8 Dec 2016

PINK-’பிங்’ பெண்களுக்கான, ஆண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்!


சமீபத்தில் வெளிவந்து பலரின் நற்மதிப்பை பெற்ற திரைப்படம் ’பிங்’. மூன்று தோழிகள் தங்கள் ஆண் நண்பர்களுடன் இரவு உணவிற்கு என ஓர் விருந்தினர் மாளிகையை அடைகின்றனர். ஆண் நண்பர்கள் தகாத வகையில் நடந்து கொள்ள முயல  ஒரு பெண் கையில் கிடைத்த பீர் போத்தலால் அடித்து விடுகின்றார். இளைஞர் கண் பார்வை பாதிக்கக்கூடிய அளவிற்கு காயம் ஏற்படுகின்றது. மகிழ்சியாக கிளம்பிய பயணம் பின்பு சோகத்தில், கோபத்தில், அவமானத்தில் முடிகின்றது. 

அனிருத்த ரோய் சவுதரி இயக்கத்தில் செப் 16, 2016 ல் வெளியான படமாகும். அமிதாப், தாப்சி, கிருத்தி குல்கரி, அன்கட் பேடி, மற்றும் ஆந்ரே தரேங் போன்றோர் நடித்துள்ளனர்.   காண்போரை மிகவும் கவர்ந்த படமாக இப்படம் திகழ்கின்றது. ”பிங்” என்ற பெயர் பெண்களை குறிப்பது பெண்கள் சுதந்திரத்தை குறிப்பது என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பத்து நாட்களில் 50 கோடிக்குமேல் வசூல் செய்த படம் என்பதும் குறிப்பிட வேண்டியது.

அமைதியாக தன் வேலை, உழைப்பு, சின்ன சின்ன மகிழ்ச்சி என வாழ்ந்து வந்த பெண்களின் ஒவ்வொரு நாளும் பின்பு பதட்டத்திலும் பிரச்சனையிலும்   உழல்கின்றது. இளைஞ்ர்கள் தங்களிடம் மன்னிப்பு கேட்க கூறுகின்றனர். இளம் பெண்களோ தங்கள் மேல் தவறு இல்லாத நிலையில் மன்னிப்பு கேட்க என்ன அவசியம் என்று நினைக்கின்றனர். கோபம் கொண்ட இளைஞர்கள் பகைபோக்கை ஆரம்பிக்கின்றனர். முதலில் அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் இப்பெண்கள் குணம் கெட்டவர்கள் . உங்கள் கட்டிடத்தை விட்டு போகக்கூறுங்கள் என்கின்றனர்.  கண்டு கொள்ளாத க்ட்டிட உரிமையாளரை மிரட்டி பணிய வைக்க முயல்கின்றனர். இரண்டாவது பெண் பெயர் கெடும் விதம் இணையத்தில் அவர் புகைப்படத்துடன் செய்திகள் பரப்பி வேலையை விட்டே விரட்டும் படி செய்கின்றனர். மற்றொரு பெண்ணை நடைபயிற்சியின் போது கடத்தி கொண்டு போய் அவமதிப்பாக நடக்கின்றனர். இப்படியாக பெண்களை மிகவும் மன உளச்சலுக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்குகின்றனர். 

