17 Mar 2019

தாய்மையும் சமூககுற்றங்களும்!

நாசமா போகிற பெண் பிள்ளைகளை காப்பாற்ற இயலாத கையேறு நிலையில் தான் உள்ளது காலம்.
பாளை பேருந்து நிலையத்தில் நிற்கும் வேளையில் 9,10 படிக்கும் பெண் பிள்ளைகள் அவென் ஏ ஆளுடி .... 
நல்லா. ஏமாத்த போறான் பாருடின்னு


வெட்கமே இல்லாமை கனைத்து பேசி கொண்டு நிற்கும் போது; நமது சகல நாடி நரம்புகளையும் மூடி வெட்கமே இல்லாது சுரணையற்று கேட்டு கொண்டு நிற்பது மரபாகி விட்டது.
ஒரு பிள்ளையிடம் யாரையும் நம்பாதே கூடப்பிறந்தவன் தவிற எவனும் அண்ணன் ஆகிட மாட்டான் என்றதும் பெத்தவங்களுக்கு தெரியாதே ஏதோ ஒரு வக்கீல் மாமாவை அழைத்து வந்து இந்திய சட்ட புத்தகத்திலுள்ள அனைத்து சட்டவும் பேசியது.
பெண் பிள்ளையை வழி நடத்துங்கன்னு ரகசியமா சொன்னா ஏ.... புள்ளை பச்சை மண்ணு அதுக்கு ஒன்றுமே தெரியாது நீங்கள் துன்புறுத்தாதிங்கன்னு பதில் வரும். 
ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைக்கு சுகமில்லை அழைத்து செல்லுங்கள் என்றால்.... அவுங்க அப்பாட்ட கேட்டு சொல்லுதேன் , சும்மா ஒரு பஸ்ஸுல ஏத்தி விடுங்கள் என்பார்கள் !
பெண்ணியவாதிகள் போன்றோர் பெண்களை யாரும் கட்டுப்படுத்த கூடாது. அவர்கள் மனநிலை பாதிக்கும் காதலிக்கட்டுமே சுத்தி வரட்டுமே, இதனால் என்ன ஆகப்போகுது உங்க மனநிலை சரி இல்லை என்பார்கள்.

டிவியை திறந்தால், என் மகன்கள்..... அவனுக பிகருகளை எங்கட்டயும் காட்டுவானுக...அவனுக ஜாலியா இருக்கட்டும்,கல்யாணம் பண்ணும் போது நாங்க சொல்லுத பிள்ளயைஐ தான் கட்டுவான் என்று பீற்றுகின்றனர். 
அப்ப உங்க மகளுகளுக்கும் இதே சுதந்திரம் கொடுப்பீர்களா என்றால் சீ ... பயலுக சகதில்லா மிதிச்சாலும் காலை கழுகிட்டு வீட்டுக்குள் வருவானுக என்கின்றனர்.
பெண்கள் பெண்ணுறுப்பை. சிதைத்து இன்பம் காண்பதை அவதானிக்கும் போது 9 மாதம் பெண் கருவறையில் வசித்து வந்து, அடுத்த 9 மாதம் உணவூட்டிய கொங்களை வெறும் பாலியல் பொருளாக பார்க்கின்றார்கள் என்றால் அவர்கள் பிறப்பிலும் 7 வயது வரையுள்ள வளர்ப்பிலும் குறை உள்ளது.

இன்றைய பெற்றோர் மிகவும் சுலநலவாதிகள். அன்போ கரிசனையோ இல்லாது கடமையே என குழந்தைகளுடன் வாழ்கின்றனர். 
பல மாணவிகள் ஒரு கருதலான வார்த்தைக்கு சிரிப்பிற்கு ஏங்கி வாழும் சூழல் தான் உள்ளது.

தாய்மார்கள் மாணவிகளுக்கு உடல் சுகவீனம் என்று தெரிவித்தால் எந்த அக்கறையும் இல்லாது அணுகுவதை கண்டுள்ளேன். ஏதோ பெத்தேன், கல்லூரிக்கு அனுப்பினேன், கட்டி கொடுத்தேன் கடமை முடிந்தது என பல உள்ளனர். இது போன்ற சூழலில் வளரும் மாணவிகள் சிந்தனை வாழ்க்கை தேர்வு எல்லாம் ஆபத்தாகத்தான் இருக்கும்.

