30 Dec 2012

டெல்லி மாணவி மரணமும் சில அரசியல் நாடகமும்!



டிசம்பர் 16 துவங்கிய ஆற்பாட்டம் அழுகை இன்றைய மரணத்துடன் தொடர்கின்றது. பார்லிமென்றில் விவாதத்திற்க்கு வந்து, பெண் எம்பிகளை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம். பலரை தூக்கு தண்டனை மட்டுமே தீர்வு என சொல்லவைத்த சம்பவம். ஒரு காவல்த்துறை அதிகாரியின் மரணத்திற்க்கு காரணமான சம்பவம்.  டில்லி  என்ன புண்ணிய பூமியா இதற்க்கு முன் கற்பழிப்பு நிகழவே இல்லையா?  டில்லியின் உண்மை நிலையை நோக்கினால் அதிரவைக்கும் தகவல் தான் கிடைக்கும்.

டெல்லி சம்பவத்தில் பள்ளிக்கு ஓடும் பெயர்பலகை இல்லாத வாகனத்தில் கல்லூரி மாணவி தானாக ஏறினாரா ஏற்றப்பட்டாரா என சிந்திக்க வேண்டியுள்ளது.     இந்த நாட்டில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் இந்த ஒரு கற்பழிப்பை ஊடகம் துணை கொண்டு எடுத்து செய்தியாக்குவதும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதே வாரத்தில் திருநெல்வேலி பக்கம் 12 வயது பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் மரணத்தையோ, அல்லது     தமிழகத்தில் சிதம்பரத்தில் நடந்த கூட்ட பாலியல் வல்லுறவை பற்றியோ செய்தியாக்காத மற்மவும் காண வேண்டியுள்ளது.                                    



 பெண்கள் சார்ந்த  மானபங்கம்,கடத்தல் போன்ற குற்றங்களுக்கு முதல் இடத்தில் இருப்பது இந்தியாவில் டெல்லி தான். அதை தொடர்ந்தே மும்பை, போபால், பூனையை, ஜெய்பால், மகாரஷ்டா உள்ளது. நமது நாட்டில் 20நிமிடத்திற்க்கு  ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றாளாம். பெண்கள் பலவிதமான அவமானத்திற்கு உள்ளாகுவது 26 நிமிடத்திற்க்கு ஒரு சம்பவம் என தரவு கூறுகின்றது.

கற்பழிப்புக்கு முதல் இடத்தில் நிற்கும் அமெரிக்காவில் 93,934 வழக்குகள் பதிவாகும் போது இந்தியாவில் 18,359 வழக்குகள் மட்டுமே பதிவாகின்றது என்றதும் நம் நாட்டில் கற்பழிப்பு குறைவு என்பதல்ல. சட்டத்தால் நீதி கிடைக்கும் என நம்புவர்கள், தனக்கு நடந்த அநீதியை எதிர் கொள்ள துணிபவர்கள் இவ்வளவு பேர் மட்டுமே என்று தான் எடுத்து கொள்ளவேண்டும். தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 45 ஆயிரத்திற்க்கு மேல் வழக்கு பதிவாகும் போது ஜெர்மனியில் 8,133உம் தாய்லான்றில் 5060 வழக்குகள் பதிவாகி வரிசை வருகின்றது. சுருங்க சொன்னால் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், படிப்பறிவான  நாடுகள் என்ற பாகுபாடில்லாது பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவதில் எல்லா நாடுகள் நிலையும் மோசமாகத் தான் உள்ளது என காண்கின்றோம்.

இந்தியாவை எடுத்து கொண்டாலும் கற்பழிப்பு வழக்குகளில் டெல்லிதான் முதலிடம் என்றால் மத்தியபிரதேசம் அதை பின் தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் வங்காளம், ராஜஸ்தான், என பின் தொடர்கின்றது.  கல்வி அறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரளாவும் 7 வது இடைத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் குடும்ப நலனை கருதி பாதிக்கப்பட்ட நபரின் வாழ்கையை கருதி 80 % வழக்குகள் மறைக்கப்படும் சூழலே உள்ளது.

இந்தியாவில் இந்திய பெண்கள் மட்டுமா கற்பழிப்பு மானபங்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்? வெளிநாட்டு சுற்றுலா பெண்களும் இலக்காகியுள்ளனர்! அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அந்நாட்டு அரசாங்கம்பெண்கள் தனியாக பயணம் செய்ய உகுந்த நாடல்ல இந்தியா’ என தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. ரஷியா நாட்டிலாகட்டும் இந்திய கடலோர பிரதேசம் பாதுகாப்பற்றது சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது. கோவா, தாஜ்மஹால் போன்ற பிரதான இடங்களில் கூட ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர்.

கற்பழிப்பு என்றதும் காவல்துறை அதிகாரிகள் கூட பெண்கள்  அணியும் உடை, உதட்டு சாயத்தை குறை கூறுகின்றனர்.  நீதிக்காக போராடும் பெண்கள் உடையையும் தோற்றத்தையும் கேலி பேசும் அரசியல்வாதிகள் குவிந்த நாடு இது. இன்னும் சுவாரசியமான ஆனால் வேதனையான விடையம் தங்கள் ஆசியில் பெண்கள் மானபங்கப்படுத்தும் போது ஊமையாக இருந்த விகே. சிங் போன்ற ராணுவ அதிகாரிகளுக்கு நீதி நியாயம் இப்போது உதிப்பது தான். இந்தியாவில் பெண்கள் பாதிப்படைய காரணமாக இருக்கும் அதிகார வர்கம் அரசியல் வர்கம் முதலை கண்ணீர் வடிப்பதை காண்பது தான் கண்ணீர் வர வைக்கின்றது.  பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகுவது எதனால் நடக்கின்றது நடந்தது என ஆழமாக படிக்காது சிந்திக்காது தூக்கு தண்டனை கொடுப்பதால் எல்லாம் தீர்வாகி விடும் என பலர் கருத்திடுவது இன்னும் வருத்தத்தையை வரவைக்கின்றது.  இந்தியாவில் ஆட்டோ சங்கர், ரங்காபில்லா,  போன்றோர் கடத்தல், கற்பழிப்புக்கு தான் துக்கிலிடப்பட்டுள்ளனர். ஏன் கோயம்பத்தூர் பள்ளி மாணவி சம்பவத்தில் என்கவுண்டரும் நடந்துள்ளது. இருந்தும்  கற்பழிப்பு கொலை மேலும் நடக்காது இல்லை, குறையவும் இல்லை.

இந்த குற்றச்செயலில் காரணம், தாக்கம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் இவ்விவாதம் செல்லும் பாதை தான் மனிதனை கற்காலம் செல்ல வைக்கும் போல் உள்ளது.  சில அரசியல்வாதிகள் குழந்தை-திருமணத்தை வரவேற்றுள்ளனர். இந்தியாவில் இப்போதும் 40% பெண் குழந்தைகள் 16 வயதிற்க்கு  முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.  மேலும் 8 மாநிலத்தில் சேர்ந்த 50% மேல் குழந்தைகள்  18 வயது ஆகும் முன்னே திருமணம் செய்து      கொடுக்கப்படுகின்றனர்.

ஹரியானவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி சாப்பாட்டு முறையே காரணம், பீஸா பர்கர் தான் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு ஆதாரமான வாழ்கை முறை என்று எச்சரிக்கின்றனர். இறைச்சி கோழி  விரைவாக வளர யூரியா, போஸ்பரஸ் போட்டு வளர்ப்பதும் மனித குண நலன் மாற காரணமாகின்றது என கூறப்படுகின்றது. விரைவில் முதுமை அடையும் குழந்தைகள் மனநிலையை பற்றியும் நோக்க சொல்லியுள்ளனர்.   
கற்பழிப்பு போன்ற குற்றங்கள் காரணம் என்ன எப்படி பெண்கள் தப்பிப்பது என்ற தகவல் அடுத்த பதிவில்.                                                                                                                         

20 Dec 2012

ஒரு புத்தகம் கதை!

