுவாரசியமான சில நிகழ்வுகளை அறிய முடிகிறது. பருவம் எய்வதற்கு முன்பே திருமணம் ஆகி கணவர் வீடு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. பரும்ஆன பின்பு சாந்தி முகூர்த்தம் போன்ற இத்தியாதி சடங்குகள் வைத்துள்ளனர்.அந்த இடைப்பட்ட காலம் கணவரை ஒளிந்து பார்த்து பழகுவது.
திருமணம் ஆன புதிதில் கணவருக்கு காசநோய் வந்ததுள்ளது. , வீட்டிற்கு விருந்துக்கு வந்த வடிவு என்ற தோழி விதவையாகும் நிகழ்வை பற்றி பயமூட்டும் தகவல்கள் சொல்ல சொல்ல பயந்தே போய் விட்டார். வாழ்நாள் முழுதும் விதவை நிலையை பற்றி சிந்திப்பதும், விதவை நிலை அவரை துரத்துவதுமாக இருக்கிறது.
விதவைகளை பற்றி பல இடத்தில் குறிப்பிட்டு விசனப்பட்டுள்ளார். விதவைகளை நடத்தும் விதம் பற்றி பல இடங்களில் எழுதியுள்ளார். தனது அம்மா , பாட்டி , தனது தங்கை விதவையானதும் அவர்கள் மனப்பாங்கையும் பல இடங்களில் தெளிவுப்படுத்தியுள்ளார்.  தனது பாட்டியின் தெளிவான கருத்தும் அவருடைய சுதந்திரமான   சிந்தனைக்கு உதவுகிறது. இருப்பினும் அது ஒரு பய மனோபாவமாகவே (போஃபியாகவே) வாழ்க்கை நெடுக துரத்தியுள்ளது.
நல்ல நட்புகளை பேண இயன்றிருக்கிறது. சினிவாவிற்கு நண்பிகளுடன் தனியாக சென்று வந்தது தனக்கு கிடைத்த பணத்தை தன்னுடனே வைத்திருக்க இயன்றுள்ளது. ( இன்றையவேலைக்கு போகும் பெண்கள் கணக்கில் பணம் உள்ளதா , என்றும் கேட்டால் விளங்கும் இன்றைய நிலை பற்றி)

அடுத்து செல்லம்மா திருமணம் முடிந்து வந்த வீடு ஒரு பெரும் கூட்டுக்குடும்பம். மாமனார் பெயர் பெற்ற வழக்கறிஞர் அவர் மனைவி இறந்ததும் இரண்டாவது ஒரு பெண்ணை மணம் முடிக்கிறார். அந்த இரண்டாம் மனைவிக்கும் மாமனார் மகளுக்கும் ஒரே வயது என சங்கடப்படுகிறார். விதவை நிலை பூண்டதும் ஆண்கள் உடன் திருமணம் முடிப்பதும் பெண்களுக்கு சமூக கட்டுப்பாடு உள்ளதையும் கேள்வி எழுப்புகிறார்.
பிரபல பின்னனி பாடகி ஜானகியை முன் நிறுத்தி ஒரு கேள்வி எழுப்புகிறார், பின்பு அவரே ஒரு முடிவிற்கும் வருகிறார்.ஜானகி தனது கணவரை இழந்ததும் வெள்ளைச்சேலை கட்டி கொண்டு  பொட்டு வைக்காது நிகழ்ச்சிகளுக்கு பங்கு பெறுவதை எதனால் என்று சிந்ஹிப்பதும் இந்து மதத்தொல் தான் இது போன்ற பாகுபடு என சாடுகிறார். இவருடைய இந்து மத எதிர்ப்பை இவர் மகன், மகள் ஏற்று கொள்ளவில்லை என்றும் வருந்துகிறார்.

அடுத்து புகுந்த வீட்டிலுள்ள நாத்தனாரை பிடிக்கவே இல்லை இவருக்கு. நாத்தி நாத்தி என பல இடத்தில் குறிப்பிட்டுள்ளார். நாத்தி தான் தன் பெரிய மகளையும் மகனையும் வளர்த்ததாகவும் அதனால் அந்த குழந்தைகள் தன்னை மதிக்கவில்லை எனும் வருத்தம் கொள்கிறார்.

