22 Apr 2018

குழந்தை பாலியல் வல்லுறவு கொலையும் பீடோபிலியாக்களும்!


குழந்தைகள்  மீது வரும் செக்ஸ் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர்.  13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு  முன் உள்ள குழந்தைகள் மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையாகும் பீடோபிலியா.

இந்நோயின் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, சில வேளைகளில் ஒரே  குடும்ப  உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இதே குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கண்டு பிடிக்கப்பட்டாலும் இது குடும்ப பாரம்பரிய நோயா ஜீன்களால் வருவதா என கண்டு பிடிக்கவில்லை. ஆனால் சில மன மருத்துவர்கள் இது நோயல்ல, இது சுய இன்பம், ஓரினை சேர்க்கை, போற்று ஓர் பழக்க வழக்கம் என்று கூறுகின்றனர். இந்த நோய் தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது கற்று தேர்வதோ அல்ல இயல்பாக சில மனிதர்களில் காணப்படுவது தான் என உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்,.  பீடோபிலியா  என்பதை ஒரு விகல்பமான செக்ஸு விருப்பமாகவே நோக்க உள்ளது

இந்த நோயாளிகளை குணப்படுத்துவது மிகவும் கடினம்.  எதனால் ப்படியான மனநிலைக்கு எட்டுகின்றனர் என்பதை பற்றி இன்னும் சரியான ஆய்வு வரவில்லை.. இந்த நோயின் தாக்கம் 16 வயது முதல் ஒரு மனிதன் அறிந்து கொள்ள இயலும். தனக்கு இது போன்ற நோய் தாக்கியுள்ளது என றிந்ததும் சிகித்சைக்காக உளவிய மருத்துவர்களை அணுகுவதில்லை. ஆனால் இவர்கள் இரைகளை தேடி அலைய ஆரம்பிக்கின்றனர் .

10, 11 வயது பெண்குழந்தைகள் 11, 12  ஆண்குழந்தைகள் இந்நோயாளிகளின் இலக்காக உள்ளனர்.  இந்த நபர்கள் கோரமானவர்களாகவோ அச்சம் கொள்ளும் தோற்றத்திலோ தெரிய மாட்டார்கள். மிகவும் நட்பாக குழந்தைகளிடம் பழகும், குழந்தைகளை எளிதாக வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

இவ்விதமான நோயாளிகள் பல பொழுதும் வெளியாட்களாக இருக்க வேண்டிய அவசியவுமில்லை. 82 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுவது சொந்த குடும்ப உறுப்பினர்களால் தான். சில பொழுது சொந்த தகப்பன், தாய் மாமா, தாத்தா சித்தப்பா போன்றவர்களாகவும் இருக்கும் வாய்ப்பு உண்டு.   சில வேளைகளில்  பள்ளி வாகன ஓட்டுனர்கள், ஆசிரியர்கள், மதக்குருக்கள் போன்றவர்களும் குழந்தைகளை எளிதாக பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்குகின்றனர். 
. 
38 வயதான சுனில் ரஸ்டோங்கி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகளின் ந்தை ஆவான்.  கடந்த 10 வருடமாக ஈனச்செயலில் தன்னை ஈடு படுத்தி வந்துள்ளான். இவனை ண்டதும் குழந்தைகள் தங்களை மறந்து இவனை பின் தொடர்வதும் அதில் ஒரு குழந்தையை தேர்வு செய்து துண்புறுத்தலில் ஈடுபடுத்துவதை வழக்கமாக வைத்துள்ளான். இதே குற்றத்திற்கு 2006 ல் கைது செய்யப்பட்டு ஆறு மாதம்  சிறை தண்டனை பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. 500 குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக விசாரணையில் ஒத்து கொண்டுள்ளான்.


இந்தியாவில் கடந்த
ஐந்து வருடமாக குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் 151% அதிகரித்துள்ளது. போக்சோ Prevention of Sexual Offences Against Children (POCSO) Act சட்டத்தின் கீழ்  8904 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் பாலியல் வல்லுரவு வழக்குகள் 277% அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 2009 ல் 5484 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 2014  ஆம் ஆண்டு 13, 766 வழக்குகள் பதிவாகியுள்ளது கவனிக்கப்பட வேண்டியது.
  
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சுற்றுலா விசா கொடுக்கும் போது அவதானிக்க வேண்டிய முக்கியத்துவத்தை குறித்தும் குறிப்பிடுகின்றார்.

இங்கு சுற்றுலா வருபவர்களில் விபரங்களை இந்தியா அரசு சரியாக விசாரிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார். இவருடைய கருத்துக்கு வலு சேர்ப்பது போல் பல வெளிநாட்டு பயணிகளால் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்து நாம் செய்தியின் வாயிலாக தெரிந்ததே.

ரிச்சாட்டு ஹக்கில் என்பன் பிரிட்டன் பிரஜை.  குழந்தைகள் வன்புணர்வு குற்றத்திற்கு மலேஷியா அரசால் தண்டனை பெறப்பட்டவன். இவன்  பங்கலூரில் இருந்த, 2013 ல் அனாதை குழந்தைகள் காப்பகத்திரற்கு (New Hope for Children Orphanage) உதவி செய்வது போல் அங்கு தங்கியிருந்திருக்கிறான். இவனை பற்றி விசாரித்த போது மலேஷியா அனாத ஆசிரமத்தில் இருந்து குழந்தையை திருமணம் செய்ய முயன்து கண்டு பிடிக்கப்பட்டது.  மிகவும் மோசமான பீடோபிலியா நோயாளியாக இருந்துள்ளான்.  
2014 ல்  ஹக்கிள் இங்கிலாந்து போலிசால் கைது செய்யப்பட்ட போது ஆறு மாத குழந்தை துவங்கி 12 வயது வரையுள்ள குழந்தைகளில் 14 பேரை பாலியல் வல்லுறவு உள்பட  200  க்கு மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டான் என பி. பி. சி செய்தி வெளியிட்டது.

