8 Feb 2025

அமெரிக்கா - சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் 2025!

ஜார்ஜ் டபிள்யூ. புஷ்(2001-2008) ஜனாதிபதியாக இருந்தபோது, ​​சுமார் 20 லட்சம்  மக்கள் நாடு கடத்தப்பட்டனர், அதே நேரத்தில் , பராக் ஒபாமா(2009 -2016) ஜனாதிபதியாக இருந்தபோது, ​​சுமார் 32 லட்சம் மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.

ஒபாமா நிர்வாகம் 2012 ஆம் ஆண்டில் மட்டும் 409,849 பேரை நாடு கடத்தியது, அதே நேரத்தில் டிரம்ப் நிர்வாகம் ஒரு வருடத்தில் 260,000 க்கும் மேற்பட்டவர்களை நாடு கடத்தவில்லை என்கிறது செய்தி., குற்றவாளிகளை குறிவைத்து டிரம்ப் நிர்வாகத்தினர் நாடுகடத்துவதற்குப் பதிலாக, புலம்பெயர்ந்தோரை கண்மூடித்தனமாக நாடு கடத்துகிறார் டிரம்ப் என்ற விமர்சனம் இல்லாது இல்லை.


2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறி வசித்து வருகின்றனர், இது இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பிறகு இரண்டாவது உலகளாவிய vasathiyaana வசதியான இடமாக அமெரிக்கா ள்ளது. இதில் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 205 பேர் முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மக்கள் தொகை 1960 முதல் தொடர்ச்சியாகவும் கணிசமாகவும் வளர்ந்து வருகிறது, 2000 மற்றும் 2023 க்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குடியேறி உள்ளர். சராசரியாக, இந்திய குடியேறிகள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறுகிறவர்களாகவும் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டங்கள் பெற்றவர்களாக உள்ளனர்.  அவர்களின் சராசரி வருமானம் அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த வெளிநாட்டில் பிறந்த மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும், மேலும் இந்தியர்கள் மற்றைய குழுக்களை விட வசதியாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கி வைத்துள்ளனர்.

அமெரிக்க உயர்கல்வியில் சர்வதேச மாணவர்களில் அதிகமாக சேர்ந்தது  இந்திய மாணவர் ஆவர்.  மேலும் 2023 நிதியாண்டில் வழங்கப்பட்ட உயர் திறமையான தொழிலாளர்களுக்கான H-1B தற்காலிக விசாக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைப் இந்தியர்கள் பெற்றனர்.

இந்த குடியேறிகளில் பெருவாரியானோர் படித்தவர்கள் - அதிக வேலையின்மை மற்றும் பிற சவால்களை எதிர்கொள்ளும்  வட இந்தியா இளைஞர்கள் ஆவார்கள்.. பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தைச் சுற்றியுள்ள அரசியல் பதட்டங்கள் மற்றும் பிற காரணிகளும் குடியேற்றத்திற்கு வேகத்தை கூட்டுகிறது..


கிட்டத்தட்ட 44,000 இந்தியர்கள்  சட்டத்திற்கு புறம்பாக  மெக்சிகோ எல்லையில் வழியாக குடியேறியதாக சொல்லப்படுகிறது.   


ஒட்டுமொத்த வெளிநாட்டில் பிறந்த மக்கள் தொகையை விட இந்திய குடியேறிகள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்கிறார்கள். இந்திய 2023 ஆம் ஆண்டில், 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடியேறிகளில் 81 சதவீதம் பேர் குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தனர்.  இது வெளிநாட்டில் பிறந்த அனைத்து 35 சதவீதத்தினரும், அமெரிக்காவில் பிறந்த பெரியவர்களில் 36 சதவீதத்தினரும் ஆகும். இந்தியர்கள் தொழில்முறை பட்டங்களைப் பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர்.