ஒய்யாரமா மேஜை விளிம்பில் சாய்ந்து நின்று கொண்டு ஒரு விமர்சனம் பெறப்பட்டேன். நான் எழுதிய புத்தத்தில் வார்த்தைகள் கண்ணியமாக பயண்படுத்தவில்லை என்று! எல்லோரையும் புரியவைக்க நான் உலகமகா குரு அல்ல என்றாலும் கூட சும்மா அவல் மென்று   சாப்பிடுவது மாதிரி பேசுவது தான் சிரிப்பாக இருந்தது.                                                                                                                                                இதுவெல்லாம் பொறாமை ஜுவாலை என தள்ளி விட்டாலும் என் புத்தகம் பற்றி சரியான புரிதல் எனக்கு கிடைத்துள்ளது அதை உங்களுடன் பகிரும் போது இன்னும் தன்னம்பிக்கையுடன் கதைப்பேன். நான் ஒரு எழுத்து பின்புலனுள்ள குடும்பத்தில் இருந்து வரவில்லை, என் மூலதனம் என் சிந்தனைகள், எண்ணங்கள், என் சில அனுபவங்கள், அதை பகிரும்  துணிவும், உண்மையின் மேலுள்ள தீராத பற்றும் தான்.  8 வயதில் இருந்தே எழுத்து என்னுடன் தான் உள்ளது ஆனால் அது எல்லாம் தேவையற்றது என எரிக்கப்பட்டது கிழிக்கப்பட்டது தான் உண்மை. பின்பு என் முதுகலை படிப்பு ஊடகம் சார்ந்தது என்றதும் நான் கற்ற உத்தியை கையாளும் முயற்சியில் ஒரு புத்தகம் வந்துள்ளது.  எனக்கு பின்புலமாக விளங்கும் என் கணவர் நான் விரும்பும் போல் சுதந்திரமாக எழுத அனுமதிக்கின்றார், என் நண்பர்கள் உதவுகின்றனர் இதனால் மட்டுமே புத்தக உலகத்தில் என் புத்தகவும் இடம் பிடித்து விட்டது.  நான் கன்னிமார நூலகம் இன்னும் சென்று விடவில்லை என்றாலும்  என் புத்தகம் கன்னிமாரா நூலகத்தில் இடம் பிடித்துள்ளது என்பதே மகிழ்ச்சி தானே.                                                                                         நான் எழுதிய புத்தகம் நான் கண்ட நிகழ்வுகள், சூழல்கள் என இருந்தால் கூட என் வாழ்கை சரிதமல்ல.  சம்பவங்களை இயல்பாக எழுத முற்பட்ட போது என் வாழ்கை சரிதமாக சிலருக்கு படுகிறது என்றால் இவர்கள் இன்னும் வாழ்கை சரிதம் வாசிக்கவில்லை என்பதே பொருள்.  நான் இப்புத்தகம் எழுதிய போது ஒரு காலத்தை சில சாதாரண மனிதர்களை பதியவேண்டும் என்று மட்டுமே எண்ணினேன். என் கதைகளில் சாதாரண மக்கள் கொண்ட போராட்ட வாழ்கையை சித்திரிகரிக்கவே முயன்றேன். பல பெண் தோழிகள் எனக்கு தொலைபேசி ஊடாகவும் மின் அஞ்சல் வழியாகவும் கருத்தை தெரிவித்திருந்தனர்.  ஒரு விமர்சகை  எல்லா கதையிலும் நான் என்ற கதாபாத்திரம் உண்டு என்று வருந்துவதாக சொல்லியிருந்தார். நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தலைப்பு உள்வாங்கி எழுதிய போது நான் என்ற கதாபாத்திரம் தவிற்க இயலாது ஆகி விட்டது.                                                                         இப்புத்தகத்திற்க்கு ஆக்கபூர்வமான விமர்சனம் பெறும் நோக்குடன் கல்லூரி பேராசிரியர்கள்,ஊடகவியாளர்கள், நண்பர்கள் கைகளில் என் சொந்த செலவில் எட்ட வைத்துள்ளேன். உழைப்புக்கு விலை கிடைக்காத தொழில் எழுத்து என்று தோன்றினாலும் முதல் படி சறுக்காததில் நான் மகிழ்வேன். லண்டனில் 30 புத்தகம், நார்வே 25 புத்தகம் சென்றுள்ளது என்பதும் மகிழ்ச்சியே.  ஒரு புத்தகத்தின் விலையில் மூன்று மடங்கு செலவானது அதை வெளிநாடுகளில் எட்ட செய்ய.  இருப்பினும் நண்பர்கள் அன்பு வேண்டுதலுக்கு இணங்க என்னால் இயன்ற மட்டும் நண்பர்கள் உதவி கொண்டும் விரும்பியவர்கள் கைகளில் சேர வைத்து விட்டேன். சிலர் புத்தகத்தின் செலவை அனுப்பி உற்சாகப்படுத்திய போது  சிலர் புத்தகம் பற்றிய விமர்சனத்துடன் என்னை மெருவேற்றியுள்ளனர்.                                                 எழுதுவதும் ஒரு கலை தான்.  எழுத ஒரு கரு உருவாகுவதும் எழுத்தாளன் உரிமை, விருப்பம் என்பதையும் கடந்து ஒரு படைப்பாளியின் வாழ்கையில் இருந்து பெறப்படும்  அனுபவத்தில் இருந்து  பெறும் உன்றுதல் என்றே சொல்ல இயலும்.  அந்த உற்றுதல் ஒரு சமூக அக்கறை, நலன் சார்ந்து சிறப்பாக அமைகின்றது.                                                                                                                               இது போன்ற வாசகர்களின் விமர்சங்களையே நான்  எடுத்து கொள்கின்றேன் இதுவே எனக்கும் பலமாகவும் அமைகின்றது.  I'm Savithri Mohanaruban. Subi gave me your book (short stories) when I met her in Chennai.I love my mother tongue.I'm a fan of Tamil lanuage but I don't go deep in to it as Subi does. So with some some hesitation -I took the book.
While on the flight back home to Singapore I was looking for something to read and found your book in my handbag.
The rest is history!. I really enjoyed it .It was very interesting,easy to read,we written and very true to life. Infact I couldn't keep the book down. So the end result is I finshed reading the book in one go!.By the end of the flight I was ready to pass on the book to my friends in singapore to read!
You can see I have never wirtten a "Review " on any books in my life!!??. As I've enjoyed reading your book-that too your maiden effort- I thought I should pen few of my thoughts/ feeling (mine is just a drop in the ocean as i'm sure you would have received many acclaims) to encourage you to write books full of more wonderful scenarios in the future.
Wishing you the very best for futre ventures.
Best wishes
Savithri.
உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.


வலைப்பதிவர் நண்பர் சுரேஷ்.                                                                                                                                  ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது.


ஒரு பார்வை – செல்வி ஷங்கர்

 கதைகளைப் படிக்கின்ற போது சமுதாயம் உணர்ந்தது போலவே நிகழ்வாக்கி எழுத்துகள் செல்வது ஆசிரியரின் ச்முதாய்ப் பார்வையைக் காட்டுகிறது.

