8 Feb 2013

திரைப்படம் 'கடலும்'-தமிழக கிருஸ்தவர்களும்!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் திறமைவாய்ந்த ஒலிப்பதிவாளர் ராஜீவ் மீனோ மேனன் ஒளிப்பதிவு ,  அர்ஜுன், அரவிந்த் சாமி போன்ற அழகான நடிகர்கள் நடித்தும்,  நல்ல இசை , புதுமுகமாக  அறிமுகப்படுத்தின ராதா மகள், கார்த்திக் மகன் ,  தமிழகத்தின்  அழகான கடற்கரையில் படம் பிடிப்பு என் எல்லாம் நல்லா இருக்க  ஜெயமோகனின்  தட்டையான திரைக்கதை  வக்கிரமான திரைஉரையாடல்கள்  மூலமாக, மோசமான கற்பனை பொய் புரட்டால்  முத்தெடுக்க முயன்று மூழ்கிப்போனது தான்  கடல் திரைப்படம் .  

திரைப்படங்கள்  என்பது கற்பனை,  கதை, சார்ந்தது  என்றாலும் நெருடல் இல்லாத சம்பவங்களளுடன், சில யதார்த்தங்களுடன் மக்களின் அடிப்படை சிந்தனையை லாஜிக்கை உதைக்காது இருந்தால்  மட்டுமே  மக்கள் மனதை சென்றடையும். அவ்வகையில் இப்படம் பெரும் தோல்வியை தான் சந்தித்துள்ளது

கிருஸ்துவின் நேரடி சீடர் தாமஸ் கேரளா வழியாக வந்தது முதல்  இந்திய தமிழக கிருஸ்தவ பாரம்பரியம் 2000 ஆண்டுகளை  கடந்தது.  போர்த்துகீஸ் நாட்டினர் இந்திய கடற்கரையில் கால் வைத்தது  கிருஸ்தவம் தமிழக மக்கள் மத்தியில் சிறப்பாக கடற்கரை மக்கள்  ஆக்கபூர்வமாக ஊடுருவி வளருவதற்கு காரணமானது .  

இந்திய பாதிரியார்கள் வெளிநாட்டு பாதிரிகளின் நீட்சியாக வந்தவர்கள் தான். கிருஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா சமூகத்தினரும் ஒரே போல் மதிக்கும் சமூகத்தினரே பாதிரியார்கள். படத்தில்எலே, எலே” என்று விளிப்பது வழியாக பாதிரியாரை அவமதிப்பது, அதீத கற்பனையும் உண்மையும் கடந்த காழ்ப்புணர்ச்சியின் தொடராகவே  தெரிகிறது.

16ஆம் நூற்றாண்டு பழக்கமான  பிரமாண்ட ஆலயங்கள் கொண்ட  கிறிஸ்தவ கடற்கரை ஊரின், அம்மக்களின்  வாழ்வியல் படம் பிடித்துள்ளதில் திரைக்கதையிலும் திரை உரையாடல்களிலும் மிகவும் கவனமாக இருந்திருக்க  வேண்டும், ஆனால் இனங்களை முரண்பட வைக்கக்கூடிய கேலிக்குரிய காட்சி தகவலாகவே  உள்ளது. தொழில் சார்ந்து பார்க்க கரடு முரடாக இருந்தாலும், கடற்கரை  பழக இனிமையானவர்கள் உண்மையானவர்கள் என்றே மீனவ சமூகத்தை கண்டுள்ளோம். வழி கேட்கும் நபரிடம் ஒரு போதும் படத்தில் காட்டியது போன்று  கீழ்த்தரமான பதிலை சொல்லியிருக்க மாட்டார்கள்
மேலும் இந்திய பாதிரியார்களின் சமூகப்பணிகளமதப்பணிகளை  வளைத்து ஒடித்து தவறாக சொல்லப்பட்டுள்ளது.  ஒரு படம் ஏதோ வகையில் சமூகத்திற்கு பயண்பட வேண்டும் என்றிருந்தால் மீனவர்களின் சமூக வாழ்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், துணிந்து போராடும் குணம், அவர்கள் குடியிருப்பை சுற்றியுள்ள சுகாதார கேடான வாழ்கை சூழல் போன்றவை திரைப் படத்தின் கருத்தாக இருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். கிருஸ்த மக்களின் வாழ்க்கையின் நல்லது-கெட்டதில் தாக்கம் ஏற்படுத்தும் சபையின் பிரதிநிதிகளான பாதிரியார்களின் பங்கை பற்றியாவது வலியுறுத்தியிருக்கலாம்

கிருஸ்தவ கத்தோலிக்க பாதிரியார்களின் உதவியாளரை   'மெலுஞ்சி' அல்லது உபதேசியார் என்று தான் அழைப்பார்கள். கோவில்குட்டி என்று அழைப்பது சீர் திருத்த கிருஸ்தவர்கள் தான். இப்படியாக மீனவ வாழ்கையை பற்றியே படிக்காதே, புரிந்து கொள்ளாது  ஒரு மீனவ படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை கண்டு கிருஸ்தவர்களை விட மீனவர்கள் உணர்வு தான் சீண்டப்பட்டிருக்க  வேண்டும்கடலும், தலை சீவாத சில மனிதர்களையும், ஒரு அங்கி போட்ட பாதிரியாரையும் காட்டினால் அது கிருஸ்தவ மக்கள் வாழ்கை சித்திரிகரிக்கும் படமல்ல, கிருஸ்தவ வாழ்கையில் கடவுளுக்கு அடுத்த படியாக மதிக்கும் பாதிரியார்களை இன்னும் நுட்பமாக கவனித்து படம் இயக்கியிருக்கலாம்

கூடங்குளம் பிரச்சனையில் மீனவர்கள்;பாதிரியார்கள் மற்றும் சமூக ஆவலர்கள் துணை கொண்டு போராடி வருவதை கண்ட அரசின் சதியோ தெரியவில்லை, அல்லது இந்துத்துவா அஜெண்டாவா? என்று  தோன்ற வைக்கின்றது கதையும் காட்சி அமைப்புகளும் வசனக்களும்.
 விஷ்வரூபம் என்ற திரைப்படம் பற்றி குறிப்பிட்ட போது கொஞ்சம் உலக அறிவு இருந்தால் மட்டுமே படம் கண்டால் புரியும் என்றனர்; ஆனால்  கடல் திரைப் படம் காண அறிவு, புத்தியே இருக்கக்கூடாது.

விவாதமாக மாறி விடாதா? கொஞ்சம் நாள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று விரும்பிய ஊடக-மத அரசியல் தந்திரங்களுக்கு பதில் கொடுக்காது கிருஸ்தவ தலைமைகள் அமைதி காத்து கொண்டது நல்லதே. தேவையில்லாத விளம்பரம் திரைப்படத்திற்கு கிடைக்காதிருக்க கிருஸ்தவர்கள் கொண்ட யுக்தி நல்லது தான். 

