2 May 2015

இந்தியாவின் வேர்கள் தேடி..........சிந்தாமணி கிராமம்.(Cinthamani)

இந்தியாவின் வேர்கள் தேடிய எங்கள் மேதினப் பயணம் சென்றடைந்தது சிந்தாமணி  கிராமத்தில் தான். நெல்லையில் இருந்து சாத்தான்குளம் போகும் வழியில் இந்த கிராமம் அமைந்துள்ளது.   நாங்குநேரி  தாலுக்கை  சேர்ந்த  இந்த கிராமம்   பாசமான மக்கள் திரும்பும் திசை எங்கும்  ஆலயங்கள், குளங்கள் என பசுமையாக உள்ளது.

2011சென்செஸ் பிரகாரம்  679  ஆண்கள் 650 பெண்கள் உள்ளடங்கிய   355 குடும்பங்கள் வசிக்கும் பகுதியாகும் இந்த கிராமம். கிராமத்தின் அருகே பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் இருப்பதால்  96% எழுத்தறிவு கொண்ட கிராமமாக விளங்குகின்றது.  18 % மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு என விவசாயத்தை நம்பி உள்ளனர்.


ஊர் ஆரம்பபள்ளியை வந்தடைந்தோம்.  ஊர் ஐஸ்க்காரர் எங்களை அன்புடன் வரவேற்றார். பள்ளிக்கூட நாட்களில் ஐஸ்க்காரரை கண்ட அதே மகிழ்ச்சியுடன் நாங்களும் ஐஸ் வாங்கி உண்டு மகிழ்ந்தோம். ஆனாலும் நம்ம கால சுவையான ஜவ்வரிசி ஐஸ் தற்போது இல்லை. பால் ஐஸ் கூட நாம் வாங்கி சாப்பிட்ட ருசி இல்லை. இந்த தலைமுறையை விட நாம் ஆசிர்வதிக்க பட்டவர்கள் தான். ஐஸ் சுவைத்து கொண்டே தன் விளையாட்டு வீரரான தந்தையின் விருது கோப்பைகளை ஐஸ்காரரிடம் கொடுத்து ஐஸ் வாங்கி தின்றதும் கோப்பைகள் காணாது போனதை  கண்டு பிடித்த அவருடைய தாயார் அடித்து உதைத்த   கதையை சுவைப்பட சொல்லி கொண்ருந்த  போது  அவ்வழியே உணவு -உண்ணா சாமியார்  வந்தடைந்தார். சாமியாரிடம் பேசின போது தான் அவர் பல மருத்துவ மூலிகை மருந்துகளை தயார் செய்து வருவதாக அறிந்தோம்.
.
எங்கள் குழுவிலுள்ள விடலை பசங்கள் சாமியாரிடம் நெருங்கி ரகசியமாக முகப்பருவை போக்க ஏதும் வழியுண்டா என வினவி கொண்டிருந்ததனர். இதுவெல்லாம் மருத்துவ உலகில் ஒரு பெரிய பிரச்சினையா கான்சரை போக்கும் மருந்தே தன்னிடம் உள்ளதாக கூறின சாமியார் தான் கடந்த இரண்டு வருடங்களாக வெதுவெதுப்பான நீர் ம்ட்டுமே பருகி வருவதாகவும்  வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து வரும் ரகசியத்தை கூறினார்.  இனி வானில் பறப்பதற்கான பயிற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

இந்த சாமியார் முன்னொரு வருடங்களில் என் ஜி ஓ காலனியை அடுத்த ஜெபா கார்டன் பகுதியில் வியாபாரம் செய்து வந்த சிறந்த  ஒரு வியாபாரி ஆவார்.  பின்பு காசிக்கு பயணம் மேற்கொண்டு தன் வாழ்க்கையை ஆன்மீகதில் திருப்பியதை அறிந்தோம்.  சாமியார்  விடைபெற்று செல்லும் முன் சாமி அருள் பாலித்தது போல் ஆண் உலகத்தின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மாபெரும் மருந்தை பற்றி விளக்கினார். மகிழ்ச்சியான ஆண் பட்டாளம்  தங்கள் பாரமான கிமாரவை தூக்கி கொண்டு கிராமத்திற்குள் உற்சாகமாக படை எடுத்தனர்.

