28 Nov 2015

சிதம்பர சிந்தனைகள்!

சமீபத்தில் வாசித்து நேரம் சிந்தனையில் ஆழ்த்திய புத்தகம் " சிதம்பர சிந்தனைகள்". மலையாள கதாசிரியர் கவிஞர் பாலசந்திர சுள்ளிக்காடுhttp://www.thehindu.com/news/cities/Kochi/im-the-poet-of-a-lost-and-failed-generation/article4967478.ece தன் வாழ்க்கை அனுபவம் சார்ந்து எழுதிய புத்தகம் இது.   நாட்க்குறிப்பு நடையில் கதை போன்ற அமைப்பில் 21  கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. 

முதல் கதையில் சிதம்பரனார் ஆலயத்தில் தான் சந்தித்த ஓர் வயதான தம்பதிகளை பற்றி கதைக்கின்றார். 
கல்லூரியில் செய்த குறுபுத்தனத்தை கேள்வியுற்று கேள்வி கேட்ட தந்தையிடம் பதில் கூறாது தன் சொந்த வீடு விட்டு வெளியேறுகின்றார் பாலசந்திரன். பின்பு அவர் தன் வீட்டு வாசல்ப்படியை மிதித்தது தன்னுடைய தகப்பனாரின் கடைசி கர்மங்கள்  செய்ய மட்டுமே. 

Image result for balachandran chullikkad blogஅடுத்த ஒரு பயணவேளையில் தன்னுடன் மேல்நிலை பள்ளி பள்ளியில் படித்த மாணவியை சந்திக்கின்றார். ஒரு சில சம்பவங்களால் அந்த குறிப்பிட்ட மாணவிக்கும் பாலசந்தருக்கும் சண்டை வருகின்றது. பால சந்தரன் கல்லூரி நிர்வாகத்தால் தண்டிக்கப்படுகின்றார். தன் வெறுப்பின் அவமானத்தின் பொறுட்டு  மாணவிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் செய்த  அட்டூளியவும் பின்பு வருடங்களுக்கு பின்பு சந்தித்த போது மன்னிப்பு பெற்று கொண்ட நிகழ்வுகளையும் விவரித்துள்ளார். அந்தக்காலத்தில் மாணவராக இருந்த இவர் இப்படியுமா? என சிந்திக்கும் போதே வெளியில் பிச்சை எடுத்து வந்த தாயின் கதையை கேட்டதும் தன் தாயை நினைத்து , தன் பெற்றோர்களை பல காலங்களாக சந்திக்காது இருப்பதை நினைத்து பட்சாதபிக்கின்றார். உருகின்றார்.

Image result for balachandran chullikkad blogகாதல் தோல்வியால் பைத்தியக்காரனாக மாறி தெருவில் அலைந்த தன் நண்பனை சந்திக்கின்றார். நண்பனை குளிப்பித்து துணிமணி சாப்பாடு வாங்கி கொடுத்து மறுபடியும் தெருவிலே விட்டு விடுகின்றார். தன் மனநல மருத்துவரான நண்பரிடம் அழைத்து செல்லாது  நண்பனை மறுபடியும் தெருவில் விட்டதை நினைத்து வருந்துகின்றார்.

கல்லூரிப்பருவத்தில் காதல் கொண்டு தன்னுடன் ஓடி வந்த இவர் மனைவி யும் இவரும் வெவ்வேறு விடுதியில் இருந்து படிக்கின்றனர்.  இச்சூழலில் மனைவி கர்ப்பம் ஆகுவதும் தன் இயலாமையை எண்ணி தன் முதல் மகனை கருவை கலத்தைதயும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையில் நிறம் சிவப்பு என்ற நிலையிலுள்ள வாழ்க்கையில் சாப்பிட்டு விட்டு உணகத்தில் பில் கட்டாது வந்த போது, உணவக உரிமையாளர்  பிடித்து வைத்து  அடி கொடுத்து அரைமூட்டை வெங்காயத்தை உரிக்கி வைத்ததையும்; பசிக்கொடுமையால் இரத்ததை விற்று பிழைப்பு நடத்தியதையும் அங்கு தன் தங்கையின் சிகித்தசைக்காக இரத்தம் விற்ற இன்னொரு இளைஞனை பற்றியும் எழுதியுள்ளார்.

 ஒரு இக்கட்டான நிலையில்; ஒரு விபசார பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததும்;  தன் மனைவியிடம் இப்பெண்னுக்கு பணம், உணவு கொடுக்க கூறின போது "நான் செய்யாத வேலைக்கு பணம் வாங்க மாட்டேன்" என்று விடை பெற்று சென்ற அப்பெண்ணை பற்றி மட்டுமல்ல தன்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த வசதியான இரண்டு பெண்கள் விபசாரிகளாக வாழ்ந்ததை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை ஓர் இளம் பெண் ஊறுகாய் விற்க வருகின்றார் இவர் வீட்டிற்கு. ஏதோ ஒரு சபலத்தில் அப்பெண்ணின் இடுப்பை கிள்ளுவதும் அப்பெண் இவருடை கன்னத்தில் அறைந்த நிகழ்வை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கையின் ஒரு நிலையில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கவிஞராக வலம் வருவதும்; பலர் ஆராதனை கண்ணோடு அவரை நோக்குவதும், மறைந்த சிவாஜி கணேசன் அவர்களுடன் விருந்து உண்ணுவதும் இன்னொரு சூழலிலோ சாப்பிடக் கூட உணவு இல்லாது பிச்சைக்காரனை போன்று உணவை  இரந்து உண்டதை பற்றியும் விளக்கியுள்ளார். 

ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த எழுத்தாளரால் தன் வீட்டுடன் சமரசப்பட்டு போக இயலவில்லை.  கல்வி கற்கும் காலயளைவில் கேரளா நக்சல் புரச்சியில் ஆற்வம் கொண்ட கவிஞர் தன் பிறந்த வீட்டை நாட்டை பெற்றோர் அவர்கள் கொடுத்த கல்வியையும் தூக்கி எறிந்து பின்பு  ஒரு பிடி சோறுக்கான பசியில் போராட்டவும் இல்லை புரட்சியும்  என விளக்கியுள்ளார்https://en.wikipedia.org/wiki/Balachandran_Chullikkadu

Image result for balachandran chullikkad blogஇப்படியாக ஒரு மனிதனின் நல்ல பக்கங்கள் பெரிமைக்குறிய புகழ் கொண்ட பக்கங்கள் மட்டுமல்லாது அவன் அவஸ்தைக்கு உள்ளான, அவன் வறுமையிலும் பட்டிணியிலும் கிடந்த பிச்சைக்காரனாக அலைந்த நிலைகளிலுள்ள  வாழ்க்கையை பற்றியும் துணிவாக எழுதியுள்ளார். மாணவப்பருவட்த்தில் புரச்சி என்ற பெயரில் தங்கள் கல்வி சூழலை கிடைக்காமல் செய்யும் பல மாணவர்களுக்கு வழி காட்ட உள்ளது இப்புத்தகம். இது போன்று ஒரு முகமூடி அற்ற எழுத்து, ஆன்மாவை தட்டி எழுப்பிய இதயத்தை நொறுக்கிய  எழுத்து தமிழில் வந்திருக்க வாய்ப்பே  இல்லை. வேடங்களற்ற இலக்கியமே வாழ்க்கையை பேசும் என இவர் எழுத்து ஊடாக நிரூபித்துள்ளார். http://www.jeyamohan.in/42665#.VlnX1NIrJdg

இப்புத்தகம் மலையாள மொழியில் இருந்து தமிழில் மொழிபெயற்கப்பட்ட புத்தகம். வம்சி பவா செல்லத்துரையின் மனைவியும் பேராசிரியருமான       கெ.வி. ஷைலஜாவால் மொழிபெயற்கப்பட்டுள்ளது. மிகவும் சீரிய மொழிப்பெயர்பு. அன்னிய மொழியில் இருந்து மொழிபெயற்கப்பட்டது என்றே சுவடே தெரியாத வண்னம் சிறப்பான தமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார்.http://balachandranchullikkad.blogspot.in/

24 Nov 2015

மழை மழை....

மழையும் எங்களையும் பிரித்து பார்க்கவே முடியாது. மேற்கு தொடற்சி மலையின் அடிவாரம் தான் எங்கள் குடியிருப்புகள் என்பதால் மழை தான் எங்கள் ஒரே காலநிலை என்று இருந்தது. நாங்கள் ரமணன் வானிலை அறிக்கையாலரர்களின் மொழி எல்லாம் நம்புவதில்லை. வீட்டில் இருந்து கிழம்பும் போதே " கொடைய எடுத்துக்கோடி மழை வரும் மேகமூட்டமா இருக்குது" என்று கட்டளைக்கு படிந்து குடையும் கையுமாகவே நடப்போம். பள்ளிக்கு செல்லும் போது எங்கள் துணிப்பை,  சாப்பாட்டுப் பை, குடை என மூன்றும் எங்களிடம் ஒன்று சேர்ந்தே இருக்கும். 


ஆறு மாதம் மழை, மூன்று மாதம் வெயில் மூன்று மாதம் பனி என்பது தான் காலநிலை. மூன்று மாத வெயில் தான் எங்களை மிகவும் துன்பப்படுத்தும் வாழ்க்கை நிலை. அப்போதும் குடையை விட்டு வைப்பதில்லை. கர்ணனுக்கு குண்டலம் என்பது போல் தான் எங்கள் பகுதி மக்களுக்கு குடை. இங்கு பீடி சுற்றும் தொழில் போன்றே பெண்கள் சுய உதவி குழுவுக்கு குடை செய்வது தான் ஓர் தொழில். குடை தைப்பவரும் தெருவுக்கு தெருவு இருப்பார். குடை கூட காலன் குடை, பாரின் குடை, நீளக்குடை என்று பல வகையில் இருந்தது. காலன் குடை என்பது கைபிடி வைத்து அதன் தலைப்பக்கம் மாட்டுக்கு கொம்பு என்பது போல் இருக்கும். பொதுவாக வயதான தாத்தாக்கள் பயண்படுத்துவது. மழைக்கு குடை என்றால் மழை இல்லாத போது நடை கம்பாகவும் பயண்படுத்தி கொள்வார்கள். சென்னையில்  சமீபத்திய கலாச்சாரமாக அழகிய இளம் கல்லூரி மாணவிகளும் இக்கொடையை பயண்படுத்துவதை கண்டேன். இந்த குடையை பிடித்து கொண்டு குதிரை போல உயரமுள்ள மாணவிகள் நடந்து போவதே ஓர் அழகு. .  அடுத்தது தான் பாரின் குடை! இது பல வண்ணங்களில் இரண்டாகவும் மூன்றாகவும் மடக்க தகுந்து. இந்தக் குடை காற்றுக்கு பலக்காது.  குடையும் சூடி அன்ன நடை நடந்து போகும்  பெண்களுக்கான குடை இது. 

