1 Dec 2013

தேஜ் தருண்பாலின் ஊடகவியலும் பாலியல் வன்முறையும்!




இந்தியாவில் வளர்ச்சி வறுமையில் வாடும் மக்கள் வழியோர பிச்சைக்காரர்கள் படும் துன்பம், கல்வி பெற இயலாத மக்கள் என எந்த செய்தியிலும் இல்லாத முக்கியத்துவம் பாலியல் கதைகளுக்கு கொடுத்து வருவது  பாலியல் சிந்தனையிலுள்ள வறச்சி, கேடு கெட்ட மனித சிந்தனையை காட்டுகிறது. தற்போது தெஹல்கா பத்திரிக்கையின் உரிமையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினையும் இதை சார்ந்தது தான்.  


தேஜ் தருண் கற்பழித்தாரா அல்லது பாலியல் வன்முறையில் ஏற்பட்டாரா அல்லது இரு நபர் விருப்பத்துடன் நடந்ததா என்பது இன்னும் வெளிவரவில்லை. கற்பழிப்பு என்ற வார்த்தையில் நின்ற பெண் என் உடலை அவமதித்துள்ளார் என்று மொழி மாற்றியுள்ளார். பெண்ணியவாதிகள் கம்யூனிஸ்ட் தலைவி என பலர் குரல் எழுப்பியுள்ளனர். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது போலும்; தருண் தான் முதல் குற்றவாளி போல் சித்தரிகரிப்பது தான் கேலியான விடையம். குஸ்வந்த் சிங் தன் பத்திர்க்கை அனுபவத்தில் பெண்களுடன் இருந்த தொடர்பை பற்றி புத்தகமாகவே வெளியிட்டுள்ளார். Kushwanth Singh ஊடக உலகில் பத்திரிக்கை என்றில்லை  தொலைக்காட்சி, சினிமா, கல்வி நிறுவனங்கள் அரசு தனியார் நிறுவங்கள் என செக்ஸ் குற்றங்கள், எல்லை மீறல்கள் மலிந்து கிடக்கின்றது. 

இதில் ஆண்களை மட்டும் குற்றம் சாரவும் இயலாது. பெண்களும் விரும்பி செல்வதையும் கண்டு வருகின்றோம். கற்பழிப்பு, பெண் உடலை கேவலப்படுத்துவது என்பது காலம் காலமாக கடந்து வரும்  நிகழ்ச்சியாக தான் உள்ளது. இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் வேலை பார்க்கின்றனர். பாலியல் சீண்டாடுதல், வன்முறையை  எதிர் கொள்ளாத பெண்களே இல்லை என்ற நிலை தான் இன்று உள்ளது. ஒரே ஒரு நாள் திடீர் என யாரும் கடத்தி கொண்டு போய் கற்பழிப்பதில்லை. செக்ஸ் பேச்சு, ஊர் சுற்றல் பரிசு பொருட்கள் கொடுக்கல் வாங்கல் என, பல நிலைகளை கடந்து பெண்களை வசியப்படுத்தி தங்கள் பிடியில் கொண்டு வர முயல்கின்றனர். ஆணின் முதல் முயற்சியை தடுக்கும் பெண்ணால்; தன்னை அடிமைப்படாது காத்து கொள்ள இயல்கின்றது. ஆனால், அத்தகய பெண்கள் சந்திக்க வேண்டிய பல சவால்கள்  உள்ளன. தவறு செய்யாதே பல குற்றங்களை கூறி அச்சுறுத்த முயல்வர். வேலைப்பழுவை அதிகரிக்க செய்வார்கள், அவதூறு கதைகள் பரப்பி விடுவார்கள். இந்த சவால்களை யாவும்  எதிர்கொள்ள பல பெண்கள் மெனக்கெடுவதில்லை. “கொஞ்சம் அனுசரித்து போவது” வழியாக தங்கள் நிலையை சமரசப்படுத்தி கொள்கின்றனர். ஒரு அலுவலகத்தில் தன் மேல் அதிகாரிக்கு நெருங்கிய தோழியாக கள்ள காதலியாகவோ மாறுவது வழியாக பல பெண்கள், தாங்கள் வேலை செய்யாது உயர் பதவியில் எட்டவும் உடன் பணிசெய்பவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றனர். தாங்கள் நினைத்த பணி உயர்வும், ஊதியம்,அல்லது பல அனுகூல வசதிகள் பெற்று சுகமாக வாழ்கின்றனர். பல பெண்கள் தங்கள் அதிகாரிக்கு நெருங்கியவராக இருப்பதில் பெருமை கொள்கின்றனர். இதில் எழுத்தாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் நபர்களுடன் நெருக்கம் வைப்பதில் போட்டியே நடக்கின்றது. இந்த நிலை எல்லா வேலையிடங்களிலும் காணலாம்.  ஆனால் தன்னை  போல் இன்னொரு பெண் போட்டிக்கு வந்து சேரும் போது வருத்ததிற்குள்ளாகுகின்றனர் தங்களுக்கு கிடைக்கும் வசதிகள் குறைக்கப்படும் போது கொந்தளித்து நீதி சிந்தனையில் நியாயம் தேடி சமூகத்தை அணுகுகின்றனர். 


