1 Apr 2013

பாண்டவர்கள் வாழ்ந்த பாஞ்சாலிமேடு!


பயணங்கள் எப்போதும் சிறப்பானதும் நம் நிதம் வாழ்க்கையின் இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற்று  புத்துணற்சி தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.  நான் பிறந்த ஊர் மேற்கு தொடற்சி  மலைய்யின் அடிவாரத்தில்  நிலைகொண்டிருப்பதால் மலைகள் என் வாழ்க்கையுடன் இணைந்தவை.  மஞ்சு மலை, பட்டுமலை, என எங்கள் ஊர் பெயர்களுடன் இணைந்து இருப்பதும் மலைகளாகத் தான் இருக்கும். இந்த முறை பாஞ்சாலிமேடு என்ற மலையை தேடி எங்கள் பயணம் ஆரம்பித்தது. மலையாளத்தில் மேடு என்றால் குன்றையை குறிக்கின்றது. பாஞ்சாலி பெயர் ஒட்டி கொண்டிருப்பதால் இந்த மலையை கண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு தொற்றி கொண்டது. பாஞ்சாலி தன் கணவர்களுடன் வசித்த மலை என்பதால் பாஞ்சாலி மேடு என்று அறியப்படுகின்றது என அறிந்து கொண்டோம். .

குமளி - கோட்டயம் பாதையில் குட்டிக்கானம் என்ற இடத்தில்  இருந்து  ஐந்து கி.மீ பயணித்தால் புல்லுப்பாறை என்ற இடத்தை அடையலாம். அங்கிருந்து இடப்புறம்  நோக்கி 4 கி.மீ நெடிய குறுகிய பாதையினூடாக மேல் நோக்கி பயணிக்கும் போது  பாஞ்சாலிமேட்டை அடைகின்றோம். வழியில் வழி கேட்க கூட மனிதர்களை காண்பது அரிதே. ஐஸ் விற்பவர்கள் மட்டுமே காண இயலும். கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் உள்ளது. மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பயணம் இது. உள்ளூர் ஓட்டுனர்களின் வாகனத்தில் பயணிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும். சர்கஸ் வித்தகன் கயிற்றில் நடப்பது போலவே மலைப்பாம்பு போன்று வளைந்து நெளிந்து கிடக்கும் ரோட்டின் வழியான நம் பயணம்,  சவாலான பயணமாகத்தான் உள்ளது.

பின் நோக்கினால் இவ்வளவு தூரம் பின்னிட்டு வந்துள்ளோமா என்று மலைப்பாக  உள்ளது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பாஞ்சாலி மலை நோக்கி நடக்க ஆயத்தமானோம்துவக்கமே ஆச்சரியமாக இருந்தது. ஒரே இடத்தில் சில அடிகள் மட்டும் இடைவெளியில் இரு சமையங்களின் வழிப்பாடு தலங்கள் இயற்கையின் பாதுகாப்பில் அமைதியாக நிலைகொள்கின்றது. யேசு நாதரின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும்  வண்ணம்  சிலுவைகள் வரிசையாக பதிக்கப்பட்டு ஒரு திசை நோக்கி செல்ல அடுத்த திசையில்  ஹிந்து-ஆரிய சமய கோயில்கள் புராதன அடையாள சின்னங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. புவனேஸ்வரி தேவியின் கோயில் இங்கு காணலாம்பழைய கல்-மண் கோயில், புதிப்பித்து கட்டிய சிறு கோயில், பக்கத்தில் சிவலிங்கம், சூலம் மற்றும் பல அடையாள சின்னங்கள் என அங்கு கண்ட காட்சிகள் நம்மை வரலாற்றை  உற்று நோக்க வைக்கின்றது! பாஞ்சாலி தன் கணவருடன் இங்கு வசித்திருந்தாகவும் அவர் வணங்கிய ஆலயம், அவர் குளித்த குளம் என பல வரலாற்று சின்னங்கள் கொட்டி கிடக்கின்றன. குகையில் பீமனின் கால் தடவும் பதிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த மலை முகப்பில் கூடாரம் போட்டு ஆராய்ச்சி மேற்கொண்ட அடையாளங்களும் காணலாம். இந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் சபரி மலையில் எரியும் ஜோதியை காணலாம் என்கின்றனர். இதன் இன்னொரு பகுதியில்  பாண்வர்மேடு என்ற இடவும் உண்டு.