அடுத்து செல்லம்மாவின் பிறந்த வீடு .அங்கு 7 பிள்ளைகள். மீனா திருமணமாகி விதவையாகி தந்தை வீட்டில் திரும்பி வந்தவர். செல்லம்மாவை திருமணம் முடித்து கொடுப்பது மாப்பிள்ளை பெரிய படிப்பு படித்தவர் வெளிநாடு, வெளியூர் போய் மகளுக்கு நிறைய நகை நட்டு போட்டு ஆடம்பரமாக வைத்திருப்பார் என்பது தான். தாய்க்கு ஏமாற்றம் கொடுக்கிறது. மகளை தரம் கிடைக்கையில் எல்லாம் சுதாரித்து தனிக்குடித்தனம் போக பரிந்துரைக்கிறார்கள், புகுந்த வீட்டு ஜெனங்களை வசை பாடுகிறார்கள். தன் மருமகன் அப்பா பிள்ளையாக இருப்பதில் வருத்தம் மட்டுமல்ல தன் மகன் இன்னும் சாமர்த்தியமாக வாழவில்லை என்ற தவிப்பும் உள்ளது. இயன்றளவு மகள் வீட்டிற்கு போவதை தவிற்கின்றனர். குறிப்பாக  தனது கணவர்  மரணப்பட்ட பின்பு மகள் வீட்டிற்கு வருவதை குறிப்பாக, நாத்தனார் சீத்தா முகத்தை எதிர் கொள்ள விரும்பவில்லை.
ஒரு முறை செல்லம்மா தம்பதிகள் வீட்டில் மகனுக்கு பூணூல் இடும் விருந்து விசேஷம். தன் தாயாரை அழைக்கிறார். தாயாரோ நான் விதவைக்கோலத்தில் உன் வீட்டில் காலெடுத்து வைக்க மாட்டேன். உன் நாததினார் இளக்காரமாக நடத்துவார் என்கிறார். தாயை எவ்வளவோ பரிவாக அழைத்தும் அவர் பணத்தை கொடுதது அனுப்பி விடுவார்.
அடுத்து தன் நாத்தனார் சீத்தாவை அழைக்க வருவார். அவரோ உன் அம்மா வருவா என்னால் வர இயலாது என்பார். உடனே நாத்தனாரிடம் , எனது அம்மா வரமாட்டார் என அடித்து சொல்வார்.

அம்மாவும் வரவில்லை.  செல்லம்மா வீட்டில் நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் தூங்க கிளம்புவர்கள். தன் கணவரிடம் என் அம்மா வரவில்லை என்பதை ஏன் நீங்கள் பெரிது படுத்தவில்லை என கணவரிடம்  சண்டைபிடிக்க வருவார். அவரோ பொருட்படுத்தாது என்க்கு தூங்கபோகவேண்டும் நாளை வழக்கு மன்றம செல்ல வேண்டும் என்பதை கூறி ஒதுங்கி கொள்வார்.  அன்றைய இரவு கணவர் எங்கு படுத்து தூங்கினார் என் குறிப்பிடுகிறார்.   அடுத்த ஒரு முறை ஒரே திரைப்படத்தை தோழிகளுடன்  இரண்டாவது முறையும் பார்த்து விட்டு திரும்புகையில் மாமனார் வசைபாடுவார். கணவரிடம் முறை இடுகையில் நீங்கள் ஏன் உங்கள் அப்பாவை திட்டக்கூடாது என்கிற போது நீ திருப்பி அப்பாவை திட்டு என்னால் என் அப்பாவை திட்ட ஏலாது. உங்க அப்பனை என்று கதைக்காதே என் கண்டித்து விட்டு செல்வார்.
செல்லாம்மாவிற்கு கணவர் நிறைய சம்பாதிக்க ஆரம்பித்த்தும் நாம் ஏன் தனிக்குடிதனம் போகக்கூடாது என கெடுபிடியாக நிற்பதும் அல்லது தன்னை நாகர்கோயிலில் தனியாக குழந்தைகளுடன்  குடியமர்த்த கூறுகையில் அது ஒரு போதும் சரி அல்ல என்று கணவர் மறுத்து விடுவதும் துக்கம் கொள்ள செய்யும்.

