22 Jul 2017

செல்வபாபா நினைவு சொற்பொழிவு- Selvababa Memorial endowment Lecture-Rtn Senthil Kannan

வாழ்க்கையை மிகவும் சுவாரசியமாக ரசித்து வாழ்ந்தவர்தூங்கும் நேரம் தவிர்த்து வேலை செய்து கொண்டிருக்கும் வழக்கம் கொண்டவர்மாதம் ஐந்து நாட்களாவது எங்களுக்காக(தன் குடும்பத்திற்காக) ஒதுக்கும் இனிமையான மனிதர். அவர் எங்களை விட்டு, அவர் அலுவலகம்,வேலை; அவர்  கனவை விட்டு, கடந்து விட்டாரா? இன்னும் நம்ப இயலவில்லை. ஒவ்வொரு நொடியும் என்னை வதைக்கும் அவர் நினைவுகளை ஆக்கபூர்வமான செயலாக்கத்துடன் இணைக்க வேண்டும் என்பது என் கடமையாகி விட்டது கட்டாயமாகியது.


செல்வபாபாஇயல்பாகவே இளகிய மனம் படைத்தவர், ஈர நெஞ்சம் கொண்டவர். என்றும் இளமையுடன் இளைஞராக இருக்கவே விரும்பினவர். சுதந்திரமான வளர்ச்சியை பெரிதும் விரும்பினவர். அத்தானுடன் பயணிக்கும் போது ஒரு முறை அவருடைய துறைத்தலைவருடன் பேசினதும்  எனக்கும் அறிமுகம் செய்து  தந்ததும் நினைவு இருந்துஇருவரும் பல்கலைகழகம்
சென்ற போது அவருடைய பேராசிரியை சிந்தியா அவர்களும் முனைவர் பட்டம் பெற வந்திருந்தார். என்னை படிக்க வைத்து பட்டம் வாங்க வைத்திருந்தை அறிந்தும்தன்னுடைய மாணவரான என்னவர் தன்னுடைய படிப்பை முழுமையாக முடிக்க அறிவுறுத்தி  கொண்டிருந்தார்.


செல்வபாபா தன் உழைப்பால் தன்முனைப்பால் வளர்ந்தவர் உயர்ந்தவர். பல வருடங்கள் மற்றவர்களுக்கு கணக்காளராகவும் தணிக்கையாளராகவும் சேவையாற்றினாலும் கடந்த  ஏழு வருடமாக தன் சொந்த தொழிலில் கால் பதித்து வெற்றி கண்டவர்.




தன்னுடைய கல்லூரிக்கு செல்ல வேண்டும். தன் துறை சார்ந்த மாணவர்ளுக்குடாலிபோன்ற கணக்கு சார்ந்த கணிணி மென்பொருள் கற்று கொடுக்க வேண்டும் என்று பல முறை என்னிடம் கூறினது ஞாபகம் வந்தது. அவ்வகையில் செல்வபாபாவிற்கு மிகவும் பிடித்த, அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த ஊரில், அத்தான் படித்த கல்லூரியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற ஆவலில்; வருடா வருடம் வருமான வரி அல்லது தணிக்கை பாடத்தில் முதல் இடம் வரும் மாணவருக்கு ஒரு சிறு பரிசு கிடைக்கும் வண்ணம் சில ஏற்பாடுகளை செய்ய முன் வந்தேன்.  இந்த கல்வியாண்டு துவங்கிய, சூழலில் அத்தான் படித்த துறையை சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு சிறப்பு விரிவுரை ஏற்பாடு செய்ய மனம் கூறியது. துறைத்தலைவரிடம் என் விருப்பம் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்திருந்தேன். உடனடியாக என்னை உற்சாகப்படுத்தியதுடன் வாய்ப்பையும் வழங்கினார்.

என்னவர் செல்வபாபா கடந்த 24 வருடம் கணக்கு தொழில் சார்ந்து இயங்கினவர்.  தனது பட்டப்படிப்பு முடித்த உடனே  சென்னை அடையாரில்  ராகவன் என்ற ஆடிட்டரிடம் ஆடிட்டிங்  பயிற்சியாளராக தன் தொழிலை துவங்கினார். பின்பு பெற்றோரின் வற்புறுத்தலால் ஆர்.பி.டி’ என்ற தேயிலை தோட்த்தில் ஆடிட்டிங் உதவியாளராக வேலையில்  சேர்ந்தார். ராணுவத்தில் இருந்து வந்த முரளிதர மேனோன்  என்ற மேலாதிகாரியின்  கீழ் தன் வேலையில் நிபுணராக வளர்ந்தார்.  2000 வாக்கில் ஏற்பட்ட உலகாலாவிய சூழல் மாற்றத்தில்   தாக்குப்பிடிக்கா இயலா  தேயிலைத்தோட்டம் வேலை வாய்ப்பு சரிய தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்லில் தணிக்கையாளராக சேர்ந்தார்ஒரு நிறுவனத்தில் இருந்து தனி பெரும்  முதலாளிகள் கீழ் வேலை செய்யும் போது பல சிக்கல்களை எதிர் கொண்டார். இருப்பினும் பத்து வருத்திற்குள் ஜாம்பெர்ட், ராஜா ஏஜென்ஸி, போன்ற முதலாளிகளிடன் வேலை செய்துள்ளார்.  முதலூரை சேர்ந்த ரே அவர்களின் கானடா நாட்டில் இயங்கும் ஒரு கணக்கு நிறுவனத்தில் வேலை கிடைத்த போது பாளையம்கோட்டையை நோக்கி நகர்ந்தோம். பின்பு கொக்கரைக்குளம்சூசி ஆட்டோ ஸோண்பைக் விற்பனை நிலையத்தில்  புருஷோத்தமன் சாரிடம்  கணக்கு மேலாளராக வேலை நோக்கினார்.  முதலாளியின் ஆதரவு அவரை ஆக்க பூர்வமாக நகத்தியதுபின்பு நாகர்கோயிலை சேர்ந்த  கல்லூரி கணக்கு அலுவலகத்தில் சில வருடங்கள் வேலை செய்த பின்  சுயமாக அக்கவுண்ட் சொலுஷன்என்ற நிறுவனத்தை துவங்கினார்.