படைப்பை எதிர்த்து கலைஞர்களை பகப்பதும், படைபாளியின் படைப்பை காண துடிக்கும் ரசிகர்களை கோபம் செய்யாது இருந்து கடற்கரை சமூகம் தன்  அறிவு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. விவாதிக்க தினதந்தி தொலைகாட்சிக்கு வந்த கிருஸ்தவ பிரதிநிதியும் தகுந்த  காரணங்களுடன் தரவுகளை முன் தெரியவில்லை. அவர் ஊழியக்காரர்களை புகழ் பாடுவதிலே இருந்தார். செல்வமணி போன்ற திரையுலகு கலைஞசர்களும் திரைப்படம் நோக்காதே விவாதம் செய்ய வந்தது  நகைப்புக்குறியதாகவே இருந்தது. வாசந்தி என்ற பெண்மணி ஒரு ஊடகத்தில் பேசுகின்றோம் என்ற புரிதலுடன் சரியான விவாத கருத்துக்கள் முன் வைக்கவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளரரை பற்றி சொல்லவே வேண்டாம். சும்மா கூலிக்கு மாரடிப்பதாக விவாதம் நமத்து போனது தான் மிச்சம்.

இருந்தாலும் கிருஸ்தவர்கள் இப்போதாவது விழித்து கொண்டால் நல்லது. தங்களை பற்றியுள்ள பொய் பிம்பங்களை உடைக்கவும் தங்களுக்குள்,  தங்கள் சமூகத்தினுள்ளில் நிலவும், வளரும் ஊழலை களையவும் முன் வர வேண்டும். 

முழுக்க முழுக்க இப்படத்தின் தோல்வியை இக்கதையின் மேலும் திரை உரையாடல்கள் என்ற பெயரில் உருவாக்கிய ஜெயமோகனையே சேரும். ஸ்தொத்திரம் எனக்கூறுவது துவங்கி, கத்தோலிக்கர்கள் வழக்கமல்லாத சாத்தான் யேசுவின் பிள்ளை , சோத்து மதம் என்ற வார்ததைகள் எல்லாம் வன்மத்தின் உச்சம். 
படைப்பாளர்களால் மனித நன்மையை மனித குலத்தின் அன்பையும் ஒற்றுமையையும் மனதில் வைக்காது எப்படி இவ்வளவு வன்மமாக எழுத முடிந்தது எனத்தெரியவில்லை. அதும் ஜெயமோகன்! தூத்துக்குடி கடற்க்கரை பேச்சையும் நாகர்கோயில் கடற்கரை மொழியையும் கூட்டி கலத்தி புதுசான  பொதுவாக ஜெயமோகன் கதைக்கும் மொழிக்குள் கொண்டு வந்துள்ளார். என் ஆச்சரியம் ஒரு எழுத்தாளனால் இவ்வளவு கேவலமாக இவ்வளவு அருவருப்பாக இன்னொரு இனத்தை, மதம் சார்ந்த மக்களை அவர்கள் வாழ்வியலை பார்க்க எப்படி முடிந்தது என்று தான். இந்த கதைப்படி இந்த ஊர் மக்கள் அமசோன் காட்டில் வாழும் இல்லது இந்தோனேஷியா போன்ற பழங்குடியல்ல. தமிழகத்தின் மூத்தகுடி. ஜெயமோ ன் ஒரு வாரம் மணப்பாடில்  தங்கி இருந்து இக்கதையை எழுதியிருந்தால் இந்த அளவு பிழை வந்திருக்காது. மனிதனனின் கற்பனையில் இவ்வளவு அசிங்கங்களா? இது போன்ற கலைப்படைப்புகள் காலத்தின் அவலம். 

2 Feb 2013

கிழவனும் கடலும்!