பன்னாட்டு நிறுவனத்தில் வேலை நோக்கி வந்த 53- வயதான முரே டென்னீஸ் வார்ட் என்ற வெளிநாட்டு நபர்; பார்வையற்ற குழந்தைகளை துன்புறுத்தினார் என்று டெல்லி போலிஸ் கைது செய்தனர். இந்த நபர் கடந்த 8 வருடமாக குழந்தை காப்பகத்திற்கு வருகை தந்த நபராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு நபர்கள் இந்திய சட்டத்தின் தண்டனையில் இருந்து எளிதாக தப்பித்து  தங்கள் நாட்டிர்கு சென்று விடுகின்றனர்.
  
மோடி, காஷ்மீர் குழந்தை வண்புணர்வு கொலையை பற்றி குறிப்பிடும் போது து கற்பழிப்பு கொலை!  அரசியல் ஆக்காதீர்கள் என கூறியுள்ளார்.  இந்தியாவில் செக்ஸ் மன நோயாளிகள் பெருக காரம் என்ன என்று வினவ வேண்டியுள்ளது.. குற்றம் நிகழ்ந்ததும் கொலையாளியை தூக்கிலிட வேண்டும் என பொங்கும் மக்கள்,ஆண்களில் 10 % பேர் இந்த மன நோயுடன் உலவுகின்றனர் என்பதை அறிவது இல்லை. வயது வரம்பில்லை படிப்பு பாரம்பரியம் பதவி, மதம் இனம் வயது  விதி விலக்கல்ல. இது போன்ற நோயின் பிடியிலுள்ளோர் தானாக ஒத்து கொண்டு சிகித்சைக்கு முன் வர மாட்டார்கள். இவர்கள்  எவ்விதம் ஏனும் ண்டு பிடித்து உரிய  மருத்துவ, உளவியல் மன பயிற்சிகள்  கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இவர்களை ண்டு மருத்துவ உதவி தர அரசு என்ன செய்து வருகின்றது.

இந்தியாவை பொறுத்த வரை ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள்  ஆகும். உலக ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு குழந்தை இந்திய குழந்தையாக உள்ளது. அதே போன்று அதிக குழந்தை வன்முறை நடக்கும் தேசமாகவும் இந்தியா இருந்து வருகின்றது. போஸ்கோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் உத்தர் பிரேதேஷ் முதல் இடத்திலும் மேற்கு வங்கம் அடுத்த இடத்திலும் நமது தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது

தேசத்தில் குழந்தைகளின் நலம் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். பல வழக்குகள் ஊடகம் கண்டு கொள்வதே இல்லை. மிகவும் மோசமாகன கூட்டு வல்லுறவு மட்டுமே வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர், ஒரு குற்றம் நடந்ததும் சூடான விவாதங்களுடன் மீடியா தன் வேலையை முடித்து கொள்கின்றது. தீர்க்கமான முடிவிற்கு குழந்தை நலனுக்கான தீர்வை எட்டுகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.

மீடியாவால், சினிமா பார்ப்பதால் என்று குறுகிய நோக்குடன் இதன் காரணத்தை சுருக்கி விட இயலாது. வெளிநாடுகளில்  இந்த குற்றவாளிகளின் குடும்ப பின்னனி, எதனால் இப்படியான குற்ற செயல்கள் புரிகின்றனர் என்பதை கண்டு பிடித்து தேவையான மருத்துவம் கொடுக்க முயல்கின்றனர். அந்த ஆராய்ச்சி வரும் தலைமுறைக்கும் விழிப்புணர்வு பெற உதவியாக இருக்கின்றது .
  
ஆஸ்தேரிலியாவில் தான் பெற்ற நாலாவது பெண் குழந்தையை 10 வயதில் இருந்தே  பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய தந்தை, 15வயதில் இருந்து அவளை வீட்டின் அடியில் உள்ள அறையில் பூட்டி வைத்து ஏழு குழந்தைகளுக்கு தாயாக்கியுள்ளான். விசாரித்த போது இந்த நபர் தனது குழந்தைப்பருவத்தில் தாயின் கடும் ண்டிப்பில், சுந்தந்திரம் இல்லாது அச்சுறுத்தலில் வளர்க்கப்பட்டவன் என கண்டுபிடிக்கப்பட்டது. தான்  பெற்ற குழந்தையை அடிமையாக நடத்தி  இன்பத்தை பெற்று  வண்மத்தை தீர்த்துள்ளான்..

பெண் குழந்தைகள் பிறப்புறப்பில் ஏற்படும் காயங்களை வழக்கு பதிவு செய்ய எடுத்துக்கொள்ளப்படுகின்றது.  அதே போல் ஆண் குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் ஏற்படும் காயங்களும் கணக்கிலெடுத்து வழக்கை பதிவு செய்கின்றனர் . 86% குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி காமரா மூலம் கண்காணிக்க வேண்டும்  என்ற  பரவலான கருத்து எழும் வேளையில் வீட்டினுள் நடக்கும் குற்றங்களை கண்டு பிடிக்க எந்த கருவியாலும் இயலாது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. அதனால் இந்த விடையத்தில் சட்டத்தை விட மனித மனங்களிலுள்ள மிருக தன்மை, விகார எண்ணங்கள் மாற வேண்டும்

ஒரு பீடோலியா நோயாளியால் முழுமையாக பாலியல் விருப்பத்தில் இருந்து வெளிவர இயலாது.  ஆனால் சில பயிற்சிகள் ஊடாக  பாலியல் குற்றம் புரியும் மனநிலையில் இருந்து தன்னை கட்டுப்படுத்தி தன்னை தற்காத்து கொள்ள கற்று கொடுக்கலாம். இந்த நோயாளிகளை கண்டு பிடிப்பது எப்படி என்ற பெரிய கேள்வி எழுகின்றது.

