31 Dec 2015

விஜயகாந்து கூறினதில் எந்த தப்பும் இல்லை!...............


 

ஊடகங்கள் செயலை  கண்டு சிலர் காறி துப்புகின்றனர் திட்டுகின்றனர். சமீபத்தில் சென்னையில் மக்கள் வெள்ளப்பேரிடரால் துயருற்று இருந்த போது காட்சி ஊடகங்களில் செயல்கள் பல மக்களை அச்சத்தில் உள்ளாக்கியது வெறுப்புறச் செய்தது. நாங்கள் பொதிகைச்சானலை பார்த்து கொள்கின்றோம், உங்கள் சேவை எங்களுக்கு தேவை இல்லை என சொல்லும் அளவுக்கு தொலைக்காட்சிகள்  மக்களை துன்புறுத்தினர். 


வெள்ளப்பெருக்கு சமயங்களில் புதிய பல செய்தி சானலுகள் களத்தில் நின்று பணியாற்றிய போது நாம் காணும் பல பெயர் போன ஊடகவியாளர்களை களத்தில் காண இயலவில்லை. மழையில் காமிரா பழுதாகி விடுமோ, தாங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவோமோ என்று பயந்து எங்கோ ஒளிந்து கொண்டனர். வெள்ளத்துயரில் களத்தில் பணியாற்றிய சித்தார்த்,  ஆர் ஜெ பாலாஜி போன்றோரின் நிலத்தகவலை மறைத்து, களத்தில் பணியாற்றிய இளைய ராஜா போன்ற நல்லவர்களை பழித்து செய்தி பரப்புவதிலே உன்னிப்பாக இருக்கின்றனர். பல கோடிகள் சம்பாதித்த பல முன்னனி நடிகர்கள் தங்கள் வீட்டு சன்னலில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போதும் பல கோடி கொள்ளயடித்த சில நடிகர்கள் பத்து லட்சம் எறிந்து விட்டு ஒதுங்கி  போது  தன்னுடய  இயலாமையும் தாண்டி மக்களை நேரில் சந்தித்ததும் இல்லாது, ஒரு லட்சம் போர்வைகள் கொடுத்து உதவினவர் இசைஞானி இளைய ராஜா. வெள்ளத்தில் உதவின தன்னார்வர்களை பாராட்ட போனவரை தேவையற்ற கேள்வியால் கோபத்திற்கு உள்ளாக்கியது மட்டுமல்லாது,,  செய்தியாளர்,  அவர் வயதையும் மதிக்காது எரிச்சல் ஊட்டும் கேள்வியுமாக மறுபடியும் மறுபடியும் அவரை எரிச்சல் கொள்ள வைப்பதை நாம் கண்டோம். செய்தியாளர்களின் கண்டிக்க தக்க இச்செயலை எந்த ஊடக கல்வியல் புலத்தில் இருந்து கற்று வந்தனர்.  அடிப்படையாக ஒரு ஊடகவியாளர் சிறந்த மனித நேயனாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம்  மனித பண்பு கொண்டவராக இருக்க வேண்டும்.

எந்த செய்தியை மக்களுக்கு கொடுப்பது என்ற வகை தெரிவு இல்லாது செய்தி கொடுத்து கொண்டிருக்கின்றனர். பரபரப்பு செய்தி என்பது மட்டுமே தாரகமந்திரமாக இருந்தது. பேரிடரில் இருந்து தப்பிப்பது தற்காத்து கொள்வது போன்ற தகவல்கள் இல்லாது வெறும் வெற்று தகவல்கள் மக்களை பீதிக்கு உள்ளாக்கும்  தகவல்கள்  கொடுப்பதில் போட்டி போட்டு கொண்டிருந்தனர்!  அங்கு வேடிக்கை பார்க்க வந்த அமைச்சர்களை காமிராவை வைத்து பூச்சாண்டி காட்டுவது என ஊடகத்தின் எல்லா அசிங்கமாக அராஜகமான கேவலமான பக்கங்களை காட்டிய ஊடகத்தை விஜயகாந்த் போன்றவர்கள், மக்கள் பக்கம் இருந்து துப்பியதாக எடுத்து கொள்ள வேண்டும்.
 