நல்ல துணிமணிகள் இல்லை என ஒருபுறம் கூறுகையில் 1500 ரூபாய் கையில் வைத்திருந்தாலும் 20 ரூபாய்க்கு  உடை எடுக்கும் சிக்கனக்காரி செல்லம்மாவையும் காணலாம்.
நாத்துனார் செய்முறை கேட்டார் என தனது தாயிடம் எனக்கு இரண்டு சவரன் கல் மாலை  செய்து தரக்கூறுவார். தாயோ உனக்கு இளைய பிள்ளைகள் இங்கு உண்டு. என்னால் தர இயலாது எனக்கூறி செல்லம்மாவிடம் உள்ள நகையை உருக்கி கழுத்து மாலை செய்து கொடுப்பதும். சில நேரம் இது என்ன செல்லம்மா? என கேட்க வைத்திடுவார்.   பின்பு செல்லம்மாள் ஒரு தாலியை தொலைக்க,  உருக்கி கல் மாலை செய்தது கணவர் வீட்டில்ல் தெர்ந்து கடிந்து கொண்டாலும் மாமியார்  தனது மாலையை கழுத்தில் அணிய கொடுத்திருப்பார்.  பின்பு செல்லம்மா தாயாரே நாலு சவரனுக்கு மாலை செய்து கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மகள் திருமணம் முடிந்த் பின்பு தாயார் கற்பவதியாகுவதும் தனக்க மகளுக்கும் தன் தங்கைக்கும் ஓரிரு மாதங்கள் இடவெலியுடன் வள்ர்வதும் சுவாரசியம். செல்லம்மா திருமணம் முடிந்ததும் இரு பிள்ளைகள் பிறக்க அந்த பிள்ளைகளுக்கு 21, உம் 19 உம் வயது இருக்கையில் தனது நாலாவது பிள்ளையை வேண்டும் என்றே பெற்று வளர்ப்பதும் அவருடைய மாற்றத்தை காட்டுகிறது. 16 முழம் மடிசார் சேலையில் இருந்து 9 முழம் தெலுங்கு சேலைக்கு மாறினதை  குடுமப உறுப்பினர்கள் முறுமுறுப்பையும் தாண்டி பெரும் சாதனையாக குறிப்பிட்டுள்ளார். 9 முழம் சேலையை கொள்ளாது தனக்கு வாசிக்க  உள்ளது என் கடந்து சென்றது பெரும் வலியை கொடுக்கிறது.

செல்லம்மாவின் மகள் அணிந்துரையில் தனது அம்மா தனது அத்தையை இத்தனை குறை கூறியிருந்தாலும் உயிருடன் இருக்கையில் தன் செயலில்  வெளிப்படித்தினது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செல்லாம்மாவின் உள் மனதில் வேண்டிய பரிவும் காதலும் அரவளைப்பும் கணவரிடம் கிடைக்காததும்  கணவர் வீட்டார் தன்னை மதிக்காததும் பெரும் துயராகவே இருந்துள்ளது.
40 வயதிற்கு மேல் கார் வசதியான வாழ்க்கையை அம்மா பகிர்ந்து கொள்ளாததையும் மகள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார். செல்லம்மாவிற்கு தான் நல்ல வெள்ளையாகவும் தன் கணவர் கறுப்பாகவும் இருந்ததும் கொஞ்சம் மன் வருத்தம் தான். தன் கணவர் வீட்டாரை தவிர்த்து மற்றவகள் தன்னை அழகு என புகழ்வதையும் ரசிக்கிறார். தன அழகு அடையாளம் சார்ந்து தான் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் கணவர் தான் விரும்பினது மாதிரி தன்னை  மட்டும் நேசிக்கும் தனக்காக வாதாடும் கணவராக இருக்கவிலலி என்பதும் அவருக்கு ஏமாற்றம் தான்.