மற்றவர்களிடம் வேலை செய்வதும் சொந்தமாக செய்வதும் என இரு நிலையை கடந்தவர். மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட தன் சுய சம்பாத்தியம் என்பதையே பெருமையாகவும் விருப்பமாகவும் கொண்டிருந்தவர். அவ்வகையில் அவர் பெயரில் நிகழும் முதல் விரைவுரை  சுயதொழில் அல்லது  தொழில்  முகவோர் சார்ந்து இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்து, துறைத்தலைவர் ஜிஎஸ்டி  பற்றி விரிவுரை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற சொல்லுக்கு இணங்க விரிவுரையாளரை வினவி கொண்டிருந்தேன்



நண்பர் பத்திரிக்கையாளர் பாலமுருகன் உதவியால் விவிடி & சன்ஸ் தேங்காய் எண்ணை குடும்பத்தை சேர்ந்த ரோட்டரியன் டி. செந்தில் கண்ணன் அவர்கள் முதல் விரிவுரை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்து.   லயாளா கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றவர். உலகலாவிய வியாபாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தாரணி ஏற்றுமதி  இறக்குமதி சேவை நிறுவனம் ஊடாக ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். ’பாம்ஸ்என்ற பயிற்சி நிறுவனத்தை நத்தி வருகின்றார். ’பாம்ஸ் பிளஸ்என்ற மாதந்திர பத்திரிக்கையும் நடத்தி வருகின்றார். வியாபார நிறுவனக்களின் தலைமையும் பல விருதுகளும் பெற்றுள்ளர்.  25-நாடுகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டுள்ளார். ’சிந்தனையில் உலகலாவியலாகவும் செயலில் உள்ளூர் உணர்வுடனும் செயலாற்றுகஎன்ற நோக்கில் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயலாற்றி வருபவர்

வியாபாரத்தில் தமிழகத்தில் இரண்டாவது இடமும் தமிழகத்தில் இரண்டாவது இடவும் பெற்ற விவிடி தேங்காய் எண்ணைய் குழுமத்தில் ஒருவரான மதிப்பிற்குரிய டி செந்தில் கண்ணன் அவர்களின் சிறப்புரை கடந்த வெள்ளி அன்று நடைபெற்றது.


கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் முனைவர் பாஸ்கர் ராஜகோபால், கல்லூரி நிதி அதிகாரி முனைவர் அருள்ராஜ், முனைவர் சிந்தியா  மற்றும் துறையின் அத்துனை பேராசிரியர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
 பங்கு கொண்ட 250க்கிற்கும் மேற்பட்ட மாணவர்களில் யாரேனும் எதிர்காலத்தில் தொழில் தேடுபவராக இல்லாது தொழில் முகவர்களாக/ கொடுப்பவர்களாக உருமாற, புதிய தகவல்கள் தெரிந்து கொள்ள, சுயநம்பிக்கையில் முன்னேற செல்வபாபா சிறப்பு விரிவுரை உதவினது என்றால் செல்வபாபா நிச்சயம் மகிழ்வார் என நம்பிக்கை கொள்கின்றேன்.


மற்றவர்கள் வளர்ச்சியில் அத்துனை ஆர்வம் கொண்டவர், நேரம் காலம் பாராது உழைப்பை மட்டும் நம்பி சுயமாக சுதந்திரமாக வாழ விரும்பினவர்சுயஒழுக்கம் தன்னம்பிக்கைக்கு நிகரானவர். அவருடைய நினைவாக அவர் எப்போதும் விரும்பும் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆசைப்பட்ட  பணியை தொடர வேண்டும் என்ற என் நோக்கத்தை நிறைவேற்றின அத்துனை நல் உள்ளங்களுக்கும், என் நன்றிகள். சிறப்பாக சிறப்பு விரிவுறை நிகழ்த்திய செந்தில் கண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் வணக்கங்கள். தான் மட்டும் தொழில் அதிபராக இருந்தால் போதாது வரும் தலைமுறையும் திறம் கொண்டு வளரவேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றுபவர் என்னவருடைய முதல் சிறப்பு விரிவுரையை துவங்கி வைத்தில் பெருமை கொள்கின்றேன்.



என்னவர் செல்வபாபா 27 வருடம் முன்பு நடமாடின, மகிழ்ந்த கல்லூரி வளாகத்தில், என்னவரின் மாணவப்பருவத்தில் செலவழித்த துறையின் வளாகத்தில் அவருக்கு பிடித்த அவர் ஆசிரியர்களுடன் கல்லூரி ஆலயம் அருகாமையில், நூலக சாலையில் அங்கு கண்ட ஏதோ ஒரு மரத்தடியில் அத்தான் உள்ளதாகவே உணர்ந்தேன்.

நாங்கள் நிகழ்ச்சியை முடித்து திரும்பினபோது அத்தான் போஸ்டரில் இருந்து ஒரு கணம் உயிரோடு வந்து என்னை நோக்கியது போல் கண்டேன். என்னை உருவாக்கினர் என்னை மேற்கல்விக்கு அனுப்பி கல்லூரி ஆசிரியையாக  உயர்த்தினவருக்கு கல்வியின் ஊடாகவே என் நன்றியை செலுத்தி விட்டேன் என்ற திருப்தியுடன் திரும்பினேன்.

என் வேண்டுகோளுக்கு இணைங்க நிகழ்ச்சியை படம் பிடித்து தந்த என் மாணவர்கள் ஜெனா , வல்லிகண்ணன் மற்றும் ராஜாவுக்கு என் நன்றிகள் மகிழ்ச்சிகள்.







11 Jun 2017

Teachers make difference – ஆசிரியர்கள் உருவாக்கும் மாற்றங்கள்.



Teachers make difference என்ற தலைப்பில் ஜூன் 3, 4  இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்கில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றேன்.  நிகழ்ச்சி ஒருங்குணைப்பாளர் நண்பர் பால முருகன் அவர்கள் வாயிலாக அறிந்து, பங்கு கொண்ட நிகழ்வாகும்.

 தூத்துக்குடி றோட்டறி கிளப்பு மற்றும் விவேகானந்தா  தொண்டு நிறுவனத்தின்  தலைமையில் நடந்த பட்டறையாகும். கோயம்பத்தூரை சேர்ந்த குழந்தை மேம்பாட்டு வல்லுனரான திருமதி பி. ஜெயஸ்ரீ   பயிற்சி பட்டறையை நடத்தினார்கள்.