ஆனால் உண்மையாக பாதிக்கப்படும் பெண்கள் ஒரு போது வெளியில் வராத வண்ணம் அவர்கள் அபிமான உள்ளம் அவர்களை வதைக்கின்றது. அப்படியாக நீதி கேட்டு வந்த பெண்கள் நீதி கிடைத்து போனதாகவும் சரித்திரம் இல்லை. அவ்வகையில் 30 வருடத்திற்கு மேலாக  மரண படுக்கையில்  கிடைக்கும் அருணா Aruna என்ற செவியிலருக்கு கிடைத்த நியாயம் நாம் கண்டதே. "கற்பழிப்பை தடுக்க இயலாவிடில் மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள வேண்டும்" என்ற சொன்ன நீதிபதிகள் வாழும் நாடல்லவா நம்முடையது. rape victim  பெண்கள் விடையத்தில் பல தலைவர்கள்  நடந்து கொண்ட விதம் அறிந்ததே. Gang-rape-victim-suzette-jordanசூப்பர் டூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரிந்த பல நடிகர்கள் பெண்கள் விடையத்தில் வில்லன்களாகத்தான் இருந்துள்ளனர்.

பெருவாரியான பெண்கள் எளிதாக அடிமையாக மாறுவதால் பெண்கள் என்றாலே தான் நினைக்கும் எதையும் செய்து விடலாம் என பல ஆண்கள் கணக்கு போட்டு விடுகின்றனர். பெரும்வாரியான கார்ப்பரேற்றுகள், கல்வி இடங்களில் இப்பிரச்சினை தலை விரித்து ஆடுகின்றது. இன்று “நான் உனக்கு வேலை தந்தால் எனக்கு நீ என்ன தருவாய்” என்று துணிவாக கேட்கும் பல ஆண்களையும் கண்கூடா கண்டு வருகின்றோம்.


