2 Jan 2016

சென்னை பேரிடரில் பெண்கள் துயர்!


சென்னை பேரிடரில்  மிகவும் துயருற்றது பெண்கள் என்றால் பொய்யாகாது.  தமிழகத்தில் நல்ல கைநிறைய சம்பளம் கிடைக்கும்  வேலை  வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நல்ல தொழில் துவங்கி முன்னேற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நவீனமான மேன்பட்ட மனிதர்களாக மாற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர். ஏன் பல வருடங்களாக திரைப்படங்களில் கூட காட்டினதும்; காணாமல் போகும், வறுமையில் வாடும் குழந்தைகள் எல்லாம் திருட்டு ரெயிலில் சென்னைக்கு படை எடுக்கின்றனர் திரும்பி பணக்காரர்களாக சொந்த ஊருக்கு வருகின்றனர்.
சென்னை பூர்வகுடிகள் எல்லாம் கூவம் கரையிலும், சில குடிசை மாற்று வாரிய கட்டிடங்களிலும் சென்னை ஒதுக்கு புறங்களிலும் முடக்கி வெளிமாநிலத்தில் இருந்து புகுந்த மக்களுக்காகவே சென்னை மாற்றப்பட்டு குடியிருப்புகளால் நிரம்பி வழிந்து நெல்லை, தூத்துக்குடி, கோயில்பெட்டி மற்றும் வெளிமாநில குடியேறிய மக்களால் நிலை பிதுங்கி இருப்பதே இன்றைய சென்னை என்று காணலாம். சென்னைக்கும் நெல்லைக்கும் போய் வரும் பேருந்துக்கள் நிதம் நிதம் நிரம்பி வழிந்தே பயணிக்கின்றது. 2000 ஆண்டில் பிபிஓ போன்றா பன்னாட்டு நிறுவனகளில் படையெடுப்புடன் தமிழகத்திலுள்ள பட்டதாரி  இளைஞர்களில் வாழ்கை இடமும் சென்னையாக மாறியது.

சென்னையில் இருப்பவர்கள் வாழ்விடமாக சென்னையை கொண்டிருந்தாலும் அவர்கள் ஊர் பாசம் நேசம் எல்லாம் சொந்த ஊரிலே இட்டு  வந்திருப்பார்கள். சென்னை பொறுப்பின்மை வாழ்க்கைக்கு இந்த மனநிலையே பெரிதும் காரணமாகின்றது.

சென்னையில் வெள்ளப்பெருக்கு என்பது புதிதல்ல. ஒரு இரு தினம் மழை பெய்தாலே கோயமேடு போகும் பாதை எல்லாம் தண்ணீரால் சூழ்ந்து விடும்.நடைபாதை கூவம் வாசிகள் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குவதும் அவர்கள் மழை முடிந்ததும் சகஜநிலைக்கு திரும்புவதையும் யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. ஆற்றைக்கரையில் வீடு இருந்தால் தண்ணீரில் மூழ்கத்தான் செய்யும் என்ற பொதுஜன நீதி இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதம் மாடிவீடுகள் மூழ்கின போது அது சென்னையில் பேரிடராக மாறியது.

 முதல் கட்டமாக  வெள்ளம் புகுந்து சகஜநிலைக்கும் திரும்பும் வேளையில் தான், வீடு மூழ்கும் வண்ணம் வெள்ளம் புகுந்து  அடுத்த சில நாட்களில் மக்களை கலக்கமமுறச்செய்தது.

நெல்லைபோன்ற ஊர்களில் இருந்தும் குடியேறி  ஒரு தலைமுறையாக சம்பாதித்து சேகரித்த கட்டில்,மேஜை, பிரிட்ஜ், சலவை இயந்திரம் , தொலைக்காட்சிப்பெட்டி என எதை எடுத்து எங்கு வைத்து பாதுக்காப்பது என்ற நிலையிலும் உயிரை காப்பாற்ற இயலுமா என்ற சூழலிலும் கூட உறவினர்களை சென்றடைய, பிறந்த வீட்டிற்கு செல்ல தயங்கி இருந்துள்ளனர் பல பெண்கள்!. கடைசி நேரத்தில் ஒன்றையும் பாதுக்காக்க இயலாத சூழலில் தான் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