சூரியன் உச்சியை தொட ஆரம்பித்ததால் கடும் வெயில் வாட்ட ஆரம்பித்தது.  இருப்பினும் நம் கிராம மக்களை சந்திக்கும் ஆவலுடன் வீதி வீதியாக சென்றோம். எப்போதும் போல் குழந்தைகள் துள்ளி விளையாடி கொண்டிருந்தது.    ஆயாக்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்து கொண்டு வாசல் படி கடந்து வந்து எட்டி பார்த்தனர். ஆயிரம் நன்றிகளை மனதில் நினைத்து கொண்டு குழந்தைகள் படங்களை கொள்ளையிட்டு கொண்டிருந்தோம். சின்ன சின்ன குழந்தைகளின் வஞ்சனை இல்லா சிரிப்பும் கேலிப் பேச்சுக்களும் மனதை கொள்ளை கொண்டன. ஒரு எட்டு மாதக்குழந்தை தன் பாட்டியில் கையில் இருந்து எங்களை நோக்கி சிரித்தது. அக்குழந்தை பிறக்கும் 12 நாட்களுக்கு முன்னே அதன் தந்தை இறந்து விட்ட துயர் செய்தியும் பகிர்ந்தார் அத்தாய். கோயில் அருகில் ஒரு பாட்டி முறம் கொண்டு நெல்லை புடைத்து கொண்டு இருக்க தாத்தா அருகில் இருந்து பரிவுடன் நோக்கி கொண்டிருக்கும் அரிய காட்சியை காண இயன்றது.                                                                         

கண்ணாடி அணிந்த ஒரு முதியவரை சந்தித்தோம். அவர் அப்போது தான் வேலை முடிந்து குளித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார். அழகான கறுப்பு முக்கு கண்ணாடி அணிந்திருந்தார். எங்கள் குழுவின்  தூண்களில் ஒருவரான முத்து குமார் சகோதருடன் அழகிய சிரிப்புடன் போஸ் கொடுத்தார்.


வீடுகளின் முன் பகுதியை தென்னம் கீற்றால் மறைத்துள்ளனர். பல வீடுகள் முன் நம் பாரம்பரியத்தின் அடையாளமான திண்ணைகள் உள்ளது. தந்தையும் இரு மகள்களும் எங்களை கண்டதும் சிரிப்புடன் வரவேற்றனர். .அவர்கள் அம்மா வயலுக்கு வேலைக்கு சென்றதாக கூறினர். மே தினம் அன்று கூட விடுமுறை அற்ற உழைப்பாளி பெண்கள் கொண்ட் நாடு நம்முடையது என்ற உண்மை சுட்டது! காலையில் சென்றிருந்தோம் என்றால் பதநீர் தந்திருப்பதாக கூறினர்..(எங்கள் குழு முதல்வரே அடுத்த முறை ஏனும் அந்த ஊருக்கு காலை அழைத்து செல்லுங்கள்) 

சூரிய ஒளி கண்ணை மட்டுமல்ல மண்டையையும் பிளர்க்க ஆரம்பித்து விட்டது. இனி நடக்க இயலாது என்ற சூழலில் ஒரு வீட்டு பக்கம் வேலி ஓரமாக நின்று கொண்டிருந்தோம். அந்த வீட்டில் குழந்தைகள் சத்தம் போட்டு கொண்டிருந்தனர். மழலை பள்ளியோ என நாங்கள் கூர்ந்து கவனிக்க  “ஏ பண்ணாடை டீவியை தொடாதை ஏய் சத்தம் போடாதை” என்ற கட்டளைகள் பாய்ந்து கொண்டிருந்தது. மே தின சிறப்பு நிகழ்ச்சி காண குமிந்துள்ளனர் என விளங்கியது. 

தொலைகாட்சியில் தஞ்சம் அடைந்த மக்கள் கிமாராப்படையை கண்டதும் வெளியே வர ஆரம்பித்தனர். கிராம உடையில் இருந்து சின்னச்சிறு குழந்தைகள் வடக்கு- தெற்கு என நவ நாகரிக உடையுடன் பவுடர் பூசி மேக்கப் இட்டு வெளியை வர ஆரம்பித்தனர். கிராம மக்கள் வீட்டில் தொலைபேசி தொலைகாட்சி வானொலி என தகவல் தொழிநுட்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என நாங்கள் நினைத்து கொள்ள; அவர்களோ  இவங்க எல்லாம் இந்த படங்களை இன்டெர் நெட்டுலை போட போராங்க, நம்ம ஊரை உலகமே பார்க்க போகுது என பேசி கொண்டிருப்பது கேட்டது.