வேலையிடங்களில் பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பான இடைவெளியை ஏற்படுத்த தவறி விடுகின்றனர். உடன் வேலை செய்யும் ஆணை முதலில் புகழ்வது, எப்போதும் அருகில் இருந்து அரட்டையடிப்பது, இரட்டை அர்த்ததில் பேசுவது, தங்கள் வீட்டு படுக்கை அறைக்குள்ளும் அழைத்து மரியாதை செலுத்துவது, அவர்கள் பணத்தில் சாப்பிடுவது என ராஜபோகமாக இருந்து விட்டு திடீர் என்று கெடுக்க வருகிறான் என்றால் என்ன சொல்வது? வேலையிடவும், தனி நபர் வாழ்க்கையும் இரு தளங்களாக இருக்க வேண்டும். உடன் பணி செய்யும் ஆணோ பெண்ணோ தேவைக்கு அதிகமாக சகவாசம் வைத்து எல்லா விடையங்களும் பகிர்வது/பேசுவது தங்கள் கன்னியமான வாழ்க்கைக்கு பங்கம் வரவைக்கவே செய்யும். இன்று பல பெண்கள் வேலை உத்தரவாதம் பாதுகாப்பு சுயநலம் கருதி ஆண்களுக்கு எடுபிடியாக இருக்க தயங்குவதில்லை. பிரச்சினை என்று வரும் போது தங்களை பாதுகாத்து கொண்டு தப்பிக்க துணிகின்றனர்.

gender equality cartoons, gender equality cartoon, funny, gender equality picture, gender equality pictures, gender equality image, gender equality images, gender equality illustration, gender equality illustrations  பத்திரிக்கைத்துறை என்றில்லை காவல், கல்வி, அரசு அலுவலகம் என குடும்பங்களுக்கு வெளியிலுள்ள உறவுகள் மலிந்து கிடக்கின்றது. இதன் தாக்கம் அவர்கள் குடும்பம் தனி நபர் வாழ்க்கை சார்ந்தது. அதை நிர்ணயம் செய்யவேண்டியது இத்தகைய நபர்களும் அவர்கள் குடும்ப உறவுகளுமே. தருண் என்ற பத்திரிக்கையாளருக்கும் அவர் உதவியாளருக்கும் பாலியல் பேச்சு இருந்துள்ளது, உறவு இருந்தாலும் இது எந்த வகையிலும் அவர் மேற்கொண்ட பத்திரிக்கை தொழிலுடன் இணைத்து அவர் குடும்பம் அவர் நிறுவனம் என எல்லாம் நடுத்தெருவில் கொண்டு வருவது எவ்வகையில் நியாயமாகும். இளம் பத்திரிக்கையாளரை கடத்தி கொண்டு போனதாகவோ தெரியவில்லை. இந்த இளம் பத்திரிக்கையாளர் இனியுள்ள வாழ்க்கையில் வேலையில் ஜொலிக்கவோ அல்லது அவருக்கு என ஒரு வாழ்க்கை அமைத்து கொள்வது பெரும் சவாலாக இருக்கும். பல பத்திரிக்கையாளர்களின் பலவீனம் கண்டு அவர்களை எலியை பொறிவைத்து சிக்குள்ள வைத்து பத்திரிக்கையின் ஜனநாயக நாட்டிலுள்ள உரிமையை கேலிக்குள்ளாக்குவது வருத்தற்குரியது.


தருண் என்ற பத்திரிக்கையாளர்அரசியலில் நடந்த பல ஊழல்களை தன்னுடைய  எழுத்தால் வெளி கொண்டு வந்துள்ளார். ராணுவம், குஜராத்தில் நடந்த கலவரம், என  பல பிரச்சினைகளை சட்டத்தின் முன் கொண்டு வந்துள்ளார் என்ற காரணத்தால் அவர் தனிப்பட்ட உறவை வெளிச்சம் போட்டு காட்டி அவமதிப்பதில் எந்த சமூக நல்லெண்ணவும் இருக்க இயலாது.

பெண்களுக்கு பாதுகாப்பு  அரசு, காவல், நிறுவனகளால் தர இயலாது. தங்களை முதலில் பெண்கள் நம்ப வேண்டும், தங்களை சிறப்பாக தங்களை மதிக்க வேண்டும். இதற்க்கு தேவை சுய நம்பிக்கை, உண்மை,கவுரவம்!