வீட்டிலிருக்கும் மகன்களுக்கு பழ ரசம், சாப்பாடு என தயார்ப்படுத்தி வைப்பதற்குள்; காலை 7 மணிக்கு எங்கள் வீட்டு அருகாமையில் வரும் பேருந்தை பிடிக்க இயலாது போய் விட்டது.  ஒரு பர்லாங்கு நடந்து சென்றுஅடுத்த பேருந்தை பிடித்து புது பேருந்து நிலையம் வந்து  சேர்ந்து தூத்துக்குடி பேருந்தில் இருக்கையை பிடித்து விட்டேன்.  தூத்துக்குடியில் இருந்து இன்னும் சில மைல்கள் பயணித்தால் அன்னம்மாள் கல்லூரி வந்து அடையலாம்அதன் எதிர்புறத்தில் விவேகானந்தா தொண்டு நிறுவனம் செயலாற்றுகின்றது. தூத்துக்குடியின் எந்த நெரிசலும், அலம்பும் இல்லாது அமைதியான பகுதியில் அமைந்து இருந்து  ஆசிரமம் .  நான் செல்லும் போது நிகழ்ச்சி ஆரம்ப நிகழ்வு நடந்து கொண்டிருந்து. நிகழ்ச்சியின் நோக்கம் கல்வி மாற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு பற்றி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் கருத்தை முன் வைத்து பேசினர். காமராஜ் கல்லூரி தலைவர் பட்டறையை துவங்கி வைத்தார்.


அடுத்து பயில வந்த நாங்கள் அனைவரும் எங்களை அறிமுகப்படுத்தி கொண்டோம்.  மழலை பள்ளி ஆசிரியர்கள் துவங்கி கல்லூரி பேராசிரியர்கள் வரை  பட்டறையில் பங்கு பெற்றோம் என்பதே சிறப்பம்சம் ஆகும். சொந்தமாக டூயூஷன் நடத்தும்   கல்லூரி மாணவர்கள் இருவரும்  பங்கு கொண்டனர். மாணவர்களின் பார்வையில் கல்வி சூழல் பற்றி தங்கள் ஆணித்தரமான கருத்தை ஒவ்வொரு நிலையிலும் எடுத்துரைத்தனர். பொறியியல் பட்டதாரியான,  போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் நிறுவனம் நடத்தும் ஆசிரியரும் பங்கு பெற்றார். இவர் தன்னை அறிமுகப்படுத்தும் வேளையில் தமிழக  கல்வி தரத்தை பற்றியும் கல்வி திட்டத்தை பற்றி பல விமர்சங்கள் அடுக்கினார்.  அரசு அலுவலகத்தில் இருந்து மனிதவளத்துறையை சேர்ந்தவரும் பங்கு பெற்றார்.  உயர் பள்ளி வகுப்பு ஆசிரியரும் பங்கு பெற்றார். கல்வியல் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பங்கு பெற்றனர்.


அரசு கல்வி , மத்திய , தேசியபல வகையான கல்வித்  திட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும், எந்த கல்வி திட்டத்தில் படித்தாலும் எல்லா மாணவர்களும் மேற்கல்விக்கு வந்து சேரும் பல்கலைகழக திட் டத்தின் கீழ் இயங்கும்  கல்லூரி பேராசியர்கள்  என எல்லோரும் ஒரே இடத்தில் ஒருமித்து மாணவர்களை நாட்டின் வளமாக மாற்ற வேண்டிய தேவையும் அதில் ஆசிரியர்கள் பங்கைப்பற்றி விவாதித்தோம் .

 கருத்தாக்க விவாதம்., அதன்  பலன் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை வெறும் சொற்பொழிவு பேருரை என்று இல்லாது விளையாட்டு, குறும் கேள்வி , குறிப்பிட்ட நிகழ்வை சிறு குழுவாக விவாதித்து முடிவிற்கு வருவது என ஒரு நாள் பட்டறை சிறப்புற  நடந்து முடிந்தது.

எனக்கு ஒரு நாள் பங்கு பெறும் நோக்கமே இருந்தது. அதனால் ஜெயஸ்ரீ மேடம், ஒருங்கிணைப்பாளர் பாலா சாரிடம் நாளை வர இயலாதுஎன்று அனுமதி பெற்று விடை பெற்றேன். நீங்கள் நாளையும் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் எனக்கூறி விடை தந்தனர்.


வீடு  இரவு 9 மணி வந்து சேர்ந்தேன். சோர்வு ஒரு புறம். அடுத்த நாள் காலை 5 மணிக்கே விழிப்பு தட்டியது. இன்றைய வகுப்பை இழந்தால் நேற்றைய வகுப்பின் அர்த்தம் அற்று போகும் என வேலையை விரைவாக முடித்து வைத்து பேருந்தை பிடித்து பயிற்சி இடம் வந்து சேர்ந்தேன்.

ஒரே கேள்வியை வைத்து குழுவாக கருத்து உருவாக்கம், ஒரே பிரச்சினைக்கு  தனி நபர்களின் அனுபவம் சார்ந்த சிந்தனை, விளக்கம் மற்றும் தேர்வு, கல்வி என்பதை எந்த நோக்கத்தில் மாணவர்களை அணுக வேண்டும். படிப்பித்தல் என்பதையும் கடந்து மாணவர்களை நாட்டின் வளமாக உருவாக்குவது, வகுப்பறைகள் என்பது தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து  படித்தல், தெரிதல், புரிதல், ஆராய்தல், என்ற நிலைக்கு கொண்டு செல்லுதல், மாணவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக வரும் சூழலை உருவாக்குதல், ஆசிரியர்களும் மகிழ்சியாக வருதல் என பல நிலைகளில் கல்வி சூழலை பற்றி ஆராய்ந்து கலந்து ஆலோசித்தோம்.