 

பெரிய குடைகள் வகை தான் நாங்கள் பள்ளிக்கு கொண்டு செல்வது. 
சில நேரம் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளவும் பெரியவர்களுக்கு  நாயை, விரட்ட  ஆயுதமாக பயண்படுத்துவதும் இந்த குடையைதான். பல நேரங்களில் பூவாலன்(பெண்கள் பின்னால் நடக்கும் ஆண்களுக்கு பெயர்)பொடியன்களில் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றுவதும் இந்த குடை தான். 


பள்ளிக்கு செல்லும் போதே மாற்று உடையும் எடுத்து கொள்வோம். எப்படியும் பள்ளி செல்லும் போது தொப்பு தொப்பாக நினைந்து விடுவோம். சில பிள்ளைகள் இதனால் தான் இந்த நவ நாகரிக குடையை சாராது பிளாஸ்டிக் கொங்காணிகளை பயண்படுத்தி கொள்வர்.  எங்கள் பள்ளிகள் ஒவ்வொரு மலை மேல் தான் இருக்கும். போகும் போது கஷ்டபட்டு ஏறி சென்றாலும் இறங்கும் போது கீழ் நோக்கி ஒரே ஓட்டம் தான் . அப்படி தான் எங்கள் தோழிகள் செல்லவேண்டிய பேருந்து தூரத்தில் ரோட்டில் வருவதை கண்டதுமே நாங்கள் மலை மேல் இருந்து சத்தமிட்டு ஓலமிட்டு கும்பலாக ஓடி வருவோம் . பேருந்துகாரன் பயந்து  என்னடா ஆச்சு என்று விசாரிக்கும் முன் மீன் மூட்டை போன்று அடைத்து வைத்துள்ள பேருந்தில் எங்கள் தோழிகளையும் ஏற்றி விடுவோம். இந்த பேருந்துக்காரனுகள் பள்ளி பிள்ளைகள் தொல்லை இருக்கக்கூடாது என்றே பள்ளி விடும் நேரம் முன் பாதையை கடந்து விடுவான். சில நேரங்களில் எங்கள் நேதாக்களுடன்(தலைவர்கள்)  சென்று வழி மறிக்கும் படலவும் உண்டு. 

அன்றைய  30 வருடம் முன் வண்டிப்பெரியாரில் மூன்று அரசு பள்ளி தான் இருந்தது.  அந்த பள்யை நம்பியை சுற்றுப்புறம் உள்ள எஸ்டேட் மாணவர்கள் இருந்தனர். 10 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு வர காலை 6 மணிக்கே நடக்க ஆரம்பிக்க வேண்டும். நடந்து பள்ளிக்கு வந்து திரும்பி வீடு போய் சேர  கிராம்பி, மவுண்டு போன்ற எஸ்டேட் மாணவர்களுக்கு  இரவு 7-8 ஆகி விடும். சில வசதியான மாணவர்கள் ஜீப்பில் வருவார்கள். ஜீப்பில் கம்பியில் தொங்கி மேல்ப்புறம் இருந்து என எங்கு எங்கெல்லாம் இடம் இருக்குமோ கடிமாக பயணப்பட்டு வருவார்கள்.  பின்பு சில காலம் கழிந்து எஸ் என் வி நாராயணன் முதல் பேருந்தை இறக்கினார். அத்துடன் பசுமலை போன்ற பகுதி மாணவர்களுக்கு வேறு ஒரு பேருந்து வந்து சேர்ந்தது.  பேருந்தை பிடிப்பது என்பது ஒலிபிக் ஓட்டத்தில் பங்கு பெறுவது போல் தான் இருந்தது. இவர்கள் தங்கள் எஸ்டேறில் இருந்து வண்டிப்பெரியார் டவுணை எட்ட; பின்பு நாங்கள் எல்லோரும் சேர்ந்து எங்கள் பள்ளிகளை பிடிக்க மழையில் நடைந்தும் நடந்தும் ஓடியும் சென்று சேர்வோம்.  25-30 வருடம் ஆன பின்பும் தற்கால என் மாணவர்கள் கூட பேருந்து வசதியில் இதே வசதியின்மையை தான் எதிர் கொள்கின்றனர் என்பது பெரும் துயரே. அதை பற்றி ஓர் பதிவை தேவை வரும். திருநெல்வேலி கார்ப்பரேஷன் பகுதிக்குள்ளே சிறந்த பேருந்து வசதி இல்லை முனஞ்சிப்பட்டி தேவர்குளம் போன்ற பகுதிக்கும் செல்லும் மாணவர்கள் இதே சிக்கலிலே அல்லாடுகின்றனர் என்பதை பேருந்து நிலையத்தில் நாம் சிரிது நேரம் நின்றால் புலன்ப்படும்.
மழை மழை என்று எப்போதும் சினுங்கியும், சிரித்து, கோரமாகவும்   பெய்து கொண்டே இருக்கும்.  இதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கையும் பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஓர் மூன்று மாதம் பேய் மழை பெய்ய வழித்தடங்கள் அடைக்க ஆரம்பிக்கும். முதல் அபாயசங்கிலி "கக்கி கவலை" என்ற இடத்தில் ஆரம்பிக்கும். இது பெரியாருக்கும் குமளிக்கும் இடைப்பட்ட . அங்கு  ஓர் பெரிய தண்ணீர் வழித்தடம் இருந்தது. மழை நேரம் தண்ணீர் பெரியார் ஆற்றை சென்று சேர என நோக்கத்துடன் இருந்த அந்த ஓடைக்கு அருகில் கூரை கட்டியவர்கள் பின்பு ஓடையை அடைத்து தன் மேல் சிமின்று ஸ்லாப் போட்டும், அடுக்கு மாடி கட்டிடங்களை கெட்டி குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். கக்கி கவலையில் தண்ணீர் ஏறி விட்டது என்றால் அங்குள்ள வீடுகள் அதன் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியும் தண்ணீருக்குள் மூழ்கி விடும். இது போன்ற ஒரு வெள்ளப்பெருக்கு நேரம் தான் மாமாவுக்கு கடைக்குட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்திருந்தாள். பிள்ளை வெள்ளைக்காரி போன்ற வெள்ளை நிறம் என்றதும் கறுத்த பொக்கு வாய் தாத்தா கூட பெருமை பேசி கொண்டிருந்தார். நாங்கள் பிள்ளையை பார்க்க தேயிலைச்செடிகளை பிடித்து காடு வழி சென்று வந்தது நியாபகம் உள்ளது. 