இந்தியாவில் 50%  குழந்தைகள் பாலியலாக துன்புறுத்தப்படுகின்றார்கள் பாதிக்கப்படும் குழந்தைகளில் 52% பேர் ஆண் குழந்தைகள்  என்றால் பீடோபீலியா  நோயால்  பாதிப்படைந்தவர்கள் அதிகமானோர் இருக்கின்றார்கள்  என்று  தான் பொருள்  கொள்ள வேண்டும். பெரும் வாரியோனோர் ஆண்களாக இருந்தால் கூட இதில் 4% பெண் பீடோபிலியோக்களும் உண்டு என்பதை தரவுகள் உறுதி செய்கின்றன.


இது போன்ற மனநோயில் இருக்கும் நபர்கள் பல வழிகளை கையாளுகின்றனர். ஒரு குழந்தையில் தாய் மாமா வாரக்கணக்காக பாலியல் படங்கள், காணொளிகளை காண்பித்து பெரியவர்கள் இப்படி தான் அன்பு கொள்வார்கள்,  இது சாதாரணம் என மனதில் பதிய வைத்து குழந்தையை பாலியல் செயலுக்கு உட்படுத்தி உள்ளான்.
  
கவனிப்பாரற்று தனிமையில் விடப்படும் குழந்தைகள் தான் எளிதாக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்குழந்தை பாலியல் காணொளிகளை காணும் நபர்களிடம் எச்சரிக்கை ணர்வுடன் இருப்பது,  குழந்தைகளை அணுக விடாது  இருப்பதும் முன்னெச்சரிக்கையாகும். üகுழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றிய போதிய விழிப்புணர்வு கொடுப்பது அவசியமாகும். தொடக்கூடாத இடங்கள் பற்றி குழந்தைகளுக்கு புரிதல் இல்லாதும் ஒரு காரணமே. கெட்ட தொடுதல் நல்ல தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்து கூற வேண்டும்ü  தற்காலம் குழந்தை வளர்ப்பில் பெரும் பிரச்சினை என்பது பெற்றோர் இருவரும்  இருவரும் வேலைக்கு போவதும், வீட்டில் பெரியோர்கள் இருந்து கவனிக்கும் சூழலும் இல்லாததும்  குழந்தைகள்  குற்றவாளிகளுக்கு எளிதாக இலக்காகி விடும் சூழல் எழுகின்றது.. யாரிடமும் சொல்லக்கூடாது ரகசியமான  பரிசு,  எனக்கூறி என்று சிலர் குழந்தைகளை துன்புறுத்துகின்றனர். ஆணாதிக்கமான இச்சமூகத்தில் ஆண் குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை அவமானம் என எண்ணி மறைத்து விடுகின்றனர்மேலும் ஆண் குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவதை பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லை.

மக்களை சிறப்பாக குழந்தைகளை காக்க,  ஆளும் அரசில் பங்கு என்ன?

 நிர்பயா நிதி என்று ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியது. அதன் கீழ் 3000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட்து. இந்த நிதிக்கு வல்லுறவுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, உளவியல் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை, பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த, பொது போக்குவரத்தில் கண்காணிப்பு கேமராக்கள், காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க இந்த நிதியை பயன்படுத்தும் நோக்கில் கோடி ரூபாய் வீதம் 3000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . ஆனால் இந்த பணத்தை எந்த மாநிலைத்திற்கும் வழங்கவில்லை அதன் காரணத்தை உச்ச நீதி மன்றவும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ü   
ü இத்துடன் வர்மா குழு பரிந்துரையான பாலின சமத்துவம் குறித்த பாடங்களை கல்வி திட்டத்தில் சேர்ப்பது, பாதிப்புக்குள்ளான பெண்களின் வழக்கு விசாரணைக்கு உதவுவது, பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறை அணுகுமுறை அனைத்திலும் சீர்திருத்தம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த்து, ஆனால்  கேரளா தெலுங்கான மாநிலங்களை தவிர எந்த மாநிலைங்களிலும் எந்த முயர்சியும் எடுக்க வில்லை.
ü   
ü  அது மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஒருங்கிணைந்த பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை அமைக்கவும்  உத்தரவிட்டது என எதுவும் நடைமுறைக்கு  வரவில்லை,.

ü  குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதும் வழக்கை விரைந்து முடிப்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவது என எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் ஏட்டு கதையாக முடிந்து விட்டது.

ü  இன்னும் ஒரு ஆச்சரியமான விடையம் 3 ஆண்டில், பெண் முதல்வர் ஆட்சி  செய்த மாநிலத்தில் இது வரை நிர்பயா நிதியை கேட்டு பெற வில்லை என்பதாகும்.

குற்றம் நிகழும் வரை காத்திருக்காது குற்றவாளியை இனம் கண்டு பிடிப்பது அவர்களுக்கு தேவையான சிகித்சை அளிப்பதும் மக்கள் அரசின் கடமையாகும். சமீபத்தில் நெதர்லான்று நிறுவனம் இவ்வகையான நோயாளிகளை கண்டு பிடிக்க ஒரு நுட்பமான  வழியை கையாண்டுள்ளது.

