6 Mar 2019

கல்லூரி பெண்களே.... நட்பை கொண்டாடுங்கள்!


x

எந்த சினிமாப்படத்தை பார்த்து ஊக்கம் அடைகின்றனர் எனத்தெரியவில்லை எந்த வருடவும் இல்லாத ஒரு மாற்றம் இந்த வருடம் காணக் கிடைக்கும் ஓர் காட்சி கல்லூரி மாணவிகள்-மாணவர்கள் கையை கொருத்து கொண்டு, ஏதோ மாய உலகத்தில் ரோட்டில்  நடக்கும் காட்சி தான்..

மாணவர்கள்/விகள் 18 வயது ஆகி விட்டால் அவர்கள் எடுக்கும் முடிவிற்கு அவர்களே பொறுப்பாகும் பட்சத்தில் இப்போதெல்லாம் பெற்று வளர்த்தும் பெற்றோர்களே பலவற்றை கண்டு கொள்வதில்லை. ஒரு அளவிற்கு மேல் ஒன்றும் சொல்லவும் இயலாது. பல வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களை தங்கள் சொல்படிக்கு வைத்து ஆட்டிபடைப்பதையும் காணலாம்.  


சமகாலத்தில் பெண் பிள்ளைகள் பார்த்த ஒரு பெரும் உதாரணமாகும் கைசல்யா என்ற போராளி.  வெறும்  17ஆம் வயதில்  காதல், 18ல் திருமணம் 19ல் விதவைக்கோலம் 21 ல் மறுமணம் என்று எல்லாம் பார்க்கும் போது போராட்டமாக தோன்றியது. அப்பெண் தனக்கான பெரும் பாதுகாப்பான இடமான வீட்டை பகைத்து கொண்டபோது இந்த சமூகம்,ஒரு பெண் இருந்தால் இப்படி தான்  இருக்க வேண்டும் என்றது. ’இதுபோல என்னால், என் வயதில் முடிவு எடுக்க இயலவில்லையே’ என பல மத்திய வயது பெண்கள் ஸ்லாகித்தினர். வீட்டை எதிர்த்த அதே பாணியில் நாட்டை எதிர்த்து பேசினதும்; நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி விட்டார் என அப்பெண்ணை ஒடுக்கி விட்டது இச்சமூகம். 

போராட்டவும் வாழ்க்கையும்  தான் பெற்ற அறிவு செறுக்கில் இருந்து வரவேண்டும். இளமையின்  உந்துததால் வருவது நல்லதை விட பல ஆபத்துகளை சிக்கல்களை எதிர் கொள்ள வைக்கும் என இச்சமூகம் படிப்பித்தது.

பெண்கள் வாழ்கை யாருக்காகவோ வாழ்வது அல்ல,  இந்த சமூகத்திற்காக அல்லது இச்சமூகத்துடன் மல்லிட்டு கொண்டு வாழ்வதும் அல்ல.
ஒவ்வொரு பெண்ணும் தனக்காக வாழ வேண்டும்.  தன் விருப்பத்தின் பொருட்டு  வாழ வேண்டும். ஆனால் அதற்கு ஒரு  காலம் உண்டு.  அதற்க்க்கான தகுதியும் பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.   பூவாகி, காயாகி, கனிந்து பழமாகும்  இயற்கை நியதி போல, பெண்ணும் தன்னக்காக செம்மையாக வாழ தயார் செய்தல் வேண்டும்.    தன்னுடைய செயல்பாட்டை தெரிவு செய்யும் வயது வரும் வரை கொஞ்சம் காத்திருக்க வேண்டும்..

காதல், ஆறிலும் வரும் அறுபதிலும் வரும். பல இளம் பெண்கள் தங்களுக்கு மட்டுமே காதல் தோன்றும் இப்போது மட்டுமே தோன்றும், தோன்றியதை தோன்றிய உடன்  வாழ  வேண்டும் என நினைத்து விடுகின்றனர்.
ஒரு பெண் தனக்கான ஒருவனை தேர்வு செய்யவும், தொடவும், தொட்டு பழகவும் சில காலம் காத்திருத்தல் மிகவும் அவசியம். ஒருவனை கண்டதும் ஆசை வரலாம்.  ஆனால் அவன் உடனே கிடைக்க வேண்டும் என்பது அபத்தம். அவனுக்கு என்ன தகுதி, அவனால் என்னை மகிழ்ச்சியாக நான் தற்போது இருப்பதை விட செம்மையாக வைத்து காப்பாற்ற இயலுமா என சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒருவன் தன்னை காதலிக்கான் என்றால் தன்னை, தன் ஆளுமையை தன் புகழை, தன் சிறப்பை தன் குடும்ப கவுரவத்தை மதிக்கின்றானா என்று சிந்தித்தல் அவசியம். சினிமாவில் காண்பது போல இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடிந்து போவது அல்ல வாழ்க்கை. தன் புத்தி ஈனமான  தெரிவால், தன் அவசர முடிவால் வாழ்க்கை முழுதும் சுமையாக மாறல் ஆகக்கூடாது.


