அடோலசன்ஸ்
Adolescence என்பது ஜாக் தோர்ன் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் (Jack Thorne and Stephen Graham) ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சி உளவியல் குற்ற நாடகத் தொடராகும். பிலிப் பரான்டினி(Philip Barantini) இயக்கியுள்ளார்.
மார்ச் 13, 2025 அன்று நெட்ஃபிக்ஸ் இல்
திரையிடப்பட்டது, அதன் இயக்கம், எழுத்து மற்றும் ஒளிப்பதிவுக்காக பல பாராட்டுகளை பெற்றது. வாராந்திர தொலைக்காட்சி மதிப்பீடுகளில் முதலிடத்தில்
இடம்பிடித்த முதல் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சி ஆகும் அடோலசன்ஸ் Adolescence தொடர் நாடகம்.
ஜேமி மில்லர் (ஓவன்
கூப்பர்) என்ற 13 வயது பள்ளி மாணவனை
மையமாகக் கொண்ட கதை இது. தனது வகுப்புத் தோழி கேட்டி லியோனார்டைக் கொலை
செய்ததாக சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் ஜேமி மில்லரைக் கைது செய்கிறார்கள். காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பின்னர் ஒரு பாதுகாப்பான சீர்திருத்த மையத்தில் காவலில்
வைக்கப்படுகிறார். ஜேமியின் பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தடயவியல்
உளவியலாளரின் நேர்காணல்கள், சமூக ஊடகங்களில் ஜேமியின் செயல்பாடுகள் மற்றும் பெற்ற மனோவியல் , பெண்கள் குறித்த ஜேமியின் கருத்துக்களை
வெளிப்படுத்துகின்றன.
தடுப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்படும்போது
கண்ணீர் மல்க ஜேமி தான் நிரபராதி என்று கூறுகிறார். ஜேமியிடம் குற்றம் செய்தானா என்று தந்தை எடி தனிப்பட்ட முறையில்
மகனிடம்
கேட்கும் போதும் தான் குற்றம் செய்யவில்லை
என்கிறான். ஜேமிக்காக
பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பார்லோ வந்து, முந்தைய இரவு பற்றிய காவல்த்துறை கேள்விகளுக்கு
பதிலளிக்க வேண்டாம் என்று ஜேமிக்கு அறிவுறுத்துகிறார்.
ஜேமியின் முறையான விசாரணையின் போது, இன்ஸ்டாகிராமில் பெண் மாடல்களைப்
பற்றி ஜேமி பல பாலியல் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக போலிஸ் அதிகாரிகள் கண்டுபிடிக்கின்றனர். பின்னர் ஜேமியிடம் வகுப்புத் தோழி கேட்டி
லியோனார்டைப் பற்றி விசாரிக்கின்றனர். ஜேமி கேட்டியைக்
குத்திக் கொன்ற சிசிடிவி காட்சிகளை காட்டி விசாரிக்கையில் ஜேமியால் குற்றத்தை மறுக்க இயலவில்லை. ஜேமியின் தந்தை எடியும்
தனது மகன் செய்த குற்றத்தை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.
கொலை நடந்த மூன்று
நாட்களுக்குப் பிறகு, ஜேமி மற்றும்
கேட்டியின் வகுப்பு தோழர்களிடம் பேசுவதற்காக, ஜேமியின் நோக்கத்தையும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தின்
இருப்பிடத்தையும் அறிய, காவல்த்துறை அதிகாரிகள் ஜேமியின் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்கிறார்கள்.
கேட்டியின் நெருக்கமான தோழி ஜேட் கொலையால் மிகவும்
வருத்தமடைந்து தனது மன உளச்சலில் அதிகாரிகளை அவமானப்படுத்துகிறாள். பின்னர்
அவள் ஜேமியின் நண்பர் ரியானைத் தாக்கி, கேட்டியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டுகிறாள். விசாரணையில் கொலைக்கு பயன்படுத்தின
ஆயுதம் பற்றி தகவல் கிடைக்கிறது. அங்கு வைத்து சமூக இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில் மாடல்களின் கருத்துகளுக்கு
கேட்டி ரகசிய ஈமோஜி மொழியைப் பயன்படுத்தி பதிலளித்ததாகவும், மறைமுகமாக ஜேமிக்கு எதிராக ஒரு சைபர்புல்லிங்கில் ஏற்பட்டதாகவும் தகவல் கிடைக்கிறது. கேட்டியை மிரட்டுவதற்காக, நண்பனான ரியான் ஜேமியிடம்
கத்தியைக் கொடுத்து அனுப்புகிறான். கொலைக்கு சதி செய்ததற்காக ரியான் கைது
செய்யப்படுகிறான்.