மக்கள் தண்ணீருக்குள் கிடந்தாலும் தாங்கள் புறம்போக்காக கையடக்கிய இடத்தை பற்றியோ, தங்கள் ஆக்கம் கெட்ட நிலம் கையடக்கல் செயலை பற்றியோ வருந்தாது மழையை திட்டி கொண்டே இருப்பார்கள்.  நாச காலமான மழை எப்போது தான் வெறிக்குமோ..? 

பெரியார் ஆற்றின் அழகை வர்ணிக்கவே இயலாது. அவ்வளவு அழகான ஆறு. அதன் நீளம் அகலம் அதன் ஓடும் அழகு இதை படம் பிடிக்கவே வெள்ளைக்காரர்கள் வந்து குமியுவார்கள் எங்கள் ஊருக்கு. அந்த பாலம் கட்டினதும் வெள்ளாக்காரன் தான். வண்டிகளை ஓடவைக்க கெட்டிய பாலம் என்பதால் வண்டிப்பெரியார் என்றே எங்கள் ஊருக்கு பெயர் வந்தது. வெயிலில் வரண்டு ஒடுங்கிய பாலம், மழை நேரம் கரை புரண்டு ஓடும். கரையில் மேல்ப்புறங்களில்  வீடுகட்டி குடியிருப்பவர்கள் ஒன்று இரண்டு என 30-40 படிகளை கட்டி கட்டி ஆற்றை ஒட்டியும் வீடு கட்டி விடுவார்கள். இந்த வீடுகளை வாடகைக்கும் கொடுப்பார்கள் சில நேரம் இவர்களும் தங்கி இருப்பார்கள். இயற்கையிடம் மோதுமின்றோம் என மறந்து தங்கள் பெரும் ஆசையால் தெரியாததால் கரைபுரண்டு ஓடும் தண்ணீரிடம் போரிட இயலாது சில நேரம் உடை , பொருள் என சகலவும்  தண்ணீரில் இழந்து அழுது புலம்புவார்கள். சில பொழுது எதிர்பாராத நேரம் இரவு நேரம் வரும் தண்ணீரால் குடும்பமே தண்ணீரில் அடித்து செல்லும் நிகழ்வும் நடந்து உள்ளது. 

இவர்களை மீட்டு எங்கள் பள்ளியில் தங்க வைப்பதால் 'எப்போ பள்ளி திறக்கும்' என்று ஏக்கம் கொள்ளும் மட்டும் பள்ளி நெடுநாள் விடுப்பு விட்டு விடுவார்கள். இது போன்ற பேராபத்து நேரங்களிலும் வலுவான சிலர், ஆற்றுக்கு மத்தியில் கயிர்கட்டி அல்லது, மரம் போன்றவையில் தட்டு தங்கி நிற்கும் கட்டில் மேஜை போன்ற பொருட்களும் எடுத்து செல்வதும் உண்டு. இது போன்று ஆற்றம்கரையில்  கட்டி வைத்துள்ள கான்வென்றும் நீரில் மூழ்கி விட்டது. காப்பாற்ற சென்றவர்கள் மிதித்த இடத்தில் பாம்புகள் நெளிந்து ஓடியதை இப்போதும் பயத்துடன் நினைவு கூர்வார்கள். இது போன்ற மழையில் ஆற்றம் கரையில் கட்டி வைத்துள்ள ஆசிரியர்கள் வீடுகளை மீட்கும் பொறுப்பான பணியில் எங்கள் மாணவர்கள் பங்கு சேர்வார்கள்.  இந்த நேரம் தான் எங்கள் ஓடைகைளில் ஆற்று  தண்ணீரும் கலந்து மீன்கள் நகரம் வழி பாயுவதும் அதை பிடிக்க துண்டும் தோர்த்துமாக எங்கள் வீட்டு பொடியர்கள் பாயுவதும் மீனைப்பிடித்து வந்து எனக்கு இவ்வளவு  உனக்கு இவ்வளவும் என பங்கிட்டு கொள்ளும்  அந்தக்கால மகிழ்ச்சியான நினைவுகளும் கூட. ஆற்றில் ஓடும் வெள்ளத்தில் காட்டு பூக்கள், பாயல் என போகும் அழகு தான் இப்போதும் நினைவில் உள்ளது.

