31 Mar 2016

மயங்கினேன் உங்களில் அத்தான்.- 41 வது தின நினைவு நாள்!

அத்தான் நம் உலக பிரகாரமான பிரிவின் 41 வது நாள்! திருமணம் நமக்கு நிச்சயம் ஆகியதுமே உங்களிடம் கேட்டேன்  எனக்கு சமைக்க தெரியாது, நீங்க சொன்னீங்க நான் பார்த்து கொள்ளுகின்றேன் என்று. உங்கள் அப்பா ஒரு நாள் கேட்டார் இந்த கல்யாணத்தால் எனக்கு என்ன லாபம்?  உனக்கு நகை கிடைத்து விட்டது, என் மகனுக்கு உன்னை கிடைத்துள்ளது. எனக்கு ஆயிரங்கள் செலவாகியுள்ளது. அன்று தான் நான் இந்த திருமணத்தால் என்ன லாபம் என்று சிந்திக்க துவங்கினேன். என் பாசமான குடும்பத்தை, வீட்டை பிரிந்தேன், மகள் என்ற உரிமையை இழந்தேன், ஆனால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், என் சொந்தம் என் வரம் எல்லாம் நீங்க தான். நீங்க விளையாட்டாக கூறுவீர்கள் உனக்கு விளையாட உங்க அப்பா என்னை வாங்கி கொடுத்துள்ளார் என. ஆம் அத்தான் நம் வாழ்க்கையே விளையாட்டாகத் தான் இருந்தது. அது எதிர்பாராத விளையாட்டில் முடிந்து விட்டது. 


இன்று உங்க கல்லறைக்கு சென்றேன். சில மெழுவத்திகள் பற்ற வைத்து அந்த தீபத்தில் உங்க அணையாத அன்பை நினைத்து கொண்டு இருந்தேன்.  நம் மகன்களிடம் கடைசி சில மாதங்களில் நீங்க அதீதமாக கோபப்பட்டீர்கள். என்னிடம் நீங்கள் குறை  கூறும் போது நான் கூறுவேன்  அப்பாவை என்னிடம் குறை  கூ வேண்டாம். அவர் அப்படி தான். அவர் கோபப்படும் போது நீ கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடு அவர் சாந்தமாகி விடுவார். அதே போன்று தான் நீங்கள் நம் பிள்ளைகளை குறை கூறும் போதும் நான் கூறியுள்ளேன். அத்தான் உங்களுக்கு உங்க பெற்றோர்களிடம் கிடைத்த அடி, வேதனையின் கால் பங்கை நம்ம  பிள்ளைகளுக்கு கொடுக்காதீர்கள். அவர்களை உங்க நெஞ்சோடு அணைத்து முத்தமிடுங்கள். அப்படி தான் நம் நான்கு பேரின் வாழ்க்கையும் ஓடியது. நாம் மாறி  மாறி அரவணைத்து கொண்டோம். இரண்டு நாள் முன்பு நான் தூக்கத்தில் இருந்து எழுந்து அவர் எங்கே எங்கே என தேடியுள்ளேன். அம்மா தான் தூங்க கூறியுள்ளார்கள். நினைத்தால் மறைந்து போன தெளிவற்ற  கனவு போல் தான் உள்ளது. நீங்கள் போனதாக என்னால் நம்ப இயலவில்லை அத்தான். 

மாலை 4.30 க்கு உங்க ஆப்பிள் போன் என்னிடம் கதைக்க ஆரம்பித்து விடும். சுபி அக்கா நரேன் அண்ணாவை நாங்கள் அழைத்து வர கிம்பி கொண்டு இருந்த போது நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தீர்கள். ஆப்பிள் போன் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது. 

