29 Dec 2013

பாவத்தை போக்கும் பாபநாசம் !









பல மாதங்களுக்கு பின்பு ஒரு பயணம். பயணங்கள் நம் மனச்சுமையை நீக்க வல்லது. பாபநாசம் நோக்கிய பயணவும் எப்போதும் போல் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கிய பயணம் போன்றது தான். பிறந்ததும் வளர்ந்ததும் மேற்கு தொடர்ச்சி மலை என்பதாலோ என்னவோ அடர்ந்த காடுகளும் அதன் ஊடே பாயும் நதிகளும் ஏதோ ஒரு வகையில் குழைந்தைப்பருவத்திற்கு அழைத்து செல்வது போன்ற உணர்வு.  எங்கள் குழந்தைப்பருவத்தில் பாடச்சாலைக்கு செல்வது, விளையாட செல்வது, என எல்லாம் மேற்கு தொடர்ச்சி மலையுடன் கலந்த வாழ்க்கை தான்.


பாபநாசம் திருநெல்வேலியில் இருந்து 30 கிமீ பயணித்தால் பாபநாசம் எட்டலாம். நாகர்கோயிலில் இருந்து என்றால் 100 கிமீ பயணிக்க வேண்டும். சிவ பார்வதி, இந்திரன் போன்ற கடவுளுகளுடன் இணைத்து பல பக்தி கதைகளும் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட பொதிகை மலையில் இருந்து வரும் வெள்ளம் இங்கு ஓடுவதால் நோய் நிவாரணியாக இத்தலம் பார்க்கப்படுகின்றது. மேலும் வன எல்கை வழி கடந்து சென்றால் 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்ட  அணைக்கட்டு,  புலிகள் சரணாலையம், காரையார் வானதீர்த்தம் போன்ற சுற்றுலா தலங்களும் சுற்றி வரலாம்.    மாலை 5.30 க்குல் மலையை விட்டு இறங்க  வீண்டும் என்பதால் காரையார் செல்ல அனுமதிக்க வில்லை காவலர்கள். இருப்பினும் அணைக்கட்டில் மின்சாரம் தயாரிப்பதை  பற்றிய சில தகவல்களை பயணிகளுடன் பகிர்வது கொண்டனர் . படம் எடுக்க தடைசெய்யப்பட்ட பகுதி என்றும் எடுத்துரைத்து படம் பிடிக்க தடுத்தனர்.


சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. இதற்கு மரியாதை செய்யும் விதமாக இங்கே நிறுவப்பட்டதுதான் அகஸ்தியர் கோயில்.

மலையில் இருந்து கீழ் நோக்கி வரும் போது வன மத்தியில் பாவநாச சிவன் கோயில் தெரிகின்றது. வரும் வழி யாவும் செடிகள் அபூர்வ மரங்கள் என காட்சி தரும் மலைக்கு  மஞ்சள் போட்டு வைத்தது போன்று சிவன் கோ யில் ந ம் பார்வைக்கு  தெரிகின்றது. பாண்டிய மன்னன்  விக்ரமசிங்கத்தால் கட்டப்பட்ட ஏழு கோபுரம் கொண்ட கோ யிலாகும் இது. 
பாபா நாசநாதர் கோயில்
பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது. கட்டுரை

இப்படியாக சிறப்பு பெற்ற கோயிலிலிருந்து ஓடும் நதியை காணும் வண்ணமாக மண்டபம், ஆற்றிவழிபாடு மற்றும் நீராட்டுக்கு என அருகில் செல்ல கலைநயத்துடனான அழகிய படிகட்டுகள் என காலத்தால் அழியாத கட்டிடக்கலையுடன் விளங்கி நிற்கின்றது. தண்ணீரையும் இறைவன் இருப்பிடத்தையும் பிரித்து பார்க்காத தமிழர் மத நம்பிக்கைக்கு எடுத்து காட்டும் விதம் அழகுடன் நிர்மாணித்து வைத்துள்ள ஆலய வளாகம் தற்காலம் வியாபார தளமாகவும்,  அடிப்படை பண்பாட்டை மறந்த மக்களின்  ஆசாரம், நம்பிக்கை மட்டும் சார்ந்து இருப்பதால்  தூய்மையாக பராமரிக்கும் தேவையை உணராது உள்ளது துயரை தருகின்றது.

நீராடி விட்டு உடைமாற்ற  என வைத்திருக்கும் கட்டிடம் பயணற்று இருப்பதால் பெண்கள் நடுவழிகளில் நின்று தான் தங்கள் உடைய மாற்ற வேண்டியுள்ளது. மக்கள் கூடும் இது போன்ற சிறப்பிடங்களில் சோப்பு போன்றவை பயண்படுத்தி விட்டு பாறைகளில் அப்படியே வைத்து விட்டு செல்வதும் சமூக அக்கறையற்ற செயல் மட்டுமல்ல இயற்கை ரசிக்கும் நோக்கத்துடன் ஆற்றில் ஆர்வத்துடன் இறங்கும் மக்கள் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் செயலுமாகு்ம்.   
 எல்லா சிந்தனை மத்தியிலும் மறுபடியும் நதியை நோக்கிய போது மனது சுமை நீங்கி அமைதி தளும்புவதை உணர்கின்றோம். ஒரு போதும் வற்றாத நதி தன் புண்ணிய தன்மையை வாரி வழங்கி கொண்டு எந்த பிரதிபலனும் எதிர் பார்க்காது காலத்தை மறந்து ஓடி கொண்டிருக்கின்றது

இயந்திர தன்மையான வாழ்க்கை சூழலில் சிக்கி கொண்டிருக்கும் இக்காலயளவில் இயற்கையின் கொடையான இவ்வித இடங்களை சுத்தமாகவும் தூய்மையாகவும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது. இத்தளங்கள் மத அடையாளங்களையும் கடநது  நம் பண்பாட்டை உலகம் ஒட்டும் எடுத்து செல்லும் அடையாளங்களாகவும் திகழ்கின்றது என்பதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது. பண்பாட்டு தளங்களை சுத்தமற்ற வகையில் கையாளும் பொறுப்பற்ற சமூகமாக  மாறும் அவலம்  வருத்ததிற்குரியது . 

3 comments:

  1. வருடந்தோறும் குற்றாலம் செல்லும் போது, இங்கும் செல்வதுண்டு... அருமையான படங்களுடன் இனிமையான பயணம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //இயற்கையின் கொடையான இவ்வித இடங்களை சுத்தமாகவும் தூய்மையாகவும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது//
    நம்நாடு தூய்மை விசயத்தில் படு கேவலமான நாடு! சொன்னால் தேசபக்தர்கள்?! சண்டைக்கு வருவார்கள்.
    அருமையான பதிவு!

    ReplyDelete