செய்தித்தாள்களை திறந்தாலும் வெள்ளப்பெருக்கு வேளையில் ஆபத்தில் இருந்த மக்களுக்கு உருதுணையாக இருந்த தன்னார்வு தொண்டர்களின் செயல்களை வெளிக்கொணராது பத்திரிக்கை நிறுவனங்கள் வழியாக செய்த உதவிகளை விளம்பரப்படுத்துவதிலே உன்னிப்பாக இருந்தனர். பொதுமக்கள் தன்னாவர்கள் வழி மக்களுக்கு சேர்த்த பொருட்களை கூட மக்களிடம் கொண்டு சேர்க்காது தடைகள் உருவாக்கின அரசியல் கட்சிகள் முகத்திரையை கிளிக்காது வெள்ளப்பெருக்கு வேளையில் திறம்பட செயலாற்றி மக்களுக்கு சேவை புரிந்த சிம்பு போன்ற நடிகர்களை தேவையற்ற ஊடகச்செய்திகள் ஊடாக அச்சமுறச் செய்யும் பணியையே ஊடகம் செய்து வந்துள்ளது.

 
ஊடகம் யாரை பிரதிபலிக்க வேண்டியது? சாதாரண மக்களை சமூகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்களை. ஆனால் இன்றைய ஊடக முதலாளிகள், அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என்று ஆகி விட்ட நிலையில் ஊடகத்தின் செயல் பாடுகள் மேல் மக்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டனர். 

சென்னை வெள்ளபேரிடரில் மரணமடைந்த மக்கள் செய்தி முழுதும் வெளிவரவில்லை. பல பொய்களை பரவ விட்டு  உண்மையை மறைக்கும் பணியைத்தான் ஊடகம் செய்து வருகின்றது. ஊடகம் தான் நினைத்தால், சிலரை நல்லவராகவும் அதிகாரத்தில் கொண்டுவரலாம் என்ற மெத்தனப்போக்கில் உள்ளது. இதுவரை அரசு பேரிடரில் இருந்து மக்கள் மீட்புக்கு என்ன செய்தது, என்ன செய்ய வேண்டும், என்ன செய்து வருகிறது என்ற செய்திகளை தர இயலவில்லை. அரசுக்கு ஓர் நெருக்கடி கூட ஊடகங்களால் கொடுக்க இயலவில்லை. அரசு என்றதும் ஆளும் கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்ல இதுவரையிலும் ஆட்சி செய்தவர்கள் எல்லாரும் இந்த பேரிடருக்கு காரணமாகினர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர், அரசியல் கட்சிகள் பார்வைக்கு தான் தெரியவில்லை என்றாலும் ஊடகம் என்ன செய்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கி கிடந்த இடங்களிலுள்ள குடியிருப்புகளுக்கு விற்பனை விளம்பர கர்த்தாக்களாக செயல்பட்டு கொண்டிருந்தனர்!
 
பொதுமக்கள் ஊடகத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை விஜயகாந்து கேட்டு உள்ளார். துப்புவதாக செய்கை காட்டினாரா காறிதுப்பினாரா என்று காணொளியை பார்ப்பவர்கள்  விளக்கி கொள்ளட்டும். ஊடகம் இருக்கும் நிலையை உணர்ந்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் காறி துப்பும் சூழல் எழுந்திருக்காது. 