வருமானம் மற்றும் வறுமை

சராசரியாக, இந்தியர்கள் மொத்த வெளிநாட்டு மற்றும் பூர்வீக மக்கள்தொகையை விட மிக அதிக வருமானத்தைக் கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், இந்திய குடியேறியவர் தலைமையிலான குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் $166,200 ஆக இருந்தது, இது அனைத்து புலம்பெயர்ந்தோர் தலைமையிலான குடும்பங்களுக்கும் $78,700 ஆகவும், பூர்வீக அமெரிக்கா  குடும்பங்களுக்கு $77,600 ஆகவும் இருந்துள்ளது.
2023 நிதியாண்டில் மெக்சிகோ மற்றும் கியூபாவிற்குப் பிறகு கிரீன் கார்டு பெற்ற குடியேறிகளின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. அந்த ஆண்டு கிரீன் கார்டு பெற்ற கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களில், சுமார் 78,100 (7 சதவீதம்) பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கிரீன் கார்டு பெற்ற இந்தியர்களில் 60 சதவீதம் பேர் அமெரிக்க குடிமகனின் உடனடி உறவினராகவோ அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவரின் அல்லது அமெரிக்கா குடிமகனின் குடும்ப உறுப்பினராகவோ கிரீன் கார்டு பெற்றனர். அதே நேரத்தில், 37 சதவீத இந்தியர்கள் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விருப்பத்தேர்வுகள் மூலம் கிரீன் கார்டைப் பெற்றனர்,

அமெரிக்காவில் பிறந்த மக்களை விட அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறைந்த விகிதத்தில் குற்றங்களைச் செய்கிறார்கள்,
சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் நாடுகடத்தல் அச்சுறுத்தல் பற்றி அறிந்திருப்பதால், சட்டத்தை மீறினால் மற்ற குழுக்களை விட இழப்பது அதிகம் என்பதாலும் குற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்பை குறைத்து வைத்துள்ளனர் என கூறுகின்றன.



/11 முதல், அமெரிக்க எல்லைகளுக்கு வரும் புலம்பெயர்ந்தோரை சோதனை செய்வதிலும், கண்காணிப்பதிலும் அமெரிக்க அரசாங்கம் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. மேலும் சமீபத்தில், அமெரிக்க-மெக்சிகோ எல்லையை யார் அடைய முயல்கிறார்கள் என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்ள அமெரிக்கா மேற்கு அரைக்கோளத்தில் உள்ள பிற நாடுகளுடன் தனது முதலீடுகளையும் ஒத்துழைப்பையும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைக்க அமெரிக்கா முழுவதும் தகவல் பகிர்வு அதிகரித்துள்ளது மற்றும் அமெரிக்க எல்லைகளில் சட்ட அமலாக்கம், பயங்கரவாத கண்காணிப்பு பட்டியல் மற்றும் உளவுத்துறை சோதனை ஆகியவை தொடர்ந்து பரிசோதனை மற்றும் சோதனை செயல்முறை பெருகிய முறையில் முழுமையானதாகவும் விரிவானதாகவும் உள்ளது.

பல இளைஞர்கள் கனவே அமெரிக்கா வேலை , அமெரிக்கா வாழ்க்கை என்றாகி விட்டது.  தமிழகத்தில் சர்வதேச பாடத்திட்டத்தில் பள்ளி கூடங்கள், பிள்ளைகளை பெற்றோர்கள் காலை 7 மணிக்குள் பள்ளி வளாகத்தில் விட்டு விட்டு. அவர்களே குளிப்பித்து உடை மாற்றி விட்டு குளிரூட்டப்பட்ட வகுப்பறையில் பாடம் நடத்தி தொடர்பாடல் பேணுவதில்  ஹே டூட், wow போன்ற உரையாடல்கள் பேணவைத்து, என நமது கலாச்சாரத்திற்கு இணங்காத உணவு என ஒரு குழு உருவாகி வந்தது. இவர்களால் இந்தியாவில்/ தமிழகத்தில் நிலங்கள் விலை கூடினது. வரதட்சனை பெருகியது. வீடுகள் கூட அவர்கள் விருப்பம் போன்று அடுக்குமாடி வீடுகள், மேலும் உள்ளூர் உணவு தார்த்தங்கள் கிடைக்காமல் போனது.
மெரிக்கா போகிறவன் தாய் தேத்தை விட தனது வருமானம் பெருக்கவே செல்கின்றனர்.  இங்கு இருந்து வேலைவாய்ப்பையோ தொழிலையோ வலப்படுத்த விரும்புவதில்லை தற்கால இளைஞர்கள்.
அன்னிய தேச குடியேறும் நபர்களுக்காக  சர்வதேச விமானநிலையம் என்ற பெயரில் ஊழலும் ஆரம்பித்து உள்ளனர். அருகிலுள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் குடியிருப்பாக மாறும் அபாயம் உண்டு.
ஒன்று இரண்டு விமானம் வரும் தூுத்துக்குடி சர்வதேச விமான நிலையம் தேவை என சொல்வது, சென்னையில் இரண்டு விமான நிலையம் வேண்டும் என்பதெல்லாம் உள்ளூர் இந்தியர்களின்  நலனுக்கா?



