8 Jan 2013

உங்கள் பாதுகாப்பு யாரிடம்?


கேட்க வித்தியாசமாக இருந்தாலும் உண்மை நிலவரம் இதுவே.  பிறக்கும் குழந்தையில் இருந்து மரணப் படுக்கையில் இருக்கும் மனிதன் வரை அடுத்தவர்கள் தயவை, மனிதத்தை எதிர்பார்க்கும் சூழலில் தான் வாழ்கின்றோம். இந்த சூழலே நம்மை சமூக ஜீவியாகவும் மாற்றுகின்றது. மனித வாழ்வில் இந்த சுற்றியுள்ள நல்ல மனிதர்கள் அதாவது நாம் வாழும் சுமூகமான சமூகம் இன்றிமையாதாகின்றது. ஆனால் சமூகம் தனி நபர் மகிழ்ச்சியின் சிறிதேனும் பங்குபெறுகின்றதா என்றால் பல காரணங்களால் மவுனித்து அல்லது கண்டு கொள்ளாது வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு நிற்கின்றது.



 ஒரு குழந்தை மகிழ்ச்சியாக வளர அதன் பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது போலவே பல வாகன விபத்துகளில் ஒரு மனிதனின் பாதுகாப்பு அந்த பாதையில் பயணிக்கும் சகபயணிகள்  கைகளில் தான் உண்டு. இரண்டு வருடம் முன்பு நெல்லை பல்கலைகழகம் முன்பு நடந்த ஒரு விபத்து தான் நினைவில் வருகின்றது.  காலை நேரம் 10 மணி !  இளம் வயதிலே நோய் வாய்ப்பட்டு இறந்த தகப்பனுடைய மகள்.  தாயும் நோயால் இறந்து சில நாட்களே ஆகி விட்ட நிலையில் தேற்வு எழுத வருகின்றார். ரோட்டை கடக்கும் நேரம் பின்னால் வந்த சரக்கு ஆட்டோ இடித்து தள்ளி விட்டு நகர்ந்து விட்டது. சில விநாடிகளில் அவ்வழியாக பல்கலைகழக பேருந்துகள், பல மகிழுந்துகள் கடந்து செல்கின்றது. ஆனால் 108 அழைப்பால் ஆம்புலஸ் வரும் வரை மாணவி ரோட்டில் கிடந்தே உயிரை விடுகின்றார்.  அதன் பின் மரணாந்தர கிரியகளுக்கு பங்கு பெறுகின்றனர்; சிலர் போராடலாம் என கூக்குரலிடுகின்றனர் சிலரோ பரிதாபப்படுகின்றனர். ஆனால் மேல்நிலை பள்ளியில் படிக்கும் அவள் சகோதன் மட்டும் தான் அந்த கொடிய தவிப்பை, இழப்பை அனுபவித்திருப்பான்.

டெல்லி மாணவி வழக்கில் அவருடைய நண்பர் மொழியில் இருந்து புரிந்து கொள்வதும் அந்த கொடூரமான மனநிலை கொண்ட சமூகத்தை தான். சொல்லப்போனால் அந்த 6 கொடிய  நபர்களை விட இரக்கமற்றது இந்த சமூகம் தான்.  அந்த மாணவி ஆடையற்றும் இரத்த போக்குடனும் பல மணி நேரம் தெருவில் வீழ்ந்து கிடந்த போதும் இந்த சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டு தன் போக்கில் கருத்துக்கள் விதறி கொண்டும் நகர்ந்தது,  ஒரு உடை கொடுக்க முன் வரவில்லை ஏன் பாதிக்கப்பட்ட நபரே இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்ட இன்னொரு நபரை வானகத்தில் ஏற்றுகின்றார். இந்த இடங்களில் தான் சமூகத்தின் மனசாட்சி செத்து விட்டதே நாம் காண்கின்றோம்.  அதே சமூகம் தனி நபர்களை விரட்டுவதில் தண்டிப்பதில் நியாயத் தீர்ப்பிடுவதில் துடிக்கின்றது.

நம் சமூக வாழ்கை எல்லா நிலையிலும் மற்றவர்கள் தயவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் காண்கின்றோம்..  ஒரு வயதான முதியவர் நிம்மதியாக உயிர் வாழ அவ்வீடிலுள்ள சிறுவயதினர் கரிசனையாக நடந்து கொள்ள  வேண்டும். அதே போன்று அந்த வீட்டிற்கு வாழ வரும் பெண் நிம்மதியாக வாழ கணவர் மட்டுமல்ல அந்த வீட்டு முதியவர்களும் அனுமதிக்க வேண்டும். ஏன் பிறந்த வீட்டில் கூட ஒரு பெண் ஆகட்டும் ஆண் ஆகட்டும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ அந்த வீட்டில் தன்னுடன் வசிக்கம் மற்ற நபர்களின் அனுமதியும் தேவையாக வருகின்றது. என் உறவுக்கார பெண் வசதியான வீடு,  நல்ல குடும்பம் என திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் அவ்வீட்டு முதியவர்கள் எங்கள் காலம் பின்பு தான் வீட்டில் உரிமை என்றதும் வாடகை வீடு,  நிரந்த வேலையின்மை என வறுமை கோட்டின் கீழ் தான் வாழ்ந்து வந்தனர்.

அதே போன்று தான் ஒரு மாணவன் நல்ல கல்வி பெற வேண்டுமா அந்த கல்வி நிறுவனம் ஆசிரியர்களின் தயவு பெற்றோரின் அனுமதி தேவையாக உள்ளது. எதிர் வீட்டு பெண்மணி கூறிய நிகழ்வு வருத்தம் அடையச் செய்தது. மகனை படிப்பிக்க ஆசைப்பட்டாராம்.  ஆனால்என்னால் பள்ளியில் அடிவாங்க இயலாது” என மகன் தன் படிப்பை தொடரவில்லையாம்.  இன்றைய அரசியலை பாருங்கள் அரசியல் வாதிகள் புரியும் ஊழல் கடைநிலை மனிதனையும் பாதிக்கின்றது. அதிகாரிகள் அரசியல்வாதிகள் சதியால் பல மக்கள் வறியநிலையிலும் அகதிகளாகவும் மாற்றப்படுகின்றனர். மேற்குலகு நாடுகளின் இரக்கமின்மையால் கிழக்கு தேச நாட்டு மக்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.