இந்த அரசு நிவாரண பணியை எவ்வாறு செய்து கொண்டிருக்கின்றது, தற்போது மக்கள் நிலை என்ன? அவர்கள் மறுவாழ்வுக்கு  ஊடகம் எவ்வாறு உதவலாம், கையகப்படுத்தியுள்ள நீர் நிலைகளை மீட்டு  வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய பேரிடர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று இல்லாது; சிம்பு கெட்ட பாட்டு பாடினார், விஜயகாந்து துப்பினார், இளைய ராஜா திட்டினார் என்று கூப்பாடு போடும் ஊடகத்தை பார்த்தாலே கேவலமாக உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்க வேண்டிய ஊடகம் ஆளும் வர்கத்தின் அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறி வெகு நாளாகி விட்டது என மக்களும் புரிந்து விட்டனர். ஆதலால் ஊடகம், வரும் காலங்களில் துப்புவதை மட்டுமல்ல பல எதிர்வினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த பேரிடரில் வாட்ஸ் ஆப் முகநூல் போல் சமூகத்தளங்கள் ஆற்றிய பங்கில் ஒரு சதவீதம் கூட ஊடகம் செயலாற்றவில்லை என்று அறிந்தால் நல்லம்!

17 Dec 2015

திருமணங்களை அலங்கோலப்படுத்தும் அம்மாக்கள்!


இன்றைய பல திருமணங்கள் சொர்கத்திலா அல்லது பணத்திலா நிர்ணயிக்கப்படுகின்றது என்ற விவாதங்களுக்குள் செல்லவில்லை.  ஆனால் பல லட்சம் செலவில் நடத்தப்படுகின்றது. "பல்லுள்ளவன் பட்டாணி சாப்பிடலாம்" என்ற நியதிக்கு இணங்க  பணம் இருப்பவர் செலவழிக்கின்றனர் என்று  சாப்பிட்டோமா பரிசை கொடுத்தோமா மணமக்களை வாழ்த்தினோமா  நாலு சொந்தக்காரங்களை பார்த்து பேசினோமா  என்று வந்து விட வேண்டும் 

பல திருமண வீடுகளில் ஆளுயர போஸ்டர், புகைப்பட-வீடியோ கவரேஜ், வெடி இடுதல், அருச்சுவை உணவு, திண் பண்டம் பரிமாறுதல் என தேவைக்கும் தேவைக்கு அதிகமாகவும் பல லட்சம் செலவிடுகின்றனர்.

சினிமா தொலைக்காட்சி தாக்கம் நிறையவே உள்ள இளம் தலைமுறையினர் தங்கள் திருமணத்தை சிலுமா காட்சி போன்றே நடத்த ஆர்வம் கொள்ளுகின்ரனர். இது போன்ர தலைமுறைக்கு என்றே ஆயிரங்கள் துவங்கி பல லட்சம் கட்டணம் செலுத்தி  திட்டமிட்டு திருமணத்தை நடத்தி தரவும் ஏஜன்சிகள் உள்ளனர்.  மணப்பெண் மட்டுமல்ல மணமகனுக்கும் மேக்கபிற்கு பல ஆயிரங்கள் தயங்காது செலவிடுகின்றனர். ஒரு  தாய் பெருமையாக கூறினார் அவர் மகளுக்கு  விளம்பரத்தில் வரும் பட்டு உடை உடுத்த வேண்டும் என்று  ஆசைப்பட்டதால் 50 ஆயிரம் விலை உள்ள சேலையை தயங்காது வாங்கி கொடுத்துள்ளனர். பெண்ணுக்கு அத்துடன் ஆங்ல மணப்பெண் அணியும் கவுண் அணிய வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது. அதையும் பல ஆயிரங்கள் கொடுத்து  வாங்கி அணிவித்துள்ளனர்.  எதற்கு இந்த ஆடம்பரம் என்று கேட்கும் நிலையில் பெற்றோரும் இல்லை, அநாவசிய செலவுகள் வேண்டாம் என்ற மனநிலையில் இளம் தலைமுறையும் இல்லை.  இன்றைய நிலையில் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையே ஓங்கி நிற்கின்றது.

விளம்பரத்தில் நடிகர்- நடிகைகள் போன்று அவர்கள்  தோற்றத்திற்கும்  ஆடம்பரங்களுக்கு முக்கியத்தும் கொடுத்தே திருமணம் என்ற வைபவத்தை காண்கின்றனர். 

ஆனால் இவ்வளவு செலவழித்து செய்யும் திருமணங்கள் மணமக்களின் தாயார்களால் நாசமாவதை காணும் போது வருத்தம் அளிக்கின்றது. 