 மீட்பு பணியில் இருந்த நபர் கூறுகின்றார்  தண்ணீர் இடுப்பளவு வந்த பிறகும் "நான் வீட்டை விட்டு வர மாட்டேன், சொந்த ஊரில் மாமியாரிடம் போகவில்லை" என்ற அடம் பிடித்திருந்த பெண்கள்  இருந்துள்ளனர். . அதிலும் வாடகவீடுகளில் தன் கணவரின் உழைப்பை மட்டுமே நம்பி இருந்த பெண்கள் சொந்த ஊருக்கு  வர முற்றிலும் விரும்பவில்லை.. அவர்களை மீட்பு குழு வந்து மனம் மாற்றி போட்டுகளில் அனுப்பும் நேரம் உள்ளாக வீடு கூரையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


பிள்ளைகள் வெளிநாட்டிலும் பெற்றோர்கள் மட்டுமே வசித்து வந்த பல வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வயதானவர்கள் கணக்கில்லாது மரணமடைந்துள்ளனர். சிலர் உணவு வாங்கி வர இயலாது 3-4 நாட்கள் பட்டிணியில் கழித்துள்ளனர். சிலரோ தன்னார்வலர்களால் கொடுக்கப்பட்ட உணவுகளை கூட வாங்க தன்மான உணர்வால் மனமிழந்து இருந்துள்ளனர். உறவினர்கள் தங்களை தொலைபேசியில் கூட அழைத்து விசாரிக்கவில்லை என்ற மனக்கசப்பிலும்  இருக்கின்றனர்.

 வெள்ளத்தில் போனாலும்  பறவாயில்லை எல்லாம் இழந்து சொந்த வீடுகளுக்கு திரும்ப மனம் கொள்ளாதிருந்தது நம்மை சிந்திக்க வைக்க வேண்டியுள்ளது.   பல குடும்பங்கள்; தங்கள்  வீட்டில் வெள்ளம் புகுந்ததும் மேல் மாடி வீடுகளிலும் மொட்டை மாடிகளிலும் பொழுது கழித்தனர். இருப்பினும் துணிந்து உறவினர்கள் வீட்டிற்கு வர விரும்பவில்லை, அதை தன்மான இழுக்காகவே எண்ணினர். சிறு குழந்தககளை வைத்துள்ள  தாய்மார்களும்  எந்த வழியுமற்று வீடு வந்தார்களே ஒழிய யாரும் நிச்சயமாக நிம்மதியாக வீடு வரவில்லை. உயிர் போனாலும் சொந்த பந்தங்கள், பிறந்த வீடு, புகுந்த வீடு செல்ல தயங்கினர் என்பதே போகிற போக்கில் நாம் எடுத்து கொள்ள வேண்டிய சம்பவமல்ல. ஒரு பக்கம் வெள்ளம்  மறு பக்கம் பேய் என்ற நிலையிலும் தாங்கள் சார்ந்த குடும்பங்கள் மேல் நம்பிக்கை அற்ற நிலை வருந்த தக்க சமூக சூழல் என்றும் அறிய வேண்டியுள்ளது.  



தென் தமிழகம் ஒரு வகை மனப்பிளர்வுடன் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.   நெல்லை போன்ற ஊரிலுள்ள ஓரளவு  வசதியான பெற்றோர்களின் ஒரே விருப்பம் பிள்ளைகளை சென்னையில் படிக்க வைப்பது, சென்னையில் வேலை வாங்குவது அல்லது வெளிநாட்டிற்கு அனுப்புவது அல்லது அரசு வேலை பெறுவது என்பதாகும் . உள்ளூரில் இருப்பது என்பது அவமானமாக கருதுகின்றனர்.  பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக்கழிக்க மட்டுமே விரும்புகின்றனர். எந்த பெற்றோரும்  குழந்தைகளுடன் இருக்க வேண்டும் அல்லது  பிள்ளைகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இவர்கள் போன்ற பெற்றொருக்கு சென்னை வரபிரசாதமாக அமைகின்றது. தமிழகத்திலே பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பூரிப்புடன் "பிள்ளைகள் சென்னையில் உள்ளனர்" என்கின்றனர்.  இதனாலே எந்த நிறுவங்களும் உள்ளூரை சுற்றி வளர்வதில்லை. சென்னையை நோக்கிய தமிழக மக்கள் நகரும் மனப்பாங்கில் உள்ளனர்.