கேட்டியின் கொலை நடந்த இடத்திற்கு ஜேமியின் தந்தை எடி சென்று மலர்களை
அஞ்சலி செலுத்துகிறார்.
கொலைக்கு ஏழு
மாதங்களுக்குப் பிறகு, தடயவியல் உளவியலாளர்
பிரையோனி அரிஸ்டன், ஜேமியை சீர் திருத்த மையத்தில் சந்திக்க வருகிறாள். ஜேமியில் மன திறன் குறித்த முன்
விசாரணை அறிக்கையைத் தயாரிக்கிறாள். வழக்கைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றிய ஒரு புரிதல் மட்டுமே தனது குறிக்கோள் என்று பிரியோனி ஜேமிக்கு
உறுதியளிக்கிறாள். ஆண்மை, பெண்கள் மற்றும் தன்னைப் பற்றிய ஜேமியின் அணுகுமுறை குறித்து
பிரையோனி ஜேமியிடம் கேள்வி எழுப்புகிறாள்.
கேட்டி தான்
ஈர்க்கப்பட்ட ஒரு வகுப்பு தோழருக்கு மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை
அனுப்பியதாகவும், அந்த சிறுவன் அதை பள்ளி
முழுவதும் பரப்பியதாகவும் ஜேமி நினைவு கூற்கிறான். உணர்ச்சி ரீதியாக
பாதிக்கப்பட்ட காயப்பட்ட கேட்டி அவனை மறுத்து, அவனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் கருத்துகளை இடத் தொடங்குகிறாள்.
கொலை நடந்து
பதின்மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஜேமி விசாரணைக்காகக் காத்திருக்கும் நிலையில், மில்லர்ஸ் குடும்பம் இயல்பு நிலைக்குத்
திரும்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எட்டியின் 50வது பிறந்தநாளில், ஜேமியின் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் ஜேமியின் குடும்பத்தை அவமானத்திற்கு
உள்ளாக்குகின்றனர். எடியும் மண்டாவும் ஜேமியின் இக்கட்டான நிலையை
ஏற்றுக்கொள்கிறார்கள், அவரது ஆன்லைன் பயண்பாட்டில் பெற்றோர்களான
தாங்கள் கவனம் செலுத்தாததற்காக தங்களைத் தாங்களே குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். இருப்பினும் தங்களது மகன்
தங்களது குடும்பத்தின் மகிழ்ச்சியில் இன்றிமையாத ஒருவர் என அறிந்து துயர் கொள்கின்றனர்.
ஒரு மனிதனின் குற்றங்களுக்கு அப்பாற்பட்டு, தனி மனிதனாக ஒரு குடும்பத்தின் ஆதரவு மற்றும் புரிதல்
எந்தளவு தேவை என சொல்லப்பட்டு உள்ளது.
அரசியல் தாக்கம்
நாடாளுமன்ற உறுப்பினரான
அன்னலீஸ் மிட்க்லி, இந்தத் தொடரை
நாடாளுமன்றத்திலும் பள்ளிகளிலும் திரையிட வேண்டும் என்று அழைப்பு விடுத்து உள்ளார். இத்தொடரின் கருத்தாக்கம்
பெண்கள் மற்றும்
சிறுமிகளுக்கு எதிரான பெண் வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்கொள்ள உதவும் என்று
கூறினார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இத்தொடரை ஆதரித்து, ட்விட்டரில் எழுதினார். ஸ்டார்மரின்
ஆதரவிற்குப் பிறகு, இத் தொடர் UK மேல்நிலைப் பள்ளிகளில் இலவசமாகப் காட்சிப்படுத்தப்பட்டது.
மார்ச் 2025 இல், தொழிலதிபரும் டிரம்ப் நிர்வாக
ஆலோசகருமான எலோன் மஸ்க், ஜேமியை சித்தரிக்க ஒரு வெள்ளை நடிகரை நடிக்க வைத்ததின் ஊடாக "வெள்ளையர் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டனர் என்று தனது ட்விட்டரில் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சி 2024 சவுத்போர்ட் கத்திக்குத்தை
அடிப்படையாகக் கொண்டது என்றும், குற்றவாளியை வெள்ளையராக சித்தரிப்பது வெள்ளையர்களை பேய்த்தனமாக வேண்டுமென்றே சித்தரிக்கும்
செயல் என்றும் குற்றம் சாட்டினார்.
ஆனால் இணை எழுத்தாளர் ஜாக் தோர்ன் Jack Thorne, எலோன் மஸ்கின் கூற்றை "அபத்தமானது" என்று குறிப்பிட்டார். மேலும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் எந்த நிஜ வாழ்க்கை நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.