இந்த நெருக்கடியான சூழலில்  தோழிகளின்  அறிவுறுத்தலையும் காதில்வாங்காது  மூன்று பெண்களில் ஒருவர் போலிஸ் நிலையத்தை அணுகின்றார். காவல் அதிகாரியோ,  இரவில் நீங்களும் சென்று உணவருந்த சென்றுள்ளீர்கள், இளைஞர்களுடன் குடித்துள்ளீர்கள்.  நீங்கள் கூறும் குற்றத்தை நான் விசாரித்தால் நீங்கள் தான் பாதிப்பிற்கு உள்ளாகுவீர்கள். நாங்கள் இளைஞர்களை மிரட்டி வைக்கின்றோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.  மேல் மட்ட அதிகாரியிடம்  அணுகி இளைஞர்களை பற்றிய தகவலை அளித்து வருகின்றார். போலிஸ் அதிகாரி  விசாரிக்க பெரிய பணப்புள்ளியின் அரசியல் பிண்புலன் உள்ளவரின் மகனும்  குற்றவாளிகளில் ஒருவர் என  தெரிய வருகின்றது. இளைஞனின் வீட்டில் செய்தி செல்கின்றது. தகவல் தெரிந்த தகப்பன் மகனை திருத்த விளையாது; பெண்களுக்கு ஓர் பாடம் கற்று கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து பெண்களில் ஒருவர் தன் மகனை கொலை செய்ய முயன்றதாகவும் தன் மகனை தகாத செயல் செய்ய தூண்டியதாகவும்  கூறி போலிசை வைத்து பெண்ணை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர்.

இதை சற்றும் எதிர் பாராத பெண்கள் நிலைகுலைந்து போகின்றனர். அயல்வீட்டார் குற்றவாளிகளை போல் நோக்குகின்றனர். அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் வயதாக வழக்கறிஞர் மட்டுமே உதவ முன் வருகின்றார். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் சந்தேகப்பார்வைக்கு உள்ளாகுகின்றனர். பெண்களுக்கு தங்கள் வீட்டில் சொல்லக்கூடிய நிலையும் இல்லை. பெண்களால் தங்கள் நண்பர்களிடம் மட்டுமே இச்சம்பவத்தை பற்றி பகிர முடிகின்றது. சுதந்திரமாக வேலைக்கு போய் வந்த பண்கள் வாழ்க்கை தங்கள் அறைக்குள் முடங்கும் படியான சூழலை எட்டுகின்றது.

வழக்கு கோர்ட்டுக்கு வருகின்றது. இளைஞர்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் சாதுரியமாக வாதாடுகின்றார். அவரின் ஒவ்வொரு கேள்விக்கு பெண்கள்  தாங்களே குற்றவாளிகள் என, தங்கள் தலையை நிமிர விடாதபடி செய்கின்றார். கொடுக்கப்படும் சாட்சியங்களும் சாட்சிக் கூறும் நபர்களும் கலாச்சார காவர்கள் நிலையில் பெண்களுக்கு எதிராகவே மொழி கொடுக்கின்றனர். பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு தங்கள் கட்சிக்காரர்களான பெண்களுக்காக வாதாடும் படி எந்த முகாந்தரவும் இல்லாது மனம் உடைந்து போகின்றார்.

பெண்களிடம் வழக்கறிஞர் கேட்கும் கேள்வி இந்த சமூகம் பெண்களை பார்த்து கேட்கும் கேள்விககளாகவே இருக்கின்றது. 
நீங்கள் எதனால் ஆண் நண்பர்களுடன் சாப்பிட சென்றாய்?
எதற்காக இரவில் ஆண் நண்பர்களிடம் சென்றாய்
எதனால் குடித்தீர்கள்?
 மிகவும் ஆபாசமாக  உடையணிந்தீர்களா?
இளைஞர்கள் தவறு செய்யும் படி உங்கள் செயல்கள் இருந்தது. 
நீங்கள் பணத்திற்காக என் கட்சிக்காரர்களை அணுகி உள்ளீர்கள்
தனியாக தங்கும் பெண்கள்
வடகிழக்கை சேர்ந்த பெண் என்ற அடையாளம்
ஆண் நண்பரான ஒரு மனிதரிடம் பணம் பெற்றது
தனியாக தங்கினது தனியாக வேலைக்கு போவது சம்பாதிப்பது என பெண்களின், ஒவ்வொரு இயல்பான வாழ்க்கை சூழலையும், நடவடிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றார்.