அத்தான் உங்களூக்கு  நாம் தனிக்குடித்தனம் சென்ற போது  சாதத்தை  கஞ்சாக வைத்து தந்தது முதல் கடைசியாக வெள்ளி இரவு தக்காளி சாதம்- துவையல் வைத்து தந்தது வரை ஞாபகம் வருகின்றது.  பொதுவாக நான் அரைத்து வைத்திருக்கும் துவையலை மறுபடியும் அரைக்க கூறும் நீங்கள் அன்று சாப்பாடு, துவையல் எல்லாம் நன்றாக உள்ளது என்று என்னிடம் கூறினீர்கள். பொதுவாக தேங்காய் துருவித்தரும் நீங்கள் இடியாப்பம் பிழிந்து தரும் நீங்கள் சனிக்கிழமை நான் கைவலி என்று கூறியும் எனக்கு எந்த உதவியும் செய்து தரவில்லை. அன்று நீங்கள் பாட்டும் கேட்கவில்லை. நீங்கள் வீட்டில் இருந்து கிம்பும் போது வலது தோள்ட்டை கடினமாக வலித்து கொண்டிருந்தது. அதனால் தான் வெளியே வராது வாசலில் நின்றே உங்களை பார்த்து கொண்டு நின்றேன். அன்றை விபத்தில் என்னை எப்போதும் தாங்கும் துங்க, தலை வைக்க தரும் உங்க தோள் பட்டை உடைந்து விட்டதாம் அத்தான்.

இன்று நம் மகன் சாமிடம் புலம்பி கொண்டு இருந்தேன் தம்பி, அப்பா உயிர் மட்டும் இருந்தால் நாம் சந்தோஷமாக வைத்து கவனித்திருக்கலாம். கடவுள்  அவர் உயிரை நமக்கு தந்திருக்கலாம். அவர் முகத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது. அவன் கூறினான் இல்லை அம்மா அப்பா கம்பீரமாக் இருக்க வேண்டும். ஒரு கால், கை இல்லாது இருந்தால் வருத்ததால் நொறூங்கி இருப்பார்.  இல்லை அத்தான் உங்க  முகத்தை பார்த்து கொண்டே  மயக்கித்திலே வாழ்ந்திருப்போம் தானே/

உங்களுக்கு விபத்து என்துமே என் உடன் பணிசெய்யும் பேராசிரியர்களுக்கு தெரிவித்தேன். டவ்லஸ்  மற்றும் விஜய் சார் உங்களுடன் மருத்துவ மனையிலும் சந்தோஷ் சார் நம் வீட்டிலும்  வந்து உதவினர். என்னவர் தலைக்கவசம் அணிந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்; இல்லை மேம் இன்னும் 10  நாள் இருந்து வேதனைப்பட்டு போயிருப்பார் என்றார். நீங்க உடனே அந்த கடவுளிடம் போய் விட்டீர்கள். நாம் எப்போதும் பற்றி நடக்கும் உங்கள் கையை தொடத்தான் ஆசை கொண்டேன். யாரும் அனுமதிக்கவில்லை. கடைசியாக என் கண்ணை மூடி கொண்டாவது உங்கள் கையை மட்டும் தொடவேன்டும் அந்த விரல்களில் என் விரல்களை ஊடுரவ  வேண்டும் என்றது.  அதற்கும் அனுமதிக்கவில்லை. உங்களை வீட்டில் கொண்டு வந்த போதும் உங்க கைவிரல்களை துணீயால் மூடியிருந்தனர். பார்க்ககூட இயலவில்லை அத்தான்.  உங்க கண் விழிகள் நீங்க வீட்டில் இருந்து கிம்பிய போது என்னை பார்த்தது போலவே இருந்தது.

அத்தான் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள் கொண்டதாக தான் இருந்தது.  உங்கள் அன்பு எங்களை பரவசப்படுத்தியது. எங்க மூன்று பேருக்கும் என்ன என்ன தேவையோ அதை வாங்கி தந்தீர்கள். எனக்கு என சில பலகாரங்களை கொண்டு அந்து தனியாக தந்தீர்கள். சமீபமாக நான் என் அப்பாவிடம் எதிர்பார்ப்பது போல் வாசலில் நின்றே எனக்கு என்ன கொண்டு வந்திருப்பீர்கள் என தேட துங்கினேன் . கடைசியாக நாகர்கோயிலில் இருந்து எனக்காக வாங்கி வந்த இனிப்பு பன் நினைவில் வருகிது. 
யார் உங்களை குறை கூறீனாலும் என் மனதிற்குள் செல்லவே இல்லை. எதோ ஒரு மயக்க நிலையில் தான் இருந்துள்ளோம். நீங்களும் வீட்டு வாசல் வரும் போதே நான் வாசலில் நின்று வரவேற்க வேண்டும், உங்க வாகனம் வர வாசல் திந்து விட வேன்டும் என எதிர்பார்த்தீர்கள் நானும் செய்து வந்தேன். வெள்ளி இரவு நீங்கள் வரும் வரை நான் வாசலில் தான் நின்று கொண்டு இருந்தேன். வந்ததும் குளித்து விட்டு சாப்பிட கூறியும் எனக்கு பசிக்குது என்று நேராக அடுக்களையை தேடி வந்தீர்கள். நீங்க முட்டை வாங்கி வருவீர்கள் என வெட்டி வைத்த வெங்காயத்துடன் இருந்தேன். மறுபடியும் வாங்கி வரவா என்தும் வேண்டாம் துவையல் உள்ளது என வெங்காயத்தை குளிர்சாதனைப்பெட்டியில்  வைத்தேன். 