25 Nov 2013

கொலைகாரியாகும் மனைவிகள்!(2)



 கொலைகாரியாகும் மனைவிகள்lஆண் உலகம் விழிப்புணர்வு பெறுக என்பது தான் தற்போதைய தேவை.  பெண்களை சரியாக பாதுக்காக்கவும் தங்கள் பராமரிப்பில் பாதுகாப்பான அன்பு பிடியில் வைக்க பழகி கொள்ள வேண்டும். பல கணவர்கள் மனைவிகள் மீறும் விதி மீறல்களை தங்கள் எல்லை  மீறலுகளுக்கு சாதகமாக்க துணியும்  வேளையில் இப்புதை குழியில் சிக்கி தாங்களும் அழிந்து போகின்றனர்.
இன்றைய குடும்ப வாழ்க்கையில் பெரும் சிக்கல் தம்பதிகள் பரிபூர்ணமான குடும்ப வாழ்க்கையில் வாழ்வது இல்லை என்பதே. இருவரும் இருவழியில் வேலைக்கு போய் பணம் ஈட்டி  திரும்பி வந்து முகம் பார்த்து பேசக்கூட நேரம் கிடைக்காது அல்லல் படுகின்றனர் ஒரு ஊழியர் வெகுதூரம் பயணம் செய்து வரவேண்டியதால் அதி காலை வீட்டை விட்டு வெளியேறும் போது மனைவி தூக்கம் கெடுக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் விடை கூறுவதில்லை.  இரவும் வீடு போய் சேர  வெகு நேரம் ஆகுவதால் தூக்கத்தில் மூழும் மனைவியை எழுப்பி தொல்லை தரவும் விரும்பாததால் இவர் பேச்சு நேரம் அலுவல பெண்கள் என்ற நிலையில் சுருங்கி விடுகிறது. இவர்கள் தொடர்பாடல் என்பது சாப்பாட்டு மேஜையின் மேல் வைத்திருக்கும் சில குறிப்புகளுடன் முடிந்து விடுகின்றது.

மேலும் தமிழக கலாச்சாரத்தில் பல பெண்கள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்ற காரணம் காட்டி கணவரிடம் பாசமுடனோ காதலுடனோ ஆன உறவு பேணுவதில்லை. மேலும் நகர வாழ்வியலில் வசதியற்ற குடியிருப்புகளும் இவர்கள் அன்னியோன்ய நெருக்கத்தை கேள்விக்குறியாக மாற்றுகின்றது. பல வேலையிலுள்ள பெண்கள் வீட்டிலும் தங்களை இயல்பான நிலையை களைந்து ஆபீசருகளாக வாழ்கின்றனர். ஆண்களும் வேலைப்பழு நட்பு என பல காரணங்கள் கூறி அன்பான உயிரோட்டமான திருமண வாழ்க்கைக்கு விடை சொல்லி வருகின்றனர்.

பழம் காலங்களில் திருமணம் என்பது பல நாட்கள் கொண்டு விசாரித்து குண நலன் ஆராய்ந்து நடத்துவதை விடுத்து இன்று பல திருமணங்கள் பெறும்  வரதட்சணை என்ற வணிகத்தில் நடைபெறுகின்றது. பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு வேறு தொடர்புகள் இருப்பதாக தெரிந்தாலும் அதை திருமணம் சரி செய்து விடும் என்று எளிதான முடிவில் எட்டி விடுகின்றனர். இன்று பல திருமணங்களில் மணமக்களில் வசதி வாய்ப்பு, ஜாதி, மதம் போன்றவற்றுக்கு கொடுக்கும் இடம் மணமக்களின் குணநலங்களை பற்றி விசாரிப்பதில் செலவிடுவதில்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் திருமண வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், பொய் பித்தலாட்டம், புகுந்து விடுகின்றது.

ஆண்களோ பெண்களோ திருமணம் முன்பு சரியாக விசாரித்து தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் அந்தஸ்து சுய நலனுக்காக பொருத்தமற்ற, விருப்பமற்ற நபர்களை திருமணம் என்ற பந்தத்தில் இணைப்பதை விட சரியான துணையை கண்டடைய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்.

