29 Aug 2015

ஊரடங்கு உத்தரவு-புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு!


பி. என். எஸ் பாண்டியனின் புத்தகமாகும் 'ஊரடங்கு உத்தரவு'.  1979ல் மத்திய அரங்கேரிய ஓர் துயர் மிகு அரசியல் போராட்டத்தை பின்புலமாக கொண்டு  எழுதியுள்ளார்.  எந்த அரசியல் சார்பற்ற நிலையில் மிகவும் துல்லியமாக அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்த புத்தகம் என்பது இதன் சிறப்பாகும். இவர்  15 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கையாளராக பணிபுரிகிறவர் . வரலாறு மற்றும் தகவல்தொடர்பியலில் முதுகலை படம்பெற்றவர் மட்டுமல்ல . பல அரசில் ஆய்வுகளை மேற்கொண்டு பல பத்திரிக்கை மற்றும் இதழ்களில் எழுதி வருபவர் என்ற சிறப்பும் உண்டு.




 பிரஞ்சு நாட்டின் ஆளுமையில் இருந்த  பாண்டிச்சேரி, இந்திய சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து 1954 ல் தான் சில வரையறுக்கப்பட்ட திட்டத்துடன் இந்தியாவுடன் இணைந்தது. 1979ஆம் ஆண்டு, பாண்டிச்சேரியை இந்திய மாநிலங்களுடன் இணைக்கும் திட்டத்துடன் அன்றைய  பாரத பிரதமர் மொராஜ் தேசாய் பேச, அதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் வண்ணம் எழுந்த மக்கள் போராட்டம் அதை தொடர்ந்து நிகழ்ந்த  கலவரம் பின்பு அது அரசியலாகி  பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையை  பற்றி விலாவரியான விளக்கத்துடன் தொகுக்கப்பட்ட புத்தகம் ஆகும் இது.





1947ல் இந்தியா ஆங்கிலேயரின் ஆளுகையில் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் 1954 நவம்பர் 1 ஆம் தியதி தான்  பிரஞ்சு ஆளுகையில் இருந்து இந்தியா நாட்டுடன் யூனியன் பிரதேசமாக இணைகின்றது. புதுச்சேரியின் தனிதன்மை காக்கப்படும் மக்கள் விரும்பினால் ஒழிய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கலுடன் புதுச்சேரியை இணைக்க போவதில்லை  என நேரு தலைமையிலுள்ள இந்திய அரசாங்கம் கொடுத்த உறுதி மொழிக்கு மொராஜி தேசாய் சவால் விடுகின்றார். அவர் விருப்பத்திற்கு அன்றைய தமிழ முதல்வர் உதவதும்  இக்கலவரத்திற்கு  பின்புலமாக அமைகின்றது.


மொராஜி தேசாயின் கருத்துப்படி சிறு மாநிலங்கள் நாட்டிற்கு செலவினங்களை கூட்டுகின்றது என்பதாகவே இருந்தது.  பாண்டிச்சேரியில், மக்கள் ஆட்சி துவங்கிய முதலே அதிகாரப் போட்டியால் ஸ்திரதன்மையற்ற ஆட்சி நடைபெறுகின்றது. பின்பு அதிமுக தலைமையில்  ராமசாமி, பாலா பழவனூர் போன்றோர் ஆட்சி செய்யும் வேளையில் மறுபடியும் ஆட்சி மாற்றத்தை சந்திக்கின்றது.  இம்முறை மத்திய அரசு கவர்னர் ஆட்சியை அமல்ப்படுத்துகின்றது. மத்தியில் அவசரகாலசாட்டம் பிறப்பிக்க பட்ட நிலையில்  புதுச்சேரியில் ஆட்சி ஆளுனரின் கட்டுப்பாட்டில் 5 வருடங்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கின்றது.  இப்படியான சூழலில் அன்றைய பாரத பிரதமர் மொராஜி தேசாய் சென்னை வந்து திரும்பும் வேளையில்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்  தமிழ் நாடு, கேரளா, ஆந்திராவுடம், பாண்டிச்சேரியின் பிரதேசங்களை இணைக்கும் தேவை பற்றி கூறி செல்கின்றார்.   பல நூறு வருடங்கள் வெளிநாட்டவர்களில் ஆளுமையில் இருந்த புதுச்சேரி தன் தனித்துவமான கலாச்சரத்தை பேணும் நோக்கில் அந்நிய மாநிலங்களுடன் இணைய விரும்பவில்லை. மத்திய அரசின் தீருமானத்தை எதிர்க்கும் வகையில் குடியரசு தினத்தை புரக்கணிக்க முடிவெடுக்கின்றனர்.   அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் என  தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி கொண்டிருந்த பொது மக்கள் மீது ஆயுதப்போலிஸ் துணையுடன் அரசின் வன்முறை தாக்குதல் நிழழ்த்தப்படுகின்றது.  அந்த 10 நாட்கள்  பாண்டிச்சேரி வரலாற்றின் கறுப்பு தினங்களாக பதியப்படுகின்றது. சுதந்திர போராட்டத்தில் கூட தாங்கள் இப்படியான வன்முறையை சந்திக்கவில்லை என புதுச்சேரி மக்கள்  கூறுகின்றனர்.