அத்தான் அந்த மயக்கம் தான் நம்மை வாழ வைத்தது. நம் இருவர் குறையும் நம்மை காணாது மறைக்க வைத்தது. உங்களை பிரிந்து லயோலா அருகிலுள்ள செர்வெய்ர்ட் விடுதியில் சேர்த்து விட்டு நீங்கள் சென்ற  போது நான் அந்த கட்டிலில் இருந்து உங்களை நினைத்து அழுதது நினைவு வருகின்து. அத்தான் தற்போது அந்த அழுகையுடன் தான் நிதம் நிதம் புரளுகின்றேன். நீங்க உங்க ஜாதகத்தை பற்றி என்னிடம் கூறியதில் ஏதோ பிழை உள்ளது. ஆனால் 10 வருடம் முன்பு ஒரு வீட்டில் ஜெபிக்க செல்லுவோமே  உங்க மகனுக்கு 18 வயது ஆகும் போது பெரும் கவலையை சந்திப்பீர்கள் என்றதும் அந்த ஜெப கூட்டத்திற்கு போவதை நான் நிறுத்தி கொண்டது இப்போது தான் நினைவில் வந்தது. 

அத்தான் நம் மயக்கம் என்ன அழகானது. என்னை நீங்க அழவே அனுமதிக்க மாட்டிங்க. உங்களுக்கு தெரியாது உங்க கையில் கிடந்தே அழுதுள்ளேன். நீங்க என் கன்னத்தை தடவி பார்த்து ஏன் அழுகின்றாய் என்றதும் ஒரு கவலை என்தும் நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை  என  நீங்க அழ ஆரம்பிக்க மன்னித்து கொள்ளுங்கள் அத்தான் என நான் சிரிக்க நீங்களும் சிரிக்க என நம் பொழுதை கழித்துள்ளோம். அத்தான் இப்ப கொஞ்ச நாட்களாக நான் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை உங்க மாறாத ன்பைத் தவிர. இரவு எட்டு ஆகியும் நீங்கள் வரவில்லை என்றால் அத்தான் உங்கள் வீட்டில் உங்களுக்காய் காத்து  ஒரு பெண்டாட்டி வீட்டிலுள்ளாள் என்தும் பந்து வருவீர்களே. வீட்டில் வந்ததும் குளித்து சாப்பிட்டு விட்டு நான் எங்கு இருக்கின்றேனோ அங்கு நீங்களும் என்னை தேடி வருவீர்கள்.  நீங்க சாப்பிடும் போது நான் தான் உங்க அருகில் இருக்க வேண்டும் என்று   பிடிவாதம் பிடிப்பீர்ள். என் பெண்டாட்டிக்கு அருகில் இடம் போடுங்கடா இல்லை என்றால் நான் எழுந்து விடுவேன் என நம் பிள்ளை மிரட்டுவீர்களே. நம்ம பிள்ளைகளும் நமக்காக விட்டு தருவார்கள்.  அத்தான் இப்போது நான் தனியாக இருந்து சாப்பிடும் போது நீங்க அருகில் இருந்து பார்ப்பது போலவே தோன்றுகின்து.



.

30 Mar 2016

விபத்தும் அதை தொடரும் சிக்கல்களும்!

