3 Jul 2025

"சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" "The law doesn't see, and we have to be its strong eyes .F. V அருள் IG

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி பூர்வீகமாக கொண்ட   

F. V அருள் (பிரெடெரிக் விக்டர் அருள்)  1917 நவம்பர் 24 அன்று யாங்கூனில் (ரங்கூன்) பர்மாவில் பிறந்தார்.  

In 1970, Frederick Victor Arul, also called as F.V.Arul IPS became the first Indian to serve the interpol as the vice president of Asia.— at Tamilnadu Police Museum.

  

யோலா மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படித்த இவர்  பிரிட்டிஷ் ஆட்சி காலம் 1942 ஆம் ஆண்டு இந்திய போலீசில் தேர்ச்சி பெற்றார்.    F.V அருள் ஹாக்கி விளையாட்டு வீர ராகவும் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 

1968 மே 31 முதல் 1971 மே 6 வரை மத்திய விசாரணை பணியகத்தின் (CBI) இயக்குநராக பணியாற்றியுள்ளார்.  CBI-யில் பணியாற்றும் காலத்திலேயே, இவர் இண்டர்போல் அமைப்பின் செயற்குழுவில் ஆசியாவிற்கான துணைத் தலைவராக பதவி வகித்து, அந்த உலக அமைப்பில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியராகவும் இருந்தார்

1973 முதல் 1976 வரை  மாநில காவல்துறையில் கடைசி இன்ஸ்பெக்டர் ஜெனரல் IG  பதவியை வகித்தவர். 1976-ல் அவரின் ஓய்வுவிற்கு  பிறகு, அப் பதவி டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (DGP) என மாற்றப்பட்டது.

பிரெடெரிக் விக்டர் அருளின் போலிஸ்  காவல் பணிகள் குறித்த அவரின் அறிவு அளவிட முடியாதது. அவருடைய கொள்கைகள்  ஆளும் அரசியல் வசதிக்கேற்ப அமையவில்லை, அரசியல்  விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் அவரிடம் இருந்தது.

அவர் சிலருக்கு 'விருப்பமானவர்' என்று சொல்லப்படும் வகையிலோ சலுகைகள் நாடுபவர்களுக்கு அவர் எளிதில் அணுகக்கூடியவராக இல்லாமல் இருந்தார். அருளின் வாழ்க்கை இந்திய காவல் துறையினருக்கு ஒரு பேருதாரணம் ஆகும்.

 

சிறந்த உடற்தகுதி, நீண்டநேர திடமான பணி, தூய்மையான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் அவர் தனக்கென ஒரு முத்திரை பதித்திருந்தார். 1956ல் சென்னை துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1965ல் ஆங்கில எதிர்ப்பு இயக்கம் போன்ற நிகழ்வுகளை அவர் தைரியமாக கையாண்டார்.  சட்ட ஒழுங்கு காவலாளி ஆக செயல்பட்டுள்ளார்


இரண்டு முக்கிய வழக்குகள் அருளுடன் நெருக்கமாக தொடர்புடையவை
யாக இருந்தன

1. 1950
களில் நடந்த நியூயார்க் காடன் சூதாட்டம்: மதராசில் ஒரு கும்பல் காடன் விலைகள் அடிப்படையில் சூதாடி, போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து பாதுகாப்பு பெற்றனர். அருள் விசாரணை செய்து பலரை குற்றவாளிகளாள் என  நிரூபித்தார்.

2. 1959
ல் கோயம்புத்தூரில் நடந்த ரூ.100 கள்ளநோட்டு வழக்கு: சுமார் ஒருவர் – கோயம்புத்தூரின் துணியதொழில் முதலாளி கிருஷ்ணன் – பணச் சிக்கல்களை சமாளிக்க கள்ளநோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டதாக அவர் கண்டுபிடித்தார். நேரடி விசாரணைகள், சாட்சிகள் என்று மிகவும்  காத்திரமான எச்சரிக்கையுடன் விசாரணையை  மேற்கொண்டவர்.


இந்த வெற்றிகள் அவரை 1968-ல் CBI இயக்குராக உயர்த்தின.
அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றியபின், Interpol-இன் செயற்குழுவில் ஆசியாவுக்கான துணைத் தலைவராக (Vice-President) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார். அவரது அறிவும், பண்பும், மற்றும் சர்வதேச குற்றவியல் விசாரணைத் துறையில் நிபுணத்துவமும் பெரும் மதிப்பை பெற்றன.


Interpol  செயலாளர் ரேமண்ட் கெண்டல் இவரை பற்றி உருக்கமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.

”தொழில்நுட்பம் இன்று வளர்ந்திருந்தாலும், அவரது தொழில் நிபுணத்துவம் என்றும் நினைவில் இருக்கும்." அருளுடன் எனது முதல் சந்திப்பு 1965ல், IPS பயிற்சியை முடித்தபின் சென்னை காவல் தலைமையகத்தில் நடந்தது. அவர் நேரத்தையும், வார்த்தையையும் வீணாக்காதவர். அடக்கம் மற்றும் ஆளுமையுடன் பேசுவார்.  மாவட்ட காவல் பணிக்கேற்றவர் நான் இல்லை என உணர்ந்ததும், நேரடியாக டெல்லிக்கு, உளவுத்துறை பணிக்கு என்னை அனுப்பிவைத்தார்”.


அருள் பேசுவதில் குறைவாக இருந்தாலும் ஒரு போலிஸ் அதிகாரியாக  செயலில் ஆளுமை கொண்டவராக இருந்துள்ளார்.  இயற்கையே நின்று ‘இது தான் ஒரு மனிதன்’ என்று சொல்வது போல்.”  அவரின் வாழ்வு மேன்மையாகவும், இயற்கையின் அனைத்து கூறுகளும் ஒன்றாகச் சேர்ந்ததுபோல் இருந்துள்ளது.