சோர்வு தட்டும் போது குழு விவாதம், குழு விவாதம் நிறைவடையும் போது விளையாட்டுகள் என இரண்டு நாள் பயிற்சி பட்டைறை மிகவும் நிறைவாக; விருவிருப்பாக உபயோகமாக இருந்ததுஆசிரியர்கள் என்ற தோரணையை, நிலையை மறந்து மாணவர்களை போல்  மீன் குளம், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் நாங்கள் விளையாடினது, மாணவர்களை சோர்வில்லாது எவ்வாறு  வழி நடத்தலாம் என போதித்தது. ஸ்மார்டு பலகை, சாக்கு பீஸ் பலகை, உரையாடும் கற்பித்தலையும் கடந்து அட்டைகள் வழியாக அர்த்தங்களை விளக்கும் சூழல் இன்னும் சுவாரசியமாக இருந்தது

   
மாணவர்கள் கல்வி கற்பதில் பெற்றோரின் பேராசை, பெற்றோரின் பேராசையை காசாக்க துடிக்கும் தனியார் கல்வி சூழல், பொறுப்பற்ற அரசு பள்ளி சூழல் இதன் மத்தியில்  கற்றல் ஆசையை மாணவர்கள் பக்கம் எட்ட வைக்க ஆசிரியர்களின் பங்கு அளவிட இயலாதது. 2 வயது ஆகும் முன்னே பள்ளியில் சேர்க்கும் பெற்றோர், மூன்று வயது ஆகும் முன் தன் பிள்ளை எழுத வேண்டும் என அடம் பிடிக்கும் பெற்றோர், பல பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவ சமுதாயத்தை கற்பதில்  ஆக்க பூர்வமாக நகர்த்துவோம் என உறுதி பூண்டு கல்வி சூழலை அச்சத்திற்கு உள்ளாக்கும் தனியார் கல்வித்துறை, அரசின் லாபநோக்கான கல்வி நயங்கள், மாணவர்களின் உள-மன நலனில் அக்கறை இல்லாது முன் செல்ல கல்லூரி எட்டும் மாணவர்கள் கல்வியோடு மட்டுமல்ல கல்வி சூழல் கல்வியாளர்கள் மேல் வெறுப்பு கொண்டு இருக்கின்றனர் என எல்லா பரிமாணங்களை பற்றியும் விவாதித்தோம்

கல்லூரி விடுமுறை நாட்களில் ஒரு பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றதும் எங்கள் மாணவர்களை வழி  நடத்த இந்த பட்டறை வழியாக நாங்கள் பெற்ற ஊக்கவும்  உற்சாகவும்    மிகவும் பெரிது.

சிறந்த ஆசிரியையாக மதிப்பிற்குரிய திவ்யா டீச்சரும் சிறந்த ஆண்பால் ஆசிரியாராக ராஜாவும் தேர்வாகி   பரிசு பெற்றனர். நிகழ்வை பற்றிய எங்கள் கருத்தை ஆசிரியர்களை பிரதினித்துவப்படுத்தி நான் நன்றியையும் வாழ்த்துதலையும் எங்கள் கருத்தையும் தெரிவித்தோம். அதே போல் காமராஜ் கல்லூரி கார்ப்பரேட் துறைத் தலைவரும் பயிற்சி பட்டறையை பற்றிய நல்ல செய்திகளை பகிர்ந்தார்.

அறிமுகமே இல்லாது ஒருமித்த  நாங்கள் 23 பேரும் பட்டறை முடியும் தருவாயில் நட்பில் இணைந்து இருந்தோம். நிகழ்ச்சி முடிவில் சாற்றிதழுடன் சில புத்தகங்களும் பரிசாக பெற்று விடை பெற்றோம்.

பட்டறையை நடத்திய ஜெயஸ்ரீ அவர்களின்  கல்வி மற்றும் குழந்தைகள் மனநலம் பற்றிய பல கருத்துக்களை பகிர்ந்தார். ஒரு பட்டறையை சிறிதும் சோர்வற்று மிகவும் ஆக்கபூர்வமாக நடத்தி சென்ற அவருடைய திறமை அளபரியாதுஒரு கருத்தை மிகவும் நுட்மாக ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைத்த ஜெயஸ்ரீ அவர்கள் பாராட்டுதலுக்குரியவர். அவருடைய கருத்தாக்கங்கள் கல்வி நலனுடன் சமூக அக்கறையும் பொதிந்து இருந்தது. 

இந்த பட்டறையில்  அரசு ஆசிரியர்கள் பங்கு பெறாதது கவனிக்கப்பட வேண்டியது. மிகவும் குறைவான ஊதியம் பெற்று மிகவும் கடினமான வேலைப்பழுவுடன் இயங்குபவர்களே தனியார் கல்விக்கூட  ஆசிரியர்கள். வேலை ஸ்திரதையும்  மிகவும் குறைவு. இருப்பினும் தங்கள் கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற உந்துதலில் தனியார் ஆசிரியர்கள் கூடி பயிற்சி பெற்ற நிகழ்வு எடுத்து சொல்லக்கூடியது.. 

15 Apr 2017

லா லா லாண்ட்- ஒரு திரைப்பார்வை


லா லா லாண்ட்” டாமியன் சாஸில் (Damien Chazelle) இயக்கத்தில், ரியான் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் . இந்த முறை 13 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.  இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இந்தப் படத்துக்கு சிறந்த நடிகை (எம்மா ஸ்டோன்), சிறந்த இயக்குர் (டாமியன் சேஸில்), சிறந்த ஒளிப்பதிவாளர் (லினஸ் சான்கிரன்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (டேவிட் வாஸ்கோ, சான்டி ரினால்ட்ஸ்), சிறந்த ஒரிஜினல் இசை (ஜஸ்டின் ஹர்விட்ஸ் - சிட்டி ஆப் ஸ்டார்ஸ்...) சிறந்த ஒரிஜினல் பாடல் (ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாஸக் மற்றும் ஜஸ்டின் பால் - லா லா லாண்ட்) ஆகிய 6 விருதுகள் கிடைத்துள்ளன.டிசம்பர் 9, 2016 வெளியான  இந்த ஹோலிவுட் படம் உள்ளூரில் 50 மிலியன் டாலரும், வெளிநாட்டு வசூலில் 85 மிலியன் டாளரும் தாண்டி விட்டது.