இந்த மழைத்துயரில் எங்களை அச்சம் கொள்ள வைக்கும் டாம் புரளிகளும் கரை புரண்டு ஓடும். ஒவ்வொவு நாள் இரவில் தூங்க போகும் போதும் காலை நம் தலை மேல் தண்னீர் ஓடுமோ,  அப்படி டாம் உடைந்தால் நாம் எதிர் காணும் பழையகாடு பங்களா மொட்டையில் தப்பித்து விடலாமோ என அந்த சின்ன நாள் மனதுகளும் அங்கலாய்த்து கொள்ளும். இப்படியாக மழையுடன் சேர்ந்தும் இனிமையான  கேளிக்கையான விளையாட்டு நினைவுகளுடன் பயவும் வருத்தங்களும் சேர்ந்தே பயணிக்கின்றது. 

11 Nov 2015

பெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்

படம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கியம் கொடுத்துள்ளமனர்.   இளைஞர்கள் மட்டுமல்ல இளமை கடந்து அனைவரும் தங்கள் இளமையை நினைக்க வைக்கும்  காதல் படம். எடுத்த விதம் கதை அமைப்பு தேர்ந்தெடுத்த இடம்(லொக்கேஷன்) இன்னும் அருமை. பாடல்கள் ஒவ்வொன்றும் மனதில் நிற்பவை.

என்ன கவர்ந்த விடையம் என்றால் படத்தில் வரும் மூன்று பெண் கதாப்பாத்திரப் படைப்பு தான் . முதல் கதாப்பாத்திரம் பள்ளிக்கூட மாணவி. ஊரை திரண்டு காதலுக்குகாக அவள் பின்னே ஓடுகின்றது. அவருக்கு காவல் வேலையாக இருக்கும் புள்டாக் என்று பொடியன்கள் பயத்துடன் அழைக்கும் அவள் அப்பா. அவள் பின்னால் பல விடலைகள் சுற்றினாலும் அவள் அலட்டி கொள்ளவே இல்லை. தமிழ் படக் கதாநாயகி போல் பயந்து அழது சாகவுமில்லை போராளியாக வெடித்து சாடவுமில்லை. மிகவும் லாவகமாக தைரியமாக புத்திசாலித்தனமாக கையாளுகுன்றார் பசங்களை. 


அடுத்தது கல்லூரி பேராசிரியை அதுவும் கொடைக்கானலில் இருந்து வரும் இளம் பேராசிரியாக சாய் பல்லவி என்ற நடிக்க தெரிந்த ஒருவர் நடித்துள்ளார். அந்த பெண் கதாப்பாத்திரமும் இளம் துடிப்பான சவாலான மாணவனை மிகவும் சாதுரியமாக கையாளுகின்றார் சில இடங்களில் ஏமாற்றுகின்றாதீகொஞ்சம் நெருடலாக இருந்தால் கூட). மாணவனுக்கு காதல் ஆசிரியையிடம் ஏன் வருகின்றது என்று கேள்விக்கு நியாயம் கற்பிக்காது; ஆசிரியை, அந்த மாணவனிடம் இருந்து சாதுரியமாக தப்பித்து கொள்வது அருமை.

அடுத்து கதாநாயகன் கைபிடிக்கும் தனக்கு கணவராக வரப்போகும் மனிதனின் எல்லா பக்கங்களையும் அறிந்து தன் வாழ்க்கையின் எல்லா பக்கஙகளையும் பகிர்ந்து பக்குவமாக ஏற்று கொள்ளும் இளம் பெண். சில கயவர்களால் பெண்கள் வாழ்க்கையில் வரும்; பெற்றோரால் தீர்க்க இயலாத பிரச்சினைகளைக் கூட கணவர்களால்  தீர்க்க வல்லது என்று ஒரு காட்சி ஊடாக சொல்கின்றது படம்.


இந்த மூன்று இயல்பான கதை அம்சம் கொண்ட கதாப்பாத்திரவும்  சாதாரண பெண்களை நினைவுப்படுத்துபவர்களாகவே இருந்தனர். சமீபத்தில் நான் பார்த்த "நானும் ரவுடி  தான் " படக்கதாநாயகி நயனும் மனதில் வந்து சென்றார். அணிவது எல்லாம் மாடன் உடை நடப்பது மாடேனாக; பேசுவது, செய்வது எல்லாம் முட்டாள் தனம் பைத்தியக்காரத்தம்! . 

இன்னும் ஒரு எடுத்து கூறவேண்டிய விடையம் மலையாளப்படத்தில் தமிழ் பெண் கதாப்பாத்திரம் என்றாலே பிச்சைக்காரி, வீட்டு வேலைக்காரி அல்லது வில்லனின் வைப்பாடி என்றபடியாகத்தான்  காட்டுவார்கள். இதில் ஒரு தமிழ் கல்லூரி பேராசிரியை; அவர் பின்னால் வழிந்து அலையும் ஒரு முரட்டு மாணவன் ஓர் வழிசல் பேராசிரியர். இவர்களை சிரித்த முகத்துடனே சமாளித்து, வாழ்க்கையில் தன் உறவினரை மணம் முடிக்கின்றார். அவர் தொழில் சார்ந்தும் திறமையானவர், எல்லா  மாணவர்களையும் ஒருங்கிணைத்து   முன்னேற செய்பவர்.  மொத்ததில் ஆளுமையான பெண் கதாப்பாத்திரம். ஒரு இடத்திலும் தமிழர்கள் மனதை புண் படுத்தும் படியான " ஒரு  வார்த்தையும் வரவில்லை.  80-90 மலையாளப்படங்களில் தமிழர்களை புண்படுத்தும் வார்த்தைகள் கருத்தாக்கங்கள் பரவி கிடந்துள்ளது கண்டுள்ளோம். அவ்வகையில் மலையாளிகள் தமிழர்கள் கலாச்சாரத்தை தனிதன்மையை மேலும் மதிக்க கற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. 

