1 Apr 2013

பாண்டவர்கள் வாழ்ந்த பாஞ்சாலிமேடு!


பயணங்கள் எப்போதும் சிறப்பானதும் நம் நிதம் வாழ்க்கையின் இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற்று  புத்துணற்சி தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.  நான் பிறந்த ஊர் மேற்கு தொடற்சி  மலைய்யின் அடிவாரத்தில்  நிலைகொண்டிருப்பதால் மலைகள் என் வாழ்க்கையுடன் இணைந்தவை.  மஞ்சு மலை, பட்டுமலை, என எங்கள் ஊர் பெயர்களுடன் இணைந்து இருப்பதும் மலைகளாகத் தான் இருக்கும். இந்த முறை பாஞ்சாலிமேடு என்ற மலையை தேடி எங்கள் பயணம் ஆரம்பித்தது. மலையாளத்தில் மேடு என்றால் குன்றையை குறிக்கின்றது. பாஞ்சாலி பெயர் ஒட்டி கொண்டிருப்பதால் இந்த மலையை கண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு தொற்றி கொண்டது. பாஞ்சாலி தன் கணவர்களுடன் வசித்த மலை என்பதால் பாஞ்சாலி மேடு என்று அறியப்படுகின்றது என அறிந்து கொண்டோம். .

குமளி - கோட்டயம் பாதையில் குட்டிக்கானம் என்ற இடத்தில்  இருந்து  ஐந்து கி.மீ பயணித்தால் புல்லுப்பாறை என்ற இடத்தை அடையலாம். அங்கிருந்து இடப்புறம்  நோக்கி 4 கி.மீ நெடிய குறுகிய பாதையினூடாக மேல் நோக்கி பயணிக்கும் போது  பாஞ்சாலிமேட்டை அடைகின்றோம். வழியில் வழி கேட்க கூட மனிதர்களை காண்பது அரிதே. ஐஸ் விற்பவர்கள் மட்டுமே காண இயலும். கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் உள்ளது. மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பயணம் இது. உள்ளூர் ஓட்டுனர்களின் வாகனத்தில் பயணிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும். சர்கஸ் வித்தகன் கயிற்றில் நடப்பது போலவே மலைப்பாம்பு போன்று வளைந்து நெளிந்து கிடக்கும் ரோட்டின் வழியான நம் பயணம்,  சவாலான பயணமாகத்தான் உள்ளது.

பின் நோக்கினால் இவ்வளவு தூரம் பின்னிட்டு வந்துள்ளோமா என்று மலைப்பாக  உள்ளது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பாஞ்சாலி மலை நோக்கி நடக்க ஆயத்தமானோம்துவக்கமே ஆச்சரியமாக இருந்தது. ஒரே இடத்தில் சில அடிகள் மட்டும் இடைவெளியில் இரு சமையங்களின் வழிப்பாடு தலங்கள் இயற்கையின் பாதுகாப்பில் அமைதியாக நிலைகொள்கின்றது. யேசு நாதரின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும்  வண்ணம்  சிலுவைகள் வரிசையாக பதிக்கப்பட்டு ஒரு திசை நோக்கி செல்ல அடுத்த திசையில்  ஹிந்து-ஆரிய சமய கோயில்கள் புராதன அடையாள சின்னங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. புவனேஸ்வரி தேவியின் கோயில் இங்கு காணலாம்பழைய கல்-மண் கோயில், புதிப்பித்து கட்டிய சிறு கோயில், பக்கத்தில் சிவலிங்கம், சூலம் மற்றும் பல அடையாள சின்னங்கள் என அங்கு கண்ட காட்சிகள் நம்மை வரலாற்றை  உற்று நோக்க வைக்கின்றது! பாஞ்சாலி தன் கணவருடன் இங்கு வசித்திருந்தாகவும் அவர் வணங்கிய ஆலயம், அவர் குளித்த குளம் என பல வரலாற்று சின்னங்கள் கொட்டி கிடக்கின்றன. குகையில் பீமனின் கால் தடவும் பதிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த மலை முகப்பில் கூடாரம் போட்டு ஆராய்ச்சி மேற்கொண்ட அடையாளங்களும் காணலாம். இந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் சபரி மலையில் எரியும் ஜோதியை காணலாம் என்கின்றனர். இதன் இன்னொரு பகுதியில்  பாண்வர்மேடு என்ற இடவும் உண்டு.

