30 Nov 2011

முல்லைப்பெரியார்-Mullaiperiyar Dam 999


டாம்999 என்ற பெயரில் சோஹன் ரோய் என்ற கேரளாவை சேர்ந்தவரின் படமே சமீபத்தில் ஊடகத்தில் பெரிதும் சர்ச்சை செய்யப்பட்ட படம்.   இதன் தயாரிப்பு BizTV network குழுமத்தின் மேற்பார்வையிலும் cinematographer ஆக விஜய் வின்சென்ட், பாடல் அவுசப்பச்சன், நடிப்பு விமலா ராமன் என ஒரு சிறந்த குழுவுடன்  வெளிவந்துள்ளது. இதன் விநியோக உரிமத்தை  வார்னர்  பிரதர்ஸ்(Warner brothers) எடுத்துள்ளனர்.  இப்படத்தை தமிழகத்தில் திரையிட கருணாநிதி தன் எதிர்ப்பை முதலாவதாக பதிவு செய்ததுடன் கேரளா - தமிழக அரசியலில் பெரும் குழப்பம் ஆரம்பித்து விட்டது.  தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வழமையான இண உணர்வை கொண்டு கூரிய அம்புகள் தயாரிக்க மலையாள மந்திரிகள் டெல்லியில் உண்ணாவிரதம், மக்கள் தொடர் கருத்துரையாடல், ஹர்த்தால்/பந்து என்று மட்டுமல்லாது; தமிழர்கள் மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும் என கொக்கரித்து கொண்டு ஜெயலலிதாவின் கோலம் எரிக்க என தமிழகத்தின் மேல் தங்கள் வெறுப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

டாம் அல்லது அணைக்கட்டு என்பது ஓடும் நதி நீரை ஒரே இடத்தில் செயற்கையாக தேக்கி வைப்பதாகும்.  அவ்வகையில் இயற்கைக்கு மீறிய மனிதனுடைய செயல்பாடுகளில் ஒன்று தான் 'அணைக்கட்டுகள்’ என்பதும்.  அணைக்கட்டுகளை அதன் உருவாக்க நுணுக்கங்கள் பொறுத்து பல வகைகளில் பிரிக்கின்றனர்.  இதில் gravity dam சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.  இருப்பினும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்லாது பூமியின் காலநிலையில் பெரியதொரு மாற்றத்திற்க்கு காரணமாகின்றது அணைக்கட்டுகள்.  இயற்கையான சூழலில் இருந்து மனிதன் விலங்குகள் பறைவைகள் வன்முறையாக  குடிபெயர நிர்பந்திக்கப்படுகின்றன.  ஒரு பொது நன்மை என காரணம் காட்டி பல லட்சம் மக்களை குடிபெயிர செய்கின்றனர்.  1960 ல் இந்தியாவின் ஹிமாசலில் போங்( Pong Dam) அணைக்கட்டு கட்ட முடிவெடுத்த போது  1 லட்சம் 50 ஆயிரம் மக்களை குடிபெயர செய்ததுடன் வளமையான வாழ்க்கையை அழித்து மக்களை ஏழ்மைக்கு தள்ளினர். மேலும் எதிர்ப்பு தெரிவித்த மக்களை அன்றைய உள் துறை அமைச்சராக இருந்த   சர்தார் வல்பாய் பட்டேல் “தண்ணீரால் மூழ்கடித்து கொன்று விடுவோம்” என மிரட்டியதும் செய்தியே!
                                                                                                                                                                                            மின்சாரம் தயாரிப்பதற்க்கு என்று சீனாவில் கட்டப்பட்ட 3 அணைக்கட்டுகளுக்கு என ஒரு மிலியன் மக்கள் குடியிருப்புகளை இடம் பெயரசெய்துள்ளனர். உலக அளவில் நோக்கினாலும் 80  மிலியன் மக்கள் அணைக்கட்டு கட்டுமானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முட்டையில் இருந்து கோழியா அல்லது கோழியில் இருந்து முட்டையா என்பது போன்று அணைக்கட்டு மூலமாக தடுக்கப்படும் தண்ணீரின் அழுத்தால் பூமி அதிற்ச்சி உண்டாகலாம் அல்லது பூமி அதிற்வால் அணைகள் உடையவும் செய்யலாம் என்பதும் அறிவியலே!  கேரளா விஞ்சானிகள் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஆபத்தால் பொதியப்பட்டுள்ளது என்று கூறும் போது தமிழக விஞ்சானிகள் அணைக்கட்டு பலமாக உள்ளது என்று சொல்லும்  போதும் உண்மைக்கும், மொழி-ஊடகத்திற்க்கும் தொடர்பு உண்டா அல்லது இது அரசியல் விளையாட்டுகளில் ஒன்றா?, அல்லது உண்மையிலே தங்கள் உயிர் ஊஞ்சலில் தானா ஒன்றும் விளங்கவில்லை பாமரனுக்கு! சண்டே இந்தியன் போன்ற பண்முக மொழிகள் கொண்ட பத்திரிக்கைகள் கூட மலையாளப் பதிப்பில் மலையாளிகளுக்கும் தமிழ் பதிப்பில் தமிழர்களுக்கு சார்ந்து செய்தி வெளியிட்டிருந்தனர்.