பல போதும் திரைப்படங்கள் அதன் கதை,    கருத்தாக்கம்  சார்ந்து  சமூக பங்களிப்பு என்ற நிலையில் நற் மதிப்பை பெறும்.  இப்படம் காட்சி அழகியல் என்ற நிலையில் மனதிற்கு இதமான அனுபவத்தைத்தரும் படமாகும்.   அதன் காட்சிகளும் இசையும் நம் மனதை விட்டு மறையாது, நம்மையும் கற்பனையான உலகில் நடனம் ஆட வைத்த படம் என்றால் மிகையாகாது. இது ஒரு இசை சார்ந்த படம் என்பதால் 15க்கும் மேற்பட்ட பாடல்கள் காதுகிற்கு இதம் என்பதுடன் கருத்துச்செறிவுள்ள வரிகள் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காட்சி அழகியல்
ஒரு மலை உச்சியின் மேல் நடனமாடும் காட்சி தொகுப்பும் அந்த நகரத்தின் விளக்குகள், நச்சத்திரங்களாக காட்சி தருவது ஒரு புது அனுபவத்தை தருகின்றது. அவர்களின் நடன உடலசைவுகள் நடனம் என்ற நிலையில் இருந்து நம்மை மறக்க செய்து கலையின் அதன் உயரிய  தன்மையை சென்றடைய  செய்கின்றது.   காதலிப்பவர்கள்   நிஜத்தில் இருந்து கனவில் பறக்க செய்யும் மனநிலையை காட்சிப் படுத்திய விதம்-  அழகியல் யுக்தி யாரையும் பிரமிக்க வைப்பது  ஆகும்.  காதலில் உச்சத்தில் மனிதனின் பாரம் குறைந்து பறவையை - புறாவைப்போல் மேல் உயர்ந்து  ஒரு நிலையை அடைவதை காட்டியிருக்கும் காட்சி அழகியது. 

நடிகர்கள் உடை நிறம், அவர்கள் வசிக்கும் வீடுகள் பயண்படுத்தும் பொருட்கள்  அனைத்துமே கலை  அழகியல் என்ற நோக்கில் படமாக்கியுள்ளது ஒரு மறக்க இயலாத உன்னத உணர்வை காண்பர்களுக்கு தருகின்றது,

ஒரு நடிகையாக வேண்டும் என்ற ஒரே ஆசையில் ஆறு வருடமாக  முயன்று தோற்று கொண்டிருக்கும்; பகுதி நேர  வேலை பார்க்கும் மியா என்ற ஒரு   இளம் பெண். எதிர்பாராத வகையில்  சாலையோர பயணத்தில்   ஒரு இளைஞனை காண்கின்றார். பாடகராக பணி செய்யும் ஒரு இரவு கிளப்பில் வேலை பறி போகும் இக்கட்டான சூழலில் நிற்கும்  அதே இளைஞரை   மறுபடியும் சந்திக்கின்றார். அந்த இளைஞனோ கோபமுற்ற நிலையில்  மியாவிடம் பேசுவதை தவிற்து கடந்து செல்கின்றார். மறுபடியும் இவர்களின்  எதிர்பாரா சந்திப்பு பல சூழலில் நிகழ்கின்றது.  

செபாஸ்டியன் என்ற இந்த இளைஞனோ அழியும் தருவாயில் இருக்கும் ”ஜாஸ்” என்ற இசையின் மேல் தீராத ஈடுபாடு கொண்டவர்.   மியா தனக்கு ஜாஸ் மேல் விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கின்றார்.  பின்பு செபாஸ்டியன்  மியாவை ஜாஸ் கலை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று அதன் சிறப்பை விளக்குகின்றார். மியாவும் ஜாசை ரசிக்க ஆரம்பிக்கின்றார். 

பொதுவாக இரு இளம் நபர்கள் என்றால் வழக்கமாக கொள்ளும்   காதல் கல்யாணம், பிரிவு என்று  இல்லாது இயல்பான இரு நபர்களின் மனித நேசம் கலந்த உறவு தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த எவ்வாறு  பயண்படுத்துகின்றனர் என்பதை விளக்கும் படமாகும் இது. 

நபர்களின் சந்திப்பு, நட்பு பின்பு காதலாக உருமாறும் போது தங்கள் விருப்பம் சார்ந்து இருவரும் சமரசமற்று நிற்கின்றனர்.   மியாவுக்கு ஒரு நடிப்பு வாய்ப்பு கிடைக்க உதவும் நோக்கில் செபாஸ்டியன் முனைவதும், செபாஸ்டியன் கனவு நிறைவு பெற மியா நம்பிக்கை தூண்டுவதுமாக கதை நகருகின்றது. 

செபாஸ்டியன் தன் நெடு நாளைய நண்பனை சந்திக்கும் வாய்ப்பை பெறுகின்றார். நண்பனின் இசைக்குழுவுடன் பணியாற்ற; ஒரு நிரந்தரமான வருமானம் வர ஆரம்பிக்கின்றது. செபாஸ்டியன் தனக்கு த்சொந்தமான ஒரு இசைக்குழுக்வை துவங்க வேண்டும் என்ற ஆசையை தூர தள்ளி வைத்து விட்டு மியாவுடன் வாழ்க்கையில் நிரந்தமாக இணைய தன் இசைவை தெரிவிக்கின்றார். ஆனால் மியாவோ உன் லட்சியத்தை,  உன் கனவை நீ அடைய வேண்டும். திருப்தியாகி கொள்ளாதே. என்று கூறுகின்றார். தனக்கு நடிக்க சாதகமான சூழல் அமையாததால் செபாஸ்டியனின் வேண்டுதலையும் மீறி சொந்த ஊர்  சென்று விடுகின்றார் மியா.

வாழ்க்கையில்   சந்திக்கும் எதிர் மறை நிகழ்வையும் இசைப் பக்கம் திருப்ப, செபாஸ்டியனின் இசை  உச்சத்தை நோக்கி நகர்கின்றது. மியாவுடன் ஆன முரண் அதே நிலையில் இருக்க  மியாவுக்கு ஒரு நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதை அறிகின்றார். தன் கோப தாபங்களை   ஓரம் கட்டி வைத்து மியாவிற்கு செய்தியை கொண்டு சேர்க்கின்றார். 


மியா தான் கனவு கண்டது போலவே மிகவும் பிரசித்தி பெற்ற நடிகையாக உருமாறுகின்றார். சூழலில் வசதியைக்கருதி இன்னொருவருக்கு மனைவியாகி ஒரு குழந்தைக்கும் தாய் ஆகி தன் நடிப்பில் மும்முரமாக இருக்கும் வேளையில் தன் கணவருடன் செபாஸ்டியன் இசையை கேட்கும் சூழல் உருவாகுகின்றது. இருவரும்   காதல்பிரிவு   மனநிலையில் கடும் துயர் கொண்டாலும் தங்களுக்கான வாழ்க்கைக்கு மரியாதை கொடுத்து ஒரு புன் சிரிப்புடன் விடை பெறுகின்றனர்.

