3 Dec 2020

APMC: Agricultural Produce Market Committee (mandis) விவசாய உற்பத்தி சந்தைக் குழு (மண்டி )


APMC: Agricultural Produce Market Committee  (mandis) விவசாய உற்பத்தி சந்தைக் குழு

 ​​விவசாய பொருட்கள்,  மாநிலத்தால் இயற்றப்பட்ட  விவசாய உற்பத்தி சந்தை கீழ் குழு  (ஏபிஎம்சி) சட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.  புவியியலை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் சுமார் 2477 சந்தைகள்  மற்றும் 4843 துணை சந்தை யார்டுகள் இந்தியாவில் அந்தந்த APMC களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

 

மண்டி என்ற பெயரில் இந்த குழு  இரண்டு கொள்கைகளை கொண்டு இயங்குகிறது:

  • விளைபொருட்களை பண்ணை வாயிலில் மிகக் குறைந்த விலைக்கு விற்க கட்டாயப்படுத்தும் இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துதல், அனைத்து உணவுப் பொருட்களும் ஒரு சந்தை முற்றத்துக்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் ஏலம் மூலம் விற்கப்பட வேண்டும்.

 

ஏபிஎம்சி மாடல் சட்டம் 2003 இன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

  • ஒப்பந்த விவசாய மாதிரியை எளிதாக்குகிறது.
  • அழிந்துபோகக்கூடியவற்றுக்கான சிறப்பு சந்தை.
  • விவசாயிகள், தனியார் நபர்கள் சொந்த சந்தையை அமைக்கலாம்.
  •  உரிம விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
  •  ஒற்றை சந்தை கட்டணம்.
  • ஏபிஎம்சி வருவாய் சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும்.

மாநில வேளாண்மை விற்பனை வாரியம் 1977 ல் துவங்கப்பட்டது. 277 சந்தைகள் இயங்குகிறது. இந்த வாரியத்தின் பணிகள் அதிகாரங்கள் இப்படியாக இருக்கும் என இவர்கலுடைய இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • விற்பனைக்குழுக்களின் செயல்களும், அபிவிருத்தி பணிகளுக்கும் உதவி புரிதல்.
  • மாநில அளவில் விளைபொருட்கள் விற்பனையை அபிவிருத்தி செய்ய திட்டம் தீட்டுதல்.
  • அனைத்து விற்பனைக்குழுக்கள் அல்லது தேவைப்படும் விற்பனைக்குழுக்களுக்கு பணிகளை மேம்படுத்த உதவிகள் புரிந்திடல்.
  • விற்பனைக்குழுக்கள் மேற்கொள்ளும் கட்டிட பணிகளுக்கு வரை படங்கள் மற்றும் மதிப்பீடு தயாரித்து கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வகுத்து தருதல்.
  • வாரிய விற்பனை நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் செயல்படுத்துதல்.
  • ஆண்டு முடிய நிதிநிலை அறிக்கை தயாரித்து அதில் சொத்துக்கள் விவரம், செலவின விபரம் இவைகளை குறிப்பிட்டு வாரிய உறுப்பினர்களும், அரசிற்கும் தெரிவித்தல்.
  • ஓழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயன் பெறும் பொருட்டு அனைத்து விளம்பரம் மற்றும் பிரச்சார பணிகளை மேற்கொள்ளுதல்.
  • மாநில அளவில் விற்பனைக்குழு பணியாளர்கள், வாரிய பணியாளர்கள், வேளாண்மை விற்பனைத்துறை பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் முதலியவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்க வழிவகைகள் செய்து தருதல்.
  • வாரிய விதிகளின்படி விற்பனைக்குழுக்களுக்கு கடன் மற்றும் மான்யங்கள் தீர்மானித்து வழங்குதல்.
  • வேளாண்மை விற்பனை சம்மந்தமாக கருத்தரங்குகள், விழாக்கள், கருத்துக் காட்சிகள் முதலியவைகளை ஏற்பாடு செய்து நடத்துதல்.
  • விளை பொருட்களை பதப்படுத்தவும், தரம் பிரிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • அங்காடி விலை விபரங்களை பெற்று பின் அனைவருக்கும் தெரியப்படுத்துதல்.
  • விற்பனை புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியிடுதல்.
  • விளைபொருள் விற்பனை புள்ளி விவரங்கள் சேகரிக்கவும், வெளியிடவும் சந்தா தொகை வசூலித்தல்.
  • வேளாண்மை விற்பனை சம்மந்தமான ஆராய்ச்சிகள் மற்றும் விற்பனை முன்னேற்ற தரத்தினை கணக்கெடுத்தல்.
  • விற்பனை குழுக்கள் மற்றும் வாரிய சம்பந்தமான முக்கியமான பொதுப்படையான முன்னேற்ற பணிகளை மேற்கொள்ளுதல்.
  • சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இதர பணிகளை மேற்கொள்ளுதல்.
  • இது தவிர அரசு வாரியத்திற்கு இடும் இதர பணிகளை மேற்கொள்ளுதல்

 

இந்திய  நாட்டில் அமல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பானவையாக இருந்தாலும் இதை அமல்படுத்தும் அதிகாரத்தால்  ஊழல், முறைகேடுகள், லஞ்சம் ஆகிய சிக்கல்கள் உள்ளே நுழைந்தன. பல திட்டங்கள் ஊடாக கொடுக்கப்படும், மானியங்கள், உதவிகள் தகுதியற்றோர் பெற ஆரம்பித்தனர்.

 வேளாண் மக்கள் பயன்பெறக் கூடிய மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தற்போது, மரத்தடியில் படுத்துக் வேலை செய்யாது  பணத்தை வாங்கிச் செல்லும் அறிவற்ற சமூகமாக விவசாயிகள் உருவாக்கப்பட்டு வந்தனர்.  பொய்யான பட்டியலை சமர்பித்து அதிகாரிகள் நிதி உதவியை கைப்பற்றி வந்தனர்.

இதேபோன்று  பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திலும் முறைகேடு நடந்தது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கிசான் திட்டத்தில் விஞ்ஞான ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.


0 Comments:

Post a Comment