மேல் நோக்கி செங்குத்தான பாதையில் நடக்க  மூச்சு வாங்கினாலும் ஆட்கள் அரவம் அற்ற,  இயற்கையின் அரவணப்பில் புல் வெளிப்பாதையில் மலை உச்சியை நோக்கி  நடக்க நடக்க ஒரு வித பரவசம்  நம்மை பற்றி கொள்கின்றது. கொடும் வனத்தில்  மொட்டை புல் வெளிகளின் அழகு அலாதியானது. கையில் எடுத்தால் அரிக்கும் ஆனால் ஒருவித  வாசமுள்ள எழில் கொண்ட புல் செடியின் பூக்கள் நம் கண்களுக்கு விருந்தாகின. சுத்தமான காற்று இதமான கால சூழல் என இயற்கையுடன் ஐக்கியமாக்கும் ரம்மியமாகும் பொழுதுகள் நமக்கு அலாதியானது. அந்த சூழலை நீங்கள் கண்டு அனுபவித்து உணரலாம் பாஞ்சாலிமேட்டில்! கடல் கரையில் நின்று ஆற்பரிக்கும் அலைகளை கண்டு ரசிப்பது போல் கைநீட்டினால் தொட்டு விடலாம் என்று நற்பாசை தரும் பரந்து விரிந்து கிடக்கும் நீல வண்ண மேகங்கள், கிடந்து உருண்டு வா என அழைக்கும் பச்சை புல் வெளிகள், காட்டு புஸ்பங்கள் என கொள்ளை அழகு கொள்ளும் இயற்கையை கண்டு வெளிச்சத்துடன் திரும்ப வேண்டும். பனி மூடும் பிரதேசம் என்பதால் இரவு பயணம் உகுந்தது அல்ல. மழை நேரம் இங்கு பயணம் மேற்கொள்ளுவதும் முற்றும் தவிற்க வேண்டியது.

இயற்கைய்யின் வளப்பில் சொக்கி நிற்க மழை வர ஆரம்பித்தது. பனிநீராக விழுந்த மழையில் நனைவதும் சுகமாகவே இருந்தது. பனி கூடுவதும் பிரிவதுமாக கண்ணாமூச்சி விளயாட்டு ஆடி கொண்டிருந்தது. மழை விடாது இனி நகர இயலாது. அந்த மேகங்கள் போட்டி போட்டி ஓடி மறைவதும் வானம் தெளிவதும் மழை வருவதும் பின்பு பனி மூடுவதுமாக ஒரே இயற்கை அன்னையின்  புன்சிரிப்பாகத்தான் இருந்தது. நல்ல வேளை இடிமின்னலுடன் அவள் சத்தமாக சிரிக்கவில்லை. அப்படியே நடுங்கிய படி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு சாயக்கடையை வந்து அடைந்தோம். சூடா ஒரு கட்டன் சாயாவுடன்  சூடாக பச்சி வடை வாங்கி சாப்பிட்டு விட்டு மழை விட காத்திருந்தோம். 

 மலை ஏறினால் இறங்கி தானே ஆக வேண்டும். இறக்கம் என்பதால் திரும்பும் பயணம் எளிதாக இருந்தது. இருப்பினும் பிரிய மனம் இல்லாது அந்த குளிர்தரும் துளிர் நினைவுடன் பிரியா மனம் கொண்டு பாஞ்சாலி மேட்டிடம் விடை பெற்று அடுத்த மலை நோக்கி பயணம் ஆனோம். (குறிப்பு: சமீபத்தில் வெளிவந்த பலத்திரைப்படங்கள் காட்சிகள் இங்கு அமைத்துள்ளனர். உதாரணம்: மலையாளப்படம். சார்லி














தங்குமிடம் இங்கு விசாரித்து கொள்ளலாம்.                                               
1) paradise plantation retreat(Murinjapuzha, Kerala Dist 0469 2701311)                                                2)Dream land hill resort : (Kuttikanam P.O, Peermedu, Near Thekkady
Kuttikanam 09447304467)

10 Mar 2013

ஆசிரியைகளின் வெறித்தனம்!