பீடோபிலியா நோய்

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் பீடோபிலியா நோயில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் நோக்குடன் கம்யூட்டர் சிறுமி மூலம் வலை விரித்தனர்.  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சிறுமி உருவத்துடன் உறவு கொள்ளவும், வெப் காம் மூலம் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடவும் 10 வாரத்துக்குள்ளாகவே 71 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் அணுகியுள்ளர்


இந்த 20,000 பேரில் பலர் குழந்தைகளுக்குத் தந்தைகளாக உள்ளவர்கள்.அதில் அட்லாண்டாவைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்குத் தந்தையான  35 வயது நபர், ஸ்வீட்டி உடையைக் கழற்றுவதைப் பார்த்து ரசிக்க 10 டாலர் தருவதாக கூறியுள்ளார்.

சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் வக்கிரப்புத்தி கொண்டவர்கள் வரிசையில் பெரும் பணக்காரர்கள், இசைக் கலைஞர்கள் உள்பட சமூகத்தின் சகல தரப்பினரும் இடம் பெற்றிருப்பது வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதுமாக உள்ளதாகவும் சான்ட்பிரிங் கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் நிறையவே இடம் பெற்றுள்ளனராம்



19 Apr 2018

பாலியலாக துன்புறுத்தல் என்பது ஒரு உலகலாவிய தீரா நோய்



குழந்தைகள் பாலியலாக துன்புறுத்தப்படுத்தும் சூழல் வளர்ந்த நாடு, வளராத நாடு, ன்றில்லை பெண் என்ற பாலினம் இருக்கும் இடத்தில் எல்லாம் தாக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு 6.2 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்புணர்வு நடப்பதாக தெரிகின்து. அந்த தேசத்திலும் 4 வயது பச்சிளம் குழந்தை முதல்  83 வயோதிக பெண் வரை பாலியவல்லுறவிற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு வருடவும் 63,000 குழந்தைகள் பாலியல் வல்லுவு செய்யப்பட்டதாக அமெரிக்காவில் வழக்கு பதிவாகியுள்ளது. குழந்தைகள் கொல்லப்படுவதில் அமெரிக்க முன் நிலையில் நிற்கின்றது. கிடைத்த தரவுப்படி வளர்ந்த நாடான ஸ்வீடன் முன்னித்தில்  நிற்கின்றது. மேற்கு நாடுகளில்  இந்தியாவை போன்று அல்லாது பெரும்வாரியான வழக்குகளும் பதிவாகின்றது கணவர் அனுமதி மீறி பாலியல் உறவு கொண்டு இருப்பினும் வழக்காக பதியப்படுகின்றது..


இந்தியாவை எடுத்து கொண்டால் பெண்கள் முன்னேற்ற கழகத்தின் செயலர் கவிதா கிருஷ்ணன் கூற்றுப்படி இந்தியாவில் பாலியல் வல்லுறவு மிகவும் குறைவாகவே பதிவாகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நலன் கருதியும் தங்கள் குடும்ப கவுரவம் கருதியும்  வெலியே சொல்வதில்லை. இது போன்ற சட்டத்தின் முன் கொண்டுவருவதும் இல்லை.

இந்தியாவின் ண் ஆதிக்க சமூக கட்டமைப்பு,   காலாகாலாமாக புராண இதிகாசங்கள் மத நம்பிக்கைகள் ஊடாக ண்களுக்கான சுகிக்கும்  பொருளாகவே பெண்ள் சித்தரிகரிக்கப்படுதல், பெண்கள் ஆண்களின் அடிமை என்பவை ஆண்கள் மனதில் ஆழத்தில் பதிந்ததால் பெண்களை துன்புறுத்துவது ஒரு வழக்கமாக, வாழ்க்கை பாகமாகவே பார்க்கப்படுகின்றது.  பெண் உடலை, அவள்  விருப்பத்தையும்  மீறி ஆட்சி செய்யும் உரிமையாக எடுத்து கொள்கின்னர்.

ஒரு பெண் சுயசார்பாக, சுதந்திரமாக வாழ்கின்றார் என்றால் அவர் மோசமான பெண் என  ஆண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றார். தன் விருப்பத்திற்குளிதாக வளைத்து விடலாம் என நினைத்து நற்பாசை கொள்கின்றனர், அல்லது அவளை ஆட்கொள்வது தங்கள் ஆண்மையின் இலக்காக நினைத்து கொள்கின்றனர். சமூகம் பாலியல் படங்களின் வயது வரம்பற்ற மீறிய பயண்பாடு  , மதுபானங்கள், பொறுப்பற்ற சமூக வாழ்க்கை, இரவு கேளிக்கை விடுதிகளின் பெருக்கம் போன்றவையும்  பெண்கள் மீதான  அத்து மீறல்களுக்கான  காரம் என்பதையும் மறுக்கல் ஆகாது. வாழ்க்கை நெறியிலுள்ள பார்வையிலுள்ள மாற்றங்களும் காரணமாகின்றன

2012, ல் குழந்தை  பாதுகாப்பிற்கு என முதல் சட்டம் வகுக்கப்பட்டது. டைமுறைப்படுத்த  மேலும் இரண்டு ஆண்டுகள் எடுத்து கொண்டனர். இந்த சட்டத்தின் கீழ்  13,766  குழந்தை வல்லுறவு, 11,335 குழந்தைகள் மாண்பை கெடுக்கும் விதம் நடந்து கொள்ளுதல் 4,593 பாலியலாக துண்புறுத்தப்படுதல் 711திட்டமிட்டு சமூக  குற்றவாளிகளால் குழந்தைகளை தாக்குவது; 88 பாலியல் இச்சைக்காக படம் பிடித்து  பயன்படுத்துவது  மேலும் 1,091 தொல்லை தருவதாக.பதியப்பட்டுள்ளது.