பலர் H1-B விசாக்களில் இங்கு குடியேறியுள்ளனர். அவர்கள் வெள்ளை காலர் வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள்; மேலும் பல சமயங்களில், இந்திய மேலாளர்கள் இந்தியர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள். சமீபத்திய பணியமர்த்தல்கள் தகுதி அல்லது தகுதியைப் பொருட்படுத்தாமல் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் செய்யப்படுகின்றன. நான் அமெரிக்காவில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்பதால் எனக்குத் தெரியும், மேலும் எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நான் பேசுகிறேன் என ஒரு அமெரிக்கர் சொல்கிறார்.

2000–2005 ஆண்டுகளில் H1-B இந்தியர்களில் மிகவும் புத்திசாலி மற்றும் திறமையானவர்கள் இருந்தனர். சிலருடன் பணிபுரியும் போது மகிழ்ச்சி ஆக இருந்தது.
தற்போது பலர் H1-B விசா பெறும் முறையை கண்டுபிடித்துள்ளனர், மேலும் குறுக்கு வழியாக அமெரிக்காவிற்கு குடியேற அனுமதிக்க ஆரம்பித்து உள்ளனர் அவர்கள் ஏணியில் மேலே செல்ல விரும்புவதால், ஆனால் காட்ட எதுவும் இல்லாததால், சில ஏமாற்றுகள்  மற்றும் சில சட்டத்திற்கு புறம்பாக சில வழிகளை நாடுகிறார்கள் என்கிறார் ஒரு அமெரிக்கர்.

இந்த பிரச்சனை பற்றி பலருக்குத் தெரியாது, மேலும் இருப்பவர்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கிசுகிசுக்கத் தேர்வு செய்கிறார்கள். பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பயந்து அவர்கள் பெரும்பாலும் பேசாமல் இருக்கத் தேர்வு செய்கிறார்கள்.

பல காரணங்கள் உள்ளன, அவற்றில் பல மில்லியன் கணக்கான ஐரோப்பியர்கள் மற்றும் தென் அமெரிக்கர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயரக் காரணமாக இருந்ததைப் போலவே உள்ளன.

வாய்ப்புகளின் நிலம் என்ற வலுவான பிம்பத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. கடினமாக உழைத்து விதிகளின்படி விளையாடுபவர்களுக்கு இது வெற்றியை உறுதியளிக்கிறது.

அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கை இந்திய வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள தொல்லைகளால் நிறைந்ததல்ல. (மோசமான நிர்வாகம், மோசமான சிவில் உள்கட்டமைப்பு, அதிக ஊழல், மாசுபட்ட காற்று/நீர்/நிலம் போன்றவை)

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான கல்வி (K-12) வாய்ப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் மிகக் குறைந்த செலவில் கிடைக்கின்றன.

நான் அமெரிக்காவில் 15 வருடங்கள் வசித்து (மென்பொருள்/மின்னணுவியல் பொறியியலில் படித்து வேலை செய்தேன்) திரும்பி வந்தேன். அமெரிக்கா செல்வதற்கு முன்பு, நான் இந்தியாவில் வசித்து மிகச் சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து, ஒரு சிறந்த மென்பொருள் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினேன், திருமணமாகி 2 ஆண்டுகள் ஆயிற்று. எனவே, நான் உயர் படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பு இங்கு கணிசமாக வருமானத்துடன் வாழ்ந்தேன்.