இந்திய காவல்த் துறையில் நேர்மை கொண்டவராக பெயர் பெற்றவர் எப். வி. அருள். இந்தியாவின் மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு முன்னர் அவர் கொண்டிருந்த  பணிக்காலத்திலும், பல முக்கிய விசாரணைகளில் அவரது பங்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவருடன் பணியாற்றியவர்கள், அவர் மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு செயல்படுத்துபவராக இருந்தார் என்கின்றனர்.  நீதிக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவர் வழிநடத்திய முக்கியமான விசாரணைகளில் தெளிவாக இருந்தது என்கின்றனர்.  எப்போதும் நேர்மையானவராக இருந்த எப். வி. அருள், "சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள், எவருக்கும் பயமின்றி, தைரியமாக நியாயத்தை நிலைநாட்ட அவருக்கு இருந்த உறுதியைக் காட்டுகின்றன.

தனிப்பட்ட விசாரணைகளைத் தவிர, CBI-யின் தலைவராக இருந்தபோது அவர் புதிய புலனாய்வு முறைகளை உருவாக்கவும், மற்றும் முறையான பணிச்சூழலை வளர்க்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்.


எஃப். வி. அருள்  சிக்கலான  தருணங்களில் கூட  மிகவும் விரைவாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார்.  அவருடைய வேலையின்  அடிப்படைத் தன்மைகளாக நேர்மைக்கும்  நியாயத்திற்கு உறுதி அளித்துள்ளார். பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்ச்சியாக நல்ல  தொடர்பாடலுடனும் இருந்துள்ளார்.


அவரது பணியின் பாங்கு  மிகுந்த ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.  மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டு இருந்துள்ளது.

 

 

" Mr F.V. Arul, IP, Director CBI and Mr. E.L. Stracey, IP, Chief of Tamil Nadu Police, Prof Dr P. Chandra Sekhara


துறைக்கு செய்த பங்களிப்பு

மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டது. அவரது பதவிக்காலத்தில்  CBI-யின் விசாரணைத் திட்டங்கள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அவர் அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்க்கும் தனது அர்ப்பணிப்பு காரணமாக, பல முக்கிய வழக்குகள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. அவரது தலைமையின்போது, CBI-யில் நேர்மை மற்றும் நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, அது காவல் அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

மேலும், புலனாய்வு முறைகளை மேம்படுத்த அவர் வலியுறுத்தினார். அதில் நவீன தொழில்நுட்பங்களும், நீதிக்கான விஞ்ஞானம் (forensic science) பற்றிய ஆதரவும் அடங்கும். இந்தியாவிற்குள் மட்டுமல்லாது, உலகளாவிய பாதுகாப்புத் துறைகளுடனான ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் பணி அவரால் முன்னெடுக்கப்பட்டது.

இதேபோல், CBI அதிகாரிகளின் பயிற்சி முறைகளையும் மேம்படுத்தினார். சிக்கலான குற்றங்களை எதிர்கொள்ள தேவையான திறன்கள் மற்றும் அறிவைப் பெறும்படி அதிகாரிகளை தயார்படுத்தும் பணியும் இவர் வழிநடத்தினார்.

 

மத்திய புலனாய்வு இயக்கத்தின் இயக்குநராக இருந்த போது, விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் வழியாக நியாயத்தை நிலைநாட்ட அவரால் முக்கிய பங்களிப்பு செய்யப்பட்டது. இது சட்ட அமைப்பை வலுப்படுத்தவும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநாட்டவும் உதவின

 

இவருடைய மனைவி எவி தாமசின் மகள் ஆவார்.  மைக்கேல் என்ற ஒரு மகன் மற்றும் டேவிட் என்ற பேரன் உண்டு. கிறிஸ்தவ நாடார் இனத்தில் பிறந்து ஒரு போலிஸ் அதிகாரியாக பெயர் பெற்று விளங்கியவர்.  

இதே இனத்தில் தற்போது உள்ளவர்கள் போலிஸ் அதிகாரிகளாக மக்கள் விரோத செயல்களுக்கு பெயர் எடுத்து மக்களின் வெறுப்பிற்கும் இனதுவேஷத்திற்கு காரணமாகும்  போது இவரை போன்ற போலிஸ் அதிகாரிகளை வரலாற்றில் பதிவது அவசியம் ஆகிறது.

இவர் 2006 ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் இன்றும் மக்கள் மனதில் உள்ள போலிஸ் அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


1 Jul 2025

தி சில்ட்ரன்ஸ் டிரெயின் (The Children's Train)

 ட்ரெயின் ஆஃப் சில்ட்ரன் திரைப்படத்தை ட்ரெனோ டீ பாம்பினி மற்றும்  கிறிஸ்டினா கொமென்சினி இணைந்து எழுதி,  கிறிஸ்டினா கொமென்சினி  இயக்கி உள்ளார்.  இது வயோலா ஆர்டோனின்  2019 ஆம் ஆண்டு  வெளியான நாவலை அடிப்படையாகக்  கொண்டது.  தற்போது திரைப்படமாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் உலகளவில் கிடைக்கிறது.

 

தாய்மை,  தாய்க்கும் மகனுக்குமான  உறவு, அவர்களில் உருவாகும் மோதல் இவையை மையமாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. wஆட்டின் வறுமை, குடும்ப நிலை  குழந்தைகளின் குணநலத்தை எவ்விதம் நிர்ணயிக்கிறது என ஆராய்கிறது  இச்சினிமா. போர் காரணத்தால் வறுமையில் ஆன நிலத்திலுள்ள பெண்களின் உரிமைகள்  மற்றும்  அவர்ள் எதிர்கொள்ளும்   பிரச்சினைகளில்   பற்றி சொல்லும்  படமாகும்  இது .