அமெரிக்கன் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஏர்னெஸ்ட் ஹேமிங்வேவின் குறும் நாவல் ஆகும் “கிழவனும் கடலும்”.  இந்த நாவல் வாசித்து முடிக்கும் போது நீங்களும் ஒரு கடல் பயணம் மேற்கொண்ட களைப்பை  உணர்வீர்கள். வாழ்கையின் போராட்டம், வருத்தங்கள் அதை தொடர்ந்து எழும் ஒரு நம்பிக்கையின் ஒளிவட்டத்தில் இறங்கி செல்வீர்கள்.  நம் கதையின் நாயகன் சந்தியாகு என்ற முதிர் வயது மீனவராகும்.  “நான் ஒரு வித்தியாசமான மனிதன்” என தன்னை தானே  உற்சாகப்படுத்தி கொண்டு தனிமையில் இல்லாமையில் வாழ்பவர். பெரியவர் தன் இளம் பிராய  மீனவ நாட்களை அசைபோட்டு கொண்டு வாழ்ந்து வருபவர். ஆப்பிரிக்கா கடல் எல்கை வரை சென்று மீன் பிடித்ததையும் அப்போது கடற்கரையில் துள்ளி விளையாடி கொண்டிருக்கும் சிங்க குட்டிகளையும் கண்டு மடங்கியதையும் எண்ணி இனியும் அது போல் ஒரு நாள் வரும் என நினைத்து கொண்டு வாழ்கையை தள்ளுபவர். அவன் கனவில் கூட  துள்ளி விளையாடும் சிங்க குட்டிகள் தான் வந்து செல்கின்றன.
கடந்த 80 நாட்களாக மீன் பிடிக்க சென்றும் ஒரு மீனும் கிடைத்தபாடில்லை. முதல் 40 நாட்கள் தன் உதவியாளனும் மகனை போன்று அன்பு செலுத்தும் மனோலினும் உடன் செல்கின்றான்.  “இவருக்கு ராசி இல்லை வேறு படகில் மீன் பிடிக்க செல்” என தன்  பெற்றோர் வற்புறுத்தியதால் அடுத்த 40 நாட்கள் மனதில்லா மனதோடு வேறு படகில் பயணிக்கின்றான்.  இருப்பினும் தனது ஓய்வு நேரத்தில் முதியவருக்கும் உதவுகின்றான். என்னதான் 80 நாட்கள் மீன் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பின் மூன்று வாரம் தொடர்ந்து தினம் ஒரு மீன் கிடைத்ததை எண்ணி பெரியவர் மனதை தேற்றி மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.  பெரியவருக்கு தன் பழைய மீனவ நாட்களை பற்றி, கடற்கரையில் கண்ட சிங்கம் பற்றி கதைக்க ஆசை. ஆனால். சிறுவனின் மனம் பழைய கால கதைகளை விட விளையாட்டு வீரர்களை  பற்றிய கதைகள் அறிய தான் தான் ஆற்வம் கொள்கின்றது. பெரியவரும் சிறுவனின் விருப்பத்திற்க்கு இணங்க விளையாட்டு வீரர்கள் அவர்கள் வாழ்கை பற்றி பேசிகொண்டிருக்கின்றனர். இரவு வந்ததும் பெரியவரிடம் தூங்க செல்லுங்கள் நான் வந்து எழுப்பி விடுகின்றேன் என்று கூறி செல்கின்றான் சிறுவன். ஆனால் அடுத்த நாள் பெரியவர் சிறுவனை எழுப்பி இருவருமாக கடல் நோக்கி செல்கின்றதை காண்கின்றோம்.  பெரியவருக்கு வாழ்த்துக்கள் கூறி இந்த முறை நீங்கள் கண்டிப்பாக மீனுடன் வருவீர்கள் என நல்வார்த்தை கூறி அனுப்பி விட்டு விடை பெறுகின்றான். பெரியவரும் எனக்கு நம்பிக்கையுள்ளது என கூறி செல்கின்றார்.
முதியவருக்கோ வயதால் ஆன களைப்பு!  இருப்பினும் யாருக்கும் தலை வணங்காத சுயமரியாதை தன் திறைமையின் மேலுள்ள நம்பிக்கையால் கொண்ட கற்வமும் கலந்த மனிதராக காணப்படுகின்றார். மதியம் நேரம் கடந்த வேளையில் நம்பிக்கை மறைய துவங்கும் நேரத்தில், சோர்வுடன் இருக்கும் முதியவர் தூண்டிலில் ஒரு பெரிய மீன் மாட்டுகின்றது.  ஆகா…என்று பெருமூச்சு விட்ட பெரியவருக்கு நம்பிக்கையின் துளிர்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன.  தன் உழைப்பு, நம்பிக்கையாக மாறும் மீனை எண்ணி பெருமைப்படுகின்றார்.  தான் ராசி இல்லை என தூற்றிய சுற்றும் மறைந்து ஆசுவாசம் கொள்கின்றார்.  மீன் மரண வலியால் துடிக்க பெரியவரோ எப்படியேனும் மீனை இழுத்து கரை சேர்க்க தன் முழு பலனையும் பிரயோக்கின்றார். மீனின் வலி பெரியவரையும் வாட்டுகின்றது. ஆனால் பரிவுடன் ‘என் சகோதரா உன்னை நேசிக்கின்றேன் ஆனால் மன்னித்து விடு என் பிழைப்பு உன் மரணத்தில் தான் உள்ளது’ என்று தன் இயலாமையும் தெரிவிக்கின்றார் பெரியவர். மீனா அல்லது தன் உயிரா என்ற கொடும் போராட்டத்தில் மீனை கரை சேர்க்க எல்ல வழிகளையும் கையாளுகின்றார் பெரியவர். மீன் அவர் எதிர்பார்த்ததிலும் மிகமிகப் பெரியது! 18 பவுண்டு எடை கொண்டதாக தெரிகின்றது. மீனவருக்கு தன்னால் மீனை கரை சேர்த்து விட இயலுமோ என்று அச்சம் எழுந்தாலும் தன்னால் முடியும், “நான் வித்தியாசமான மனிதன்”  என்று தன்னை தானே உற்சாகப்படுத்தி கொண்டு மரணப்போராட்டத்தில் பயணித்து கொண்டிருக்கின்றார்.
மீன் இரத்தம் கடல் தண்ணீரில் கலக்க, இரத்த மணத்தால் ஈர்க்கப்பட்ட பெரும் சுரா மீன் ஒன்று முதியவர் படகை  தாக்குகின்றது. முதியவருக்கு பலம் இழந்து விட்டது. மீனை நினைத்து வருந்துகின்றார், சகோதரனை போல் உருகி வருந்தும் கிழவருக்கு சுராவோ ஒரு பெரும் எதிராளியாக கொடியதாக தெரிகிறது. தன் வாழ்வாதரமாக போகும் தன் சகோதரனை போல் நேசிக்கும் மீனின் தற்போதைய துன்ப நிலையை காண முதியவருக்கு பலனில்லை. மீனின் பெரும் பகுதி சுராவிற்கு  உணவாகி கொண்டிருக்கின்றது.  இரவு பத்து மணியுடன் முதியவர் பலத்த காயங்களுடன் மீனின் சில சொச்ச முள்ளுடன் கரை சேர்கின்றார்.