குற்றம் சாட்டப்பட்ட ராஜ்விர் உயர் குடும்ப பிண்ணணியில் இருந்து வந்தவர், உயர்படிப்பை  எட்டினவர், வெளிநாட்டில் கல்வி பெற்றவர். இருந்தும் அவருடைய பெண்களை பற்றிய மனநிலை ஒரு இந்திய சராசரி ஆணின் ஒத்த மனநிலையாகவே உள்ளது..

பெண்கள் பசிக்கின்றது என்பதால் இரக்கத்தை கருதி விருந்திற்கு அழைத்தோம், பெண்கள் தங்கள் சிரிப்பு செயல்கள் வழியாக தங்களை தகாத செயலுக்கு அழைத்தனர். நல்ல குடும்பத்திலுள்ள பெண்கள் குடிக்க மாட்டார்கள், விருந்தினர் மாளிகைக்கு ஆண் நண்பர்களுடன் கூடிகும்மாளம்  அடிக்க மாட்டார்கள். நல்ல பெண்கள் குடும்ப விழாவில் மட்டும் தான் பங்கு செல்வர். எனக்கூறுகின்றார்.  மற்றோர் பெண்களை பற்றி அவ்வகையான கீழ்த்தரமான எண்ணம் இருந்தாலும் தங்கள் வீட்டு பெண்கள் மிகவும் ஒழுக்க சீலர்கள் என காத்திரமாக நம்புகின்றார். 


பெண்களுக்காக வக்கீல் தன் நியாயத்தை நிலை நிறுத்த பெண்களிடம் கேள்விகள் வைக்கின்றார். நீ உன் கன்னி தன்மையை எப்போது இழந்தாய்? உன் ஆண் நண்பர் பணம் கொடுத்தாரா?
அப்பெண்ணின் பதில் நாங்கள் நேசித்தோம், விரும்பி சென்றேன். 
எதனால் இளைஞனை   அடித்து  காயப்படுத்தினாய்  என்றதும்;   என் விருப்பம் இல்லாத நிலையில் விரும்ப தகாத செயல் செய்யத்துணிந்தார். அதனால் அடித்தேன் என்பார்.  ஆண் -பெண் உடல் தேவை 19 வயதில் ஆரம்பிக்கும் நிலையும் திருமணம் என்ற நிலையை எட்டாது தங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்த  சொந்த வேலை, சம்பாதிக்கும் நிலையில் பெண்கள்   உள்ளதையும் உணர்த்தியுள்ளார்.

முடிவில் ஆண் ஆதிக்க மனநிலையை குற்றச்செயலாக காணாது இந்த சமூகக்கருத்தாக்கத்தால் மாறின ஆண் குழந்தைகள், பரிதாபத்திற்கு உரியவர்கள் . அவர்கள் மனநிலை அவ்வாறாக கட்டமைக்க பட்டிருக்கின்றது. ஒரு பெண் சிரித்து பேசுவது என்பது தன்னை அழைக்கின்றாள் என அர்த்தப்படுத்துகின்றனர். பெண்கள் நல்லவர்கள் என்றால் இறுகிய முகத்துடன் இருக்கும் பெண்கள் என்றே நினைக்கின்றனர். ஒரு பெண் குடிக்கின்றாள் என்பது பெரும் ஒழுக்கக்கேடாக பார்க்கப்படுகின்றது. ஆனால் ஓர் ஆண் குடிக்கின்றான் என்பது    தன் உடை மாற்றுவது போன்று சாதாரண நிகழ்வாக தெரிகிறது. தன் வீட்டு பெண்கள் பற்றிய நல்ல பிம்பத்தை பேணும் ஆண்களால் மற்று பெண்களை சுதந்திரமாக சுயமாக வேலை செய்து வாழும் ெண்களை மிகவும் கீழ்த்தரமாக  கருதுகின்றனர். ஒரு பெண் தன் வீட்டை விட்டு தனியாக வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றாள் என்பது ஆண் உலகத்தால் ஏற்று கொள்ளும் தரத்திலுள்ள பெண்கள் அல்ல என்ற முடிவில் உள்ளனர்.  