இன்னும் காலம் மாற வில்லையா என ஆச்சரியமாக தான் இருந்தது. நாங்கள் படித்தது வருடம் வெறும் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி  படித்த அரசு பள்ளி.  மாணவர்கள் மிகப்பெரிய அளவில் தேயில தோட்ட தொழிலாளர்கள் பிள்ளைகள் தான். மாணவர்களை ஆசிரியர்கள் படுத்தியபாடு எஸ்டேட் முதலாளிக்கு எளிதாக சிறுவர் தொழிலாளர்களை பெற்று தந்தது . ஆனால் இன்றோ மகன் படிப்பதோ 40 ஆயிரம் மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் பள்ளிகள். 

ரசாயனப்பாடம் எடுக்கும் ஆசிரியரை முதலில் கண்டேன். அவர் பக்கம் தான் கூட்டம் இல்லாது இருந்தது. நல்ல பையன், பிரச்சினை இல்லை, அடுத்து இனியும் நல்ல மதிபெண் எடுப்பான். நன்றி ஐயா என்று விடை பெற்று கொண்டேன். ஒரு வருடம் முன்பு என்னை ஆசிரியையாக காண வந்த ஒரு தந்தையின் நினைவு வந்தது. அவர் ஒரு அரசு அதிகாரி. நானும் புதிய ஆசிரியை தான். அவர் வயதில் பெரியவர்.  அம்மா என் மகன் படிக்கின்றானா நல்லா வருவானா என்றார். தேவையில்லாது பிரச்சனையில் மாட்டி கொள்கின்றான். எனக்கு இவனை நினைத்து தான் கவலை. அந்த கல்லூரியில் சேர்த்தேன். இடையில் வந்து விட்டான் என்றார்.  ஐயா உங்கள் மகன் பற்றி கவலை வேண்டாம். அவன் நல்ல நிலையில் வருவான் அவனுக்கு என்ற திறமைகள் இத்தனை உண்டு. முதலில் நீங்கள் அவனை நம்புங்கள் என்றேன். அம்மா என்ன நேரமோ தெரியல என் இளைய மகனால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் தரையில் விழுந்தது.
வரலாறு ஆசிரியர் எப்போதும் போல் உங்க பையனுக்கு விளையாட்டில் தான் ஆற்வம், படிப்பு சைடு தான் என்று சிரித்து கொண்டே கூறினார். என் மகனோ சார்…………………..மாட்டி விடாதீக நான் படிக்கின்றேன் என்றான். புவியியல்  ஆசிரியர்  விளையாட்டில் ஆற்வமுள்ள  பையன். ஆனால் படிக்கின்றான் நல்லா வருவான். நீங்க நிம்மதியாக இருங்கள் என்றார். அம்மா என்ற நிலையில் ஒரு பெருமிதம் நிறைந்து  நின்றது. என் மகன் படிப்பில் சிறப்பாக வரவேண்டும் என்றே; அவன் வயிற்றில் இருக்கும் போது ஒரு வங்கி தேற்வுக்கு படித்து கொண்டிருந்தேன். அவன் பிறந்த பின்பு அந்த வங்கி வேலையும் வாய்த்தது, பிள்ளையா வேலையா என்று கேட்கும் போது எப்போதும் பிள்ளை வளர்ச்சி தான் முன் நின்றது. 