என்னவர் வெயிலின் ஆதிக்கத்தை பொறுக்க இயலாது "போதும்டீ வெயிலில் போட்டு என்னை வறுத்து எடுக்காதே, வீட்டுக்கு போவோம் என கண்ணாலே பேசிக் கொண்டிருந்தார். வீட்டு நினைவால் வாடியது என்னவர் மட்டுமல்ல இல்லற அரசிகள் உடன் இல்லாது தனியாக வந்த கணவர்களும் பசியும் வெயிலும் மிரட்ட மனைவியர் புராணம் பாட ஆரம்பித்து விட்டனர். ஐ…ஐயோ எங்க வீட்டிலிருந்து 2 மிஸ்டு கால் வந்திடுச்சு என்னை தேட ஆரம்பித்து விட்டாளே………இன்னொரு நண்பர் போனை எடுத்து என்னம்மா என்று கேட்க .”டமால் டுமீல் என சத்தம் கேட்க அம்மா……….. அப்பா……….. என்று கிடைத்த வண்டியை எடுத்து கொண்டு சாமியோ! காப்பாத்து என்று  தங்கள் காதல் மனைவியரை தேடி பறந்தனர்.(வீட்டில் இருக்கும் மனைவியர் தங்கள் கணவர்களை நினைத்து பெருமை பட்டு கொள்ளலாம்  எப்போதும் என்னேரவும் மனைவி நினைவில் வாழும் பக்த கணவர்கள்!) நானும் தோழி அமுதாவும் சேர்ந்து கொண்டதால் சுவாரசியமான நிகழ்வுகளை கண்டு பேசி, கதைக்க, சிரிக்க இயன்றது.


நெல்லையை சேர்ந்த ஜானகி ராம் உணவக அதிபர் சிந்தாமணி ஊரை சேர்ந்தவர் என்பதால் எங்கள் குழு அவர்கள் ஊருக்கு சென்றிருப்பதை அறிந்து குடும்பத்தினருடன் வந்து வரவேற்று அறுசுவை உணவு அளித்து மகிழ்வித்தார். கிராமத் தலைவரான அவருடைய சகோதரர் உயர் திரு ராமசுப்பு, தங்கள் கிராமம் இந்தியா ஜனாதிபதியிடம் இருந்து இரண்டாவது முறையாக விருது பெற்றதை பெருமையுடன் குறிப்பிட்டார். சென்னையில் தொழில் அதிபரான அவர்களுடைய மாமா நவநீத கிருஷ்ணன் உறவினர் ரவி குடியாத்தம் போன்றோர் தங்கள் சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தனர். சென்னையில் வாகனங்களின் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தாலும் தன் ஊர் பசுமையுடன் திகழ வேண்டும் என்ற நோக்குடன் கிராமம் முழுதும் மரம் நட்டு வளர்த்தும் வருகின்றார். மரம் பராமரிப்புக்கு என்றே பணியாளர்கள் குழு மட்டுமல்ல அவைக்கு தினம் தோறும் தண்ணீர் கிடைக்க செய்யும் நோக்குடன் தண்ணீர் தொட்டி வாகனவும் வாங்கி கொடுத்துள்ளார்                                                                                                                                                                        13ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் காலம் தமிழகத்தில் குடியேறிய இவர்கள் இந்திய முழுக்க உணவக தொழில்களில் மிளிர்கின்றனர். கிருஷ்ணதேவராயர் காலம் தான் லட்டு போன்ற உணவு கலாச்சாரங்கள் நம்மில் புகுந்தது என நினைவில் கொள்க. இவருடைய மாமா வழக்கத்தில் இருந்தும் விலகி வாகன இதரி பொருள் தொழில்சாலை நடத்தி வருகின்றார். ஆறு தலைமுறையாக குடியிருக்கும் ரெட்டியார் குலத்தவர்களான இவர்கள் நாட்டின் எந்த மூலயில் இருந்தாலும் வருடம் ஒரு