என் பெற்றோரை கவனிக்கவேண்டிய தேவை இருந்தால் இந்தியா திரும்பினேன். ஆரம்பத்தில் என் யோசனைக்கு சில எதிர்ப்புகள் இருந்தாலும்  நான் திரும்பி வந்த பிறகு அது ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளேன் என்பதை உணர்ந்தேன், ஏனென்றால் எனக்கு வலுவான இந்திய மதிப்பீடுகள் உள்ளன, மேலும் நான் அங்கு தங்கியிருந்து பல விஷயங்களுக்காக அமெரிக்காவை நேசித்து பாராட்டினாலும், அமெரிக்காவில் ஒரு சொந்த உணர்வு எனக்கு ஏற்படவில்லை. இந்தியா என் நாடு என்றும், அமெரிக்கா ஒரு அந்நிய நாடு என்றும் நான் இன்னும் உணர்கிறேன். எந்த காரணத்திற்காகவும் இரண்டு நாடுகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி வந்தால், நான் ஒரு நொடியில் இந்தியாவைத் தேர்ந்தெடுப்பேன் என்று அமெரிக்காவில் இருந்து திரும்பி தாய் நாடு வந்த அமெரிக்கர் சொல்கிறார்.

இந்தியாவில் குடியேற விரும்பினால், 10–15 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரத்தில் குடியேறுங்கள்.

அத்தகைய நகரங்களில் வேலைகள் குறைவாக இருக்கும்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீதான அணுகுமுறைகள் அமெரிக்கர்களிடையே வேறுபடுகின்றன, மேலும் தனிப்பட்ட அனுபவங்கள், கலாச்சார பின்னணி மற்றும் இந்திய கலாச்சாரம் மற்றும் மக்கள் மீதான வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக, பல அமெரிக்கர்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் குறித்து நேர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர், அமெரிக்க சமூகத்தின் பல்வேறு அம்சங்களுக்கு அவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டுகிறார்கள், அவற்றுள்:1. தொழில்முறை மற்றும் கல்வி சாதனைகள்: தொழில்நுட்பம், மருத்துவம், கல்வித்துறை, வணிகம் மற்றும் தொழில்முனைவோர் போன்ற துறைகளில் இந்தியர்கள் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். பல அமெரிக்கர்கள் கல்வி மற்றும் தொழில்முறை சாதனைகளைப் போற்றுகிறார்கள்.,



இந்தியாவில் நமது தாய்  நாட்டின் வளர்ச்சிகாக பணி செய்யலாம். நமது நாடும் செழிக்கும். 

அமெரிக்கா மாப்பிள்ளை பந்தா முதல் நமது கலாச்சாரத்தில் வணிகத்தை கலந்தது முதல் நமது தனித்துவமாக நாட்டின் முன்னேற்றத்திற்கும் அமேரிக்கா மோகம் நல்லது அல்ல. பெரிய பங்களா, வாகனம் போன்ற அமெரிக்கா ஆடம்பர வாழ்க்கையை விடுத்து நமது நாட்டில் நிம்மதியாக தன்னிறவுடன் வாழ கற்றுக் கொள்ளலாம்.

 

அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் அவர் நாட்டு மக்களுக்கு நல்லதே செய்கிறார். 

நமது மக்களும் நமது நாட்டை வளமைப்படுத்தும் வாய்ப்பு என்பதே உண்மை.. 


மோடியும் சட்டபூர்வ அனுமதி பெறாது குடியிருக்கும் அந்நிய நாட்டு ஆட்களை வெளியாற்றி தான் தீர வேண்டும்.  

 


4 Feb 2025

ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!

தமிழர்கள் போற்றி வந்த பழந்தமிழிசை என்பது தொன்மம் நிறைந்தது. அதற்கு நீண்ட கால வரலாறும் உண்டு. தமிழரின் திணை வாழ்க்கையோடு தொடங்கிய தமிழிசை பாணர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. சங்ககால நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம் ஆகியவற்றிலும், ஐம்பெரும் காப்பிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் பழந்தமிழிசை குறித்த செய்திகள் விரவிக் கிடக்கின்றன.

கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் உருவான பக்தி இலக்கிய கால கட்டத்திலும் பழந்தமிழிசை போற்றிப் பாதுகாக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் பழந்தமிழிசை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அப்போது வந்த தமிழரல்லாத வி நகர ஆட்சியிலும், நாயக்கர் ஆட்சியிலும், அதன் பிறகு வந்த மராட்டியர் ஆட்சியிலும். தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் ஆட்சி அதிகாரத்தில் வந்த போது, தமிழிசையை புரக்கணித்து  கர்நாடக இசையென அறியக்கொள்ள ஆரம்பித்தது.

மீண்டும் 18 – ஆம் நூற்றாண்டில் முத்துத் தாண்டவரும், அருணாசலக் கவிராயரும், மாரி முத்தாப் பிள்ளையும் தமிழிசை மீட்பிற்கு அடித்தளம் இட்டனர்.  இசை இலக்கணத்தை எழுதியவர்கள் வடமொழியாளர்கள் இசை இலக்கண நூல்கள் குழப்பம் நிறைந்தும் பிழைகள் மலிந்தும் இருந்தன. இசை இலக்கணங்கள் இசை இலக்கியங்களுக்குப் பொருத்தமற்றுக் காணப்பட்டன..

இந்நிலையில்தான் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழந்தமிழிசையை மீட்க, அதன் உரிமையை நிலை நாட்ட, தமிழிசையே ஆதி இசையென உலகுக்கு அறிவித்தவர் இசைப் பேரொளி ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.


ஆபிரகாம் பண்டிதரரின் தந்தைவழி தாத்தா முத்துசாமி நாடாரின் 11 குழந்தைகளில் பத்து குழந்தைகள் காலரா நோயால் இறந்தனர். எஞ்சிய மகனுக்காக வேண்டிக்கொண்டு கிறிஸ்தவராக மாறினார். முத்துசாமிநாடார்,  சாம்பவர் வடகரையில் இருந்து பங்களாச் சுரண்டைக்கு வந்து அங்கே ஆங்கிலப் பாதிரியாரிடம் தோட்டக்காரராக பணியாற்றினார்.

 

 ஆபிரகாம் பண்டிதர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற ஊரில் முத்துசாமி பண்டிதர் மற்றும்  -அன்னம்மை அம்மாள் தம்பதிகளுக்கு  ஆகஸ்ட் 2, 1859-ல் பிறந்தார். ஆபிரகாம் பண்டிதர் ஆரம்ப கல்வி பங்களாச் சுரண்டையில் முடித்தபின் 1870 முதல் 1878 வரை பன்றிகுளம் உயர்தர பள்ளியில் உயர்நிலை படிப்பை முடித்தார். அருகே உள்ள திருமலாபுரத்தில் தன் உறவினர் நடத்தி வந்த பள்ளியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1874-ல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியை நடத்தி வந்த ரெவெ.யார்க் வேண்டுகோளுக்கு இணங்க  இரண்டு ஆண்டுகள் அங்கே ஆசிரியராகப் பணியாற்றினார்.


ஆபிரகாம் பண்டிதர் நாஞ்சான்குளம் வேதக்கண் நாடார் மகள் ஞானவடிவு பொன்னம்மாளை டிசம்பர் 27, 1882-ல் திருமணம் செய்தார். ஞானவடிவு பொன்னம்மாள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர். தஞ்சையில் ரெவெ டபிள்யூ.எச்.பிளேக் ஆதரவில்  இருவருக்கும் 1884-ல்  ஆசிரியர் பணி கிடைத்தது. ஞானவடிவு பொன்னம்மாள் தஞ்சாவூர் பூக்கடைப்பள்ளி (லேடி நேப்பியர் கேர்ஸ்ல் ஸ்கூல்) தலைமையாசிரியையாகவும் ஆபிரகாம் பண்டிதர் அங்கே தமிழாசிரியராகவும் பணியேற்றனர்