. பல பெற்றோர்களுக்கு கோடிகள் வரதட்சனைகள்  பெறவும் சென்னை வேலை  உதவுகின்ர்றது. உள்ளூரில் பல கட்டுப்பாடுகள் குடும்ப கவுரவத்தில்  வளக்கும் பெண் குழந்தைகளை; எந்த நிபந்தனை இன்றி  சென்னையில் வேலை என்றது  அனுப்பி விடுகின்றனர். அங்கு அவர்கள் வாங்கும் சம்பளம் பற்றியோ, தங்கும் விடுதி பற்றியோ, அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை பற்றியோ சிறிதும் வருந்துவதில்லை சிந்திப்பதும் இல்லை. வேலை பார்க்கும் பிள்ளைகள் சென்னை சரவணாசில் இருந்து வாங்கி வரும் பொருட்களை எண்ணியும் அவர்கள் வரும் கார்களை எண்ணி மட்டுமே மகிழ்சி கொள்கின்றனர்.


இச்சூழலில் தான் தங்கள் உறவினர்கள் பெற்றோர் மனநிலையை எண்ணி பேரிடர் வேளையிலும் சென்னை தண்ணீர் கழுத்தளவு வரும் மட்டும் சென்னைக்குள்ளே இருக்க துணிந்துள்ளனர் .

சமீபத்தில் சந்தித்த பல நெல்லை பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் முகம் கொடுத்த, எதிர் கொள்ள வேண்டிய துயர் தெரியவில்லை, தெரிந்ததாக காட்டி கொள்ள தயங்குகின்றனர். ஏழைகள் தான் வெள்ளத்தில் துயருற்றது போல் அடுத்தவர்களை காட்டி கதை விட்டு கொண்டிருக்கின்றனர். ஏழைகள் ஏற்கனவே பட்டு அளுந்திய நிலையில், இந்த மழையில் இருந்து மீள நடுத்தர மக்களுக்கு இன்னும் பல வருடங்கள் பிடிக்கும். இவர்களுக்கு  அரசின் எந்த உதவியும் வந்து சேரப்போவதில்லை. கடன்  வாங்கி கட்டின  வீட்டின் கடன் கட்ட வேன்டும்; இணய மின்சார தண்ணீர் பில் கட்ட வேண்டும். தங்கள் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளி கட்டணத்திற்கு எந்த சலுகையும் கிடைக்க போவதில்லை. ஒரு சாதாரண நிலையில் வாழக்கூட தங்கள் மாத சம்பளத்தை மறுபடியும் சேகரித்து தூங்க கட்டில், இருக்க கதிரைகள், சாப்பிட சாப்பாட்டு மேசை, விருந்தினரை உட்கார வைக்க சோபா, இழந்த கார், இருசக்கிர வாகனம்  என எல்லாம் ஒன்றே என்று துவக்கம் முதல் சேர்க்க வேண்டியுள்ளது. அரசின் மிக்ஸி, தொலைக்காட்சி பெட்டி, காத்தாடி இயந்தரம் ஒன்றும் இவர்களுக்கு கிடைக்க போவதில்லை, இவர்களால் பயண்படுத்தவும் இயலாது. இதன் மத்தியில் பெற்றோரின் பெருமை தம்பட்டமான பேச்சுக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.

தென் தமிழகத்தில் எவ்வளவு படித்திருந்தாலும் எத்தனை லட்சம் கொண்டு வந்தாலும் மருமகள் என்பவள் பல பொழுதும் வீட்டு வேலைக்காரிக்கு நிகரே. இச்சூழலில் மருமக்களின் நிலை இன்னும்  பல படி  குறைத்து தான் தெரியும். இது போன்ற சூழலிலும் மாமியார் நையாண்டிக்கு பயந்து உயிரையும் மதிக்காது பேரிடரில் மிதந்த பல பெண்கள் நிலைக்கு எந்த அரசாலும் இழப்பீடு வழங்க இயலாது. 

2 comments:

  1. ச்கோதரி தென் தமிழகம் என்றில்லை, பல ஊர்களிலுமே இதே நிலைதான். எனக்கு தெரிந்து தமிழகத்தில் வேறு பாசைகள் பேசும் மிகப் படித்த சாதி மாக்களிடம் கூட இதே நிலைதான் உள்ளது. ஒரு விசயம் தான் எனக்கு புரியவில்லை! எல்லா மாமியாருமே ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர் தான் ஆனாலும் மருமகளின் உரிமையை தர மறுப்பது ஏனோ?!

    ReplyDelete
  2. போலித்தனமான கௌரவத்துக்காக வரதட்சணை என்ற கப்பம் கொடுத்து பெற்றுக் கொள்ளும் வாழ்க்கை, வெள்ள அழிவின் போது எப்படி எல்லாம் பாதிப்புறுகிறது என்பதை விளக்கும் சிறந்த பதிவு.

    ReplyDelete