வேலையிடங்களிலும் இதே சம்பவங்கள் தான் அனுபவங்களில் காண்கின்றோம். என் தோழரிடம் கேட்டேன். எப்படி வேலை போகின்றது. அவர் சொல்கின்றார் வேலை எளிதே; அங்குள்ள அரசியலை சமாளிப்பது தான் சிரமம். கொத்தனார் நூல் பிடிப்பது போல் நிற்க வேண்டும். அல்லை என்றால் நம் வேலையை பறித்தெடுக்க ஓநாய் கூட்டம் போல் ஒரு கூட்டம் பல்லிளித்து கொண்டு சுற்றும் நிற்கும். இதுவே மிகவும் மன அழுத்தம் தருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இங்கு தான் மனித நேயம், மனிதம், அறம் உயிர் பெற வேண்டியுள்ளது. சிலருக்கு சிலரை பிடிப்பது இல்லை என்றால் அழிக்க வேண்டும் ஆள் வைத்தாவது கொல்ல வேண்டும் என்ற மன நிலை மனிதமல்ல. சிலருக்கு தாழ்வு மனபான்மை என்ற நோய் போலவே பலருக்கு அதற்கு நேர் எதிரான மேட்டிமை மனநிலையால் பலர் அல்லல்ப்படுவது  உண்டு.  தாழ்வு மனப்பாட்மை தன்னை தானாக கொல்வது போல மேட்டிமை மனப்பான்மை கொண்டவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை அழிக்கின்றனர்.  இவர்களை கண்டு பிடிப்பது எளிதே.  தன் கருத்தே சரி, தான் நம்பும் கடவுளே மிகவும் சிறந்தவர், அல்லது நான் நம்பாததால் கடவுள் உண்டு என யாரும் நம்பக்கூடாது, தன் கொள்கையை உயர்வானது, தன் குடும்பத்தான் சிறந்தது., தன் குழந்தைகளே சிறந்தவர்கள், இப்படி தான் தான் என தான் சார்ந்த விடயங்களில் வெறிபிடித்தவர்களாக இருப்பார்கள். இவர்களை இனம் கண்டு விலகி தப்பித்து வாழ்வது தான் மிகப்பெரிய சவால். எப்படியோ பலருடைய நல் வாழ்வுக்கு காரணமாகாவிடிலும்  துன்பத்திற்கு சக மனிதனை ஆளாகாதீர்கள்

5 Jan 2013

தமிழில் ஓர் அரிய புத்தகம்- பத்திரிக்கையாளர் இரா. குமார்!




நடைமுறை இதழியல் என்ற புத்தகம் முகநூல் நண்பர் இரா. குமார்  எழுதியிருக்கின்றார் என அறிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதழியல் பற்றிய புத்தகம்  நாம் கடைகளில் தேடி சென்றால் எளிதாக கிடைப்பதில்லை இருந்தாலும் ஆங்கில மொழியில் தான் கண்டுள்ளேன். நானும் ஒரு இதழியல் ஆசிரியை என்பதால் மிகவும் ஆற்வத்துடன் இப்புத்தகம் எங்கு கிடைக்கும் என வினவிய போது நண்பர் ஒரு புத்தகம் எனக்கு அனுப்பி தந்திருந்தார்.

வாசிக்க வாசிக்க  அற்புதமாக இருந்தது என்று மட்டுமல்ல ஒரு ஊடக ஆசிரியையாக என் வகுப்புகளில் பயண்படுத்தும் படியாகவும் இருந்தது. இப்புத்தகம் என் படிப்பு வேளையில் கிடைத்திருந்தால் பல மணி நேரம் இணையத்திலும் புத்தகத்திலும் தேடிப்படித்ததை எளிதாக புரிந்து படித்து தேற்வை சந்தித்திருக்கலாமே என்று நினைத்து கொண்டேன்.

தமிழ் மொழியில் ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்றவர் என்பதுடன் தன் முதல் ஊடகப்பணியை தினமலர் நாளிதழில்1984ஆம் வருடம்  பிழை திருத்துவராக ஆரம்பித்துள்ளார் என்று அறியும்  போது புத்தகத்திற்குள் செல்லும் ஆற்வம் மிகுதியாகின்றது. ஈழத்தில் களப்பணி செய்து செய்தி திரட்டியுள்ளார் மட்டுமல்ல தமிழகத்தில் சிறந்த பல ஆளுமைகளிடம் நேர்முகவும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. புத்தகம் வாசித்த போது  நண்பர் இரா. குமார் பத்திரிகை துறையில் 30வருடமாக ஈடுபட்டு வரும் ஒரு ஜாம்பவான் என்பது புரிந்து கொள்ள இயல்கின்றது. தினகரன் பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளர்  கலாநிதி மாறனின் வார்த்தையில் "பத்திரிக்கை துறையில் உள்ளோருக்கு சிறந்த கையேடு, பத்திரிக்கை துறையை தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு ஒரு களஞ்சியம்" என பாராட்டுகின்றார் மேலும் கல்விப் பின்புலமும் அனுபவத்தின் செறிவும் ஒரு நல்ல புத்தகத்தை எழுத ஆசிரியருக்கு  உதவியுள்ளதாகவும், வித்தக கலைஞன் விரல் பட்டால் விறகுக் கட்டையும் வீணையாகும் என்ற வார்த்தைகளால் மகுடம் சூட்டியுள்ளார் என்பது ஆசிரியரின் உழைப்பின் மேலுள்ள ஈடுபாட்டை எடுத்துரைப்பதாகவே காண இயலும்.                        
இக்காலம் என்றில்லை எக்காலமும் பத்திரிக்கையாளர்கள் பணி என்பது முள்ளின் மேல் நடக்கும் போராட்டமான வாழ்கை பயணம் தான். மற்று தொழில்களில் என்பது போல் ஊதியம் நோக்காது நேரம் காலம் பார்க்காது செய்யும் சவாலான பணியாகும். தனி மனித விருப்பம் என்பதை கடந்து சமூகத்தில் புரக்கணிக்கப்பட்ட மக்கள்  நலனுக்காக பணியாற்றுபவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்றால் மிகையல்ல.சாதாரண அலுவலக பணி போல் அல்லாது சமூக பிரஞ்சை கொண்டு சமூக போராளியாக சவால்களை தினசரி வாழ்கையில் சந்திக்கும் பணி தான் பத்திரிக்கையாளனுடையது.தற்கால ஊழல் அரசியல் சமூக சூழலில்; அறம், தற்மம் என்ற கொள்கையை முன் நிறுத்தி சமூக அரசியலை கேள்விக்கு உள்ளாக்கும் பணி என்பது சாதாரண பணியல்ல. இருந்தும் ஒரு பள்ளி ஆசிரியர் தனியார் பள்ளியில்  7-10 ஆயிரவும், அரசு நிறுவனம் என்றால் 34430முப்பது ஆயிரங்களுக்கு மேலும் ஊதியம் பெற்று பணி செய்யும் சூழலில் ஒரு பத்திரிக்கையாளர் தன் உழைப்புக்கு என முதல் இரு வருடம் நாலு முதல் ஏழு ஆயிரங்களுக்குள் மட்டுமே பெற இயல்கின்றது என்பது நிதர்சன உண்மையே. இருந்தும் தமிழ் மேல் கொண்ட பற்றால் ஆசிரியர் தன் விரும்பம்  போல்

சாகில் தமிழ் படித்துச் சாக வேண்டும்-எந்தன்
சாம்பல் தமிழ் மனந்து வேக வேண்டும்.
என்பதற்க்கு இணங்க இதழியலில் ஈடுபாடு கொண்டு முப்பது வருடம் பணி புரிந்த புத்தக ஆசிரியரிடம் இருந்து ஒரு இதழியல் புத்தகம் பெறுவதும் அதை வாசிக்க கிடைப்பதும் பாக்கியமே.