அந்த மனநிறைவுடன் கணித ஆசிரியையிடம் சென்றால் ஒரு எகத்தாள பார்வையுடன், என்ன உங்க பையன் எப்படி இருக்கான் என்ற ஒரு நக்கல் சிரிப்புடன் ஒரு கேள்வி? காலை 7.30 க்கு கிளம்பும் மகன் மாலை 7 ஆகின்றது வீடு வந்து சேர என நினைத்து  சிரித்து கொண்டே கணிதத்தில் முழு மதிப்பெண் பெற வழியுண்டா என்ற நோக்கில் அவர் முகத்தை நோக்கினேன். "உங்க மகனுக்கு  நான் தேவையே இல்லை என்ற நினைப்பில் உள்ளான். எனக்கென்ன எப்படியோ போறான். இவன் எப்படி போனா எனக்கென்ன" என்றார். "முறைத்து பார்க்கின்றான் நான் கையால் அடித்த போது தடுக்கின்றானாம்.  பேனாவால்  குத்தினாலும் தடுக்கின்றானாம்.  அந்த அம்மா கூட்டாளு பிசிக்ஸ் ஆசிரியையாம். எனக்கு உங்க மகனை தான் ரொம்ப பிடிக்கும். இப்போ எனக்கு பிடிக்காது. நான் கண்டு கொள்வதே இல்லை சொல்லியிருப்பானே என்ற வெற்றி சிரிப்புடன் என்னை நோக்குகின்றார்.

தமிழ் வழி கல்வியில் இருந்து ஓடி போனாலும் மலையாள வழி வகுப்பறையில் நான் கொண்ட துன்பம் மிகக்கொடியது. ஏழாம் வகுப்பு வரை எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு தமிழர் . என்னை ஒடுக்க ஒரு ஆசிரியர் இருந்தால் கூட என்னை தன் சொந்த மகளை போல் நேசித்த சம்ஷுதின் சார், ஹரிகரன் சார், ரோசம்மா டீச்சர் போன்றோர் இருந்தனர். மத்தாயி சார், விஜயன் சார் எல்லோருக்கும் நான் மகள் போன்று தான். ஆனால் இந்த தயவு என் உயர் வகுப்பில் கிடைக்கவில்லை. எட்டாம் வகுப்பில் ஒரு ஆசிரியையால் ஒரு மாதம் கேள்வி கேட்காது என் பக்கம் கூட பார்க்காது ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தேன். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என கேட்க அந்த நாட்களில் துணிவு வரவில்லை. பிற்காலத்தில் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டார். இதுவும் எதனால் என்று எனக்கு விளங்கவில்லை. மலையாள மொழி ஆசிரியை துளசி டீச்சர் அன்பு மறக்க இயலாதது. அங்கும் அம்மினிக்குட்டி என்ற நாயர் ஆசிரியை இருந்தார். அவருக்கு தனியாக ஒரு கணக்கு கூட கரும்பலகையில் செய்ய தெரியாது. ஒரு நோட்டில் இருந்து காப்பி செய்து அப்படியே எழுதி போடுவார். புரியாத என் தோழிகளுக்கு கணக்கு கற்று கொடுத்த மகிழ்ச்சியில் கணக்கின் மேல் காதல் கொண்டு +2வுக்கு கணிதம் முதல் பாடமாக எடுத்து படித்தேன். ஆனால் கடினமான ஒரு கணக்கை செய்து விவரித்தாலும் மிக நன்று என்று பாராட்டாது “ பாத்தியாடி… ஒரு தமிழச்சிக்கே கணக்கு செய்ய முடிந்தால் உனக்கு ஏன் முடியாது என்பார். இவரும் பெற்றோர் சந்திப்பில் என்னவெல்லாமோ கதைத்து கொண்டு தன் அதிகாரத்தை நாட்டி கொண்டிருப்பார். அம்மாவுக்கு மலையாளம் கதைக்க தெரியாததால் தலையை மட்டும் ஆட்டிகொண்டு சிரித்து விட்டு பயபக்தியுடன் சரிங்க டீச்சர் என்று வந்து விடுவார். அப்படி ஏதும் அம்மா பேசியிருந்தாலும் நான் வேறு பள்ளி தேடி போயிருக்க வேண்டும்.                                                                    ஒரு முறை என் மலையாள  தோழிகள் இட்டிலியை ஆண் மாணவர்கள் மேல் எறிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டும் இட்லி அன்று யார் கொண்டு வந்தீர்கள் என்றதும் வெள்ளந்தியாக நான் மட்டும் எழுந்து நின்று அம்மாவை வரவைத்து என்னை கண்டித்து விட்டனர். புகார் கொடுத்த என் பள்ளி தோழர்கள்  உன்னை நாங்கள் சொல்லவில்லை என்றதும் சரி என்ன செய்ய என்று பணிந்து போகத்தான் வைத்தது சூழல். அன்று வளைந்த என் தலை இன்றும் அதிகாரமாக கத்தி பேசுகிறவர்களை கண்டால் பதில் கூறுவதை விட நான் அறியாத பதட்டவும் அழுகையும் தான் வந்தது.  