WHO உலக ஆரொக்கிய மையத்தின் கருத்துப்படியும் பெண்கள் பாலியலாக துன்புறுத்தப்படுவது ஒரு உலகலாவிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது. குழந்தைள் பாலியலாக துன்புறுத்தல் என்பது ஒரு உலகலாவிய தீரா நோய் என அறியலாம். 70 % குழந்தைகள்  தங்கள் சொந்த குடும்ப உருப்பினார்களாலே பாதிக்கப்படுகின்றனர்.  கடந்த வருடம் பதிவான வழக்கில் 15,000 வழக்கில்  4 % குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
 சமூக சீர்கேட்டுப் பிரச்சனைகளினால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப பாலியல் வல்லுறவுகள் கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் சொந்த தந்தையாலே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாற்றான் தந்தை, உறவினர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

ஆஸ்தேரிலியா நாட்டில் 2014 வாக்கில் பாலியல் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில்  மத காரியங்களுக்கான கட்டாய பிரம்மசரியம்,  குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கான முக்கியமான  காரணமா என கண்டுபிடிக்கப்பட்டது.   இந்த விசாரண முடிவு இப்படியாக வெளிவந்தது.  60 % மேல் பாதிக்கப்பட்ட பாலகர்கள் 10க்கும் 14 க்கு இடையிலுள்ள ஆண் குழந்தைக்ளாகவே இருந்துள்ளனர். இதில் பெரும்வாரியோனர் மதகாரியங்களுக்கு உதவிய ஆண் குழந்தைகள் ஆவர்.  அதில்  36 % பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.  கிறிஸ்தவ மதத்தலைமை, குழந்தைகளை வல்லுவில் இருந்து காப்பாற் தவறியதாகவும் தெரிவித்துள்து.

மேற்குலகு நாடுகள் 30 வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் மேல் நடந்த அத்துமீறல்களை  ஆற அமர ஆராய்ந்து உண்மையான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 அந்த நாடுகளில் சுதந்திரமாக விசாரிக்கவும் அறிக்கை வெளியிடவும் சுதந்திரவும்,  சமூக சூழலும் இப்போது தான் கூடி வந்துள்ளது. ஆனால் இந்தியா போன்ற பன்முகதன்மை கொண்ட சமூக சூழலில், குழந்தை உரிமை பற்றியே புரிதல் இல்லா சமூகத்தில் அவ்விதம் விசாரணை எல்லாம் எதிர்பார்க்கவே இயலாது. மத சண்டைகளுக்கும் சமூக பிரச்சினைகளுக்குமே வழி வகுக்கும். இவ்விதமான சமூக சூழலில் தான் சமூக விழிப்புணர்வு அற்ற பெற்றோர்கள்; குழந்தைகளை மதவாதிகளை நம்பி மடங்களுக்கு குழந்தைகளை எந்த உத்தரவாதத்தில் அனுப்பி வைக்கின்றனர் என சிந்திக்க வேண்டி உள்ளது.

சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாதி குழந்தை நலன் சார்ந்து விழிப்புணர்வு கொடுக்கும் நோக்குடன் இந்தியா முழுக்க ஒரு பயம் மேற்கொண்டார்.  கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் சமரசமற்ற ண்டனைகள் கொடுப்பது ஊடாக மட்டுமே குழந்தைகளை கொடியவர்களிடம் இருந்து காப்பாற்ற இயலும் என தெரிவித்திருந்தார்.

குடும்ப பொருளாதாரம் நிலையற்றதாகவும், வலுவிழந்தும் இருக்கும் போது அக்குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மிக எளிதாக பாலியல் வல்லுறவுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

வட கிழக்கில் ஆகட்டும் பாலியல் தொழிலுக்கு, வீட்டு வேலைக்கு, குழந்தை திருமணம் என பல காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படும் கொடிய சூழல் நிலவுகின்றது.

அதுவரையிலும் பெற்றோர் குழந்தைகளுக்கு தகுந்த விழிப்புணர்வு தருவது, குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தகாத தொடுதல் பற்றி புரிய வைப்பது, வெளி நபர்களுடன் பழகும் போதும் கருதலாக செயல்படுவது, தங்கள் பார்வைக்குள் தங்கள் கட்டுபாட்டுக்குள் குழந்தைகளை பேணுவதே அவர்கள் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும்.

சமீபத்தில் என் தோழி வசிக்கும் குடியிருப்பில் நடந்த சம்பவம் இப்படியாக இருந்த்து.  விளையாடி கொண்டிருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை பாலியல் செயலுக்கு உட்படுத்த  ஒருவன் துணிந்துள்ளான். இரு குழந்தைகளின் தகப்பன், படித்தவன், நல்ல வேலையில் உள்ளவன் இருந்தும் குடித்திருந்தேன் அதனால் சபலப்பட்டு விட்டேன் என கூறியுள்ளான், குழந்தை வீட்டில் சென்று தெரிவித்ததும் அந்த நபர் மனைவிக்கு தெரிவித்ததுடன் அந்த நபரை அந்த குடியிருப்பை விட்டு வெளியேற்றினர். இது போன்ற சமூக புரக்கணிப்பு மட்டுமே தவறு செய்யும் நபர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.