எல்லா மனிதனும் தன் தோல்வியில் தன் விதியே இயலாமையை எண்ணி வருந்துவது போன் மீனவ பெரியவரும் தனக்கு மீன் கிடைக்காதது மீனை கொல்ல நினைத்த பாவமோ என வருந்துவதை காண்கின்றோம். இல்லை மிகவும் தூரம் சென்றுவிட்டோம் என்றும் தன்னை தேற்ற நினைக்கின்றார். இளைஞர்கள் 60 முழம் ஆழத்தில் தூண்டில் இட்ட போது தான் 100 முழம் ஆழத்தில் அல்லவா முயன்றேன் என்றும் தன் அயராத உழைப்பை எண்ணி ஆறுதல் அடைய முயல்கின்றார். எத்தனை தோல்விகளை கண்டாலும் மறுபடியும் எழ துடிக்கும் ஒரு மனதை எண்ண அலைகளை இக்கதையில் கதாசிரியர் வெளிப்படுத்துவதே தனி அழகு.
இப்படியாக மனிதனின் வாழ்கை போராட்டத்தை அருமையாக சித்திரிகரித்துள்ளார் ஏர்னெஸ்ட். அந்த மீனவன் இடத்தில் நாம் ஒவ்வொருவருடைய வாழ்கை சூழலும் எண்ணங்களும் அவ்வளவு கச்சிதமாக  பொருந்தி போகின்றது. குறும் கதைக்கான சிறிப்புகளில் ஒன்றான  தத்துவ மழையிலும் வாசகனை நனையச்செய்துள்ளார் ஆசிரியர். “வாழ்கை என்பது தோற்க அல்ல ஆனால் போராடுவதுமே” என்ற அற்புத தத்துவம் நம்மையும் வழி நடத்துகின்றது.  “இந்த விசாலமாக கடலில் நம் நண்பர்கள் போலவே எதிரிகளும் உள்ளனர்”. ஒரு நாள் எனக்கான பெரிய மீனை பிடிப்பேன் என்னை சுற்றி தான் உள்ளது” என்பது நம் லட்சிய பயணத்தில் வெற்றியை நினைவுப்படுத்துகின்றது.  சுரா மீனை பார்த்து “நான் ஒன்றும் உனக்கு செய்யவில்லை உன்னாலும் என்னை ஒன்றும் செய்ய இயலாது” என்பது நாம் அறியாத நம் எதிரிகளை நினைவூட்டி செல்கின்றது.
வயதானவர்கள் வெகு காலை எழும்போது இளைஞர்கள் வெகு இரவில் தூங்கி அதி காலை எழ இயலாது தவிக்கும் நிலையும் இயல்பாக மனித வாழ்கையின் புதிரான இயல்புகளில் ஒன்றாக புரிகிறது.  ‘முதிய வயதில் தனிமை என்பது தவிற்க இயலாது ஆனால் தவிற்க முடியாததுமாக உள்ளது” என்று முதுமையின் சூழலை ஒரே வாக்கியத்தில் சொல்லி செல்கின்றார் ஏர்னெஸ்ட்.
மீன் அனுவவிக்கும் வேதனை கண்டு துடிக்கும் மீனவன் தன் சகோதரானாக பாவித்து “என் வேதனையை நான் தாங்கி கொள்வேன் ஆனால் உன் வேதனை தான் எனக்கு கொடியதாக உள்ளது” என்று உருகும் போது ஈர மனதுள்ள மீனவ கதாபாத்திரம் நம் மனதை ஆட்கொண்டு விடுகின்றது. மீனைவிட புத்திசாலியாக மீனவன் இருப்பதால் தான் மீனை பிடிக்க முடியும் என்று கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாயகன் தனக்கு பிடிபட்ட மீனும் தன்னை விட பலம் வாய்ந்ததும் மேன்மையானதுமாக கருதுகின்றார்.  இது வாழ்கை படிக்கட்டில் மேலை நிற்பவர்கள் தனக்கு கீழை உள்ளவர்களை நோக்க வேண்டிய மனித நேயமான பார்வையாக உள்ளது.    “நாம் அச்சமில்லாது தன்னப்பிக்கையுடன் இருப்பது அவசியம்; எனக்குக்கு வேதனைகள் பெரிய பொருட்டல்ல”; அமைதியாக ஆனால் உறுதியாக இருக்கின்றேன், நான் சோர்வுற்ற மனிதன், ஆனால் செயலற்றவன் அல்ல! போன்ற தன்னம்பிக்கையான வாசகங்கள்  வேதமாக தான் காதில் ஒலிக்கின்றது. நமது வெற்றி என்பது இன்னொருவரின் தோல்வி ஆனால் அடிமைகள் போன்று ஒரு நியதியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதை மீனிடம் அவர் பேசும் அன்பான வார்த்தைகளில் வழியாக புரிந்து கொள்கின்றோம். கடலில் துள்ளி குதிக்கும் டால்பின் மீனவனின் சிறந்த நண்பன் என்று கூறும் மீனவர், அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும்  குருவி ஒன்றும் சேகரிக்காது இருப்பதையும் சொல்லி செல்லும் பாங்கு பல மனிதர்கள் குணநலன்களை எடுத்து சொல்லும் பாங்காகவே உள்ளது.
நான் மதவாதியல்ல ஆனால் கடவுளை நம்புகிறவன் என்று கூறி தன் வெற்றிக்கு கடவுள் பக்கம் ஜெபத்தை ஏறெடுப்பதையும் காண்கின்றோம். இத்தருணத்தில் கதாசிரியர் ஏர்னெஸ்டு அமெரிக்காவின் ஆதிக்க நிலையை எதிர்த்து வாழ்நாள் முழுதும் போராடியவர் க்யூபா போன்ற கம்யூனிஸ்டு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர் என்பதையும் நினைவு படுத்த வேண்டும்.
மீனவன் தன் உடையான கால்சட்டையை சுருட்டி மடித்து தலைக்கு கொடுத்து உறங்கும் வரிகளில் மீனவனின் மொத்த வறுமையும் வாசகனுக்கு எடுத்துரைப்பதை காணலாம்.
புதிய தலைமுறை கடலை ஆண் என்பது போல உருவகப்படுத்தும் போது பழைய தலைமுறை ஒரு பெண்ணாக பாவிப்பதில் தான் மகிழ்ச்சி கொள்கின்றது என்று சொல்கின்றார் கதாசிரியர்.  தலைமுறைகளின் புரிந்துணர்விலுள்ள மாற்றம், காலத்தால் ஏற்பட்ட இடைவெளியையும் உணர்த்தி செல்கின்றார். இப்படியாக ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் கதை சொல்லும் ஹேமிங்வே கதைக்கு விருது கிடைத்ததில் ஆச்சிரியப்படுவதற்கு மில்லை. இயல்பான எளிய மனிதனின் கதை மனதை நெகிழ செய்யும் கதையும் கூட தான்!
மீனவர் அனுபவித்த அதே துயர் அச்சம், போராட்டம், ஏமாற்றம், நம்பிக்கை, என எல்லா கட்டங்களையும் கடந்து நாமும் பயணிப்பது திரில்லான அனுபவமாகத்தான் உள்ளது. முதியவரின் நிலை கண்டு சிறுவன் பெரிதும் வருந்துகின்றான்.  காப்பி, உணவு வாங்கி கொடுத்து முதியவரை தேற்றுகின்றான்.  குணம் பெற்றதும் தானும் முதியவருடன் மீன் பிடிக்க செல்வதாகவும் வாக்கு கொடுக்கின்றான். முதியவர் தான் காணப்போகும் சிங்கத்தை கனவு கொண்டு நிம்மதியாக துயில் கொள்கின்றார்.