 

ஆண்டு 1946, போரினால் பேரழிவிற்குள்ளான நேபிள்ஸிலில்  குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானர்.  பசியால் எலிகளை  உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டனர். , கொடுமையான  இச்சூழலில் இருந்து குழந்தைகளை மீட்கும் விதம், கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியான இத்தாலிய பெண்கள் சங்கம் ஊடாக  ஒரு சமூகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.   இந்தத் திட்டத்தின் ஊடாக  தெற்கு இத்தாலியில் உள்ள  70,000 ஏழைக் குழந்தைகளை வடக்கில் உள்ள பணக்கார குடும்பங்களுடன் குளிர்காலத்தைக் கழிக்க அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டு, உணவளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு,  சில காலம் கழிந்து  தங்கள் சொந்த  வீடுகளுக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் வளர்கின்றனர். அமெரிகோவும் இச்சிறுவர்களில் ஒருவன்.

 


அவது உயிரியல் தாய், பல சிரமங்கள் இருந்தபோதிலும், அவனைத் தானே வளர்க்க முயற்சிக்கிறாள்,  ஆனால் தன்னால் வறுமையற்ற வாழ்க்கை வழங்க முடியாத நிலைய்யில்  தனது மகனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னொரு ஊருக்கு அனுப்பவும்  ஒப்புக்கொள்கிறாள். அங்கு அவனுக்கு ஒரு அன்பான தாய் , வளர்ப்பு தாயின் சகோதரர் குடும்பம் கிடைக்கிறது.

  வளர்ப்புத் தாய் ஆரம்பத்தில் "தாய்மை" பாத்திரத்தை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாள், ஆனால் இறுதியில் அவரது வாழ்க்கையை மாற்றும் குழந்தையாக அமெரியாவுடன்  ஒரு ஆழமான பிணைப்பு உருவாகுகிறது. வளர்ப்பு மகனை பிரிய மனமில்லாது திரும்ப அனுப்புகிறாள்.

 


மறுபடியும் சொந்த தாயுடன் வாழும் சூழல் வந்தாலும் தாய்க்கும் மகனுக்குமான உறவு மிகவும் தொலைவாகி விடுகிறது. தனது தாய் தான் ஒரு இசைக் கலைஞனாக இருப்பதை தடை செய்ததும் தன்னை ஒரு குழந்தை தொழிலாளியாக வேலைக்கு அனுப்பியதும் அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. குறிப்பாக தனது இசைக்கருவி வயலினை தாய் விற்று விட்டார் என அறிந்தும்  அவளை மிகவும் வெறுக்கிறான்.  தப்பித்து மறுபடியும் வளர்ப்பு தாயிடம் சேர்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.

 

வறுமை குழந்தைகளின் குணத்தில் வருவிக்கும் மாற்றத்தை மிகவும் தெளிவாக சொல்கிறது இப்படம். எலிக்கு கூட வண்ணம் பூசி விற்று பணம் ஈட்டும் இடத்தை எட்டுகிறது குழந்தை வாழ்க்கை. மற்றொரு நிலைப்பகுதிக்கு  இடம் பெயரும் போது அவர்களுக்கு உருவாகும் அடையாளச் சிக்கல், மற்றவர்கள் தங்களை துன்புறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் தொடர்ந்து பயணிக்கிறது.  

 

தனது தந்தை  அமெரிகோவின் மேல் கொள்ளும் பாசத்தைப் பார்த்து பொறாமைப்படும் லூசியோவுடன் முதலில் அமெரிகோ மோதலில் ஈடுபடுகிறான். பிற்பாடு நண்பர்களாக இணைகின்றனர்.

 

அல்சைடின் குடும்பத்தினர் அமெரிகோவை அடுப்பில் ரொட்டி சுட அழைக்கும்போது, ​​அவர்கள் தன்னை அடுப்பில் வைத்து  சமைக்க போகிறார்கள் என்று அஞ்சுகிறான். பிற்பாடு நம்பிக்கை கொண்டு அக்குடும்பத்துடன் மகிழ்ச்சியில் வாழ ஆரம்பிக்கிறான்.  அவனது வளர்ப்பு தாய்  கோதுமை அறுவடையின் முடிவில் வீட்டிற்குச் செல்வதாக உறுதியளிப்பது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுக்கிறது.  


 

உங்கள் கருணை தேவை இல்லை என ஒரு பெண் குழந்தை வளர்ப்பு பெற்றோரிடம் சொல்வதும்,  எங்களை  உங்கள் இரக்கத்தால் தான் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா என்று கேட்பதும் மிகவும் முக்கிய பகுதி. தன்மானமுள்ள குழந்தைகள் இரக்கம், கருணையை விட  மனித நேயம், மனித உரிமையே விரும்புகின்றனர் எனச் சொல்லும் திரைப்படம் இது.

 

அமெரிகோ பள்ளியில் படிக்கிறார், அங்கு அவன் தெற்கத்தியன் என்பதால்  கேலிக்கு உள்ளாகிறான், அதே நேரத்தில் லூசியோவால் பாதுகாக்கப்படுகிறான்.  ஒரு மே தின விழாவில், லூசியோ தனது தாயைப் பற்றி கேலி செய்தான் என்பதாl  அமெரிகோ, இதனால் அமெரிகோ லூசியோவுடன் மல்லுக்கட்டி சண்டையிடுகிறான், இந்நிலையில் தனது வலர்ப்பு தாயை தேடி வரும் போது ஆணாதிக்கவாதியான சக ஊழியரால் டெர்னா தாக்கப்படுவதைக் ண்டு கலங்குகிறான். தனது தாய் என்றால் திரும்ப அடித்து இருப்பாள் என்று தைரியம் சொல்கிறான்.