இது போன்ற ஈனச்செயல்களில் ஈடு படும் நபர்கள் நிச்சயமாக மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள். அவ்விதம் கண்டு அறியும் நபர்களுக்கு சரியான சிகித்சை அளிக்க வேண்டும் அல்லது சமூகத்தில் இருந்து வெளியேற்றி தனி தீவுகளில் குடியேற்றி விட வேண்டும். அல்லாது ஆசீபா, கோயம்பத்தூர் குழந்தை, சென்னை குழந்தை என யாராலும் காப்பாற்ற இயலாது
 
போரில், குடும்ப சண்டைகள், இனச்சண்டை குழுச்சண்டை என எல்லா வன்மச்செயலுக்கும்  பெண் குழந்தைகள் உடலை போர்க்களமாக கருதும் நிலையும் மாற வேண்டும்.


டுத்த பதிவில் குழந்தைகளை பாலியல் துன்பத்திற்கும் உள்ளக்கும் நபர்களின் உளவியல் பற்றி பார்ப்போம்

9 Apr 2018

தன் அழகால் வீழ்த்தப்பட்ட பத்மாவதி!


பத்மாவதி என்ற பெயரில் எடுக்கப்பட்டு மத அடிப்படைவாதிகளால் பத்மாவத் என பெயர் மாற்றி வெளியிடப்பட வேண்டி வந்த திரைப்படம். காட்சியல் அழுகிலும், தொழில்நுட்ப யுக்திகளும் பயன்படுத்தி எடுத்த மிகவும் அழகாக வரலாற்றுப் படம். வரலாறு தவறா இல்லையா என்பதை தாண்டி வரலாற்றை அறிந்து கொள்ள தூண்டிய படம்.

மேவார் மன்னர் இரத்தன் சிங், அவருடைய காதல் மனைவியாக தீபா படுக்கோன் ‘பத்மாவதியாக’ நடித்துள்ளார்.  எதிர்பாராத விதமாக மான் வேட்டையில் இருந்த  இளவரசியில் அம்பால் காயப்பட்டவர் இரத்தன் சின் என்ற சிங்கம். பத்மாவதி கண்டவுடன் காதலில் வீழ்ந்த மன்ன்ன், எளிதாக, உடனே திருமணம் செய்து தன் நாட்டுக்கு அழைத்து வருகின்றார் சிங்கள இளவரசியை. .
  
ராணியை கண்ட மாத்திரத்தில்  அழகில் மதிமயங்குகின்றான்  ராஜகுருவும், மன்னரின் ஆசிரியருமான பிராமணன். இராஜாவும் ராணியும் தனிமையில் இருக்க அவர்களை மறைந்திருந்து பார்க்க துணியும் இழிச்செயல் கொண்டவன் கையும் களவுமாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் கதை சூடு பிடிக்கின்றது..


பிராமணனை கொல்லுதல் ரஜபுத்திர கொள்கையில் தவறு என்பதால் நாடு கடத்தப்படுகின்றான்.. பகை உணர்வால் பைத்தியக்காரனான பிராமண குரு, டில்லியில் கில்ஜியை சந்திக்க முடிவு எடுக்கின்றான்.  தன் சூது வாதால் ஆட்சிக்கு வந்த அலாவுதின் கில்ஜியின் பெண் மோகம் அறிந்த பிராமண குரு, மேவாப் நாட்டு இளவரசியின் அழகை பற்றி விளக்க,  அதிகார மோகவும் பேராசையும் கொண்ட கில்ஜி மேவாப் நாட்டை முற்றுகை இடுகின்றான். மேவாப் நாட்டுக்குள் வர இயலாத சூழலில் தோல்வியுடன்  டில்லிக்கு திரும்பி செல்லவும் மனம் வராது, கில்ஜி தன் நரி தந்திரத்தை கையில்லெடுக்கின்றான். சமாதானம் எனக்கூறி நட்பு கரம் நீட்ட, மேவாப் மன்னனும் இளைய ராணியின் அறிவுரையை மீறி சந்திக்கின்றான். பத்மாவதியை சந்திக்கும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த,  தேடி வந்த விருந்தினரை   பகைக்க வேன்டாம் என்ற முறையில் ராணியை நொடியில் காணும் வாய்ப்பை பெறுகின்றான். தண்ணீர் ரஜபுத்திர ராணி தன் முகத்தை காண்பித்தார் என்றது வரலாற்று பிழை என்ற எதிர்ப்பிற்கு அஞ்சி இளைய ராணி சாரளம் வழியாக தன் முகத்தை காண்பதாக காண்பிக்க பட்டுள்ளது இப்படத்தில்.

ராணி மேல் பித்தாக இருந்த கில்ஜி,   பின்பு பைத்தியக்காரனாக மாறுகின்றான். இராணியை டில்லிக்கு வர வைக்க வேண்டும் என்ற நோக்கில் மேவாப் ராஜாவை விருந்துண்ண அழைத்தவன்  கடத்தி சென்று விடுகின்றான். இராஜாவை மீட்க வேண்டும் எனில் பத்மாவதி டில்லி வந்தே ஆக வேண்டும் என கட்டளை விதிக்கின்றான்.  நாட்டு மக்கள், மந்திரி எல்லாரும் தடை இட்டும்; இளைய இராணி தன் காதல் கணவரை மீட்டே தீர வேண்ட்ம் என்ற சூழலில் தன் புத்தி கூர்மையில் நம்பிக்கை கொண்டு  இரத்தன் சிங்கை டில்லி சென்று மீட்டு வருகின்றார்.  
  
ராணியை அடைய இயலாத கில்ஜி தன் படைகளை திரட்டி வந்து மேவாப் கோட்டையை  தகர்க்க துணிகின்றான். இரத்தன் சிங்க நேரடியாக போராட்ட களத்தில் இறங்கு கின்றார் . போர் களத்தில் கொள்கையற்ற போர் முறையால் கொல்லப்படுகின்றார்.

