3 Jun 2018

தலைவர்கள் திரையில் இல்லை!


மைசூர் மாநிலம் பெங்களூரில் மராத்திய குடும்பத்தில் டிசம்பர் 12, 1950 ல் பிறந்த வர் சிவஜி ராவ்.  தனது நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் இரண்டு ஆண்டுகள்(1973 ல்)சென்னை திரைப்பட நிறுவனத்தில் பயில்கின்றார்.

கே.பாலசந்தரின் , அபூர்வ ராகங்கள் மூலம் 1975 ல் தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகமாகின்றார். 
அபூர்வ ராகங்கள், , கதா சங்கமா, அந்துலெனி கதா, மூன்று முடிச்சு,அவர்கள், 16 வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி ,திருப்புமுனை, முள்ளும் மலரும் , ஆறிலிருந்து அறுபது வரை அலாவுதினும் அற்புத விளக்கும், தர்ம யுத்தம் , புலி, நினைத்தாலே இனிக்கும் , ப்ரியா, அம்மா எவரிக்கின அம்மா, பில்லா, ஜானி ,முரட்டு காளை, நெற்றிக்கண் , தில்லு முள்ளு ,போக்கிரி ராஜா மற்றும் தனிகாட்டு ராஜா , கானூன்(1983) , நான் மகான் அல்ல படம் , அன்புள்ள ரஜினிகாந்த், நல்லவனுக்கு நல்லவன் , ஸ்ரீ ராகவேந்திரா , நான் சிகப்பு மனிதன், படிக்காதவன் மிஸ்டர் பரத் , வேலைக்காரன் குரு சிஷ்யன், மற்றும் தர்மத்தின் ,புளூட் ஸ்டோன் என்ற ஆங்கில படம், ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை மற்றும் அதிசய பிறவி ,பணக்காரன் , ஹம், தளபதி, அண்ணாமலை,  மன்னன்  ,  வள்ளி , வீரா, பாட்ஷா,முத்து , அருணாசலம், படையப்பா, சந்திரமுகி குசேலன், எந்திரன் என இவருடைய திரைப்பட பெயர்களே இவர் படத்தை பற்றி கதைகள் சொல்லின. 
.
2011 ஆம் ஆண்டு தனது குருவான கே.பாலசந்தர் கேட்டு கொண்டதின் பேரில் தனது புகை பழக்கத்தை விட்ட ரஜனி, 2012 வருடம் பாபா படத்தின் வெற்றிக்கு என  பீடி, மது குடிப்பது போல்  நடித்து பாட்டாளி மக்கள் கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளானார்.  
சுவாமி சச்சிதானந்தா, ராகவேந்திர சுவாமி, மகாவீர் பாபாஜி, மற்றும் ரமண மகரிஷிஎன பல சாமிகள்   ரஜினியின் சாமிகள்களாக உண்டு . சினிமாத்துறையில் இவருடைய வருமானம் உயர உயர தன் படத்திற்கு தானே திரை வசங்கள் எழுதி கொடுக்கும் நிலையை எட்டினார். அத்துடன் தனது சினிமவில் அரசியல் வசங்கள் பேசத்துவங்கினார்.. இதனால் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு வளர துவங்கியது. இவர் உருவ பலகைக்கு பால் ஊற்றும் ரசிக குஞ்சுகள் எல்லாம் தங்கலூம் அரசியலுக்கு வந்தது போலவும் ரஜனி முதலமச்சர் ஆனால் தாங்களும் மந்திரியாகி விடலாம் என கனவு காண ஆரம்பித்தனர். அவர்கள் கனவை வலரச்செய்ய நான் வருவேன் , அது ஆண்வன் கையில் உள்ளது , போர் வந்தால் வருவேன், சிஸ்டம் சரியில்லை என தனது பொன்னான அரசியல் முத்துக்களை உதிர்க்க ஆரம்பித்தார் ரஜனி.