புத்தகம் முழுக்க செல்லாம்மாவின் மனத்தாங்கல்களூம் கேள்விகலூம் வருத்தங்கலும் தான்.
செல்லாம்மாவிற்கான நல்ல சுதந்திர சூழலும் பரிவான சூழலும் இருந்தும் சில வரட்டு பிடிவாதங்களால் வாழ்க்கையை அன்ய்பவிக்காது கேள்வியோடே நகத்தி சென்ற வாழ்க்கை அத்துணை ஆரோக்கியமான முன்னெடுப்பா என சிந்திக்க வைக்கிறது.
செல்லம்மாவின் அம்மா தன் மகளுக்கு கொடுக்கும் அறிவுரையை குறைத்திருக்கலாம். பல இடங்களில் செல்லம்மாவை ஒரு தோல்வியின் , தியாகத்தின் கதாப்பாத்திரமாக மாற்ற அவருடைய அம்மாவின் பேச்சுக்கள் மறுக்க இயலாது.
செல்லம்மா தனது கணவர் 86 வயதில் மரிக்கும் வரை  கணவருடன் வாழும் சூழலும் கணவர் இறந்த பின் தனியாக தனிமையாக வாழ விருப்பபட்டதும் தனுடைய மகன் தயவில் பாதுகாப்பில் இருக்க விரும்பாது கணவர் சொத்து முழுதும் தன் பெயரில் இருந்ததால் பயணங்கள் , பிடித்த நட்புகள் என வாந்து மறைந்துள்ளார் என்பதை மகளின் எழுத்தில் இருந்து புரிந்து கொள்ள இயலும்.



31 Dec 2019

90 ஸ் தோழமை!

27 வருடங்களுக்கு பின்பு சந்தித்த பள்ளி தோழமைகள்.

 நாங்க முகம் பார்த்து பேசினது நாலாம் வகுப்பு வரை தான். ஏழாம் வகுப்பு வரை நீயா நானா என சண்டையிட்டு, மாறி மாறி ஆசிரியர்களிடம் மூட்டி விட்டு அடிவாங்கி கொடுத்த நாட்கள்.

 அடுத்த 3 வருடம் ஒளித்தும் மறைந்து பார்த்தும், பார்த்தும் பார்க்காதது மாதிரி,  கேலி பேசி ரோட்டின் இருவோரம் நடந்து சென்ற நட்புகள்.  பெண்களுக்கு ஒரு வழி என்றால் ஆண் மாணவர்களுக்கு இன்னொரு வழி . அவன் வகுப்பை கடந்து போனால் கூட, கொஞ்சம் கூட எட்டி பார்க்காமா கெத்தா எட்டு வைத்து நடக்க...
என்னடா பெரிய இவளுகளாட்டும் திமிறா போறா,
அவ பாவம்டா, அவ கூட போறா பாரு....
பெரிய உலக அழகிக....
அது விடு உனக்கு கிடைத்த காதல் கடிதத்தை எடு என ஒன்றாய் இருந்து வாசித்து கொண்டு
அந்த ஓட்டை ஓலப்பள்ளியில் இருந்து எட்டி பார்த்து கொண்டிருந்த மாணவர்கள்.

என்னடா இந்திரா காந்தி எப்படி இருக்கா? போம்மா இப்ப இதை கேட்டுகிட்டு. ஏன் பொண்டாட்டிட அடி வாங்கி தராம விட மாட்டே....

ஏய் அந்த தேயிலப்புர ஷெட்டு தானா....
 அப்புறம். என்ன அப்புறம். அவ வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டா
அப்போது அதையும் தெரிந்து வைத்திருக்க
ஏய் துபாயில் இருந்து வந்த சாபு சொன்னாமா
அப்ப நீ கேட்ட
விடுமா தாயே...
 அப்புறம்... நீ என்னடா படிக்கும் போது கிறிஸ்தவ சாமியாரா போகப்போறேன்னே....
யே ...அது விடு.
 இவ தான் என் மனைவி , இரண்டு ஆண் பிள்ளைகப்பா அடுத்து ஒரு பெண் பிள்ளைக்காக ஏங்கிட்டு இருக்கோம்.
என்னடா அனியாயம்... இனியும் ஏங்கிட்டு இருக்கியா ,
 டே கொல்லாதடா  நாங்கல்லாம் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கிட்டு இருக்கோம்.

உன் விரலை காட்டு. எங்க வீட்டுக்கு டுயூஷன் படிக்க வந்த போது தானே தையல் மிஷனில் கைய விட்ட.
ஆமாப்பா இன்னும் அந்த தளும்பு இருக்கு பாரு...