18 Jan 2013

மாதவிடாய்!-ஆவணப்படம்



ஆவணப்படம் என்பது கற்பனை கலராது உண்மை நிகழ்வுகளை பதிவு செய்வதாகும்.  மாத விடாய் என்ற ஆவணப்படம் டிச: எட்டாம் நாள் 2012ல் வெளியாகியுள்ளது.  .  கீதா இளங்கோவன் இயக்கத்தில் உருவான இப்படம் அவருடைய  இரண்டு வருட உழைப்பின் பலன் என அறிகின்றோம்.  இந்த ஆவணப்படம் களஞ்சியம் பெண்கள் சுய உதவி இயக்கத்தின் தலைவியும், `ஸ்த்ரீ சக்தி' புரஸ்கார் விருது பெற்றவருமான திருமிகு சின்னப்பிள்ளை வெளியிட, எழுத்தாளர் திரு மாலன் முதல் குறுந்தட்டை பெற்றுக் கொண்டுள்ளார். இப்படம் ஊடாக  மாத விடாய் பற்றிய பல உண்மைகளை, சமூகசீர்கேடுகளை, அவலங்களை சாடியுள்ளனர்.

இப்படத்தில்  எழுத்தாளரும் கல்வியாளருமான  வா.கீதா, முனைவர் எஸ். சுபா, கிராம விரிவாக்க இயக்குனர் ரேவதி, பெண்ணிய செயற்பாட்டர் லூசி சேவியர், திலகவதி ஐபிஎஸ், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பால பாரதி, முனைவர் மார்கரட் சாந்தி போன்றோர் தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.


இதில் இடம் பெரும் நாட்டுப்புறப் பாடல் இந்த ஆவணப்படத்தில் கதைச்சுருக்கத்தை அழகாக அடிகோடிட்டு காட்டியுள்ளது.  தீட்டும், சடங்கும் வேண்டாம், கெட்ட பண்பாட்டு பழக்கங்களும் வேண்டாம் …. தாய்பால் போல் விலக்கு ரத்தத்தையும் கருத வேண்டும், கற்ப பையை புரிந்து கொண்டால் அடிமை வாழ்க்கை இல்லை என வலியுறுத்துகின்றது. இந்த கவிதையின் ஆசிரியை எங்கள் பலகலைகழக முன்னாள் மாணவி சோலை செல்வன் என்று அறிவது  மிகவும் பெருமையே.

மதுரை பக்கம், மாதவிலக்கு நாட்களில் பெண்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கழிவறை வசதி இல்லாத,  சுகாதாரம் அற்ற வீடுகளில் தங்க வைப்பதுடன் மாதவிடாய் காலங்களில் வெளியாகும் இரத்த பொட்டலங்களை மரத்தில் தொங்கவிடும் மூட வழக்கத்தை விவரிப்பதுடன் படம் துவங்குகின்றது.   மாத விடாய் என்பதை பெண்களுக்கு சந்தோஷமான நிகழ்வாக இருப்பது இல்லை.  இதை ஒரு தீட்டாக, அசிங்கமாக, அவமானமக பார்க்கின்றனர். இதனால் தங்கள் ஆளுமை சிதறடிக்கபாடுகின்றது என்று பெண் ஆவலர்கள் கருத்துக்கள் தெவிக்கின்றனர்.


  அசுத்தம் என்ற கருத்தே இதன் கொடிய அரசியல் என சொல்லிய ஒரு பேராசிரியர், மாதவிலக்கு என்ற நிகழ்வை கொண்டாடும்  சமூக பண்பாட்டில் ஒதுக்கி வைக்கப்படும் பழக்கவும் சேர்ந்தே உள்ளது என்பதை நாம் அறிந்து இதன் அறிவியலான காரண காரியங்களுடன் அறிவு புகட்ட வேண்டும்,  என எடுத்துரைக்கின்றார்.

எல்லா மத வழக்கத்திலும் இந்த நாட்களை தீட்டாக பார்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசாம் மாநிலத்தில் இந்த ரத்தத்தை வழிபடுவதாகவும் எடுத்து சொல்கின்றனர்.   விலக்கு நாட்கள் வரும் இரத்தம் மருத்துவ உலகில் உபயோகப்படுத்துகின்றனர் என்ற தகவலையும் தருகின்றனர்.  கர்ப பையின் செயலாக்கம் பற்றி ஒரு சிறிய விளக்கம் இப்படவும் கண்டு தெளிவு  பெறலாம்.  

ஒரு தெருவோரம் வியாபாரம் நோக்கும் குறவ பெண் முதல் வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள், சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண்கள், காவல்துறை, பொறியாளர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்களாக பணிபுரியும் பெண்கள் என பெண்களாக பிறந்த எல்லா பெண்களுக்கும் பொதுவான ஆனால் கணக்கில் எடுக்காத பிரச்சினையாக உள்ளது மாதவிலக்கு நாட்கள் தள்ளிவைப்பு என்பது. இதில் மாற்று திறனாளிகள் பிரச்சினை மிகவும் கவலையளிக்கின்றது.  மூளை வளர்ச்சியற்ற குழைந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பு கருதி கர்ப பையை நீக்கி விடுவதாகவும் சொல்கின்றது ஆவணப்படம்.

ஒரு பிரச்சினையை ஆராய்வது மட்டுமல்ல அதற்க்கு தீர்வு சொல்வதும் ஆவணப்படங்களின் பொறுப்பாக வருகின்றது. அவ்வகையில் சில சமூக தீர்வுகளும் பரிந்துரைத்துள்ளது இப்படம்.
1.    பள்ளி குழந்தைகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பதை எடுத்து கூறியுள்ளனர். இரண்டு ரூபாய் காயின் செலுத்தினால் ஒரு நாப்கின் பெறும் கருவி பொருத்துவது வழியாக இப்பிரச்சினைக்க்கு தீர்வு உண்டு என சொல்லியுள்ளனர். 60 ஆண்டு அரசியல் சாதனையாக குறிப்பிடப்படும் இந்த சாதனை எல்லா அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும்  சென்றடைந்ததா என்ற தகவல் இல்லை. பல பள்ளிகளில் கழிவறை இல்லை இருப்பதும் சுத்தமாக பராமரிப்பது இல்லை, தனியார் பள்ளிகளில் கூட கழிவறை சுத்தம் பேணுவது அரிதே என்பது நாம் அறிந்ததே. ஏன் நிகழ்கால பல்கலைகழகங்களில் கூட கழிவறையை சுத்தமாக பராபரிப்பது இல்லை. ஒரு ஆசிரியை வாயிலாக பள்ளி ஆசிரியைகள் தாங்கள் பயண்படுத்திய நாப்கினை கழிவறையிலும் கழிவறை மூலையிலும் எறிந்து சொல்வதை கேட்கும் போது கல்வி கற்ற பெண்களும் பொறுபற்றே உள்ளனர் என்பதை அறிகின்றோம். அதே வேளையில் தகுந்த வசதிகள் பெண்களுக்கு பணிநோக்கும் இடங்களில் கிடைப்பது இல்லை; பெண்கள் திட்டமிட்டு இப்படி சுகாதாரக் கேடாக நடக்க வேண்டும் என எண்ணுவதில்லை என கல்லூரி பேராசிரியை சொல்வதையும் காது கொடுக்க வேண்டியுள்ளது. 