ஆத்தாவுக்கு, தான் பெற்ற மகள், மகன் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா அல்லது மகள்/மகன் தன் ஆளுகை எல்கையை விட்டு கடக்க போகிறார் என்ற சிந்தனையா என தெரியவில்லை. தாய்மார்கள்  மூக்கை சீந்தி சீந்தி அழுது கொண்டிருப்பார்.  தான் பெற்று வளர்த்தின அத்தனை கடமை பாச உணர்வையும் வியாபாரம் பார்க்க துணிந்து கொண்டிருப்பர்.  மன மேடையிலே மகல் தன் விருப்பம் சார்ந்து இயங்க வேன்டும் என்ற பிடிவாதத்தில் எடுக்கும் நடவடிக்கையை கண்டு உணரலாம்.  அவ்வப்போது முத்தம் கொடுப்பது போல் அருகில் சென்று மகளுக்கு தன் உபதேசத்தை அள்ளி வழங்கி கொண்டு இருப்பார்.   

ஒரு வேளை உணர்வு பெருக்கால் அழகை வருகிறது என்றால் தாய் தள்ளி மகள் பார்க்காது அழ வேண்டும்.  ஆனால் இன்றைய பல பெண்களை பெற்ற தாய்கள் ஆதிக்க மனநிலையுடன் அல்லாடுகின்றனர். கணவர், பிள்ளைகள் பின்பு மருமகன் என அனைவரும் தன்  அதிகார எல்கைக்குள் அடிமைகளாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றர். இதர்கு இவர்கள் எடுக்கும் ஆயுதவும் அன்பு , பாசம் என்ற ஆயுதம் தான்.

பெற்றவர்கள் தங்களுக்காக முறைகளை செய்து விட்டு ப்ர்த்துபிள்ளைகல் மகிழ்ச்சியை அருகில் இருந்து கவனிப்பதும் மகிழ்வதும் தான் சிறந்தது.  . மண மேடைக்கு பெண்னை அழைத்து வருவது ஆலையத்திற்கு அழைத்து செல்வது என பெண்ணின் தாயை பெண்ணுக்கு அடுத்த படியாக நின்று வீடியோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  மாமா, சித்தி, பெரியாப்பா பிள்ளைகள் அத்தை சித்திகள் என எந்த உறவுகளும் திருமண மேடையில் காண்பதில்லை. பெண் பெற்றோரோ ஆண் பெற்றோரோ வருபவர்களை வரவேற்க மெனக்கெடுவதில்லை. வீடியோ பல லட்சம் செலவில் எடுப்பதால் எல்லா படங்களிலும் தாங்களும் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் மேடையில்  பிடிவாதமாக நிலை கொண்டு விடுகின்றனர்.  


இந்த சூழலில் தான் அழகாக நடக்க வேண்டிய திருமண வைபவத்தை பெண் அம்மாக்கள் அழுகை கச்சேரியாகவும் மாற்றுகின்றனர்.  புதிய குடும்பத்திற்கு தனியாக செல்லும் மகளை தேற்றி அனுப்புவதை விடுத்து,  அழுது கொண்டிருக்கும் தாயாரை தேற்றும் அவருடைய சொந்த பந்தங்களை காண்கின்றோம்.

இது அம்மாக்களின் பாசத்தில் பிரதிபலிப்பு என்று நாம் தப்பாக எடை போட்டு விட இயலாது. தன் ஆளுகையை தன் கணவர் தன் பிள்ளைகள் என்ற நிலையில் இருந்து பெண் எடுக்கும் சம்பந்தக்காரர்கள் வீட்டையும் ஆளுகைக்கு உள்ளாக்கும் தந்திர செயலாகும்.  மகள் அம்மாவின் பாச அழுகையை கண்டு புகுந்த வீட்டில் இருக்க நிலை கொள்ளாது பிறந்த வீட்டிற்கு ஓட எத்தனித்து கொண்டிருப்பார்.  இந்த சூழலில் மாமியார் ஏதாவது கருத்து தெரிவிக்கவோ தன் உணர்வை வெளிப்படுத்தவோ நினைத்தால் பெண்ணை பெற்றோர் இது தான் தக்க நேரம் என்று மகளுடன் மருமகனையும் தன் வீட்டு முதலாக்கி விடுவார்கள். சில போது ஒத்து கொள்ளாத மருமகனிடம் இருந்து மகளை பிரிக்கவுக்ம் தயங்குவது இல்லை. 