 திருமணம் பின்பு தங்கள் துணையை பிடிக்க வில்லை என்றால் சரியான முறையில், சட்ட உதவியுடன் நட்பு உள்ளத்துடன் பிரிந்து விடுவதே நலம். நம்பிக்கை துரோக மனம் கொண்டு தன்னை நம்பும் கணவரை/மனைவியை கொலை செய்வது மிகவும் கொடிய செயல். இச்செயலில் இறங்கிய பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களும் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களையும் சிறைச்சாலை வாழ்க்கையை பற்றியிம் ஊடகம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இதனால் மற்று பெண்களுக்கும் புரிதலுக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மீடியாக்கள் இச்செய்தியை கள்ள காதல் என்ற ஒற்றை பார்வையில் கொச்சையான செய்தியை மட்டும் கொடுத்து கொண்டு செல்வதால் உலகில் இப்படியான பல பெண்கள் உண்டு; தானும் கொலை செய்வதில் பெரிய பிரச்சினையாக காணாது சிக்கலில் வீழ்கின்றனர்.

ஒரு பெண் எடுக்கும் ஒரு அவசர்ர முடிவால் அவள் மட்டுமல்ல அவள் சார்ந்த குடும்ப நபர்கள் என பல தலைமுறைக்கும் களங்கவும் பாவச்சுமையுமாக வாழ்க்கை தொலைகின்றது.

கணவர்களும்; தங்களை பிடிக்க வில்லை என்று ஒரு மனைவி கருதும் வேளையில் சட்ட உதவியுடன் மிகவும் முன் எச்சரிக்கையுடன் அவர்களை விட்டு விலகுவதே நல்லது. தங்கள் ஆண்மைக்கான இழுக்காக காழ்புணர்ச்சியோடு அணுகும் போது வெறி கொண்ட பெண்கள் தங்கள் கணவனுக்கே யமனாக மாறி விடுகின்றனர். காலத்தின் மாற்றம் என்ற வண்ணம் ஆண் உலகம் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய தேவை உணர வேண்டியுள்ளது.

மேலும் காதல் என்பதை கொள்கையாக  கொள்ளாது நேரம் போக்காக எடுத்து கொண்டு உறவுகளை மிகவும் எளிதாக இடை போட்டு வாழ்கை தடத்தையை சிக்கலாக்கி விடுகின்றனர். தங்கள் வீட்டிலுள்ள பூட்டியையும் பாட்டியையும் மனதில் கொண்டு பெண்ணை அடக்கி  விடலாம் என்று நினைப்பது அவர்கள் உயிருக்கே உலையாகி விடுகின்றது!!!

23 Nov 2013

கொலைகாரியாகும் மனைவிகள்!


கடந்த சில மாதங்களாக நாட்களாக தங்கள் கணவரை கொலை செய்யும் மனைவியரின் செய்தியை பத்திரிக்கைகள் வாரி வழங்கி வருகின்றது. இவ்விதம் ஆக்கம் அற்ற செய்திகளை தொடர்ந்து வழங்கி வரும் பத்திரிக்கைகளை ஒரு புறம் குறை கூறினாலும் குற்ற செயல் புரியும் பெண்களில்,  பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மனைவி, பேராசிரியர் மனைவி, கணிணித்துறையில் வேலை செய்வபவர்கள், புதுமண பெண்கள் என எல்லா நிலை பெண்களையும் காண்கின்றோம்.