ரசிக்கும் படியான தமிழ் மல்லிகைப்பூ சென்றிமென்றில்   "நான் கோயிலுக்கு போடுவேன்" போன்ற தமிழ் உரையாடல்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் கொடுத்து சரி செய்திருக்கலாம்.  பொதுவாக தமிழ் படங்களில் கதாநாயகன் வாங்க நீங்க என பேசுவார் கதாநாயகி போடா வாடா என்பார். ஆனால் மலையாளப்பட தமிழ் நாயகி நீங்க வாங்க என கதைக்கின்றார் நாயகனோ ஆசிரியையாக இருந்தும் நீ ...உனக்கு என கதைக்கின்றார்.

என் மகன்,  படம் எப்படி இருக்கு என்று என்னிடம் கேட்டான். படம் எடுத்த விதம் நல்லா தான் இருக்கு ............ஆனால் காதலிக்க  ஆசிரியை தான் கிடைத்தாரா என்றேன். அவனும்  அவன் நண்பர்களிடம் என் கருத்தை கூறினானாம் அவர்கள் கூறினார்களாம் இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று. எது எப்படியோ கல்லூரி சாலை மாணவர் காதலில் ஆசிரியர்களையும் கதாபாத்திரமாக வர துவங்கினால் பெரிய அபாயக் குறி தான். மகாபாரத கதை தான் நினைவில் வருகின்றது. விராட மன்னரின் மகளுக்கு போர் புரிய  இரத ஓட்டியான அர்சுனனன் உதவியிருப்பார். போரில் வெற்றி கொண்ட போது மன்னர் தன் மகளை அர்சுனனுக்கு மணம் முடித்து கொடுக்க மகிழ்ச்சியுடன் முன் வருவார். ஆனால் அர்சுனனனோ நான் குரு இடத்தில் இருந்து வித்தையை கற்று கொடுத்தவன். ஒரு குரு மாணவியை மணம் முடிப்பது சாஸ்த்திரத்தால் ஆகாது உங்களுக்கு விருப்பம் எனின் என் மகனுக்கு மணம் முடித்து கொடுங்கள் என்பார். ஆனால் நியத்தில் பல ஆண் ஆசிரியர்கள் தங்களுடைய பல மாணவிகள் தற்கொலைக்கு காரணமானது கூட்டி கொண்டு ஓடி  தாலி கட்டினவர்கள் என பல வகையில் உண்டு. இது போன்ற ஈனச்செயல்களை கண்டு கொள்ளாத கலாச்சார உலகம் ஆசிரியைகளும் வேட்டையை ஆரம்பித்தத போது வெகுண்டு எழுந்தனர். 

ஆனால் படம் பார்க்க பார்க்க மனம் பதைபதைத்தது. ஆசிரியை பதவியின் மாண்பை  இந்த படம் காத்தது என்பதிலும் படக்குழுவுக்கு ஒரு வணக்கம்.  

மொத்தத்தில் எல்லோரையும் தங்கள் பள்ளி கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து செல்லும் படம். கடைசியாக காதல் பற்றிய ஒரு தத்துவம் சொல்லுவார்கள்   எல்லார் வாழ்க்கையிலும் பட்டாம்பூச்சி போல் வரும் பைத்தியம் போன்றது காதல் என்று. காதல் ஒரு பைத்தியம் தான். அதை வாழ்க்கைக்கு உதவுவதாக மாற்றும் தன்மை, அறிவான மனிதர்களிடம் உள்ளது என்று சொலியுள்ளார்கள். ஆட்டோகிராப் திரைப்படத்தை  நினைவுப்படுத்திய மொத்தத்தில் ரசிக்கும் படியான படம் பிரேமம்!.

3 Nov 2015

பட்டுமலை நினைவுகள்

35 வருடம் பின்னோக்கிய மனப்பயணம். ஆம் அதின் நிறைவே இந்த முறை பட்டுமலை- சூளப்பிரட்டு எஸ்டேடை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்ததின் காரணம்.  அந்த எஸ்டேட்டில் தான் பாட்டி அருமை நாயகம் கங்காணி மகளாக வளர்ந்தது தன் காதல் கணவரை தன் விருப்பத்துடன் மணந்தது  குடி புகுந்ததும் இரண்டு குழந்தைகளுடன் பின்பு வாழா வெட்டியாக போராடி வாழ்ந்ததும்.