படத்தின் முடிவாக ”வேண்டாம்” என்றால் வேண்டாம் என்ற அதே  அர்த்ததில் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மனைவியோ அது பெண் நண்பியோ, ஏன் விலை மாதுவோ ஆகட்டும் . வேண்டாம் என்பதை வேண்டாம் என எடுத்து கொள்ளுதலே பெண்கள் மாண்பை போற்றுபடியாக இருக்கும் என முடிக்கின்றார்.

திரைக்கதை எந்த இடத்திலும் சோடை போகாது, காண்பவரை ஆர்வத்துடன் நகத்திய படம் இது.  மிகவும் சிக்கலான ஒரு சமூக பிரச்சினையை ஆண்கள் மனநிலையை மாற்றும் வண்ணம் பெண்களுக்கு பல சட்ட நுணுக்கங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய   கொடுத்த படம் இது. 

பெற்றோரின் பார்வையும் சிறப்பாக, அழுத்தமாக ப்ததியப்பட்டிருக்கின்றது. இப்படத்தில். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால், சுவாரசியமாக இயல்பாக, மகிழ்ச்சியாக சென்ற பெண்களின்   வாழ்க்கை எவ்விதம் சிக்கல்கள்குள் உள்ளாகி  நொறுங்கி போகின்றது என எடுத்துரைத்த படம். திரைப்படம் என்பது வெறும் நேரம் போக்கி, அல்லது பொழுது போக்கு என்று இல்லாது மனிதர்களின் மனதை சமூகத்தின் நிலைபாட்டை பெண்கள் மேல் உள்ள பார்வையை எடுத்து கூறின படம். 

ஆண்மேல் வைத்த நம்பிக்கையை எவ்விதம் தங்கள் பொறுப்பற்ற செயலால் உடைக்கின்றனர் என்பதையும் கூறியுள்ளனர். பெண்கள் தங்கள் பாதுகாப்பை எவ்விதம் தக்க வைத்து கொள்வது பெண்கள் அணுகு முறையை இயல்பான செயலைக்கூட ஆண் சமூகம் எவ்வித வக்கிர சிந்தனையுடன் பார்க்கின்றது.   சுயகாலில் நிற்க வேண்டிய, குடும்ப பொறுப்பை ஏற்று வேலைக்கு செல்லும் பெண்கள் துயரை, சவால் நிறைந்த வாழ்க்கையை எந்த துறுத்தலும்  இல்லாது,  இயல்பான சம்பவங்களுடன்   எடுக்கப்பட்ட  திரைப்படம்  இது. 

மக்கள் நல்ல படத்தையும் ஏற்பார்கள். இது போன்ற சமூக அக்கறை கொண்ட சட்ட நுணுக்கங்கள் கொண்ட படங்கள் வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நம் தமிழ் மொழியிலும் சாட்டை, அப்பா, போன்ற படங்கள் நல்ல கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டாலும் பின்பு ஒரு கோஷம் போல், பரைப்புரை போல் காண்பவரை கற்பிக்க ஆரம்பித்தது திரைப்படத்தின் அழகியலை இழந்த சோகமாகும்.  ஆனால் ’பிங்’  என்ற படம் எடுத்த இடம் என்பது பெரும்வாரியாக நீதிமன்ற அறையாகவும் உணர்வு பூர்வமான வாதாடுதலும் அழுகையும் நிரம்பி இருந்தாலும் சுவாரசியவும் விருவிருப்பும் இழக்காது எடுக்கப்பட்டது இதன் வெற்றியாகும். 

பாடல்களும் பிண்ணனி இசையும் படத்தோடு சேர்ந்து பயணிப்பது படத்தின் சிறப்பை கூட்டுகின்றது. 