ஜேமியின் வீட்டில் அன்பான பெற்றோர் பாசமான
சகோதரி என அனைத்து நேர்மறையான தாக்கங்கள் இருந்தபோதிலும், ஜேமி குற்றவாளியாக மாறினார்.. அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவரது
செயல்களுக்கு "குற்றம் சாட்ட" வேண்டியதில்லை என்றாலும், மண்டாவும் எடியும் கண்ணீருடன்
தங்கள் பெற்றோருக்குரிய கடைமைக்காக பொறுப்பேற்கிறார்கள் என்று தோர்ன்
கூறுகிறார்.
இளமைப் பருவம் தொடங்கிய
இடத்திலேயே முடிகிறது: அதனால் ஜேமியின் அறையில் துவங்கப்பட்ட தொடர் அதே அறையில் முடிக்கபட்டது, பயணம் தொடங்கிய இடத்திலேயே
முடிவடைய வேண்டும் என்று தயாரிப்பாளர் கிரஹாம் கூறுகிறார். ஜேமியின் டெட்டி பியரிடம் எடி மன்னிப்பு
கேட்கும்போது அந்த சிறுவனுக்கான உணர்ச்சிபூர்வமான நிலைப்பாடு - கேட்டியைக் கொல்ல
வழிவகுத்த அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளையும் ஜேமி கற்றுக்கொண்ட அறை
இதுதான் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அடாலசென்ஸ்( தொடரின் தொடக்கத்தில், ஜேமி போன்ற 13 வயது சிறுவன் ஒருபோதும் இதுபோன்ற
குற்றத்தைச் செய்ய முடியாது என்று பார்வையாளர்களை நம்ப வைப்பதில் இயக்குனர் உறுதியாக இருக்கிறார். ‘ஓ கடவுளே, இந்தக் கைது பயங்கரமானது. இச்சிறுவன் இதைச் செய்திருக்க
வாய்ப்பே இல்லை’ என்று பார்வையாளர்களை நினைக்க வைக்கின்றனர். போலீசாரை கண்டதும் கால்சட்டையில் மூத்திரம்
போகும் சிறுவன் இக்கொலையை செய்து இருபானா!
என்று கேட்டு விட்டு தொடரின் முதல் இறுதி 10 நிமிடங்களில் குற்றவாளி ஜேமி என உறுதிப்படுத்தப்படுகிறது
தொடரின்
மேல் ஆர்வத்தை தூண்டுகிறது. ஜேமின் தந்தையான
எடியின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கும் கடத்துவது வழியாக பார்வையாளர்களை பங்குபெறும்
மனிதர்களாக மாற்றுகிறார்கள் இயக்குனர்கள்.
நமது டீனேஜ்
பையன்களுக்குள் என்ன நடக்கிறது?
ஏன் இப்படி
போன்ற கேள்விகள் ஒரு குழந்தையின் ஆண்மையைப் பற்றிய பார்வை, எந்த வகையான தந்தைகளால் வளர்க்கப்படுகின்றனர், குழந்தைகளின் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை மிகவும் கவனமாக தந்துள்ளனர் தொடரின் தயாரிப்பாளர்கள்
மற்றும் படைப்பாளர்கள்.
எபிசோடுகள் 2 மற்றும் 3, ஜேமியின் செயல்களுக்கான காரணம் "ஏன்"
என்பதைத் பார்வையாளர்களுக்கு எட்ட வைக்க உதவுகின்றன.
ஜேமியின் தன்னை பற்றி சுயமரியாதை இல்லாமை,
பள்ளியில்
கொடுமைப்படுத்தப்படுவதாக உணரப்படுவது மற்றும் சமூக ஊடக பயன்பாடு உள்ளிட்ட காரணிகளின் கலவையானது ஜேமியின் செயல்களுக்கு
பங்களித்ததை தொடரில் தருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஜேமி
ஒரு இன்செல் என்று கேட்டி பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவது, அவன் அவமானத்திற்கு உள்ளாகி
கோபமடைகிறான். அதை தொடர்ந்து கத்திக்குத்து கொலை நிகழ்கிறது.
இது 1968 இல் இரண்டு குழந்தைகளை கொலை செய்தற்கு ததண்டனை பெற்ற 11 வயது பிரிட்டிஷ் சிறுமி மேரி
பெல்லின் வாழ்க்கையை (மற்றும் கொலைகளை) ஆராய்ந்து எழுத்தாளர் கிட்டா செரெனியின் Cries Unheard: Why Children Kill புத்தகத்தால்
ஈர்க்கப்பட்டு இத்தொடர் உருவாக்கப்பட்து என்கின்றனர்.