இன்றுடன் என்னவர் விடைபெற்று 40 நாட்கள்!இன்னும் மனம் ஆறுதல் அடையவில்லையே? சிலர் நியதி என்கின்றனர், சிலரோ அவரின் விதி முடிந்து விட்டது என்கின்றனர். சிலர் இந்த துயரில் இருந்து கரையேற அவர் வெளீ ஊருக்கு சென்றிருப்பதாக கருதக் கூறுகின்றனர். ஆறுதல் பட அறீவு  துணிந்தாலும் அவரை நினைத்து அழாத நாட்களில்லை. அவரை நினையாத கணங்கள் இல்லை. ஒரு குடும்பத்தை வழி நடத்தியவர்.  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பாதிக்கப்பட்டு கரையேற இயலாது துயருற்று கலங்குகின்றோம்.    18 வயதை எட்டாத பெரிய மகன்   சின்னவர் 14 வது வயது அவருடைய சோகத்தை அன்பான அப்பாவின் இழப்பை சரிகட்ட தெரியாது கலங்கும் வயது. என் நிலையோ இன்னும் நிஜத்தை ஏற்று கொள்ள இயலாது தவிக்கும்  மனநிலை.

எங்களையும் கடந்து அவருக்கு இன்னும் பல உறவுகள். என் பெற்றோர்கள் வயதான சூழலில் கதி கலங்கி விட்டனர்.  என் சகோதரி குடும்பத்தில் இன்னும் வருத்தம் ஓயவில்லை. ஹெல்மெட் அணீந்திருந்தால் தப்பித்திருப்பாரோ எல்லா வாரவும் கோயிலுக்கு சென்றீருந்தால் தப்பித்திருப்பாரோ எனறூ பரிதபிக்கும் நிலை  என் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க கடந்த முறை அத்தான் முதல் நபராக வந்திருந்ததை எண்ணி ஏங்குகின்றார். இன்னும் என் குடும்ப சித்தப்பா சித்தி அத்தைகள் என எல்லோரும் பழக இனிமையான மனிதருக்கு எவ்வாறு நிகழ்ந்தது என  புலம்புகின்ரானர்.. என்னவர் வீட்டிலும்  சூழல்.மிகவும் பரிதாபம். தன் தந்தைய் இராந்து  எட்டு மாதம் கடக்காத நிலையில் தன் தாய்க்கு தணலாக இருந்தவர்.  தன் தாயாருக்கு சுகவீனம் என்றால் யாரையும் எதிர்பார்க்காது மருத்துவ மனையில் இருந்து கவனிக்கும் மகனின் இழப்பு.  தேவை என்ற போது பனம் கொடுத்து மனபலன் கொடுத்து உதவின சகோதரனின் பிரிவு. இவர்களை எல்லாம் மிஞ்சி அவருடைய இழப்பை தாங்க இயலாது தவிக்கும் நண்பர்கள்.

நேற்று வரை கார், கணவர் நிறுவனம்,  என்றிருந்த நிலையில் இருந்து இன்று யாருமற்ற  யாதுமற்ற நிலை. இவை எல்லாம் விளங்க மறுக்கின்றது, ஏதேதோ காரணம் கூறி மனம் சமாதானம் அடைய துனீயும்  போது இடித்த கார் பற்றிய தகவல்கள் பல வேதனையான வருத்தப்படும் உண்மைகளை தருகின்றது.

ரோடு மேல் ஏதோ சத்தம் கேட்கின்றது என ஓடி ரோடு மேல் வந்த சட்ட கல்லூரி மாணவர்கள் கண்டது தலை உடைந்து மூளை சிதறிய நிலையில் மரித்து கிடக்கும் என்னவர்!  முட்டிய கார் பின்னால்  உறவினர்கள் கார் என மிகவும் உல்லாசமாக தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர். காலை  எட்டு மணியாக இருந்தும் கூட கார் ஓட்டினவன் குடித்திருந்துள்ளான்.அதை மறக்க தூங்கி விட்டேன் என கூறீயுள்ளான். சிலர் அவனை அடிக்க பாய்ந்துள்ளனர். பின்னால் வந்தந்த காரில் எல்லோரும் தப்பித்து விட்டு கார் முன் சீட்டில் இருந்த முதியவர் மட்டுமே போலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  பின்பு சிலர் கூட திட்டமிட்டு என்னவர் வந்த  வழியை மாற்றீ கூற முயன்றூள்ளனர். அந்த விபத்து நடந்த இடத்தின் மிக அருகில் கரும்பு ஜூஸ் விற்கும் நபரை  கார்காரர்கள் சார்பாக கதைக்க வைத்துள்ளனர்.  இவரோ வீட்டின் அருகில் இருந்து நான்குவழி சாலைவழியாக  இடது ஓரத்தில் பயணித்தவர் சில நொடிகளில் சாந்தி நகர் பக்க ரோட்டில் இறங்க வேண்டியவர்.  தங்களுடைய கேளிக்கையின் விளைவாக தங்களூடைய சுயநலம் சார்ந்த நிதானமற்ற கார் ஓட்டுதலால் இருசக்கிர வாகனத்தில் பயணம் செய்த என்னவர் மரணத்திற்கு காரணமாகியுள்ளார். எப்படி விபத்தில் என்னவர் பலியாடு ஆகி கலங்க வைத்தாரோ அதே போன்று கார் என்ற வாகனத்தால் இன்னொரு நபரின் உயிரை பலிவாங்கி கொலைக்காரர்களாக மாறீயுள்ளனர். தனி நபர் கார்களால் பல விபத்துக்கள்.  விபத்துக்களை பொறுத்தவரை சட்டங்கள் கூட நபருக்கு நபர் மாறுகின்றது. பல சட்டங்களும் சாட்சியங்கள் என்ற பெயரில் பொய்களால் மூடப்படுகின்றது. அதே போன்று தான் இந்த விபத்தை நிகழ்த்திய ஓட்டுனரைக் கூட சட்டம் உடன் தண்டிக்கவில்லை. தூங்கி விட்டேன் என தப்பித்து கொண்டான். 