 

1994 ஆம் ஆண்டில், தற்போது வெற்றிகரமான வயலின் கலைஞராக இருக்கும் ஒரு வயது வந்த அமெரிகோவுக்கு தனது தாய் அன்டோனியெட்டாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. சொந்த ஊர் நேபிள்ஸுக்கு வந்த அவர், தனது பழைய வயலின் தனது வீட்டில் இருப்பதை  கண்டுபிடித்து, வளர்ப்பு தாயிடம் போக அனுமதித்த தாயை எண்ணி கண்ணீர் விடுகிறான்.


இதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகார்களூம் சிறப்புற தத்துவரூபமாக நடித்துள்ளனர்.  
இந்தப் படம் அக்டோபர் 20, 2024 அன்று 19வது ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  இது டிசம்பர் 4, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியிடுள்ளது.

4 Jun 2025

நின்ற நம்பி (எ) திருக்குறுங்குடி நம்பி ராயர் கோவில்





அருள்மிகு நின்ற நம்பி (எ) திருக்குறுங்குடிநம்பி

இந்தியாவில் கோயில் கட்டிடத்திற்கு, தென்னிந்திய கோயில் சிற்பங்கள் ஒரு தனித்துவமான அடையாளத்தை அளிக்கின்றன. தென்னிந்திய கோயில்கள் மன்னர்கள் மற்றும் குடிமக்களின் செல்வத்தை தீர்மானிக்கும் அதிகார மையங்களாக இருந்துள்ளன. கோயில்கள் ஒரு காலத்தில் நிலவிய ராஜ்யங்களின் மகத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தின, அவையின் கட்டமைப்பு அலங்காரங்கள் மற்றும் கல்வெட்டு பதிவுகள் காலத்தை சொல்பவை

 








தென்னிந்தியாவில் அரிய சிற்பக் கலவையின் ஒரு சாராம்சமாக திருக்குறுங்குடி உள்ளதுதிருக்குறுங்குடியில் உள்ள நம்பி ராயர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். தென் தமிழக-கேரள எல்லையில், அழகிய நம்பி ஆறு தவிர மேற்கு தொடர்ச்சி மலையின் (மகேந்திரகிரி) பின்னணியில் அமைந்துள்ளது. வைணவ மரபின்படி விஷ்ணுவின் இருப்பிடங்கள் என்று திருக்குறுங்குடி என்று அறியப்படுகிறது.  விஷ்ணுவின் 'தெற்கு வீடு' மற்றும் 'தக்ஷிண பத்ரி' என்றும் அழைக்கப்படுகிறது.  இது சைவ பாரம்பரியத்தையும் கொண்ட ஒரே வைணவ தளமாக உள்ளது.

மேலும்  கல்வெட்டுகளில் திருவிதாங்கூர் ஆட்சியாளர்களின் அரசியல் மேலாதிக்கத்தின் பாரம்பரியம். நினைவுச்சின்ன எச்சங்கள் உள்ளன, கோயில்களை மையமாகக் கொண்ட சமூகத்தில் அப்போதைய சமூக உறவுகளின் பராமரிப்பையும் வெளிப்படுத்துகின்றன. கோயிலுக்குள் அரபு வர்த்தகத்தின் சித்தரிப்பு, தென்னிந்தியாவும் மத்திய கிழக்கிற்கும் இடையே ஒரு காலத்தில் நிலவிய  கடல்சார் வர்த்தக உறவுகளைக் குறிக்கிறது,

 

கோயிலுக்குள் இருக்கும்  வேட்டைக்காரர் சிற்பங்கள், சமூகத்தின் கீழ்நிலையினர் என ப்போதைய உயரடுக்கு மையப்படுத்தப்பட்ட சமூக அமைப்புடன் சொல்லப்படும் அவர்களுக்கு, அன்றைய காலம்  இருந்த ஒரு உறவை வெளிப்படுத்துகிறது..



 

திருக்குறுங்குடியின் பிரதான கோயிலில் நின்ற (நின்று) இருந்து  (உட்கார்ந்து) கிடந்த (சாய்ந்திருக்கும்) தோரணைகள் உடன் மூன்று நம்பிகள் உள்ளனர்.

 

வைஷ்ணவ நம்பி கோயிலின் பிரதான திருவிழா தெய்வம்   நான்கு கைகளுடன் நிற்கிறார், அவர்களில் இருவர் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தி, மூன்றாவது வரத ஹஸ்தத்துடன், நான்காவது யோக முத்திரையுடன் நெற்றியில் கஸ்தூரி திலகத்தையும், உடலில் புனித யக்ஞபோ வேதத்தையும் அணிந்துள்ளார். மேலும் புனித வைஜயதி மாலை அவரது மார்பில் உள்ளது. 


இந்த கோவிலில் சிவபெருமானுக்கு 'மகேந்திரகிரி நாதர்' போலவே சமமான இடம் அளிக்கப்படுகிறது, மேலும் இரண்டு சன்னதிகளிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. பைரவர் சன்னதியும் உள்ளது. இந்த கோயில் அதன் மூச்சடைக்க வைக்கும் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.