என்ன மோனி ஒல்லி குச்சானா வெள்ளை வேட்டியை  ஒரு பக்க தும்ப மட்டும் பிடித்து கொண்டு ஈ ....ன்னு எங்க வகுப்பையே பார்த்துட்டு நிப்பயே?
நீ போம்மா  அத நினைக்குத மாதிரியா நிலைவரம். பொண்ணு காலேஜுல படிக்கா பையன் + 2 வில். .....
மோனி அந்த ரகசியத்தை தான் சொல்லி தொலையேன்.
அது அந்த உங்க வகுப்புல இருந்தாளே நெற்றில சந்தனம் வச்சு தலை முடியை விரிச்சு போட்டு வருவாளே....
அவ பேரு தான் மறந்திட்டு....

பொய் சொல்லாத அந்த ஷீலப்புள்ளை தானே?

நம்ம வகுப்புல அமர காதலுமா ஒருத்தன் இருந்தானே . சாரிடம் அடி வாங்குனானே..
அவனா....அவந்தான் குடிச்சு குடிச்சே செத்து போயிட்டானே
போன வருடம்.
இஸ்மாயில் தான் என்னன்னா கனவோடு இருந்தான். ரொம்ப கஷ்டபட்டு பட்டம் முடித்து அரசு தேர்வுலையும் தேர்வாகி ....அழகான இரண்டு சின்ன  பிள்ளைகளை விட்டுட்டுல்ல அந்த விபத்துல போயிட்டான்.
உன்னை தான்டா மறக்க முடியாது நீ மொறைக்கா நான் மொறைக்கா அந்த  பள்ளிமாணவர்கள் இலக்ஷன்ல என்ன தோற்கடிக்க என்னமா வேலை பார்த்தே...
அதை விடும்மா
அதை சமரசம் செய்ய தானே ஆரஞ்சு மிட்டாய் கொண்டு உன் கையில தந்தேன்.
இப்பவும் கவிதை எழுதுதையா
காதல்கடிதம் எழுதி கொடுத்து மாட்டினீயே
ஆமாம்மா உங்க கூட்டத்தில இருந்தவா தானே?
அப்புறவும் எழுதி கொடுத்து கொண்டு தான் இருந்தேன்... ஆனால் வேறு பிள்ளைக்கு

என்னம்மா இப்படி குண்டாயிட்டா?
மெலிய வீட்டுல மிஷின் வாங்கி போட்டுருக்காராம் கணவர், துபாய் பயணம் அழைத்து போகிறேன்னு சொல்லியிருக்காராம்.
ஆளுக்கு வேலை அப்புறம் தூக்கமாம்
என்னடி மாயா ஜாலம் 27 வருடத்திற்கு முன்பு பார்த்தது மாதிரியே இருக்கிறீக
என்ன மந்திரம்ப்பா...
உன் பொண்ணு உன்னை விடையும் அழகா பாடுதா
உங்க அப்பா மகிழ்ந்திருப்பாரே
நம்ம டான்ஸ் போட்டிக்கு உங்க அப்பா பாடுவார் பாரு இன்னும் மறக்கல

ஏன் அஜி வரலையாம்
அவனுக்கு லீவ் கிடைக்கலையாம்ப்பா
அன்று யாரிடவும் பேசாது மேரிகூடவே நடந்து போவாளே அவளாப்பா இது...நம்பவ முடியல
 அதுல ஒருத்தன் ஒருத்தியிடம் உனக்கு ஒரு உடாய்பு இருந்ததாமே
இது எவன்டா கிளப்பி விட்டது
யே....உண்மையை சொல்லு...
மனசுல கொஞ்சூண்டு அந்த ஓரத்துல
அவனுக்கு போன போடு கேட்டா போச்சு
அவனும் வீடியோ காள்ல வந்தான்
என்னடா இவனுக எல்லாம் உனக்கு காதல் இருந்துன்னு சொல்லுதானுக...
ஐய்யோ அம்மா அப்படி ஒன்னும் இருந்தது இல்லையேன்னு தலைதெறிக்க ஓட
நாங்ல்லாம் கேட்டவன பார்த்து இப்ப நம்புனையா கேனப்பயலேன்னு திட்ட

றீனா..... நம்ம ஆறாம் வகுப்புல நீ சொன்ன கதை ஞாபகம் இருக்காடி....

எந்த கதை?....அந்த கதையா
விடுப்பா அதை போய் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க...
நம்ம அப்படியே பருந்தன் பாற போவோமா. நம்ம தோழி திரேசாவிற்கு ஆச்சரிய விசிட் கொடுப்போம்.
நீயும் நானும் சண்டை பிடிக்கது கட்சிக்கு தானே
இப்போது எந்த அரசியலில் இருக்கே?