முறை தங்கள் கிராமத்திற்கு வந்து செல்வதை கடமையாக கொண்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாக பர்மா இலங்கை போன்ற நாடுகளுடன் வியாபாரம் செய்து வந்தமையால் இவர்கள் வீடுகளின் கட்டமைப்பு தோற்றங்களில் அதன் தாக்கம் தெரிகின்றது. நவ நாகரிக காலத்திலும் இவர்கள் வீடு தறை ஓடு கொண்டும் பழைமையின் கம்பீரமான கதவுகள், மற்றும் கட்டை மேல் சுவர்கள் என காலத்தால் அழியா வண்ணம் பழமையின் அழகுடன்  விளங்குகின்ற வீடுகளில் தான் தற்போதும் வசித்து வருகின்றனர். கால சூழலுகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்படுத்தியிருந்தாலும் பழமையின் எளிமையான அழகால் வீடுகள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.                                                                                                                                                                      
  அன்றைய தினம்    நெல்லை ஜானகி ராம் உணவக அதிபரால் நெல்லை புகைப்படகுழுவின் லோகோவும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாரியப்பன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன் அவ்வீட்டு பாட்டிகளை வைத்து  கேக் வெட்டி உண்டு அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டோம். விடுமுறைக்காலம் என்னதால் உறவினர்களால் நிறைந்து வழிகின்றது அவர்களுடைய வீடுகள்.   குழந்தைகளும் பெரியவர்களுடன் இணைந்து விருந்தினரை உபசரிக்கின்றனர் என்பது இனிமையான காட்சியாக இருந்தது.                                                                                                                                                                                                                                                                                இயற்கை விவசாயத்தில் அக்கறை கொண்டிருக்கும் ராம் குமார் அவர்கள் தங்கள் தோட்டத்தில் வைத்திருக்கும் தேனி வளர்ப்பு முறை பற்றி விவரித்தார். தேனிகள் அழிந்தது தான் நம் விவசாய சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறினார். பூச்சி விரட்டியே தேவை,  பூச்சி கொல்லிகள் அல்ல இவை  இயற்கையை அழிக்கவே உதவும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு குடும்பவும் தங்களுக்கான உணவு காய்கறிகளை உயிர்கொல்லிகள் தளிக்காது பயிறிட வேண்டிய  தேவையை பற்றியும் குறிப்பிட்டார்.  எங்கள் நோக்கத்தை உற்சாகப்படுத்தியதுடன் எங்களை சிறப்புற கவனித்து  அவருடைய குடும்பத்தார் சிறப்பாக அக்குடும்ப குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.  
மே தினத்தை உழைப்பாளிகளுடன் செலவிட்டதை எண்ணி மகிழ்ந்து திரும்பினோம். 