 

# மணி மற்றும் பிற கல்வெட்டுகள்🙅

கோயிலின் சிறப்பம்சம், கருவறைக்கு முன்னால் உள்ள குலசேகர மண்டபத்தில்  தொங்கும் ஒரு பெரிய மணி ஆகும் . அதன் வரலாறு பொரித்த கல்வெட்டு கல்வெட்டு மலையாள சகாப்தம் 644 அல்லது 1468 தேதியிட்டது. இவ்வாற்று பொரிக்கப்பட்டுள்ளது.  “கொலம்பா சகாப்தத்தின் பவதி (644) ஆண்டில், விசாகத்தில் பிறந்த வஞ்சியின் ஆட்சியாளரான மன்னர் ஆதித்ய வர்மா, நல்லொழுக்கங்களின் சரமாகவும், அனைத்து கலைகளின் (கலா) விஷயமாகவும், ஜெயசிம்ம வம்சத்தை அலங்கரிக்கும், சிராவய மண்டலத்தின் (ராஜ்ஜியம்) இறையாண்மையை அடைந்தவராகவும், ஸ்ரீ குரங்க (திருக்குரங்குடி) கோவிலில் பொறிக்கப்பட்ட முராரி (விஷ்ணு) வாயிலை அலங்கரிக்கும் மணியைத் தொங்கவிட்டார்” .  இந்த மணியை ஜெயசிம்மநாதனை (குயிலோன்) சேர்ந்த வேணாட்டின் பேரரசரான  #ஆதித்ய வர்மா நன்கொடையாக வழங்கினார்.

 

மேலும் கி.பி 14681469 தேதியிட்ட கல்வெட்டு, தமிழ் பிரதேசங்களில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. திருக்குறுங்குடி மற்றும் வள்ளியூர் ஆகியவை வேணாட்டின் ஆரம்பகால தலைநகரங்களாக இருந்தன. 


15-17 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர்குறிப்பாக ஜெயசிம்மநாடு ஆட்சியாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை, 17 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் கூட திருவிதாங்கூர் ஆட்சியாளர்கள் இந்தப் பகுதிகளின் மீது விரிவான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர் என்கிறது கல்வெட்டுகள். 

 

ஆதனூர், மன்னார்கோயில், ஆழ்வார், திருநகரி, கரிசூழ்ந்தமங்கலம், கல்லிடைக்குறிச்சி, திருக்குறும்குடி, அம்பாசமுத்திரம், திருப்புவனம், திருப்படைமரத்தூர், பல்லக்கால், ஹரிகேசவநல்லூர், மேல செவ்வல், பிரம்மதேசம், மன்னார்மங்கலம், அட்டாழநல்லூர் மற்றும் களக்காடு  இந்தப் பகுதிகளிலும்  திருவிதாங்கூர் ஆட்சியாளர்களின் ஆதிக்கம் இருந்தது கற்கால பதிவுகள் சாட்சி அளிக்கின்றன.  

 

 ஒரு மாளவ சக்கரவர்த்தி அலங்கார என்பவன் நம்பி கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கியுள்ளார், போன்ற   தகவல்கள் திருக்குறுங்குடி கல்வெட்டுக்களில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

  

1399 முதல் 1645 வரை உள்ள கல்வெட்டுகள்

வர்மா, ரவிவர்மா, வீர கேரளா வர்மா, ராம வர்மா மற்றும் மார்த்தாண்ட வர்மா ,  வீர கேரள குலசேகரன் காலத்து 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மற்றும் வீர உதயமார்த்தாண்ட போன்ற ஆட்சியாளர்களின் பெயர்களை வெளிப்படுத்துகின்றன.

இந்தக் கோயிலில் 1456, 1537 மற்றும் 1592 ஆம் ஆண்டு தேதியிட்ட மூன்று செப்புத் தகடு கல்வெட்டுகள் உள்ளன. இவை முறையே சபல வீர சந்திர ராமவர்ம மகாராஜா, விஜயநகரப் பேரரசின் விட்டல ராயர் மற்றும் வீர வசந்த வெங்கடதேவர் ஆகியோரின் மானியங்களைக் குறிக்கின்றன. 

உள் சுற்றுச்சுவரில் உள்ள மற்றொரு கல்வெட்டு, 1571 ஆம் ஆண்டு சதாசிவ ராயர் ஆட்சிக் காலத்தில், கேரள மன்னர் உதய மார்த்தாண்ட வர்மாவும் அவரது ராணிகளும் உள்ளூர்த் தலைவரான மகாபலி வாணாதிராயன் மூலம் ஒரு தோட்டத்தை நன்கொடையாக அளித்ததாகக் கூறுகிறது. 

16 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மதுரைக்கு அருகிலுள்ள திருமாலிருஞ்சோலையின் மீது முஸ்லிம் படையெடுப்பின் போது திருக்குறும்குடியில் தங்கியிருந்த பக்தர்களில் ஒருவரான அலங்கார வள்ளி என்ற தேவதாசி நடனக் கலைஞரால் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளனர்.


சேர, பாண்டிய மற்றும் மதுரை நாயக்கர் வம்சத்தினரிடமிருந்து இந்தக் கோயில் மானியங்களைப் பெற்றதாக பல்வேறு கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. பல்வேறு காலகட்டங்களில் மேற்கண்ட நன்கொடைகளால் கோயிலின் கேரள தொடர்பு நன்கு சான்றளிக்கப்படுகிறது. கேரள மற்றும் தமிழ் பாணி கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைகளின் கலவை திருக்குறுங்குடியில் காண்பது குறிப்பிடத்தக்கது. 











இக்கோயிலின் கோபுரம் நாற்பது மீட்டருக்கும் அதிகமாது, கோபுரத்தில் அழகியல் அம்சங்களுடன் உள்ள நேர்த்தியாக செதுக்கப்பட்ட விலங்கு உருவங்கள் உள்ளன. இதன் பிரமாண்டமான மரக் கதவுகள் 7.5 மீட்டர் உயரம் கொண்டவை.

வைணவம் மற்றும் சைவம் இரண்டிலிருந்தும் கருப்பொருள்கள் விரிவாகக் காணப்படுகின்றன. அசாதாரண சிற்பக் கருப்பொருள்களில் சனி தனது வாகனமான காகத்துடன் சித்தரிக்கப்படுவது அடங்கும்.