புத்தக ஆசிரியரின் சக தோழரான தினமலர் பத்திரிக்கை ஆசிரியர் ரெ. பார்த்திபன் "தனது திறமையை தன்னோடு பூட்டி வைத்துக்கொள்ளாமல் மற்று பத்திரிக்கையாளர்களுக்கும் எளிதாக புரிய வைத்துப் பணியூடே பயிற்சி தருவதைப் பழக்கமாக கொண்ட நல்ல ஆசிரியராகவும்" புத்தக ஆசிரியரை அறிமுகப்படுத்துகின்றார்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படம், நடை,பொருளடக்கம் என எல்லா பகுதிகளும் மிகவும் நுட்பமாகவும் கலைநயத்துடனும் படைக்கப்பட்டுள்ளது எடுத்து காட்டாக உள்ளது. ஆசிரியர் ஒரு பண்முக திறைமையாளராக இருந்துள்ளதால்;(சிறந்த பிழைதிருத்துபவர், ஆசிரியர், செய்தி சேகரிப்பவர் என்பதால்) ஒரு எழுத்துப்பிழை, அச்சு தவறு காண இயலாது இப்புத்தகத்தில். எழுத்தும் தெளிவானதும் சிறந்த தாளில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் உள்ளது. ஊடக மாணவர்கள் இப்புத்தகத்தை தேற்வுக்கு மட்டுமல்ல தங்கள் இதழியல் வாழ்கை பயணம் முழுதும் ஒரு வழி காட்டியாக பயண்படுத்த இயலும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.இதழியல் பாடம் தேற்வு செய்து படிக்கும் மாணவர்கள் முதுகலை பாடத்திட்டத்தில் கற்க வேண்டிய Editing, Reporting, Printing Technology, Journalism என்ற நாலு பாடப்பகுதிகளை விளக்குவதாக இருந்தது. இலகுவாக மொழி நடையுடன், அதே சமயம் விரிவாக தெளிவாக விவரித்து எழுதியிருந்தார். புத்தகஆசிரியர்,  

இதழியல் என்றால் என்ன, ஒரு இதழின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பதுடன் முதல் பத்திரிக்கையாளர் நாரதன் என்ற தகவலுடன்  துவங்கி இதழ்களின் தோற்றம், பத்திரிக்கை தோற்றம் என உலக இந்திய தமிழக இதழியில் வரலாற்றை விளாவரியாக விவரித்துள்ளார். கி.மு 130 ல் முன்பு துவங்கிய பத்திரிக்கை வளர்ச்சியை படிப்பது அறிவது மலைப்பாகத்தான் உள்ளது.  சுவாரசியம் குறையாது  ஆனால் விரிவாக அலசியிருப்பது ஆசிரியரின் அனுபவ அறிவை காட்டுகின்றது.
அடுத்ததாக பத்திரிக்கை துறையில் இருக்கும் மூன்று துறைகள் செய்தி, விளம்பரம், விற்பனை பிரிவை பற்றி விளக்கியுள்ளார். பல பொழுதும் ஊடக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு பகுதி இதை தொட்டே செல்கின்றது என்பதால் இதன் தெளிவான தெரிவு ஒவ்வொரு ஊடக மாணவருக்கும் பயண் தரும்.

எது செய்தி என்ற பாடம்  முதுகலை இதழியில் பாடத் திட்டத்தில் ஒரு பருவம் முழுதும் படிக்கும் பாடப்பகுதி. இந்த புத்தகம் ஒரு வேளை படிக்கும் நாட்களில் கிடைத்திருந்தால் பல மணி நேரம் தேடி வாசித்து படித்ததை ஆசிரியரின் புத்தகம் ஒரு முறை வாசித்து தெரிந்து கொண்டு தேற்வை எதிர் கொண்டிருக்கலாம். :-)

அடுத்து வருவது செய்தி களங்கள்.(News Sources). இந்த பகுதியும் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைபட்டப் படிப்புக்கு தெரிந்து கொள்ள வேண்டிய பிரதான பகுதியாகும். உலக, இந்திய, உள்ளூர் செய்தி நிறுவங்களை பற்றி ஆசிரியர் ஊடாக தெரிவது தெளிவான அறிவைத் தருகின்றது.

செய்தி அறைகளும் செயல்பாடுகளும் மாணவர்கள் இரண்டாம் வருடம் முதல் பகுதியில் படிக்கும் பாடம். இதை தெரிந்து கொள்வதற்க்கு என்றே  2 மாத கால அளவில் பயிற்சி மாணவர்களாக ஊடக நிறுவனத்தில் பணி புரிந்து தேற்வில் மதிபெண் பெறும் திட்டம் உள்ளது.  இரண்டே மாதம் பயிற்சி பெற்ற ஆசிரியரிடம் கேட்டு படிப்பதை விட இத்துறையில் 30 வருடம்  எல்லா துறையிலும் பணி செய்துள்ள பத்திரிக்கையாளர் இரா. குமார் அவர்கள் விளக்கியிருப்பது தெளிவாக புரியும்படியுள்ளது. செய்தி சேகரிப்பவர், ஆசிரியர்,உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர் என ஒவ்வொருவருடைய பணியும் மிகவும் விரிவாக உதாரணங்களுடன் விளக்கியுள்ள விதம் அருமையிலும் அருமை.

பத்திரிக்கைத் துறையின் இரத்த நாளமான செய்தியாளர்களை பற்றி மிகவும் விரிவாக தகவல் அறியக் கிடைக்கின்றது இப்புத்தகம் வழியாக. இதில்  தமிழ் செய்தியாளர்கள்,உலகத்தரம் வாய்ந்த செய்தியாளர்கள்  எதிர் கொண்ட சில பிரச்சனைகள் பற்றியும் அலசியுள்ளார்.இப்புத்தகம் வழியாக ஒரு செய்தியாளரின் பலம், தகுதி அறிவது மட்டுமல்ல தங்களை சிறந்த செய்தியாளர்களாக தயார் படுத்தி கொள்ளவும் இயலும் . இதில் நகர நிருபர்கள், சிறப்பு நிருபர்கள் பகுதிநேர நிருபர்கள் என ஒவ்வொருவரின் தனிச்சிறப்பையும் உரிமை கடமையை பற்றியும் விளக்கி செல்வது தனி சிறப்பாகும்.

செய்தி திரட்டும் இடங்கள் பற்றிய தகவல்களும் நாம் அறியக் கிடைக்கின்றது. இந்த பகுதியில் நாடாளுமன்றம், சட்டமன்றம்,, கவனை ஈர்ப்பு தீர்மானம்,ஒத்திவைப்பு தீர்மானம், உரிமை மீறல் பிரச்சனை, பேரவை செய்திகளை சேகரிக்கும் போது கொள்ள வேண்டிய கவனம் என மிகவும் நுட்பமான பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை நிறுவனம், அதன் உரிமையாளர், அச்சிடுபவர் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றியும் விளாவரியாக விவரித்துள்ளார்.

நேர்காணல் என்பது ஊடகப்படிப்பில் மிகவும் பிரதாமான பகுதியாகும். ஆசிரியரும் அதை தெரிந்து கொண்டு தனி பாகமே ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிட தகுந்தது. ஒரு பத்திரிக்கையில் செய்தி எழுதும் முறை, மொழிநடை, எண்களை எழுதும் முறை என மிகவும் தேவையான தகவல்களை பகிர்ந்துள்ளார் என்பது இப்புத்தகத்தின் தேவையை எடுத்து சொல்கின்றது.