திருமண வாழ்க்கை தனக்கு ஒத்தவனுடன் சுகமாக வாழ்வது தான். திருமணத்தை சமூக புரச்சி, சமூக போராளி அல்லது தன் சுதந்திரம் என்ற பார்வையில் கையிலெடுத்தால் அது மிகவும் இக்கட்டான நிலையில் பெண்களை கொண்டு விடும்.

பெண்களுக்கு கல்லூரி படிப்பு  வாய்க்கின்றது என்பது தற்போதையை சமூக சூழலை வைத்து நோக்கும் போது பெரும் சவால். பெண் பிள்ளைகள் தன்னுடைய  கல்லூரி படிப்பிற்கு ஒதுக்கும் நேரம் மூன்று அல்லது ஐந்து வருடம் என்பது மிகவும் குறுகிய, மிக முக்கியமான வருடங்கள் ஆகும். ஒரு போதும் மறுமுறை கிடைக்காத வரப்பிரதமான நேரம். இந்த நேரம் படிப்பது தன் சொந்த காலில் நிற்க  கற்பது , முன் வரும் வாழ்க்கைக்கு தன்னை தயார் செய்து கொள்வது என வாழ்க்கையை நோக்க வேண்டிய தருணம். இந்த நேரத்தில் ’ஏதோ ஒரு பையனை காதலித்தேன்’ என நேரம் விரயம் செய்வது மிகவும் முட்டாள்த்தனமாகும்.

ஒரு காதலுடன் நின்று போவதல்ல இப்போதைய கல்லூரி காதல்கள். ஒவ்வொரு பருவத்திலும் இவனை விட இவன் சிறப்போ.... என சிந்தனை கொள்ள வைக்கும் காலம். புத்தியுள்ள பெண் நிதானமாக அவதானித்து சிறப்பான பையனை தன் வாழ்க்கை துணையாக தேர்வு செய்வதை விட்டு விட்டு குறுகிய சந்தோஷத்திற்காக நேரம் போக்கிற்கு என்றும் காலத்தை விரையம் செய்கின்றனர்.

 கல்லூரி படிப்பு வேளையில் காதலை விட நட்புக்கு இடம் கொடுக்கும் போது பல மாணவர்களுடன் நட்பு பாராட்டஇடம் கிடைக்கும்.  இதனால் பெண்கள் ஒரு மதிப்பை தன் சக தோழர்கள் மத்தியில் பெறுகின்றனர். கண்டதும் காதல் கொண்டதும் மயக்கம் என அலையும் ஜோடிகள் தங்கள் மாயா உலகத்தில் இருந்து வெளி வரும் முன் 6 பருவங்கள் முடிந்து பல அரியருடன் பிடிப்பில்லாது வாழ்க்கைக்குள் பிரப்வேசிப்பீர்கள். வேலை விடையாமாகவோ தன் வாழ்க்கை விடையமாகவோ தன் சிந்தனையால் முடிவு எடுக்க விடாது இது போன்ற உறவுகள் தடுக்கும். வாய்ப்புகளை கைவிட வைக்கும்.

காதல் நல்லது தான். ஆனால் அந்த காதல் சரியான வயதில் கொள்ளும் போது தான் பல நல்ல விடையங்களை காண தோன்றும், பகுந்தாய தோன்றும். பல பெண்கள் காதல் மயக்கத்தில் எந்த வசதியும் வேலையும் அற்ற பையன்களை கல்யாணம் செய்வதும் காலம் முழுக்க கஷ்டப்படுவதையும் காணும் போது வருத்தம் கொள்ள வைக்கின்றது. 

தமிழக கலாச்சாரத்தில் ஒரு பையன் திருமணம் முடிக்கும் முன் அவனுக்கு வீடு கட்ட வேண்டும், உடன் பிறந்தவளை கரை சேர்க்க வேண்டும், பெற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பில் அவர்கல் திருமணம் 25 வயதை தாண்டி விடும். பெண்கள் வாழ்க்கை சூழல் அதுவல்ல. பல பெற்றோர் 21, 23 வயதிற்குள் பெண்கள் வாழ்க்கையை ஸ்தரப்படுத்தி விடுகின்றனர். அச்சூழலில் உடன் படிக்கும் பையன்களை கல்யாணம் செய்வது என்பது நடக்காது என தெரிந்தே ஏன் காதல் ஆசை காட்ட வேண்டும்.  