கட்டிடகலைஞர்கள் யானை மற்றும் குதிரை ஆகிய விலங்கு சட்டங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட'குஞ்சர் கலை வடிவத்தை' பயன்படுத்திய சில கோயில்களில் திருக்குறுங்குடி ஒன்றாகும்

 

பெண்களின் உருவங்கள் கலை ரீதியாக பின்னிப் பிணைந்து ஒரு படைப்பு முறையில் அமைந்திருக்கும்.  ஆண் வடிவங்களும் துல்லியமாக  பயன்படுத்தப்பட்டு உள்ளது.   தலை முதல் கால் வரை உருவங்களை அலங்கரிக்கும் ஆபரணங்களில் உள்ள ஒவ்வொரு ரத்தினமும், ஆடைகளின் ஒவ்வொரு மடிப்பும் மிகுந்த சிரத்தையுடன் செதுக்கப்பட்டுள்ளன. தசைகள் மற்றும் நரம்புகளும் நுணுக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வழக்கமான நாக பந்தம் பற்றி உரையாடும் பாம்பு மையக்கருக்கள்  உள்ளது.

























  

மேலும் முன்னேறிச் சென்றால், எட்டு அற்புதமான தூண்களைக் கொண்ட ஒரு மண்டபம் உள்ளது, அனைத்தும் இரண்டு மீட்டர் உயர சிற்பங்களால் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டவை, பெரும்பாலும் சுதந்திரமாக நிற்கின்றன. ஒவ்வொரு சிற்பமும் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கருப்பொருள்களின் கலவையாக   படைக்கப்பட்டுள்ளது.

 

.சித்ர கோபுரம்  உள் கோயில் வளாகத்தின் நுழைவாயிலுடன்  இணைக்கிறது. அதன் அடிப்பகுதி கல்லாலும் மீதமுள்ள பகுதி செங்கலாலும் ஆனது. ஐந்து நிலை செங்கல் மேல்கட்டமைப்பின் உட்புறங்களும் கல்லால் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. அரிய கருப்பொருள்களால் அலங்கரிக்கப்பட்ட விவரங்களுக்கு சிற்பிகள் ஞானத்தை  நிரூபிக்கின்றன. கோபுரத்தின் உள்ளே உள்ள வாசல் 5.5 மீட்டர் உயரம் கொண்டது மற்றும் கூரைகள் மத கருப்பொருள்கள் மற்றும் மலர் வடிவங்களுடன் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.  மேல் சுவர்களில் வர்த்தகத்தில் ஈடுபட்ட அரபு வணிகர்களின் தனித்துவமான உருவங்கள் உள்ளன.

 

























வலது பகுதியிலுள்ள ஒரு சிற்பத்தில்  கப்பல் கடலுக்கு மேல் வருவது தெரியும். இடது பக்கத்தின் கீழ் பகுதி மாலுமிகள் தரையிறங்கி இலக்கை நோக்கி நகர்வதைப் பற்றிய செய்தியை வெளிப்படுத்துகிறது. இடது பக்கத்தின் மேல் பகுதி, அவர்கள் உள்ளூர் தலைவரின்/ராஜாவின் இடத்திற்குச் சென்று தங்கள் பரிசை வழங்குகிறார்கள் என்ற செய்தியை அளிக்கிறது”

 

கடல்சார் உறவுகளின் காட்சி பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. அரேபியர்கள் கப்பலில் வருகை, ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளின் வர்த்தகம் போன்றவை தென்னிந்தியாவில் இருந்த இஸ்லாத்தின் செல்வாக்கு மற்றும் பரவலையும் வெளிப்படுத்துகின்றன. ஒரு இந்து கோவிலின் சிற்பங்களுக்குள் முஸ்லிம் வணிகர்கள் சேர்க்கப்படுவது, தென்னிந்தியாவின் அப்போதைய சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார சூழ்நிலையில் வர்த்தகத்தின் சந்தேகத்திற்கு இடமில்லாத அரபு வர்த்தக சமூகத்தின்  ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

 

 இந்தியாவுடனான அரேபியர்களுடனான வணிக உறவு பழங்காலத்திலிருந்தே உள்ளது. சோழர் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த செயல்பாடு உச்சத்தை எட்டியது. அவர்கள் தமிழ் பிராந்தியத்தில் சமூக-மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர், மேலும் கோயில்களுக்கு நன்கொடைகள் கூட அளித்தனர் மற்றும் நடுவர்களாக செயல்பட்டனர். அவர்கள் ஆட்சியாளர்களின் ஆதரவை பெற்று பொதுமக்களுடன் கலந்தனர். நாயக்கர் ஆட்சியின் போது இந்த அரபு வணிகர்களுக்கு ஆதரவு தொடர்ந்தாலும், போர்த்துகீசியர்கள் மற்றும்  ஐரோப்பிய காலனித்துவ சக்திகளின் படையெடுப்பு நிலைமையை மாற்றியது.  இதனால் வர்த்தக உறவுகள் மற்றும் மத சகிப்புத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டன என்கின்றனர் சிற்பகலை அறிஞர்கள்.

 “ஐரோப்பியர்களின் வருகையால் உள்ளூர்வாசிகளுக்கும் முஸ்லிம் வணிகர்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் சீர்குலைந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடலோரத் தமிழ்ப் பகுதி பெருமளவிலான மதமாற்றங்களைக் கண்டது,  இதன் விளைவாக மூன்று மத மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டன. அரபு வணிகர்களுடனான நல்லெண்ணத்தைக் காட்ட, மதம் வேறுபட்டிருந்தாலும், கோயில்களில் வணிகக் கருப்பொருள்களை வரைய (அல்லது சிற்பமாக) அரசர்கள் உத்தரவிட்டிருக்கலாம்.