பல ஆயிரம் செய்திகள் பத்திரிக்கை அலுவலகத்தில் வந்து சேர்ந்தாலும் செய்தி தேற்வின் முக்கியத்துவம் பற்றி மிகவும் எளிமையாக புரியவைத்துள்ளார் ஆசிரியர். இந்த புத்தகத்தின் இதயம் அல்லது மிகவும் தெரிது கொள்ளவேண்டிய பகுதி என்பது செய்தி தொகுப்பு என்பதாகும். பல போதும் வித்தகர்கள் தாங்கள் பல வருடங்களாக  கற்ற வித்தையை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க விரும்புவதில்லை. ஆனால் இரா குமார் தன் 30 வருட தொழில் மூலதனத்தை இதழியலில் விருப்பம் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள இயன்றது என்றால் அவருடைய சகமனித  நலன் சார்ந்த விருப்பம் மட்டுமல்ல சிறந்த இதழியல் நபர்கள் உருவாக வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தையே காட்டுகின்றது. தலைப்பு கொடுக்கும் விதம், பக்க அமைப்பு விதிகள், தலையங்கம், படவிளக்கம், போஸ்டர் என ஊடகப்பணியை அக்குவேர் ஆணிவேராக பிரித்து பாடம் நடத்தியுள்ளார் என்பதே இப்புத்தகத்தின் மாபெரும் வெற்றி.

எல்லாம் சொல்லி விட்டு பத்திரிக்கை சட்டங்கள் சொல்லாது சென்றால் நிறைவு பெறாது என புரிந்து கொண்ட ஆசிரியர் பல பொழுதும் விவாதத்திற்க்கு உள்ளாகியுள்ள பத்திரிகைக் சுதந்திரம் சட்டங்கள் சில சட்ட சிக்கல்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். பிரீஷ் ஆட்சியில் இருந்து சமீபம் காலம் வரை பத்திரிக்கை சுதந்திரத்திற்க்கு பங்கம் விளைவிக்கும் அரசு நடவடிக்கைகள் பற்றியும் பகிர்ந்துள்ளார். கடைசி பாகம் பத்திரிக்கை உலகுடன் இணைந்து செல்லும் மின்னணு மற்றும் நவீன ஊடகம் பற்றியும் சிறிய  தொகுப்புடன் முடித்துள்ளார்.


214 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் ஆசிரியரின் உழைப்பின் மற்றும் அனுபவத்தின் சான்று. இதே போன்ற பல புத்தகங்கள் ஆசிரியரிடம் இருந்து  எதிர் நோக்குகின்றோம். கல்வியாளரான பத்திரிக்கையாளரிடம் இருந்து கற்பது, தெரிந்து கொள்வது ஊடகத்தில் இயங்குபவர்கள்ளுக்கும் அதை பாடமாக படிப்பவர்களுக்கும் பெரியொதொரு பொக்கிஷமாகும்.                                                                                                    




இப்புத்தகம் கிடைக்கும் இடம் 

முல்லையகம் வெளியீடு,
A6, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு,
208, அண்ணா முதன்மைசாலை
கலைஞர் நகர்,சென்னை-78
அலைபேசி # -9003152490, 9444391552  
விலை- ரூபாய் 200.

2 Jan 2013

வாழ்கைக்கு அர்த்தங்கள் நல்கிய 2012!


2012  நினைத்து பார்க்கயில் வெறுக்கவும் மறக்கவோ இயலாது. வாழ்கையில்  பல கசக்கும் உணமைகளை கண்டதுடன் வருத்தமான நிகழ்வுகளுடன் எதிர்கொள்ள கற்று தந்த வருடம். பல கனவுகளை நனவாக்கிய வருடம்.                                                                        என் வாழ்நாள் லட்சியமான கல்லூரி பேராசிரியர் வேலைக்கு சென்று மறுபடியும் கல்லூரிக்கு நாட்கள் வந்தது போல்  மகிழ்ச்சியுடன் வாழ்கை செல்ல துவங்கிய வருடம். ஆனால் அதே ஜூன் மாதம் தான் நான் விரும்பிய வேலை பறி போனதும். அதன் காரணங்கள் நானும், என்னை சுற்றியுள்ளவர்களும் பலவாறாக அடுக்கினாலும் விதியை துணைக்கு அழைப்பது தான் எனக்கு நிம்மதியாக  இருக்கின்றது.

'நான் தேடும் வெளிச்சங்கள்' என்ற என் முதல் சிறுகதை தொகுப்பு வெளி வந்து ஆறுதல் செப் 15ல். . ஏட்டில் கற்ற வித்தைகளை ஒரு புத்தகமாக உருவாக்கி பார்க்கும் வாய்ப்பு மனநிறைவை தருவது  மட்டுமல்லநானும் ஒரு படைப்பாளியாக உருவாகினேன் என்பதும் நிஜமானது


கடந்த அக்டோபர் 31ல் தான் சுபி அக்காவை சந்தித்தேன்.இரத்த உறவுகளிலும் மேன்மையான நட்பு உறவு பெற இயலும் என்றும் கண்டுணந்தேன். 15 வருடங்களுக்கு மேலாக சந்திராத என் பள்ளிக்க்கூட ஆசிரியர்களை சந்தித்து வந்தேன், நான் கற்ற கல்லூரி பேராசிரியர்கள், நான் படித்த கல்லூரியில் வணிக-கணிணி துறையில் கவுரவ  ஆலோசகராக செயலாற்றும் வாய்ப்பும் கிட்டியது, பல வருடம் கடந்து மகிழ்ச்சியுடன் பிறந்த ஊர் சென்று வரவும் பாட்டி தாய்மாமா சித்தப்பா அத்தை போன்ற உறவுகளை கண்டு உறவாடும் வாய்ப்பும் கிட்டியது. முகநூல் வழி மட்டும் அறிந்த தோழி புனிதா வெள்ளாச்சாமியை சந்திக்கும் வாய்ப்பும் கடந்த வருடம் கிட்டியது. அதே போல்  என் எழுத்திற்கு பக்கபலமாகவும் என்னை தன் சொந்த மகள் போல் நேசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் இரத்தினவேல் ஐயாவிடம் என் புத்தகத்தைநேரடியாக சந்தித்து கொடுக்கவும் இயன்றது. அதே போல்  நியோர்க்கில் இருந்து வந்த நண்பர் பாட்ரிக்கை குடுபத்துடன் சென்று சந்திக்க வாய்ப்பு கிட்டியது. பத்திரிக்கையாளர் குமரேசன் ஐயாவை நெல்லையில் சந்தித்து என் புத்தகத்தை கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் பத்திரிக்கையாளர் இரா குமார் அவர்களுடைய புத்தகம் பெற்றுள்ளேன். என் புத்தம் நோர்வை நண்பர்கள் கையில் கிடைக்கும் படி பத்மன் அண்ணா உதவினார். முகநூலிலும் மிகச் சிறந்த நண்பர்களையும் பெற்றேன்.

தீபாவளியுடன் என் வாழ்கைக்கும் வெளிச்சம் வந்தது போல் தேசிய தல பேராசிரியர் தேற்வில் வெற்றி பெற்றதுடன் தீராத மனக்கவலை ஓய்ந்தது. இந்த வெற்றிதான் எனக்கும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் திரும்பப் பெற வைத்தது. நான் கடினமாக உழைத்தும் நான் விரும்பி செய்த ஆசிரியர் பணி நிலைத்து நிற்கவில்லையே என அழுது புரண்ட எனக்கு இந்த வெற்றியே என் ஆசிரியை பணியால் தான் வந்தது என பெருமைப்பட்டு கொண்டேன். என் மாணவர்களுக்கு நான் கற்பித்தது என் தேற்வில் எனக்கு கேள்வியாக வருவதும் ஒரு மகிழ்ச்சி தானே. ஏமாற்றத்தால் கொண்ட துன்பத்திற்க்கு ஈடாக மகிழ்ச்சியும் புது நம்பிக்கை பிறந்ததும் நிஜத்தில் உணர்ந்தேன்.