அம்மா வசதியான வீட்டில் குடி புகுந்து நகை நட்டுடன்; அப்பா நாங்கள் 3 குழந்தைகள்  என குடியிருந்தது வண்டிப்பெரியார் என்ற குட்டி பட்டணத்தில். தான் வறுமையில் தேயிலை தோட்ட தொழிலாளியாக இருந்தாலும் தன் மகளுக்கு கல்வி கொடுத்தேன் மகள் தன்னை போல் ஓர் தொழிலாளியாக இருக்க வேண்டி வந்ததில்லை என்ற விடையத்தில் பாட்டிக்கு எப்போதும் அதீத பெருமை இருந்தது. பாட்டி ஊருக்கு செல்வது என்பது மாதம் ஒரு தரம் கிடைக்கும் வாய்ப்பு. பல போதும் அம்மா விம்மிய இதயத்துடன் பேருந்தில் அமைதியாக இருப்பது தான் வழக்கம். எல்லா பெண்களும் போல் ஒரு நொறுங்கிய இதயம் தான் பிறந்த வீட்டிற்கு வழி சொல்லும். ஆனால் பிள்ளைகள் எங்களுக்கு  அந்த பயணம் அப்படியானதல்ல. பாட்டி, மாமாவை காண வேண்டும் மாமா பிள்ளைகளுடன் விளையாட வேண்டும், மாமா தோட்டத்திற்கு போக வேண்டும் அத்துடன் பல சொந்தக்காரர்களை கண்டு விடலாம் என்ற ஆசை வேறு! அம்மா எங்கள் வீட்டை  விட்டு கிளம்புவது என்பது  அப்பாவுக்கு பிடிப்பது இல்லை. ஆனால் தன் தாய் வீட்டிற்கு செல்லும் ஆசைக்கு தடை நிற்பதும் கிடையாது. சில போது அப்பாவும் எங்களுடன் வருவார்கள்.













வண்டிப்பெரியார் விட ,மிகவும் குளிரான பிரதேசம் பட்டுமலை எஸ்டேட். இது தேக்கடியில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. பச்சைபட்டு உடுத்தியிருப்பது போல் இருப்பதால் பட்டு மலை என்று அழைக்கின்றனர்.  இன்று அவ்வழியிலுள்ள பயணம் பேருந்து வசதியால் பெரிய விடையமாக புதியத்தலை முறைக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் எங்கள் குழந்தைப் பருவத்தில் அங்கு சென்று வருவது என்றால் ஓர் சுற்றுலாப்பயணம் போல் தான் இருக்கும். எப்போதும் நான் பிடிப்பது சன்னல் அருகில் தான். நம் குரல் எழுப்பது போன்றே பேருந்து சத்தவும் எதிரொலிப்பதாக தோன்றும். அந்த குளிர் பறக்கும் பனியை நோக்கி கொண்டேயுள்ள பயணம் இனிமையானது. 

பட்டுமலை என்றதும் உலக பிரசித்தி பெற்ற பட்டுமலை வேளாங்கண்ணி மாதா கோவில் பிரான்ஸிக்கன் சகோதரர்கள் நடத்தும் குழந்தைகள் அனாத ஆசிரமம் தான் அனைவருக்கும் நினைவில் வரும்.  . மாதா கோயில் மதம் கடந்து அனைவரும் வந்து செல்லும் புண்ணிய மற்றும் சுற்றுலா தலமாக இப்போது நிலைகொள்கின்றது.  இந்த கோயில்  எளிய தோற்றம் கொண்டது. தற்போதுள்ள புதுக்கோயில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜெ.பி பிரய்ட் என்பவர் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிரானைட் கல்லால்  கட்டப்பட்டுள்ளது  என்பதை சிறப்பாக கூறுகின்றனர்.  கன்யாகுமரி தமிழக சங்குமுகம் அடுத்துள்ள புத்தன்ந்த்துறையை சேர்ந்த ஆலையத்தின் சாயலில் கட்டியுள்ளனர்.  கேரளா சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு  இந்த கோயிலின் மறைமுகமான பங்கு பெரிதும் உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு எவ்விதம் உதவினர் என்பது இங்கு பயிலும் அனாத சிறுவர்கள் நலனை அறிந்து  தான் கண்டு கொள்ள இயலும். இங்குள்ள குரிசடி காணிக்கை பெட்டியை   திருடர்கள் உடைப்பது வழக்கமான செயலாகும்.உலகில் பல இடங்களில் நல்ல சிறந்த கல்விக்கு வழிசெய்யும் பிரான்சிக்கன் சகோதரகள் இந்த எஸ்டேட் மக்களுக்கு ஒரு கல்லூரி ஏன், ஓர் மழலைப்பளி கூட திறக்கவில்லை. ஏலக்காய் காயவைத்து பதப்படுத்துவதில் இங்குள்ள தோட்டக்காரர்களுக்கு உதவுகின்றனர். பொதுவாக மலைப்பகுதி  மக்கள் அமைதிவிரும்பிகள் ஆகவே இருப்பார்கள். இயற்கையுன் போராடி வாழ்பவர்கள் என்பதால் சிறிய சிறிய சந்தோஷங்களில் இறைவனை தேடி வாழ்ந்து வருபவர்கள்.

பட்டுமலை நிறுத்தம் வந்ததும் பாட்டி குடியிருக்கும் பகுதிக்கு ஒரு மைல் நடந்து செல்ல வேண்டும். ஓடி ஆடியும் செல்வோம். வழியில் எஸ்டேடு ஆஸ்பத்திரி கடந்து நடந்து சென்றால் அழகிய சவுக்கு மரம், தேயிலை தோட்ட அதிகாரிகள் வீடுகள் வரிசையாக அதனுள்ளில் இருந்து சில கண்கள் மட்டும் எட்டி பார்க்கும். அதே பாதையில்  தேயிலை தொழில்நிலையம்(டீ பாக்டரி) கடந்து சென்றால் பூஞ்சடி பாட்டி வீடு வரும். 