இவர்களுக்கு ஞானவடிவு பொன்னம்மாள் அன்னபூரணி, சௌந்தரவல்லி, சுந்தர பாண்டியன், ஆனந்த வல்லி, ஜோதிபாண்டியன், மரகத வல்லி என்னும் ஆறு குழந்தைகள் இருந்தனர்

திண்டுக்கல் நார்மல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ரெவெ யார்கிடம் இருந்து ஆபிரகாம் பண்டிதர் 1876-ல் புகைப்படக்கலையை கற்றார். தனக்காக 15 x 12 டல்மெயெர் லென்சுடன் ஒரு புகைப்படக் கருவியை வாங்கி தொடர்ச்சியாகப் புகைப்படங்களை எடுத்து வந்தார். பல வேதிப்பொருட்களைக் கொண்டு நெகட்டிவ்களை கழுவி அவரே ப்ரிண்ட் செய்தார். பல புதிய கண்டுபிடிப்புகளையும் கழுவும் முறையில் செய்தார். இந்தியாவின் சிறந்த அமெச்சூர் புகைப்படக்கலைஞராகவும்  பிரபலமானார். 1909-ல் லண்டனில் இருந்த அரசு கலைக்கழகம் (Royal Society of Arts) அமைப்பின் உறுப்பினராக தேர்வானார்.


ஆறாண்டுகள் அங்கே அவர்கள் பணியாற்றினர். திண்டுக்கல்லில் பணியாற்றுகையில் ஆனைமலைப்பட்டி என்னும் ஊரைச்சேர்ந்த பொன்னம்பல நாடார் என்பவரிடம் ஆபிரகாம் பண்டிதர் சித்தமருத்துவம் கற்றார். 1877-ல் அவருடன் சுருளிமலை மேல் மூலிகைதேடிச் சென்றபோது கருணானந்த முனிவர் என்பவரைச் சந்தித்து அரிய மூலிகைகளை பற்றித் தெரிந்துகொண்டார்.1890-ல் ரெவெ டபிள்யூ.எச்.பிளேக் இங்கிலாந்து திரும்பினார். ஆபிரகாம் பண்டிதர் பணியில் இருந்து நீங்கி கர்ணானந்தர் சஞ்சீவி மருந்துகளை தயாரித்து விற்கத் தொடங்கினார். அவர் மனைவியும் பணியை உதறி மருந்து தயாரிப்பில்  ஈடுபட்டார். ஆபிரகாம் பண்டிதர் தயாரித்த செந்தூர சஞ்சீவினி என்னும் மருந்து பிளேக் நோய்க்கும் சமயசஞ்சீவினி மருந்து காலராவுக்கும் உதவுவதாக கருதப்பட்டதால் மிகப்பெரிய வணிகவெற்றியை அடைந்தார். தஞ்சையில் 1894-ல் பெரிய பங்களாவை கட்ட இயன்றது.
ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் இருந்த கந்தசாமிப் பிள்ளை என்பவரிடம்  அச்சுமுறையை கற்றுக்கொண்டார். 1912-ல் தஞ்சையில் மின்விசையில் இயங்கும் முதல் அச்சகம் உருவாக்கினார்


ஆபிரகாம் பண்டிதர் சோதிடத்தின் அடிப்படைகளை கந்தசாமிப் பிள்ளையிடம் கற்றார். தஞ்சையில் பின்னர் ஜோதிடவிமர்சினி சபா என்னும் அமைப்பை நிறுவி சோதிடத்தை கணிதநோக்கில் ஆராய்ந்தார். பின்னர் இசை ஆராய்ச்சியில் பன்னிரு ராசி சக்கரங்களின் கணிதமுறையை பயன்படுத்த இப்பயிற்சி அவருக்கு உதவியது.


ஆபிரகாம் பண்டிதர் தஞ்சை அருகே 100 ஏக்கர் நிலத்தில் கருணானந்தபுரம் என்று பெயரிட்டு விவசாயம் செய்தார். அங்கே அவர் முதல் முறையாக லிவர்பூலில் இருந்து இயந்திரங்களை வரவழைத்து ஆழ்துளைக்கிணறு போட்டு காற்றாடிமூலம் நீர் இறைக்கும் இயந்திரத்தையும் நிறுவினார். பண்டிதர் பண்ணை என அழைக்கப்பட்ட  அந்த நிலம் அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக இருந்ததுவேளாண்மைக் கண்டுபிடிப்புகளுக்காக 6 தங்கப்பதக்கங்கள், 37 வெள்ளிப்பதக்கங்கள், 7 பித்தளைப் பதக்கங்களை பண்டிதர் பெற்றார்.