 கருத்து நடையும் எழுத்து நடையும் மொழி நடையும் உணர்வோட்டச் சிந்தனையும் சமுதாயக் கருத்தும் இயறகையும் முட்டி மோதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது..
                                                                                              சிவசுதன் -சிலோண்
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ,
1) சொந்த வீடு .
2) என் பூந்தோட்டம் சொல்லும் கதை .
3) என்னைச் சிலுவையில் அறைந்த பைத்தியம் .
4) நினைவுகளின் சக்தி .

இந்தக் கதைகள் அனைத்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன . அது தான் உங்கள் எழுத்தில் உள்ள வல்லமை என்பேன் . சலிப்பே வராமல் படித்த ஒரு சில புத்தகங்களில் உங்களுடைய படைப்பும் ஒன்று .அத்துடன் என்னைக் கடந்து சென்ற சொந்தங்கள் மற்றும் நட்புக்களை ஒரு தடவை மீட்டுப் பார்க்கச் செய்துவிட்டீர்கள் . என் குழந்தைப் பருவத்திற்கு ஒரு தடவை என் எண்ணங்கள் சென்று வந்தன . வரும் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு தன்னம்பிக்கையும் இனம் தெரியாத இன்பத்தையும் தருகிறது .


கவிஞர் வைகறை வைகறை                                                          
சமீபத்தில் ஜெ.பி.ஜோஸபின் பாபா அவர்கள் எழுதிய "நான் தேடும் வெளிச்சங்கள்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன்!
ஆண்டவனைப் பாடுதலைத் தாண்டி, ஆள்பவனைப் பாடுவதைக் கடந்து, தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அழகு பார்த்து வந்த இலக்கியத்தில் இன்று சாமானிய மக்களைக் குறித்து எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!

"நான் தேடும் வெளிச்சங்கள்" முழுவதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையே பேசப்படுகிறது! அதுவும் அவர்களின் மொழிநடையிலேயே பேசப்படுகிறது!
வியாபாரப் பண்டிகை எனும் அடைமொழி கொடுக்கப் பட்ட தீபாவளி குறித்த 'தீ வலி" கதை...; சொந்த வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தின் வழியைக் கூறும் "சொந்தவீடு" கதை...என கதைகள் அனைத்தும் சராசரி வாழ்விலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது!  கதையாசிரியர் ஜோஸபின் பாபா அவர்களின் மொழிநடை அருமையாக இருக்கிறது!  கிளைக் கதைகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்!  அதே சமயம் மையக்கதையை இன்னும் வலுவாக அமைத்தால் மேலும் சிறப்பாக அமையும்!!                                                                                                                                 இரண்டு புத்தகங்களின் ஆசிரியரான எச்.பீர்முஹமத்                                                                  
நான் தேடும் வெளிச்சங்கள்: தமிழின் புதிய சிறுகதை எழுத்தாளரான ஜோஸ்பின் பாபாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. எதார்த்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதைளே பெரும்பாலும் என்றாலும் அதனூடே வாழ்வின் வியசனம் வெளிப்படுகிறது. சக மனிதன் அன்றாட வாழ்வில் கடந்து போகும் நிகழ்வுகள், வினைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தேர்ந்த கதையாக வடிவம் பெறுகின்றன. அது சி

லசமயங்களில் நினைவின் நதியாக, சுவாரசிய, மெச்சத்தக்க உணர்வுகளை நமக்குள் அதிகம் சாத்தியப்படுத்தும். இதிலுள்ள என்னுயிர் தோழன், வீடு, சேரநாட்டு அரண்மனையில் ஒரு நாள், என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம், நினைவுகளில் சக்தி போன்ற கதைகள் அவற்றைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழில் நவீன, பின்நவீன கதை முயற்சிகள், எழுத்தாக்கங்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன என்றாலும், இன்னும் இதுமாதிரியான எதார்த்த எழுத்துக்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கதை வடிவத்திற்கான புனைவு (Fiction)என்பது இதிலுள்ள குறைபாடு என்றாலும் ஜோஸ்பின் பாபாவின் கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த தொகுப்பில் அணிந்துரை என்ற பெயரில் அதிக பக்கங்கள் வீணடிக்கபட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒருவருக்கு முதலாவதாக வரும் தொகுப்பில் இது தவிர்க்க இயலாது என்றாலும் சில சமயங்களில் தவிர்க்க முடிந்ததே. நான் தேடும் வெளிச்சங்கள் அதன் தொடர்ந்த பயணத்தில் இன்னும் அதிக தூரம் பாய்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.

8 Dec 2012

நித்திரைப் பயணங்கள்! கவிஞர் மு.ஆ. பீர்ஒலி

கோயம்பத்தூர் புத்தக வெளியீடு விழாவில் சந்தித்து புத்தகவும் பெற்று கொண்டேன். பெற்ற புத்தகம் ஒரு நண்பர் வாங்கி விட சுபி அக்கா வந்த போது மறுபடியும் ஒரு புத்தகம் கேட்டு வாங்கி  பல முறை வாசித்து விட்டேன்.  இருந்தும்  கருத்து எழுத  தயக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது.  இன்று மறுபடியும் சகோதரை சந்தித்த போது என் பொறுபற்றத்தனத்தை நினைத்து வருந்தி தைரியம் வரவழைத்து கொண்டு என் கருத்தை பகிர்கின்றேன்.

ஒரு நல்ல படைப்பு என்பது படைபாளியின் சிந்தனையில் இருந்து, தான் அடைந்த பாதிப்பு,  அனுபவத்திலிருந்தே  பிறக்கும். அவ்வகையில் கவிஞரின் சிந்தனையின் அடிநாததில் இருந்து புறப்பட்ட இக்கவிதை தொகுப்பு சுவாரசியம் மட்டுமல்ல நமக்கும் சில உணர்வுகளையும் இட்டு செல்கின்றது.  ஒவ்வொரு முறை  புத்தகம் வாசிக்கும் தோறும் பொருட்கள் மேலும் மேலும் விளங்கி கொண்டே இருந்தது.  வார்த்தை கையாடலில் ஒரு கவனம், கவுரவம், பொறுமை, மற்றும்  ஒரு ஸ்ருதி சேர்ந்து கலந்து  இருப்பது வாசிப்பவனின் மனதை தொட்டு செல்கின்றது.

"மலரின் பயணம்" என்ற முதல் கவிதையின் ஊடாக ஒளியை தேடியுள்ள பயணத்தை கவிஞர்   துவங்குகின்றார். ஆனால் வாழ்கையில் கண்டதோ பொய் முகங்கள்! இதனால் மனம் கசந்து விம்மலுகளுடன்  அடுத்த கவிதை ஊடாக உண்மையை தேடி தன்  பயணத்தை தொடர்கின்றார். தன் பல கவிதை வழியாக நம்பிக்கையுடன் பொய் முகமற்றவரை தேடி கொண்டே இருக்கின்றார்.
"நிறமாறிக் கொண்டிருக்கும் 
திரைச் சீலை
பொய்முகம்
விடுபட்ட நிலவு
இன்னமும் தேடுகின்றேன்" 
இதனிடையில் கவிஞருக்கு கவிதையாக ஒரு தேவதை வருகின்றார்.  ஆனால் விதவை பெண் போல் என உவமைப்படுத்தி நடக்காது போன விருப்பத்தை, வாழ்வில் எதிர் கொண்ட  ஏமாற்றத்தை மனத்துயரை கோடிட்டு காட்டுகின்றார் கவிஞர்!



"அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி" என்ற கவிதை ஊடாக காதல் தோல்வியில் தவழும் ஒரு இளம் மனிதனின் மன உளச்சலை  புடம் இட்டு காட்டுகின்றார்.  இதமான வார்த்தைகளுடன் ஆனால் கனத்த ஒரு சூழலை இட்டு செல்கின்றது இக்கவிதை.

