9 Nov 2014

கின்னஸ் விருது பெற்ற கேரளா தமிழர் 'ரீகன்'" ஜோன்ஸ்!



ரீகன் ஜோன்ஸ்
சகோதரர் ரீகன் ஜோன்ஸ் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் துயர் அளிப்பதாகும். ரீகன் ஜோன்ஸ் தன் கடைசி காலத்தில் அப்பாவின் நண்பராக இருந்தவர் என்பதால் ஒவ்வொரு முறை பிறந்த ஊர் செல்லும் போதும் அவரை நேரில் பார்த்து கதைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ரீகன் ஜோன்ஸ் ஆளுமை தனித்துவம் பெற்றதாக இருந்தது. உலக அமைதியை கருத்தாக கொண்டு இரண்டு மைல் அளவில் கடிதம் அந்நேர போப் ஜான் பால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்கா அதிபர் ரீகனுக்கும் கடிதம் எழுதியுள்ளதால் அவரின் பெயரான ஜோன்ஸ் என்பதுடன் ரீகன் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.

ரீகன் ஜோன்ஸ் பெற்றோர் கிராம்பி எஸ்டேற்றை சேர்ந்த தொழிலாளிகளாக இருந்தனர். தன்னால் இயன்றளவு தங்கள் ஐந்து குழந்தைகளுக்கு தேவையான கல்வி கொடுக்க துடிப்பாக இருந்தனர். முதல் மகனான  ஜோன்ஸின் கல்வி எஸ்டேட் பள்ளிகளிலும் தன் சொந்த ஊரான நாகர்கோயிலிலுமாக தொடர்ந்தது. ஜோன்ஸின் ஆங்கில ஆசிரியர் என் தகப்பனாரின் ஒன்றுவிட்ட சகோதரர் மணி என்பவர் என்பதால்  ஜோன்ஸ் அவர்களுக்கு அப்பாவின் மேல் தனிப்பட்ட முறையில் அளவுக்கு அதிகமான அன்பும் மதிப்பும் இருந்தது.
என் தகப்பனாருடன்


ஜோன்ஸ் ரீகன் பல மைல் நீளத்தில் பல புதிய வார்த்தைகளால் கடிதம் எழுதியது வழியாக கேரளா முழுக்க புகழ் பெற்றார். லிம்கா சாதனையாளர்கள்  விருது  (http://www.emaninagar.com/wrp5.htm PEACE, PEACE ….. We want PEACE
The longest peace appeal 2.4 Km long, 2.5 ft. wide, 100 Kgs in weight, 10 crores of English words was sent to the Pope by Mr. Reagan Jones of Kerala.)
கின்னஸ் விருதும் கிடைத்த பின்பு, “ஜோன்ஸ் என்றால் ஆங்கிலம்; ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால்; ஜோன்ஸ் என்றாகி விட்டது”. எங்கள் ஊரிலுள்ள எஸ்டேட் மானேஜர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டியூஷன் மாஸ்டராக மாற்றினர். எங்கள் ஆலயதிலும் ஆங்கிலம் கற்பிக்க ஜோன்ஸ் அவர்களை நியமித்தனர். வியாபார சங்கம் சார்பிலும் ஒரு டியூஷன் நிலையம் அமைக்கப்பட்ட போதும் ஜோன்ஸ் ஆசிரியராக மாறினார். ஆனால் அவர் தகுதிக்கு தக்க இயங்க ஒரு இடம் கிடைத்ததா அல்லது வழி நடத்தும் நபர்கள் கிடைத்தனரா என்பது சந்தேகமே. ஜோன்ஸின் ஆங்கிலப்புலமையை ஆளாளுக்கு தன்னகப்படுத்த விரும்பினர். கேரளா அரசால் கொடுக்கப்பட்ட தற்காலிக  கவுரவ வேலைகளில் அவரால் நிலைத்து நிற்க இயலவில்லை. தனக்கு கிடைத்த சாதனையாளர் பணத்தையும் வாங்க தெரியாது உழன்றார்.