3 Dec 2016

Black( கறுப்பு)

2005 ல் திரைக்கு வந்த ஹிந்தி திரைப்படமாகும் பிளாக். கண் பார்வை மற்றும் காது கேட்கும் திறனற்று பிறந்த ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி வாழ்க்கையை தழுவி வெளிவந்த படத்தின் தழுவலாகும் இப்படம்.


படத்தின் கதை ஒரு நினைவு தொகுப்பாக விரிகின்றது. தனக்கு கல்வி கற்பித்த; தற்போது அல்சிமேர் நோய் தாக்கிய தன் ஆசிரியரை சந்திக்க மாணவி முயல்வதும் பி சந்திப்பதுமாக படம் துவங்குகின்றது.  

குடி பழக்கமுள்ள ஆசிரியர்(அமிதாப்)   மிஷேல் என்ற பணக்கார வீட்டு குழந்தைக்கு கல்வி கற்பிக்க வந்து சேர்கின்றார்.  குழந்தை மிகவும் முரட்டுத்தனமாக உள்ளது. முள்ளை வளர்ச்சி பார்வை கேள்வித்திறன் இல்லை என்ற நிலையில் வளர்க்கப்படுகின்றது.  இருட்டில் வாழும் மன உளச்சலில்  நற்பண்பும் கற்க இயலாது  ஒரு இயலாமையின் உச்சத்தில் வாழ்கின்றது. அக்ககுழந்தையின் எச்செயலும் வீட்டிலுள்ளவர்களுக்கு தொல்லையாக முடிகின்றது. குழந்தையை விடுதியில் அனுப்பி விடலாம் என தகப்பன் முன்மொழிய வேண்டாம் என்ற பிடிவாதத்தில் தாய் என மனகலக்கத்தில் நாட்கள் கடத்துகின்றனர். இத்தருணத்தில் தான் ஆசிரியர் வந்து சேருகின்றார். ஆசிரியர் குழந்தையை நல்வழிப்படுத்த, கற்பிக்க எடுக்கும் வழி பெற்றோரை சங்கத்திற்குள்ளாக்குகின்றது.  எங்கள் குழந்தைக்கு நீங்கள் ஆசிரியராக இருக்க வேண்டாம் என  பிடிவாதமாக  வெளியேற்ற முடிவெடுக்கின்றனர், ஆனால்  அறிவான இக்குழந்தையை விட்டு விட்டு செல்ல மனம் வரவில்லை ஆசிரியருக்கு.  மிகவும் கடினமாக முயற்சியுடன் முதல் வார்த்தை தண்ணீர் என்பதை   செயல்வழி கல்வி மூலம் கற்று கொடுக்கின்றார். பெற்றோருக்கு நம்பிக்கை பிறக்க ஆரம்பிக்கின்றது. கைவிரல்கள் வழியாக  தொடர்பாடல் பேண கற்று கொடுப்பது வழியாக கல்வி துவங்குகின்றது. https://www.youtube.com/watch?v=JUkZAOvgxPs

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கின்றார். அந்த பருவத்தில் மாணவிக்கு ஆசிரியர் மேல் காதல் எழுகின்றது. ஆனால் ஆசிரியர் மிகவும் கவனமாக மாணவியை கையாளுகின்றார். மாணவியால் கல்லூரி படிப்பில் நினைத்தது போல் வேகமாக எழுதி மதிப்பெண் பெற இயலவில்லை.   கல்லூரி படிப்பை நினைத்த படி தொடர இயலாத மன உளச்சலில் இடையில் நிறுத்தி விட முடிவெடுக்கின்றார் மிஷேல். இருப்பினும் ஆசிரியரின் முயற்ச்சியின் பெயரில் படிப்பை தொடர்கின்றார்.  12 வருட உழைப்பால் பட்டப்படிப்பை முடிக்கின்றார்.