இருவரும் கூடி வாழ்ந்த நேரம் டிசைன் செய்து கொடுத்த இசை அடையாளத்தை செபாஸ்டியன் பயண்படுத்துவதும் இவர்கள் காதலை நினைவுப்படுத்தும் இசையில் தற்போதும் செபாஸ்டியன் ஆழ்ந்து இருப்பதும் மியாவிற்கு  ஆச்சரியத்தையும்   மகிழ்ச்சியேயும்  ஒருங்கே தருகின்றது.

ஜாஸ் இசையை காண தன் முன்னாள் காதலி தன் கணவருடன் வரும் போது தன் காதலனுடன் இணைந்திருந்தால்  வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என எண்ணி பார்க்கும் மன ஓட்டத்தை ஒரு படத்தொகுப்பால்  ஒரு பாட்டின் ஊடாக திரை  மொழியில் காட்டியுள்ள இயக்குனரின் திறமை பாராட்டப்பட வேண்டும்.   உண்மையாக காதல் கொண்ட செபாஸ்டியன் அப்பெண்ணின் வெற்றியும் அவள் நினைத்த இடைத்தை அடைந்ததை எண்ணி பெருமை கொள்கின்றார்.   நொறுங்கி தவித்த மனம்,  ஒரு சிறு புன் சிரிப்புடன் விடை கொடுப்பது   நல் மனம் கொண்ட  ஆண் மனம் மேல் வசியம் கொள்ளவே வைக்கின்றது. 

கால ஓட்டத்தில் நினைத்தது-விரும்பினது கிடைக்காவிடிலும் கிடைத்த வாழ்க்கைக்கு உண்மையாக இருக்கும் பண்பையும் காண வேண்டியுள்ளது. இந்த படம் பார்க்கும் போது தமிழ் சினிமாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட தேவர் மகன் என்ற படத்தை ஒப்பிட்டு பார்க்காது இருக்க இயலவில்லை, ஒரு காதல் இருக்க திருமணம் முடிந்த கைய்யோடு இஞ்சி இடுப்பழகா என பாடும் காதலனும், காதலனுக்கு    வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது என அறிந்தும் வலுகட்டாயமாக முத்தமிடும் தமிழ் கதாப்பாத்திரமும் அதை சமூகம் தெரிந்து விடக்கூடாது என தன் சேலை தலைப்பால் அழிக்க முயலும் தமிழ் கலாச்சாரப்பெண்ணும் கடந்து போகின்றனர்.)

காதலி தன் இசை நிகழ்ச்சியை காணும் போது கூரையில் இருந்து ஒரு ஒளி செபாஸ்டியன் மேல் மட்டும் படுவதாகவும் மியா அந்த கூட்டத்தில் கரும் வெளியில் தனியாக காட்சிப்படுத்தியது ஊடாக வாழ்க்கை என்ற ஓட்டத்தில் சாதாரண மனிதர்கள்  காதலை   தியாகம் செய்து தங்கள் அனுபவிக்கும் பெரும் துயரை சிறு புன் சிரிப்பாக மாற்றி முன் செல்வதை காணலாம். செபாசியனாக நடித்துள்ள முதன்மை காதாபாத்திரம் உரையாடல்கள் மிகவும் குறைவே. சிறிய முகபாவனை உடல் மொழியின் ஊடாகவே தன் நிலையை தன் நிலைப்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.  ஒரு ஆணின்  அன்பின் பரிவை, காதலின் மென்மையை தன்  முக அசைவிலே வெளிப்படுத்தியிருப்பார் சிறப்பாக.

சில விமர்சங்கள்
ஜாஸ் இசை கருப்பினத்தவருடையது.  பிரதிநிதானத்தப்படுத்தும் நடிகர் ரியான் கோஸ்லிங் Ryan Gosling) வெள்ளையராக இருப்பது விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளது. மேலும் இரு நபர்களில் உன்னதமான காதல் தங்களுடைய சுய தொழில் வளர்ச்சிக்கு என கண்டு கொள்ளாமல் விடப்பட்டதும் எதிர்மறையான கருத்தை உருவாக்கியுள்ளது. இரு மனிதர்கள் காதலிக்கின்றனர்,  சேர்ந்து  வாழ்கின்றனர் தங்கள் சுய முன்னேற்றம் என்ற நோக்கில் இருவரும்  விலகிப்  போனது  பலரை கேள்வி கேட்க வைத்தது. காதலை கொண்டாடிய ஒரு திரைப்படம் காதலுக்கு தகுந்த மரியாதை தரவில்லையே என்ற ஆதங்கம் பலரை இப்படம் மேல் கோபம் கொள்ள வைத்துள்ளது. சொந்த  வெற்றிக்காக  மனிதர்களின் உன்னதமான உறைவை கொச்சப்படுத்தப்பட்டுள்ளது என ஒரு சாரார் குற்றம் சாட்டியுள்ளனர்.  தற்கால சூழலை மனதில் கொண்டு சுய காதலை கொண்டாடும் படமே இது என்றும் விமர்சிக்கப்பட்டது.  பலரால் விமர்சிக்கப்பட்ட இப்படத்தின் முடிவு 1921 ல் வெளிவந்த ஊமைப்படம் ”ஏழாவது சொர்க்கம்” 7th Heaven ஹெலன் என்ற திரைப்படத்தை நினைவுப்படுத்தும் படி என  இயக்குனர் தெரிவித்துள்ளார் .மூலம்

பல முறை மியா செபாஸ்டனுடன் இசை நிகழ்ச்சிக்கும் சென்றாலும், செபாஸ்டியனின் இசை நிகழ்ச்சியை கேட்டு உற்சாகப்படுத்தினாலும் மியாவின் நாடகத்தை பார்க்க செபாஸ்டியனால் ஒரு முறை கூட நேரத்திற்கு வர இயலவில்லை.  