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு- தமிழை விட்டு ஓடி விட்டேன்! ஏன்?


இன்று ஆசிரியர் பெற்றோர் கூடுகை.  பொதுவாக இந்த சந்திப்பில் விரும்பமே இல்லை. ஆக்கபூர்வம் என்பதை விட அதிகாரபூர்வமாக தான் கண்டுள்ளேன். சின்ன பையன் பள்ளியில் ஆங்கிலத்தில் கதைக்கும் பெற்றோர் மிகக்குறைவே. இருந்தாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டியதை பள்ளி முதல்வர் ஆங்கிலத்தில் தான் கதைப்பார். இதில் சில தங்கீலிஷ் அம்மாக்கள் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டு விட்டு தன் அறிவு புலமையை விளக்கியதாக பெருமிதம் பட்டு கொண்டு கேட்பார்கள். பெரியவர் பள்ளியிலோ உழவர் சந்தை போல் தான் இந்த பெற்றோர் ஆசிரியர் கூடுகை. ஆசிரியர்கள் தங்கள் கருவிகளான சில அட்டைத்தாள் பேனா சகிதம் இளக்காரத்துடன் உட்காந்து இருப்பார்கள். நாம் இந்த அட்டையை எடுத்து கொண்டு ஒவ்வொரு ஆசிரியராக  சென்று என் பிள்ளை எப்படி தேறிடுவானா? அவன் எப்படி இருக்கின்றான் என கேட்க வேண்டும். ஆசிரியர் ஒரு புறம் குறை கூற பெற்றோர் மறுபுறம் பிள்ளைகளை பற்றி குறை கூற பிள்ளை பலிக்கு கொண்டு போகும் ஆடு போல் நடுவில் நிற்கும். எனக்கு என் பிள்ளையை குறை கூற விருப்பம் இல்லை. இருந்தாலும் வீட்டு பாடம் கொடுங்க, அவன் சோம்பலாக இருக்காது சுறுசுறுப்பாக இருக்கும் படி பாடம் படிக்க கொடுங்கள் என்றே கேட்டுள்ளேன்.

இன்றைய தினத்தில் என்னவர் தன் தொழில் நிமித்தம் தலைநகர் பயணம். அவர் இருந்தால் என்னை கிளம்ப வைத்து, சரி சரி மேக்கப் போதும் என்று சீண்டி,  சேலை கசங்காது வாகனத்தில் அழைத்து சென்று விடுவார்.  வீடோ கார்ப்பரேஷன் கடைசி எல்கையில்! பேருந்து உண்டா என்றால் வரும் சில நேரம் வராது. காலை மதியம்,மாலை, இரவு என்று குறிப்பிட்ட நேரம் ஒரே பேருந்து என சிக்கனமான பகுதி! இன்றோ நெல்லையில் மழை சிணுங்கி கொண்டு இருக்கின்றது. மகன் நண்பர் "ஆன்றி நீங்க எங்களுடன் வாங்க அழைத்து செல்கின்றோம் என்றான்". உதவுகின்றேன் என்பவனிடம் பல்லை பிடிங்கி பார்க்க கூடாது அல்லவா. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து விடுகின்றோம் என்றேன். பேருந்து நிலையம் வந்தால் மழை நனையாது நிற்க வழியில்லை. நடந்து நடந்து ஆட்டோ நிலையம் வந்து விட்டோம். பெருமாள்புரம் வரை போக 70 ரூபாயாம். நான் ஆறு மாதம் முன்பு 40 ரூபாய்க்கு தான் வருவது. 70 ஆ….. வேண்டாம் என்று கூறி விட்டேன். மகனுக்கு கோபம். அம்மா இந்த ஆறு மாதத்தில் 6 முறை விலை ஏறி விட்டதே என்றான். இவனும் இவன் அப்பா மாதிரி தான். வீட்டுக்காக பேச மாட்டாக! நான் என் அப்பாவை மாதிரி 5 ரூபாய்க்காக 5 5 கிலோ மீட்டர் நடந்தே செல்வார். அப்படி தான் 1கிமீ நடந்து விட்டோம். இப்போது தான் எங்கள் பகுதி பேருந்து மேல் நோக்கி செல்கின்றது, இது ஆட்களை ஏற்றி... வந்து.. என பேசி கொண்டே நடந்தோம். என் மகன் நண்பர் தன் தாயாருடன்  நாலு சக்கர வண்டியில், வந்து விட்டான்.