உனக்கு தெரியுமே நான் கேஎஸ்யூன்னு பின்பு
காங்கிரசில் இருந்தேன் இப்போது எந்த கட்சியிலும் இல்லை
நீயும் அஜியும் தானே முகநூலில் சண்டை போடுதீக
அவன் தான் கம்னீஸ்டுன்னு பேசுவான்ப்பா
ஆர்மி அனிலிடவும் வாக்கவாதம் தான்
அவன் சரியான சங்கி வெறியன்ப்பா
மைசூரில் இவனும் பிஜெபி
ஜிம்மி நீ எந்த கட்சி ?
நான் ஜெயிக்குத கட்சியில இருப்பேன்மா
நீ எப்பவும் அப்படி தானே
ஆமாப்பா பிழைத்து போக வேண்டாமா
பள்ளியில் படிக்கே ஒரே சட்டையை வைத்து கொண்டு கலர் பொடியில் முக்கி காய வைத்து கலர் கலரா சட்ட போட்டு வந்தவனாக்கும்
இப்போது நான் இருக்கும் வீடு கோடிக்கு பெறும்
ஷூபா உன்னை பார்த்தால் நம்ம அம்மினிக் குட்டியம்மா டீச்சர் மாலிரி இருக்க....
விடுங்கடி
கடந்த வருடம் இதே நாள் காலையில் இருந்து மாலை வரை 90 Batch  இவ்வாறாக பேசியும் சிரித்தும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

அன்று, நாங்க பிரிந்த போது இருந்த வயதில் இருந்த பிள்ளைகள் நாங்கள் மகிழ்வதை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்

எங்களை கடைசிவரை சூரல் கம்பின் துணையுடன் பேச ஏன் பார்க்கவே அனுமதிக்காது இருந்த லக்ஷ்மி குட்டியம்மா முதன்மை ஆசிரியர் இருந்திருந்தால் இந்த பச்ச பாசமலர் புள்ளைகளையா புரிந்து கொள்ளாமலே இருந்தோம்ன்னு நிச்சயமாக வருந்தியிருப்பார்கள்.

29 Dec 2019

சரோஜா அத்தை. என் குழந்தைப்பருவத்தில் நான் சிரித்து மகிழ்ந்து தங்கிவிளையாடிய  ஒரே ஒரு இடம் அத்தை வீடு.

அத்தை, நாரயணன் மாமா ராணி, றீனா அக்காக்கள் அருள்  அத்துடன் என் தம்பி தங்கை,சித்தப்பா பிள்ளைகள் மூன்று, பெரியப்பா மகன்கள் 3, சில போது ஊரில் இருந்து  மாமி மகன்கள்,  மாமா வீட்டு சொந்தங்கள் என அத்தை வீடு எப்போதும்  விழாக்கோலம் தான்.

அத்தை கணவர் தேயிலை தோட்ட அதிகாரி என்பதால் காட்டுக்குள் வீடு, வீட்டில் இரு உதவியாளர்கள், 4-5 பசுக்கள், கோழி, வாத்து,  பூனைகள்  டைகர் நாய்,அருள் வளர்க்கும் முயல்,கிளி  என எப்போதும் பெரும் கும்பல்.

உணவு நேரம் என்பது தோட்டத்தில் இருந்து வெட்டிய வாழை இலை, சோறு, கோழிக்கறி, கறிப்பொரியல் அவியல், தைர், சாம்பார் , அப்பளம், ஊறுகாய் பாயசம் என கொண்டாட்டம் தான்.

வீட்டில் பல அறைகள். அதில் ஒரு அறை நாங்கள் எங்கள் உடைகளை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் அங்கு தான் பேய் இருக்கிறது என பேசிக்கொள்வோம். நடு அறை, படுக்கை அறை, முன் விருந்தினர் அறை , தேயிலை வேர் கொண்டு செய்த செருப்பு ஸ்டான்டு, வராந்தாவில் நாய் டைகர் தன் அதிகாரத்தை நினைவு படுத்தி கொண்டு கிடக்கும் இடம் என அந்த வீடு ஒரு  சொர்க்கம் தான்.