இனி தப்பிக்க வழி இல்லை என அறிந்த மேவாப் பெண்கள் சத்துருவை  எதிர் கொள்ள இயலாத சூழலில் தங்கள் மானத்தை காத்து கொள்ள, தீயில் தங்களை மாய்த்து கொள்கின்றனர்.

 பல நாடுகளை தன் வலுவால் கீழ்படுத்திய கில்ஜி,  பலரை எளிதாக கொன்று குவித்த கில்கஜி, பெண்ணாசையில் நாட்டையும் நாட்டு மன்னரை அழித்தாலும், மானமுள்ள பெண்களிடம் தோற்று போவதுடன்  கதை முடிகின்றது.
  
2017 வெளி வந்த இப்படம் ஷூட்டிங் ஆரம்பித்த்தில் இருந்தே பல எதிர்ப்புகளை ஹிந்து அடிப்படை வாதிகளால் சந்தித்தது. ஒரு கட்டத்தில் இயக்குனர் அடிக்கப்பட்டார், படம்பிடிப்பு தடை செய்யப்பட்டது. நடித்த தீபிகா படுக்கோனை கொலை செய்து விடுவோம் என்று வரை மிரட்டல்களை எதிர் கொண்ட்து.  ஒரு எளிமையான கதையாடல் கொண்ட படம், இந்த அளவு எதிர்ப்பு சந்தித்தது ஆச்சரியத்தை தான் கொடுக்கின்றது..

1540 களில் வாழ்ந்த முகமது ஜயாசி என்ற கவியின் ஒரு இஸ்லாமிய சூபி கவிதையை ஆதாரமாக எடுத்த படம் தான் இது. இயக்குனரின் கற்பனையும் கலந்த போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாரியின் பல படங்கள் பெண்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக திகழ்ந்துள்ளனர்ணவ்வகையில் இதுவும் பெண்ணின் வாழ்க்கையை மைய்ய கருத்தாக கொண்ட படமாகவே எடுக்க இயலும்.


போர் குணமுள்ள ஒரு பெண் தன்னை காப்பாற்றி கொள்ள நிராதரவாக தீயில் சாடிய போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. கொடிய ஆண்கள் கிறுக்கு பிடித்த ஆண்களால் அவனை சார்ந்திருக்கும் மனைவி உறவினர் பெண்கள் மட்டுமல்ல பல மைல் தூரத்திலிருக்கும் அந்நிய  பெண்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின்றனர்,


ஒரு மனிதனின்  பெண், மண் பொருளாசை அவன் வாழ்க்கையில் அமைதி இன்மையை கொடுப்பதுடன் அவன் ஆட்சிக்கு உட்பட்ட அனைவரின் வாழ்க்கையும் அழிக்கும் படி சக்தி வாய்ந்த்தாக இருக்கின்றதை காணலாம்.


கில்ஜியை முதலில் வளர்த்து விட்டதே அவனுடைய மாமாவான டெல்லி சுல்த்தான் தான். பின்பு சுல்த்தானும் அலாவுதினால் கொல்லப்படுகின்றார். சுல்த்தான் மகளும் அலாவுதின் மனைவியான நூறுவும் சிறையில் அடைபடுகின்றாள். சுல்த்தான் பரிசாக கொடுத்த அடிமை தான் பிர்காலத்தில் கில்ஜியின் எல்லா குற்ற செயலுகளுக்கும் பின் புலனாக இருக்கின்றான்.  சுல்த்தானின் வாழ்க்கை சொந்த செலவில் சூனியம் வைத்தவனாக மடிகின்றது.

காதலும் போருக்கும் கொள்கை தேவை இல்லை என உறுமும் கில்ஜியும், ரஜபுத்தர்ர்களின் கொள்கையை நம்பும் இரத்தன் சிங்கும் மோதிக் கொள்கின்றனர்.  அறவும் கொள்கையும் கொள்கையில்லாதவனிடம் மோதும் போது இலகுவாக அழிக்கப்படுகின்றது , தோற்கடிக்கப்படுகின்றது. நல்ல மனிதர்கள் தங்கள்  கொள்கையால் அழிக்கப்படுகின்றது வருத்தமாகத்தான் உள்ளது, இருப்பினுக்ம் இதுவே நிதர்சனமான உண்மை என்பதை  மறுக்க இயலாது.

இரத்தன் சிங்  என்ற மன்னர் தன்னுடைய கொள்கை என்ற பெயரில்  எடுக்கும் பல தீருமானங்கள்  முட்டாளத்தனமோ என சிந்திக்கவைக்கின்றது. 

பிராமனனை கொல்வது ரஜபுத்திர கொள்கையல்ல என நாடு கடத்தும் போது, அவனை கொன்று விடுங்கள் என்று இளைய நாணி கூறுவதை கணக்கில் எடுக்க மாட்டார். கில்ஜி பல நாட்களாக தொல்லை கொடுத்து விட்டு ஜெயிக்க இயலாது என்ற சூழலில் நட்பு கோரி வர அரண்மனைக்குள் அனுமதிப்பதை பரிசிலியுங்கள் என்று சொல்வதையும் கண்டு கொள்ளமாட்டார்.    
எதிராளி நட்பு அழைப்பு விடுத்ததும், அவன் கூடாரத்தில் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் போதும் இளையராணியின் அறிவாற்றலான அறிவுரைகளை  கண்டு கொள்ளாது சென்று எதிராளியின் வலையின் எழிதாக விழுந்து சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்.