ஒரு விபத்தால் ஒரு நல்ல கணவர் , பாசமான தகப்பன் பாசமுள்ள மகன் மருமகன், நல்ல நண்அர் இழப்பு என பல இழப்புகள், ஒரு நாளும் என்னால் இதை நம்ப இயலவில்லை. படைத்த இறைவனிடம் தான் கோபித்து கொள்கின்றேன். . அத்தானிடம், அல்லது  என்னிடம் குறை கண்ட தெய்வமே ஒரு கை காலையாவது எடுத்து விட்டு அத்தானை தந்திருக்கக் கூடாதா?  அவர் ஓடி வரும் வீட்டுப்படி , அவருடைய அழகிய பார்வை, நடை அவர் செயல்கள் எல்லாம் நினைக்க நினைக்க முள்ளாக குத்துகின்றது. அவர் இனி இல்லை இனி அவர் வர மாட்டார் என்ற உண்மை என் வாழ்க்கையின் நம்பிக்கையை இருள் அடையச் செய்து விட்டது. இனி ஒவ்வொரு நாளும்  கடமையை முடிக்கும் பயணமாகவே என் வாழ்க்கை அமையபோகின்றது.  இனி மிஞ்சிய என் வாழ்க்கை உயிர்ப்பான ஒரு வாழ்க்கைக்கு ஒப்பாகாது.
 
 சாலை விபத்தில் இந்தியாவை போன்றூ மோசமான நாடு இருக்க போவதில்லை. நான்கு வழிச்சாலையில் சில குறீப்பிட்ட இடங்களீல் தொடர்ந்து விபத்து நடைபெறூவது ரோடுகள் தரத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான்குவழிச்சலையில் மக்களீடம் இருந்து பெறூம் சுங்க வரி நாட்களூக்கு நாள் அதிகமாகி கொண்டேபோகின்றது.  டிரவிங் சாற்றீதழ் முறயாக  யாரும் வேண்டுவதில்லை. ரோட்டிலுள்ள பயணத்தை உல்லாசமாக மாற்ற நினைக்கும் போது பலருடைய வாழ்க்கை அர்த்தமற்றூ அனாதமாக மாறூகின்றது.


கிடைத்த ஓர் தரவுப்படி வருடம் ஒரு லட்சத்திற்கு  மேல் மக்கள்  மரணீக்கின்றனர். இந்தியாவின் குற்றவியல் சட்டப்படி பிரிவு 304 ப்படி இந்திய சட்டத்தால் விபத்தால் பாதிப்படைந்தவர்களூக்கு 4600 டாலர் அபராதவும் ஏழு வருட சிறய் தண்டனை என்பதை  780 டாலர் அபராதம் ஒரு வருட சிறய் தண்டனை என குறத்து விதித்துள்ளனர்.  நமது நாட்டை பொறூத்த வரை சட்டம் ஆள் ஆளூக்கு மாறூபடுகின்றது.  காரில் வருபவர்கள் கவனமாக ஓட்டியிருந்தால் ஒரு குடும்பம் அனாதமாகியிருக்காது. நாங்கள் அத்தானின் நினைவுகளீல் இருந்து வெளீவர இன்னும் 5 வருடம் ஆகலாம்.