சீனாவில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேரில் உயிரை பலி வாங்கிய 1975 ல் நடந்த மாபெரும் பங்கியோ(Banqiao) அணைக்கட்டு விபத்தின் தாக்கம் கொண்டு முல்லைப்பெரியார் அணையை மையமாக வைத்து 2011 ல் எடுக்கப்பட்ட குறும்படத்திற்க்கு (DAM S- The lethal Water Bombs)சிறந்த cinematographer, editing, Visual effect, Documentary short போன்ற விருதுகள் கிடைக்க இதன் தாக்கம் கொண்டு தன் 20 நிமிட குறும்படத்தை 50 கோடி ரூபாய் செலவில் எல்லா தன்மையும் கொண்ட ஒரு திரைப்படமாக இயற்றியுள்ளார்  பொரியாளரான சோஹன் ரோய் என்பவர். இயக்குனரின் கருத்துப்படி உலகிலுள்ள அணைக்கட்டுகளில் 85% மேல் அதாவது 40ஆயிரம் அணைக்கட்டுகள் 2020ல் காலாவதி முடிந்ததாக மாறப்போவதாக குறிப்பிடுகின்றார்.


கேரளாவில் 5 மாவட்ட மக்கள் சிறப்பாக வண்டிபெரியார், குமுளி போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் பூமி அதிற்வு, அணை உடையும் பயத்தில் வாழ்கின்றனர். கடந்த 5 வருமாக புது அணைக்கட்டு கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வந்தாலும் சமீபத்தில் 20 க்கு மேற்ப்பட்ட முறை இடுக்கி மாவட்டம் பூமி அதிற்ச்சியால் பாதிக்கப்பட்ட போது  அணைக்கட்டு தங்கள் பிரதேசத்தில் வேண்டாம் என போராட்டம் திசை மாறி உள்ளது.  பல தமிழர் வியாபாரிகளிடம் சில மலையாள காடையர்கள் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் அறியும் சூழலில் பெரும் குழப்பத்தில் அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை செல்கின்றது என்று மட்டும் விளங்குகின்றது.  ஒரு பக்கம் தமிழகத்தில் இரத்த உறவுகளின் அடாவடி பேச்சு என்றால், அங்கு தமிழர்கள் என்ற பெயரால் தாக்கப்படும் சூழல் வரமோ என்ற பயத்திலும் அணைக்கட்டு ஒருவேளை உடைந்தால் தங்கள் வேருகள் எக்காலத்திற்க்கும் அடையாளம் இல்லாது அழிக்கப்பட்டு விடுமோ என்ற திகிலிலும் நிம்மதியற்ற நாட்களை கடத்துகின்றனர் கேரளா தமிழர்கள்.

இரு மாநில மக்களுக்கு தீராத பகையை உருவாக்கும் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஆங்கிலையர்களால் 1895 ல் கட்டப்பட்டது.  தொடர்ந்து 24 வருடம் திருவிதாம்கூர் மன்னனிடம் கோரிக்கை வைக்கப்பட்டு தங்கள் அதிகாரத்தின் துணையுடன்; பல முறை தோல்வி கண்டும் பென்லி ஹுக் என்ற சிறந்த ஆங்கில பொறியாளரால் கட்டப்பட்டதே முல்லைப்பெரியார் அணைக்கட்டு.  இது கடல் மட்டத்தில் இருந்து 2889 அடி உயரத்தில்  8 ஆயிரம் ஏக்கர் இடத்தில்155 அடி நீளத்திலும் 1200 வீதியிலும் கட்டப்பட்டுள்ளது. மேற்க்கு பக்கம் ஓடும் பெரியார் நதியை கிழக்கு பக்கம் திருப்பி வைகை நதியில் சேர்க்கும் பங்கை இந்த அணைக்கட்டு செய்கின்றது.  இதில் இருந்து வரும் தண்ணீரால் தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.   மேலும் தரிசு நிலங்கள் விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது. அணைக்கட்டு உரிமை தமிழகம் பக்கம் இருந்தாலும்  நிலைகொள்ளும் இடம் கேரளா என்பதால் ஏக்கருக்கு 5 ரூபாய் என வருடத்திற்க்கு 40 ஆயிரம் ரூபாய்   தமிழகம் கேரளா அரசுக்கு செலுத்தி உள்ளது.