அரசிய விமர்சகர் , எழுத்தாளர் சோ.ராமசாமி போன்றவர்கள் ரஜனியின் சிளை அரசியல் ஆசைக்கு தண்ணீர் ஃபிட்டு வளர்க்க உதவினர்.    இந்த ஊக்கத்தால் 1995 இல், இந்திய தேசிய காங்கிரஸுக்கு  ஆதரவு அளித்தார்.  1996 ல், காங்கிரஸ் கட்சி அதிமுக உடன்- கூட்டணி வைத்ததும் தனது ஆதரவை  தி.மு.க கூட்டணிக்கு அளித்தார். இப்போது ஆன்மீக அரசியல் பேசி வருகின்றார். ஆன்மீகம் என்றால் இமயமலை செல்வது சாமியார்களை சந்தித்து ஆசி பெறுவது பின்பு மலை இறங்கினதும் நடித்து பணம் ஈட்டுவது தன் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு கூட ஊதியம் கொடுக்காது இருப்பது, நாய்க்கு எலும்பு போடுவது போல் சின்ன காசை போட்டு  அரசியல் ஊடாக நிறைய சம்பாதிக்க இருப்பவர் தான் ரஜனி. 
ரஜனியின் தாரளகுணம் சென்னை வெள்ளத்தில் என பல சம்பவங்களில் கண்டது தான். இவரை போன்ற ஆன்மீக நடிகர்கள் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தும் தமிழ் சினிமா அடிப்படை கலைஞர்களின் அடிப்படை பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. சமூக பணியை செய்யாது அரசியல் என்ற பெயரில் சமூகத்தை ஆட்டிபடைக்க நிலைக்கும் ரஜனியின் ஆன்மீக அரசியல் ஆராயப்பட வேண்டியது. படம் வெளியிடும் முன் அரசியல் பேசுவதும் படம் வெளியானதும் இமைய மலை போய் வருவதும் என ரஜனி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ரஜனி சினிமாவில் இடம் பிடித்ததே  பீடி சுற்றி போடுமதல், கழுத்தில்  துண்டை எடுத்து ஸ்டைலாக எறிதல், தொப்பி, கலர் கண்ணாடி அணிதல், பெண்களை அவமதிக்கும் பெண்களை ஏளனம் செய்யும் ஆண் கதாப்பாத்திரமாக வந்து அடிமட்ட ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் இந்த ரஜனி.
அந்தைய நாட்களில் ஒரு சினிமாவில் கதாநாயகன் கதாப்பாத்திரத்திற்கு என சில நியதிகள், ஒழுக்கம், அறம் இருந்தன. ரஜனி குடிகாரனாகவும் போக்கிரியாகவும் , ஏழை வீட்டு வேலைக்காரனாக இருந்து பணக்காரப்பிள்ளையை கல்யாணம் முடிப்பது, மாமியாரிடம் சண்டை போடுவது, முதலாளி அம்மாவை கன்னத்தில் அடிப்பது என  சில பல வெத்து புரச்சியால் அடிமட்ட   இளைஞசர்களுக்கு ஹீரோ ஆனார். 

அந்நேரம் வரை பெண்களை வாம்மா, தாயே, என  மரியாதையுடன் அழைத்த  கதாநாயகர்கள் மத்தியில்; பெண்களை போடி, வாடி என அழைப்பது, பெண்களை அடங்கி போகனும்,  நல்ல பெண்ணுன்னா இப்படி தான், கெட்டவளை அழிக்கனும்  என்ற சில பொன் மொழிகள் எல்லாம் கூறி பெண் என்றாலே ஆணுக்கு அடங்கி வாழ வேண்டியவள், தன்னை கற்பழித்த கொடியவனை கூட கல்யாணம் பண்ணி அவனுக்கு சேவை செய்து வாழ்ந்து மடிய வேண்டிய அபலை, அம்மா என்றாலே தியாகம் என பல பல ஏமாற்று தன்மானமற்ற கொள்கைகளை பரப்பியவர் இந்த ரஜனி.  ரஜனி கதாப்பாத்திரம் போல்  பெண்களை அவதூறு செய்த கதாப்பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் இருந்ததும் இல்லை இனி இருக்க போவதும் இல்லை. அவருடைய படத்தில் பெண்கள் ஆண்களுக்கான கேளிக்கையாகவே கொச்சையான சீனுகளால் கதாவசங்களால் வடிவமைத்திருப்பார்கள். எப்போதும் ஒரு கதாப்பாத்திரம் காம இச்சையுடன் ரஜனி பின் பாய்ந்து ஓடி கொண்டே இருக்கும்.
புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு காரணமான பீடியை தமிழகத்தை விட்டு போகாது இருக்கிறது என்றால் அதன் காரணம் இந்த ரஜனி ஸ்டைல் பீடி குடி தான்.
ரஜனியின் படத்தை கவனித்தால் வாழ்க்கையை போராட்டமாகவும் தன்னை எதிர்ப்பவனை எதிர்த்து தேவை என்றால் கொலையும் செய்து வெற்றி பெறுபவனகா காட்டியிருப்பார். அடங்காதை என மக்கள் நரம்புகளை புடைக்க செய்து சூப்பர் ஸ்டார் என்ற பதவியை தக்க வைத்தவர். 
இப்படியான ரஜனியின் மாயை உலகம் பழைய தலைமுறையுடன் ஓய்ந்து விட்டது. 91 ல் ஏன் 2001 அரசியலுக்கு வந்திருந்தால் கூட கொஞ்ச நஞ்சம் காலம் அரசியலில் இருந்திருப்பார். அவரை ஏற்க ஒரு கூட்டம் காத்திருந்திருக்கும்.  67 வயதில் தற்போதைய சமூக சூழலை பற்றி முற்றிலும் புரிதல் இல்லாதவர் கார்ப்பரேட் சன்னியாஸியல் தமிழகத்திற்கும் ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. பெரியார் போன்ற அறிவாளிகள் சமூக புரச்சியாளர்களின் கொள்கை கருத்து மறந்து போகவே செய்யும். 