கேரளா அரசு, தற்காலிக  வங்கி வேலை கொடுத்திருந்தாலும் ஜோன்ஸின் விருப்பம் எழுத்தோடு பயணிப்பதாகத் தான் இருந்தது. தன் எழுத்தை தவமாக கண்டவர் யாருடனும் எந்த தேவைக்கும் சமரப்படவோ அல்லது அடிபணியவோ விரும்பவில்லை. தனக்கென்று ஒரு நேர்மையான மனம் கொண்டு சஞ்சரித்தவர். சில போது உலகின் பொய் புரட்டுகளை தனதான நையாண்டி கலந்து சிரித்து தள்ளியவர். நவீன தொழில்நுட்ப சாதங்களை; ஒரு கைபேசியை கூட பயண்படுத்த விரும்பாதவர். அவரை காணும் போது எல்லாம் நான் வலைப்பதிவை பற்றி கூற மறப்பதில்லை. இருப்பினும் ஏதோ ஒரு யோகியை போன்று வாழ்ந்தவரால் எதிலும் தன்னை வலுகட்டாயமாக இயங்க தெரியவில்லை.  தனக்கு அறிவிக்கப்பட்ட கின்னஸ் விருது பணம் கூட கடைசி வரையிலும் ஜோன்ஸை சென்று அடையவில்லை என்பதே மிகவும் வருத்தமான உண்மை. ஏழைகளுக்கு என  அறிவிக்கப்படும் விருதுகளில் இருக்கும் ஊழலும் இது தானோ என்று தோன்றுகின்றது.  எழுத்தை வாழ்வாக கொண்ட ஜோன்ஸ் திருமணம் செய்து சாதாரண வாழ்க்கையில் இயங்கவும் விரும்பவில்லை

எங்கள் பல்கலைகழக பேராசிரியர்களூடன் ஜோன்ஸ்
50 வயது சென்றடையும் முன்பே நீரழிவு நோயால் பாதிப்படைந்த ஜோன்ஸிற்கு கடைசி நாட்கள் துன்பம் நிறைந்ததாகவே மாறியது. "எங்கள்  ஜோன்ஸ்" என்று புகழ்ந்தவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை. அரசோ இதோ உதவி.. என்று நாட்களை கடத்தி வந்ததை தவிர அதை துரிதப்படுத்தி தரச்செய்து அவர் மருத்துவ செலவிற்கு கூட உதவவில்லை. தான் குடியிருந்த வீட்டையும் சிகித்சைக்கு என இழந்து தன் சகோதரி சகோதரர்கள் வீட்டில் தன் கடைசி நாட்களை கடத்தினார்.  எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக பேசி கொண்டிருந்த ஜோன்ஸ் தன் கடைசி நாட்களில் பார்வை இழந்து விட்டார். பின்பு நடமாடவும் இயலாதவராகி இருந்தார். கடந்த 20 வருடங்களூக்கு மேலாக தனது சாதனையாளர் விருதாக அறிவித்த  பணம் கிடைக்காது தன் தாய் இறந்த 30வது நாள் தானும் இவ்வுலகை விட்டு மறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வண்டிப்பெரியார் என்ற தான் பிறந்து வளர்ந்த ஊரில் தான் தன் கடைசி நாட்களும் இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜோன்ஸ் வண்டிப்பெரியர் ஆலயத்தில் ஊர்க்காரர்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

கேரளா தமிழரான ஜோன்ஸின் எழுத்தின் உச்சம் ஜோன்ஸோடு மறைந்து விடக்கூடாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட எஸ்டேட் வளாகத்தில் எந்த அடிப்படை வசதியும் கிட்டாது வளர்ந்த ஜோன்ஸ் என்ற சாதனையாளர் உலக தலைவர்களை கவரும் வண்ணம் உலகின் .சமாதானத்தை பரைசாற்றும் விதம் பல மைல் தூரம் 100 கிலோ காகிதம் பயண்படுத்தி கடிதம் எழுதி பாராட்டைப் பெற்றவர்.  கடிதம் என்ற இலக்கணத்திற்கு மதிப்பு சேர்த்தவர். ஒரு வகையில் ஜோன்ஸுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போக நிலம் சார்ந்த எல்கைகள் கூட காரணமாகின்றதோ என்று அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. சாதனையாளர்கள் விருது என்ற ஊழலில் ஒரு சாதாரண மனிதன் அதன் பலனை அனுபவிக்க இயலாது மறைந்து பெரும் துயர்.