 

தமிழ்ப் பகுதியில் வேறு எங்கும் காணப்படாத இரண்டு அரிய கல் சட்டம் - பீமன் மற்றும் கருடன் தொடர்பான பிரபலமான கதையும் இதில் அடங்கும். ஒன்று - பீமன் அனுமனின் வாலைத் தூக்க முயற்சித்து தவறியது .

 

சிற்பி இருபுறமும் மேகங்களைக் காட்டி பீமனின் பிரம்மாண்டமான அளவை வலியுறுத்தியுள்ளார், மேலும் அனுமனை வேண்டுமென்றே சுருக்கி, அவருக்கு ஒரு குனிந்த நிலையை அளித்துள்ளார். இங்கே அரை கழுகு, அரை மனித உருவம் - தனது கொக்கில் ஒரு மரத்தின் கிளையை சுமந்து செல்கிறது, அதில் நான்கு தியான முனிவர்கள் அமர்ந்திருக்கிறார்கள், அதன் நகங்களில் ஒரு யானை மற்றும் ஒரு ஆமை  உள்ளது

கேரளா கோவிலில் பிரபலமான கஜேந்திரமோக்ஷம்,  தனித்துவமானது ஆனால் தமிழ்நாட்டில் அரிதானது . இதில்  கேரளாவைச் சேர்ந்த சிற்ப கலைஞர்களின் சேவையை நிராகரிக்க முடியாது, ஏனெனில் இந்தப் பகுதி ஒரு காலத்தில் கேரள ஆட்சியாளர்களுக்குச் சொந்தமானது. கஜேந்திரமோக்ஷம் கேரளாவில் கலை சித்தரிப்புக்கு மிகவும் பிடித்த கரும்பொருள் ஆகும்.

 

பிரதான கோவில் வளாகம் சித்ரா கோபுரத்திற்கு அப்பால் உள்ளது. வளாகத்திற்குள் வலதுபுறம் வீரப்ப நாயக்க மண்டபம் உள்ளது. இது முத்து விரப்பாவுக்காக கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.






மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த நாயக்கா (1609-23). மண்டபத்தின் தூண்களில் மூன்று மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான சிற்பங்களில் இரண்டு நரசிம்மரின் உருவங்கள் உள்ளன, ஒன்று  ஹிரண்யனை கையில் ஏந்தியிருப்பது (படம் 16a) மற்றும் இரண்டாவது அவரை கிழித்து எறிவது போன்ற சிற்பம். இன்னொரு முக்கியமான சிற்பம்  பெரிதும் அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது போர்வீரன் ராஜாவின் வாழ்க்கை அளவிலான சிற்பம் மூச்சடைக்க வைக்கிறது . குறிப்பிடத்தக்கதுநேர்த்தியாக செதுக்கப்பட்ட யாளிகளின் வரிசைகள்அவற்றில் ஒரு ஜோடி யாளி சிற்பங்கள் வாயினுள் சுதந்திரமாக சுழலும் கல் பந்துகளைக் கொண்டுள்ளன 









நாயக்க ராணிகளின் சிற்பங்களில், ஒன்று ஆண்கள் மட்டுமே அணியும் திருமந்திரத்தை (வைணவ சாதி முத்திரை) அணிந்துள்ளது.  இரண்டு தூண்களில் பீமனின் உருவங்களும், புருஷமிருகத்தின் உருவங்களும் (வியாக்ரபாத முனிவர், புலி கால் கொண்ட துறவி, அதாவது ஒரு வகையான சத்தியர், மனித உடல் ஆனால் விலங்குகளின் கால்களுடன்  உள்ளன.

 

மலைகளின் வேட்டைக்காரர் சமூகத்தைச் சேர்ந்த குத்தி பெண் ஒரு இளவரசனுடன் மற்றும்   செதுக்கப்பட்ட கூடையை ஏந்தியிருக்கும் பெண் சிற்பம் கவனிக்கத்தக்கது . மணவாள முனிவரின் சன்னதிக்கு அருகில் ஐந்தரை அடி உயர குரவரின் சிற்பம் உள்ளது.  இந்த உருவம் கிரானைட்டால் யதார்த்தமாக செதுக்கப்பட்ட ஒரு நீண்ட ஈட்டியைப் பற்றிக் கொண்டுள்ளது. வலது கையில் அவர் ஒரு குரங்கையும் ஒரு கொக்கையும் வைத்திருக்கிறார்.  கழுத்தில் ஒரு சங்கு மற்றும் மணி மாலையுடன் அலங்கரிக்கப்பட்ட, அவரது தோளில் நெய்த கூடை தொங்குகிறது. இடுப்பில் ஒரு அரிவாள் பிடிக்கப்பட்டுள்ளது.

 

மலைவாழ் மக்களின் வசிப்பிடமாக இருந்த மகேந்திரகிரி மலைகளுடன் அருகாமையில்  திருக்குறுங்குடி இருந்ததால்அப்பகுதியின் அப்போதைய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த பாரம்பரியம், பண்பாட்டு கதைகள் வேட்டைக்காரர்களுடன் தொடர்புடையது.  வேட்டைக்காரர் சமூகத்தைச் சேர்ந்த இந்த ஓரங்கட்டப்பட்டவர்கள் ஆட்சியாளர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் பெற்ற அங்கீகாரத்தை இச்சிற்பங்கள் பரிந்துரைக்கின்றன. அல்லது அந்தக் காலத்தின் சமூக வாழ்க்கையில் அவர்கள் ஆற்றிய அழியாத பங்கைக் குறிக்கிறது.  சிற்பிகள் அந்தக் காலத்தின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர், இதன் மூலம் அப்போதைய சமூக அடுக்குகளுக்குள் இருந்த ஒரு நல்லிணைக்கத்தையும் அடையாளப்படுத்துகிறது. 