2.    பொது கழிவறை, பொது மருத்துவ மனை கழிவறை பற்றி விவரிக்கின்றார். கட்டமைப்பே பெண்களும் பயண்படுத்த தக்க விதம் கட்ட வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.  இதில் சட்ட மன்றத்தில் கூட பெண்களுக்கு தகுந்த விதமான கழிவறை கட்டப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

3.    பெண்கள் நட்பு கழிவறை- Girl Friendly Toilet: அதாவது ஒரு பெண்கள் கழிவறை என்றால் அதற்கான கட்டமைப்பு மிகவும் அவசியம் என அறிவுறுத்துகின்றது இந்தாஆவணப்படம்.  பெண்கள் கழிவறைக்கு அருகிலே விலக்கு நாட்களில் பயண்படுத்தும் நாப்கினை அப்புறப்படுத்த கான்கிரிட்டில் அல்லது மின் கருவியிலான இடம்,  சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்காத விதம் எரிக்கும் தொழிநுட்ப கருவிகள், சுத்தப்படுத்த தண்ணீர் கைகழுவ சோப் என்பதும் சேர்த்து பரிந்துரைக்கின்றனர்.  சில நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் தற்போதே பயண்படுத்தும் போதும் பல இளம் மாணவிகள் கழிவறை வசதி இல்லாததால் சுள்ளி காட்டுக்கே போய் வருவதாக  குறிப்பிடுகின்றனர்.

4.    நாப்கின் பயண்படுத்தலின் தேவையை இங்கே குறிப்பிடும் வேளையில் கிராமப்புறங்களில் பயண்படுத்தும் துணிகள் மற்றும் நாப்கின் பயண்படுத்துவதால் வரும் தீமையும் விளக்குகின்றனர்.    ஆவணப்படத்தில் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவிகளுக்கு பயண்படுத்தும் துணியை செய்ய பயிற்சி அளிக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. ஒரு நாள் 50 மிலி இருந்து 300 மிலி வெளியேரும் குருதிக்கு மூன்று முதல் ஐந்து நாப்கினுகள் தேவை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆவணப்படம் வழியாக பெண்கள் தேவையை புரிந்து கொள்ளாத அரசு மட்டுமல்ல மாத விலைக்கை பற்றி சரியான புரிதல் இல்லாத மூடபழக்கங்களும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக தான் உள்ளது. ஆனால் மூன்று நாட்களுக்கு ஒரு நாள் குளிக்கும் நாப்கினே பயண்படுத்தாத பெண்ணின் நேர்முகவும் காணும் போது பெண்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டியுள்ளதையும் காணவேண்டியுள்ளது.
பெண்கள் ஆரோக்கிய நிலையில் கருதல் கொள்ள வேண்டும் என்பதும் வரும் சமுதாய வளர்ச்சிக்கு ஆரோக்கியமாக தலைமுறைக்கு தேவை என்பதை அழுத்தமாக சொல்லும் இப்படம் ஆண்களும் பெண்களை பரிவாக நோக்க கூறியுள்ளனர்.

இந்த ஆவணப்படத்தில் காணும் குறை என்பது சமூகத்தில் மாதவிலக்கை பற்றி இருக்கும் மூடபழக்க வழக்கத்தை அழுத்தமாக  கூறிய இப்படம், பெண்கள் தங்கள் உடலை சிறப்பாக; பெண் உறுப்பை சுத்தம் சுகாதாரமாக வைக்க வேண்டிய அவசியம் இன்னும் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்.   அதே போன்று பழைய காலத்தில் பயண்படுத்தும் பருத்தி துணியிலான நாப்கின் அவசியவும் உணர்த்த வேண்டும். ஒரு நாளைக்கு 5 என்ற கணக்கில் 3 நாட்களுக்கு 15 நாப்கின் இன்று சந்தையில் பெற 65 ரூபாய்க்கு மேல் செலவாகும்.  எல்லா நாப்கினும் சுகாதாரமானதோ பாதுகாப்பானதோ அல்ல. ஆவணப்படத்தில் செய்து காட்டும் தடிமனான துணியிலான நாப்கின் முறை தவறானது ஆகும். இது குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்த காரணமாகும். மேலும் சுகாதாரமான வசதிகளை அரசு செய்து கொடுப்பது போன்றே மக்களுக்கும் தங்களை சுகாதாரமாக பேண கடமை உண்டு. இதற்கும் தேவையான தகவல்கள் ஆவணப்படம் ஊடாக பெற்றிருந்தால் முழுமை பெற்றிருக்கும். இலவச நாப்கின் எனபது 60 ஆண்டு ஆட்சி சாதனையாக கருதுவதும் இகழ்ச்சியாக தான் உள்ளது. ஒரு நாப்கினுக்கு கூட அரசை கெஞ்சும் சூழலுக்கு நம் பெண்கள் வீழ்ந்து விட்டனரா ?



பழைய பண்பாட்டை வெறுக்கவும் அடியோடு ஒழிக்கவும் நினைக்கும் போது அதில் இருந்து நாம் பெறும் சில நல்லவைகளையும் எடுத்துரைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  பெண்களுக்கு சத்தான, தேவையான உணவு எடுத்து கொள்ளும் அவசியம், பயண்படுத்திய நாப்கினை பாதையோரம் துக்கி எறிவதால் விளையும் சுகாதாரக்கேடு பற்றியும் சொல்ல வேண்டியிருந்தது. துணை பேராசிரியர் பிரேமா கடைகளின் நாப்கினை பேப்பரில் பொதிந்து கறுப்பு பையில் தருவதை கேள்வி எழுப்பியுள்ளார். அது விற்பனையாளரின் மரியாதையை பொறுத்தது என எடுத்து கொண்டாலும்; வீட்டில் வாடிய முகத்துடன் இருக்கும் அம்மாவிடம் மகன் என்னாச்சு என்ற கேட்டால் அம்மாவும்; "இன்று மாதவிடாய் அதுவே சோர்வாக இருக்கின்றேன்" என்று சொல்ல எத்தனை அம்மாக்களுக்கு துணிவு வரும் என்று கேட்க தோன்றுகின்றது. 


எது எதையோ படமாக எடுக்கும் இந்த காட்சி ஊடக உலகில்; பலர் வெட்கப்படும் கவனத்தில் கொள்ளாத ஆனால் பிகவும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய  மாதவிடாய் பற்றி இயக்கி தயாரித்த கீதா இளங்கோவனுக்கு நம் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.  மேலும் பல ஆக்கபூர்வமான சமூக கருத்துள்ள படங்களுடன் தோழியை மீண்டும் சந்திக்கலாம் என்று வாழ்த்து கூறி விடைபெறும் போது , இந்த ஆவணப்படத்தினை  மிகவும் கருதலுடன் அனுப்பி தந்து பதிவாக வெளியிட பரிந்துரைத்த  பாசமிகு மதிபிற்குரிய ஸ்ரீவில்லிபுத்தூர் இரத்தின வேல் ஐயாவுக்கு என் நன்றி வணக்கங்கள். ஆவணப்படம் இலவசமாக பெற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி geetaiis@gmail.com .

11 Jan 2013

வாழ்கையும் போராட்டவும்!