இணையத்தில் தேடிய போது இவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. தன் புகழ் பாடாத, சுயநலம் அற்ற மனிதர்கள் அடையாளங்களை கூட இந்த பிரபஞ்சம் விட்டு வைப்பதில்லையா என்று  என் மனம் கலங்குகின்றது.

எப்போதும் உலக அமைதியை பற்றி சிந்தித்து கொண்டிருந்த இவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டி, பிரார்த்திக்கின்றேன்.







7 Nov 2014

ஓரின சேர்க்கை ..குற்றமா? அறியாமையா? .............

சமீபத்தில் பெங்ளூரை சேர்ந்த இளைஞர் அவர் மனைவியின் குற்றச்சாட்டால் 377 சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது ஓரின சேர்க்கை ஆர்வலர்களின் கோபத்தை எழுப்பி விட்டது. இந்திய தண்டனைக்கோவை 377 ஆவது பிரிவின்படி ஓரின சேரக்கையானது ஆயுள்கால சிறைத் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாக உள்ளது.

சமீப காலமாக எந்த ஒரு  செயலுக்கும் ஆதரவு அல்லது வக்காலத்து வாங்கும் விதமாக குற்றவாளியுடன் சில ஆர்வலர்களும் பொது தளத்தில் வருவது சகஜம் ஆகியுள்ள நிலையில் ஒரு பெண்ணை - அவர் குடும்பத்தை ‘திருமணம்’ என்ற பெயரில் ஏமாற்றிய அந்த இளைஞனின் குற்ற செயலை பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது.  சிறுபான்மையினர் என்பதால் மற்றொருவரை ஏமாற்ற உரிமை உள்ளதா? ஓரின பாலினரால் பாதிப்படைந்த அப்பெண்ணின் வாழ்க்கை இனி பழைய நிலைக்கு வர பல வருடங்கள் ஆகலாம். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருப்பின் சமூகத்தில் பொதுவான சட்டங்களுக்கு உள்பட்டு வாழும் ஒரு பெண்ணை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி மேலும் தான் ஒரு சராசரி மனிதன் தான் என்று சமூகத்தை ஏமாற்ற நினைத்தது மன்னிக்க இயலாத குற்றமாகும்.  ஓரின பால் விருப்பம் கொண்டவராயிருப்பின் ஏன் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்க வேண்டும் என்பதையும் அவ்விளைஞன் சிந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய உரிமையை காப்பாற்ற அவருக்கு உரிமை இருப்பது போல் இன்னொரு நபரின் அதும் ஒரு பெண்ணின் உரிமையை பறிப்பதும் எவ்வகையிலும் நியாயமில்லை.                               
ஒரு நபர் ஏன் ஓரின பாலின ஆர்வம் கொள்கிறார் என்பது இயற்கையானதா அல்லது  மரபணு சார்ந்த குரொமசோம் குறைபாடா அல்லது சில செயற்கையான பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியா என இன்னும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சி முடிவுகளுக்கு எட்டவில்லை. 50% ஓரினசேர்க்கையாளர்கள்  உள்ளடங்கிய அமெரிக்காவில் கூட ஆராய்ச்சி விடையாமாகவே  இருந்து வருகின்றது. அரசியலற்ற ஒரு முடிவை அவர்களாலும் எடுக்க இயலவில்லை. 

