17 Dec 2015

திருமணங்களை அலங்கோலப்படுத்தும் அம்மாக்கள்!


இன்றைய பல திருமணங்கள் சொர்கத்திலா அல்லது பணத்திலா நிர்ணயிக்கப்படுகின்றது என்ற விவாதங்களுக்குள் செல்லவில்லை.  ஆனால் பல லட்சம் செலவில் நடத்தப்படுகின்றது. "பல்லுள்ளவன் பட்டாணி சாப்பிடலாம்" என்ற நியதிக்கு இணங்க  பணம் இருப்பவர் செலவழிக்கின்றனர் என்று  சாப்பிட்டோமா பரிசை கொடுத்தோமா மணமக்களை வாழ்த்தினோமா  நாலு சொந்தக்காரங்களை பார்த்து பேசினோமா  என்று வந்து விட வேண்டும் 

பல திருமண வீடுகளில் ஆளுயர போஸ்டர், புகைப்பட-வீடியோ கவரேஜ், வெடி இடுதல், அருச்சுவை உணவு, திண் பண்டம் பரிமாறுதல் என தேவைக்கும் தேவைக்கு அதிகமாகவும் பல லட்சம் செலவிடுகின்றனர்.

சினிமா தொலைக்காட்சி தாக்கம் நிறையவே உள்ள இளம் தலைமுறையினர் தங்கள் திருமணத்தை சிலுமா காட்சி போன்றே நடத்த ஆர்வம் கொள்ளுகின்ரனர். இது போன்ர தலைமுறைக்கு என்றே ஆயிரங்கள் துவங்கி பல லட்சம் கட்டணம் செலுத்தி  திட்டமிட்டு திருமணத்தை நடத்தி தரவும் ஏஜன்சிகள் உள்ளனர்.  மணப்பெண் மட்டுமல்ல மணமகனுக்கும் மேக்கபிற்கு பல ஆயிரங்கள் தயங்காது செலவிடுகின்றனர். ஒரு  தாய் பெருமையாக கூறினார் அவர் மகளுக்கு  விளம்பரத்தில் வரும் பட்டு உடை உடுத்த வேண்டும் என்று  ஆசைப்பட்டதால் 50 ஆயிரம் விலை உள்ள சேலையை தயங்காது வாங்கி கொடுத்துள்ளனர். பெண்ணுக்கு அத்துடன் ஆங்ல மணப்பெண் அணியும் கவுண் அணிய வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது. அதையும் பல ஆயிரங்கள் கொடுத்து  வாங்கி அணிவித்துள்ளனர்.  எதற்கு இந்த ஆடம்பரம் என்று கேட்கும் நிலையில் பெற்றோரும் இல்லை, அநாவசிய செலவுகள் வேண்டாம் என்ற மனநிலையில் இளம் தலைமுறையும் இல்லை.  இன்றைய நிலையில் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையே ஓங்கி நிற்கின்றது.

விளம்பரத்தில் நடிகர்- நடிகைகள் போன்று அவர்கள்  தோற்றத்திற்கும்  ஆடம்பரங்களுக்கு முக்கியத்தும் கொடுத்தே திருமணம் என்ற வைபவத்தை காண்கின்றனர். 

ஆனால் இவ்வளவு செலவழித்து செய்யும் திருமணங்கள் மணமக்களின் தாயார்களால் நாசமாவதை காணும் போது வருத்தம் அளிக்கின்றது. 

ஆத்தாவுக்கு, தான் பெற்ற மகள், மகன் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா அல்லது மகள்/மகன் தன் ஆளுகை எல்கையை விட்டு கடக்க போகிறார் என்ற சிந்தனையா என தெரியவில்லை. தாய்மார்கள்  மூக்கை சீந்தி சீந்தி அழுது கொண்டிருப்பார்.  தான் பெற்று வளர்த்தின அத்தனை கடமை பாச உணர்வையும் வியாபாரம் பார்க்க துணிந்து கொண்டிருப்பர்.  மன மேடையிலே மகல் தன் விருப்பம் சார்ந்து இயங்க வேன்டும் என்ற பிடிவாதத்தில் எடுக்கும் நடவடிக்கையை கண்டு உணரலாம்.  அவ்வப்போது முத்தம் கொடுப்பது போல் அருகில் சென்று மகளுக்கு தன் உபதேசத்தை அள்ளி வழங்கி கொண்டு இருப்பார்.   