அன்றைய கவர்னர் சர் ஆர்தர் லாலி பிப்ரவரி 22, 1890-ல் கர்ணானந்த புரத்திற்கு வந்தார். விவசாயக் கமிஷனர் சிவசாமி ஐயர், இராமநாதபுரம் அரசர் போன்றவர்களும் அவருடைய பண்ணைக்கு வந்திருக்கிறார்கள்.


ஆபிரகாம் பண்டிதர்  மே 27, 1912-ல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி தமிழிசையின் அமைப்பு மற்றும் வேர்களை ஆராயத் தொடங்கினார்.1912 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் ஏழு இசைமாநாடுகளைச் சொந்தச் செலவில் தஞ்சையில் நடத்தினார்.  அன்றைய புகழ்மிக்க இசையறிஞர்கள் அதில் கலந்துகொண்டனர். அவற்றில் நிகழ்ந்த விவாதங்களின் அடிப்படையில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ராகங்கள் அமைந்துள்ள விதத்தை கணிதரீதியாக ஆராய்ந்து வரைமுறைப்படுத்தினார். அதற்கு மேலையிசையின் கணக்குமுறையை பயன்படுத்தினார். இதை அவர் ராகபுடம் என அழைத்தார்.

 

12 ராசி சக்கரம் என்பது சோதிடம் சார்ந்தது மட்டுமல்ல, அது தொன்மையான தமிழ் வானநூல் கணக்கும் காலக்கணக்கும் பிற கணக்குகளும் ஆகும் என கூறிய அவர் அதன் அடிப்படையில் பழந்தமிழ்ப்பண்கள் எப்படி அமைந்துள்ளன என்றும் அடிப்படைச் சுருதிகள் 24 என்றும்  விளக்கினார். பழந்தமிழ்ப் பண்களுக்கு நிகரான சமகால கர்நாடக சங்கீத ராகங்களையும் அவர் சுருதிக் கணக்கின் அடிப்படையில் எழுதிக்காட்டினார்.  தன் ஆய்வுகளை கர்ணாமிர்த சாகரம் என்னும் நூலில் விளக்கினார். இந்நூல் தமிழிசையின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது


தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் ராக அடிப்படைகளே வடக்கே இந்துஸ்தானி இசையிலும் உள்ளன என்று 1916, மார்ச் 20 முதல் 24 வரை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று விளக்கினார். அவருடைய இரு மகள்களும் வீணையில் அவர் கூறுவதை வாசிக்க கற்று இருந்தனர்.

 

திண்டுக்கல்லில் இருக்கையில் பிரபல பிடில் வித்வான் சடையாண்டிப் பத்தர் என்பவரிடம் இசையின் அடிப்படைகளைக் ஆபிரகாம் பண்டிதர் கற்றார். கர்நாடக சங்கீத இசைக்கீர்த்தனங்கள் எழுதவும் ராகக்குறிப்புகள் எழுதவும் தேர்ச்சி அடைந்தார். தொடக்கம் முதலே ஆபிரகாம் பண்டிதர் தமிழக இசை முழுக்கமுழுக்க தெலுங்கில் இருப்பதை மறுத்துவந்தார்.

96 இசைப்பாடல்களை எழுதி உள்ளார். ஜெகன்னாந்த பட்டு கோசாயி என்பவர் 41 பாடல்களுக்கு சுவரம் அமைத்து உள்ளார். 55 பாடல்களுக்கு தஞ்சை அரண்மனை வித்வான் வைணிகர் வெங்கடாசல ஐயர் சுவரம் அமைத்து கொடுத்தார். அவை தஞ்சை சாமியா பிள்ளையால் கற்பிக்கப்பட்டன. கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்ற பெயரில் 1917-ல் பிரிமியர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு நூலாக வெளிவந்தன.