பழைய தலைமுறையில் பருவ வயது வரும் அல்லது வரும் முன்னே திருமணம் அரங்கேறுவதால் அவர்கள் பாலின வேட்கைக்கு வடிகால் தேட வீட்டிற்குள்ளே அருகிலே வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதோ அனைவருக்கும் கல்வி அதுவும் பல வருடங்களாக கல்வி கற்க வேண்டும், வேலையில் சேர வேண்டும் வேலையில் சேர்ந்தாலும் நிறைய சம்பாதித்த பின்பு திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் ஓரின சேர்க்கை என்பது பாலின வேட்கையின் வடிகாலாக மாறுகின்றது.இதே போன்று தான் இராணுவத்தில் பல நாட்கள் மனைவியை பிரிந்திருப்போர் ஜெயிலில் உள்ளோரும் இப்பழக்கத்திற்கு தள்ளப்படுகின்றனர்.  மேலும் இருவரும் வேலைக்கு போகும் சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை விடுதியில் தங்க வைக்க தயங்குவதில்லை. வெறும் 12-14 வய்தில் விடுதி வாழ்க்கையில் சிக்குறும் பல குழந்தைகள் சூழல் அச்சுறுத்தலில் தனிமையில் சில உறவில்  பணிந்து பின்பு அதை பழக்கமாகவும் மாக மாற்றி கொள்கின்றனர்.                                                                     
அதே போன்று பழம் கால மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் ஒரு கூட்டு சமூகத்திற்குள்ளே உழறான். பாலின தேவை என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்து புரிதல் இருந்தது. தற்போதைய சமூக சூழலில் மனிதன் குடும்பம் குடும்பமாக பிரிக்கப்பட்டு பின்பு அந்த குடும்பங்களும் பிரிந்து தனி நபர் சமூகமாக மாறி விட்டது. ஒருவன் தன் குடும்பத்தை அமைத்து கொள்ள சம்பாதிக்க சில காலம் வேண்டி வருகின்றது. இதில் சில பெற்றோர்கள் உழைப்பாளியான  மகன் என்றால் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே போகின்றனர். இதனால் ஆண் பெண்கள் இருவருமே நெடிய நாள் தன் பருவ வயதை கடந்த பின்பு திருமண அல்லது பாலிய உறவுக்கு என காத்திருக்க வேண்டி வருகின்றது. இந்த இடைப்பட்ட காலயளவில் தன்னுடன் நெருங்கி பழகும் தங்கியிருக்கும் தன் பாலினத்தவருடன் நெருங்கிய மன உறவு பேணுவது போல் உடல் சார்ந்த பாலின உறவும் பேண உந்தப்படுகின்றனர். இதை இயற்கை என கூறியும் வருகின்றனர்.                                                        
பல விடுதிகளில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இப் பழக்கத்தை விளையாட்டாக துவங்கி சிலர் இந்த உறவை மறக்காத படி அடிமையாகி விடுகின்றனர். சிலரோ திருமணம் போன்ற உறவுகளை ஏற்படுத்திய பின் இது போன்ற உறவுகளை தவிற்கின்றனர். சிலர் மேலும் தொடர்கின்றனர். ஒரு முறை ஒரு அனாத விடுதியில் இது போன்ற ஒரு சிறுவனை சந்திக்க நேர்ந்தது. அவன் தன் குழந்தைப்பருவத்தில் தன் கிராமத்தில் ஒரு கொடூரனால் காம வேட்கைக்கு பலியாடாகியுள்ளான். ஒரு பக்கம் வறுமை தாய் வேலைக்கு போக வேண்டும் தகப்பன் ஒடி போய் விட்டான் என்ற சூழல் இச்சிறுவனை அனாதை ஆசிரமத்தில் விட்டிருந்தனர். ஒரு வேளை இது போன்ற சிறுவர்களுக்கு சிறு வயதிலே சிகித்சை கவுன்சிலிங் கொடுத்தால் மாறி விடக்கூடிய பழக்கமே. ஆனால் அவனை தனிமைப்படுத்தி வைத்திருந்தது வேதனையை தான் கொடுத்தது.