முல்லைப்பெரியார் தண்ணீர் முழுதும் தமிழகத்திற்க்கு என்று ஆங்கிலையர்கள்  காராரில் இருந்தாலும் சுதந்திர இந்தியாவில் அது செல்லுபடி ஆகாது என்று கூறி கேரளா அரசு 1975 ல்  மாற்றி அமைத்துள்ளது. மேலும் 6 ரிக்டர் அளவு பூமி அதிற்வை தாங்கும் சக்தி டாமுக்கு இல்லை என்பதை  மேற்கோள் காட்டி 142 அடி தண்ணீரை 136 அடிக்குள் சேகரிக்க கேரளா முடிவெடுத்த போது 152 அடி நீர் சேகரித்து வைத்து எங்களுக்கு தண்ணீர் தரும் தார்மீக பொறுப்பு உண்டு என தமிழகம் தன் நிலையை விளக்குகின்றது.  தண்ணீர் கொடுக்க கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல ஆனால் தங்கள் மக்கள் உயிர் காப்பது அவசியம் என்பதால் 116 வருடம் பழக்கமுள்ள முல்லைப்பெரியார் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணை மிகவும் தேவை என கேரளாவும் தங்கள் நிலையை தெரிவிக்கன்றனர்.  ஆனா என்னமோ ஏதோ ஒவ்வொரு முறையும் கருணாநிதி ஆட்சியில் ‘காவேரி’ பிரச்சனை வருவது போல் ஜெயலலிதா ஆட்சியில் முல்லைப்பெரியார் உயிர் பெற்று விடுகின்றது. இருப்பினும் முல்லைப்பெரியார் தண்ணீர் இடுக்கி அணைக்கட்டு கொண்டு சேர்த்து மின்சாரம் தயாரிப்பது போல் அணை உடைந்தால்  முல்லை பெரியார் தண்ணீர் இடுக்கி அணைக்கட்டில் ஒன்று சேர அணை உடைய 5 மாவட்ட மக்கள் உயிர் துறப்பர் என்றதும் மலையாளியை தூங்க விடாத துர்கனவாகும்! தமிழகம் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாயி விடும் என்று அழும்போது 30 லட்சம் மக்கள் அழிக்கப்படுவார்கள் என கேரளா கரயுகின்றது.(அழுது)

முல்லைப்பெரியார் அணைக்கட்டின் பராமரிப்பு தமிழக் அரசிடம் இருப்பினும் அணைக்கட்டு நிலைகொள்ளும் இடம்  கேரளா என்பதால் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது தமிழக அரசு.   அணை கட்டுவோம் என்று சொல்லும் கேரளாவுக்கும்  மணல், கட்டக்கூடாது என்று சொல்லும் தமிழக அரசே  வைகை நதிக்கரையில் இருந்து கொடுக்கின்றது. உண்ணாவிரதம் இருக்கும் கேரளா தலைவர்களை, தமிழக தலைவர்கள் கைகாட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் பார்லிமென்றில். ஆனால் பொதுமக்கள் மத்தியில் மலையாளி தமிழன் என்ற வெறியை ஏற்ப்படுத்தி பிரச்சனையை வலுவாக்கவும் துணிகின்றனர்.

http://www.youtube.com/watch?embeddedஇவர்களுடைய கரார் உடன்படிக்கை 999 வருடங்கள் ஆகும்.  1 ¾ மணி நேரம் ஓடும், 3D நுணுக்கத்தில்  இயக்கிய இப்படத்தை,  படத்தின் தலைப்பாக 999 அமைந்திருப்பதை தமிழர்கள் சகிப்பு தன்மையுடன் நோக்கி காட்சி ஒளி ஊடகம் வழியாக இயக்குனர் என்ன சொல்ல வருகின்றனர் என்று நோக்க தயங்குவது, அரசால் ஊடகம் தடுக்கப்படுவது தகவல் அறியும் உரிமையை தடுப்பது போல் தான் ஆகும். இது பூனை கண்ணை மூடி பால் குடிப்பது போல் தான் உள்ளது. 

5 comments:

  1. கேரளாவின் ஒரே நோக்கம் முல்லைப்பெரியாரில் மின்சாரம் தயாரிக்கவே, முல்லப்பெரியார் அணையை விட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால்தான் இவர்கள் கண்கள் முல்லைப்பெரியாரை நோக்கி இருக்கிறது...!!!

    ReplyDelete
  2. http://blog.tamilsasi.com/search/label/Mullai%20Periyar

    ReplyDelete
  3. http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=391673:special-article&catid=38:editorial&from_page=search

    ReplyDelete
  4. முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

    அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

    அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

    முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

    கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

    இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

    இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

    இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. இந்தப் பிரச்சனையை இருமாநிலமக்களிற்கு இடைப்பட்ட உணர்வுசார் பிரச்சனையாக மாற்றாமல் தேசிய நலன்சார் பிரச்சனையாக கையாளப்படவேண்டும்

    ReplyDelete