சூழலில் கைதிகள் அல்ல பெண்கள்

மியா தோழிகளுடன் ஒரு  களியாட்ட நிகழ்ச்சிக்கு  செல்கின்றார். அவரவர் தேவை சார்ந்து மதுவுடனும் ஆண்களுடனும் பெண்கள் மயங்க கதாநாயகியோ இசையின் ஓசையை தொடர்து செல்கின்றார். பெண்கள் சூழலில் கைதிகள் அல்ல தங்கள் நோக்கங்களில் தங்கள் லட்சியப்பாதையில் நடந்து செல்பவர்கள் என்ற உயரிய கருத்தும் சொல்லப்படுகின்றது. நடிகை வாய்ப்பு கேட்கும் சூழலில் ஆண்களுடன் பேசும் சூழலில் தன் பாதுகாப்பை தன் வசம் வைத்திருக்கும் பாங்கையும் ஒரு காட்சியூடாக விளக்குவார், அந்த இரவில் அழகிய சூழலில் ஒரு இளைஞனுடன் பேசி ஆடும் காட்சியில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான அழகான மெல்லிய இடைவெளியை இருவரும் உருவாக்கி வைத்து கொண்டு ஆரோக்கியமான கருத்துரையாடல் நிகழ்த்துவதை அந்த முதல் பாடலிலே காணலாம். 

இசை தான் இப்படத்தின் பலம் என்பதற்கு இணங்க சிறியதும் பெரிதுமான 15 பாடல்களின் தொகுப்பே இப்படம். 

Image result for (Damien Chazelle
இயக்குனர் டாமெய்ன் சாஸெல்லி(  director Damien Chazelle') தன்னுடைய விப்பிளாஷ் Whiplash)   என்ற திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியின் ஊக்கத்தில் ’லாலா லாண்ட்’ உருவாக்கியிருப்பார். தன்னுடைய சினிமா வாழ்க்கையும் கனவு உலகமான ஹாலிவுட் வந்தடைய தான் சந்தித்த உண்மையான சம்பவங்களும் இக்கதையின் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது. 

அனைவரும் பார்த்து ரசித்து உணரவேண்டிய படம் லா  லா லாண்ட். லட்சியமா? எப்படியும் வாழும் வாழ்க்கையா அல்லது தான் கனவு கண்ட வாழ்க்கையா என்ற கேள்விக்கு பதில் தான் லாலா லாண்ட். கதாநாயகன் ரியான் கோஸ்லிங் க்கு விருது கிடைக்கவில்லையே என மனம் வருந்தி கொண்டு தான் இருக்கின்றது. 











20 Mar 2017

விவாசாயியை அழித்த சீர்கெட்ட நீர்மேலாண்மை


தமிழக விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, அல்லல்பட்டு பலர்  தற்கொலை செய்து கொண்டும் இருக்கின்றனர். தமிழன் பாரம்பரியாமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்தவன். தண்ணீர் தேவைக்கு நதியை சார்ந்தே இருந்தனர். நாயக்கமன்னர்கள் மன்னர்கள் காலத்தில் குளம்வெட்டி  வறண்ட பகுதியிலும்  விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம்  நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கிணறுகளை நம்பி விவசாயம் தொடர்ந்தனர். சுதந்திர தமிழகத்தில் போர்வெல் அமைக்கஆரம்பித்தனர். போர்வெல்லில் தண்ணீர் வேண்டும் என்றால் நீர் நிலைகளில் தண்ணீர் வேண்டும். 
நிலத்தில் விழும் மழைநீர் படிப்படியாக மண்ணுள் கசிந்து ஆழமான பகுதியில் தேங்கி நிற்கும் நீரைத்தான் நிலத்தடிநீர் என்கிறோம். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கில் உருவாகும் இத்தகைய நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மி..மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்!


நீரின்றி அமையாது உலகு


தண்ணீர் நாட்டின் வளம் சார்ந்தது . கடப்பா முதல் கன்னியாகுமரி வரை ஏரி, குளங்களை வெட்டி வைத்துள்ளனர்.  உலகமே  வியக்கும்  சிறந்த மழைநீர் சேமிப்பு முறையான ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும். அங்கிருந்து இன்னொரு ஏரி. பக்கத்தில் ஆறு, குளம் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன. அத்தனை அருமையான மழைநீர் சேகரிப்பு, நீர் பாசன கட்டமைப்பை அந்த காலத்திலேயே கட்டியிருக்கின்றனர். ஏரிகளை மட்டுமல்ல கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், கிடங்கு, மடு என விதவிதமான நீர்நிலைகளை உருவாக்கி, மழைநீரை சேமித்து முப்போகம் விளைவித்து, பல போகம் பெருமையுடன் வாழ்ந்த தமிழ்நாட்டில் இப்போது ஆழ்துளை போட்டு தண்ணீரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

 நீர்வளம் : தமிழகத்தில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் ஊடாக  ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! இதில் சரிபாதி நீரானது  நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது.  எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது  24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !

 நீர்மேலாண்மை
தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள்.
தமிழகத்தில் மரபு ரீதியாக அமைந்த நீர் பாசன, நீர் மேலாண்மை பற்றி அறிந்து, நவீன நடைமுறைகளோடு இணைத்து செயல் திட்டங்களை வகுத்து நீர் நிலைகளை பாதுகாக்க தவறி விட்டனர். கல்லணை கட்டிய கரிகாலனும், வைகையினை கடலுக்கே விடாமல் கண்மாய்களால் தடுத்த அக்கால பாண்டிய மன்னனையும் மறந்த தமிழக ஆட்சியாளர்கள் தண்ணீர் மேலாண்மையை பற்றி கவணம் கொள்வது இல்லை. வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர் நிலைகள், சில சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் மழையை நம்பிய குளங்கள் 5,276, நதி நீர் பெறும் குளங்கள்     3,627, தனியார் வசம் 9,886 உள்ளது. கடந்த சில ஆண்டாக தமிழகத்தில் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில், பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன.  சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு காலத்தில் 200 ஏரிகள் இருந்தன.  பூந்தமல்லி, போரூர், காரம்பாக்கம், வளசரவாக்கம், மேட்டுக்குப்பம், விருகம்பாக்கம், சாலிகிராம், புலியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் என வரிசையாக ஏரிகளும், அவை கால்வாய்களாலும் இணைக்கப்பட்டிருந்தன. இன்று சென்னையில் ஏரிகளும் இல்லை, அவற்றை இணைத்த கால்வாய்களும் இல்லை.

கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில்    32,202 குளங்கள் இருந்தது. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது . மேலும் 15 சதவீதம் குளங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகிவிட்டது. மதுரையில் 39 சதவீதமும், சென்னையில் 60 சதவீதம் குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சேலம், திருமணி முத்தாற்றை ஒட்டியிருந்த பகுதிகளில் ஒரு குளம் கூட இல்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்து விட்டது .