ஓரின சேக்கையில் பல வசதிகள் உண்டு. தன் பால் இனத்தவரை கிடைப்பது அவர்களுடன் செலவழிப்பது என்பது மிகவும் எளிது. சமூக கலாச்சார பண்பாட்டு சட்டவரைகள் பின் தொடர்வது இல்லை. தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு தாங்கள் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் அவர்களை வளர்க்க வேண்டும் போன்ற பொறுப்புகள் கழுத்தை நெருக்குவதும் இல்லை. ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருகளிடம் தாவுவதிலும் எளிதாக இருக்கின்றது. ஓரினசேர்க்கையை ஒரு குற்றமாக கருதுவதை விட அறியாமையாக எடுத்துகொள்ளலாம். இந்தியாவில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர் இருப்பதாகவும் அவர்களில் 1.75 லட்சம் பேர் (7 சதவீதம்) எச்.ஐ.வி. தொற்றுடையவர்கள் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமூக சூழல் மாற வேண்டும்.சரியான வயதில் பாலின உறவு ஏற்படுத்துவதை உற்சாகப்படுத்த வேண்டும். பருவ வயதிலிருந்து 10 வருடத்திற்குள்ளாக திருமண உறவை ஏற்படுத்த தகுந்த சூழலை உருவாக்க வேண்டும். எதிர் பாலினத்தாரை மதிக்கவும் நட்புறவோடு பழகவும் தகுந்த சூழல் இருக்க வேண்டும். 

அரசியல் காரணங்களுக்காக ஓரின சேக்கைக்கு சட்டஒப்புதல் அளித்த அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் நிலை பற்றியும், சமூக தாக்கம் என்ன என்பதை பற்றியும் அறிய வேண்டி உள்ளது.  இது போன்ற பழக்க வழக்கங்களால் குடும்பம் என்ற அமைப்புக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.                                                                               மூன்றாம் பாலினத்தாருக்கு கொடுக்கும் அங்கீகாரம் சமரசம் ஓரின சேர்க்கையாளர்களும் தேவையா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

இன்னும் தெரிய வேண்டிய செய்தி ஓரின சேர்க்கை என்பது பெங்ளூரு ர் மற்றும் அமெரிக்கா போன்ற தொழிநுட்ப இடங்களில் மட்டுமல்ல பட்டி தொட்டிகளிலும் இப்பழக்கம் உள்ளது. ஆற்வ கோளாறு துணைவர்களின் அனுசரிப்பற்ற வாழ்க்கை, தகாத உறவுகள்,  சரியான புரிதல் இல்லா திருமண உறவு, தன்னலமான வாழ்க்கை நெறி என பல காரணங்கள் இதன் பின்னில் உண்டு. சமீபத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தன் மனைவியை எதிர் விட்டு பெண்ணிடன் உறவு பேண வைத்து அப்பெண்ணிடம் பல ஆயிரங்கள் விலையாக பெற்ற நம் தமிழக கணவன் மனநிலையும் காண வேண்டும்.


தமிழகத்தை பொறுத்த மட்டில் பிள்ளை பெற்று கொள்ள மட்டுமே சில தம்பதிகள் உடல் உறவை பேணுவதையும் பின்பு  பாலியல் உறவே குற்ற செயல் போல் கருதும் பெண்கள் ஒரீன உறவுகளில் சிக்குவதையும் காணலாம்.                                                                          இது போன்ற பிரச்சினைகளை  காரண காரியத்துடன் அணுகி விழிப்புணர்வு கொடுத்தால் வரும் தலைமுறையாவது  நல்ல ஆளுமையில் வழி நடத்தி கொண்டு வரலாம். விழிப்புணர்வு என்பது இதே நிலையில் வாழ்ந்து தற்போது வாழ்க்கையில் புதிய வழியை தேடியவர்களை  ஆலோசகர்களாக நியமித்து விழிப்புணர்வு கொடுத்து வந்தால் தீர்வை எட்டலாம். தமிழகம் பொறுத்தவரை குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் ஆதீத ஆசையில் பெண் குழந்தையை ஆணாக பாவிப்பதும் ஆண் குழந்தையை பெண்ணாக நினைப்பதும் அவர்கள் பிறந்த போது இதே தாக்கத்தில் வளர்ப்பதும் சில காரணங்களே. 