 


வெங்கடாச்சல ஐயர், சாமி ஐயர், பஞ்சாபகேச ஐயர் ஆகியோரை தன் மகன்களுக்கும் மகள்களுக்கும் இசை கற்பிக்க ஏற்பாடு செய்து இருந்தார். அவர்களில் பலர் பின்னாளில் இசை ஆய்வாளர்களாக ஆனார்கள்.
அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய இசையை (பன் இசை) மீட்டெடுத்ததால், ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

 


ஆபிரகாம் பண்டிதரின் மகன் டாக்டர்..வரகுணபாண்டியன் பாணர்கைவழி யாழ் என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவரது பேரன் பேராசிரியர் து..தனபாண்டியன்  இசைத் தமிழ் வரலாற்றுத் தொகுதிகளையும், புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்களைப் படைத்ததோடு சிறந்த இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்


ஆபிரகாம் பண்டிதர் கிறித்தவ உண்மைகளைத் தமிழில் எடுத்துரைக்கும் பொருட்டு பைபிளின் அடிப்படை தத்துவக்கொள்கைகள் பற்றிய "நன்முறை காட்டும் நன்னெறி" என்னும் ஆய்வுநூலை எழுதி வெளியிட்டு உள்ளார்.

 ஆபிரகாம் பண்டிதரின் மகன் ஜோதிப் பாண்டியன் புகைப்படக் கலையில் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றார். லண்டன் ராயல் புகைப்படக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். உலகம் முழுதும் பயணித்து தன்னுடைய புகைப்படங்களை காட்சிப் படுத்தினார். பண்டிதரின் கடைசி மகன் சௌந்தர பாண்டியன் தென்னிந்திய ரயில்வேயின் அதிகாரப் பூர்வமான புகைப்படக் கலைஞராக இருந்தார். ஆபிரகாம் பண்டிதரின் பேரன் தவப்பாண்டியன் தஞ்சாவூர் அமெச்சூர் புகைப்படக் கழகத்தைத் தொடங்கி நீண்ட காலம் நடத்தி வந்தார்.

 


1909-
ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கியது.


லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸின் உறுப்பினர்; மதுரா தமிழ் சங்கத்தின் உறுப்பினர்; தஞ்சை நகராட்சி மற்றும் தாலுகா வாரியங்கள் மற்றும் மருத்துவமனை குழுவின் உறுப்பினர்; சென்னை விக்டோரியா சாதி மற்றும் கோஷா மருத்துவமனையின் ஆளுநர்; கோவை மற்றும் தஞ்சை அரசு வேளாண் கல்லூரியின் கௌரவ பார்வையாளர்; மற்றும் தஞ்சை ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர் எனும் பல பதவிகளை அலங்கரித்துள்ளார்.


1917
ஆம் ஆண்டில், அவர் தமிழ் இசை குறித்த தனது ஆராய்ச்சியை கருணாமிர்த சாகரம் என்ற 1346 பக்க புத்தகமாக வெளியிட்டார், இது இன்றுவரை இந்தத் துறையில் ஒரு முக்கிய படைப்பாக உள்ளது




ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 31, 1919-ல் காலமானார். பண்டிதர் தோட்டத்தில் அவர் அடக்கப்பட்டார்.  தஞ்சையில் ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்த தெருவிற்கு அவரது நினைவாக ஆபிரகாம் பண்டிதர் தெரு என பெயரிடப்பட்டுள்ளது. ஆபிரகாம் பண்டிதரின் நூல்கள் தமிழக அரசால் 2008-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன
.









https://worldtamilforum.com/historical_facts/abraham-pandithar-2/

http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/

https://www.jeyamohan.in/459/#.VqGiDvl96Hs

https://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-AbrahamPanditar-


karuNAmirta-sAgaram-Bk2-Ragas-1946-C2-0152.pdf

https://ia804503.us.archive.org/24/items/kj-danapandian-life-history-of-abraham-pandithar/KJ%20-%20DANAPANDIAN%20-%20LIFE%20HISTORY%20OF%20ABRAHAM%20PANDITHAR%20%40.pdf