எங்கள் ஆதரவு, பாசம், தலைமையாக இருந்தவரின் பிரிவு எங்களய் உருக்குலைய செய்து விட்டது. மேலும் தேவையான   . சாற்றீதழ்கள் பெற  பல பல சிக்கல்கள். ; அரசு பக்கம் இருந்து மக்களூக்கு உதவும் வண்ணம் எந்த திட்ட செயல் பாடுகளூம் இல்லை. முழுமையான பிரேத பரிசோதனைக்கு கூட ஒரு  மாதம் மேல் ஆகும் என்கின்றனர். இப்படியாக எங்கள் வாழ்க்கை நாளூக்கு நாள் சுமையாக மாறூகின்றது

\

13 Mar 2016

பயணங்கள் நிறைவு பெறுவது இல்லை!

எங்கள் கடைசி செல்ஃபி ஃபெப் 14 2016.

அத்தான் ஞாயிறு வந்து விட்டது. நம் சந்தோஷ நாள் இந்த ஞாயிற்று கிழமைகள். அன்று தான் நாம் இருவரும் நம் வேலைகளில் இருந்து விடுதலை பெற்று நம் பிள்ளைகளுடன் பிரியாணி செய்து சாப்பிடுவோம் ஆலயம் செல்வோம், பிடித்த இடத்திற்கு பயணம் செல்வோம். நான்கு பேரும் கட்டிலில் படுத்து கொண்டே கதைகள் கதைத்து கொண்டிருப்போம். 


நீங்கள் பிப் 20 அன்று விடை தரும் முன்  அந்த 8 மற்றும் 14 அன்று  மணப்பாடு சிலுவைக்கோயில் சென்றோம். முதல் நாள் பயணம் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை  பார்க்க வேண்டும் என்றிருந்தது. நாம் சென்ற நேரம் திமிங்கலம் யாவும் புதைத்து விட்டனர்.  அப்போது மீன்சந்தை நடை பெற்றதால் மீன் வாங்கும் ஆர்வத்தில் நீங்கள் இருந்தீர்கள். அங்கு இருந்த ஒரு ஆளிடம் மீன் விலையை பற்றி வினவியதும் இந்த மீன்களை சில்லறையாக கொடுப்பதில்லை நீங்கள் தேவையான மட்டும் எடுத்து செல்லுங்கள் என்று பெரிய மனதுடன் கூறினார். நீங்களோ நீங்கள் கடலில் சென்று உழைத்து கொண்டு வந்ததை நான் எப்படி இனாமாக பெற இயலும் நீங்க சிறிய விலை போட்டு தாங்கள் என்றதும் 50 ரூபாய் கொடுத்து விட்டு  மகிழ்ச்சியாக மீனை பெற்று வருவது இன்றும் கண் முன் நிற்கின்றது . அத்தான். சில போது உங்கள் சில விருப்பங்களில் குழந்தைத்தனம் மேலோங்கி இருக்கும் குழந்தைகளை போல் கள்ளமில்லா  சிரிப்பீர்கள். அந்த மீனை நீங்கள் உண்டீர்களா என்று எனக்கு நினைவு இல்லை ஆனால் அதை வாங்கி வந்து கத்திரிக்கோலால் வெட்டி சுத்தம் செய்து  தந்தது பசுமை நினைவாக மனதில் உள்ளது. நான் மீன் வெட்ட படித்து விட்டேன் இனி எவ்வளவு மீன் வாங்கினாலும் கழுவி சுத்தம் செய்து விடலாம் என பெருமை கொண்டீர்கள்.


அன்று நான் வைத்த இரால் கூட்டு கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் ரசித்து உண்டீர்கள். மீதம் இருந்த இராலை வறுத்து பல்லாரியுடன் தர வேண்டும் என்றிருந்த நான் இராலை பல்லாரியுடன் சேர்த்ததும் நான் நினைத்தது மாதிரி வரவில்லை என கவலை கொண்டேன்.  நீங்களோ, நன்றாக உள்ளது என்று ரசித்து சாப்பிட்டீர்கள். 