5 Nov 2014

முத்தப் போராட்டம்………!

சமீபத்தில் பெரும் முத்தப் பிரச்சனை கேரளாவில் எழுந்தது. அந்த செய்தி கட்டு தீ போன்று உலக ஊடகத்தையே திரும்பி பார்க்க செய்தது!  உணவகத்தில் ஒரு ஜோடி முத்தம் கொடுத்தன்  காரணம் கொண்டு உணவகத்தை அடித்து உடைத்த பண்பாட்டு காவலர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், இளைஞர்கள் ஒன்று கூடி முத்தம் பகிர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கூட்டதிற்கு தடை விதிக வேண்டும் என இன்னும் பல இயக்கங்கள் முன் வந்தன. (உணவு எடுக்க போன பொது இடத்தின் முத்த மழை பொழிந்தது எதற்காக என்றும் தெரியவில்லை).

 இருப்பினும் தென்னிந்திய சமுதாயத்தில் முத்தத்தை பற்றி தவறான கருத்தை களைய வேண்டி உள்ளது சமூக மன உள வளர்ச்சிக்கு தேவையாகும். பல குழந்தைகள் பெற்றோருக்கு கூட முத்தம் தர தயங்குகின்றனர்ஆனால் பல தமிழ் படங்கள் இயங்குவதே வன்முறையான தவறான புரிதல் கொண்ட முத்த மழையால் தான்ஒரு மரண வீட்டிற்கு சென்ற போது தன் கணவர் இறந்த துயரில் ஒரு வயோதிகத்  தாய் மனம் உடைந்து நிலையில் இருந்தை கண்டேன். அவரை அணைத்து முத்தமிட அவர் குழந்தைகள் முன் வரவில்லைஆனால் கணவர் இறந்த அதே துக்கத்தில்  அவர் மரித்து போன போது முத்தமிட்டு அழுதனர்.

சென்னையில் பொது பார்க்குகளிலும் மற்றும் மெரினா பிச் போன்ற பொது இடங்களில்  தன்னை மறந்த நிலையில் முத்தம் பரிமாறிகொண்டு இருக்கும்  ஜோடிகளை கண்டு சமூக ஆவலரான தோழியிடம் பகிர்ந்த போது; முத்தமிட்டு கொள்ள கணவன் மனைவிக்கே வீட்டில் இடமில்லை என்ற சூழலையும் எடுத்துரைத்தார்கள். சமூக நல்லொழுக்கத்தில் நம் உணர்வுகளை பங்கிட இடமும் வேண்டும் என்ற அக்கறையுடன் ஜோடிகளுக்கு தனி இடம் ஒதுக்கி (பறவைகளுக்கு சரணாலயம் என்பது போல்) கொடுக்கலாம்நம் நாட்டில் தலைவர்கள் சமாதிக்கு தான் பல நூறு ஏக்கர் இடங்களை பாழ்படுத்துகின்றனர். யானைகளுக்கு கூட புத்துணர்வு முகாம் அமைத்து கொடுக்கப்படுகின்றது. ஆனால் சாதாரண மனிதர்கள் உணர்வுகளை பரிமாறி கொள்ள இடம் இல்லாது தத்தளிக்கின்றனர்.  வரும் தலைமுறை இதை கண்டு கெட்டு விடுமோ என  பண்பாட்டு காவலர்கள் பயப்பட  தேவையில்லையேஆனால் இதே பண்பாட்டு காவலர்களால் மேடையில் நடிகர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் பரிமாறிகொள்ளும் தறிகெட்ட செயலை சகித்து கொள்ள இயல்கின்றது. ஆனால் சமூகம் ஏதோ ஒரு மன கொந்தளிப்பில் தத்தளிப்பது தான் இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்ந்தும் செய்தி.