தனக்கு இளைய தங்கைக்கு திருமண நாள் வருகின்றது. தன்னை போல ஊனமுற்றோர் திருமணம் செய்ய இயலாது என்பதும் வருத்ததை தருகின்றது. திருமண நாள் முந்தின நாள் விருந்தில்,  பெற்றோர்களால்     தனக்கு கிடைக்க வேண்டிய கவனிப்பு  தன் சகோதரியை வளர்க்கும் சூழலில்   மறுக்கப்பட்டதில்   மிகவும் காள்புணர்ச்சி கொண்டு பேசுகின்றார். ஆனால் மிஷேல் ஆகட்டும் வாழ்க்கையை மிகவும் ஆக்கபூர்வாக நேர்மறை எண்ணத்துடன் பதில் தருகின்றார்.  இருப்பினும் அன்பு என்றால் என்ன? காதல் என்ற உணர்வை அறிய  அவள் மனம் விளைகின்றது. தன் ஆசிரியரிமே விளக்கும் படி கேட்கின்றார்.   


இப்படியாக மிகவும் சவாலான வாழ்க்கை வாழ்ந்து மறைந்த பல பண்முகத்தனமை கொண்டு விளங்கிய கெலன் கெல்லர்  வாழ்க்கையை நினைவுப்படுத்தும் இப்படம் எடுக்கப்பட்ட  விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அழகிய காட்சிப்படுத்தலும் அந்த பழம் காலம் நோக்கி நம்மை நகர வைத்ததும் படத்தில் சிறப்பு அம்சமாகும். சிறு குழந்தையாக நடித்திருந்த ஆயிஷா கபூரின் நடிப்பு திறன் இளம் மங்கையாக நடித்திருந்த ராணி முகர்ஜிக்கு ஒத்ததாக இருந்தது.


இந்த படத்தில் நடிப்பதற்கு என்றே அமிதாபும், ராணி முகர்ஜியும் பார்வையற்றவர்களுக்கான எழுத்து மொழி பெரியிலி ஏழு மாதம் கற்றுள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் கண்பார்வையற்ற குழந்தைகள் இவர்களுக்கு செய்கை மொழி கற்று கொடுத்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சுதந்திரத்திற்கு முந்திய ஷிம்லாவை   காட்சிப்படுத்தும் விதமாக  செட்டு போட்டு   மும்பையில் படமாக்கியுள்ளனர். 225 மிலியன் ரூபா செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படமாகும் இது.


சஞ்சய் லீலா பான்சாலியின் இயக்கத்தில் ராணி முகர்ஜி நடிப்பில் வெளிவந்த இப்படம் தேசிய மற்றும் உலக சினிமா அருங்குகளிலும் பல விருதுகளை பெற்றுள்ளது.  டைம்ஸ் இதழ், உலக அளவில் 2005 ஆம் ஆண்டு   வெளிவந்த திரைப்படங்களில்    பார்க்க வேண்டிய பத்து படங்களில் ஒன்றாக இப்படத்தை தெரிவு செய்துள்ளது இப்படத்திற்கான உலக அளவிலான  பெருமையாகும்.  ராணி  முகர்ஜிக்கு இரண்டாவது முறையாக சிறந்த நடிகைக்கான பிஃலிம் பெஃயர் விருது பெற்று தந்த, அமிதா பச்சனுக்கு இரண்டாவது  முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கிட்டச்செய்த படமாகும்.     இப்படத்தை தழுவி 2013 ல் பெனிம் டன்யாம்(Benim Dünyam) என்ற துர்க்கிப்படம் வெளிவந்துள்ளது   இதன் சிறப்பாகும்.

நமது தமிழ் நடிகர்கள் 60 வயதை கடந்த பின்பு  இளம் நடிகைகாளுக்கு ஜோடி சேரும்     நாயக கதாப்பாத்திரத்தில் தான் நடிப்போம் என பிடிவாதம் கொள்ளும் போது தன் வயதிற்கு ஏற்ற கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கும் அமிதாப் போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். நல்ல கதைத்தளம், கதாப்பாத்திரப்படைப்பு, திரைக்கதை என எல்லாஅ வகையிலும் போற்றப்பட வேண்டிய படம் இது.