ஒரு வேளை உணர்வு பெருக்கால் அழகை வருகிறது என்றால் தாய் தள்ளி மகள் பார்க்காது அழ வேண்டும்.  ஆனால் இன்றைய பல பெண்களை பெற்ற தாய்கள் ஆதிக்க மனநிலையுடன் அல்லாடுகின்றனர். கணவர், பிள்ளைகள் பின்பு மருமகன் என அனைவரும் தன்  அதிகார எல்கைக்குள் அடிமைகளாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றர். இதர்கு இவர்கள் எடுக்கும் ஆயுதவும் அன்பு , பாசம் என்ற ஆயுதம் தான்.

பெற்றவர்கள் தங்களுக்காக முறைகளை செய்து விட்டு ப்ர்த்துபிள்ளைகல் மகிழ்ச்சியை அருகில் இருந்து கவனிப்பதும் மகிழ்வதும் தான் சிறந்தது.  . மண மேடைக்கு பெண்னை அழைத்து வருவது ஆலையத்திற்கு அழைத்து செல்வது என பெண்ணின் தாயை பெண்ணுக்கு அடுத்த படியாக நின்று வீடியோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  மாமா, சித்தி, பெரியாப்பா பிள்ளைகள் அத்தை சித்திகள் என எந்த உறவுகளும் திருமண மேடையில் காண்பதில்லை. பெண் பெற்றோரோ ஆண் பெற்றோரோ வருபவர்களை வரவேற்க மெனக்கெடுவதில்லை. வீடியோ பல லட்சம் செலவில் எடுப்பதால் எல்லா படங்களிலும் தாங்களும் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் மேடையில்  பிடிவாதமாக நிலை கொண்டு விடுகின்றனர்.  


இந்த சூழலில் தான் அழகாக நடக்க வேண்டிய திருமண வைபவத்தை பெண் அம்மாக்கள் அழுகை கச்சேரியாகவும் மாற்றுகின்றனர்.  புதிய குடும்பத்திற்கு தனியாக செல்லும் மகளை தேற்றி அனுப்புவதை விடுத்து,  அழுது கொண்டிருக்கும் தாயாரை தேற்றும் அவருடைய சொந்த பந்தங்களை காண்கின்றோம்.

இது அம்மாக்களின் பாசத்தில் பிரதிபலிப்பு என்று நாம் தப்பாக எடை போட்டு விட இயலாது. தன் ஆளுகையை தன் கணவர் தன் பிள்ளைகள் என்ற நிலையில் இருந்து பெண் எடுக்கும் சம்பந்தக்காரர்கள் வீட்டையும் ஆளுகைக்கு உள்ளாக்கும் தந்திர செயலாகும்.  மகள் அம்மாவின் பாச அழுகையை கண்டு புகுந்த வீட்டில் இருக்க நிலை கொள்ளாது பிறந்த வீட்டிற்கு ஓட எத்தனித்து கொண்டிருப்பார்.  இந்த சூழலில் மாமியார் ஏதாவது கருத்து தெரிவிக்கவோ தன் உணர்வை வெளிப்படுத்தவோ நினைத்தால் பெண்ணை பெற்றோர் இது தான் தக்க நேரம் என்று மகளுடன் மருமகனையும் தன் வீட்டு முதலாக்கி விடுவார்கள். சில போது ஒத்து கொள்ளாத மருமகனிடம் இருந்து மகளை பிரிக்கவுக்ம் தயங்குவது இல்லை. 