ஆங்கில எழுத்து உலகில் தனக்கென்று ஒரு இடம்பிடித்த எழுத்தாளர் பத்திரிக்கையாளர் இவர்.  தனது கதைகளை எளிமையான சொல்லாடல்கள் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். இவருடைய கதைகள் நாம் புரிந்து கொள்ள அகராதி தேடிசெல்ல வேண்டியது இல்லை. சிறு வாக்கிய அமைப்புடன் எளிதாக பாமர மக்களின் மொழியில் கதை- எழுதும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது.  புலிசர் விருது மட்டுமல்ல 1954 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் தட்டி சென்றவர் இவர் என்றால் இவருடைய கதைகள் வாசித்தவர்கள் ஆச்சரியப்பட வாய்ப்பு  இல்லை.  20 ஆம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் ,  நோபல் பரிசு பெற்றவர்,  போர்க்களத்தில் செய்தி சேகரிக்கும் துணிவு கொண்டவர், வேட்டை, ஆழ்கடலில் மீன் பிடிப்பது, காளை போர் போன்ற சாகச விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர். ஆனால் 1961 ல்தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என அறியும் போது ஒரு மனிதனின் வெற்றி தான் தோல்விக்கான படிகளாக மாறுகின்றதோ என எண்ண வைக்கின்றது.  அவர் தான் ஏர்னெஸ்ட் ஹெய்மிங்வே.
அமெரிகாவில் சிக்காகோ நகரத்தில் மத்திய தர பணக்காரகுடும்பத்தில்  மருத்துவரின் ஆறு குழைந்தைகளில் இரண்டாவது மகனாக பிறந்தார் இவர்.  தந்தை அறிவிலும் வீரத்திலும் மகனை வளர்த்திய போது தாய்  கடவுள் நம்பிக்கையிலும் பக்தியிலும் வளர்க்கின்றார்.  தன்அப்பாவிடமிருந்து  வேட்டை, மீன் பிடித்தல் கற்றது போலவே தாயின் உன்றுதலால் ஆலைய பாடகக்குழுவிலும் பக்தியிலும் கடவுள் நம்பிக்கையிலும் வளர்க்கப்படுகின்றார்.  பிற்காலத்தில் இவருடைய கதைத்தளமாக இவையும் உருமாறுகின்றது என்பதும் எடுத்து கொள்ளப்பட வேண்டியது. இவருக்கு நோபல் விருது வாங்கி தந்த கதை The Old Man and The Sea. என்ற குறும் நாவலில் மீன்களை பிடிக்கும் ஒரு மீனவனின் சிந்தனைகளை அருமையாக இயல்பாக, நுணுக்கமாக விவரிப்பது இவர் தனது தந்தையிடம் இருந்து குழந்தைப்பருவத்தில் கற்ற வித்தயே!
தன் பெற்றோருக்கு தன் மகன் தாங்கள் நினைக்கும் நிலைக்கு எட்டவில்லை என்ற வருத்தம் வாட்டியது. இதனார் அச்சுறுத்தல் கொடுத்து கொண்டே இருந்ததால் இரண்டுமுறை தன் வீட்டை விட்டு ஓடுகின்றார்.  தனது 19 வதுவயதில் ராணுவ பயிற்சியில் தீவிர ஆற்வம் கொண்டு, முதல் உலகப்போரில் பங்குபெற தானாக முன் வந்து விருப்பம் தெரிவிக்கின்றார்.  கண்ணில் பார்வை குறை பாடுஉண்டு என புரக்கணிக்கப்பட்டாலும் சாரணியர்இயக்கம் வழியாக அமெரிக்கா-இத்தாலி படையுடன்  ஆம்புலன்ஸ் ஓட்டுனராக போர்தளத்தில்  பணிபுரிகின்றார். ஆனால் இரண்டே மாதத்தில் போர்களத்தில் காயமுற்றுவெளியேறும் சூழல் வந்து சேருகின்றது.  அங்கு தான் 19வது வயதில்  ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் தாதியுடன் முதல் காதல்  அரும்புகின்றது. போரால் சாதாரண மக்கள் கொள்ளும் துயர், காதல் கைகூடாத வீரர்களின் துயர், போர் அரசியல் பற்றி மிக அருமையான  கதைகள் எழுதி பிற்காலத்தில் பாராட்ட பெறப்படுகின்றார்.


கால் ஒடிந்த நிலையில் காயங்களுடன் வீட்டில் வந்து சேர்ந்த ஏர்னெஸ்டுக்கு பெற்றோரில் இருந்து பரிவோ இரக்கமோகிடைக்கவில்லை  மேலும் புரக்கணிக்கப்படுகின்றார். தாய் மிகவும் இரக்கம் அற்றவராக நடந்து கொள்கின்றார். மேல்படிப்பிற்கு செல் அல்லது வேலைக்கு போ என கடிந்து கொள்கின்றார். இராணுவத்தில் கிடைத்த 1000 டாலர்இருந்ததால் ஒரு வருட காலம் எழுத்து வாசிப்பில் நாட்கள் கடத்திய ஏர்னெஸ்ட் ஒரு கனடா பத்திரிக்கையில் வேலைக்கு சேர்கின்றார்.  நண்பன் வீட்டில் சந்தித்த தன்னை விட எட்டு வயது முதியவரான பெண்னை மணம் முடிக்கின்றார். கணவருக்கு உளவியலாகவும் எல்லா பணக் கஷ்டங்களிலும் தாங்குபவராகவும் அவருடைய இலக்கிய பணிக்கு துணிபுரிபவராகவும் உள்ளார்.  தன் காதல் மனைவியுடன் பாரிஸில் வாழ்ந்த தினங்களை எண்ணி அவர் எழுதிய நாவலாகும் The Paris Wife.  மனைவியுடன் வாழ்ந்து முதல் நாலு வருடங்கள் அவருடைய இலக்கிய பயணத்திற்கு புது பரிணாமங்கள்  நல்கிய காலமாக மாறுகின்றது. இக்காலயளவில் அவர் எழுத்துலைகில் பெயர் பெற்ற நபராக மாறுகின்றார்.  ஜாக் என்ற மகனுடன் மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் தன் மனைவியின் நண்பியான பேஷன் பத்திரிக்கையார் பவுளில், பூஜைக்குள் புகுந்த கரடியாக நுழைகின்றார்.  மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை விட 4 வயது முதியவராக பவுளினுடனான  வாழ்கை 12 வருடம் நீடிக்கின்றது.ஏர்னெஸ்டின் எழுத்தை மெருகூட்ட இத்திருமணம் உதவுகின்றது.  பாட்ரிக் என்ற மகனுடன் நிம்மதியாக வாழ  மார்த்தா  என்ற மூன்றாவது நபருடனான தொடர்பு  திருமண பந்ததில் அடுத்த  விரிசலுக்கு  வெடிக்கின்றது.
ஏற்னெஸ்டு தேற்தெடுத்த மூன்றாவது மனைவி மார்த்தா போர்க்களத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர் ஆவார். இவர் மனநிலையை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய மனைவி இவர் ஆவார். இவருடன் வாழ்ந்த 10 வருடங்களில் இலக்கிய வாழ்கை முற்றும் ஸ்தம்பிக்கின்றது.  தன்னை எப்போதும் குற்றம் கூறுவதே கடமையாக கொண்ட மார்த்தாவுடனான தொடர்பு விரைவில் கசந்து நாலாவது மனைவி மேரியில் தஞ்சம் அடைகின்றது வழியாக மீழ்கின்றார்.  இக்காலயளவில் தான் பல விருதுகள் பெறுகின்றார்.  இவருடைய புத்தகங்கள் பல எதிர்பார்க்காத அளவு விற்கப்படுகின்றது.