இன்று பல திருமணங்கள் நடந்து ஒரு வருடத்திற்கு உள்ளாகவே பிரிந்து விடுகிறதின் ஒரு முக்கிய காரணம் பெண்ணின் தாயாரின் தலையீடும் காரணமாகின்றது.  அம்மாக்கள் மகளிடன் இருந்து தொலைபேசி வழியாகவே தினச்செய்திகளை பெற்று விடுகின்றனர். பல மைலுக்கு அப்பாலிருந்தே மகளை கட்டுப்படுத்த,  மகளும் புகுந்த வீட்டு ஜனங்களை ஒரு வித எதிரி மனநிலையில் பார்க்க  கற்று கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  

இன்றைய அம்மாக்கள் மகள்களை சூழலை எதிர்கொள்ளும் விதமாகவோ ஆக்கபூர்வமாக சுயமாக சிந்தித்து செயல்படவோ அனுமதிப்பதில்லை. தங்கள் கணவருடனுள்ள பிணைப்புகளை மனதில் வைத்து தன்னால் தன் மாமியாருடன் சண்டையிட்டு ஜெயிக்க இயலவில்லை, மகள் துவக்கத்தில் இருந்தே யாருடன் ஒட்டாது  சுயநலத்துடன் வாழும் மனநிலையை வளர்த்து விடுகின்றனர். பல வீட்டில் மகள்களை சண்டைக்கோழிகளாக வளர்த்தே புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். 


பெண் குழந்தைகள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக  தன் கணவருடன் கணவர் ஆட்களுடன் வாழ்வதை பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமே தாயின் கடமையாக இருக்க வேண்டும். 

தென் தமிழகத்தில் பல பெண்கள் வீட்டோடு மணம் முடித்து இருப்பதும், மணம் முடித்த பின்பு ஒரு குழந்தையுடன் தாய் வீட்டில் திரும்பி வந்தவர்கள் பலர்.  இதன் மூல காரணம் பெண்ணை பெற்ற தாயாகத்தான் இருக்கும்

பல வீடுகளில்\ காலை பத்து மணிக்கு சென்றால் கூட அவர்கள் பெண் குழந்தைகள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள்.   தாய் அப்படியே பாசப்பெருக்கில் பொங்கி கொண்டு கூறுவார்கள் "போவுத வீட்டில் எப்படியோ நான் அப்படியே என் பொண்ணே தூங்க விட்டிருவேன். அவ நிம்மதியா இங்க தானே இருக்க இயலும்" . அதே போன்று கடைகளுக்கு அழைத்து வந்து பெண் குழைந்தைகளுக்கு தேவையானதும் தேவை இல்லாத பொருட்களாக வாங்கி கொடுத்து தான் பாசமான தாயாக பாவிப்பார்கள். இது போன்ற பெண் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை சூழலில் செலவழிக்க தெரியாது   திருப்தி அற்ற வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள். 


மேலும் போகும் இடத்தில் பேசவும் பழகவும் கற்று கொடுப்பதில்லை. " நான்  வந்த இடத்தில் 20 வருடமா என் மாமியாருக்கு அடிமையா கிடந்திட்டேன் என் மககிட்டே போகும் போதே நல்லா திட்டி மாமியாரை அடக்கணும் என்று சொல்லியுள்ளேன் என பெண்ணை பெற்ற அம்மாக்கள் சூளுரைப்பதையும் அவதானத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது. 

இப்போது ஒரு பெண்ணை பெற்ற பெற்றோர் பத்து ஆண் மகனை பெற்றதிற்கு சமம் என்று கூறுவது கூட இதனால் தானோ?