 டி ராமசந்திரன் என்ற பாதுகாப்பு அமைச்சார் தன் பெண் ஊழியரான ராதாபாய் என்பவரை பாலியலாக துன்புறுத்தினார் என குற்றம் சாட்டப்படுகின்றார். ஆனால் கலவரம் பிற்பாடு இவரே மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பில் வருகின்றார். வழக்கறிஞராக இருந்து அரசில்வாதியாக மாறின பாலா பழனூர் போன்றோர் அரசியல்வாழ்க்கை அஸ்தமித்ததும் இக்கலவரத்துடன் தான். அரசியல்வாதிகள் பதவி போட்டியில் சிலர் சிறைக்கு செல்ல சிலர் சகுனிகளாக வலம் வர முடிவில் அவர்களே பதவியை அலங்கரிப்பதுடன் சுகமாக வாழ; கலவரத்தை காணச்சென்ற பொது மக்கள் கொல்லப்பட்டது கொடூர நிகழ்வாகும்.

கலவரத்தில் கொல்லப்பட்ட பாண்டுரஙன் ஒரு மின் தொழிலாளி ஆவார். எந்த அரசியலும் தெரியாத அவர் மனைவி பின்பு அரசு கொடுத்த பணியின் துணையால் தன் குடும்பத்தை வறுமையுடன் நடத்தி செல்வதையும் பதிந்துள்ளார் ஆசிரியர். அதே போன்று அக்கலவரத்தில் இறந்த இளைஞர் குடும்பம் எந்த உதவியும் பெறவில்லை. போலிஸ் தோட்டக்களும் கலவரத்திலும் பங்கு கொண்ட சாதாரண எளிய மக்களையை குறி பார்த்து செல்கின்றது.


செஞ்சி நாயக்கர்களில் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது  புதுச்சேரி.  1512ல் போர்துக்கீசியர் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். பின்பு டென்மார்க் நாட்டினரின் வணிக இடமாக உருமாறுகின்றது.  16ஆம் நூற்றாண்டு மத்திய வேளையில் அகபாத் நிசாமின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.  வியாபாரம் செய்து வந்த  பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி,. ஆளுகை புரிபவர்களுக்கு    பணம் கடம் கொடுக்கின்றது. பணத்தை திருப்பித் தர இயலாத சூழலில் புதுச்சேரியின் சுங்கவரியை வசூலிக்கும் உரிமையை பிரஞ்சு பெற்று கொள்கின்றது.  பின்பு  1677 ல் மராட்டிய மன்னன் சிவாஜியின் ஆளுகைக்கு புதுச்சேரி வருகின்றது. பணத்தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியை ஆளுனரான ராஜாராம் விற்க முற்படும் போது புதுச்சேரியை டச்சுகாரர்கள் வாங்கி கொள்கின்றனர் . 1697ல் டச்சுகாரர்களீடம் இருந்து புதுச்சேரியை  பிரஞ்சுகாரர்கள் மீண்டும் வாங்கினர்.  1761ல் ஆங்கிலேயர் வசம் புதுசேரி வருகின்றது.  பின்னர்  கி. பி 1763 ல் மேற்கொண்ட  பாரீஸ் உடன்படிக்கை ஊடாக இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் உள்ள   தங்களுக்கு சொந்தமான இடங்களை மீட்டு கொள்கின்றது. பின்பு 1793 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகள் ஆங்கிலேயர்கள்  வசம் செல்கின்றது.  1816ல் ஆங்கிலேயர்கள் சில பகுதிகளை பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுத்து விட்டனர்.  [விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பாரதியார் அரவிந்தர் மற்றும்  வ வெ.அய்யர் போன்றோருக்கு அடைக்கலம் கிடைக்க உதவியதும் இவ்வகையாக அரசியல் கட்டுப்பாடுகளாகும்]

புகழ் பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன்,  முன்னுரை தந்துள்ளார். ஜூனியர் விகடன் ஆசிரியர் ப திருமாவேலனின் அணிந்துரை அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்  மற்றும் எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர் வெ பாலன் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

0 Comments:

Post a Comment