இளம் பருவம் என்பது உயர்ந்த சிந்தனையில், சுதந்திர சிந்தனையில் தங்களை பண்படுத்தி தன் நோக்கை அடைய வேண்டிய தருணம். ஆனால் காதல் என்ற பெயரின் ஒருவன் விருப்பத்திற்கு தன்னை உடம்படுத்தி அவனுக்கு பிடிக்காது என்பதால் யாருடனும் நட்பு பாராட்ட இயலாது உனக்கு நான் எனக்கு நீ என்று குறுகிய வட்டத்தில்  செல்ல வேண்டியதா கல்லூரி வாழ்க்கை? .

கையை பிடித்து கொண்டு போனால் என்ன என்று சிலர் கருதலாம். ஒரு சமூகத்தில் வாழும் போது அதன் நெறிகளை மீறும் போது அது சார்ந்த பல ஆபத்துகள் பெண்களை சூழ்ந்து இருப்பதை பெண் பிள்ளைகள் உணருவதில்லை. இவள் அனுப்பும் எழுத்தை அவன் நண்பர்களுடன் இருந்து பார்த்து தான் ரசிக்கின்றான். நண்பர்கள் உந்துதலில், பெண் பிள்ளைகளை தனித்து அழைத்து போய், கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கி சின்னா பின்னமாக்கும்  பல  சம்பவங்கள் தமிழ் நாட்டில் நடக்கின்றது.  பல பெண்கள் கொல்லப்படுவது காதல் என்ற பெயரில் தான். 

பல பெண்கள்  காதல் என்ற பெயரில்  பல பல சிக்கல்களில் மாட்டி கொள்கின்றனர். குடும்ப மானம் கோத்திரம், ஜாதி எல்லாம் தூர போட்டு விட்டு பெண்கள் பாதுகாப்புக்கிற்கு பங்கம் வக்க இது போன்ற விளையாட்டு உறவுகள் காரணமாகுவதை பெண்கள் புரியும் காலம் இது..

சில வீடுகளில் பெண் பிள்ளைகள் யாரேனிடம் இருந்து பொருட்கள் இலவசமாக வாங்கி வந்தால் விசாரிப்பதில்லை. யார் என்ன கொடுத்தாலும் அதற்கு ஒரு விலை வைத்து தான் கொடுப்பார்கள் என்ற புரிந்துணர்வு பெண்களுக்கு வேண்டும். பல பெண்கள், காதலை விளையாட்டாக கல்லூரி வந்தால் காதலிக்க வேண்டும்  என்று எடுத்து கொள்கின்றனர். 

காதல்  செய்தவனை கல்யாணம் முடிக்காது ஆகும் போதுள்ள குற்ற உணர்வு, இயலாமை இவர்கள் பின்னீடுள்ள வாழ்க்கையிலும் பாதிக்கும். ஆண்கள் எப்போதுமே எளிதில் வசியப்பட்டு  எல்கை மீற எத்தனிதித்து கொண்டே தான் இருப்பார்கள். பெண் தான் அந்த எல்கையை நிர்ணயிக்கும் வண்ணம் ஆளுமையால், சிந்தனையால் உயர்ந்து இருக்க வேண்டும்.

காதல் எந்த வயதிலும் வரும் எத்தனை முறை ஏனும் வரும். வருவதை எல்லாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. படிக்கும் வயதில் நட்பே மேன்மையானது. காதலுக்கும் நட்பிற்கு பல வேறுபட்ட குணங்கள் உண்டு. அதன் எல்கையை சில போது நிர்ணயிப்பது சிறிய ரேகை தான். பெண்கள் நிம்மதியான வாழ வேண்டியவர்கள், கவுரவமாக, மதிப்பிடுடன் வாழ வேண்டியவர்கள். எளிதில் வீழ்ந்து எளிதில் துன்பத்தில் உழலாதீர்கள். 

வாழ்க்கையை அதன் உச்சத்தை கொண்டாடுங்கள். ஏதோ ஒருவனுக்க்காக படிக்கும் காலத்தில் உங்களை ஒடுக்கி, ஒதுக்கி மாய வளையத்தில் வாழாதீர்கள். 
வாழ்க்கை என்பது பல கட்டங்களில் கடந்து போக வேண்டியதே. ஒடுக்கப்படுவதும் அடக்கப்படுவதும் உண்டு வாழ்க்கையில். ஆனால் இந்த கல்லூரி காலங்களின் நினைவுகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை வழி நடத்தட்டும். 


0 Comments:

Post a Comment