மன்னன் சிறையில் அடைபட்டு கிடக்கும் போதும் இளைய ராணியின் மேல் பழி போடுவார் முதல் ராணி. உன் அழகால் தான் இப்பிரச்சினைகள், நீ ஒழிந்தால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் நீ டில்லி சென்று தன் கணவரை மீட்டு வர கட்டளை இடுவார்.

இந்த சூழலில் தன் மதியால் டில்லி வரை சென்று கணவனை மீட்டு வர; அடிபட்ட பாம்பாக நெளியும் அலாவுதின் கில்ஜி, மறுபடியும் மேவாபை தாக்க முற்படும்  போது,  மன்னரும் மக்களும் காப்பாற்றப் பட தான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க கூறுவார் இளைய ராணி, அப்போதும் இரத்தன் சிங்கின் ராணியின் மேலுள்ள காதல் அனுமதிக்காது. இராணியின் அழகை ஆராதித்த இரத்தன் சிங் அதே நிலையில் அவர் போர் திறமையையும்  புத்தி கூர்மையையும் மதித்தாரா என கேல்வி எழுகின்றது..  எவ்வளவு திறமை இருந்தாலும் போர் திறன் இருந்தாலும் ஒரு மன்ன்னின் காதல் ராணியாக இருந்தாலும் தன்னை காப்பாற்ற தன்னையை அழித்து கொண்டது கவலையும் சிந்தனையும் தரவல்லது. பெண்கள் வாழ்க்கை எப்போதும் சூழலின் கைதிகளாக முடிந்து போகின்றது துன்பமே.  
  
அல்லது இராஜாவின் பாத்திரவமைப்பில் கொள்கைப்பிடுப்புள்ள ராஜா என்ற கருத்தில் கொடுத்த முக்கியம் அவருடைய நுட்பான செயலுகளுக்கு கதையில் இடம் கொடுக்கவில்லை என்பதாக நாம் சமாதானப்படுத்தி கொள்ள வேண்டும். . மென்மையான கொள்கை பிடிப்பு கொண்ட வீரம் மிக்க இரத்தன் சிங்காக நடித்திருக்கும் ஷாகித் கபூர் நடிப்பும் அபாரம். இயல்பாக கதாப்பாத்திரத்திர்கு தகுந்து நடித்துள்ளார்.  

தீபிகா படுக்கோன் வரும் ஒவ்வொரு காட்சியும் பெண்மையும் அறிவும் ஒருங்கே நிழலாடியது.  அவருடைய உடை, பாவனை என ஒரு இராணியாகவே அசத்தியிருக்கிறார். அவருடைய அணிகலன் உடை வடிவமைப்பாளரின் ரசிப்பு தன்மையை  புகழ்ந்தே ஆக வேண்டும். அழகுகிற்கு அழகு சேர்க்கும் சிறந்த வடிவமைப்பு.

அலாவுதில் கதாப்பாத்திர அமைப்பு மிகவும் அருமையான கையாடல். அல்லாவுதில் கில்ஜியாக நடித்திருக்கும் கொடுங்கோலன் இரத்த வெறியன், பெண் லம்பாடி, ஓரின சேக்கரையாளனாக நடித்திருக்கும்  ரன்வீர் சிங்கின் நடிப்பு தான் இப்பட்த்தின்  வெற்றிக்கே ஆதாரம். ஒரு தன் உடல் மொழியால், வெறும் ஒரு கண்  பார்வையால் உடல் அசைவால் அந்த காதப்பாத்திரமாகவே மாறியுள்ளார். ஒரு அருவருப்பான கொடியமனிதனாக இயல்பாகவே நடித்துள்ளார்.

லாவுதீன் மனைவியாக நடித்த ஆதி ராவு ஹைடரி  ஒரு சில காட்சியில் வந்திருந்தால் கூட  தவிர்க இயலாத கதாப்பாத்திரம். இரத்தன் சிங் பத்மாவதியை தப்பித்து செல்ல உதவினார் என தன் சொந்த மனைவியை சிறையில்  அடைத்து தண்டிக்கின்றான். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் கதாப்பாத்திரம் தேவைக்கு ஏற்ப அழகாக இயல்பாக நடித்துள்ளார்.

தற்கால ஆரிய திராவிட அரசியல், அல்லாஹ் பெயரால் உலகும் முழுக்க கீழடக்க புறப்பட்ட ஆட்சியாளர்களின் மனநிலை, என தற்கால  அரசியல் சூழலையும் தொட்டு சென்றுள்ளது இப்படம். 

திரை வசனங்களும் அருமை. பஞ்ச் டயலோக் அல்லாது சிந்திக்க வைக்கும் வாழ்வியல் தத்துவம் அடங்கிய திரைவசனம். திரைக்கதைக்கு இன்னும் சில நுட்பமான முக்கியம் கொடுத்திருக்க வேண்டும். மிகவும் எளிமையாக நேர்கோட்டில் கதை சில இடங்களில் விருவிருப்பு இல்லாது செல்கின்றதை தவிற்க இயலாது. முதல் 10 நிமிடம் கதை அநியாயத்திற்கு மெதுவான நடை போடுகின்றது.

இசையும் அருமை. கடைசி சீன் இசை மனதில் ரீங்காரமாக பின் தொடர்வதை மறுக்க இயலவில்லை.

சஞ்சய் லீலா பான்சாலியின் இயக்கத்தில் வந்த படங்களில் இந்த படவும் சிறப்பான இடத்தை பெறுகின்றது. 

சினிமாவை,அரசியலாக  வரலாறாக குழப்பிக்கொள்ளாது பார்த்தால் அருமையாக காட்சிப்படுத்தப்பட்ட அருமையான திரைப்படம்