 

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, கோயிலின் மையப்பகுதியில் விஷ்ணுவுக்கு மூன்று தனித்தனி சன்னதிகள் உள்ளன - நின்றபடி, அமர்ந்தபடி மற்றும் சாய்ந்தபடி, இவை கோயிலின் மிகப் பழமையான கட்டமைப்புகள் மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. 


எந்த ஆடம்பரமும் இல்லாத சிவன் மற்றும் பைரவருக்கும் துணை சன்னதிகள் உள்ளன, . இந்த சன்னதியில் ‘அஷ்டாங்க விமானம்’ உள்ளது, அதாவது மூன்று மாடி கருவறை உள்ளது. திருக்குறுங்குடியில் உள்ள கோயிலின் கருப்பொருள்கள் வைணவம் (படம் 21a) மற்றும் சைவம் (படம் 21b). இரு பிரிவுகளின் உருவப்படங்களின் இணைவு சுருக்கமாக உள்ளது.

 

இடைக்கால சோழர் காலத்தில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், கோயிலுக்கு செம்மறி ஆடுகள் வடிவில் மானியங்கள் வழங்கப்பட்டதைக் குறிக்கின்றன. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு, கோயிலில் நெய் விளக்குகளை நிரந்தரமாக ஏற்றுவதற்காக 25 பசுக்களை பரிசாக வழங்கியதைக் குறிக்கிறது. அதே ஆட்சியின் கல்வெட்டுகளும் கோயிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியதைக் குறிக்கின்றன. 



15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கோயில் வளாகத்தில் தூண்கள் கொண்ட மண்டபங்கள் நிறைய சேர்க்கப்பட்டன. 1059 தேதியிட்ட மண்டபத்தின் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டுகள் அணைகள் கொண்ட ஒரு கால்வாயை அகழ்வாராய்ச்சி செய்வதைக் குறிக்கின்றன.  வடக்கு சுவரில் இதே போன்ற கல்வெட்டுகள் ஒரே அணையில் பழுதுபார்க்கப்பட்டதைக் குறிக்கின்றன.






1456, 1537 மற்றும் 1592 தேதியிட்ட மூன்று செப்புத் தகடு கல்வெட்டுகள் கோயிலுக்கு முறையே சபல வீர சந்திர ராமவர்ம மகாராஜா, விஜயநகரப் பேரரசின் விட்டல ராயர் மற்றும் வீர வசந்த வெங்கடதேவ மகாராஜா ஆகியோரின் மானியங்களைக் குறிக்கின்றன.

 

இந்தக் கோயில் திவ்ய தேசம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, 108 விஷ்ணு கோயில்களில் ஒன்றாகும். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி போன்ற பல படைப்புகளில் இந்தக் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 திருமங்கை ஆழ்வார் தனது கடைசி நாட்களை இந்த இடத்தில் கழித்து மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. இதனால் இந்த இடம் வைணவர்களின் இறுதி இடமான தட்சிண வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது.

 

 நடனம், இசை மற்றும் கலை மூலம் விஷ்ணுவை வழிபடும் ஒரு பாரம்பரியம் கைசிக நாடகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசி என்ற திருவிழா  கைசிக விரதத்தை கடைப்பிடிக்கும் அல்லது நிகழ்ச்சியைக் காணும் பக்தர்கள் மோக்ஷத்தை அடைவார்கள் என்பது உள்ளூர் நம்பிக்கை. விஷ்ணுவை வழிபடும் மற்றொரு வடிவமான அரையர் சேவையும் இந்த இடத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது. புராணத்தின் படி, நாதமுனி  தனது சக தோழர்களுடன் பயிற்சி செய்து கொண்டிருந்தார், விஷ்ணு தெற்கு மாட தெருவில் ஒளிந்துகொண்டு நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார். விஷ்ணு இசையை ரசிப்பவர், கண பிரியன் என்றும் அழைக்கப்படுகிறார். வைஷவத்துவ  தத்துவத்தின் ஆதரவாளரான ராமானுஜர் விஷ்ணுவுக்கு அஷ்டாக்ஷரத்தைப் பற்றிக் கற்றுக் கொடுத்தார், எனவே தலைமை தெய்வம் வைஷ்ணவ நம்பி என்று அறியப்பட்டது என்று நம்பப்படுகிறது.


இந்த கோயிலில் இடைக்கால சோழ வம்ச காலத்தைச் சேர்ந்த (10 ஆம் நூற்றாண்டு) கல்வெட்டுகள் உள்ளன. இரண்டாம் சுந்தர பாண்டிய காலத்தைச் சேர்ந்த 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளையும் இங்கே காணலாம். கோயிலின் தெற்கு மற்றும் வடக்கு சுவரில் கல்வெட்டுகளும் உள்ளன. 1456, 1537 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த செப்புத் தகடு கல்வெட்டுகளையும் இந்தக் கோயிலில் காணலாம்.  

இந்தக் கோயில் வைணவர்களுக்கானது (விஷ்ணு பக்தர்கள்) என்றாலும், இந்தக் கோயில் வளாகத்தில் ஒரு சிவன் சன்னதியும் உள்ளது, இது மிகவும் அசாதாரணமானது.  

நம்பியாறு நதி கோயிலுக்கு மிக அருகில், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  

 

திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோயில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.


டிவிஎஸ் நிறுவனரின் சொந்த ஊராக இருப்பதால் TVS நிறுவனத்தின் அரசு சாரா நிறுவனம் கோயிலை மிகவும் சுத்தமாக பராமரிக்கிறது என்பது சிறப்பு. 

https://www.heritageuniversityofkerala.com/JournalPDF/Volume6/38.pdf