என் தோல்வியில் என் வருத்ததில் எனக்கு பக்கபலமாக இருந்த தோழர்களை நினைத்து பூரிப்படைகின்றேன். ஜூன் 17 வரை கல்லூரி பேராசிரியாக இருந்த நான் ஜூன் 18 ல் எந்த முகாந்தரவும் எந்த விசாரனையும் இல்லாது வெளியேற்றப்பட்டது பேரதற்ச்சியாகவும் மரணம் போன்ற துக்கவும் தந்தது உண்மை தான். ஆனால் இந்த தோல்வியால் தான் தேசிய தல தேற்வவில் வெற்றி பெற வைத்தது என்பது இன்னொரு உண்மை.

சாதாரணமாகவே பெரிய ஆசைகளை பேணாத எனக்கு எனக்கு பிடித்தவேலை, அமைதியான சூழல், என்றதும் மேற்படிப்பு பற்றியோ தேசிய தல தேற்வு பற்றியோ கவனம் கொள்ளாது இருந்தேன். ஆனால் வேலை பறிபோனதும் தான் ஒரு நிலையான அங்கீகாரம் பெற தேற்வில் வெற்றி பெறுவதும் அவசியம் என்று முடிவெடுத்தேன். என்னவர் ஏற்கனவே வாங்கி கொடுத்த புத்தகம் எல்லாம் தூசி தட்டி மறுபடியும் படிக்க ஆரம்பித்தேன்.

அனுபவத்தால்,ஒரு தோல்வி, ஏமாற்றம் என்பதும் வாழ்கைக்கு அவசியம் என்றே விளங்கியது . வெற்றியை விட பல படிப்பினைகள் கற்று தந்து செல்வது தோல்வியும் ஏமாற்றவும் தான் என உணர்ந்தேன். நம்பி பேசின மனிதர்கள் உள்ளத்தில் இருக்கும் விஷம் புரிந்தது. ஒரு புறம் மனிதர்களிடம் நம்பிக்கை அற்று போனாலும் வாழ்கையில் ஒரு பாடமாக அமைந்தது. ஒரு தோல்வியால் சந்தித்த கேலி அவமானம் போல் வெற்றியினால் புற்றீசல் போல் பெருகி வரும் சில எதிர் தோழமைகளையும் சந்தித்தேன். சிலருக்கு நம் துக்கங்களை குத்தி பார்ப்பதே மகிழ்ச்சி தான் என புரிந்து கொண்ட போது தான் வருத்தங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நம்பிக்கையுடன் வாழ வழி தேட் தோன்றியது. இந்த சமூகம் முன்னுக்கும் நகர விடாது பின்னுக்கும் விடாது துரத்தும் ஒரு விசித்திர நிலையை  புரிந்து கொண்டேன். பல பொழுதும் மற்றவர்கள் விமர்சனம், கணிப்பு,பொறாமையால் செய்யப்பட்ட கயிறுகளில் ஆடும் பொம்மையாக மாற்றப்படுவதை  புரிந்து கொள்ள தான் வேண்டும்.


 உடன் ஏற்று கொள்ள தகுந்த நிலையில் இல்லாவிடிலும் சிறந்த வேலைகள் தற்போது என்னை தேடி வருவது என்னை மேலும் தன்னம்பிக்கை கொள்ள வைக்கின்றது. இந்நாட்களில் பல அருமையான புத்தகங்கள் வாசிக்க இயல்கின்றது, சிறந்த திரைப்படம் கண்டு மகிழ்கின்றேன். 4 வருட தொடர் படிப்பு, வேலை என நாட்களுக்கு பின்பு இப்போது தான் என் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிடவும், அவர்களுடன் பயணங்களில் நேரம் செலவிடவும் இயல்கின்றது என்பது ஒரு தாயாக மனநிறைவு தான்.

முகநூல் நட்பு, அன்பு உள்ளங்களை ஒருபோதும் மறக்க இயலாது. என்  அருகிலிருப்பவர்களுக்கு தெரிவிக்கும் முன்னே பல சம்பவங்கள் முகநூல் நண்பர்களுக்கு தெரிவித்து மகிழ்ந்துள்ளேன், அழுதுள்ளேன், வருந்தியுள்ளேன். உங்கள் ஆக்கபூர்வமான உயிரோட்டமான நல் எண்ணங்கள் கொண்ட கருத்துக்கள் விருப்பங்கள் என்னை வழி நடத்தியுள்ளது என்று நான் சொல்லாவிடில் நான் நன்றி மறந்தவள் ஆக மாறி விடுவேன்.

சில காலம் நான் வெறுத்த, சில குழி பறித்த நட்புகள், உடன் வேலை செய்த வித்தியாசமான் மனம் கொண்டோரை இன்று மிகவும் நேசிக்கின்றேன். ஒருவேளை அருகில் சந்தித்தால் புதுவருட வாழ்த்து சொல்லி நீங்களும் என் வெற்றிக்காக பணி செய்து உள்ளீர்கள் என நிச்சயமாக நன்றி கூற இயலும். நம் வெற்றிக்கு; சில தீர்க்கமான ஆக்கபூர்வமான செயலாக்கங்களுக்கும்  நம்மை கரிசனையாக அன்பாக நடத்தும் நண்பர்கள் விட நமக்கு சவால், கேலி விடுக்கும் எதிரிகள் உதவுகின்றனர் என்பதே உண்மை. வாழ்கையை நதியின் ஓட்டத்தை போல் போக நினைக்கும் என்னை போன்றவர்களுக்கு எதிர் நீச்சல் இட கற்று கொடுப்பது இந்த எதிரிகள் தான். வாழ்கையில் தோல்வியும் இல்லை, வெற்றியும் இல்லை! மகிழ்ச்சியும் இன்பவும் துன்பவும் துக்கவும் வெற்றியும் தோல்வியும் நாம் எடுத்து கொள்ள நினைக்கும் மனநிலை மட்டுமே. மனதை ஒரு வெற்றுப்படகாக வைத்து கொண்டு இந்த வருடம் பயணிக்க உள்ளேன். எல்லோருக்கும் நன்றி கூறி இந்த வருடம் காலெடுத்து வைக்கின்றேன்.



1 Jan 2013

பாலியல் துன்புறுத்தலில் பெண்கள் எவ்வாறு பொறுப்பாகுகின்றனர்.