கல்லானாலும், புல்லானாலும் புருஷன் என கண் கண்ட தெய்வமாக வணங்கி நாதா, ஐயா, அத்தான், மச்சான் என அழைத்து கொஞ்சி மகிழ்ந்து பணிந்து வாழ்ந்த பெண்கள் மனம் வெறுப்பு உணர்வு கொண்டு நிரம்பி கொலை செய்யும் பெண்களாக மாறும் சமூக அவலை நிலையும் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது.
கூட்டு குடும்பம் உடைக்கப்பட்ட நிலையில் தனி குடும்பங்களும் வேலை போன்ற காரணங்களால் இல்லாதாகி வருகின்றதை காண்கின்றோம்.  தனி மனித உரிமை, சுயசார்பான வாழ்க்கை போன்ற போர்வையில்  சமூக மாற்றம், நாகரீகம் என்ற பெயரில் குடும்பம் என்ற அமைப்பின் தேவையை முக்கியத்தை உணர மறுக்கும் சூழலும் காண்கின்றோம். தற்கால எழுத்திலாகட்டும் இலக்கிய படைப்புகளிலாகட்டும் காணும்  சினிமா, தொலைக்காட்சி சீரியலுகள் வழியாகவும் குடும்பம் என்ற அமைப்பை மிகவும் கொச்சைப்படுத்தி அவையை போர்க்களமாக உருவகப்படுத்துவதில் போட்டி போட்டு கொண்டு ஊடக உலகம் முன் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. காலாகாலமாக கணவன் –மனைவி ஜோக் என்ற பெயரில் கணவன் மனைவி உறவை கொச்சப்படுத்தும் சூழலும் கண்டு வருகின்றோம். காதல் உறவை புனிதப்படுத்தும் அளவுக்கு கணவன் மனைவி உறவின் புனித தன்மையை எடுத்து கூறாவிடிலும் புறக்கணிப்பது கொடும் வேதனையாகும்.  கணவன் மனைவி தூய காதலை வெளிப்படுத்தும் தினமான காதலர் தினத்தை கூட  காதலர் தினமாக மாற்றியதும் இன்னொரு அவலம். திருமணம் என்ற பந்தத்தை; பெரிய சிந்ததையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் கூட பிள்ளை உருவாக்கும் இயந்திர அமைப்பு என்ற பார்வையை கடந்து காண இயலவில்லை. பல புரட்சி கவிஞிகளும் தங்கள் கவித்துவ புலமையை வெளிப்படுத்த திருமணம் என்ற அழகிய உறவை கொச்சப்படுத்தும் வரிகளை தான் எடுத்து கொடுக்கின்றனர்.

 
 தானும் சம்பாதிக்கும் சூழலில் கல்வியறிவு பெற்ற சூழலில் அல்லது தன்னிறவு அடைந்த சூழலில் பெண்கள் ஆண்கள் பாதுகாப்பை பெரிய  அரணாக கருதும் போக்கும் குறைந்து வருகின்றது. பெண்கள், ஆணாதிக்கம் ஆண் அடிமைத்தனம் என்ற கோட்பாடுகளிள் சிக்கி கணவன் என்ற உறவை கண்ணிய பார்வையில் இருந்து விலக்கி பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர். மேலும் வேலைக்கு என வெளி உலகை சந்திக்கும் பெண்கள் வெளியுலகு ஆண்களுடன் வரம்புக்கு மேல் பழகும் சூழலும் உருவாக்கி கொள்கின்றனர். கள்ள தொடர்பு என்பது பெண்கள் மத்தியிலும் மிகவும் சகஜமாக பரவ ஆரம்பித்து விட்டது. அல்லது பல நபர் உறவை பெரிய ஒரு  ஒழுக்க சிக்கலாக காண்பதும் இல்லை. அல்லது தங்கள் வாழ்வியலுக்கான தங்கள் ஸ்திர தன்மைக்கான ஒரு வழியாகவும் எடுத்து கொள்கின்றனர். பல பெண்கள் இவ்வித உறவுகளில் சிக்கி புகைந்தும் வெளிறியும் அவதூறு பேச்சுகளின் மத்தியில் பழக்கப்பட்டு கொண்டிருக்கும் போது சில பெண்கள் அசுர வேகத்தில் முடிவெடுத்து கொலைகாரிகளாகவும் மாறி விடுகின்றனர்.