முத்ததின் வரலாறை தேடி சென்றால் அதன் துவக்கவும் முத்த கொடுக்க கற்று கொடுத்தவர்களே இந்தியர்கள் தான் என்ற தகவல் கிட்டியது. உலகிற்கே பாலிய பாடம் புகட்டிய முத்தத்தின் வகைகளை பகுந்தளித்த காமசூத்திரா போன்ற நூல்கள் உருவாகிய நாடு அல்லவா நம்முடையது. உதடோடு உதடு கொடுக்கும் முத்தத்தை பிரஞ்சு முத்தம் என்றே அழைக்கப்படுகின்றது. ஆனால் அம்முத்ததை பற்றி மகாபாரதத்தில் கூறியுள்ளதாக சொல்லப்படுகின்றது.  கி.பி 326 ல் அலக்ஸாண்டர் இந்தியாவை கீழ்ப்படுத்திய போது தான் இந்தியாவில் இருந்து முத்தம் உலகிற்கு பரவியது என்று சொல்லப்படுகின்றது. வேதகாலம் மறைந்து ஆரியகாலம் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்திய போது தான் பெண்களை தகப்பன் மற்றும் அவர்கள் சகோதரர்களின் உடமை போன்று மாற்றப்பட்டு சில பொருட்களுக்காக தங்கள் வீட்டு பெண்களை திருமணம்-சிரீதனம் என்ற பெயரில் விற்கும் வழக்கம் நிலவில் வந்துள்ளது.

. முதம் நெற்றியில்  கன்னத்தில் உதட்டில் என கொடுக்கும் இடம் பொறுத்து அதன் அர்த்தவும் வகையும் மாறுபடுகின்றது. இருப்பினும் அன்பை வெளிப்படுத்த மனிதன் இயல்பாக தேர்ந்த ஒரு குறியீடு தான் முத்தம் என்பதில் சந்தேகம் இல்லை. மனிதனின் மெல்லிய உணர்வை வெளிப்படுத்த பயண்படுத்த வேண்டிய முத்தம் பொது போராட்டத்தில் முன் வைத்த போது அதன் அர்த்தவும் மாண்பும் தவறுதலாகி விடுமோ என்று அச்சம் உள்ளது.  சமூக அக்கறை கொண்டு முத்தம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் தேவை. முத்தம் என்பது இளைஞர்களுக்கான மட்டுமான  ஆயுதமல்ல இது உலகலாவிய சகல மனிதனின் ஆயுதமே. ஒரே முத்தம் தான் அன்பையும், காமத்தையும், காட்டி கொடுப்பையும் உணர்த்துகின்றது.  யேசுவின் வரலாற்றை படித்தால் முப்பது காசுக்காக முத்ததால் காட்டி கொடுத்த யூதாசை காண்கின்றோம். யேசுவின் காலடியில் இருந்து தன் பாபத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுது முத்தமிட்ட ஏழை பெண்ணை காண்கின்றோம். கேரளாவில் பக்தர்களுக்கு முத்தமிட்டு அணைக்கும் சுவாமினி அமிர்தானந்தாவையும் காண்கின்றோம். 

முத்தம் கொடுப்பது யாருக்கு, எந்த சூழல் கால நில, தேவை என்ன என்பதும் பகுத்தறிவுள்ள மனிதன் தெரிந்திருக்க வேண்டியுள்ளது. கணவன் மனைவியை பல பொழுதும் பாசத்தால் இணைப்பதும் பிரிக்காமல் ஒட்டி வாழ உதவுவதும் முத்தம் தான். பல பொழுதும் சண்டையில் தீர்வாகுவதும் கட்டி அணைக்கும் ஒரு முத்தம் தான்.  பிறந்த குழந்தைக்கு தன் அன்பை வெளிப்படுத்துவதும் முத்தம் தான்.  வாழ்க்கையின் விழிம்பில்  காத்திருக்கும் வயதான பெற்றோருக்கு நம் அன்பை வெளிப்படுத்துவதும் முத்தம் தான்.  நாட்டு தலைவர்களை அரசியலாக இணைப்பது முத்தம் தான். இந்திய பாலிவுட், காலிவுட் நடிகர்கள் வாழ்வாதாரமே முத்ததை நம்பி போய் கொண்டிருக்கின்றது. பல தமிழ் கவிஞர்கல் கூட முத்த மழையில் தான் இலக்கிய பயணம் மேற்கொள்ளுகின்றனர்.