மேல் நோக்கி செங்குத்தான பாதையில் நடக்க  மூச்சு வாங்கினாலும் ஆட்கள் அரவம் அற்ற,  இயற்கையின் அரவணப்பில் புல் வெளிப்பாதையில் மலை உச்சியை நோக்கி  நடக்க நடக்க ஒரு வித பரவசம்  நம்மை பற்றி கொள்கின்றது. கொடும் வனத்தில்  மொட்டை புல் வெளிகளின் அழகு அலாதியானது. கையில் எடுத்தால் அரிக்கும் ஆனால் ஒருவித  வாசமுள்ள எழில் கொண்ட புல் செடியின் பூக்கள் நம் கண்களுக்கு விருந்தாகின. சுத்தமான காற்று இதமான கால சூழல் என இயற்கையுடன் ஐக்கியமாக்கும் ரம்மியமாகும் பொழுதுகள் நமக்கு அலாதியானது. அந்த சூழலை நீங்கள் கண்டு அனுபவித்து உணரலாம் பாஞ்சாலிமேட்டில்! கடல் கரையில் நின்று ஆற்பரிக்கும் அலைகளை கண்டு ரசிப்பது போல் கைநீட்டினால் தொட்டு விடலாம் என்று நற்பாசை தரும் பரந்து விரிந்து கிடக்கும் நீல வண்ண மேகங்கள், கிடந்து உருண்டு வா என அழைக்கும் பச்சை புல் வெளிகள், காட்டு புஸ்பங்கள் என கொள்ளை அழகு கொள்ளும் இயற்கையை கண்டு வெளிச்சத்துடன் திரும்ப வேண்டும். பனி மூடும் பிரதேசம் என்பதால் இரவு பயணம் உகுந்தது அல்ல. மழை நேரம் இங்கு பயணம் மேற்கொள்ளுவதும் முற்றும் தவிற்க வேண்டியது.

இயற்கைய்யின் வளப்பில் சொக்கி நிற்க மழை வர ஆரம்பித்தது. பனிநீராக விழுந்த மழையில் நனைவதும் சுகமாகவே இருந்தது. பனி கூடுவதும் பிரிவதுமாக கண்ணாமூச்சி விளயாட்டு ஆடி கொண்டிருந்தது. மழை விடாது இனி நகர இயலாது. அந்த மேகங்கள் போட்டி போட்டி ஓடி மறைவதும் வானம் தெளிவதும் மழை வருவதும் பின்பு பனி மூடுவதுமாக ஒரே இயற்கை அன்னையின்  புன்சிரிப்பாகத்தான் இருந்தது. நல்ல வேளை இடிமின்னலுடன் அவள் சத்தமாக சிரிக்கவில்லை. அப்படியே நடுங்கிய படி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு சாயக்கடையை வந்து அடைந்தோம். சூடா ஒரு கட்டன் சாயாவுடன்  சூடாக பச்சி வடை வாங்கி சாப்பிட்டு விட்டு மழை விட காத்திருந்தோம். 

 மலை ஏறினால் இறங்கி தானே ஆக வேண்டும். இறக்கம் என்பதால் திரும்பும் பயணம் எளிதாக இருந்தது. இருப்பினும் பிரிய மனம் இல்லாது அந்த குளிர்தரும் துளிர் நினைவுடன் பிரியா மனம் கொண்டு பாஞ்சாலி மேட்டிடம் விடை பெற்று அடுத்த மலை நோக்கி பயணம் ஆனோம். (குறிப்பு: சமீபத்தில் வெளிவந்த பலத்திரைப்படங்கள் காட்சிகள் இங்கு அமைத்துள்ளனர். உதாரணம்: மலையாளப்படம். சார்லி














தங்குமிடம் இங்கு விசாரித்து கொள்ளலாம்.                                               
1) paradise plantation retreat(Murinjapuzha, Kerala Dist 0469 2701311)                                                2)Dream land hill resort : (Kuttikanam P.O, Peermedu, Near Thekkady
Kuttikanam 09447304467)

3 comments:

  1. பசுமையான படங்கள் அருமை... தகவல்களுக்கு நன்றி....

    ReplyDelete
  2. Subi Narendran · Top Commenter · Works at M&SApril 02, 2013 7:45 pm


    நல்ல தகவலோடும் அழகான இயற்கை காட்சிகளைக்கொண்ட சுவாரசியமான பகிர்வு. நன்றி ஜோ.

    ReplyDelete
  3. Subbiah Ravi · Madurai Kamaraj University and the University of MadrasApril 03, 2013 10:57 am


    One may think these are insignificant, but the amount of inquisitiveness on yr part to probe these shows your inner strength and creativity.

    ReplyDelete