tag:blogger.com,1999:blog-8803242748745605782.post6467535866679051654..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: பாலியலாக துன்புறுத்தல் என்பது ஒரு உலகலாவிய தீரா நோய் J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-20914805408806412942018-04-21T20:55:30.762+05:302018-04-21T20:55:30.762+05:30பாலியலாக துன்புறுத்தல்கள் பற்றிய உண்மை தகவல்களை பா...பாலியலாக துன்புறுத்தல்கள் பற்றிய உண்மை தகவல்களை பாரபட்சம் பார்க்காம நியாயமாக தெரிவித்துள்ளீர்கள். <br />//இந்தியாவின் ஆண் ஆதிக்க சமூக கட்டமைப்பு காலாகாலாமாக புராண இதிகாசங்கள் மத நம்பிக்கைகள் ஊடாக ஆண்களுக்கான சுகிக்கும் பொருளாகவே பெண்கள் சித்தரிகரிக்கப்படுதல் பெண்கள் ஆண்களின் அடிமை என்பவை ஆண்கள் மனதில் ஆழத்தில் பதிந்ததால் பெண்களை துன்புறுத்துவது ஒரு வழக்கமாக வாழ்க்கை பாகமாகவே பார்க்கப்படுகின்றது. பெண் உடலை அவள் விருப்பத்தையும் மீறி ஆட்சி செய்யும் உரிமையாக எடுத்து கொள்கின்றனர்.//<br />மறுக்க முடியாத உண்மை.<br />ஆளுநர் ஒருவர் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டதை ஆதரித்து நியாயபடுத்துபவர்கள் கொண்ட ஒரு சமுதாயத்தில் பாலியல் கொடுமைகள் எந்தளவில் நடைபெறும் என்பதை ஊகித்து கொள்ளலாம். <br />மனிதர்களை கொல்ல வேண்டும் தூக்கில் ஏற்ற வேண்டும் என்பவர்களை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் ஆதரவை தான் பெற்று கொள்வதிற்காக அரசு கொண்டுவந்ததே பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை சட்டம்.அரசுக்கும் வேறு வழியில்லை. இந்தோனிய அரசு போதை பொருள் கடத்துபவருக்கு மரணதண்டனை என்று மயூரன் சுகுமாரனை கொன்று தனது நாட்டுமக்களை திருப்தி படுத்தியதோ அதே போன்று நமது அரசும் மக்களை திருப்திபடுத்தவே முயல்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டணை என்பதும், தமிழ்நாட்டில் பலருக்கு விருப்பமானா மனிதர்களை கொலை செய்வது என்பதும் அல்லது போட்டு தள்ளுவது என்பதும் பாலியல் கொடுமைகளுக்கு ஒருபோதுமே தீர்வாகாது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com