தியானங்கள் தொடர்கின்றன என்ற கவிதையினூடாக பெரும் மழைக்கு பின்பு அமைதி ததும்பும் வானத்தை போல்  முற்றும் துறந்த மனநிலையை ஞான நிலையை வெளிப்படுத்துகின்றார்.  ஆனால் அடுத்த இரு கவிதைகளில்  தான் தொலைத்த, அரும்பும் போதே நுள்ளைப்பட்ட காதலை நினைத்து வெந்து உருகி ஒரு குழந்தையின் மனம் கொண்டு ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
"உன்னை நேசித்த பொழுது 
 ன்னையே நேசித்தேன்".

"என்னையே வெறுத்தேன் 
உன்னை நேசித்ததால்"

"எங்கோ 
தொலைதூரத்தில்
இராப் பிச்சைக்காரனின்
ஈனக் கதறல்கள்"

"மலர்கிறது" என ஒரு கவிதை அழகிய தென்றல் வீசி அருமையான சொல்லாடலுடன் நம்மை அழைத்து செல்கின்றது. இது போன்ற கவிதைகளை விவரித்து சொல்லுவதை கேட்பதை விட வாசித்து அனுபவிக்கும் சுகம் அலாதியானது என்று மட்டுமே சொல்ல இயலும். இக்கவிதை வாசிப்பின் முடிவில் நாமும் நம்மை அறியாது மலர்ந்து சென்றிருப்போம் .

அடுத்து வருவது ஒரு பெரும் துக்கத்தின், ஏமாற்றத்தின், பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் கவிதை. இதை வாசிக்கும் போது  ஒரு வித உளைவியல் மனதாக்கங்கள் நம்மையை தாக்குவதை கண்டு உணராது இருக்க இயலவில்லை. நித்திரையில் நாம் கண்ட சில கனவுகளுடன்  பயணிப்பது போன்று தான் உள்ளது. 

எங்கு சென்றிட்டாய்? என்ற கவிதை காதலியின் பிரிவால்-ஏக்கத்தால் மூர்ச்சையாகிப் போன காதலனின் மனநிலையுடன்  82 வரிகளை ஒரே மூச்சில் உருவிட வைத்துள்ளார். அடுத்த கவிதையில் நிதானமான மனநிலையுடன் காதலியை தோழியாக பாவித்து தன் மனதையையும் தோழியேயும் தேற்றும் தாலாட்டாக உள்ளது. 

அழுது புரண்டு வெறி கொண்டு அழுது புரண்ட காதலன்,   உண்மையை கிரகித்தவராக நிஜங்களில் நிம்மதி கொண்டு    மனநிறைவுடன் புது உறவில் லயிப்பதை அடுத்து ஓரிரு கவிதைகளில்  அரங்கேற்றிகயுள்ளதை நாமும் ஆசுவாசமான ரசிக்க இயலும். இனியுள்ள கவிதைகளில் கணவன் மனைவியின் உறவின் பாரம்மியமான நிலையை, உன்னதமான தருணங்களை அழகிய சொல்லாடல்கள் கொண்டு விளக்குகின்றார். அமைதியான நதி போல் வாழ்க்கை  செல்வதை காணலாம்.  காதல் விரகத்தில் இருந்து காதலில் விழும் சூழலை, அதாவது பழம் நழுவி பாலில் விழுவதை காண இயலும்(பக்கம் 43).
சின்னஞ் சிறு மலரின் 
செம்மை வனப்பு கண்டு
செயலற்று.. 
சொக்கி விட்டேன்.
நித்திரை விழிகள் என்ற கவிதை சமூக நிலையை விளிம்பு நிலை மனிதனின்  கதையை சொல்கின்றது. காதல் மனைவி குழந்தை என அழகிய குடும்பத்தில் வறுமையால் உடலை விலைபேச வேண்டி வந்த அபலைப்பெண்ணின் நிலையை கவிதையான வடித்து செல்கின்றார் கவிஞர். இந்த கவிதைகளில் சுயபச்சாதாபம், சுயவருத்தம், என சுயத்தில் உழலும் கவிஞர் சமூகத்தை கரிசனையுடன் உற்று நோக்கும் நிலையை காணலாம்(பக்கம்:48). பிரிவையும் நம்பிக்கையோடு தேடும் மனதுடன் கவிஞர் கவிதை படைத்துள்ளார்(உதயத்தை தேடி...),வயிற்று பசியோடு அலையும் பிச்சைக்காரிகளையும் உணவாக்கும் கேடுகெட்ட சமூகத்தை அருவருப்புடன் நோக்கும் கவிஞர், வறுமையால் ஒரே போல்  துன்பத்தில் உழலும்  தாயும் சேயையும் அறிமுகப்படுத்துகின்றார். வேலியே பலபொழுதும் பயிறை மேயும் நிலையும் உணர்த்தும்  வழியாக தன்னில் இருந்து முழுதுமாக சமூக போராளியாக உருமாறுவதை காணலாம்.

தொடரும் ஜென்மபந்தம் .... என்ற கவிதையில் மறுபடியும் காதலியை தேடியலையும் ஆத்மாவை உணர்த்துகின்றார். 'ஒரு மனிதனின் தேடல்' என்ற கவிதை  தனித்து நிற்கும் பனைமரம் போன்ற தனிமையுடன் மனிதனை ஒப்பிட்டு மறுபடியும் தேடல்களுடன் பயணம் ஆரம்பித்து விட்டார் கவிஞர். கவிஞரின் அடுத்த புத்தகத்தில் நாம் சங்கமிப்பதுடன் கவிஞரின் தேடலில் விடையில் நாமும் சென்றடையுவோம். 

இப்படியாக ஒரு ஆழ்ந்த நித்திரையில் காணும் கனவு போல் பல கவிதைகள் நம்மை இதமாக தாலாட்டி, ஆழமான சிந்தனைக் கனவுகளுடன் பயணிக்க வைக்கின்றது. இந்த உலகத்தின் கபடு பொய்மையை கண்டு கலங்கும் கவிஞர் நம்மையும் கலக்கமடைய செய்து  விடை தேட பணிந்து தேடல்களுடன் விடை தருகின்றார். 

சாலமன் பாப்பையா, பேரா ஞானசம்பந்தன் போன்றோர் முன்னுரை வாழ்த்துரை வழங்கியிருப்பது புத்தகத்திற்கு இன்னும் பலம் சேர்க்கின்றது.
கவிஞரின் உரையும் ஒரு ஓடும் நதி போன்று வாழ்கை தத்துவம், இறை நம்பிக்கை ஊடாக ஒரு இனிமையான கீதமாகத்தான் உள்ளது. அட்டைப்படத்தில் காணும் பச்சை நிறம் கனவுகளில் வனைப்பான பயணங்களை சொல்கின்றதா என வாசிப்பவர்கள் சொல்ல வேண்டும். ஒரு நல்ல கவிதை புத்தகத்தை வாசித்த மகிழ்ச்சியுடன் எளிதில் மறையாத உணர்வுகளுடன் நீங்களும் பயணிப்பீர்கள் என துணிவுடன் கூறலாம்.

எளிமையின் இருப்பிடவும் பண்பின் இலக்கணமும், சகோரத்துவத்தின் பிரதியாம் சகோதரை புத்தக விழாவில் சந்தித்ததும் நான் அவருடைய சொந்த சகோதரியாக  நேசிக்கப்படுவதும்  இறைவனின் கொடைதான் என்ற நிறைவுடன் சகோதரின் புத்தகத்தை என் பார்வையில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி கூறி இப்பதிவை உங்கள் முன் படைக்கின்றேன். நீங்களும் வாங்கி வாசித்து கவிதையை அனுபவிக்க வேண்டுகின்றேன். 