பெண்களும்தங்களை காப்பாற்றி கொள்ள முன் வேண்டும். நம் இந்திய சமூகம் எல்லோரும் ஒரே போல் கல்வியறிவு பெற்று சம-அந்தஸ்தில் வாழும் சமூகம் அல்ல என்பதை உணர வேண்டும். தங்களை சுற்றி ஒரு தற்காப்பை பலப்படுத்தி கொள்ள கடமைப்பட்டுள்ளோம். நாம் நம்பி பழகும் நபர்களிடமும் ஒரு பாதுகாப்பான தூரத்தை ஏற்படுத்தி கொள்வது பாதுகாப்பிற்க்கு உகுந்தது. இல்லை என்பதை இல்லை என்றும் ஆம் என்று சொல்ல நினைப்பதை துணிவுடன் சொல்ல துணிவு இருந்தாலே தப்பிதமான எண்ணத்துடன் ஆண்கள்  பெண்கள் பக்கம் அணுகுவதை தடுக்கலாம்.
உடை அலங்காரத்திலும் தங்கள் பாதுகாப்பையும் மனதில் கருத வேண்டும். உடை நமக்கு ஒரு அடையாளமாக இருக்கும் போது உடையை அணிவதிலும் தேற்வு செய்வதிலும் தனிக் கவனம் செலுத்துவது தேவையே. பல பெண்களை பெற்றோர் குறிப்பாக அப்பெண்ணின் தாய் சரியாக வழி நடத்துவது இல்லை என்பதே உண்மை. பல வீட்டுகளில் ஆண் குழந்தைகள் தங்கள் சொத்தை பாதுகாக்கும் படியும் தங்கள் வாரிசாக பெருமையாக வளர்க்கும் போது பெண் குழந்தைகளை ஆசை பதுமைகளாக வளர்க்கின்றனர். இந்த வருட கிருஸ்துமஸ் ஆலைய வழிபாடுக்கு சென்று வந்த போதும் குழந்தைகள் உடையில் இதையே கண்டு வந்தேன். பெண்கள் அணியும் அரை சாரியின் சட்டையின் கழுத்து உள் ஆடைக்கு சமமாக தைத்து அணிவித்து மகிழும் மகளை விட இதை அணிவித்து அழகு பார்க்கும் அம்மாவின் மனநிலையை எண்ணி கலங்க மட்டுமே இயலும். அதே வேளையில் அவர்கள் மகன்களுக்கு கால் சட்டையை ஓட்டையுடனோ அல்லது வயிறு, மார்பு தெரியும் போலோ ஏன் அணிவிப்பதில்லை. இந்த சமூகம் தான் பெண்ணை பொருளாக பார்க்கின்றது என்றால் பெற்றவர்களும் மதிக்க தகுந்த உயிராக நோக்காதது வருத்தமே.                                                                      
                                                                                                                                   இந்த நாட்டில் நடக்கும் கற்பழிப்பு வழக்குகளில் ஒரு இளம் அழகான நகர்ப்புற மங்கை பாதிக்கப்படும் போது கொள்ளும் கலக்கம் அப்பெண் ஏழையோ கிராமப்பெண்ணோ, தலிது –பழங்குடி அல்லது வயதான பெண்ணாக இருக்கும் போது கவலை துக்கம் நீதி எழுந்து வருவதில்லை. சிலருக்கு மறுக்கப்படும் நீதி, நியாயம்  இப்படியான கொடிய நிகழ்வுகளை சந்திக்க காரணமாக அமைகின்றது. இச்சமூகத்தை திருத்த இயலாத பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு தங்களையும் தயார் படுத்தி கொள்வதே காலச்சிறந்தது.
                                                                                                                                                    இந்திய சட்டப்படி பாலியல் துன்புறுத்தலில் ஏற்ப்படும் நபர்களுக்கு 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை தரப்படுகின்றது. 16 வயதிற்கு கீழுள்ள ஆண்களுக்கு தண்டனை இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய நீதித்துறை ஒரே போல் இயங்குகின்றதா என்றால் அது கேள்விக்குறியே. பணம் பலம் படைத்தவர்கள் இன்றும் சட்டத்தை ஏமாற்றியே தப்பித்து சுகமாக வாழ்கின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்ணோ வாழ் நாள் முழுதும் சுமையாக வாழ தள்ளப்படுகின்றாள்.
                                                                                                                             பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண் உடன் செல்ல வேண்டிய இடம் காவல்நிலையம், மருத்துவமனை அல்லது நீதிமன்றமாகும். பாதிக்கப்பட்ட பெண் 48 மணி நேரம் உள்ளாக சென்றால் மட்டுமே தான் கொடுக்கும் வழக்குக்கு தகுந்த ஆதாரம் கொடுக்க இயலும்.
                                                                  காவல்த்துறையை அணுகும் பெண்களை தகுந்த முறையில் மதித்து விசாரிப்பது  கிடையாது. காவல்த்துறையின் அனுபவ இன்மையே இதன் காரணம். ஒரு பெண் தன் நண்பரால் தன் வீட்டில் வைத்து கற்பழிக்கப்பட்டால் காவல்த்துறை வழக்காகவே எடுத்து கொள்வது கிடையாது. தன் பழைய நண்பனை நம்பி தன் வீட்டில் பேச அனுமதிக்க அவன் திடீர் என தாக்குதல் நடத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் குற்ற செயலில் பங்கு உண்டு என்றே காவல்த்துறை கணக்கில் எடுக்கும். அதாவது ஒரு பெண் தன் வீட்டு முன் வாசலை திறப்பது என்பது பெண் தன் உடலை திறப்பது போல் தான் சட்டம்-சமூகம் எடுத்து கொள்ள விரும்புகின்றது. காவல்த்துறையின் கேள்விக்கு பயந்தே பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை மூடி மறைக்கவே விரும்புகின்றனர்.