ஓர் ஆசிரியர்  மாணவி உறவிற்கு எடுத்துக்காட்டாக திகழும் படம். மேலும் உடல் ஊனத்தை தன் உழைப்பால் முயற்சியால் அறிவின் மேலுள்ள ஆழத்தால் எவ்வாறாக களைகின்றார் வாழ்க்கையில் வெற்றி கொள்கின்றார் என்பதற்கும் எடுத்துக்காட்டான திரைப்படம் இது.


4 Nov 2016

இரால் பிரியாணி-திருமதி ஹசீனா சைய்யது



எங்கள் காட்சி தொடர்பியல் மாணவர்கள் பாடம் வெறும் ஏட்டு கல்வியுடன் நிற்காது களத்தில் இறங்கி பணியாற்றி அதை சமர்ப்பித்து தேர்வுகளுக்கு மதிப்பெண் பெறும் படியே பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் மாணவர் டோணி,  உணவு பொருட்கள் மற்றும் சமையல் நிகழ்ச்சியை படம் பிடிக்க விரும்புவதாக கேட்டிருந்தார். முகநூலில், நெல்லை திருமதிகளின் பக்கத்தில் எங்கள் மாணவர் தேவையை குறிப்பிட்டு பதிந்திருந்தேன். சில மணித்துளிகளில் மகாராஜா நகரை சேர்ந்த திருமதி ஹசீனா சைய்யது அவர்கள் தன் விருப்பம் தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார்.  உடன் தயாராகி அந்த வார இறுதியில் எங்கள் மாணவர் சமையல் நிகழ்வை திட்டப்படுத்தினோம். 



அவசரத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொகுத்து வழங்க ஆள் தேடினால் கிடைக்கவில்லை. அதிரடியாக நானே தொகுந்து வழங்குகின்றேன் என்று களத்தில் இறங்கினேன். ஆனால் ஆசிரியர்களுக்கே ஆன  பிரச்சினை என்ன என்றால் எங்களால் எப்படி ஒரு நல்ல நிகழ்ச்சி இருக்க வேண்டும், எந்த  காட்சிகள் வலு சேர்க்கும் என்று  கற்பித்தாலும்; விளையாட்டு களத்தில்    பயிற்சியாளர் என்பது போல் ஊக்குவிப்போம் விளையாடவைத்து பரிசு பெற வைப்போம்.  மெடல் எல்லாம் எங்களால் வாங்க இயலாது நல்ல  வீரர்களை உருவாக்குவோம் என்பதிற்கு இணங்க ஒரு ஷாட்டிற்கே பல டேக் வாங்கினேன் எங்கள் மாணவர்களிடம். மேம் இந்த காமிராவை மட்டும் பாருங்க என்றால் வகுப்பில்  பாடம் நடத்துவது போல் கண் சுற்றி சுற்றி நாலு பக்கவும் போகும். எப்படியோ என் மாணவருக்கு ஒரே ஆறுதல் தொகுப்பாளரே தேவை இல்லை என்பது போல் நிகழ்ச்சி வழங்கிய திருமதி ஹசீனா சைய்யது அவர்கள் சிறப்பாக சமையலை செய்து காட்டினார்.