30 Apr 2015

பாலி 9 ! Bali Nine!


Image result for myuran sukumaran painting
பாலி 8 குற்றவாளிகளுக்கு இந்தோநேஷியா அரசு நிறைவேற்றிய தண்டனை உலக மனசாட்சியை  உலுக்கிய கொடும் துயர் நிகழ்வாகும். மரணம் என்பது உலகில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவானது என்ற உண்மை ஒரு புறம் இருக்க அம்மரணத்தை சில மனிதர்களுக்கு தண்டனையாக கொடுத்து தங்கள் அதிகாரத்தை நியாயத்தை நிறுவியது ஏற்று கொள்ள தகுந்தது அல்ல. தன் இள,ம் வயதில் புரிந்த குற்றத்திற்காக 10 வருடம் சிறைத்தணடனை பெற்ற பின்பும்;  குற்ற மனநிலையை விட்டு விலகி, தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் ஆன மிகவும் ஆக்கபூர்வமான செயல்கள் ஆற்றி  திருந்தி வாழ முடிவெடுத்த  நபர்களுக்கு தண்டனை கொடுத்தது மிகவும் கண்டிக்க தக்கது.

அதில் ஒருவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழர் என்பதால் அவருடைய உடல் மொழியில் இருந்து புரிந்து கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தான் எதிர் கொள்ள வேண்டிய மரணத்தை மிகவும் மனம் நொறுங்கிய நிலையில்  ஏற்றுகொண்டு தன் நண்பர்களுக்கும் தாயார், உற்றார் உறவினர்களுக்கும் விடை கொடுத்து கொடிய மரண வேதனையுடன் மரணதண்டனையை ஏற்று கொண்ட நிகழ்வு 2000  வருடங்களுக்கு முன் சிலுவை மரத்தில் கொல்லப்பட்ட யேசுவில் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவுப்படுத்தியது. மனிதன் அடிப்படையில் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை. சக மனிதனை கொன்று இன்பம் காணும் மனநிலையில் தான் இருபதாம் நூண்டாண்டிலும் உள்ளான்.( மயக்கு மருந்து கடத்தினவர்களை யேசுவுடன் ஒப்பிடுவதா என்ற விவாதம் இங்கு தேவையில்லை. மனிதம் ஏதோ ஒரு வகையில் காலாகாலாமாக கொல்லப்படுகின்றது என்றே சொல்ல வந்துள்ளேன்). குற்றவாளிகளை அல்ல குற்றத்தை வெறுப்பதே மனிதநேயம் , அனைத்து மதங்கள் போதிப்பதும். .
Bali Nineஇந்த இளைஞர்கள்  மற்றொரு மனிதனின் உயிரை எடுக்கவில்லை. இன்னொருவன் சொத்தை அபகரிக்கவில்லை.  விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற அளவுக்கதிகமான பேராசையால் இவர்கள் தேர்ந்தெடுத்தது மோசமான வழிக்கு கிடைத்த தணடனையோ அதையும் விட மனித மனசாட்சியை வெட்கப்படவைத்த தண்டனை முறை ஆகும்.
மயூரன் சுகுமார் என்பர்  ஒரு சிறந்த உழைப்பாளி, தலைமை பண்பு கொண்டவர் என்பதை அவருடைய  கடந்த 10 வருட சிறைச்சாலை வாழ்க்கை அனைவருக்கும் எடுத்து காட்டியது. சிறைச்சாலையிலும் வியாபாரம், கலை, கல்வி சார்ந்த சேவைகள் புரிந்து  சக மனிதர்களுக்கு உதவும் பண்பிலே இருந்துள்ளார். பொதுவாக குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்பு கொள்வதில்லை. இவரோ தன் குற்றத்தை ஏற்று தன் வாழ்க்கையை திருத்தி வாழ்ந்த  ஈர இதயம் கொண்ட மனிதராக தான் வாழ்ந்து வந்துள்ளார்.. “நான் என்னை பற்றி மட்டுமே நினைத்திருந்தேன். இப்போது அப்படியல்ல, என்னை வாழ அனுமதியுங்கள் எனக்கு இன்னும் நிறைய விடையங்கள் சிறைவாசிகளுக்காக செய்து முடிக்க வேண்டியுள்ளது என்று தன் உயிருக்காக கெஞ்சியும் எந்த காதுகளும் கேட்டு கொள்ளவில்லை.. தன் மன போராட்டத்தை தன் ஓவியங்கள் ஊடாகவே வெளிப்படுத்தியிருந்தார். கொலைக்களத்திற்கு கொண்டு போகும் முன் அவரின் கடைசி பார்வை ஒவ்வொரு இதயத்தையும் ஊடுருவி தாக்க செய்வது.  சட்டம் என்ற பெயரில் உன்னதமாக வாழ முடிவு செய்த ஒரு மனிதனை கொன்று போட்டது. அவர் தாயார் சகோதரி சகோதரன் துயர் சொல்லி மாளாதது. 
Image result for mayur sugumaran painting workசீன வம்சாவளியை சேர்ந்த சான் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து கொண்டவர். இறை சேவையில் தன்னை இணைத்து கொண்டு தன் வாழ்க்கை மிகவும் மோசமான முன்னுதாரணம் என தன் வாழ்க்கையை பள்ளி குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் ஆவணப்படமாக எடுக்க அனுமதித்தார். தான் வந்த வழியில் இளம் தலைமுறை வரக்கூட்டாது என்று எண்ணினவர். இப்படியாக ஒவ்வொருவரும் இளம் மனிதர்கள். ஏதோ வகையில் திருந்தி வாழ முடிவு செய்தவர்கள்.
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்வதை போன்றே அவனை காப்பாற வேண்டிய அரசே  திட்டமிட்டு மிகவும் கொடூரமாக மனிதர்களை படுகொலை செய்ததை எந்த வகையிலும் நியாயபடுத்த இயலாது. இந்த 8 மனிதர்களை படுகொலை செய்ததால் மயக்கு மருந்து விற்பனை அழியாது என அரசுக்கு தெரியும்.