தன் அடுத்த புத்தகப்பணிக்காக மகிழ்ச்சியுடன் ஆப்பிரிக்கா நாட்டை நோக்கி பயணிக்கும் வேளையில் எதிர் கொண்ட விமான விபத்தால் மிகவும் சோர்வுக்குள்ளாகின்றார்.  இந்த உடல் நலம்   சூழலே பிற்காலத்தில் இவரை தற்கொலை செய்து மரணிக்க வைக்குகின்றது. மேலும் அமெரிக்கா அரசியல் கொள்கையுடன் எப்போதும் எதிர்ப்பு கொண்ட இவர் க்யூபாவில் தஞ்சம் புகுந்திருந்தார். ஆனால் அரசியல் பிரச்சனையால் பிடரல் காஸ்டோ அரசில் இருந்து பல வகைகளில் மன அழுத்தம் கொண்டு நாட்டை விட்டு வெளியேற நிற்பந்திக்க படுகின்றார்.  1960ல்அங்கிருந்து வெளியேறி அமெரிகாவில் குடியேறிய ஏர்னெஸ்ட் தனது தகப்பனார் போன்றே கைதுப்பாக்கியால் தன்னை தான் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றார்.  இது ஒரு விபத்தாக எண்ணி கத்தோலிக்க முறைப்படி அடைக்கம் செய்யப்படுகின்றார். ஐந்து வருடம் பின்பே இவருடைய நாலாவது மனைவி மேரி இவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு நேர்முகத்தில் தெரிவிக்கின்றார்.  இவருடைய  ஒரு சகோதரும் சகோதரியும் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர் பிற்காலத்தில்.  நடிகையான இவருடைய பேத்தியும் 90களில் தற்கொலையை தேடுகின்றார்.
தன்னுடைய தகப்பனார் தற்கொலை செய்து இறந்ததிற்கு  ஆதிக்கம் குணவாதியான தன்னுடைய தாயை குற்றம் சாருகின்றார்.  இவருடைய தற்கொலைக்கு இவருடன் வாழ்ந்த பெண்கள் அல்ல என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.  பெண்கள் உற்றார் உறவினரை விட தன் எழுத்தை நேசிக்கும் சுயநலவாதியாகவே வாழ்ந்துள்ளார்.  கடைசி நாட்களில் பார்வை இழந்து  தன் உயிர் மூச்சான எழுத்தை தொடர இயலவில்லை என்றதும் மனம் உடைந்து தற்கொலையை தேடி கொள்கின்றார் என்றே சொல்லப்படுகின்றது. பிற்காலத்தில்அரசியல் காரணங்களும் இருந்தது என சொல்லப்பட்டது.
இவருடைய பல நாவல், சிறு கதைகளில் கதைத்தளம் இவர் வாழ்கையே.  அதனால் இக்கதைகள் உயிர் ஓட்டம் நிறைந்ததாக மக்கள் மனதில் நிலைத்து நிற் கசெய்தது. இவருடைய எழுத்து பாணி தன்னை ஒரு கதாபாத்திரமாக கொண்டு நேரடியாக கதை சொல்வதாக இருந்தது. இதுவே இவருடைய எழுத்துலக வெற்றிக்கும் பலருடைய விமர்சனத்திற்க்கும் காரணமாகின. ஏர்னெஸ்ட் ஈகோ பிடித்த எழுத்தாளர் தன் கதாபாத்திரம் மட்டும் நல்ல, சிறந்த, போராட்ட குணமுடைய வெற்றி வாகை சூடும் கதாபாத்திரமாக புனையுவார். மற்று கதபாத்திரங்களை தன் நண்பரை கூட நம்பிக்கை துரோகியாக காட்டுகின்றார் என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

இவருடைய பல திருமணங்களுக்கும் இவரை மனஅழுத்த நோய்க்கும்  காரணமாகியது.  இவர் குழந்தைப் பருவத்தில் தன் தாயால் அதீதமாக ஆட்சி செய்யப்பட்டதே. தன்னை விட வயதிற்கு அதிகான பெண்களை மணம் முடித்து தாய் பாசம் தேடியதாகவும், ஆனால் தன் கடைசி திருமணத்தில் ஒரு மகளுடைய பாசமே தேடினார் என்றும் சொல்கின்றனர்.  இவர் வேட்டைப்பிரியரும் முழு குடிகாரருமாகவே இருந்துள்ளார்.  தன் முதல் மனைவியை பிரிந்ததில் இவர் என்றும் வருந்தினார் என்றும், தன் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் அவருடன் பல முறை பேசியுள்ளார் என்றும் தகவல் உள்ளது.  இவருடைய வெற்றியில் மனைவியில் பங்கும் பெரும் அளவு உண்டு என்றும் இவருடைய தோல்விக்கு முதல்படி இவர் தன் மனைவியை பிரிய நேர்ந்ததுமே என்றும் இவர் விரும்பிகள் கருதுகின்றனர்.   இவருடைய முதல் மனைவியிலுள்ள மகன் பிற்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாகினார்என்று மட்டுமல்ல இவருடைய முதல் மனைவியும் தன் வாழ்கை சரிதம் வழியாக பல வாசகர்களை சென்றடைந்தார்.                                      ஆனால் இவருடைய கதைகளில் அடிநாதமாக ஒழுகி வரும் செய்தி போலவே வாழ்கையில் வெற்றி என்பது இலக்கை அடைந்து விட்ட நிலையை விட வெற்றி இலக்கை அடையும் போராட்டமே சிறந்த  வாழ்கை என்பதற்க்கு இணங்க  வாழ்கையில் சிறப்பாக போராடியவரும் தான் ஏர்னெஸ்ட்.யை தேடி கொள்கின்றார். அரசியல் காரணங்களும் இருந்தது என சொல்லப்பட்டது.



  அடுத்த பதிவில் The Old Man and The Sea பற்றிய சிறு விளக்கத்துடன் வருகின்றேன்.