வங்காளத்தில் 6 நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய  16 வயது பெண் போலிஸ் வழக்கை சரியான விதத்தில் விசாரிக்கவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்தும் சமீபத்தில் தான் நடந்துள்ளது. வேறு ஒரு பெண் சட்டத்தால் நீதி தேட முயன்று தன் பெற்றோரின் சொத்து,தன் உயிர் பாதுகாப்புக்கு வழியற்று அனாதமாக்கப்படுகின்றார். சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்திலும் சரியான விசாரனையை நடத்துவதை விடுத்து காவல்த்துறையும்  மாநில முதலமச்சரும் சண்டையிட்டு அரசியில் நாடகம் நடத்தியதை கண்டோம்.
                                                                                                                                அடுத்து சிகித்சை கொடுக்கும் மருத்துவர் தங்கள் கொடுத்த சிகித்சையை பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்து பாதிக்கப்பட்ட நபருக்கு உதவலாம். நிஜத்தில் பாதிக்கப்பட்டவரை சந்தேகத்துடன் பார்த்து அவமானிப்பதே இங்கையும் நடக்கின்றது,  நீதிமன்றம் வழக்கு என்பது பாதிக்கபட்ட நபர் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதற்க்கு வழி இல்லாதாகவே உள்ளது. 1992 வச்சாந்தியில் நடந்த பாலியல்  குற்றசாட்டிற்கு 2011 ல் தண்டனை கொடுக்கப்பட்டதும் நம் தமிழகத்தில் தான் நடந்தேறியது.
                                                                                                                                         90 சகவீத பாலியல் துன்புறுத்தலும் திட்டமிடப்பட்டு நடப்பதால் தங்களை பாதுகாத்து கொள்ள பெண்களும் முன் வரவேண்டும். உடலளவில் தங்களை பாதுகாக்க உடல் வலிமையை வளர்த்து கொள்வது எல்லா பெண்களுக்கு எல்லா சூழலிலும் இயலாவிடிலும் தந்திரமாக தப்பிக்க தயார் செய்யலாம்.
                                                                                                                                            தன்னார்வு தொண்டுகள், சட்டவல்லுனர்கள் ஆலோசனை வழங்கலாம்.
ஏற்கனவே வெறி கொண்ட மிருகங்களிடம் வாய் கொடுத்து மாட்டுவது தவிர்த்து தப்புவது எப்படி என்ற சிந்தனையே உகுந்தது. செருப்பாலே அடிப்பேன் என்று கூறிய பல பெண்களை குறிவைத்து தாக்கிய சம்பவம் இளைஞர்கள் மத்தியில் நடந்துள்ளது. வார்த்தையால் போராட அல்லது வார்த்தையால் வம்பிளுப்பதை பெண்கள் தவிற்ப்பதே சிறந்தது.
அறிமுகம் இல்லாத  நபர்களை தனி இடங்களில் சந்திப்பதை தவிற்க வேண்டும். தங்கள் பெற்றோர் பார்வையில் அனுமதி பெற்று ஆண் நண்பர்களை சந்திப்பது பாதுகாப்பும் கண்ணியமான செயலுமாகும்.
மனதளவிலும் பெண்கள் பலம் கொள்ள வேண்டும். சமூக நிகழ்வுகளை கண்டு மன பயத்தில் உழலாது சீரிய சிந்தனையுடன் மேலும் ஆக்கபூர்வமாக பிரச்சினைகளை  எதிர் கொள்ள தயார்படுத்தி கோள்ளவேண்டும்.   இந்த குற்றவாளிகளை சிறையில் இடுவதாலோ தூக்கிலிடுவதாலோ திருந்த போவதில்லை. இவர்கள் சொத்தை கண்டுகட்டி பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்திற்கு அரசு கொடுக்க முன் வரவேண்டும். இதுவே தகுந்த தண்டனையாக இருக்கும். அல்லாது அரசு சில ல்ட்சங்கள் உயிருக்கு விலை நிர்ணயிப்பதும் சரியல்ல என்பதை உணர வேண்டும்.

31 Dec 2012

பாலியல் குற்றத்தில் இந்தியா மூன்றாம் இடத்தை கைப்பற்றியது!!!!



பாலியல்-அரசியல் நாடகம்பாலியல் துன்புறுத்தலில் அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்காவுக்கு முதல், அடுத்த இடம் கொடுத்து விட்டு இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பெண்ணை தேவி தெய்வம்  என ஒரு புறம் பூஜித்து கொண்டு கொலை பாலியல் துன்புறுத்தலிலும் விட்டு வைப்பதில்லை. இதில் ஒரு வரலாறே இந்தியாவுக்கு உண்டு. அதன் முன் கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்ற சொல்லாடல் விருப்பம் இல்லாத ஒரு பெண்ணிடம் உடல் நீதியாக உறவு வைத்து கொள்ள ஆண் வன்முறையாக துணிவதையே குறிக்கின்றது. களவாணுதல், தூக்கி  செல்லுதல், கடத்துதல் என்ற அர்த்தமுள்ள இந்த சொல்(rape) லாற்றின் மொழியில் இருந்தே வந்துள்ளது. மனைவியின் விருப்பத்திற்கு மீறி உறவு வைத்து கொள்ள கணவர் துணிந்தாலும் பாலியல் அத்து மீறல் என்ற தண்டனைக்கு உள்ளாகுகின்றனர் என்பதையும் நாம் அறிய வேண்டும்.

இந்த சமூக அமைப்பு ஆகட்டும் யார் இந்த குற்ற செயலில் ஏற்படுகின்றனர், எதனால் என்று பார்க்க தவறி விடுகின்றது . உணர்ச்சி வேகத்தால் இந்த சமூக நோயின் அடி வேரை வெட்டி எரிக்க தவறுகின்றனர்.  ஒவ்வொரு நிகழ்வு நடக்கும் போதும் போராட்டம், வருத்தம், கோபம் என நின்று விடுகின்றது.
பெண்கள் மேலுள்ள ஆண்களின் ஆதிக்க சிந்தனையே இதன் காரணம் என பெண்ணியல் சிந்தனையாளர்கள் கொதித்து எழுகின்றனர். ஆனால் அதுமட்டுமா காரணம்? இதில் சமூக, குடும்ப, கலாச்சார பாதிப்பு உண்டு என்று விளங்க வேண்டும். இந்தியா போன்ற ஊழல் நாட்டில் பாலியல் துன்புறுத்தல் என்பதும் தவிற்க இயலாத குற்றமாக மாறியுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது.  30 சதவீதம் மக்கள் செல்வ செழிப்பிலும் மீதமுள்ள 70 சகவீதமக்கள் வறுமை துன்பத்திலும் வாழும் போது, சமூக கட்டுப்பாடு  மேல் நம்பிக்கை அற்று ஒரு வித பொறாமை இயலாமைக்கு தள்ளப்படுகின்றனர் பெருவாரி மக்கள். கற்பழிப்பு குற்றவாளிகளை நோக்கினால் தாய் தகப்பன் அற்று தகப்பனுடன் நல்ல உறவற்று வளரும் நபர்களாகவே உள்ளனர். இவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்குவதும் இவர்களை விட நல்ல நிலையில் வாழும் மக்களையே. கோயம்பத்தூர் 10 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொன்ற வாகன ஓட்டுனரின் பின்புலன் பொறாமையும் தனிநபர் ஒழுக்க இல்லாய்மையுமே.
தனிநபர் ஒழுக்கம் பற்றி சிந்தனையில்லாத நாட்டும்மக்களே நாம். அமெரிக்கா இத்தாலி போன்ற நாட்டில் தங்களை ஆள்பவர்கள் தனி நபர் ஒழுக்கத்தில் தவறக்கூடாது என உறுதியாக உள்ளனர். சொந்த மனைவியை தவிர்து தகாத உறவுகள் வைத்து கொள்பவர்கள் அதிகாரத்தில் நிலை கொள்வது கடினமே. அதுவே கிலிண்டனை விரும்பிய மக்கள், துக்கி எறியவும் தயங்கவில்லை. சர்கோஸிஸ் மக்கள் வெறுப்பை பெற்றதும் இதனால் தான். ஆனால் நம் நாட்டின் சட்ட சபை நிலை என்ன. சட்ட சபை உறுப்பினரே குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்கின்றனர், தற்கொலைக்கு காரணமாக இருக்கின்றனர். விசாரணை இல்லாமலே பல வழக்குகள் முடக்கப்படுகின்றது. 162 குற்றவாளிகள் சட்டமற்ற உறுப்பினர்களாக கொண்ட நாட்டில் அறம் எங்கு நிலைக்க வாய்ப்பு உள்ளது!