அவர் திறமை சமையல் செய்வதில் மட்டுமல்ல அதை விவரிப்பதிலும் மிகவும் விருவிருப்பாக சிறுசுறுப்பாக வழங்கினார்.   கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்ட ஹசீனா அவர்கள் நெல்லையின் சமையல் அரசியாக திகழ்கின்றார்.   பள்ளிப்   படிப்பை முடித்த உடன்  இல்லத்து அரசியாக   மாறின ஹசீனா அவர்கள்  தன் நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் பயண்படுத்தும் ஆளுமை.  சானல்களில் இவருடைய சமையல் நிகழ்வு வந்துள்ளது.   பல பத்திரிக்கைகளில் இவருடைய சமையல் குறிப்புகள் வருகின்றன.  சிறப்பான ஒரு  சமையல்   வலைப்பதிவாளர் ஆவார்.  மேலும் ஒரு சமையல் புத்தக ஆசிரியர். அடுத்த புத்தகம் எழுதி கொண்டு இருக்கின்றார்.  வீடு, பூந்தோட்டம்  பெண்களுக்கே உரிய அழகியலுடன் பராமரிப்பது அவர் மேல் நமக்கு ஈர்ப்பை   தருகின்றது.  விடுமுறை நாட்களில் சமையல் வகுப்பு நடத்துகின்றார். பிரபல தூய சவேரியார் கல்லூரியில் சிறப்புரையாற்றியும் உள்ளார். இப்படியாக சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு பெண்மையாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றார். 

பெயர் பெற்ற தொழில் அதிபர் குடும்பத்தில் இருந்தாலும் எளிமையாக, என்னுடைய பெயரைக்குறிப்பிடுங்கள் என்றார். தனக்கான ஒரு அடையாளத்தை தன் உழைப்பால் நிறுவும் பெண்கள் தான் பெண் உரிமை பற்றி வெறும் வாய் சவுடால் விடும் பெண்களை விட எடுத்துக்காட்டாக சமூகத்தில் திகழ வேண்டியுள்ளது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டு ஹசீனா சையது ஆவார்.

எங்களுக்கு செய்து காட்டினது இரால் பிரியாணி. அதன் செய்முறை நான் விளக்க போவது இல்லை. அவருடைய புத்தகம் வாங்கி வாசித்து கொள்ளுங்கள். அவருடைய புத்தகத்தின் சிறப்பே சமையலை மிகவும்  எளிமையான விதத்தில் விளக்கும் பாங்காகும்.  அவருடைய வலைப்பதிவையும் இணைத்துள்ளேன். அதன் வழியாக இன்னும் சிறப்பாக தெரிந்து கொள்ளலாம். மாணவருடைய  சமையல் நிகழ்ச்சி நமது நெல்லை சானல்களில் மிகவும் விரைவில் வரும். துல்லியமான நேரத்தை தெரிவிக்கின்றேன். கண்டு பயண்பெறுங்கள்.வலைப்பதிவு 

 கற்று கொண்ட நுணுக்கமான சமையல் ரகசியம் என்ன என்றால்
சமையல் செய்யும் போது பெண்கள் மனது மகிழ்ச்சியால் இருக்க வேண்டும். தன் குடும்பத்தினரின் உடல் மன ஆரோக்கியத்தை எண்ணி பூரிப்பாக சமைக்க வேண்டும். 

சமையல் ஒரு கலை அது வேலையல்ல. ஆகையால் பொறுமையாக செய்ய வேண்டும். ஒவ்வொரு பொருளும் வதங்க மசிய போதுமான நேரம் கொடுக்க வேண்டும். அடுப்பில் வைத்து விட்டு சீரியலை  கண்டு வர போய் விட்டீர்கள் என்றால் நாம்   எதிர்பார்க்கும் ருசி வர வாய்ப்பு இல்லை. மிகவும் முக்கியமாக சமையல் அறையை /அடுக்களையை மிகவும் தூய்மையாக சுகாதாரமாக பேண வேண்டும். 

உடனடி பொடிகள் சேர்க்காது நாமே அரைத்து பொடித்து சேர்க்க வேண்டும். 

சமைத்த உணவை எங்களுக்கு அவர்கள் பருமாறிய விதம் அன்பால் ததும்பி இருந்தது.  

மிக முக்கியமாக அவருடைய உதவியாளர் பெண்களை அக்கா என்று அவர் அன்புடன் விளிப்பதே நமக்கு தேனாக சுவைக்கின்றது.  விடைபெறும் சமையல் புத்தகம் பரிசாக தந்து வழி அனுப்பினார்