மாமாவிற்கு செடிகள் மேல் விருப்பம். அங்கு தான் விதவிதமான ஜீனியா பல வண்ணங்களிலான  டாலியா , கொய்யா மரம்  வீட்டோடு நிற்கும் சாமங்கா மரம் பலா மரம் என வீட்டை சுற்றி செடிகள்.

இத்தனை வேலைக்கு அப்புறம் சாப்பாட்டை முடித்து குட்டி தூக்கம் போட்டு எழுந்ததும் காப்பி பலகாரம் சாப்பிட்டு விட்டு மாமா மதியம் எப்போது மஸ்டர்டு ஆபீஸ் போவார் என காத்திருப்போம்.

அவர் நாலு மணிக்கு கிளம்பி போன பின்பு  அத்தை நரி, நாங்கள் கோழிகள் என வேடம் போட்டு ஓடி விளையாட்டு தான்.. அத்தை நரி என்பதால் மாமாவின் கால் சட்டை,  மழை கோட்டு , தொப்பி அணிந்து எங்களை விரட்டி வருவார்.
 6 மணிக்கு மாமா வீடு திரும்பும் முன் முகம் கழுவி பவுடர் போட்டு   பூவெல்லாம் சூட வைத்து சோபா , கதிரைகளில் கதை புத்தகங்களுமாக இருந்திடுவோம்.

அத்தை சொன்ன எத்தனை எத்தனை கதைகள். அவர் குரல் ஏற்ற இறக்கத்துடன் கதை சொல்வதும், நடித்து காட்டுவதும் இன்று நினைத்தால் எவ்வளவு அழகான குழந்தை பருவத்தை என் குழந்தைகளுக்கு கூட கிடைக்க இயலாது இழந்து விட்டேன் என பெரு மூச்சு கொள்கிறேன்.

இரவு படுக்க போகும் முன் ஜெபம் செய்து விட்டு தூங்க வேண்டும். மாமா ஜெபத்தை ஏறெடுத்து, பாட்டு பாடி அது போய் கொண்டிருக்கும். அவர் கண்ணை மூடி ஜெபிக்கிறார் என்ற நம்பிக்கையில் நாங்கள் பிள்ளைகள் கண்ணை திறந்து மாறி மாறி நோக்கும் போது எங்களுக்கு முன்னே அத்தையும் கண்ணை திறந்து எப்போது மாமா நெடிய ஜெபத்தை முடிக்க போறாரோ என செய்கை காட்டி கொண்டு இருப்பார்.

அந்த வீட்டில் தான்  எப்போதும் வெற்றிலை செல்லத்துடன் பைபிள் வாசித்து கொண்டிருக்கும் என் அப்பா பாட்டி ரத்னா பாய், என் அத்தையின் மாமியார்: ஒரு வயதான வட்ட வடிவ முகம் கொண்ட பாட்டியையும்  கண்டுள்ளேன். என் அம்மா பாட்டியும் அத்தை வீட்டில் வந்து தங்குவார்.

அத்தை கடைகுட்டி என்பதால்  நாலு அண்ணன்களும் அத்தையை பார்க்க தோட்டத்திலுள்ள பொருட்கள் கொடுக்க வந்து போய் கொண்டு இருப்பார்கள்.
டவுணில் கல்லாப்பெட்டியை விட்டு நகராத என் அப்பாவும் போகும் இடம் அத்தை வீடு தான். 
அத்தை வீட்டிலிருந்து திரும்புதல் என்பது எனக்கு பிடிக்காத விடையம் என்பதால்; ஒரு நாள் பிந்தி என் வீடு  வந்து சேரும் எனக்கு எங்க அம்மா நல்லா வெளக்குமார் பூசையும் வைத்திருப்பார்

ராணி அக்காவிற்கு பூப்பெய்து நிகழ்வில் கல் பட்ட தேனிகளாக அந்த கூடு கொஞ்சம் கலைந்தால் கூட ராணி அக்கா கல்யாணம் வரை அந்த தேனிக்கூட்டம் இருக்கதான் செய்தது.

5 வருடம் முன்பு அத்தையை சந்தித்து வந்த போது
 இப்போதும் அதே குழந்தைத்தனத்துடன்,  அதே குறுகுறுப்புடன் பார்வையுடன்,நோய்களையும் துணைக்கு வைத்து கொண்டு  சிரித்து பேசி அத்தை ஒரு மறக்க இயலா என் தோழி.!