பூஞ்சடி பாட்டி(பூஞ்சடி விருப்பமாக வளர்ப்பதால் இந்த பெயர். முறுக்கு சுட்டு கொண்டு வரும் பாட்டிக்கு பெயர் முறுக்கு பாட்டி!) வீடு முன் அழகிய ஓர் ரோஜா செடி உண்டு. அந்த செடி மரத்தில் நூறுக்கு மேல் பூக்கள் பூத்து குலுங்கும். அந்த பூவின் மணம் இப்போதும் நாசியை வந்தடைகின்றது. யாட்லி  ரோஸுடன் ஒத்த இதமான மணம். பூ இதழ் அதன் அமைப்பு மிக அருமையாக இருக்கும்.  அங்கு தான் ஜெயராஜ் சித்தப்பா இருப்பார்கள். சின்ன வயதில் நாங்கள் கண்ட கல்லூரி சென்று படித்து திரும்பிய ஒரே ஒரு சித்தப்பா ஜெயராஜ் சித்தப்பா தான். அதனாலே அந்தக் காலயளவில் சித்தப்பாவிடம் இனம் புரியாத ஆராதனை, அன்பு நிலைவியது  !  பின்பு அந்த சித்தப்பா எங்கள் பகுதியில் புகழ் பெற்ற தொழிலாளர் வழக்களாராக பணிபுரிந்தார். அந்த பாட்டி பாம்பனார் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்த போது அங்கு இன்னொரு தாத்தா பாட்டி குடும்பம் குடியேறியது. அங்கு தான் ரீட்டா அத்தை, லாரன்ஸ் சித்தப்பா லில்லி அத்தை என்ற ஒரு அன்பு பட்டாளம் குடியிருந்தது. அவர்கள் சாயாக்கடை மற்றும் ஹோட்டல் வைத்திருந்தார்கள்.  எங்களுக்கு ருசியான டைமன் கேக் தருவார்கள்.

பின்பு சிறிய ஓர் அருவி-கானை கடந்து சூளப்பிரட்டு செல்ல வேண்டும். அந்த ஆற்றில் தான்  பாட்டி எல்லாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது துணி துவைப்பார்களாம்.    அந்த கானில் ஓர் பெண் முனி /பேய் உண்டு என பாட்டி கூறுவார்கள். திடீர் என அங்கு நடந்து செல்பவர்களை கீழை தள்ளி விடுமாம். முனிக்கதையை சற்று விரிவாக அறிந்து விடலாம் என்றால் என்னவர் உனக்கு ஏன் முனி மேல் அக்கறை என க்கூறி தடுத்து விட்டார்

ஒரு ஏற்றம் ஏறி சென்றால் பாட்டி வீடு வந்து விடும். வீட்டோடு சேர்ந்து கடையும் இருந்தது. வீட்டு முன் குடி நீர் குழாய் இருக்கும். அத்தை வெங்கலை பானைகளை கரி -சாம்பல் சேர்த்து விளக்குவது நினைவில் உள்ளது. பாட்டி வீட்டில் தண்ணீர் கேட்டால் மோந்து தருவதாக தான் கூறுவார்கள். எங்கள் வீட்டி தண்ணீரை கோரி தான் கொடுப்போம். பாட்டி வீட்டில் சில பசுக்களையும் வளர்ந்த்தனர். காலையில் கோழி கொக்கரிக்கும் குரல் இன்றும் நினைவில் உள்ளது. அம்மா வீட்டில் இருக்கும் காலம் வளர்த்த கன்று குட்டியை பற்றி கூறுவார்கள். கன்று குட்டியும் அவர்கள் படுக்கும் அறையில் தான் தூங்குமாம். கன்று குட்டி அம்மா, மாமாவிடம் அன்பாக இருந்ததும் பின்பு ஒரு நாள் அது மலையில் உருண்டு செத்த போது அனைவரும் வீட்டில் உணவு கூட எடுக்காது அழுது புலம்பினதை பற்றிய கதைகள்  கூறும் போது ஆச்சரியமாக இருக்கும். 


இப்படி பல பல சின்ன வயது கதைகள் மனதில் ஓட பட்டுமலை எஸேட்டின் வாயிற்கதவை வந்து அடைந்தோம். பெண்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பெண்கள் போராட்ட களத்தில் மழையில் குடையுடன் இருக்க வெள்ளைசட்டை போட்ட தலைவர்கள்  போராட்ட குழுவை உற்சாகப்படுத்தி பேசி கொண்டிருந்தனர்.  போராட்டம் நடைபெறுவதால் நாங்கள் சென்ற வாகனத்தை பாதையில் செல்ல அனுமதிக்க இயலாது எனக் கூறி ஒரு குறுகிய பாதை வழியாக செல்லும்படியாக கூறினர்.    நாங்கள்  குறுகிய பாதை வழியாக பயணித்து வண்டி சறுக்கி பள்ளத்தில் விழுமோ , டயர் உடைந்து விடுமோ என்ற பயத்தில்  செல்லவேண்டிய இடத்தை வந்தடைந்தோம்.  

அவசர கதியில் வண்டிய விட்டு  இறங்க, கீழை விழுந்து அணிந்திருந்த செருப்பும் பிய்ந்து விட்டது. செல்லும் போது இருந்த மனமகிழ்ச்சி ஒரே நொடியில் மறைந்து.   ஒரு வழியாக என் மாமா மகள் வீட்டிற்கு வந்தடைந்தோம். அங்கு ஒரு பெரியவர் வீட்டு முன் அழகான ஓர் வெள்ளை நிற ரோஜா பூத்து நின்றது. ரோஜாவை கண்டு ஆசைப்படுவதை கண்டதும் பெரியவர் பெரிய ஓர் ரோஜா கம்பை வெட்டி சிறிதாக நறுக்கி கட்டி தந்தார். ரோஸ் செடி கிடைத்ததும் விழுந்த வலியை மறந்து வீடு வந்து சேர்ந்தேன்.