அவர்கள் அம்மா இதமான சிரிப்புடன் வரவேற்று அன்பாக அழைத்து சென்றார். என் மகன் நண்பன் கூறினான் "ஆன்றி ஆங்கில பாடத்திற்கு குறிப்பு தருவதில்லை. பள்ளியில் தந்திருக்கும் கையேஎடு நோக்கியும் படிக்க கூடாதாம். எப்படி படிக்க என்றே தெரியவில்லை". நானும் "ஆசிரியர்களை குறை கூற கூடாது தம்பி. கல்லூரி போல் உங்களை தரமாக நடத்துகின்றார்கள் போல். நீங்கள் நண்பர்களாக இணைந்து படிக்க வேண்டியது தானே" என்றேன். அவனும் பிடித்ததோ இல்லையோ என் உபதேசத்தை தலையாட்டி கேட்டு கொண்டான்.  அவன் அம்மாவிடம் கூறினான் கணித ஆசிரியை என்னை செருப்பு என்று அழைக்கின்றார் என்று. என் மகனும் என்னை நாய், நாக்கு வளிக்கவா வந்த, உங்க தாய் தகப்பன் சரியில்லை என்று சொல்கின்றார்கள் என்றான். அப்போது முதலே ஆங்கில மேதையை காண ஆவலாகி விட்டது. கைவைத்து அடிப்பாராம் பேனா முனை வைத்து குத்துவாராம். அந்த அம்மையார் வயதும் கை வைத்து அடிக்கும் படியான அவ்வையும் அல்ல, அடி வாங்கும் வயது சிறுவர்களும் அல்ல எம் மகன்கள்.

30-33 வருட காலச் சக்கிரம் தான் பின்னோக்கி ஓடி கொண்டிருந்தது. அப்போது அம்மா என்னை தமிழ் வழி பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது எனக்கு பயம் கொடுத்து விட்டது. விதவிதமான அடிகள். கவுக்கூட்டில் கிள்ளுவது, துடையில் இடம் தேடி கிள்ளுவது தான் எனக்கு பிடிக்காத தண்டனை. சிலர் வயிற்றில் கிள்ளுவார்கள். கோமதி டீச்சர் வாயில் வந்த வார்த்தையில் எல்லாம் திட்டுவாங்க. நினைவில் நிற்கும் வார்த்தைகள் எருமை மாடு.. சனியனே,...தறுதலை....நீ எல்லாம் எங்க விளங்கின... மாரியம்மா டீச்சர் கம்பு வைத்து ஒரு அடி இரண்டு அடி அல்ல அடி என்றால் டசன் கணக்கு தான். நான் வீட்டில் வந்து அம்மாவிடம் சண்டை பிடித்தேன். எனக்கு இந்த ஈரம் இல்லாத தமிழ் ஆசிரியர்  வகுப்பு வேண்டாம்; மலையாள வழி படிக்க போறேன். அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். அடிக்கு பயந்து மலையாளம் வகுப்புக்கு ஓடி விட்டேன்.