இந்த மயக்கு மருந்து வியாபாரம் பல நாடுகளின் உதவியுடன் தான் நடைபெறுகின்றது. .மயக்கு மருந்து என்பது அவரவர் தேர்வு. தனிநபர்களால் குடும்பங்களால் தீர்க்க வேண்டிய உலகலாவிய பிரச்சினை இது.  இந்த சமூக அமைப்பில் நிலவும் பணம் பற்றிய மனிதனின் மனநிலை மாற வேண்டும்,  அந்த வியாபார கண்ணிக்குள் நுழைவது மனிதனின் மனநிலை தான்

வருடம் தோறும் 30 ஆயிரம் பேர் மயக்கு மருந்து கடத்தல் விற்பனை என்ற குற்ற செயல் புரிவதாக கைது செய்யப்படுகின்றனர். இதில் 32% குற்றவாளிகள் அமெரிக்கா தேசத்தை சார்ந்தவர்கள். அமெரிக்கா அரசாங்கம் மயக்கு மருந்து கடத்தலை தடுக்க வேண்டும் என 1970 துவங்கியே திட்டம் தீட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் உளவாளி அமைப்பு மயக்கு மருந்து வியாபாரத்தில் உள்ளது என அந்நாட்டு எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பொதுவாக பல நாடுகளில் தங்கள் இளைஞர்கள் கேள்வி கேட்கா மடைமை குடிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்களே மறைமுகமாக மயக்கு மருந்து போன்ற போதை பொருட்கள் பயண்படுத்த மறைமுகமாக உதவது உண்டு என பல சமூக ஆவலர்கள் குற்றசாட்டியுள்ளனர். இந்தியாவில் சீக்கிய இன இளைஞர்களுக்கு மயக்கு மருந்து தடை இல்லாது கிடைக்க அரசு உதவுகின்றது என எழுத்தாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே போல் மிசோராம் போன்ற மாநில இளைஞர்களும் திட்டமிட்டு மயக்க நிலையில் வைத்துள்னர் என்ற குற்ற சாட்டும் உள்ளது. இது இந்தியாவின் நிலை!



மயக்கு மருந்து பயன்பாட்டாளர்கள், வியாபாரிகள் அவர்களுக்கு உதவும் கடத்தல்காரர்கள் மற்றும் உற்பத்தி செய்கின்றவர்கள் என மூன்று நிலைகள் சேர்ந்து ஒன்றாக இயங்குவது தான் மயக்கு மருந்து உலகம். உற்பத்தியை தடை செய்தால் தான் அதன் வியாபாரிகளும் /ஏஜன்றுகளும், பயன்பாட்டாளார்களும் மறைய வழியுண்டு. உற்பத்தியாளர்களை விட்டு விட்டு கடத்தலுக்கு உதவும் குருவி போன்றோரை தண்டிப்பது ஒரு வகையில் அநீதி தான்.
மயக்கு மருந்து கடத்தலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடாகும் மெக்ஸிக்கோ. இங்கு 2006 முதலுள்ள  காலயளவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மயக்கு மருந்து சார்ந்த வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர்..
பெரு நாட்டில் 60, ஆயிரத்தி 400 ஹெக்டர் நிலைத்தில் கொகா பயறிடுகின்றனர்  கொளம்பியாவில் ஆகட்டும் 1,63,000 ஹெக்டர் நிலத்திற்கு மேல் மயக்கு மருந்து பயிறிடுகின்றனர்,  99% கஞ்சா போன்ற மயக்கு மருந்து ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தியாகின்றது. அமெரிக்காவின் கட்டுபாட்டிலும் உற்பத்தியில் எந்த குறைவும் இல்லை என்பது தீவிரவாத ஒழிப்பு என்பது கூட மயக்கு மருந்து வியாபாரத்தை மறைக்கும் முகமூடியோ என சந்தேகிக்க உள்ளது. கொக்கய்ன் பயிறுடுவதில்  போல்வியா  உலக அளவில் முன் நிலையில் உள்ளது. பர்மாவிலும் மயக்கு மருந்து பயறிடப்படுகின்றது. நாட்டின் வருமானத்தை வளப்படுத்துவதால் இதன் உற்பத்தியை நிறுத்த எந்த நாடுகளும் முன் வருவதில்லை.  இப்படியாக சில நாடுகள் உற்பத்தியை நம்பி இருக்கும் போது இந்தியா மெக்ஸிக்கோ, க்யூபா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடத்தல் பொருள் விற்பனை தளங்களாகவும் விளங்குகின்றது.




நம்ம ஊரில் அரசே டாச்மார்க் கடை வைத்து விட்டு நாடு முழுக்க கிட்னி மருத்துவ மனைகள் மற்றும் காப்பீடுகள் தந்து ஏழைகளுக்கு உதவுவது  போல் நாடகமாடுவதை கண்டு வருகின்றோம். அதே போல் பிளாடிக் விற்கும் கடைக்காரர்களை தண்டித்து விட்டு உற்பத்தியாளர்களை விட்டு வைத்திருக்கும் அரசியலும் நாம் கண்டதே. உற்பத்தியை நிறுத்தாது விற்பனையை அழிக்க இயலாது. விற்பனை இருக்கும் மட்டும் பயணாளர்கள் இருக்க தான் செய்வார்கள். விற்க ஏஜன்றுகளும் இனியும் வரத்தான் போகின்றனர்.