ரிக்கியின் கடைசி மூச்சும்-கிருஸ்துமஸ் தாத்தா வருகையும்!

 இளைய மகன் தான் நாய் பூனைகளை பராமரிப்பதும் அவையுடன் அன்புடன் கொஞ்சி விளையாடுவதும் என நேரத்தை செலவிடுபவன். அவன் விளையாடுவதை கண்டு ரசிப்பது மட்டுமே என் வேலை. உயிரினங்களிடம் பாசம் உண்டு எனிலும் இனம் புரியாத பய உணர்வு உள்ளதால் இவயை பத்து அடி தள்ளி வைத்து பார்ப்பது தான் என் விருப்பம். 20 நாள் முன்பு வந்த இந்த குட்டி நாய் கூட வீட்டிற்குள் வந்தால் எனக்கு பிடிப்பதில்லை. இதை மிரட்டுவதற்கு என்றே ஒரு சாட்டை போன்ற கம்பு வைத்திருந்தேன். நான் அடிக்கும் போல் அருகில் செல்லும் போது ஓடி வாசல் பக்கம் நின்று கொண்டு என்னை நோக்கி குரைக்கும்.  இதன் தோன்றம் நாலு மாதம் முன்பு காணாமல் போன றிக்கி நாயுடன் ஒத்து இருந்தால் இதையும் ஏற்று கொண்டோம். இதன் பார்வை செயல் கூட பழைய  றிக்கி நாயை போன்றே இருந்தது. அது ஒரு நாள் காணாமல் போனதும் அதை போன்ற நாய்களை வழியில் காணும் போது பெயர் சொல்லி அழைப்பதும் என்றாவது வரும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு நாலு மாதம் கடந்ததால் இனி வராது என்ற எண்ணம் ஆரம்பிக்கும் நேரம் தான் இந்த குட்டி வந்து சேர்ந்தது. றிக்கியின் குட்டியாக கூட இருக்கலாம்.  

இது வருவதற்க்கு ஒரு வாரம் முன்பு பூனைக்குட்டி ஒன்றும் வந்து சேர்ந்தாலும் நாய்  மனிதனிடம் காட்டும் அன்பு பூனையிடம் தெரிவது இல்லை. பெரிய மகனோ பூனை தன்னை முறைப்பதால் பிடிக்கவில்லை என்று கூறி கொண்டிருந்தான். பூனை ஒரு பொறாமை குணம் பிடித்தது என்றும்  நாய் குட்டி பூனையுடன் நட்பாக விரும்பினாலும் தன் கையால் அடித்து, சீறி விரட்டி விடுகின்றது என்றும் குறை கூறி கொண்டிருந்தனர்.

கடந்த 2-3 நாட்களாக சோர்ந்து இருந்தது. சரியாகி விடும் என்று இருந்த எங்களுக்கு இன்று காலை சுருண்டு படுத்து கொண்டு வாலை மட்டும் ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தியதும் வருத்தமாக போய் விட்டது.  நாயை எடுத்து கொண்டு மருத்துவரை கண்டு வந்த மகன்கள் மாலை பள்ளி விட்டு வந்து எடுத்து செல்கின்றோம். மருத்துவரிடம் தற்போது மருந்து இல்லை என்று கூறியதால் திரும்பி கொண்டு வந்தனர். 
நேரம் ஆகும் தோறும் அதன் கண் உள்வாங்கி சலனம் நிலைத்து வர ஆரம்பித்து விட்டது.  பின்பு அதன் இடத்தை விட்டு எழுந்து வாசல்ப்படி பக்கம் வந்து படுத்து கொண்டது.  ஒவ்வொரு முறை ரிக்கி என அழைத்த போது சிறு ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. நேரம் போகப்போக கண் திறக்கவே இல்லை, ஆனால் கையால் கொசுவை விரட்டி கொண்டே இருந்தது. பின்பு கைஅசைவும் நிலைத்து மூச்சு  விடுவது வயிறு அசைவில் மட்டும் தெரிந்தது. 

 யாரை அழைத்து உதவி கேட்பது என்று எண்ணிய போது யாரும் இல்லை என்று உறைத்தது. நகர வாழ்க்கையின் அர்த்தம் இல்லாய்மை வெளிகொணர்ந்தது அந்நேரம். கடிகாரத்தை நோக்கி கொண்டே இருந்தேன் மகன்கள் வர இன்னும் பல மணிநேரம்!  அதன் நிலையை கண்டு கொண்டு இருக்க மனம் தாங்கவில்லை. இரண்டு நாள் முன்பே மருத்துவரை அணுகவில்லையே என்ற குற்ற உணர்வு கண்ணீரை தான் வர வைத்தது. பகல் 11-12 மணியுடன் அதன் கடைசி மூச்சும் நின்று விட்டது.  உடல் அப்படியே கம்பு போன்று மாறி விட்டது.


பள்ளி விட்டு வரும் மகன் தான் சிந்தனையில் வந்தான். அவன் வரும் போது வரவேற்கும் நாய், காலை பள்ளி பேருந்து அருகில் போய் விடை சொல்லி அனுப்பும் நாய்! குழி தோண்டி புதைத்து விடலாம் என உதவிக்கு ஆட்களை தேடினேன். பதிவாக செடிக்கு சாணம் கொண்டு தரும் ஆடு மேய்க்கும்  நபரும்  இன்று  காணவில்லை.  "ரிக்கி எப்படி உள்ளது" என்ற கேள்வியுடன் மகனும் வந்து விட்டான். "வருத்தம் கொள்ளாதே செத்து விட்டது". "புதைக்க வேண்டும் என்றேன்". அவனுக்கு நம்பிக்கை இல்லை, எப்படியம்மா என்று வினவி கொண்டே இருந்தான். அருகில் சென்று பார்த்து விட்டு சமாதானம் ஆகி வந்தான். மண் வெட்டி எடுத்து இருவருமாக குழி தோண்டினோம்.  ரிக்கியை நான் தான் எடுத்து குழியில் வைப்பேன் என்று கூறி எடுத்து வைத்து மண் இட்டு மூடினான். டாக்டர் நாயை பார்க்கவே இல்லை அவசரமாக கிளம்பி போய் விட்டார் அம்மா என்றான் சோர்வாக கல்லில் இருந்து கொண்டு.  இனியும் இதுபோல் ஒரு நாய்குட்டி நம்ம வீட்டிற்கு வரும்.  குளித்து விட்டு வா..  கம்யூட்டர் தருகின்றேன் என்றதும் பின்பு கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கினான். இன்று கைபந்து விளையாட மைதானத்திற்கும் போகவில்லை.

 6 மணியானதும் பெரியவர் வந்து சேர்ந்தான். ரிக்கி எங்கே என்றான்? பால் வாங்கி வா குழியில் ஊற்றவேண்டும் என்றேன். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. காலையில் இருந்து உணவு எடுக்காத சோர்வும் எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது. வெளியூரில் இருந்த என்னவர் அலைபேசி வழியாக துக்கம் விசாரித்து கொண்டார், மேலும் இனி நாய் வளர்க்க வேண்டாம் பிரிவு வேதனையாக உள்ளது என அறிவுரையும் வழங்கி கொண்டிருந்தார். அடுத்த ஊரில் இருக்கும் தங்கை குடும்பத்துடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டோம் துக்கத்தை. தங்கை வீட்டிற்கு வந்துள்ள அம்மா தான் "கவலை கொள்ளாதீர்கள் நமக்கு வரும் தீங்கு வளர்ப்பு பிராணிக்கு வந்து போய் உள்ளது" என ஆசுவாசப்படுத்தினார். 