நல்ல பாச சூழலில் வளரும் சில பெண்கள் கூட இது தான் சிறந்த வாழ்க்கை இவர்களை போல் சுதந்திரமாக யாருக்கும் கட்டுப்படாது வாழ வேண்டும் என ஆவல் கொள்கின்றனர். 
ஆண் பிள்ளைகள் தன் குடும்ப சொத்தை பராமரிக்க வேண்டியவர்கள், தனது கடைசிக்காலம் தன்னை கவனிக்க வேண்டியவர்கள் என்ற நோக்கில் வளர்ப்பதும் பெண் பிள்ளைகளை ஆசைக்கு அடுத்தவன் வீட்டில் போகிறவர்கள் என்ற உதாசீனத்துடன் வளர்க்கின்றனர்.

சிலர் கருதலாக வளர்க்கின்றனர் என்ற பெயரில் வாழ்க்கையின் பிரச்சினைகளை அறியவே விடாது மகாராணி போன்று வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆடம்பரத்திலும் வெளி உலகு தெரியாது வள்ர்க்கின்றனர்..
பெற்றோர்களின் ஆளுமை மிகவும் அவசியம். இன்று பெற்றோர் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டாலே தங்கள் பிள்ளைகள் நிலையில் காரணம் உணர இயலும்.
ஒரு காலை பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தேன். ஒரு பெண் தன் மகளுக்கு நிச்சயம் செய்து இருக்கும் மணமகனுடன் பேசிக்கொண்டிருந்தது என் நிறுத்ததில் நிறுத்துவது வரை தொடர்ந்தது. அதில் மஞ்சள், பச்சை சிவப்பு எல்லாம் கலந்து கட்டி பேசிக்கொண்டிருந்தார். அலைபேசியால் சிறு பிள்ளைகள் அழிகின்றனர் என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு கொடுப்பதும் பெற்றோர் தான்.
பிள்ளைகளை வைத்து பிழைப்பது என்ற பண்பற்ற பண்பாடு வளர்ந்து வருவதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

ஆண்பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மனநிலையும் பரிசோதிப்பது அவசியமாகும். பொள்ளாச்சி முதல் குற்றவாளி அம்மாவின் பேச்சை அவதானித்தால் புலன்படும். பையனுக்கு 26 வயதிற்கு முன்பே இரண்டு காதல் . இரண்டும் தாய் அறிவோடு தான் நடக்கின்றது. அதிலும் ஒரு ரகசிய திருமணவும் செய்து வைத்துள்ளார்.

அந்த இரண்டு பெண்கள் தன் மகனை விட்டு விலகியதற்கு மகனையே குற்றம் சுமத்துகின்றார். எம் பி ஏ படித்த மகனுக்கு வட்டி தொழில் துவங்கி கொடுக்கின்றனர். வட்டி தொழில் ஒரு காலத்தில் படிப்ப்பறிவில்லாதவனிடம் நாலு காசு இருந்து படிப்பில்லாதவனிடம் தான் இருக்கும். மகன் கொண்டு வரும் பணத்தை தன் கைப்பட வாங்கி சாமி படம் முன் வைப்பேன் என சப்பை கட்டுகின்றார். வட்டி தொழில் ஒரு சாபம் பிடித்த தறுதலைகளின் தொழிலாக இருந்தும் காசு சம்பாதிக்க இயல்வதால் மகனுக்கு துவங்க பின் புலனாக உள்ளார். 

மகனுக்கு பெண்கள் விடையத்திலுள்ள ஈடு பாடு அறிந்து யார் விட்டு பிள்ளையோ தன் மகன் விருப்பத்திற்காக பைக்கில் அனுப்புகின்றார், ரகசிய திருமணம் செய்து வைக்கின்றார். உருப்படியா நாலு ஆள் தெரிந்த மாதிரி திருமணத்தை முடித்து வைத்திருக்கலாம் என்ற நேர்மை தாயிடவும் இல்லை. 

தன் மகனிடம் மாட்டப்பட்ட பெண்ணை பற்றியும் அவதூறாக ஏதேதோ கொச்சை வார்த்தையில் திட்டுகின்றார். ஒரு சமூகத்தில் அழிவும் ஆக்கவும் தாய்மையில் இருந்தே துவங்குகின்றது. மேற்போக்காக ஒரு பிரச்சினையை அணுகாது அதன் ஆணிவேரை சரிப்படுத்தாது எதுவும் சரியாகப்போவதில்லை. 

0 Comments:

Post a Comment