Ben Quilty greets Myuran Sukumaran's family at the I Stand For Mercy concert and vigil for Bali Nine death row inmates Myuran Sukumaran and Andrew Chan, at Martin Place in Sydney, on January 29உலக மக்களின் பார்வையை திசை திருப்ப அல்லது நாடுகளின் பணப்பேராசையை மறைக்க இது போன்ற தனி நபர்களூக்கு தண்டனை வழங்கி சட்டம் விழித்திருப்பது போல் காட்டி கொள்ளலாம்.  எளிதில் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தில் இருந்து இளம் தலைமுறையை திசை திருப்புவது வழியாக தான் இந்த குற்ற செயலில் ஏற்படுவதை தடுக்க இயலும். இது போன்ற கொடிய மரணம் மேலும் நடக்காது இருக்கட்டும் தண்டனை என்பது மனிதனை திருத்த அல்லாது அழிக்க அல்ல என்று அதிகாரம் படைத்தோர் உணரும் காலம் மட்டும் இது போன்ற சோகங்களுக்கு சாட்சியாகத்தான் நாம் இருக்க உள்ளோம். இந்த வ்வொரு குற்றவாளிகளை மட்டுமல்ல அவர்கள் பெற்றோர்கள் நண்பர்கள் என பல மக்களை கொலை செய்துள்ளது இந்தாநேஷ்யா அரசு. மரண தண்டனை ஒழிய வேண்டும் என மனித நேயர்கள் குரல் மறுபடியும் உயர்ந்துள்ளது.  மொழி இனம் கடந்து  மரண தண்டனை என்பது ஒழிக்க வேண்டியது இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என நாம் நிச்சயமாக கூறலாம். பல இன்னல்கள் வருத்தங்கள் சோகங்கள் மத்தியிஉம் அவர்களுக்கு என குரல் உலகின் நாலாப்பக்கம் இருந்து எழுப்பபட்டது. பாலி 9 குற்றவாளிகளின் ஆத்ம சாந்தியை நாடி கனத்த மனதுடன் நம் அஞ்சலியை செலுத்த கடமைப்பட்டுள்ளோம். 

27 Apr 2015

விடலைப்பருவ குழந்தைகளும் பெற்றோர்களும்!