 சரியான முத்தம் சரியான நேரம் சரியான நபர்க்கு கொடுப்பது தான் மனித நேயம்.. மருத்துவ நீதியாக நோக்கினால் முத்தம் மன அழுத்தம் மனச்சோர்வு, போன்ற பல நோய்களுக்கு மருந்தாகுகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முத்தம் பற்றிய சரியான விழிப்புணர்வு தேவை. விழிப்புணர்வு தேவை என்ற காரணத்தால் தான் நம் முன்னோர்கள் மக்கள் செல்லும் ஆலய முகப்பில் சில படங்கள் மூலமாக பல மெல்லிய உணர்வுகளை பற்றி வடித்து வைத்திருந்தனர். வல்லுறவுக்காக மற்றவர் விரும்பாத நேரம்போக்கான விளம்பர நோக்கம் கொண்ட  முத்தம்(ஹாலிவுட் நடிகர் சில்பா ரெட்டிக்கு கொடுத்த முத்தம்) பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.http://www.youtube.com/watch?v=rfw0vhoAkwE







நவீன யுகத்தில் குடும்பம் என்ற அமைப்பு உடைந்து கொண்டிருக்கும் இந்த காலயளவில், எப்போதும் ஏதோ ஒரு தொழில்நுட்பத்தோடு உரையாடி கொண்டிருக்கும் நம் இளைஞர்களுக்கு முத்தம் பற்றிய புரிதல் வெறும் காமத்தோடு  முடிந்து விடக்கூடாது. ஒரு பாலியல் தொழிலாளியான ஜமீலா தன் புத்தகத்தில் கூறி இருப்பது “பழம் கால ஆண்களை போன்று தற்கால ஆண்களுக்கு பெண்களை பண்பாக கண்ணியமாக நடத்த தெரியவில்லை” என்பதாகும். மனிதன் விவாசாயியாக இருந்த போது மண்ணோடு மல்லிட்டு மனிதனாக இருந்தான் ஆனால் இன்று தொழிநுட்பங்களோடு வாழும் மனிதன் அடிப்படை மனிதத்தை இழந்து மிருகமாக மாறி கொண்டிருக்கின்றான் என்ற உண்மையும் உணர வேண்டியுள்ளது. இந்தியாவின் தொழிநுட்ப பூங்கக்களின் சொர்கபுரியான பெங்களூருவில் தான் நாலு வயது குழந்தையை பாலியல் வல்லுறவு கொள்ளும் அரக்கத்தனவும் அரங்கேறுகின்றது.  கல்வி கண் திறக்க வேண்டிய இடத்தில் காமகண் கொண்ட முத்ததை பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.


தற்கால அரசியல் சமூக நெருக்கடியால் கல்வியாலும் வேலை வாய்ப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்படுவது இளைஞர்கள் தான். நமது சமீப கால செய்தியில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ளும்  சமூகவும் இதுவே. விலைவாசி உயர்வு, கல்வி கொள்ளை, வேலைக்கு லஞ்சம், வேலை இல்லா திண்டாட்டம், குழந்தைகள் மனித உரிமைகள் மீறப்பட்டது, விவாசாய விளை நிலங்கள் கார்ப்பரேட் முதலாக மாறியது இப்படியே அடுக்கி கொண்டு போகலாம்தீவைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு  முத்தம் கொடுத்து போராடின இளைஞர்கள் மனநிலை எதை நோக்கி செல்கின்றது. கலாச்சாரம், கல்வி என வாழ்ந்தாலும் அவன் அடிப்படையான  உணர்வை தேடிய ஓட்டம் தானோ? அல்லது மனிதனின் மெல்லிய உணர்வை பற்றிய  புரிதல் இன்மையா? உங்கள் பதில் தான் இனி தேவை……………