இன்று பல திருமணங்கள் நடந்து ஒரு வருடத்திற்கு உள்ளாகவே பிரிந்து விடுகிறதின் ஒரு முக்கிய காரணம் பெண்ணின் தாயாரின் தலையீடும் காரணமாகின்றது.  அம்மாக்கள் மகளிடன் இருந்து தொலைபேசி வழியாகவே தினச்செய்திகளை பெற்று விடுகின்றனர். பல மைலுக்கு அப்பாலிருந்தே மகளை கட்டுப்படுத்த,  மகளும் புகுந்த வீட்டு ஜனங்களை ஒரு வித எதிரி மனநிலையில் பார்க்க  கற்று கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  

இன்றைய அம்மாக்கள் மகள்களை சூழலை எதிர்கொள்ளும் விதமாகவோ ஆக்கபூர்வமாக சுயமாக சிந்தித்து செயல்படவோ அனுமதிப்பதில்லை. தங்கள் கணவருடனுள்ள பிணைப்புகளை மனதில் வைத்து தன்னால் தன் மாமியாருடன் சண்டையிட்டு ஜெயிக்க இயலவில்லை, மகள் துவக்கத்தில் இருந்தே யாருடன் ஒட்டாது  சுயநலத்துடன் வாழும் மனநிலையை வளர்த்து விடுகின்றனர். பல வீட்டில் மகள்களை சண்டைக்கோழிகளாக வளர்த்தே புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். 


பெண் குழந்தைகள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக  தன் கணவருடன் கணவர் ஆட்களுடன் வாழ்வதை பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமே தாயின் கடமையாக இருக்க வேண்டும். 

தென் தமிழகத்தில் பல பெண்கள் வீட்டோடு மணம் முடித்து இருப்பதும், மணம் முடித்த பின்பு ஒரு குழந்தையுடன் தாய் வீட்டில் திரும்பி வந்தவர்கள் பலர்.  இதன் மூல காரணம் பெண்ணை பெற்ற தாயாகத்தான் இருக்கும்

பல வீடுகளில்\ காலை பத்து மணிக்கு சென்றால் கூட அவர்கள் பெண் குழந்தைகள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள்.   தாய் அப்படியே பாசப்பெருக்கில் பொங்கி கொண்டு கூறுவார்கள் "போவுத வீட்டில் எப்படியோ நான் அப்படியே என் பொண்ணே தூங்க விட்டிருவேன். அவ நிம்மதியா இங்க தானே இருக்க இயலும்" . அதே போன்று கடைகளுக்கு அழைத்து வந்து பெண் குழைந்தைகளுக்கு தேவையானதும் தேவை இல்லாத பொருட்களாக வாங்கி கொடுத்து தான் பாசமான தாயாக பாவிப்பார்கள். இது போன்ற பெண் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை சூழலில் செலவழிக்க தெரியாது   திருப்தி அற்ற வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள். 


மேலும் போகும் இடத்தில் பேசவும் பழகவும் கற்று கொடுப்பதில்லை. " நான்  வந்த இடத்தில் 20 வருடமா என் மாமியாருக்கு அடிமையா கிடந்திட்டேன் என் மககிட்டே போகும் போதே நல்லா திட்டி மாமியாரை அடக்கணும் என்று சொல்லியுள்ளேன் என பெண்ணை பெற்ற அம்மாக்கள் சூளுரைப்பதையும் அவதானத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது. 

இப்போது ஒரு பெண்ணை பெற்ற பெற்றோர் பத்து ஆண் மகனை பெற்றதிற்கு சமம் என்று கூறுவது கூட இதனால் தானோ?


3 comments:

  1. அநேக இடங்களில் இப்போது இதுதான் நடக்கிறது.பையனைப் பெற்ற அம்மாக்களின் நிலைமை பாவம்தான்போலிருக்கிறது. திருமணம் வரை அம்மா சொன்னதை அப்படியே கேட்காமல் சொந்தமாய் யோசிக்கிற மகள்களும்கூட திருமணத்துக்குப்பின் அம்மாவின் அனுபவ அறிவுரையை அப்படியே நம்பி தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்வதைப் பார்க்கமுடிகிறது

    ReplyDelete
  2. மிகவும் உண்மை. இப்போது பெரும்பாலான பெண்ணை பெற்ற தாய்மார்கள் அப்படிதான் உள்ளனர்

    ReplyDelete