நாகரீக வளர்ச்சிக்கும், மக்கள் தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப நீர் நிலைகளை அழித்து வருகின்றனர்.  ஆறு, ஏரி, குளங்கள் அதற்கான இணைப்பு கால்வாய்களும் ஒவ்வொன்றாக காணாமல் போனதால், எஞ்சிய நீர்நிலைகளும் வற்றிப் போய் கிடக்கின்றன. விளைவு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன  நீர்நிலைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நீர்நிலைகளை காப்பாற்றா விட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இப்போது தோன்றியிருக்கும் புதிய நகர்களில் 47 சதவீதம், நீர்நிலைகளை மூடி உருவாக்கப்பட்டவை என்கிறதுவட்டம்என்ற அமைப்பு.


வெள்ளைக்காரன் போட்ட பாதை
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில்தான் முதல் முதலாக நீர்நிலைகள் வழித்தடங்கள், ரயில் பாதை போன்றவை அமைக்க  ஆக்கிரமிக்கப்பட்டன. நீர்நிலைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காக, ரயில் பாதையின் இடையில் கால்வாய்கள் அமைத்து இரண்டு பக்கத்திற்கும் தொடர்பை விட்டு வைத்தனர் வெள்ளைக்காரர்கள்.


தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது.

விவசாயம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு
கோடைக் காலங்களில் வற்றிப் போயிருக்கும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் சேற்றுப் பகுதிகளில் வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவார்கள். பயிர் தானே என்று விட்டால் கொஞ்ச நாட்களில் வீட்டுமனையாக மாறிவிடும். அப்புறம் நீர் நிலை இருக்காது. நீர்நிலைகளில் பெரியதான கடல் கூட இந்த ஆக்கிரமிப்பு ஆசாமிகளிடம் இருந்து தப்பவில்லை.



பாசனத் திட்டங்களின் அவலநிலை !
கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்றுவகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய் பாசனம் மூலம் 29.2% , குளத்துப்பாசனம் மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம் மூலம் 48.9% நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் துயர். நீராதாரங்களும் நீர்த்தடங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதும் விவசாயத்தை அழிக்கும் காரணியாக உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள்  உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் 17 பேர் என்று கணக்கு காட்டுகிறது. கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தாங்கக் கூடிய நமது பாரம்பரியமான விதைகள், பயிர் ரகங்களை எல்லாம்  பசுமைப் புரட்சி என்ற பெயரில் அழித்து விட்டனர்.

நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை போன்ற வீரியரக களைச்செடிகளாலும், அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாகவில்லை.

மாநிலத்தில் சுமார் 19 லட்சம் கிணறுகள் உள்ளன. இதில் 30% கிணறுகள் முற்றிலும் நீரின்றி வறண்டு விட்டன ! 27% கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீராகி விட்டன ! மீதியுள்ள கிணறுகளில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது!” என்று 2012-ல் வெளியானதமிழக நீராதரங்களின் தேவையும்- அளிப்பும்என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.

 பசுமைப் புரட்சிக்குப் முன்பு  1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசனவசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் மிக மோசமான நிலைக்கு நமது விவசாயம் ஆளாகியுள்ளது.

நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது காலத்தின் கட்டாயம்.  நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் கையாள வேண்டும்.
இதற்காக வறட்சிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம்(IWOP) தேசிய நீர்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம்(NWDPRA),ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையம் (TAWDEV) வாயிலாக தமிழகத்தில் சிறியதும்,பெரியதுமாக 19,330 நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலானவை இன்று பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கின்றது!
தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றுநீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.“குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடைஉள்ளது. ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது . ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் விஷமாவது மட்டுமல்ல, நீர்தேக்கங்களில் ஆகாயத்தாமரை போன்ற வீரியரகக் களைகள் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. நீர்வாழ் தாவரக் களைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துவிடும். ஆக்சிஜன் குறைந்த நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தகுதியற்றதுஎன்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்!

விவசாயிகளே விவசாயத்தை தீர்மானிப்போம்!
இயற்கை வளங்களை, முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை!” “நீண்டகாலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது!” “தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்!” “நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புக் களையும் உடனே அகற்றவேண்டும்!” “நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை கலெக்டர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்திரவாதம் செய்ய வேண்டும்!”
தமிழக நில ஆக்கிரமிப்புச்சட்டம்-1965, 1975, 1996 , தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்-2007 என பல பல அரசுச் சட்டங்களும் இருக்கின்றன!
சட்டங்கள் நடைமுறைப்படுத்தாது காகிதங்களில் மட்டும் இருப்பதால் நம் வாழ்வாதாரமான விவசாயம் பாதுகாக்கப்படவில்லை! விவசாயிகள் வாழ்வும் முன்னேறவில்லை! விவசாயம் பொய்த்துப் போய், விவசாயிகள் விவசாயத்தை வெறுத்து நிலத்தை விட்டும், ஊரை விட்டும் ஊடுவது மட்டுமல்ல தங்கள் உயிரையை மாய்த்து கொள்ள காரணமாகியுள்ளது.  தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் (TAMILNADU STATE AGRICULTURAL COUNCIL ACT) ஒன்றை கடந்த 2009-ஜுன்- 24-ல் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. “அங்கீகாரம் பெற்ற வேளாண் பட்டாதாரிகள் மட்டுமே விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்என்கிறது இச்சட்டம்! இதன்படி மாற்று விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்வதே குற்றமா விடும்!  A விவசயம் பற்றி பேசக்கூட தடை என்பது உணவு என்பதை கேட்பதே குற்றம் என மாற உள்ளது.
விவசாயி தனித்து நிற்காது ஒரு கூட்டு பண்ணை விவாசயம் போன்று அரசு சாரா இயக்கங்களாக ஒன்று இணைந்தால் தான் வரும் கால அரசியல் சூழலை எதிர் கொள்ள இயலும். படித்தவர்கள் இன்னொருவரிடம் வேலை செய்து கூலி வாங்கும் நிலையில் இருந்து சொந்த நிலத்தை பராமரிக்க கூடிய மனநிலையை வளர்க்க வேண்டும். விவாசாயிகள் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு வளர வேண்டும். வேலை செய்யும் தொழிலாளுகளுக்கும் நியாயமான ஊதியம் கொடுப்பதால் விவாசாயம் என்ற தொழில் இன்னும் மதிப்பு பெறும்.