நித்தியானந்தாவிடம் ஆசி பெற்ற ரஜனி நித்தியானந்தாவால் பெண்கள் சீரளிகப்படுவதும் மைனர் குழந்தைகள் கூட அவர் பிடியில் சிக்குண்டு இருப்பதை கண்டிக்காதவர். 

ரஜனி ’தான்’ என்ற மாய உலகத்தில் வாழ்ந்தவர். நடிப்பில் கூட 67 வயது ஆன பின்பும் 27 வயது பெண்ணுடன் ஜோடி சேரும் கதை தான் தேர்வு செய்கிறார். அமிதாப்! ஏன், அவர்களுக்கு பின் வந்த அமீர்கான், சல்மான்கான் போற்றோர் கூட தங்கள் வயதிற்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டனர்.  ரஜனி இன்னும் ராமாராவ் எம்ஜிஆர் காலத்தில் வாழ்வது காலத்தின் கொடுமை.

கடந்த சில வருடங்களாக தமிழகம் புயல் வெள்ளம் , ஜல்லிகட்டு , தூத்துக்குடி போராட்டம், தண்ணீர் பஞ்சம், நீட் , அனிதா மரணம்,  அரசியல்வாதிகளில் ஊழல், என பல பிரச்சினையை கடந்து போகிறது.  ஆசிபா கலையான போது கூட வாய் திற்க்காதவர். ஒன்றுக்குமே வாய் திறக்காத ரஜனி மக்களுக்கு அறிவுரை மட்டும் வழங்க வந்தது எந்த வகையில் ஞாயம்.

ஆகையால் ரஜனி தியானம், மனைவி குழந்தைகள்,  பேரக்குழந்தைகள் போயஸ் கார்டன், சுகமான வாழ்க்கை என இருந்து விட்டால் அவருக்கு நல்லது. அவரால் ஒரு இளைஞனின் கேள்வியைக்கூட எதிர் கொள்ள இயலவில்லை. அரசியலில் மிளிர, புரட்சியாளனாக நடிக்கவாவது தெரியனும். குறைந்தப்ட்ச  மனித நேயமாவது இருக்க வேண்டும்.  உங்கள் சாணக்கியத்தனம் காலாவதியாகி விட்டது. 
காலாவை காண வேண்டும்.  ரஜனியில் திரை புரட்சி வசனவும் இயல்பு வாழ்க்கையிலுள்ள கார்ப்பரேட் வசனங்களையும் நிதானமாக அவதானிக்க வேண்டும்.
அரசியல் தெரியாதவன் குறிப்பாக தமிழ்நாட்டு பண்பாடு தெரியாதவர்கள், சாதாரண மக்களின் பிரச்சினைகள் தெரியாதவர்கள் அரசியலுக்கு வருவது ஆபத்து. நடிப்பை தொழிலாக கொண்டோர் அரசியலையும் நடிப்பு களமாக மாற்றி விடுவர். அவர்கள் வீராவேச பேச்சில் நாட்டு நடப்பு இருக்காது , வாழ்க்கை இருக்காது வெறும் நடிப்பும், பகிட்டும் மிஞ்சின ஊழலும் அதீதமான ஆசையும் தான் இருக்கும். தமிழர்கள் தனது தலைவர்களை திரையில் தேடாது சமூகத்தில் தான் வாழும், தன்னுடன் வாழும் உயிரும் சதையுமான மனிதனில் மனிதத்தில் தேட வேண்டும்...... 


0 Comments:

Post a Comment