அதன் அடுத்த ஞாயிறு கடல் விளையாட்டுகளை கண்டு கழிக்க சென்றோம். நம் பிள்ளைகள் ஒருவர் டுயூஷன் போக வேண்டும் என்றும், இளையவன் ஆலயம் செல்ல வேண்டும் என கூறி நம்முடன் வர மறுத்து விட்டனர். நீங்களும் நானும் அன்றைய வாலன்றையன்(காதலர்) தினத்தை கடற்கரையில் கழித்தோம். நாம் எடுத்த கடைசி செல்ஃபி கூட அன்றையது தான். அன்றும் ஆலையத்தில் சென்று பிரார்த்தனை செய்தோம். வரும் போது உடன்குடியில் இறங்கி சில மளிகை சாமான்களும் வாங்கி வந்தோம். நாசரேத் கடக்கும் போது உங்க அம்மாவை பார்க்க போவோமா என்றதும் வேண்டாம் என சொல்லி விட்டீர்கள். 
அத்தான் இப்போது நான் நினைத்து பார்க்கின்றேன். நமது  பல ஆசைகள், பொழுது போக்குகள், விருப்பங்கள் ஒத்து போனது.  காரில் பயணிக்கும் போது கையை பற்றி கொள்ளுவது நம் இருவர் வழக்கமாக இருந்தது, பேசி கொண்டே அல்லது பாட்டு கேட்டே பயணிப்பது, புகைப்படம் எடுப்பது என எல்லாவற்றிலும் நம் விருப்பங்கள் கலந்திருந்தது. அத்தான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சி இது போன்ற நம் பயணங்களாக தான் இருந்தது. நான் பெரிய ஆடம்பரமான வீடு கேட்கவில்லை அணிய நகை கேட்கவில்லை, ஆனால் உங்களுடனான பயணங்களை பெரிதும் விரும்பினேன். கடந்த நான்கு வருடங்களில் நம் விடுமுறை நாட்கள்  பயணங்களுடன் தான் இணைந்து இருந்தது. 

எனக்கு பிடித்த புத்தகங்கள், வனிதா போன்ற மலையாள புத்தகங்கள் வாங்கி தந்து அசத்துவது என நீங்கள் எப்போதும்  உற்சாகமாக இருந்தீர்கள். சில போது நாம் பவுண்டர் மேடு வாழ்க்கையை பற்றி கேட்டால் பெண்கள் தான் நினைத்து கொண்டு இருப்பீர்கள் ஆண்களுக்கு நினைத்து கொண்டிருக்க நேரம் இல்லை என்பீர்கள்.  அத்தான் அந்த பயணங்கள் முடிவுற்றதோ? அது போன்ற நிமிடங்கள் இனி இல்லை தானே. கடக்கரையில் நீங்கள் என்னை அழகாக படம் பிடித்ததும்  ஏ ,,,,,,,,,,,,,,ஜோஸ் இங்க வா..  என கத்தி அழைத்ததும் நினைவு வருகிறது.

போட்டி நடக்கும் இடத்திற்கு போகும் போது நமது  கார் மாதா கோயில் அருகில் போடுங்கள் என்று நான் கூறினதை கண்டு கொள்ளாமல்  காரை மணலில் இறக்க, மணலில் கார் மாட்டினதும் நான் சிரிக்க உங்களுக்கு கோபம் வந்ததை பார்க்க வேண்டுமே. "நீ போ எனக்கு காரை கொண்டு வரத்தெரியும் என்னை கேலி செய்து சிரிக்கின்றாய்" என கோபப்பட்டு விரட்டி விட்டதும் நினைவில் வருகிறது. அங்கு சென்றதும் ஒரு சிறிய பாக்கட் மஸ்கோத் அல்வா, கடலை மிட்டாயுடன் வந்து சேர்ந்தீர்கள். நாம் கொஞ்சம் முன்பு ஊடல் கொண்டதை மறந்து, அல்வா கடலை, முட்டாய் தின்று கொண்டே கடல் விளையாட்டுகளை கண்டு ரசித்தோம்.  அடுத்த முறை நம் பிள்ளைகளையும் அழைத்து வர வேண்டும். இன்று நாம் அழைத்தும் வர வில்லையே என்று நீங்கள் வருந்தி கூறினதும் நினைவு வருகிறது. 






இது போன்ற நம் பயண நினைவுகள் இனிமையான பல பொழுதுகளை நினைவில் நிறுத்தினாலும் இனி இந்த பயணம் நம் சிரிப்பு பேச்சு இல்லையே என்பது வேதனை அளிக்கின்றது.