பின்பு மகன்கள் கேரம் விளையாடினர், நான் வாசிப்பில் இருந்தேன். மூவருக்கும் மனம் சரியில்லை. போர்டை எடுத்து மூலையில் வைத்தனர் நானும் புத்தகத்தை அலைமாரையில் வைத்து விட்டு பள்ளி வகுப்புக் கதைகளை அவர்கள் சொல்ல, நான் கேட்பதுமாக 9 மணியானதும் தூக்கம் வர துவங்கியது. 

இப்போது வெளியில் பாட்டு சத்தம். ஆலயத்தில் இருந்து கிருஸ்துமஸ்  தாத்தா-பாட்டுடன் வந்து சேர்ந்துள்ளனர். வீட்டில் இன்று எதையும் ஒழுங்குபடுத்தி வைக்கவோ வரும் நபர்களுக்கு இனிப்பு பரிமாறவோ ஆயத்தம் எடுக்கவும் மறந்து விட்டோம். குழந்தைகளும் நல்ல தூக்கம், இனி எழுப்பி தாத்தா ஆடும் ஆட்டத்தை காணும் மனநிலையில் அவர்களும்  இல்லை. வீட்டிற்கு பெல் மாட்டாதது நல்லதாக போய் விட்டது என்று இன்று தான் தோன்றியது. பக்கத்து வீட்டு அழைப்பு ஒலி தான் கேட்டு கொண்டிருந்தது.

 காலை சூழல் தான் நினைவிற்கு வந்தது. ரிக்கி நாய்க்கு உதவிக்கு யாரும் கிடைப்பார்களா என்றால் ஒருவரும் நினைவிலும் வரவில்லை. இந்த குழுவில் உள்ளவர்கள் கூட நம் வீட்டு விலையை வைத்து நம்மை விலையிட்டு சில பிடிக்காத கேள்விகளை இட்டு செல்வார்கள் என்று தெரியும். ஆனால் அவர்கள் போகும் படியாக இல்லை எங்களை எழுப்பியே தீருவோம் என உரக்க பாட்டை ஒலிக்க செய்து கொண்டு நிற்கின்றனர்.

 கிருஸ்தவ வாழ்கையிலும் நாம் அறியாதே இது போன்ற சில  ஆசாரங்களை புகுத்தி விட்டனர். டிசம்பர் முதல் நாள் அன்றே நட்சத்திர விளக்கு மாட்ட வேண்டும், வண்ண விளக்குகளால் வீட்டை அலங்கரிக்க வேண்டும். ஏனோ இதுவெல்லாம்  அன்னியமாக படுகின்றது இன்றைய மனநிலையில். கிருஸ்தவ அன்பை வெளிப்படுத்த  வருவதாக சொல்லி கொண்டு குளிர் இரவில் வந்து காணிக்கை  வாங்கி விட்டு  'ஒரு அனாதை' என்ற  உணர்வையை விட்டு செல்வார்கள். தமிழகம் வந்த பின்பு கிருஸ்தமஸும் மதம் கொண்டு தொடர்புபடுத்தி கொண்டாடுவதும் கிருஸ்த வீட்டில் மட்டும் நட்சத்திரம் மின்னுவதும் அதை அடையாளமாக கொண்டு கிருஸ்தவ வீட்டிற்க்கு மட்டும் கிருஸ்துமஸ் தாத்தா வருவது என்பதும் ஏற்று கொள்ள இயலவில்லை. 

கடந்த ஐந்து வருடமாகவும்  கேட்கும் ஒரே கேள்வி ஐயா எங்கு வேலை பார்க்கிறார்?, நீங்க என்ன செய்கிறீர்கள்?, பெயர் என்ன? என்று கேட்டு எழுதி செல்வது மட்டுமல்ல; இந்த காட்டுக்குள்ள எப்படி பயமில்லாமல் இருப்பீர்கள் என சில முதிய பெண்மணிகளின் கேள்விக்கும் பதில் சொல்லவேண்டி வரும். இன்னும் சிலரோ நம்மை வேற்று கிரகவாசிகள் போன்று அடிமுடி பார்ப்பார்கள். அத்தான் வீட்டிலிருந்தால் அவரை முன் நிறுத்தி நாங்கள் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். குழந்தைகள் இன்னும் எழவில்லை. அவர்கள் சோர்ந்த மனதை எழுப்பி புண்படுத்தவும் விரும்பவில்லை. ஆனால் நான் விழித்து விட்டேன்.  மறுபடியும் காலை முதலுள்ள ரிக்கி நாய் குட்டியின் கடைசி துளிகள் மனதில் வரத் துவங்கி விட்டது. நேரம் இரவு 12 மணி! கிருஸ்துமஸ் தாத்தா ஆடிபாடும் நேரம் தான் ஆனால் மனது தான் இன்று கனத்து கிடக்கின்றது கதகை திறந்து மகிழ்ச்சியுடன் வரவேற்க மனம் இல்லை!!!  



7 Dec 2012

இணையத்தை பயண்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியது!


தொடர்பியலில் முதுகலைப் பாடத்திட்டத்தில் ‘நவீன ஊடகம்’ ஒரு பாடப்பகுதியாக இருந்தது.  பேராசிரியர் இணையமுகவரி உள்ளவர்களை பற்றி வினவிய போது 14 பேரில் 3 பேருக்கே இருந்தது.  எனக்கும் இருந்தது என்பது ஒரு பெருமையாகத்தான் இருந்தது. ஆனால்  கணவர் உதவியில்லாது தனியாக கையாள தெரிந்திருந்தேனா என்றால்  இல்லை என்பதே உண்மை. பின்பு இணையத்தில் கணக்கு துவங்கி இதனூடாக வலைப்பதிவுகள் உலகில் வந்த பின்பு தான் கணினி பயண்பாடு அதிகரித்தது.  

வலைப்பதிவுகள் தான் என்னை ஈர்த்த ஒரு இணையப்பகுதி. இதனாலே என்னுடைய இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கு என ஈழ வலைப்பதிவுகளை பற்றிய ஆய்வை தேற்வு செய்திருந்தேன். நம் கருத்துக்களை அச்சுறுத்தல் அற்று வெளியிட தகுந்த தளமாக உள்ளதும்; தான் காணும் கற்று உணரும், நம்மை பாதிக்கும் அச்சுறுத்தும் செய்திகளை தகவல்களாக தர இயல்கின்றது என்பதை சிறப்பாக கண்டேன்.    நம்மை அறிவாளிகள் என்று காட்டி கொள்வதை விட மனதில் தோன்றுவதை இயல்பாக  வெளியிட வலைப்பதிவுகள்  ஒரு தளம் அமைத்து கொடுக்கின்றது என்பது தான் இதன் பயன்பாட்டில் மிகவும் ரசிக்க வைத்தது.

எங்கள் வீட்டுக்கு என தனி இணைய இணைப்பு வந்த போது முதல் என் தொலைகாட்சி காணும் நேரம், வாசிக்கும் நேரம், பேசும், தூங்கும் நேரம் கூட விழுங்கும் பூதமாக இணையம் வந்து சேர்ந்தது.  இணையம் வழி பல அறிய பாட புத்தகங்கள், கட்டுரைகள், கதைகளில் நான் சென்று வந்துள்ளேன். பல  உன்னதமான மனிதர்களுடனான நட்பும் அறிமுகவும் கிடைத்தது. 