இந்தியா- பாக் பிரிவினை நேரம் மட்டும் 1 லட்சம் பெண்கள் மனபங்கப்படுத்த பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் ராணுவத்தால் ஆயிரத்திற்கு மேல் பெண்கள் கற்பழிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  குனன் போஷ்போரா என்ற கிராமத்தில் புகுந்த இந்திய ராணுவம் 30ல் இருந்து 100 பெண்களை 13க்கும் 70 வயதுக்கிற்கு உள்பட்ட பெண்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 ஜாதிய சிந்தனையால் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. 10 மிலியனுக்கு மேல் பெண்கள் இதுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்றனர் சமூக ஆராய்ச்சியாளர்கள். பாலியலாக துன்புறுத்தப்படும் பெண்கள் 90% தலிதுகள் என்று மட்டுமல்ல 85% பெண்கள் வயதுக்கு வராத சிறுமிகள் என்ற அதிற்சி உண்மையும் நோக்க வேண்டியுள்ளது. பழன்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கேட்க போன பெண்கள் இன்னும் கொடூமையாக துன்புறுத்தப்பட்டதை ஊடகம் வழியாக கண்டோம். எல்லா மாநிலங்களிலிலும் போட்டி போட்டு கொண்டு பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம் நடந்தியுள்ளது.  இதில் ஏற்பட்டவர்கள் பொறுக்கிகள், காவாளி பசங்கள், குற்ற பின்னணியுள்ளவர்கள்  மட்டுமல்ல காவல்த்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், என எல்லா அந்தஸ்தில் உள்ளவர்களும் இடம் பிடிக்கின்றனர்.

Photo: புனிதா போன்ற ஏழைக் குழந்தைகள் கொடூரமாக பாலியல் சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கெல்லாம் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.  மத்திய வர்க்க இழப்புகளும், பணக்காரர்களும் கொல்லப்படும் போது மட்டுமே அதை பரபரபாக்கி செய்தியாக்குகின்றன ஊடகங்கள். மெழுவர்த்தி ஏந்தும் தகுதி வேண்டுமெனில் பிறப்பால் இக்குழந்தைகள் பண்ணைகளாக பிறக்க வேண்டும் போல.கற்பழிப்பு என்றதும் பெண்கள் உடை பாதுகாப்பில்லாது தனியாக பயணிப்பது என்ற முட்டு காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் மேற்கு வங்காளத்தில் கணவருடன் வேலை முடித்து வந்த பெண்ணின் கணவரின் வாயில் ஆசிட்டை ஊற்றி காயப்படுத்தி விட்டு அப்பெண்ணை பக்கத்திலுள்ள புதரில் இழுத்து சென்று பாலியலாக துன்புறுத்தி கொன்ற சமூகம் நம்முடையது. 1973 ல் மருத்துவ மனையில் வேலை நோக்கிய அருணா ஷான்பாங்கு என்ற பெண் அந்த மருத்துவமனை வார்டு வேலையாளால்  பாதிக்கப்பட்டு இன்றும் வாழும் இரத்த சாட்சியாக இருந்து வருவதையும்; கருணை கொலை கொடுங்கள் என அவருடைய தோழி எழுத்தாளர் பிங்கி வழக்கு தொடுத்ததையும் நாம் அறிவோம். புனிதா என்ற சிறுமியை கொன்றவர் போதை பழக்கத்தில் வாழ்பவனும், கூடா உறவுகளை ஏற்படுத்த விளைந்த கொடூர குற்றவாளி!  அவன் குற்றம் நிகழ்த்தும் போதும் போலிஸ் தேடும் குற்றவாளி பட்டியலில் தான் இருந்துள்ளான். இவனை போன்றோருக்கு மனித மூளையின் செயல்பாட்டிலுள்ள குறைபாடு இருந்திருக்கும். அவனுக்கு இரையான குழந்தை காலையில் எழுந்து ½ மைல் பள்ளிக்கு நடந்து வந்து இரயில் பயணப்பட்டு கல்வி கற்று வந்த ஏழை விதவை பெண்ணின் மகள். இவனுடைய அந்நேர மிருகம் எதையும் சிந்திக்காது அக்ககுழந்தையை பலி வாங்கியது. அவன் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் காவல்த்துறை தண்டனை சரியான விதத்தில் கொடுத்திருந்தால் அவனுக்கு ஒரு குழந்தையின் உயிரை எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.
பெண்கள் உளவியல் ஆராய்ச்சி செய்தவர்கள் கூற்றுப்படி தான் பாலியலாக தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் தான் வாழ் நாள் முழுதும் பெண்கள் வாழ்கின்றார்கள். ஆண் உளவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்னவென்றால் ஆண் அடிப்படையாகவே வேட்டையாடும் வேட்கை கொண்டவன். பெண்ணிடம் ஒரு பாலியலாக மகிழ்ச்சியூட்டும்  சக்தி உள்ளதாக தப்பிதமான கணக்குடனே வாழ்கின்றான். அவனுக்கு என்ற வாய்ப்பு கிடைக்கும் போது வேட்டையாட மறுப்பதில்லை. இந்த இடத்தில் தான் அவனுடைய வளர்ப்பு பரம்பரை மரபணு, அறம் சார்ந்த சிந்தனை மனிதனா அல்லது மிருகமா என்ற கேள்விக்கு விடை கொடுக்கின்றது.
பாலியல் துன்புறுத்தல்லால் ஒரு பெண் கொள்ளும் துயரை அவன் விளங்குவதில்லை. கேடான பாடத்தால் இதில் பெண்ணும் மகிழ்ச்சி கொள்கின்றாள் என்ற சிந்தனையே மேல் ஓங்கி நிற்கின்றது. சமீபத்தில் கேரளாவில் 16 வயது சிறுவன் 12 வயது சிறுமியை பாலியலாக துன்புறுத்தி கொலை செய்து விட்டான். போலிஸ் விசாரித்த போது தன் தகப்பன் தினம் காணும் நீலப்படங்களை இவனும் தந்தைக்கு தெரியாது நோக்கி வந்துள்ளான். இதுவே இவனை இக்கொடிய செயல் செய்ய தூண்டியுள்ளது. வேறு ஒரு இளைஞனாகட்டும் வெளிப்புறமாக மிகவும் நல்லவன். ஆனால் முதல் பிரசவத்திற்கு வந்த நண்பன் தங்கையே  இரவில் வீட்டு கதகை  கடற்பறையால் உடைத்து உட்புகுந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தது மட்டுமல்லாது அவனை தடுத்த வயதான தாயையும் கொன்று சென்றான்.  இவன் ஒரு பெரும் பணக்கார தமிழ் மனிதனின் மலையாள கள்ளக்காதலியின் மகன். தகப்பன் பெயர் சொல்ல இயலாது வளந்தவனுடைய  மூளை ஒரு கட்டத்தில் மிருமாக மாறுகின்றது.

பல ஆண்கள் பாலியலாக திருப்தியான வாழ்கை வாழ்வதில்லை என ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர். தற்போதைய சமூக சூழலும் காரணமாகின்றது. அடிப்படையாக சமூகமாக கூட்டமாக வாழ்ந்தவன் வேலை விசயமகாவும் வாழ்வாதாரம் தேடி குடும்பத்தை விட்டு பிரிந்து தனிமையில் வாழ்கின்றான், போதிய கவனிப்பற்று வாழ உந்தப்படுகின்றான். மேலும் குடும்பங்கள், குடும்ப உறவுகள் சிதந்ததும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதையும் கடந்து உலகமயமாக்கல் என்ற பெயரில் பெரும்வாரியான மக்கள் தங்கள் வாழும் உரிமையை இழக்குகின்றனர், கல்வி மறுக்கப்படுகின்ரனர், பெற்றோர் புரக்கணிப்பும் சேர்ந்து அனாதர்களாக வளர்கின்றனர்.