சமீபத்தில் வாசித்த புத்தகம் பதின்பருவ குடும்ப பக்கங்கள்! Adolescent Psychology நெல்லையிலுள்ள மாக்தலின் பள்ளி மாணவர்களின் கருத்துக்களை  பாளை தூய சவேரியார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை  தலைவர்  அருட் தந்தை சேவியர் ஆண்டணி மற்றும் பள்ளி தாயாளர் முனைவர் க செல்வராஜ்  அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட புத்தகம் இது.   மாணவர்களை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பார்வையில்  உருவாக்கப்பட்ட புத்தகம். இப்புத்தகம் மாணவர்கள் மனநிலையை அவர்கள் சந்திக்கும் சவால்களை பிரதிபலிக்கின்றது.     தாங்கள் ஆசைப்படுவது எல்லாம் கிடைக்க வேண்டும் என குழந்தைகள் ஆசைப்படுகின்றனர். தங்களை படிக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது என விரும்பும் சிறுவர்கள் தங்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். சில இடங்களில் குழந்தைகள் அதீத சுயநல உலகில் பயணிக்கின்றனரா என எண்ணும்  போது நம் குழந்தைப்பருவத்தை நினைத்து பார்க்கும் போது அதுவே இயல்பு எனும் விளங்குகின்றது.                                                                                                                      பெற்றோரின் மனநிலை தான் சில இடங்களில் நம்மை நிலைகுலைய செய்கின்றது. குழந்தைகளில் ஆளுமையை புரிந்து கொள்ளவில்லை.  அவர்களும்  தங்களை போன்று ஒரு தனித்துவமான மனிதர்களாக பார்க்க தவறுகின்றனர். தங்கள்  பிள்ளைகள் என்ற ஒரே காரணம் கொண்டு அவர்களை அடிமை என எண்ணுகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேற்ற கிடைத்த ஆயுதமாக நினைக்கின்றனர்.  தவறும் செய்யும் குழந்தைகளை மிகவும் வன்மையாக தண்டிக்கின்றனர்.   தன் தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளை அடிக்கின்றனர் பல மணி நேரம் திட்டுகின்றனர் ஏன் பல நாட்கள் கூட பேசாது இருந்து அவர்களை அடி பணிய வைக்கின்றனர்.                                                                                  குழந்தைகளை படிக்க வைப்பது மட்டுமே தங்கள் தலையான பணி என நம்புகின்றனர். குழந்தைகளும் தூங்கும் நேரம் தவிர்த்து  படித்து கொண்டு இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இன்னும் சில வீடுகளில் பெண் குழந்தைகளிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்றனர்.                                                                                                                                                                                                                    இந்த புத்தகம் வாசித்து முடித்த போது குழந்தைகளிடம் காணும் வன்முறை குணத்தின் அடிவேர் பெற்றோரின் செயல்பாடு தான் என கண்டு கொள்ள இயல்கின்றது. இதே நிலையில் பெற்றோர்கள் தொடர்ந்தார்கள் என்றால்  குழந்தைகள் பெற்றோர் இடவெளி  மேலும் விரிவடையும் என்று மட்டுமல்ல தமிழகத்தில் மேலும் பல முதியோர் இல்லம்  வரவே அதிகம் வாய்ப்பு உள்ளது.                                                                                           பல இடங்களில் குழந்தைகளை  அவர்கள் செய்த தவறை உணரவைக்காது பணிய வைக்கின்றனர். ஒரு சிறுவன் கூறுகின்றார் "நான் ரூபாய் கேட்காமல் இருந்திருக்க வேண்டும் கொடுத்தால் மட்டும் வாங்கியிருக்க வேண்டும்".  இந்த வார்த்தைகள் என்னை மிகவும் துயர் வர செய்தது.               மற்றொரு சிறுவனின் வாக்குமூலம்   "மன்னிச்சுட்டாங்க அப்படி இல்லன்னா கால்ல விழுந்திருவேன்' .   தனது பெற்றோரை பற்றி,,, அக்காவிடம் அம்மா இன்னும் பேசவில்லை ஏனெனில் அவள் மன்னிப்பு கேட்கவில்லை   .....தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய குழந்தையும் கண்டிக்கின்றனர்  கிடைக்காத மதிப்பெண்ணை  எடுத்து கூறி.  இந்த மாதிரியான குடும்ப சூழலுகள் அன்புக்கு இடம் இல்லாது பிடிவாதம் அதிகாரம் சார்ந்து இயங்குவதாகவே பட்டது.  இந்த நவீன யுகத்தில் மாணவர்கள் இணையத்தை பயண்படுத்துவதை ஏதோ குற்ற செயல் போன்றே பார்க்கப்படுகின்றது. இவையும் தேவையற்ற மனகுழப்பத்தில் சிறுவர்களை தள்ளுகின்றது. பள்ளிக்கு பென்டிரவ்  கொண்டு வந்தனர் என்ற காரணத்தால் பள்ளியில் தண்டிப்பது பெற்றோரை வரவழைப்பது என  அவர்கள் இயல்பான வாழ்க்கையை இழந்து கண்காணிப்பில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர்.   புத்தகத்தின் கடைசி பகுதியில் சிறுவர்களின் ஆசை விருப்பம் நோக்கம் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த உலகை பரிவுடன் அக்கறையுடன் நேசமுடன் நோக்குகின்றனர். இங்கு காணும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் வறுமை மாற வேண்டும் மனித இனத்திற்கு சேவையாற்ற வேண்டும் என நல்ல கனவுகளில் வாழ்கின்றனர்.                                                                    

புத்தகம் வாசித்து முடியும் போது நாம் அவர்களை சுதந்திரமாக சிந்திக்க அவர்கள் வழியில் வாழ அனுமதிக்க மட்டுமே செய்ய வேண்டியது. ஒரு வழி நடத்துதல் அனுசரணை அரவணைப்பு மட்டுமே கொடுக்க கடமைபட்டுள்ளோம்.  நம் வழியாக இந்த உலகிற்கு வந்தனர் என்ற ஒரே காரணம் கொண்டு குழந்தைகளை செயல் வார்த்தைகளால் தண்டிக்க நமக்கு உரிமை இல்லை என்று உணர வேண்டும் என்றே இப்புத்தகம் மேலும் மேலும் எடுத்த்து கூறுகின்றது.