தமிழக கலசாரத்தில் பெண்கள், ஆண்களுடன் பேசினாலே கற்பு கலைந்துவிடும் என்று நம்பும் சமூகத்தில், அழகான நட்பை உருவாக்க பெரிதும் பயண்படுகின்றது. யாரிடம் என்ன பேசுகிறோம் என்ற கருதல் இருந்தால் ஆபத்து வருவதற்க்கு வாய்ப்பு இல்லை. இது ஒரு கருத்து பரிமாற்ற, தகவல் பரிமாற்ற தளம் மட்டுமே என்ற புரிதல் மிகவும் அவசியமாகின்றது. இதில் புது உறவுகளை தேடுவதோ, நாடுவதோ தான் ஆபத்தில் கொண்டு போய் விடும். இந்த உறவையும் திறந்த புத்தகமாக பேணும் போது நம் பாதுகாப்பை சொந்தமாக்கி கொள்கின்றோம். முகநூல் போன்ற தளங்களால் கொலை செய்யப்பட்ட பெண்கள் செய்திகள் வரை எட்டுகின்றது.  இங்கு எல்லாம் தொழிநுட்பத்தை குறை சாராமல் பயண்படுத்தும் விதத்தையே நோக்க வேண்டும். 

ஆனால் பெண்கள் குழந்தைகள் இதை பயண்படுத்துவதை முற்றிலும் தடைசெய்யும் படியாக   வெகுசன ஊடகம் வழியாகவும் கருத்து பரவப்படுகின்றது.  இன்றைய வாழ்கையில் முகநூல் போன்ற தளங்கள்  கருத்து பரிமாற்றத்திற்க்கு மிகவும் பயண்படுகின்றது. அரசியல்வாதிகள் கூட இதை பயண்படுத்தவும், பயண்படுத்துபவர்களை கட்டுப்படுத்தவும் விளைவது இதன் பலன் தெரிந்ததாலே. 

படித்தவ்ர்கள் பயண்படுத்தும் இணைய தளங்களில் கூட தேவையற்ற சண்டை அதை தொடர்ந்த கெட்ட வார்த்தைகள் பயண்படுத்துதல் என ஆக்கம் கெட்டு பயண்படுத்துபவர்களும் உண்டு. ஒருவர் பேசுவது விரும்பவில்லை என்றால் தறிகெட்டு பதில் பேசுவதை விடுத்து நட்பு வட்டத்தில் இருந்து விலகுவது, விலக்குவது அல்லது  பதில் தராது மைவுனம் காத்து வீழ்த்துவதே சிறந்தது.

உள்பெட்டி கருத்து பரிமாற்றம் மூலம் தான் பலர் சிக்கல்களை சந்திக்கின்றனர். வெளியாகாத ரகசியங்கள் இல்லை அதிலும் நவீன ஊடகத்தில் எல்லா தகவல்களும் சேகரிக்கப்படுகின்றது என்ற புரிதல் இருக்கும் போது பயண்படுத்தும் ஒவ்வொரு சொல்லிலும் கவனமாக கையாள முன்வருவோம். இதில் பெண்கள் இன்னும் ஜாக்கிரதையாக தகவல்கள் அனுப்ப வேண்டியுள்ளது.  சுவரில் மிகவும் பண்பானவர்கள் அறிவாளிகள் போன்று காட்டி கொள்பவர்கள் கூட உள்பெட்டி வழியாக தகாத தகவல்கள் அனுப்பக்கூடும். உடன் நட்பு வட்டத்தை துண்டிக்காது,  பதில் கொடுத்து அவர்களை பகுந்தாய்ந்து கொண்டு இருப்பது மேலும் சிக்கலையே வரவழைக்கும்.

இதில் ஒரு சில இளைஞர்களுக்கு சில வெற்று எண்ணங்கள் உண்டு. பல மணிநேரம் இணையத்தில் செலவழிக்கும் பெண்களை தாங்கள் நினைத்த படி வளைத்து விடலாம் என்றும் வெட்டியாக கதையளப்பவர்க்ள் என்றும். இந்த தருணங்களில் பெண்கள் இம்மாதிரியான நபர்களை புரக்கணிப்பதே சிறந்த வழியாகும். இவர்களை விட ஆபத்தானவர்கள் முதிர்வயது சில ஆண்கள்!ரொம்ப நல்லவர்களாக பொறுப்பானவர்களாக நமது பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்களாக  பேசி மடக்க பார்ப்பார்கள். கவிஞர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்... கவிதைகள் வடிவில் செய்திகள் வரும். நாம் புரிந்து கொள்ளவும் இயலாது புரியாது இருக்கவும் இயலாது. நாம் பொருள் கேட்டாலும் நம் மனநிலை புரிந்து மாற்றி பொருள் சொல்வார்கள். நான் இப்படி தான் நினைத்து அனுப்பினேன், நான் உங்களை அப்படி பாவிக்கவில்லை என பல சமாதானங்கள் வந்து சேரும். இவைகளில் மாட்டாது தப்பிப்பது பெண்களிம் புத்தியை பொறுத்தது.

பல பதவியிலுள்ள, படித்த அறிவுள்ள பெண்கள் என நினைப்பவர்கள் கூட மாட்டிகொள்கின்றனர். துவக்கத்தில் விளையாட்டாக எடுத்து அது பின்பு பரிவாக மாறி தங்கள் வாழ்கையை அழித்துகொள்ளும் மட்டும் காத்திருக்கல் ஆகாது. நம்பக தன்மை என்பது இணையத்தில் எதிர்பார்ப்பது மிகவும் அரிதாகும். வார்த்தை ஜாலங்களால் பெண்களை மடக்கும் நபர்கள் இணையத்தில் உண்டு. இவர்களை கயவர்கள், நம்பிக்கை துரோகிகள் என அழைத்து நாம் கோபப்படுவதை விட அவதானமாக கண்டு விலகியிருப்பதே சிறந்தது. 

முகநூல் போன்றவற்றின் மூலம் நட்பாகிறவர்கள் எல்லோரையும் தெரிந்திருக்க கூடும் என்பது இயலாத விடயம். ஆனால் இவர்களை நம் நட்பு வட்டத்தில் சேர்க்க தகுந்த நபரா என்று அவர்கள் நண்பர்கள், அவர்கள் இடும் புகைப்படங்கள் மற்றும் தொகுப்பால் நாம் அவர்களை கண்டு உணர இயலும்; . திருமணம் ஆகாத பெண்கள் என்றால் பெற்றோர் அறிவோடும் திருமணம் ஆனவர்கள் என்றால் கணவர் புரிதலோடும் சமூகத்தளங்களில் பங்கு கொண்டால் தங்கள் பாதுகாப்புக்கும் வாழ்கைக்கும் நலம்.

ஆண்கள் தான் பெண்கள் பாதுகாப்புக்கு களங்கம் விளைவிப்பவர்கள் என்றில்லை. சில பெண்களும் உண்டு. ஒரு நபருக்கு அறியாது அவர் நிலத்தகவல்களை தன் சுவரில் பதிந்து கேலி செய்வது, விவாதத்திற்க்கு உள்ளாக்குவது, அவர்கள் பெயரை கெடுக்க முற்படுவது என எல்லா வில்லத்தனங்கள் செய்பவர்களில் பெண்களும் உண்டு. ஒரே வழி நட்பில் இருந்து விலகுவது, அவர்களை நம் பக்கம் நெருங்காது தடுத்து நிறுத்துவது ஒன்று தான். இதனால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபெறுவது மட்டுமல்ல தெளிவான சிந்தனையுடம் நாம் நம் வேலையை நோக்கலாம்.

என் அனுபவ கதையுடன் பதிவை முடிக்கின்றேன். நெல்லை அக்கா எருவர் மிகவும் நட்பாக பழகி வந்தார். அழைப்பது கூட அம்மா என்றே இருக்கும். ஒரு முறை திடீர் என எனக்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தார், உங்களை நல்லவர் என எண்ணியிருந்தேன் உங்களுக்கு இன்னார் இன்னாருடன் நட்பு. அவர்கள் மோசமானவர்கள் ஆகையால் உங்களை நட்பில் இருந்து விலக்குகின்றேன் என்று. இதுவும் நல்லதே என்று இருந்த போது சில நாட்கள் கடந்த பின் உங்களை பற்றி புரிந்து கொண்டேன்,பழையதை மறக்கவும் உங்களிடம் நட்பு கரம் நீட்டவும் வந்துள்ளேன் என்றார். நானும் ஏற்று கொண்டேன். இதே நபர் நான் ஒரு புத்தகம் வெளியிட உள்ளேன் என தெரிந்து கொண்டு நான் எழுதும் கதைகளை அவர் சுவரில் இட்டு விவாதிக்க ஆரம்பித்தார், பின்பு நான் பகிரும் சில சம்பவங்களை கூட கேலியாக குறிப்பிட்டார் . நான் இல்லாத இடங்களில் என் பெயரை பயண்படுத்துவதை அறிந்ததும் தடை செய்து(block) வெளிவந்தேன். 


இன்னும் சிலர் உண்டு நாம் பகிரும் படங்கள், மற்றும் எழுத்துக்களை வைத்து நம்மை பற்றி ஒரு கணக்கு வைத்து கொண்டு கதைக்க முன் வருவார்கள். இவர்கள் அனைவரையும் தயாதாட்சண்ணியம் இன்றி விரட்டி அல்லது வெட்டி விடுவது மட்டுமே சுதந்திரமாக மனச்சுமை இல்லாது இணையத்தில் சுற்றி  வர நமக்கு உதவியாக இருக்கும். பெண்களுக்கு சமூக ஆளுமையில் முக்கிய பங்கு உள்ளது போலவே இணையத்திலும் தங்கள் ஆற்றலை உணர்ந்து இணையத்தில் ஆளூமை செலுத்துவோம். மாயயில் சிக்காமலும் அடிமையாக வாழாது இருந்தால் எங்கிருந்தாலும் சொர்கமே! 

  

5 Dec 2012

இணைய உலகத்தில் நான்!!


இன்றும் கணினி பயண்படுத்தாத, பயண்படுத்த தயங்கும்,  இணையம் பக்கம் வர பயப்படும், அனுமதி மறுக்கப்படும்  பெண்கள்; குறிப்பாக மிகவும் படித்த பெண்கள் உண்டு என அறிந்த போது ஆச்சரியவும் கொஞ்சம் அனுதாபவும்  இருந்தது.  கணினியுடனான என்னுடைய அனுபவ அலைகளும் மனதில் கடந்து சென்றதை பகிர விரும்புகின்றேன்.

 கடந்த 4 வருடமாக என் நேரத்தை  இணைய உலகத்தில் சுற்றி வருவதில் கொஞ்சம் அதிகமாகவே செலவிடுகின்றேன். 10 வது வகுப்பு முடிந்து தட்டச்சு வகுப்புக்கு போய் கொண்டிருந்த எல்லா மாணவர்களும் கம்யூட்டர் வகுப்புக்கு மாறி போகத் துவங்கிய காலம் நானும் கம்யூட்டர் வகுப்பில் சேர்ந்தேன். 1999 துவக்கத்தில் எங்கள் பகுதியில் கணினி வகுப்பில்  MS –Dos மட்டுமே   கற்று கொள்ள முடிந்தது. தலையும் காலும் புரியாத மொழியாக இருந்தது.  என்றிருந்தாலும் வாத்தியார் சொல்லியதை நோட்டில் எழுதி மனப்பாடம் செய்து தேர்வு எழுதிய நாட்கள் அது.  கம்யூட்டர் தொட்டு படிக்க அனுமதி கிடையாது.   தூரத்தில் இருக்கும் கணினியை நோக்கி அதன் சிறப்பு, துரிதமான   பணி எல்லாம் கற்று தந்தனர்.  அன்றைய நாட்களில் கம்யூட்டரின் விலை 60 ஆயிரத்திற்க்கு மேல் இருந்தது. இதை பராமரிக்கவும் செலவு செய்தனர்;  குளிர்ரூட்டப்பட்ட அறையில் செருப்பு அணியாது மட்டுமே அதன் அருகின் செல்ல அனுமதித்தனர்.

கல்லூரி படிப்பு நேரம் “கோபாள்” என்ற வணிகம் சார்ந்த ஒரு கம்யூட்டர் வகுப்பு இருந்தது.   கம்யூட்டர் பார்க்காமலே அந்த கணினி பாடம் படித்து எழுதி தேற்வானோம்.   கல்லூரியில் இருந்தது  4 கம்யூட்டர். அதையும் ஒரு கண்ணாடி அறைக்குள் வைத்துருந்தனர்.   பராமரிக்கும் மேலாளருக்கு மட்டும் தான் அதை தொடவோ கிட்ட இருந்து பார்க்கவோ அனுமதி இருந்தது.  
திருமணம் முடிந்த பின்பு  ஸ்வெட்டர் பின்னல்  படிக்கும் நேரத்தை குறைத்து கொண்டு  கம்யூட்டர் கற்க சென்று வந்தேன்.   அப்போது எங்கள் குடியிருப்பு  டவுணில் இருந்து 7 கி.மீ தள்ளி ஒரு வனப்பகுதியில் இருந்தாலும்,   கம்யூட்டர் கொண்ட ஆற்வ மிகுதியால் தினம் கூட்ட நெரிசலில் பயணித்து கற்று தேற்ந்தேன்.    ஒரு கோப்பை தந்து தட்டச்சு செய்து திரையில் கண்ட போது மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது.

என்னவர் தனது வேலை நிமித்தமாக கம்யூட்டருடன் அசுர வேகத்தில் பயணத்து கொண்டிருதார்.    ஆனால் எனக்கு 2004 கடைசியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது தான்  கம்யூட்டருடன் மறுபடியும்    நட்பு உருவாக  ஆரம்பித்தது.  முதலில் வணிக கடிதம், பின்பு தரவுகள் பராமரிப்பதற்கு என excel லிலும் வேலை செய்ய வேண்டியிருந்தது. கம்யூட்டர் கல்வி கூடத்தில் கற்றதை விட பல மடங்கு அதிகமாக வேலை வழியாக கற்று கொண்டேன்.   அப்போது தான் எங்கள் நிறுவனத்தில் டாடா கம்பனியின் பிரத்தியேக மென் பொருள் கொண்ட பாக்கேஜ் பயண்படுத்தி தரவுகள் சேகரிப்பது மட்டுமல்ல தேவையான தகவல்களை  நொடி பொழுதில் எடுக்கவும் பயிற்சி தரப்பட்டது.   எங்கள் வீட்டில்  கம்யூட்டர் வாங்கப்பட்ட போது என்னவர் அலுவலக பணி, எங்கள் குழந்தைகள் விளையாட்டுக்கு என கம்யூட்டரை பங்கிட்ட போது எனக்கு கம்யூட்டர் பல பொழுதும் கிடைக்காமலே ஆகியது.  அப்பா, பிள்ளைகள் போட்டி போட்டு ஒன்றாக இருந்து கம்யூட்டர் விளையாட்டு விளையாடிய போது அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது என பிள்ளைகள் கேலி செய்வார்கள்.   அவர்கள் வீட்டில் இல்லாத போது தான் நான் கம்யூட்டரை தொடக்கூட முடிந்தது.   

இணைய பயண்பாடு பெண்களுக்கு நல்லதா தீயதா?...............அடுத்த பதிவில்!